அபிஷேக் சர்மா அதிரடி: வங்கதேசத்துக்கு 169 ரன்கள் இலக்கு - ஆசிய கோப்பை IND vs BAN
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
துபாயில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணி டாஸ் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிஷாத் பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று கேட்ச் கொடுத்து கில் வெளியேறினார்.
What's Your Reaction?







