மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் 2 நாட்கள் செயல்படாது

மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் 2 நாட்கள் கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

May 22, 2025 - 11:53
 0  57
மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் 2 நாட்கள் செயல்படாது

சென்னை: மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் 2 நாட்கள் கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மாதவரம் ஜி.என்.டி சாலை மற்றும் சந்திரபிரபு காலனி சந்திப்பில் 900 மி.மீ விட்டமுள்ள கழிவுநீர் உந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணி, 23-ம் தேதி இரவு 10 மணி முதல் 24-ம் தேதி இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. எனவே, மாதவரம் மண்டலத்தில் கடப்பா சாலை, மதனகுப்பம், ராஜீவ் காந்தி நகர், தாங்கல் கரை, புத்தகரம், பத்மாவதி, வீனஸ் நகர் உள்ளிட்ட உந்து நிலையங்கள் செயல்படாது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist