பயணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறங்கிய மலேசிய விமானம்

சவூதி அரேபி​யா ஜெட்டா நகரில் இருந்து மலேசியா தலைநகர்  கோலாலம்​பூருக்கு 290 பயணி​களு​டன் மலேசி​யன் ஏர்​லைன்ஸ் விமானம் நேற்று முன்​தினம் இரவு சென்று கொண்டிருந்​தது.

Oct 14, 2025 - 10:42
 0  5
பயணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னையில் அவசரமாக தரையிறங்கிய மலேசிய விமானம்

சென்னை: சவூதி அரேபி​யா ஜெட்டா நகரில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்​பூருக்கு 290 பயணி​களு​டன் மலேசி​யன் ஏர்​லைன்ஸ் விமானம் நேற்று முன்​தினம் இரவு சென்று கொண்டிருந்​தது. சென்னை வான் வெளியை கடந்து நடு​வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்​தில் இருந்த பெண் பயணி ஒரு​வருக்கு திடீரென மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டது.

அந்த பயணிக்கு மருத்​துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்த விமானி, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறை அதி​காரிக்கு தகவல் தெரி​வித்​தார். கட்​டுப்​பாட்டு அறை அதி​காரி​கள் விமானத்தை சென்​னை​யில் தரை​யிறங்க அனு​மதி அளித்​தனர். இதையடுத்​து, நேற்று அதி​காலை 4.45 மணிக்கு சென்​னை​யில் விமானம் தரை​யிறங்​கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist