தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்காக 25 ‘அன்புச் சோலை’ மையங்கள் திறப்பு - செயல்படுவது எப்படி?
மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, 25 ‘அன்புச் சோலை’ மையங்களை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை: மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, 25 ‘அன்புச் சோலை’ மையங்களை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.10) திருச்சி, பொன்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ‘அன்புச் சோலை’ மையங்கள் ஒரு மாநகராட்சியில் இரண்டு வீதம் 10 மாநகராட்சிகளில் 20 மையங்கள், சென்னை பெருநகராட்சியில் 3 மையங்கள் மற்றும் தொழில் மாவட்டங்களான ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் 2 மையங்கள் என மொத்தம் 25 ‘அன்புச் சோலை’ மையங்களை தொடங்கி வைத்தார்.
What's Your Reaction?







