உக்ரைன் போரில் உங்கள் திட்டமென்ன? - புதினிடம் மோடி வினவியதாக நேட்டோ தலைவர் தகவல்
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்துள்ளது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதாலேயே இந்தியாவுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கிறோம்.

நியூயார்க்: “அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்று ரஷ்ய அதிபர் புதினிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி,வினவியுள்ளார்.” என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?







