உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார்
உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஈட்டி எறிதலில் டிரினிடாட் மற்றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார்.

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப்பின் ஈட்டி எறிதலில் டிரினிடாட் மற்றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான சச்சின் யாதவ் 4-வது இடம் பிடித்து கவனம் ஈர்த்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டி நடைபெற்றது. நடப்பு சாம்பியனும், ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் உள்ளிட்ட 12 வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
What's Your Reaction?







