''இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது'' - சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

Oct 16, 2025 - 14:11
 0  5
''இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது'' - சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று (அக்., 16) தொடங்கியது. சட்டப்பேரவையில் இன்று 7 மசோதாக்கள் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இது குறித்து சட்டபேரவையில் பேசும்போது: டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் நெல் குறுவை சாகுபடியானது கடந்த ஆண்டு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தது. தற்போது 6.31 லட்சம் ஏக்கராக உள்ளது. இது வரலாற்று சாதனையாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist