பாகிஸ்தானின் ரெக்கார்ட் சேஸிங்: ரிஸ்வான் - சல்மான் ‘விடாமுயற்சி’ கூட்டணி
பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3-வது போட்டி நேற்று கராச்சியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3-வது போட்டி நேற்று கராச்சியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான் வென்றேயாக வேண்டிய நிலையில் களமிறங்கியது.
ஆனால், அதிர்ச்சிகரமாக தென் ஆப்பிரிக்கா 50 ஒவர்களில் 352 ரன்களுக்கு 5 விக்கெட் என்று ரன்களைக் குவிக்க, பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு சற்றே சாத்தியமற்றதாக தெரிந்தது, ஆனால் சாத்தியமில்லாததை சாத்தியமாக்கினர் அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி அகா.
What's Your Reaction?






