இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும்: உதயநிதி ஸ்டாலின்
பரமக்குடியில் ரூ.3 கோடியில் கட்டடப்பட்டு வரும் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதத்தில் திறக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பரமக்குடி: பரமக்குடியில் ரூ.3 கோடியில் கட்டடப்பட்டு வரும் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் இன்னும் 2 மாதத்தில் திறக்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தின விழா அவரது நினைவிடத்தில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், பி.மூர்த்தி, ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை) ஆகியோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?







