சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி பெருமிதம்
சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னையில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.40 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னை காரம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: உணவு, உடை, இருப்பிடம் இவை 3-ம்தான் ஒவ்வொரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள். இதில் உடை, உணவு எல்லோருக்கும் கிடைத்துவிடும். ஆனால், குடியிருக்கும் இடம் பட்டாவுடன் வேண்டும் என்பதுதான் இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை.
What's Your Reaction?







