நேபாளத்தில் வன்முறை ஓயாததால் பதற்றம் நீடிப்பு: அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்
நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தால் பதற்றம் நீடிக்கும் நிலையில், அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடக்கின்றன.

காத்மாண்டு: நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த கலவரத்தால் பதற்றம் நீடிக்கும் நிலையில், அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடக்கின்றன. அங்குள்ள வணிக வளாகங்களை இளைஞர்கள் கும்பலாகச் சென்று கொள்ளையடித்து வருகின்றனர். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக இதுவரை 26 பேரை ராணுவம் கைது செய்துள்ளது.
2008-ல் அண்டை நாடான நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, கம்யூனிஸ்ட் அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இந்நிலையில், நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
What's Your Reaction?







