‘புதுமை சார்ந்த வளர்ச்சி’ - பொருளாதார நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுபடுத்தியதற்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி: 2025 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் (Joel Mokyr, Philippe Aghion, Peter Howitt) ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமையுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வுக்காக இவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல்,இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?







