ஷுப்மன் கில், கோலி, ஸ்ரேயஸ் ஐயர் அசத்தல்: ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக வென்றது இந்தியா

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Feb 14, 2025 - 18:39
 0  12
ஷுப்மன் கில், கோலி, ஸ்ரேயஸ் ஐயர் அசத்தல்: ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக வென்றது இந்தியா

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என முழுமையாக தொடரை வென்றது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் இருந்தது. முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டன்னுக்கு பதிலாக டாம் பேன்டன் இடம் பெற்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist