சர்வர் பிரச்சினையால் முடங்கிய சார்பதிவாளர் அலுவலகங்கள்: பலமணி நேரம் காத்திருந்த பொதுமக்கள்
தமிழகம் முழுவதும் சர்வர் பிரச்சினையால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெறாமல் முடங்கியது. பல மணி நேரம் ஆவணங்களுடன் காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

சென்னை: தமிழகம் முழுவதும் சர்வர் பிரச்சினையால் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெறாமல் முடங்கியது. பல மணி நேரம் ஆவணங்களுடன் காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
தமிழகம் முழுவதும் 11 பதிவு மண்டலங்களில் 56 பதிவு மாவட்டங்களின்கீழ், 587 பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் சூழலில், சில நேரங்களில் சர்வர் பிரச்சினையால் பதிவுப்பணிகள் முடங்கி, பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை முதலே பொதுமக்கள் பதிவு ஆவணங்கள் உள்ளீடு செய்தல் மற்றும் டோக்கன் பெறும் போர்ட்டலில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?







