தமிழகத்தில் தழிழை பயிற்று மொழியாக செயல்படுத்த ஆக்கபூர்வ நடவடிக்கை தேவை: அன்புமணி

தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Feb 27, 2025 - 12:39
 0  150
தமிழகத்தில் தழிழை பயிற்று மொழியாக செயல்படுத்த ஆக்கபூர்வ நடவடிக்கை தேவை: அன்புமணி

சென்னை: தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரள, தெலுங்கானா, கர்நாடக, ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த தமிழக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist