“பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது” - ஐ.நா சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு

ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தங்கள் தேசம் ஹமாஸ், ஹவுதி, ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் இயக்கத்தை நசுக்கி உள்ளதாக தெரிவித்தார். 

Sep 29, 2025 - 13:22
 0  16
“பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது” - ஐ.நா சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு

நியூயார்க்: ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ், ஹவுதி, ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் இயக்கத்தை தங்கள் தேசம் நசுக்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

அவர் தனது உரையில், “கடந்த ஆண்டு இங்கு பேசியபோது இந்த வரைபடத்தை நான் காண்பித்து இருந்தேன். இந்த வரைபடத்தில் ஈரானின் தீவிரவாத செயல்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைபடம் உலகத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எங்கள் பிராந்தியத்துக்கும், தேசத்துக்கும் இதே நிலைதான். அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் உருவாக்கி வருகிறது. அதற்கான திட்ட பணியில் ஈரான் தீவிரம் காட்டுகிறது. இது இஸ்ரேலை மட்டும் அழிப்பதற்கானது அல்ல. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு இது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதன்மூலம் மற்ற நாடுகளை ஈரான் மிரட்டி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist