ஆரூர்தாஸுடன் நடந்த வாக்குவாதம்: பட்டாபி எனும் நான் - எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 5
அப்போது காலையில் இருந்து மாலை வரை டப்பிங் பேசினால் நூறு ரூபாய் கிடைக்கும். கும்பல், சண்டை போன்ற காட்சிகளில் நாங்களும் கத்த வேண்டும். இதனால் தொண்டைப் புண்ணாகிவிடும்.

அப்போது காலையில் இருந்து மாலை வரை டப்பிங் பேசினால் நூறு ரூபாய் கிடைக்கும். கும்பல், சண்டை போன்ற காட்சிகளில் நாங்களும் கத்த வேண்டும். இதனால் தொண்டைப் புண்ணாகிவிடும். அப்படி இருக்கும் போது யாராவது இரவு ஒன்பது மணி வரை டப்பிங் போகும் என்று சொன்னால், வலியையும் மீறி சந்தோஷம் வரும். ஏனென்றால் ஐம்பது ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும்.
அந்த காலகட்டத்தில் ‘மாயாவி மாரீசன்’ தொடரில் மாயாவியாக நடித்த காளிதாஸ் என் நண்பர். நான் அவரை மாமா என்றழைப்பேன். ரெமி ஜீயெஸ் என்பவர் மயிலாப்பூரில் டப்பிங் ஸ்டூடியோ வைத்திருந்தார். அவர் ‘ஜீசஸ் ஆஃப் நாசரேத்’ என்ற ஆங்கில டெலிபிலிமை தமிழ்ப்படுத்தினார்.
What's Your Reaction?







