கடலோர பகுதிகளில் மீட்பு, மாசு தடுப்பு பணியில் ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

இப்​படை, எண்​ணெய் கசிவை எதிர்​கொள்​வ​தில் சிறப்​பாக பணி​யாற்றி வரு​கிறது. உலக அளவில் கடலோர மாசு தடுப்பு பணி​களில் பயன்​படுத்​தப்​படும் நவீன தொழில்​நுட்​பங்​கள், உத்​தி​கள் இந்​திய கடலோர காவல்​படை​யில் செயல்​படுத்​தப்​படு​கிறது. 

Oct 7, 2025 - 13:08
 0  2
கடலோர பகுதிகளில் மீட்பு, மாசு தடுப்பு பணியில் ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

சென்னை: தேசிய மாசு தடுப்பு தினத்தை முன்​னிட்​டு, கடலோர காவல்​படை 2 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை நடுக்​கடலில் ஒத்​திகை பயிற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறது. அதன்​படி, மாசு தடுப்பு ஒத்​திகை சென்னை அருகே சுமார் 20 கிமீ தொலை​வில் கடல் பகுதியில் கடலோர காவல்​படை வீரர்​கள் நேற்று பயிற்​சி​யில் ஈடு​பட்​டனர்.

இதில் கப்​பலில் தீ விபத்து ஏற்​பட்​டால், கடலோர காவல் படை கப்​பல்​கள் விரைந்து சென்று தீயை அணைப்​பது, அதி​லுள்ள பணியாளர்​களை ஹெலி​காப்​டர்​கள் மூலம் மீட்​பது, கடலில் தத்​தளிக்​கும் பணி​யாளர்​களுக்கு விமானம் மூல​மாக மிதவை உபகரணங்​களை போடு​வது, இரவு நேரங்​களில் பிரத்​தி​யேக ஒளி விளக்கை வானில் ஏவி, பிறர் உதவியை கோரு​வது, கடலில் எண்​ணெய் கசிவு ஏற்​பட்​டால், டார்​னியர் விமானம் மூல​மாக கண்​டறிவது, சிறப்பு மாசு தடுப்பு கப்​பல்​கள் மூலம் மிதவை​கள் மூல​மாக கடலில் எண்​ணெய் பரவாமல் தடுப்​பது, அவற்றை ஸ்கிம்​மர்​கள் மூலமாக உறிஞ்​சுவது, கடலில் தத்​தளிப்​பவரை, ரிமோட் கண்ட்​ரோல் மூலம் இயக்​கப்​படும் மிதவையை கொண்டு சென்று மீட்​பது உள்​ளிட்ட ஒத்​திகை பயிற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist