காரைக்குடியில் கழிவுநீரில் இறங்கி அதிமுக கவுன்சிலர் போராட்டம்!

காரைக்குடி மாநகராட்சி 27-வது வார்டு காளவாய் பொட்டல் பாரதி யார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி பள்ளமாக இருப்பதால், மழைக் காலங்களில் கழிவுநீர் கலந்த தண்ணீர் தேங்குகிறது

Sep 23, 2025 - 17:44
 0  6
காரைக்குடியில் கழிவுநீரில் இறங்கி அதிமுக கவுன்சிலர் போராட்டம்!

காரைக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர் கழிவுநீருக்குள் இறங்கி போராட்டம் நடத்தினார்.

காரைக்குடி மாநகராட்சி 27-வது வார்டு காளவாய் பொட்டல் பாரதியார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி பள்ளமாக இருப்பதால், மழைக் காலங்களில் கழிவுநீர் கலந்த தண்ணீர் தேங்குகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வாரம் பெய்த மழையால் அப்பகுதி முழுவதும் கழிவுநீர் கலந்த தண்ணீர் தேங்கியது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பாம்பு போன்ற விஷஜந்துக்கள் வீடுகளுக்குள் நுழைகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist