எஸ்ஐஆர் பணிக்கு முழு ஒத்துழைப்பு: அரசியல் கட்சிகளிடம் மாவட்ட தேர்தல் அதிகாரி வேண்டுகோள்
சென்னை மாவட்டத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணிக்கு, அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: சென்னை மாவட்டத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணிக்கு, அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான பணிகள் (எஸ்ஐஆர்) இன்று முதல் தமிழகம் முழுவதும் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், ரிப்பன் மாளிகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், அதிமுக, பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் வீடு வீடாக தேர்தல் அதிகாரிகள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள இருக்கும் பணிகள், தொடர்பாக விளக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன், இந்த எஸ்ஐஆர் பணிக்கு அரசியல்கள் கட்சிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
What's Your Reaction?







