ஈஷாவின் கிராமோத்சவ முன்னெடுப்பு: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பாராட்டு

ஈஷாவின் கிராமோத்சவம் தொடர் நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் மிகப்பெரிய முன்னெடுப்பு என கோவையில் நடந்த ஈஷா கிராமோத்சவத்தின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்

Sep 23, 2025 - 17:43
 0  11
ஈஷாவின் கிராமோத்சவ முன்னெடுப்பு: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பாராட்டு

கோவை: “ஈஷாவின் கிராமோத்சவம் தொடர், நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் மிகப் பெரிய முன்னெடுப்பு” என கோவையில் நடந்த ஈஷா கிராமோத்சவத்தின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஈஷா சார்பில் 17-வது கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள 183 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கு கைப்பந்து போட்டிகளும், பெண்களுக்கு த்ரோபால் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5,472 அணிகள் மூலமாக 12 ஆயிரம் பெண்கள் உட்பட 63 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். கிளஸ்டர் மற்றும் மண்டல அளவிலான போட்டிகளைத் தொடர்ந்து இறுதிக் கட்டப் போட்டிகள் இன்று நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist