<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
     xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
     xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
     xmlns:admin="http://webns.net/mvcb/"
     xmlns:rdf="http://www.w3.org/1999/02/22-rdf-syntax-ns#"
     xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
     xmlns:media="http://search.yahoo.com/mrss/">
<channel>
    <title>Daily Top Newz 24 &amp; : உலகம்</title>
    <link>https://dailytopnewz24.com/rss/category/world</link>
    <description>Daily Top Newz 24 &amp; : உலகம்</description>
    <dc:language>ta</dc:language>
    <dc:creator></dc:creator>
    <dc:rights>© 2025 DailyTopNewz24. All Rights Reserved. | Privacy Policy | Terms of Service | Contact Us</dc:rights>
    <item>
        <title>&amp;quot;ஈரான் போருக்குள் ஏன் நுழையவில்லை?&amp;quot; &amp; ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு UK பிரதமர் &amp;apos;நச்&amp;apos; பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்குள்-ஏன்-நுழையவில்லை-ட்ரம்பின்-குற்றச்சாட்டிற்கு-uk-பிரதமர்-நச்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்குள்-ஏன்-நுழையவில்லை-ட்ரம்பின்-குற்றச்சாட்டிற்கு-uk-பிரதமர்-நச்-பதில்</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கியது. அப்போது இந்த இரு நாடுகளும் வேறு எந்த நாட்டுடனும் கலந்து பேசவில்லை. தன்னிச்சையாகவே போருக்குள் நுழைந்தனர். ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இப்போது ஐரோப்பா, நேட்டோ நாடுகள் ஈரான் போரில் உதவவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார். இவர் ஈரான் போர் செலவுகளை அரபு நாடுகளை ஏற்க சொல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.மேலும், நேட்டோ நாடுகளைத் தொடர்ந்து &#039;காகிதப் புலி&#039; என்று ட்ரம்ப் சாடி வருகிறார். ஈரான் போர்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailகெய்ர் ஸ்டார்மர் பதிலடிஇதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். &quot;என் மீதும், பிறர் மீதும் எவ்வளவு அழுத்தம் போடப்பட்டாலும், எத்தனை சத்தங்கள் வந்தாலும். நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் பிரிட்டிஷ் நலன் சார்ந்தே இருக்கும். அதனால்தான், இந்தப் போர் நம்முடைய போர் இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன். மேலும், யாராலும் இந்தப் போருக்குள் நம்மை இழுத்துவிட முடியாது&quot;.&#039;ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருக்கிறது; உங்களுக்கு இரண்டே வழிகள்தான்&#039; - உலக நாடுகளைச் சாடும் ட்ரம்ப் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-04-01/q6xge0vq/Keir-Starmer-Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போருக்குள், ஏன், நுழையவில்லை, ட்ரம்பின், குற்றச்சாட்டிற்கு, பிரதமர், நச், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>``இனி உங்களுக்கு உதவப்போவதில்லை...&amp;quot; &amp; உலக நாடுகள் மீது விரக்தியில் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/இனி-உங்களுக்கு-உதவப்போவதில்லை-உலக-நாடுகள்-மீது-விரக்தியில்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/இனி-உங்களுக்கு-உதவப்போவதில்லை-உலக-நாடுகள்-மீது-விரக்தியில்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தொடங்கியப் போர் உலகளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஹோர்முஸ் ஜலசந்தியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முடிவில் தொடர்ந்து இரு தரப்பும் கடுமையாக மோதி வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்க போர் கப்பல், தரைப்படை வீரர்கள் என மேற்கு ஆசியாவில் குவிந்தனர். அதே நேரம், `எதுவானாலும் எதிர்க்கொள்ளத் தயாராக இருக்கிறோம்&#039; என உறுதியோடு அமெரிக்காவை எச்சரித்து வந்தது ஈரான்.இதற்கிடையில் இரு தரப்பிடமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.  இந்த நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானில் தங்கள் நடவடிக்கைகளை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே வேளையில், தனது வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளையும் தொடர்வதால், இரண்டு முதல் மூன்று வார காலக்கெடுவுக்குள் இந்தப் போர் முடிவுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து கேட்கப்பட்டது.Iran - America: ``4-5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்&quot; ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!அதற்கு பதிலளித்த ட்ரம்ப், ``ஈரான் மீதான தற்போதைய நடவடிக்கைகளை இன்னும் சில வாரங்களிலோ அல்லது ஒரு சில நாட்களிலோ முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளோம். அப்படி வெளியேறும்போது ஈரானின் கட்டமைப்பு முழுமையாக வீழ்ந்திருக்கும். ஈரானுடன் எந்தவொரு சமரச ஒப்பந்தமும் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டப்படவில்லை. மாறாக, ஈரானால் இனி அணு ஆயுதங்களை உருவாக்கவே முடியாது என்ற நிலையை உறுதி செய்து, அந்த நாட்டைப் பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கற்காலத்திற்கு தள்ளுவதே இலக்காகக் வைத்திருக்கிறோம்.ட்ரம்ப்மேலும், உலக நாடுகளின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ஏற்படுத்தும் தடைகளைப் பற்றி இனி கவலைப்படப் போவதில்லை. சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களுக்குத் தேவையான எண்ணெய் அல்லது எரிவாயுவைப் பெற விரும்பினால், அவர்களே அந்தப் பகுதிக்குத் தங்கள் கப்பல்களை அனுப்பி, தங்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தாங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும். மற்ற நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை இனி ஏற்கப்போவதில்லை. அந்தப் பகுதியில் என்ன நடந்தாலும் அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.செவ்வாய்க்கிழமை முன்னதாக ட்ரூத் சோஷியல் பதிவில், ``அமெரிக்கா இனி உங்களுக்கு உதவ அங்கே இருக்காது. எங்களுக்குத் தேவைப்பட்டபோது நீங்கள் எங்கே போனீர்கள்? நீங்கள் எங்களுக்காக அங்கே இருக்கவில்லை, இப்போது நாங்களும் உங்களுக்காக இருக்கப் போவதில்லை. ஈரான் இப்போது முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது. கடினமான வேலைகளை நான் முடித்துவிட்டேன். இனி உங்கள் எண்ணெயை நீங்களே போய் எடுத்துக்கொள்ளுங்கள்!&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ஹார்முஸ் நீரிணை: அமெரிக்கா - ஈரான் போர்இதற்கிடையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், ``அந்த நீரிணை திறந்திருப்பதை உறுதி செய்வதற்காக, அதற்கான ஏற்பாடுகளில் பெரும்பகுதியை நாங்களே செய்திருந்தாலும், இனிவரும் காலங்களில் இது வெறும் எங்கள் பிரச்சனை மட்டுமே அல்ல. ஈரானுடனான போரின் அடுத்த சில நாட்கள் தீர்க்கமானதாக இருக்கும். அது ஈரானுக்கும் தெரியும். அதைத் தடுக்க இராணுவ ரீதியாக அவர்களால் செய்யக்கூடியது என கிட்டத்தட்ட எதுவுமே இல்லை.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.&quot;ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல&quot; - ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-25/9c9bipfv/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இனி, உங்களுக்கு, உதவப்போவதில்லை..., உலக, நாடுகள், மீது, விரக்தியில், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருக்கிறது; உங்களுக்கு இரண்டே வழிகள்தான்&amp;apos; &amp; உலக நாடுகளைச் சாடும் ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தி-மூடியிருக்கிறது-உங்களுக்கு-இரண்டே-வழிகள்தான்-உலக-நாடுகளைச்-சாடும்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தி-மூடியிருக்கிறது-உங்களுக்கு-இரண்டே-வழிகள்தான்-உலக-நாடுகளைச்-சாடும்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ எப்போது ஈரான் போர் தொடங்கியதோ, அப்போதிருந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது. இதனால், எண்ணெய் உள்ளிட்ட வணிகங்களில் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என்று ஈரானை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ பயமுறுத்திப் பார்த்தார். ஆனால், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அதனால், ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ட்ரம்ப் தற்போது பதிவிட்டுள்ளார். &quot;ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், இங்கிலாந்து போன்று ஜெட் எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் அனைத்து நாடுகளுக்கும்... ஈரானுக்கு எதிரான போரில் இணையாமல் இருக்கும் இந்த நாடுகளுக்கும் என்னுடைய பரிந்துரைகள்: ட்ரம்ப் பதிவு&#039;இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு&#039; - 3 காரணங்கள் என்ன? இன்னும் எவ்வளவு வரை சரியும்?நம்பர் 1: எங்களிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. அதனால், அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்குங்கள். நம்பர் 2: கொஞ்சம் தைரியத்தைக் கூட்டி, ஹார்முஸ் ஜலசந்திக்குச் சென்று, எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் எப்படி சண்டைப் போட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள். எப்படி நீங்கள் எங்களுக்கு உதவவில்லையோ, அதே மாதிரி, இனி அமெரிக்காவும் உங்களுக்கு உதவாது. ஈரானை நாங்கள் அடியோடு அழித்துவிட்டோம். கடினமான கட்டம் முடிந்துவிட்டது. உங்களுக்குத் தேவையான எண்ணெயை நீங்களே சென்று பெறுங்கள்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.PAN, ஆதார் கார்டு தகவல்கள் ஒன்றுபோல இல்லையா? - நாளை முதல் அமலுக்கு வரும் பான் கார்டு மாற்றங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/du6ov2b0/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹார்முஸ், ஜலசந்தி, மூடியிருக்கிறது, உங்களுக்கு, இரண்டே, வழிகள்தான், உலக, நாடுகளைச், சாடும், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதெல்லாம் இருக்கட்டும்; அதை விட...&amp;apos;&amp; ஈரான் போரில் ட்ரம்ப்&amp;ன் அடுத்த பிளான்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தியை-திறப்பதெல்லாம்-இருக்கட்டும்-அதை-விட-ஈரான்-போரில்-ட்ரம்ப்-ன்-அடுத்த-பிளான்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹார்முஸ்-ஜலசந்தியை-திறப்பதெல்லாம்-இருக்கட்டும்-அதை-விட-ஈரான்-போரில்-ட்ரம்ப்-ன்-அடுத்த-பிளான்</guid>
        <description><![CDATA[ ஈரான் போர் ஐந்தாவது வாரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது இந்தப் போரில் சம்பந்தப்பட்டுள்ள ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை மட்டும் பாதிக்கவில்லை. இந்தப் போரினால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு என உலக நாடுகள் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தப் போரை நிறுத்த தயாராக இருப்பதாக ‘The Wall Street Journal’ நாளிதழுக்கு தகவல் கிடைத்துள்ளது.ஹார்முஸ் ஜலசந்திபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஅந்தத் தகவலின் படி, ட்ரம்ப் அவருடைய அதிகாரிகளிடம் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வைக்கும் கடினமான பணியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு வர்த்தகம் நடந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதில் இப்போது அழுத்தம் கொடுத்தால், இந்தப் போர் இன்னும் 4 – 6 வாரங்களைத் தாண்டியும் நடக்கும் என்று ட்ரம்ப் கருதுகிறார். ட்ரம்ப் திட்டம்ட்ரம்பின் திட்டமே இந்தப் போரை 4 – 6 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது. ஒருவேளை, இப்போது ஹார்முஸ் ஜலசந்தி மீது கவனம் செலுத்தினால், இந்தப் போர் இன்னும் நீடிக்கலாம் என்று ட்ரம்ப் நினைக்கிறார். இப்போதைக்கு ட்ரம்பின் திட்டம் – ஈரானின் கடற்படை, ஏவுகணைகளை பலவீனமடைய செய்வது ஆகும். அதன் பின், தாக்குதலைக் குறைத்து, பேச்சுவார்த்தை மூலம் பழையபடி, அனைத்து வர்த்தகங்களையும் தொடங்குவதாகும். ஒருவேளை, இது நடக்கவில்லை என்றால், ஐரோப்ப நாடுகள், வளைகுடா நாடுகள் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வைப்பதாகும். `ஸ்டாலினை அரசியலில் உருவாக்கியவர் &#039;நான்&#039; இல்லை; இந்திரா காந்தி&#039; - கருணாநிதியே சொல்கிறார் |Vote Vibes ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/ff8g0p7b/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹார்முஸ், ஜலசந்தியை, திறப்பதெல்லாம், இருக்கட்டும், அதை, விட...-, ஈரான், போரில், ட்ரம்ப்-ன், அடுத்த, பிளான்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் போருக்கு ஆகும் செலவுகள்; அரபு நாடுகளின் தலையில் கட்டப்போகிறாரா ட்ரம்ப்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்கு-ஆகும்-செலவுகள்-அரபு-நாடுகளின்-தலையில்-கட்டப்போகிறாரா-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போருக்கு-ஆகும்-செலவுகள்-அரபு-நாடுகளின்-தலையில்-கட்டப்போகிறாரா-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானைத் தாக்கத் தொடங்கின. முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்தப் போர் இன்னும் முடிந்தபாடில்லை… தொடர்ந்துகொண்டே இருக்கிறது.அமெரிக்காவையும், இஸ்ரேலையும் தாக்க முடியாத ஈரான், அவர்களைப் பழிவாங்க தங்களைச் சுற்றி இருக்கும் அரபு நாடுகளைத்தான் தாக்கி வருகின்றது. கரோலின் லீவிட்விலை அதிகரிக்கப் போகிறது? - &#039;இந்த&#039; உலோகத்தை இப்போது மிஸ் பண்ணிடாதீங்க; &#039;இப்படி&#039; வாங்கலாம்!செலவுகள்...இந்தப் போர் முடிவுக்கு வர ஈரான் வைக்கும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று – ‘இந்தப் போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளை சமன் செய்ய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’. இன்னொரு பக்கம், இந்தப் போரினால் அமெரிக்காவும் பல சேதங்களைச் சந்தித்துள்ளது... அதிக செலவுகளும் ஆகியுள்ளன.இந்தச் செலவுகளை ஈடுசெய்ய அரபு நாடுகளிடம் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பணம் கேட்பாரா என்று நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.பதில்இந்தக் கேள்விக்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்புச் செயலாளர் கரோலின் லீவிட், “ஈரான் போர் செலவுகளை ஈடு செய்ய அரபு நாடுகளை அழைப்பதில் அதிபர் ஆர்வாமாகத்தான் உள்ளார். இப்படி ஒரு ஐடியா அவருக்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், இது குறித்து மேலும் அவரே உங்களிடம் தெரிவிப்பார்” என்று பதிலளித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கிய போருக்கு அரபு நாடுகள் காசு கட்டப் போகின்றனவா?`ஸ்டாலினை அரசியலில் உருவாக்கியவர் &#039;நான்&#039; இல்லை; இந்திரா காந்தி&#039; - கருணாநிதியே சொல்கிறார் |Vote Vibes ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-25/9c9bipfv/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போருக்கு, ஆகும், செலவுகள், அரபு, நாடுகளின், தலையில், கட்டப்போகிறாரா, ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>மனிதாபிமான உதவி: இந்தியா வரவிருந்த விமானம் மீது தாக்குதல் &amp; ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/மனிதாபிமான-உதவி-இந்தியா-வரவிருந்த-விமானம்-மீது-தாக்குதல்-ஈரானை-எச்சரிக்கும்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/மனிதாபிமான-உதவி-இந்தியா-வரவிருந்த-விமானம்-மீது-தாக்குதல்-ஈரானை-எச்சரிக்கும்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பலமுனை மோதலாக உருவெடுத்துள்ளது. ஈரானிலிருந்து இந்தியாவிற்கு மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காகப் புறப்படவிருந்த விமானம் ஒன்று அமெரிக்க வான்வழித் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரானின் மஷாத் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில், &#039;மஹான் ஏர்&#039; நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. அந்த விமானத்தில் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக டெல்லிக்கு வரவிருந்த இந்த விமானம், தாக்குதலுக்கு உள்ளானதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் தனது சுகாதாரக் கட்டமைப்பின் மீதான அழுத்தத்தைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், இந்திய உதவிப் பொருட்கள் ஈரானுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.Mahan Airஇந்த மோதல்களுக்கு மத்தியிலும், தனக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு ஈரான் தனது நன்றியைத் தெரிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளில், இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் செய்திகள் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் இந்தியா அனுப்பிய முதற்கட்ட மனிதாபிமான உதவிகளை ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் பெற்றுக்கொண்ட நிலையில், இந்த நன்றியறிவிப்பு ஒரு அடையாளச் செயலாகப் பார்க்கப்படுகிறது.இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது &#039;ட்ரூத் சோஷியல்&#039; தளத்தில், ``ஹோர்முஸ் ஜலசந்தி உடனடியாக வணிகத்திற்காகத் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை முற்றிலுமாகத் தகர்ப்போம். மேலும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும். ஈரானின் 47 ஆண்டுகால பயங்கரவாத ஆட்சிக்கு இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும்&quot; எனக் குறிப்பிட்டுள்ளார்.ட்ரம்ப்ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்த நேரடி மோதல் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியில் தடைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த மத்தியஸ்த முயற்சிகளை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்து போர் இன்னும் தீவிரமடையும் என்றே அஞ்சப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/9svgach1/Mahan-Air" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மனிதாபிமான, உதவி:, இந்தியா, வரவிருந்த, விமானம், மீது, தாக்குதல், ஈரானை, எச்சரிக்கும், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran war: Kharg Island&amp;ஐ கைப்பற்ற US திட்டமா? | Trump | Israel | Decode | Vikatan</title>
        <link>https://dailytopnewz24.com/iran-war-kharg-island-ஐ-கைப்பற்ற-us-திட்டமா-trump-israel-decode-vikatan</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-war-kharg-island-ஐ-கைப்பற்ற-us-திட்டமா-trump-israel-decode-vikatan</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/9eaqhc9h/WhatsApp-Image-2026-03-30-at-7.22.58-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, war:, Kharg, Island-ஐ, கைப்பற்ற, திட்டமா, Trump, Israel, Decode, Vikatan</media:keywords>
    </item>
    <item>
        <title>குவைத்: அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல்; முதுகுளத்தூர் வாலிபர் பலி</title>
        <link>https://dailytopnewz24.com/குவைத்-அமெரிக்க-ராணுவ-தளத்தின்-மீது-ஈரான்-தாக்குதல்-முதுகுளத்தூர்-வாலிபர்-பலி</link>
        <guid>https://dailytopnewz24.com/குவைத்-அமெரிக்க-ராணுவ-தளத்தின்-மீது-ஈரான்-தாக்குதல்-முதுகுளத்தூர்-வாலிபர்-பலி</guid>
        <description><![CDATA[ ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது அணிக்குருந்தன் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சந்தான செல்வம் (37).இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சந்தான செல்வம் கடந்த 12 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள தனியார் நிறுவனமான அல் அதோ என்ற இஞ்சினியரிங் கம்பெனியில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.ஈரான் தாக்குதல்இந்நிலையில் மேற்கு ஆசியாவில் உள்ள ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நாடுகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் நாடும், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?நேற்று முன் தினம் இரவு குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ராணுவ தளத்தின் அருகே உள்ள அல் அதோ என்ற தனியார் நிறுவனமும் பாதிப்படைந்தது.இந்தத் தாக்குதலில் அங்கு பணியாற்றி வந்த சந்தான செல்வம் குண்டு காயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் அந்நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் மூலம் கெளசல்யாவிற்குத் தெரிய வந்தது. ஆனால் தனது கணவரின் நிலையை அறிந்து கொள்ள மீண்டும் அவர்களை கெளசல்யா தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் இவரது அழைப்பை ஏற்கவில்லை.சந்தான செல்வம் இந்நிலையில் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தான செல்வம் உயிரிழந்த தகவலை அணிக்குருந்தன் கிராம நிரிவாக அதிகாரிக்குத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த அதிகாரி, சந்தான செல்வம் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். தகவலை அறிந்த சந்தான செல்வம் குடும்பத்தினர் மற்றும் அணிக்குருந்தன் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், ஈரான் தாக்குதலில் பலியான சந்தான செல்வத்தின் உடலை தங்கள் கிராமத்திற்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.Iran: பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்படுமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-31/s12xn051/சந்தான-செல்வம்.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குவைத்:, அமெரிக்க, ராணுவ, தளத்தின், மீது, ஈரான், தாக்குதல், முதுகுளத்தூர், வாலிபர், பலி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;ஆட்சி மாற்றம் நடக்கும்; ஆனால், ஈரானில் அல்ல&amp;quot; &amp; ட்ரம்ப் குடும்பத்திலேயே எழும் எதிர்ப்புக் குரல்</title>
        <link>https://dailytopnewz24.com/ஆட்சி-மாற்றம்-நடக்கும்-ஆனால்-ஈரானில்-அல்ல-ட்ரம்ப்-குடும்பத்திலேயே-எழும்-எதிர்ப்புக்-குரல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆட்சி-மாற்றம்-நடக்கும்-ஆனால்-ஈரானில்-அல்ல-ட்ரம்ப்-குடும்பத்திலேயே-எழும்-எதிர்ப்புக்-குரல்</guid>
        <description><![CDATA[ &quot;ஈரானில் ஆட்சி மாற்றம் வேண்டும். ஈரானின் புதிய அரசாங்கத்தோடு பேசி வருகிறேன்&quot; என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடிக்கடி கூறி வருகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – இரண்டு நாடுகளும் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக் காரணம் ‘ஈரானின் ஆட்சி மாற்றத்திற்காகத்தான்’ என்பது இப்போது நன்கு தெரிகிறது. ஈரான் மீது அமெரிக்கா போர் நடத்துவது அமெரிக்காவில் இருக்கும் பலருக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்க்கும் இந்தப் போரில் விருப்பமில்லை என்கிற செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேரி எல். ட்ரம்ப் பதிவுபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇந்த நிலையில், ட்ரம்பின் சொந்த குடும்பத்தில் இருந்தே ஒரு குரல் வந்திருக்கிறது. ட்ரம்பின் அண்ணன் மகள் மேரி எல். ட்ரம்ப். இவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது…“டொனால்ட் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறார்தான். ஆனால், அது ஈரானில் இல்லை. அமெரிக்காவில்” என்று பதிவிட்டுள்ளார். `UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து&#039; - ஜெஃப்ரி சாக்ஸ் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-14/1ni3jd23/94dffngtrump625x30012March26.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆட்சி, மாற்றம், நடக்கும், ஆனால், ஈரானில், அல்ல, ட்ரம்ப், குடும்பத்திலேயே, எழும், எதிர்ப்புக், குரல்</media:keywords>
    </item>
    <item>
        <title>`UAE ஈரானை திருப்பி தாக்காதது நல்லதே; அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்து&amp;apos; &amp; ஜெஃப்ரி சாக்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/uae-ஈரானை-திருப்பி-தாக்காதது-நல்லதே-அமெரிக்காவிற்கு-நண்பராக-இருப்பது-பேராபத்து-ஜெஃப்ரி-சாக்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/uae-ஈரானை-திருப்பி-தாக்காதது-நல்லதே-அமெரிக்காவிற்கு-நண்பராக-இருப்பது-பேராபத்து-ஜெஃப்ரி-சாக்ஸ்</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளைப் பழிவாங்க, ஈரான் மத்திய கிழக்கு நாடுகளின் மீதுதான் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்படி ஈரான் தாக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் முக்கியமான ஒன்று. ஆனால், ஈரான் தங்களைத் தாக்குவதற்கு இதுவரை எந்தப் பதிலடிகளையும் இந்த மத்திய கிழக்கு நாடுகள் கொடுக்கவில்லை. ஒருவேளை, அமீரகம் பதிலடி கொடுத்தாலும், அது அந்த நாட்டிற்கு தான் ஆபத்து என்று அமெரிக்காவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறுகிறார்.ஐக்கிய அரபு அமீரகம்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஎன்ன சொல்கிறார்?“ஐக்கிய அரபு அமீரகம் ஈரான் போருக்குச் சென்றால் துபாயும், அபுதாபியும் பெரிய அடியைச் சந்திக்கும். காரணம், இந்த இரு நாடுகளும் சுற்றுலா தளங்கள். அங்கே ஏவுகணை பாதுகாப்பு பகுதிகள் இல்லை. அது பணக்காரர்கள் பார்ட்டிக்குச் சென்று, அதிக பணம் போடும் நகரங்கள். அதனால், அவர்கள் போருக்குச் சென்றால் கண்ணைத் திறந்துகொண்டே குழியில் விழுவதுபோல ஆகும். மேலும், அது இப்போதிருக்கும் பிரச்னையை இரட்டிப்பாக்கும். ஆப்ரஹாம் ஒப்பந்தத்தின் படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவாக அமீரகம் போரில் இறங்குவது பிரச்னையை விலை கொடுத்து வாங்குவது போல. அமெரிக்காவிற்கு நண்பராக இருப்பது பேராபத்துஇந்த வளைகுடா நாடுகள் தங்களது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை நம்பி இருக்கின்றன. இது தவறான கணக்கு ஆகும். கிஸ்ஸிஞ்சரின் பிரபலமான பழமொழியை நான் அடிக்கடி கூறுகிறேன்… “அமெரிக்காவின் எதிரியாக இருப்பது ஆபத்து. ஆனால், அதை விட, அமெரிக்காவின் நண்பராக இருப்பது பேராபத்து”. ஈரானை எதிர்க்க டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்காவில் கண்மூடித்தனமாக கொட்டி வந்தனர். அது போதும். சூழலை புரிந்துகொண்டு இனி நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்”.ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்டரி கொடுக்கும் ATM புதிய நடைமுறைகள் - லிஸ்டில் உங்க வங்கி இருக்கா? செக்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-30/ajkqj5j8/Jeffrey-D-Sachs.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>UAE, ஈரானை, திருப்பி, தாக்காதது, நல்லதே, அமெரிக்காவிற்கு, நண்பராக, இருப்பது, பேராபத்து, ஜெஃப்ரி, சாக்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;இவர்தான்&amp;quot; &amp; ஹார்முஸ் வழியாகச் செல்ல கப்பல்களுக்கு அனுமதியளித்தது யார்? &amp; ட்ரம்ப் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இவர்தான்-ஹார்முஸ்-வழியாகச்-செல்ல-கப்பல்களுக்கு-அனுமதியளித்தது-யார்-ட்ரம்ப்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இவர்தான்-ஹார்முஸ்-வழியாகச்-செல்ல-கப்பல்களுக்கு-அனுமதியளித்தது-யார்-ட்ரம்ப்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ நேற்று பைனான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் பேசியிருக்கும் முக்கிய பாயின்ட்ஸ்…ஈரான் போரில் ட்ரம்பிற்குப் பிடித்த ஒன்று!“நான் நேர்மையாக பதில் சொல்ல வேண்டுமானால்… ஈரானில் இருந்து எண்ணெய் எடுப்பதுதான் எனக்குப் பிடித்த ஒன்று. ஆனால், அமெரிக்காவில் இருக்கும் சிலர், ‘ஏன் அதைச் செய்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்கள். அவர்கள் முட்டாள்கள்”. கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுமா?“கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றுவது மிகவும் எளிது. அவர்களுக்கு அங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை என்று நினைக்கிறேன். அதனால், அதை மிக எளிதாக நம்மால் கைப்பற்ற முடியும்”Kharg Island | கார்க் தீவுபோரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஈரானின் அன்பளிப்பு“ஈரான் முதலில் பாகிஸ்தான் கொடியிட்ட 10 எண்ணெய் டேங்கரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதித்தது. இப்போது 20 கப்பல்களை அனுமதிக்கிறது. இந்த 20 கப்பல்களும் தங்களது பயணத்தைத் தொடங்கிவிட்டன. ஈரானின் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப்தான் இந்தக் கப்பல்களுக்கு அனுமதி கொடுத்தார்”. ஏப்ரல் 1-ம் தேதி முதல் என்டரி கொடுக்கும் ATM புதிய நடைமுறைகள் - லிஸ்டில் உங்க வங்கி இருக்கா? செக்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-30/u6nhn0vo/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இவர்தான், ஹார்முஸ், வழியாகச், செல்ல, கப்பல்களுக்கு, அனுமதியளித்தது, யார், ட்ரம்ப், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>போர் எதிரொலி: `மீண்டும் மண்ணெண்ணெய்.!&amp;apos; &amp; மத்திய அரசு அறிவிப்பு!</title>
        <link>https://dailytopnewz24.com/போர்-எதிரொலி-மீண்டும்-மண்ணெண்ணெய்-மத்திய-அரசு-அறிவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/போர்-எதிரொலி-மீண்டும்-மண்ணெண்ணெய்-மத்திய-அரசு-அறிவிப்பு</guid>
        <description><![CDATA[ ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் இடையே தொடர்ந்துவரும் போரால், ஹோர்மூஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருக்கிறது. ஈரான் அனுமதிக்கும் நாடுகளின் கப்பல் மட்டுமே பயணிக்க முடியும் என்ற சூழல் நிலவுவதால் உலக நாடுகள் பலவும் எரிசக்திப் பற்றாக்குறையை எதிர்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி, பெட்ரோலியப் பாதுகாப்பு மற்றும் உரிம விதிமுறைகளைத் தளர்த்தி மார்ச் 29 அன்று புதிய அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மண்ணெண்ணெய்அதில், ``மண்ணெண்ணெய் விநியோகம் ஏற்கனவே படிப்படியாக நிறுத்தப்பட்டிருந்த டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பொது விநியோக அமைப்பின் (PDS) உயர்தர மண்ணெண்ணெயை ஒதுக்கீடு செய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், விநியோகத்தை விரைவுபடுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, சமையல் மற்றும் விளக்கு எரிப்பதற்காக, வீடுகளுக்குத் தேவையான மண்ணெண்ணெயை அடுத்த 60 நாள்களுக்கு வழங்கப்படும்.மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இது தவிர குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்கள் மூலமாகவும் விநியோகிக்கலாம். அவற்றில் 5,000 லிட்டர் வரை மண்ணெண்ணெயை இருப்பு வைக்க அனுமதிக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் இரண்டு சேவை நிலையங்களை மாநில அரசுகள் அடையாளம் காணும்.திருச்சியில் பிரதமர் மோடிதற்போதைய புவிசார் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோலிய விதிகள் 2002-ன் கீழ் மண்ணெண்ணெய் கையாளுதல் மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கான உரிமத் தேவைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும், இறுதிக்கட்ட விநியோகச் சங்கிலியை பலப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தளர்வுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. 60 நாட்களுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை இது நடைமுறையில் இருக்கும்.&quot; என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.Trump: &#039;No Kings&#039; ட்ரம்பிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?    ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-08/887653ae-91bb-470f-8363-73e84e9d25f3/20190820_113058.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>போர், எதிரொலி:, மீண்டும், மண்ணெண்ணெய்., மத்திய, அரசு, அறிவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;நரகத்திற்கு வரவேற்கிறோம்&amp;quot; &amp; அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்; போர் முனையில் 2,500 கடற்படையினர்!</title>
        <link>https://dailytopnewz24.com/நரகத்திற்கு-வரவேற்கிறோம்-அமெரிக்காவை-எச்சரிக்கும்-ஈரான்-போர்-முனையில்-2500-கடற்படையினர்</link>
        <guid>https://dailytopnewz24.com/நரகத்திற்கு-வரவேற்கிறோம்-அமெரிக்காவை-எச்சரிக்கும்-ஈரான்-போர்-முனையில்-2500-கடற்படையினர்</guid>
        <description><![CDATA[ இஸ்ரேலும் - அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் சந்தித்துப் போரை நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதே வேளையில், மேற்கு ஆசியாவில் தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியானது.யுஎஸ்எஸ் திரிபோலிஅதை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்காவின் பிரமாண்டமான &#039;யுஎஸ்எஸ் திரிபோலி&#039; (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மறுபுறம், லெபனானின் தெற்குப் பகுதியில் தனது ஊடுருவலை விரிவாக்கவும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.இந்த விவகாரம் தீவிரமான நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், ``அமெரிக்கத் வீரர்கள் தரைவழியாக வருவதற்காக ஈரானியப் படைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர்களது பிராந்தியக் கூட்டாளிகளை நிரந்தரமாகத் தண்டிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. எங்களது உறுதியும் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது&quot; எனத் தெரிவித்துள்ளார்.முகமது பாகர் கலிபாப்இதற்கிடையில் கடந்த சனிக்கிழமையன்று யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது, பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக நடக்கும் கடல்சார் வணிகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.மேலும், ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதியைக் கையாளும் கார்க் தீவைக் (Kharg Island) கைப்பற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குப் பதிலடியாக, ஈரானின் அரசு நாளிதழான &#039;தி டெஹ்ரான் டைம்ஸ்&#039;, தனது முதன்மைப் பக்கத்தில் &quot;நரகத்திற்கு வரவேற்கிறோம்&quot; எனத் தலைப்பிட்டு, &quot;ஈரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்புவார்கள்&quot; என உளவியல் ரீதியான எச்சரிக்கையை விடுத்துள்ளது.சனிக்கிழமையன்று சவூதி அரேபியாவிலுள்ள இளவரசர் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன AWACS விமானம் சேதமடைந்தது. இது மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் வான்வழி ஆதிக்கத்திற்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது. இப்போருக்காக அமெரிக்கத் பாதுகாப்புத் துறை, நாடாளுமன்றத்திடம் கூடுதலாக 200 பில்லியன் டாலர் நிதியைக் கோரியுள்ளது.!Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-30/6ep8g31r/Mohammad-Bagher-Qalibaf" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நரகத்திற்கு, வரவேற்கிறோம், அமெரிக்காவை, எச்சரிக்கும், ஈரான், போர், முனையில், 2, 500, கடற்படையினர்</media:keywords>
    </item>
    <item>
        <title>No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/no-kings-அமெரிக்கா-ஐரோப்பாவில்-வெடித்த-போராட்டம்-அதிபர்-ட்ரம்ப்க்கு-எதிராகக்-குவியும்-மக்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/no-kings-அமெரிக்கா-ஐரோப்பாவில்-வெடித்த-போராட்டம்-அதிபர்-ட்ரம்ப்க்கு-எதிராகக்-குவியும்-மக்கள்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கும் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமான &#039;நோ கிங்ஸ்&#039; பேரணிகள் நடைபெற்றன.அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சுமார் 3,100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் போராட்டங்கள் பதிவாகின. இதில் மினசோட்டா மாகாணம் போராட்டத்தின் மையப்புள்ளியாக மாறியது. செயின்ட் பால் பகுதியில் உள்ள கேபிடல் புல்வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.Actor Robert De Niro on trump at &quot;No Kings&quot; Day event in New York: &quot;He can&#039;t do all the fucked-up things that he&#039;s been doing without the collusion of Congress and the goons in his administration.&quot; pic.twitter.com/p9mDN91Mr5— CSPAN (@cspan) March 28, 2026


பிரபல இசைக்கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பெடரல் ஏஜென்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ரெனீ குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் நினைவாக எழுதப்பட்ட பாடலைப் பாடி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். &quot;இந்த பிற்போக்குத்தனமான கனவு நீடிக்காது&quot; என்று அவர் உணர்ச்சிவசப்படப் பேசினார். இந்தப் பேரணியில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ, பாடகி ஜோன் பேஸ், நடிகை ஜேன் ஃபோண்டா மற்றும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்காவாஷிங்டன் டிசியின் லிங்கன் மெமோரியல் முதல் நேஷனல் மால் வரை நூற்றுக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். &quot;மகுடத்தைக் கீழே போடு, கோமாளியே&quot; போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.லாஸ் ஏஞ்சல்ஸின் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். பலரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.no kings protestஅமெரிக்கா தவிர லண்டன், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. லண்டனில் &#039;வலதுசாரிப் போக்கை நிறுத்து&#039; என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ரோமில் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு எதிராகவும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்கினர்.இந்தப் போராட்டங்களை குடியரசுக் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் கூறுகையில், &quot;இவை இடதுசாரி அமைப்புகளால் திட்டமிடப்பட்டவை. பொதுமக்களின் உண்மையான ஆதரவு இதற்கு இல்லை&quot; எனத் தெரிவித்தார். தேசிய குடியரசுக் கட்சி கமிட்டியும் (NRCC) இந்தப் போராட்டங்களை &quot;அமெரிக்காவை வெறுக்கும் பேரணிகள்&quot; எனக் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-29/5lot6tb3/no-kings-protest-washington.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Kings:, அமெரிக்கா, ஐரோப்பாவில், வெடித்த, போராட்டம், அதிபர், ட்ரம்ப்க்கு, எதிராகக், குவியும், மக்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆபரேஷன் ஹார்முஸ், கார்க் தீவு: தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் அருகில் வீரர்களைக் குவிக்கும் அமெரிக்கா</title>
        <link>https://dailytopnewz24.com/ஆபரேஷன்-ஹார்முஸ்-கார்க்-தீவு-தரைவழித்-தாக்குதலுக்கு-ஈரான்-அருகில்-வீரர்களைக்-குவிக்கும்-அமெரிக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆபரேஷன்-ஹார்முஸ்-கார்க்-தீவு-தரைவழித்-தாக்குதலுக்கு-ஈரான்-அருகில்-வீரர்களைக்-குவிக்கும்-அமெரிக்கா</guid>
        <description><![CDATA[ இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போரால் ஈரான் தனது எல்லைக்கு உட்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரானை மிரட்டி வருகிறார். அதோடு இதற்காக ட்ரம்ப், ஈரானுக்குக் காலக்கெடுவும் விதித்து வருகிறார். மற்றொரு புறம் ஈரான் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காத பட்சத்தில் ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா தயாராகி வருகிறது. இதற்காக ஈரானுக்கு அருகில் அமெரிக்கா தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகிறது. இத்தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரானும் தெரிவித்துள்ளது. தற்போது வளைகுடா நாட்டில் இருந்து ஈரானிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது சரியாக இருக்காது என்று அமெரிக்கா கருதுகிறது. எனவே கடல் வழியாகச் சென்று இத்தாக்குதலில் ஈடுபட அமெரிக்கா தயாராகி வருகிறது. ராணுவம்இதற்காக யு.எஸ்.எஸ்.திரிபோலி என்ற போர்க்கப்பல் மூலம் 3500 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் வளைகுடாவிற்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் ஈரான் அருகில் முகாமிட்டுள்ளனர். தற்போது மொத்தம் 5,000 வீரர்கள் ஈரானைத் தாக்க தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 10 ஆயிரம் வீரர்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப பெண்டகன் பரிசீலித்து வருகிறது.இத்தாக்குதல் தொடங்கப்பட்டால் சில வாரங்கள் நடக்கலாம் என்றும், அதிகபட்சம் 2 மாதங்கள் வரை மட்டுமே இருக்கும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரைவழித் தாக்குதல் நடத்துவது குறித்து டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். எந்நேரமும் இதற்கு ட்ரம்ப் ஒப்புதல் கொடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் &#039;எலான் மஸ்க்&#039;கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?இதனால் ஈரானில் பதற்றம் மேலும் அதிகரித்து இருக்கிறது. ஈரானில் உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், அதற்குப் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும், நாங்களாகத் தாக்கமாட்டோம் என்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், &quot;ஈரான் முன்கூட்டிய தாக்குதல்களை மேற்கொள்வதில்லை என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்; ஆனால், எங்களது உள்கட்டமைப்புகள் அல்லது பொருளாதார மையங்கள் குறிவைக்கப்பட்டால், நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம்&quot; என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஈரானில் அதிக எண்ணெய் வளம் கொண்ட கார்க் தீவை முதலில் பிடித்துக்கொண்டு அதன் பிறகு ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. இத்தரைவழித் தாக்குதல் மூலம் ஈரானைப் பிடிப்பது தங்களது நோக்கம் இல்லை என்றும், தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் ஈரானின் ராணுவத் கட்டமைப்புகளை அழிப்பதே பிரதான இலக்கு என்றும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடலோரக் கட்டமைப்புகளும் இத்தாக்குதலில் குறிவைக்கப்பட இருக்கின்றன. இத்தாக்குதலுக்கு நான்கு முக்கிய அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. கார்க் தீவைக் கைப்பற்றுவது அல்லது முற்றுகையிடுவது, ஹார்முஸ் ஜலசந்தியைக் கட்டுப்படுத்த ஈரானுக்கு உதவும் லாராக் தீவைத் தாக்குவது, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உரிமை கோரும் அருகிலுள்ள தீவுகளுடன் அபு மூசாவையும் கைப்பற்றுவது ஆகியவை அடங்கும்.மேலும் அப்பகுதியில் ஈரானிய எண்ணெயை ஏற்றுமதி செய்யும் கப்பல்களை இடைமறிப்பது இத்தாக்குதலின் நோக்கமாகும். முழு அளவில் அமெரிக்கப் படைகள் தரைவழித்தாக்குதலுக்குத் தயாராகி வந்தாலும் எப்போது இத்தாக்குதல் தொடங்கும் என்பது மர்மமாக இருக்கிறது. பேச்சுவார்த்தை என்று ஈரானின் கவனத்தை திசை திருப்பிவிட்டு பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது போன்று இப்போதும் தாக்குதல் நடத்த அமெரிக்கா சத்திட்டம் தீட்டியது. ஆனால் இப்போது அதன் வலையில் ஈரான் விழவில்லை.Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-29/ei6mo1iv/the-potential-operations-are-designed-to-hit-high-value-targets-such-as-missile-launch-sites-air-de-294612982-16x90.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆபரேஷன், ஹார்முஸ், கார்க், தீவு:, தரைவழித், தாக்குதலுக்கு, ஈரான், அருகில், வீரர்களைக், குவிக்கும், அமெரிக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: மேற்கு ஆசியாவிற்குள் நுழைந்த அமெரிக்கப் போர்க்கப்பல்; ஈரான் எல்லையில் பதற்றம்?</title>
        <link>https://dailytopnewz24.com/iran-மேற்கு-ஆசியாவிற்குள்-நுழைந்த-அமெரிக்கப்-போர்க்கப்பல்-ஈரான்-எல்லையில்-பதற்றம்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-மேற்கு-ஆசியாவிற்குள்-நுழைந்த-அமெரிக்கப்-போர்க்கப்பல்-ஈரான்-எல்லையில்-பதற்றம்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் வலுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் பிரமாண்டமான &#039;யுஎஸ்எஸ் திரிபோலி&#039; (USS Tripoli) போர்க்கப்பல் மேற்கு ஆசியப் பகுதிக்கு வந்தடைந்தது. நேற்று (28-ம் தேதி) அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இக்கப்பல், சுமார் 3,500 கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகளைக் கொண்டுள்ள ஒரு வலிமையான படைப்பிரிவின் முதன்மைக் கப்பலாகும்.யுஎஸ்எஸ் திரிபோலிஇதில் அதிநவீன F-35 போர் விமானங்கள், சீஹாக் ஹெலிகாப்டர்கள் மற்றும் வீரர்களை ஏற்றிச் செல்லும் ஆஸ்ப்ரே (Osprey) ரக விமானங்கள் எனப் பெரும் ஆயுதக் கிடங்கே தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (United States Central Command - CENTCOM) தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை, ``நவீனப் போர்முறையில் தரைப்படை வீரர்களை நேரடியாகக் களமிறக்காமல், அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும். ஒரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த அல்லது அதன் ராணுவத் திறனை முடக்கப் பல வழிகள் உள்ளன&quot; எனத் தெரிவித்திருந்தார்.இருப்பினும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்துத் தெளிவான முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். சுமார் 10,000 வீரர்களை மேற்கு ஆசியாவிற்கு அனுப்ப அதிபர் ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.திரிபோலி போர்க்கப்பலின் வருகை இப்பகுதியில் நிலவும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.ஈரான் போருக்கு அமெரிக்கா செலவு செய்யும் பெருந்தொகை; சிதையும் ஏழை மக்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-29/4d97liiu/amphibious" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, மேற்கு, ஆசியாவிற்குள், நுழைந்த, அமெரிக்கப், போர்க்கப்பல், ஈரான், எல்லையில், பதற்றம்</media:keywords>
    </item>
    <item>
        <title>சவுதி விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல்: 12 அமெரிக்க வீரர்கள் காயம், விமானங்கள் சேதம்</title>
        <link>https://dailytopnewz24.com/சவுதி-விமானப்படை-தளத்தில்-ஈரான்-தாக்குதல்-12-அமெரிக்க-வீரர்கள்-காயம்-விமானங்கள்-சேதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/சவுதி-விமானப்படை-தளத்தில்-ஈரான்-தாக்குதல்-12-அமெரிக்க-வீரர்கள்-காயம்-விமானங்கள்-சேதம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று இரவு ஈரானில் உள்ள டெஹ்ரான் நகரில் இஸ்ரேல் கடுமையான ஏவுணணைத் தாக்குதலை நடத்தியது. மேலும் ஈரானில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களை விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்கா தெரிவித்து இருந்தாலும் ஈரானின் மற்ற இடங்களில் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதோடு முதல் முறையாக ஏமனும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.  ஈரான் சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த விமானப்படைத்தளத்தை அமெரிக்கா தன் வசம் வைத்திருந்தது. அங்கு அதிக அளவில் அமெரிக்க ராணுவ வீரர்களும், போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஈரான் தாக்குதலில் விமானப்படை தள கட்டடம் மீது குண்டு விழுந்து வெடித்தது. கட்டடம் தாக்கப்பட்டபோது அதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். அவர்களில் 12 பேர் காயம் அடைந்தனர். அதில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. மேலும் இத்தாக்குதலில் அமெரிக்காவிற்கு சொந்தமான எரிபொருள் நிரம்பும் விமானங்கள் அதிக அளவில் சேதம் அடைந்தது. ஒரு ஏவுகணையும், சில ஆளில்லா ட்ரோன்களும் இத்தாக்குதலில் ஈடுபட்டன. இந்த விமானப்படை தளத்தில் ஈரான் தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஈரான் நடத்திய தாக்குதலில் 5 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்தன. அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் நடத்தி வரும்போரில் இது வரை அமெரிக்க வீரர்கள் 300 பேர் காயம் அடைந்துள்ளனர்.அமெரிக்காவுக்கு 2.9 பில்லியன் இழப்புஈரானுக்கு எதிரான இப்போரில் அமெரிக்காவிற்கு ராணுவ வீரர்களின் இழப்பு குறைவு என்றாலும் ராணுவ உபகரணங்கள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. முதல் 3 வார போரில் அமெரிக்காவிற்கு அதிக பட்சமாக 2.9 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு இழப்பு என்ற விபரத்தை பென்டகன் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். குவைத்தில் அமெரிக்காவிற்கு சொந்தமான 3 F-15E ரக போர் விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பும் KC-135 விமானம் மற்றொரு விமானத்தில் மோதி கீழே விழுந்தது. இதில் அதில் இருந்த 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் ஏராளமான எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன. அதோடு அமெரிக்காவிற்கு சொந்தமான MQ-9 ரக ட்ரோன்களும் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமான பாதுகாப்பு ரேடாரை ஈரான் தாக்கி அழித்துள்ளது. அமெரிக்க வீரர்கள் ஹோட்டலில் தஞ்சம்ஈரானின் தொடர் தாக்குதல் காரணமாக அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களது தளத்தை காலி செய்துவிட்டு இப்போது ஹோட்டல்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் ஹோட்டல்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள பொருளாதார மண்டத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை வான்பாதுகாப்பு இடைமறித்து அழித்தது. இதனால் கீழே விழுந்த கழிவுகள் பட்டு 5 இந்தியர்கள் காயம் அடைந்தனர். குவைத்தில் உள்ள புபியான் தீவில் அமெரிக்க கடற்படையினர் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் அந்த தளம் முழுமையாக சேதம் அடைந்து இருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள வர்த்தக துறைமுகம் ஒன்றும் சேதம் அடைந்து இருக்கிறது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-28/eljmzg6s/n1o19oiousisraeliran-war625x30028March26.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சவுதி, விமானப்படை, தளத்தில், ஈரான், தாக்குதல்:, அமெரிக்க, வீரர்கள், காயம், விமானங்கள், சேதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>இன்னும் மூன்று நாள்களில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க ரஷ்யா &amp;apos;அதிரடி&amp;apos; முடிவு? காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இன்னும்-மூன்று-நாள்களில்-பெட்ரோல்-ஏற்றுமதிக்கு-தடை-விதிக்க-ரஷ்யா-அதிரடி-முடிவு-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இன்னும்-மூன்று-நாள்களில்-பெட்ரோல்-ஏற்றுமதிக்கு-தடை-விதிக்க-ரஷ்யா-அதிரடி-முடிவு-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ ஈரான் போர்... ஹார்முஸ் ஜலசந்தி மூடல் போன்ற சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பித் தான் இருக்கின்றன.ஆனால், ரஷ்யா இப்போது அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அதாவது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரஷ்யாவில் இருந்து பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்படாது என்று முடிவு செய்யப்பட உள்ளது.ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.  அலெக்சாண்டர் நோவாக் போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஇதனையடுத்து ரஷ்ய எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...&quot;ரஷ்யாவில் முன்னர் கணிக்கப்பட்ட விலையைத் தாண்டி பெட்ரோல் விலை செல்வதை தடுக்கவும்... ரஷ்யாவின் உள்நாட்டு தேவைக்கு பெட்ரோல் தொடர்ந்து இருக்கவும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் ஏற்றுமதி தடை செய்வதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது&quot; என்று குறிப்பிட்டுள்ளதாவது.ரஷ்ய அதிபர் புதினும் உள்நாட்டில் பெட்ரோல் விலை அதிகமாகக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஈரான் போர்‌ குறித்து மோடி - ட்ரம்ப் போன் கால்; லைனில் &#039;எலான் மஸ்க்&#039;கும்! - சர்ப்ரைஸ் ட்விஸ்ட்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-28/uiq2c2se/1000088249.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இன்னும், மூன்று, நாள்களில், பெட்ரோல், ஏற்றுமதிக்கு, தடை, விதிக்க, ரஷ்யா, அதிரடி, முடிவு, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>நெதன்யாகு மீது கடும் கோபத்தில் ஜே.டி.வான்ஸ்: பின்னணியில் ஈரான் போர் &amp; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/நெதன்யாகு-மீது-கடும்-கோபத்தில்-ஜேடிவான்ஸ்-பின்னணியில்-ஈரான்-போர்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/நெதன்யாகு-மீது-கடும்-கோபத்தில்-ஜேடிவான்ஸ்-பின்னணியில்-ஈரான்-போர்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ ஈரான் போர் தொடங்கியதில் இருந்து இரண்டு தகவல்கள் பரவலாக இருந்து வருகின்றன.ஒன்று, ஈரானின் உச்ச தலைவரை அகற்றிவிட்டால், ஈரான் மக்களே அங்கே ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துவிடுவார்கள். அதனால், போர்‌ எளிதில் முடிந்துவிடும் - இதைக் கூறி தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பே ஈரான் மீதான &#039;உடனடி&#039; போருக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.இன்னொன்று, ஈரான் மீதான இந்தப் போரில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸிற்கு உடன்பாடில்லை.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நெதன்யாகுஇதை உறுதி செய்வது போல, Axios செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஜே.டி.வான்ஸ், நெதன்யாகு தொலைபேசியில் உரையாடி இருக்கின்றனர்.நெதன்யாகு மீது ஜே.டி.வான்ஸ் மிகவும் கோபப்பட்டு இருக்கிறார்.&quot;போருக்கு முன்னர், ஈரானில் எளிதாக ஆட்சி மாற்றம் நடந்துவிடும் என்று கூறினீர்கள்&quot; என்று கோபப்பட்டு இருக்கிறார்.முதலில், ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு வான்ஸை தான் முன்னிருத்தியிருக்கிறது இஸ்ரேல். இந்தச் சம்பவத்திற்கு பிறகு, வான்ஸைக் கண்டுகொள்வதில்லையாம்.ஆனால், ஈரான் வான்ஸுடன் பேசத்தான் தயாராக இருக்கற்து என்று தகவல்கள் கூறுகின்றன.அமெரிக்க அதிகாரிகளும், வான்ஸ் தான் பேச்சுவார்த்தைக்கு சிறந்த நபர் என்று கூறுகிறார்கள். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-28/gmf62jkc/1000088184.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நெதன்யாகு, மீது, கடும், கோபத்தில், ஜே.டி.வான்ஸ்:, பின்னணியில், ஈரான், போர், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் போர்‌ குறித்து மோடி &amp; ட்ரம்ப் போன் கால்; லைனில் &amp;apos;எலான் மஸ்க்&amp;apos;கும்! &amp; சர்ப்ரைஸ் ட்விஸ்ட்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போர்-குறித்து-மோடி-ட்ரம்ப்-போன்-கால்-லைனில்-எலான்-மஸ்க்கும்-சர்ப்ரைஸ்-ட்விஸ்ட்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போர்-குறித்து-மோடி-ட்ரம்ப்-போன்-கால்-லைனில்-எலான்-மஸ்க்கும்-சர்ப்ரைஸ்-ட்விஸ்ட்</guid>
        <description><![CDATA[ ஈரான் போர் தொடங்கி இன்றோடு ஐந்தாவது வாரம் ஆரம்பமாகிறது.ஈரான்‌ போர் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இந்திய பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தொலைபேசியில் உரையாடினார்.மோடி பதிவுஇந்த உரையாடல் குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், &quot;அதிபர் ட்ரம்பிடம் இருந்து போன் கால் வந்திருந்தது. இருவரும் மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் குறித்து பேசினோம்.இந்தியா போர் நிறுத்தத்தையும், அமைதியையும் ஆதரிக்கிறது.எலான் மஸ்க்போரை சீக்கிரம் முடிக்க நினைத்த நெதன்யாகு; &#039;மாஸ்டர் பிளானை&#039; தகர்த்த ஈரான் மக்கள்! | Full Detailஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதும், அனைத்து நாடுகளும் அந்தப் பாதையைப் பயன்படுத்த முடிவதையும் உறுதி செய்ய வேண்டும்.அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து உதவ தயார் என்று ஒப்புக்கொண்டிருக்கிறோம்&quot; என்று பதிவிட்டிருந்தார்.எலான் மஸ்க்..?தற்போது நியூயார்க் டைம்ஸ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது, &#039;ட்ரம்ப் - மோடி போன்காலின் போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்கும் லைனில் இருந்திருக்கிறார்.ஆனால், அவர் பேசினாரா... என்ன பேசினார் என்று தெரியவில்லை.வெள்ளை மாளிகையில் உள்ள பெயர்‌ வெளியிடப்படாத இரண்டு அதிகாரிகள் இந்தத் தகவலை கூறியிருக்கின்றனர்.ட்ரம்ப் - எலான் மஸ்க் இடையே கடந்த ஆண்டு மனக்கசப்பு ஏற்பட்டது. இப்போது, அதெல்லாம் சரியாகி இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம்‌ உறுதி செய்கிறது.எங்கேயும் ஃபாலோ செய்யும் Meta &amp; Youtube; &#039;6 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு&#039; - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-16/8uilc7hi/6892a4932f43b.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 01 Apr 2026 18:48:38 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போர்‌, குறித்து, மோடி, ட்ரம்ப், போன், கால், லைனில், எலான், மஸ்க்கும், சர்ப்ரைஸ், ட்விஸ்ட்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: ஹார்முஸ் நீர்வழியை மூடிய ஈரான்: போர் பதற்றத்தால் சர்வதேச கப்பல் போக்குவரத்து முடக்கம்!</title>
        <link>https://dailytopnewz24.com/iran-ஹார்முஸ்-நீர்வழியை-மூடிய-ஈரான்-போர்-பதற்றத்தால்-சர்வதேச-கப்பல்-போக்குவரத்து-முடக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-ஹார்முஸ்-நீர்வழியை-மூடிய-ஈரான்-போர்-பதற்றத்தால்-சர்வதேச-கப்பல்-போக்குவரத்து-முடக்கம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடிவிட்டதாக ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆலோசகர் இப்ராஹிம் ஜப்பாரி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலையும் தாக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச விதிகளின்படி ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச நீர்நிலையாகக் கருதப்பட்டாலும், அதன் 21 மைல் என்ற குறுகிய அகலம் காரணமாகக் கரையில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கப்பல்கள் எளிதில் இலக்காகின்றன. நேற்று பஹ்ரைனில் அமெரிக்கக் கொடி ஏந்திய கப்பல் ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து, காப்பீட்டு நிறுவனங்கள் இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான &quot;போர் அபாயக் காப்பீட்டை&quot; (War Risk Coverage) ரத்து செய்துள்ளன. ஈரான் தனது சிறிய படகுகள், ட்ரோன் தாங்கி கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் வணிகக் கப்பல்களை அச்சுறுத்தும் எனக் கூறப்படுகிறது.கப்பல்இஸ்ரேல் - ஈரான் போர்: ஹோர்முஸ் நீரிணை மூடப்படுமா? உலகப் பொருளாதாரத்தையே ஆளும் சிறிய பகுதி!ஈரானின் இந்த அச்சுறுத்தலை முறியடிக்க அமெரிக்காவின் மத்திய கட்டளை (Centcom) தீவிரமான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. &quot;எபிக் ஃபியூரி&quot; என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், ஈரானின் ட்ரோன் தாங்கி கப்பலான ஷாஹித் பாகேரி அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஓமன் வளைகுடாவில் இருந்த 11 ஈரானியக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. இதன் மூலம் அந்தப் பகுதியில் ஈரானியக் கப்பல்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் பதற்றமான சூழலில், வான்வழி மற்றும் கடல்வழி ஆதிக்கத்தை நிலைநாட்டி, வணிகக் கப்பல்கள் மீண்டும் பாதுகாப்பாகச் செல்வதற்கான சூழலை அமெரிக்க அதிகாரிகள் உருவாக்குவார்கள் என்று BIMCO கப்பல் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் உரங்கள் கொண்டு செல்லும் உலகின் மிக முக்கியமான இந்த நீர்வழியில் தற்போது கப்பல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. அதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது. எனவே, தற்போதைய நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணம் செய்வது பெரும் ஆபத்தாகவே நீடிக்கிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-03/dfv3a9bb/Hormuz" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, ஹார்முஸ், நீர்வழியை, மூடிய, ஈரான்:, போர், பதற்றத்தால், சர்வதேச, கப்பல், போக்குவரத்து, முடக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran Vs Israel: &amp;quot;என் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி&amp;quot;&amp; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நெகிழ்ச்சி!</title>
        <link>https://dailytopnewz24.com/iran-vs-israel-என்-சிறந்த-நண்பர்-மோடிக்கு-நன்றி-இஸ்ரேல்-பிரதமர்-நெதன்யாகு-நெகிழ்ச்சி</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-vs-israel-என்-சிறந்த-நண்பர்-மோடிக்கு-நன்றி-இஸ்ரேல்-பிரதமர்-நெதன்யாகு-நெகிழ்ச்சி</guid>
        <description><![CDATA[ ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில் பெய்ட் ஷெமேஷ் பகுதியில் உள்ள ஜெப ஆலயம் சிதைந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த இடிபாடுகளைப் பார்வையிட பாதுகாப்பு படையினருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வந்திருந்தார்.மோடி - நெதன்யாகுஅப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றதற்கும், உண்மைக்காகக் குரல் கொடுத்ததற்கும் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இஸ்ரேல் மக்களால் பெரிதும் போற்றப்படுபவர். அவருடனான உரையாடல் ஆக்கபூர்வமாக அமைந்தது. ஈரானிய மக்கள் தங்கள் நாட்டின் கொடுங்கோன்மை ஆட்சியை தூக்கியெறியும் காலம் நெருங்கிவிட்டது. அந்த மாற்றம் நிகழும்போது, இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானிய மக்களுக்குத் துணையாக இருக்கும்.&quot; என்றார்.இதற்கிடையில், நேற்று மாலை ஈரான் மீண்டும் பல ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. இதில் மூன்று ஏவுகணைகள் பாதிப்பை ஏற்படுத்தும் முன்னரே வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாகத் தடுத்து அழிக்கப்பட்டன.தொடர் அச்சுறுத்தல் காரணமாக, இஸ்ரேலிய அதிகாரிகள் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மொபைல் போன்களுக்கு அனுப்பப்படும் எச்சரிக்கை செய்தியைப் பின்பற்றி, மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மறு உத்தரவு வரும் வரை அங்கேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்: ``&#039;மோடி ஹக்&#039; மிகவும் சிறப்பு வாய்ந்தது.!&quot; - நெகிழ்ந்த நெதன்யாகு  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-11/94414e6b-7b81-498c-8d1e-e32c03a5ef32/f369f8c1-56de-4345-8fde-0a4b8883c7e6.PNG" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, Israel:, என், சிறந்த, நண்பர், மோடிக்கு, நன்றி-, இஸ்ரேல், பிரதமர், நெதன்யாகு, நெகிழ்ச்சி</media:keywords>
    </item>
    <item>
        <title>USA : ``குவைத் தவறுதலாக 3 அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டது&amp;quot; &amp; அமெரிக்கா!</title>
        <link>https://dailytopnewz24.com/usa-குவைத்-தவறுதலாக-3-அமெரிக்கப்-போர்-விமானங்களை-சுட்டு-வீழ்த்திவிட்டது-அமெரிக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/usa-குவைத்-தவறுதலாக-3-அமெரிக்கப்-போர்-விமானங்களை-சுட்டு-வீழ்த்திவிட்டது-அமெரிக்கா</guid>
        <description><![CDATA[ இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி உள்ளிட்ட உயர் அதிகார்கள் உயிரிழந்தனர். அதற்குப் பழிவாங்கும் வகையில், ஈரான், குவைத், சவூதி அரேபியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், குவைத் வான் பாதுகாப்புப் பகுதியில் பறந்த மூன்று போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த மூன்று விமானங்களும் ஈரானுடையது எனக் கருதப்பட்ட நிலையில், அது அமெரிக்காவின் போர் விமானம் என்றத் தகவல் வெளியாகியிருக்கிறது.The U.S. military says Kuwait mistakenly shot down 3 American F-15E Strike Eagles aircraft during combat.  #الخرج #Iran #IranWar #عاجل_الان pic.twitter.com/vzKh87fcaj— zia khan (@Ziakhaaan) March 2, 2026


இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக ஆறு விமானிகளும் பத்திரமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக &#039;ஆபரேஷன் எபிக் ஃபியூரி&#039; (Operation Epic Fury) நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, குவைத்தின் வான் பாதுகாப்புப் படை இந்த விமானங்களை தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியது&quot; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.விமானங்கள் சுடப்பட்ட தருணத்தில், விமானிகள் பாராசூட் மூலம் குதிக்கும் காட்சிகளும், தரையிறங்கிய விமானிகளை குவைத் அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் மீட்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மீட்கப்பட்ட ஆறு விமானிகளும் தற்போது சீரான உடல் நிலையில் இருப்பதாக அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது.அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில், நட்பு நாடான குவைத்தின் தாக்குதலுக்குள்ளானது அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/3b57vxxx/americar" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>USA, குவைத், தவறுதலாக, அமெரிக்கப், போர், விமானங்களை, சுட்டு, வீழ்த்திவிட்டது, அமெரிக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் : காமேனி மரணம் &amp; மௌனம் காக்கும் இந்தியா | காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-காமேனி-மரணம்-மௌனம்-காக்கும்-இந்தியா-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-காமேனி-மரணம்-மௌனம்-காக்கும்-இந்தியா-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.ஈரான் - இஸ்ரேல் போர்காமேனியின் மறைவுக்கு சில நாடுகள் கண்டனம் தெரிவித்து இரங்கல் தெரிவித்திருக்கின்றன. ஆனால் காமேனி மரணம் தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசு கடைபிடித்து வரும் ‘மௌனம்’ அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது.இந்தியாவின் இந்த மௌனத்திற்கு காரணம் என்ன? * 2017 முதல் 2024 வரை, காமேனி பலமுறை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில், அதாவது காஷ்மீர் விவகாரம், CAA சட்டம், டெல்லி கலவரம் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என இந்திய வெளியுறவு அமைச்சகம் பலமுறை கண்டனமும் தெரிவித்திருந்தது. இது  இந்தியாவின்  மௌனத்திற்கு  முக்கியமான  காரணங்களுள் ஒன்று எனக் கூறப்படுகிறது. * மேலும் இந்தியாவுக்கு நெருக்கமான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஈரான் மீது அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக அமீரகம் மீதான ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு செயல்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பிரதமர் மோடி* தவிர அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை வெகுவாகக் குறைத்து தற்போது வளைகுடா நாடுகளையே அதிகம் சார்ந்திருக்கிறது.இதனால் ஈரானுடனான பொருளாதாரத் தேவை முன்பை விடக் குறைந்துவிட்டது. இதுவும் இந்தியா  மௌனமாக இருக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/i1j6xrlv/WhatsApp_Image_2026_02_28_at_9_07_14_PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:27 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், காமேனி, மரணம், மௌனம், காக்கும், இந்தியா, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>மும்பை: வளைகுடா நாடுகளுக்குச்  செல்ல முடியாமல் துறைமுகத்தில் அழுகும் காய்கறி, பழங்கள்!</title>
        <link>https://dailytopnewz24.com/மும்பை-வளைகுடா-நாடுகளுக்குச்-செல்ல-முடியாமல்-துறைமுகத்தில்-அழுகும்-காய்கறி-பழங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/மும்பை-வளைகுடா-நாடுகளுக்குச்-செல்ல-முடியாமல்-துறைமுகத்தில்-அழுகும்-காய்கறி-பழங்கள்</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு சர்வதேச அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஈரானில் இருக்கும் ஹார்முஸ் நீர்வழித்தடம் வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்ல வேண்டும். அந்த வழித்தடத்தை ஈரான் மூடிவிட்டது. தடையை மீறி அந்த வழித்தடத்தில் பயணம் செய்ய முயன்ற 6 கப்பல்களை ஈரான் தாக்கி மூழ்கடித்துள்ளது. இத்தடையால் இந்தியாவும், சீனாவும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் விவசாயம் குறைவு என்பதால் உணவு பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படும். ஆனால் இப்போது அமெரிக்காவுக்கு ஆதரவு கொடுத்து வரும் அனைத்து வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் துபாய், பஹ்ரைன் உட்பட வளைகுடா நாடுகள் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய கப்பல்களுக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கிறது. இதனால் உலகின் பல நாடுகளில் வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய கன்டெய்னர்கள் துறைமுகங்களில் முடங்கி கிடக்கிறது. இந்தியாவிலும் மும்பை துறைமுகத்தில் 1000 கன்டெய்னர்கள் முடங்கி கிடக்கிறது. நவிமும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்துதான் அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது மகாராஷ்டிராவில் திராட்சை மற்றும் மாம்பழ சீசன் ஆகும். இந்த இரண்டு பழங்களும் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். தற்போது வளைகுடா நாடுகளுக்கு அனுப்புவதற்காக திராட்சை, வாழைப்பழம், வெங்காயம் போன்றவை ஏற்றப்பட்ட கன்டெய்னர்கள் ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் அதனை கப்பல்களில் ஏற்றுவதற்கு அனுமதி கிடைக்காமல் இருக்கிறது. இதனால் கன்டெனர்கள் துறைமுகத்தில் முடங்கிக் கிடக்கிறது. இது இந்தியப் பழங்கள் மற்றும் காய்கறி ஏற்றுமதியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதில் வெங்காயம், திராட்சை, வாழைப்பழம் மற்றும் தர்பூசணி போன்ற அழுகும் பொருட்கள் இருப்பதால் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில கன்டெய்னர்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு கப்பல் புறப்பட்டு செல்ல அனுமதி கிடைக்காமல் காத்து நிற்கின்றன.மகாராஷ்டிராவில் இருந்து 150 கன்டெய்னர் திராட்சைகள் மும்பை துறைமுகத்தில் இருந்து துபாய் துறைமுகத்திற்கு வந்த பிறகு அவை இறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே போன்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் 200க்கும் மேற்பட்ட வாழைப்பழக் கண்டெய்னர்கள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் சிக்கித் தவிப்பதால் நிதி நெருக்கடி அதிகரித்து வருவதாகவும் சந்த் ப்ரூட்ஸ் நிறுவனத்தின் பழ ஏற்றுமதியாளர் யூனுஸ் பக்வான் கூறினார். ஏற்றுமதியாளர்கள் ஒரு கண்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8,500 தினசரி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் தேங்கிக்கிடக்கிறது என்றும் பக்வான் கூறினார்.வாழைப்பழ கண்டெய்னர்கள் குவிந்து கிடப்பதாலும் ஏற்றுமதி குறைந்து வருவதாலும் மொத்த விற்பனை விலை கிலோவுக்கு 25 ரூபாயில் இருந்து 15 ரூபாயாக சரிந்துள்ளது. போர் காரணமாக விலை மேலும் சரியக்கூடும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.ஏற்றுமதியாளர்களுக்கு இழப்புகண்டெய்னர்களுடன் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குளிர்சாதனப் பெட்டிகளுக்கான மின்சாரம் மற்றும் பிற செலவுகளுக்காக ஒரு கன்டெய்னருக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.8500 வரை ஏற்றுமதியாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது வளைகுடா நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள் அங்கு செல்ல முடியாததால், அவை உள்நாட்டுச் சந்தைக்குத் திருப்பி விடப்படுகின்றன. இதனால் உள்ளூர் சந்தையில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை சரிந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. ரம்சான் பண்டிகையையொட்டி வளைகுடா நாடுகளில் நிலவும் அதிக தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும், வரவிருக்கும் அல்போன்சா மாம்பழ சீசனும் இப்போரால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/5behr6nw/Over-1-000-export-containers-many-carrying-peris1772564723261.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மும்பை:, வளைகுடா, நாடுகளுக்குச், செல்ல, முடியாமல், துறைமுகத்தில், அழுகும், காய்கறி, பழங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;இந்த&amp;apos; முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்த-முக்கிய-உளவாளிதான்-காமேனி-கொலைக்கு-பின்னணி-உதவி-ஈரான்-போர்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்த-முக்கிய-உளவாளிதான்-காமேனி-கொலைக்கு-பின்னணி-உதவி-ஈரான்-போர்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை சாய்ப்பது அவ்வளவு எளிதா... என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. அதற்கான பதிலைப் பல செய்தி அறிக்கைகள் தருகின்றன. அதன் தொகுப்பு இதோ...Financial Times - பல ஆண்டுகளாகவே, ஈரான் முக்கிய தலைவர்களைக் கண்காணிக்கத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிசிடிவி டிராபிக் கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அந்த கேமராக்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளது.  ஈரான் போர்&#039;சரியும்&#039; தங்கம் விலை: இதற்கு பின்னணியும் &#039;அமெரிக்கா&#039; தான்; ஆனால், போர் அல்ல &#039;வேற&#039; காரணம்|GoldBritish Daily - அப்படி ஹேக் செய்யப்பட்ட கேமராக்களில் ஒன்று - டெஹ்ரானின் முக்கிய வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கிறது. அந்த டிராபிக் கேமரா வழியாக தான், காமேனி சம்பவம் நடந்த அன்று &#039;எங்கே இருந்தார்?&#039; என்பதை இஸ்ரேலும், மத்திய புலனாய்வு அமைப்பும் (CIA) சரியாக கணித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.Reuters அறிக்கை படி, இஸ்ரேலின் உளவுத் துறை, சனிக்கிழமை காலை, டெஹ்ரானில் முக்கிய வளாகத்தில் மீட்டிங் நடப்பதை தெரிந்துகொண்டு தான், அங்கே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, சி.ஐ.ஏ காமேனி அந்தச் சந்திப்பில் தான் இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தது என்று சொல்கிறார்கள். ஆக, சிசிடிவி கேமரா தான் காமேனியின் கொலையில் முக்கிய உளவாளியாக இருந்துள்ளது. &#039;ஹீரோ&#039; Crude Oil: &#039;காலத்தே பயிர் செய்&#039; - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-28/j5f70jc5/WhatsApp-Image-2026-02-28-at-9.06.13-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்த, முக்கிய, உளவாளிதான், காமேனி, கொலைக்கு, பின்னணி, உதவி, ஈரான், போர்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் போர் நீடித்தால் இந்தியாவிற்கு காத்திருக்கும் சிக்கல்கள் என்னென்ன?!</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-போர்-நீடித்தால்-இந்தியாவிற்கு-காத்திருக்கும்-சிக்கல்கள்-என்னென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-போர்-நீடித்தால்-இந்தியாவிற்கு-காத்திருக்கும்-சிக்கல்கள்-என்னென்ன</guid>
        <description><![CDATA[ ஐந்தாவது நாளாக ஈரானில் போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் மேலும் நீடித்தால் இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்று Quick Points ஆக பார்ப்போம்... வாங்க...&gt; சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 75 டாலர் அளவிற்கு வர்த்தகம் ஆகி வருகிறது. இப்போதைக்கு இந்தியாவிடம் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. இந்தப் போர் நீடித்து இந்தியாவில் கச்சா எண்ணெய் குறைபாட்டை எட்டினால், இங்கே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கலாம். ஏற்றுமதி-இறக்குமதி &#039;ஹீரோ&#039; Crude Oil: &#039;காலத்தே பயிர் செய்&#039; - மிஸ் பண்ணிடாமல் உடனே கவனிங்க முதலீட்டாளர்களே!&gt; எண்ணெயைத் தவிர்த்து, பிற ஏற்றுமதி, இறக்குமதிகளை இந்தியா ஹார்மோஸ் ஜலசந்தி வழியாகத் தான் செய்து வருகிறது. இப்போது அது மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் வணிகம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது நீடித்தால், வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படலாம். &gt; ஈரானில் தான் போர் என்றாலும், வளைகுடா நாடுகளிலும் தாக்குதல் மற்றும் பதற்றம் பரவியுள்ளது. ஆகையால், அங்கே முழுவதுமாகவும், பாதியாகவும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இது இந்திய விமான போக்குவரத்தை பாதித்து வருகிறது. &gt; எண்ணெய் விலை உயர்வு, வணிக பாதிப்பு போன்றவை இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இது சாமானியர்களையும் பாதிக்கும். &gt; இந்தப் பதற்றத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், ஏற்கெனவே இந்திய முதலீட்டுகளை விற்றுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மேலும் தங்களது முதலீடுகளை விற்கலாம். &gt; முக்கியமாக, இந்திய பங்குச்சந்தை பெருமளவு வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி இந்தப் போரை சுற்றி இருப்பதால், இந்த வீழ்ச்சி தொடரலாம். சாபஹார்&#039;சரியும்&#039; தங்கம் விலை: இதற்கு பின்னணியும் &#039;அமெரிக்கா&#039; தான்; ஆனால், போர் அல்ல &#039;வேற&#039; காரணம்|Gold&gt; இந்தியாவின் நிதியுதவி உடன் ஈரானில் கட்டப்பட்டுள்ள துறைமுகம் &#039;சாபஹார் துறைமுகம்&#039;. இந்தத் துறைமுகம் மூலம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியைத் தவிர்த்து பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யலாம் என்பது தான் இந்தியாவின் பிளான். ஈரானில் நடந்து வரும் இந்தத் தாக்குதலில் இந்தத் துறைமுகம் பாதிக்கப்பட்டால், நிச்சயம் அது இந்தியாவிற்கு இன்னொரு பெரிய அடியாக இருக்கும். &gt; வளைகுடா நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். போர் தொடர்ந்தால் இவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். &gt; மேலும், இவர்களிடம் இருந்து இந்தியாவிற்கு வரும் பணத்திலும் சிக்கல் ஏற்படலாம். &#039;அதிர்ச்சி சரிவு&#039; 92 டாலர்களை தாண்டிய இந்திய ரூபாய் - அடுத்தடுத்த தாக்கம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/o8bq026l/India-Map.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், போர், நீடித்தால், இந்தியாவிற்கு, காத்திருக்கும், சிக்கல்கள், என்னென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>மன்னராட்சியை ஒழித்துவிட்டு வாரிசு அரசியலுக்கு மாறிய ஈரான்! &amp; மொஜ்தபா புதிய தலைவராக உருவானது எப்படி?</title>
        <link>https://dailytopnewz24.com/மன்னராட்சியை-ஒழித்துவிட்டு-வாரிசு-அரசியலுக்கு-மாறிய-ஈரான்-மொஜ்தபா-புதிய-தலைவராக-உருவானது-எப்படி</link>
        <guid>https://dailytopnewz24.com/மன்னராட்சியை-ஒழித்துவிட்டு-வாரிசு-அரசியலுக்கு-மாறிய-ஈரான்-மொஜ்தபா-புதிய-தலைவராக-உருவானது-எப்படி</guid>
        <description><![CDATA[ ஈரானில் அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி அவரது பதவியை ஏற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை மொஜ்தபாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.1969-இல் ஈரானின் மஷாத் நகரில் பிறந்த முஜ்தபா, தனது ஆரம்ப காலத்தை ஈரானின் கடைசி ஷாவான முகமது ரேசா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிராக போராடி வந்த தனது தந்தையின் எழுச்சிக்கு மத்தியில் கழித்தார். 1979-ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சியின் மூலம் நாட்டின் தலையெழுத்து மாறியதுடன் புதிய ஆட்சி அதிகாரத்தில் காமேனி குடும்பம் முக்கிய அங்கம் வகித்தது.மொஜ்தபா பின்னர் ஈரானின் மிக முக்கியமான ஷியா ஆன்மீக  மையமான கோம் நகரில் உள்ள மதப் பள்ளிகளில் தனது ஆன்மீகப் படிப்பைத் தொடர்ந்தார். இறுதியில் அவர் ஹோஜத்துல் இஸ்லாம் என்ற மதகுரு பதவியை அடைந்தார். அவர் மிக உயர்ந்த நிலையில் உள்ள &#039;அயதுல்லா&#039;க்களில் ஒருவராகக் கருதப்படாவிட்டாலும், ஈரானில் தனது தந்தை ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் அந்நாட்டின் உச்சபட்ச தலைவரின் அலுவலகத்தில் படிப்படியாக தனது அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார்.தனது இளமைக் காலத்தில், மொஜ்தபா ஈரான் மற்றும் ஈராக் இடையே நடந்த போரில் முக்கிய பங்காற்றினார். இந்த அனுபவம், ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாப்பு படையான இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப்படையில் அவருக்கு மிகுந்த தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது.மொஜ்தபா நீண்டகாலமாக பழமைவாத பிரிவுகளுடனும், இஸ்லாமியக் குடியரசின் அரசியல் பாதுகாப்புப் படையுடனும் நெருக்கமான தொடர்பை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு போரில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவருக்கு இருந்த ராணுவத் தொடர்புகளே அவர் ஈரானின் புதிய உயர்ந்த பட்ச தலைவராக வர முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிலர். பொது மேடைகளில் பேசுவதையோ அல்லது அதிகாரப்பூர்வ பதவிகள் வகிப்பதையோ அவர் தவிர்த்து வந்தாலும், அரசியல் நியமனங்கள்,  வியூகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு அவர் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.ஈரானின் அரசியலமைப்பின்படி மதகுருமார்கள் அடங்கிய அமைப்பே உயர்ந்த பட்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அலி காமேனியின் மறைவைத் தொடர்ந்து, இந்த அமைப்பு உடனடியாகக் கூடி மொஜ்தபாவை அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரது இந்த நியமனம் பெரும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. மன்னராட்சிக்கு எதிரான அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட ஒரு குடியரசு நாட்டில், முன்னாள் உயர்ந்த பட்ச தலைவரின் மகனுக்கே மீண்டும் அந்தப் பதவியை வழங்குவது ஒரு வாரிசு அரசியலாக அமைந்துள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஆயதுல்லா அலி காமேனிIran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்?  - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்!  | In-depth அதேபோல், ஈரானின் மிக உயர்ந்த மத அதிகாரத்தைப் பெறுவதற்குத் தேவையான பாரம்பரிய தகுதிகள் மற்றும் மத அறிஞருக்கான அந்தஸ்து அவரிடம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.தனிப்பட்ட முறையில், மொஜ்தபா ஒரு முன்னணி பழமைவாத அரசியல்வாதியின் மகளான சஹ்ரா ஹத்தாத் என்பவரை  திருமணம் செய்துள்ளார். இது ஈரானின் உயர்மட்ட அதிகார வர்க்கத்தினருடன் அவருக்குள்ள பிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அவருக்கு குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையிலிருந்து விலக்கியே வைத்துள்ளனர்.மொஜ்தபா உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது துல்லியமான சொத்து மதிப்பு குறித்து தெரியவில்லை. அவர் உலகளாவிய ரீதியில் ஒரு சொத்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளதாகவும், பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான நிதியை மேலைநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/8bvjgw73/j96esu4omojtaba-khamenei625x30001March26.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மன்னராட்சியை, ஒழித்துவிட்டு, வாரிசு, அரசியலுக்கு, மாறிய, ஈரான், மொஜ்தபா, புதிய, தலைவராக, உருவானது, எப்படி</media:keywords>
    </item>
    <item>
        <title>தொடரும் போர் பதற்றம்: ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி தேர்வு?</title>
        <link>https://dailytopnewz24.com/தொடரும்-போர்-பதற்றம்-ஈரானின்-புதிய-உச்ச-தலைவராக-மொஜ்தபா-கமேனி-தேர்வு</link>
        <guid>https://dailytopnewz24.com/தொடரும்-போர்-பதற்றம்-ஈரானின்-புதிய-உச்ச-தலைவராக-மொஜ்தபா-கமேனி-தேர்வு</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான போர் உச்சகட்டத்தில் நீடிக்கும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் - அமெரிக்கா ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 36 ஆண்டுகள் நாட்டை ஆண்ட அயதுல்லா கமேனியுடன் அவரது மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்தியும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.அயதுல்லா அலி கமேனியின் உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும், அடக்கம் செய்வதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகான நியமிக்கப்பட்ட வாரிசு இல்லை என்பதால், அயதுல்லா அலிரேசா அராஃபி, ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன், தலைமை நீதிபதி கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய் ஆகியோர் அடங்கிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஈரானின் இடைக்கால தலைமைத்துவக் குழு, அடுத்த உச்சத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டது.மொஜ்தபா ஹொசைனி கமேனிஇஸ்ரேல் - அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அவற்றில் பல துபாய், அபுதாபி, கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளைத் தாக்கின. ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில், அயதுல்ல அலி கமேனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்க அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் நிபுணர்கள் சபையால் அவர் கமேனியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-04/qivzussv/Mojtaba-Son-Of-Ayatollah-Ali-Khamenei.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தொடரும், போர், பதற்றம்:, ஈரானின், புதிய, உச்ச, தலைவராக, மொஜ்தபா, கமேனி, தேர்வு</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;சரியும்&amp;apos; தங்கம் விலை: இதற்கு பின்னணியும் &amp;apos;அமெரிக்கா&amp;apos; தான்; ஆனால், போர் அல்ல &amp;apos;வேற&amp;apos; காரணம்|Gold</title>
        <link>https://dailytopnewz24.com/சரியும்-தங்கம்-விலை-இதற்கு-பின்னணியும்-அமெரிக்கா-தான்-ஆனால்-போர்-அல்ல-வேற-காரணம்gold</link>
        <guid>https://dailytopnewz24.com/சரியும்-தங்கம்-விலை-இதற்கு-பின்னணியும்-அமெரிக்கா-தான்-ஆனால்-போர்-அல்ல-வேற-காரணம்gold</guid>
        <description><![CDATA[ ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நிலவி வரும் இந்த வேளையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை &#039;கிடுகிடு&#039; உயர்வைக் காணும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இறக்கத்தைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர்களுக்கு கீழேயும், ஒரு அவுன்ஸ் வெள்ளி 85 டாலர்களுக்கு கீழேயும் வர்த்தகம் ஆகி வருகிறது. இந்தத் திடீர் சரிவிற்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானதே காரணம் என்று கூறுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். மேலும், &#039;தங்கம் மற்றும் வெள்ளியை முதலீட்டாளர்கள் விற்கவில்லை... இப்போதைய சரிவிற்கு அமெரிக்க டாலர் மதிப்பு வலுவானது மட்டுமே காரணம்&#039; என்று கூறுகிறார் அவர். தங்கம்Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!ஏன் இப்போது அமெரிக்க டாலர் வலுவாகிறது? 

போர் நீடித்து வரும் இந்த வேளையில், &#039;அமெரிக்க டாலர்&#039; பாதுகாப்பான முதலீடாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். மேலும், தற்போது பணவீக்கம் அதிகரிக்கலாம் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்க கருவூல பத்திரத்திற்கு முதலீட்டாளர்களைத் திருப்புகிறார்கள். அமெரிக்க டாலர் தொடர்ந்து வலுவானால் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்னும் சரியலாம். Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parametersAnalyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration) ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-30/251lh4tz/Gold.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சரியும், தங்கம், விலை:, இதற்கு, பின்னணியும், அமெரிக்கா, தான், ஆனால், போர், அல்ல, வேற, காரணம்Gold</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; &amp;quot;அவர் ஒரு சூப்பர் ஸ்டார்&amp;quot; &amp; இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்காவில்-திடீர்-துப்பாக்கிச்-சூடு-அவர்-ஒரு-சூப்பர்-ஸ்டார்-இந்திய-மாணவி-கொலை-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்காவில்-திடீர்-துப்பாக்கிச்-சூடு-அவர்-ஒரு-சூப்பர்-ஸ்டார்-இந்திய-மாணவி-கொலை-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவி. இந்தத் துப்பாக்கிச் சூடு தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிCrude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவியின் பெயர் சவிதா ஷான். இவர் இன்னும் சில மாதங்களில் படிப்பை முடிக்க உள்ளார். சவிதா ஷானை &#039;சூப்பர் ஸ்டார் மாணவர்&#039; என்று அவரது பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் சவிதா ஷான் படித்து வந்த பல்கலைக்கழகம் அருகே தான் நடந்துள்ளது. சவிதா ஷானுடன் சில மாணவர்களும் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் இப்போது சிகிச்சையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-03/f6xos3yl/Savitha-Shan.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்காவில், திடீர், துப்பாக்கிச், சூடு, அவர், ஒரு, சூப்பர், ஸ்டார், இந்திய, மாணவி, கொலை, என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?</title>
        <link>https://dailytopnewz24.com/ரஷ்ய-கச்சா-எண்ணெய்-இறக்குமதியை-அதிகரிக்க-முடிவா-இந்தியாவிடம்-எத்தனை-நாள்களுக்கு-கையிருப்பு-உள்ளது</link>
        <guid>https://dailytopnewz24.com/ரஷ்ய-கச்சா-எண்ணெய்-இறக்குமதியை-அதிகரிக்க-முடிவா-இந்தியாவிடம்-எத்தனை-நாள்களுக்கு-கையிருப்பு-உள்ளது</guid>
        <description><![CDATA[ ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும்.இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது.எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும்.இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களுக்குக் கையிருப்புதற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத &#039;அபராத&#039; வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது.Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS
இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும்.Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-03/ec6c4f3b-44ff-4049-9a17-8a11e860228c/crude_oil_price_in_real_time.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரஷ்ய, கச்சா, எண்ணெய், இறக்குமதியை, அதிகரிக்க, முடிவா, இந்தியாவிடம், எத்தனை, நாள்களுக்கு, கையிருப்பு, உள்ளது</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/iran-மீண்டும்-ஈரான்-தலைமையைக்-குறிவைத்த-இஸ்ரேல்-போர்-பதற்றம்-அதிகரிக்கிறதா-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-மீண்டும்-ஈரான்-தலைமையைக்-குறிவைத்த-இஸ்ரேல்-போர்-பதற்றம்-அதிகரிக்கிறதா-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ ஏற்கெனவே ஈரானின் உச்சத் தலைவர் கமேனியைக் கொன்றுள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இப்போது மீண்டும் ஈரானின் இன்னொரு முக்கியத் தலைமையான பிரதமர் அலுவலகத்தைக் குறிவைத்துள்ளது இஸ்ரேல். இதை இஸ்ரேலின் விமானப் படையே தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து பதிவில் இஸ்ரேல் விமானப் படை கூறியுள்ளதாவது...&quot;ராணுவ உளவுத்துறையின் வழிகாட்டுதலின் படி, டெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் தலைமை வளாகத்திற்குள் (பிரதமர் அலுவலகம் இருக்கும் வளாகம்) இரவோடு இரவாகத் தாக்குதல் நடத்தி உள்ளோம்.கமேனிCrude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!அதில் அதிபர் அலுவலகம் மற்றும் உச்சத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கட்டடத்தின் மீது ஏராளமான வெடிமருந்துகள் வீசப்பட்டன&quot; என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்ததால்தான், தற்போது ஈரான் மிகப்பெரிய அளவில் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த நிலையில், இஸ்ரேல் மீண்டும் ஈரான் தலைமையின் மீது குறிவைப்பது இந்தப் போரை மீண்டும் அதிக பதற்றமாக்கலாம் என்று கூறப்படுகிறது.חיל-האוויר בהכוונה מדויקת של אמ״ן, תקף במהלך הלילה מבני שלטון ביטחוניים בתוך מתחם ההנהגה של משטר הטרור האיראני בלב טהרן. בתקיפת המתחם, הוטלו חימושים רבים על לשכת הנשיאות ומבנה המועצה העליונה לביטחון לאומי. בנוסף, הותקף מתחם ההתכנסות של הפורום הבכיר ביותר של המשטר, האחראי על… pic.twitter.com/8Ffur9wvd8— Israeli Air Force (@IAFsite) March 3, 2026  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-03/begptl56/Iran.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, மீண்டும், ஈரான், தலைமையைக், குறிவைத்த, இஸ்ரேல், போர், பதற்றம், அதிகரிக்கிறதா, என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? &amp; ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-உடனான-போர்-எப்போது-முடிவுக்கு-வரும்-ட்ரம்ப்-நெதன்யாகு-பதில்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-உடனான-போர்-எப்போது-முடிவுக்கு-வரும்-ட்ரம்ப்-நெதன்யாகு-பதில்-என்ன</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது...&quot;இந்தப் போர் நான்கு - ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க முடியும்&quot; என்று கூறியிருந்தார். ட்ரம்ப் - நெதன்யாகுCrude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தந்துள்ள பேட்டியில், இதே கேள்விக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளதாவது...&quot;இது எல்லையில்லாத போராகச் செல்லாது. இது மிக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இந்தப் போர் சில நாள்கள் எடுக்கலாம்... ஆனால், ஆண்டுகளுக்கு தொடராது&quot;.ஆனால், இப்போது ஈரான் தீவிரமாக அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலையும் பதிலடியாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட &#039;எல்லாமுமான&#039; காமேனியின் மரணம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/cvw02go9/WhatsApp-Image-2026-03-01-at-10.22.50-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், உடனான, போர், எப்போது, முடிவுக்கு, வரும், ட்ரம்ப், நெதன்யாகு, பதில், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் 700 டேங்கர் கப்பல்கள் தவிப்பு; இந்தியாவில் LPGக்குத் தட்டுப்பாடு</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-ஹார்முஸ்-ஜலசந்தியை-மூடியதால்-700-டேங்கர்-கப்பல்கள்-தவிப்பு-இந்தியாவில்-lpgக்குத்-தட்டுப்பாடு</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-ஹார்முஸ்-ஜலசந்தியை-மூடியதால்-700-டேங்கர்-கப்பல்கள்-தவிப்பு-இந்தியாவில்-lpgக்குத்-தட்டுப்பாடு</guid>
        <description><![CDATA[ ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் நான்காவது நாளை எட்டி இருக்கிறது. இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.இத்தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இத்தாக்குதலுக்குத் தேவைக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திடீரென மூடிவிட்டது. இந்த ஜலசந்தி வழியாகத்தான் ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல்கள் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும்.காத்துக் கிடக்கும் 700 கப்பல்கள்தற்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு இருப்பதால் ஆசிய நாடுகளுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை கப்பலில் எடுத்துச்செல்ல முடியாது. தற்போது ஈரான் இந்த வழித்தடத்தை மூடிவிட்டது.தடையை மீறி ஏதாவது கப்பல் இந்த வழித்தடம் வழியாகச் சென்றால் கப்பலுக்குத் தீவைப்போம் என்று ஈரான் மிரட்டி இருக்கிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியில் நூற்றுக்கணக்கான டேங்கர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன.ஹார்முஸ் ஜலசந்திஇந்த வழித்தடத்தை ஈரான் அடியோடு மூடவில்லை. கடந்த ஒன்றாம் தேதி இந்த வழியாக மூன்று டேங்கர் கப்பல்கள் மட்டுமே சென்றுள்ளன. இரண்டாம் தேதி ஒரு டேங்கர் மற்றும் ஒரு சரக்குக் கப்பல் மட்டும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தி இருக்கின்றன.ஈரானைச் சேராத எந்தக் கப்பலும் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தவில்லை. சுமார் 706 டேங்கர் கப்பல்கள் நீரிணையைச் சுற்றி நின்றுகொண்டிருக்கின்றன. பாரசீக வளைகுடாப் பகுதியில் (Persian Gulf) மட்டும் 26 கப்பல்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இயற்கை எரிவாயு விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்&#039; பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் உலகளாவிய எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகள் கடுமையான உயர்வை ஏற்படுத்தியுள்ளது. கப்பல் போக்குவரத்து மற்றும் அது சார்ந்த காப்பீட்டுத் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. முன்னணி கடல்சார் காப்பீட்டு நிறுவனங்கள், வளைகுடாப் பகுதிக்குள் நுழையும் கப்பல்களுக்கான போர் அபாயக் காப்பீட்டை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன. காப்பீடு கிடைக்கும் கப்பல்களுக்குக்கூட, காப்பீட்டு பிரீமியம் 50 முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கப்பலின் மதிப்பில் 0.2% ஆக இருந்த கட்டணம் இப்போது 0.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.வாடகைக் கட்டணம் அதிகரிப்புஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் கப்பல்களின் வாடகைக் கட்டணமும் அதிகரித்து இருக்கிறது. கடக்கும் அபாயம் நேரடியாக போக்குவரத்துச் செலவுகளில் பிரதிபலிக்கிறது. பிரமாண்ட எண்ணெய் டேங்கர்களுக்கான தினசரி வாடகை 2 லட்சம் டாலரை நெருங்கியுள்ளது. இது 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும்.பெரிய நிறுவனங்கள் அவசரகால போர் அபாயக் கூடுதல் கட்டணங்களை (War-risk surcharges) விதித்துள்ளன. ஒரு கன்டெய்னருக்கு 1500 முதல் 3800 டாலர் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வளைகுடாப் பகுதியைத் தவிர்க்க, கப்பல்கள் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகச் செல்லத் திட்டமிடுகின்றன. இதனால் பயண நேரம் 10 முதல் 14 நாட்கள் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் பெருமளவு உயரும்.கச்சா எண்ணெய்2 வாரத்திற்கு மட்டுமே எல்.பி.ஜி. கையிருப்புவளைகுடா கச்சா எண்ணெய்யை மட்டும் பெரிதும் நம்பி இருக்கும் இந்தியா மற்றும் சீனா இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்க பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது குறித்தும், ரஷ்யக் கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது.வரத்து குறைவது தொடரும்பட்சத்தில் எல்பிஜி வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா தனக்குத் தேவையான எல்பிஜியில் 80-85% இறக்குமதி செய்கிறது. அவை மொத்தமாக வளைகுடா உற்பத்தியாளர்களிடமிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. புதிய சரக்குகள் நிறுத்தப்பட்டால், தற்போதைய இருக்கும் கையிருப்பு இரண்டு வாரங்களுக்கும் குறைவாகவே வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கல்லாதது உலகளவு: அமெரிக்கா வசூலித்த 135 பில்லியன் டாலர் - திருப்பிக் கொடுப்பாரா ட்ரம்ப்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-03/wqymead4/12lmtpdkstrait-of-hormuz625x30003March26.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான்:, ஹார்முஸ், ஜலசந்தியை, மூடியதால், 700, டேங்கர், கப்பல்கள், தவிப்பு, இந்தியாவில், LPGக்குத், தட்டுப்பாடு</media:keywords>
    </item>
    <item>
        <title>``ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல&amp;quot; &amp; கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரானிய-மண்ணில்-நடந்த-படுகொலை-மோடி-அரசின்-மௌனம்-நடுநிலை-அல்ல-கேள்விகளை-அடுக்கும்-சோனியா-காந்தி</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரானிய-மண்ணில்-நடந்த-படுகொலை-மோடி-அரசின்-மௌனம்-நடுநிலை-அல்ல-கேள்விகளை-அடுக்கும்-சோனியா-காந்தி</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறது. இந்தப் போர் தொடங்குவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் சென்றிருந்த பிரதமர் மோடி இஸ்ரேலையும், நெதன்யகுவையும் வானளாவப் புகழ்ந்திருந்தார். நேற்று நெதன்யாகு செய்தியாளர்களைச் சந்தித்தபோதுகூட , ``இந்தியா எங்கள் தரப்பில் இருப்பதற்கு நன்றி. பிரதமர் மோடி என் நெருங்கிய நண்பர்&quot; எனப் பேசியிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார்.அயதுல்லா கமேனிஉலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான்...அதில், ``மார்ச் 1-ம் தேதி இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, எந்த அறிவிப்பும் இல்லாமல் இறையாண்மைக் கொண்ட நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதும், பதவியில் இருக்கும் ஒரு நாட்டுத் தலைவரைக் கொல்வதும், அந்த நாட்டின் முழு சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அழிப்பதற்குச் சமம். இது ஐ.நா.சபையின் பிரிவு 2(4) விதிகளின் இதயத்தையே தாக்குவது போன்றது.உலகில் சில சட்டங்கள் இருப்பதால் தான் நாடுகள் ஓரளவிற்காவது கட்டுப்பட்டு நடக்கின்றன. ஒரு பெரிய தவறு நடக்கும்போது, இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய ஜனநாயக நாடு அதைக் கண்டிக்காமல் மௌனமாக இருந்தால், அந்தத் தவறு &quot;சரியானது&quot; (Normal) என்று ஆகிவிடும். யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்ற நிலை உருவானால், சர்வதேச அளவில் ஒழுங்குமுறை கெட்டுப்போகும்.இந்தக் கொலை நடப்பதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். காசாவில் நடக்கும் போரில் பல்லாயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவதால் உலகமே இஸ்ரேல் மீது கோபத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில், பிரதமர் இஸ்ரேல் பிரதமரைச் சந்தித்தது, தனது முழு ஆதரவைத் தெரிவித்தது, இந்தியா எப்போதும் கடைப்பிடிக்கும் அமைதி மற்றும் மனிதநேயம் என்ற கொள்கைக்கு எதிராக இருக்கிறது.ட்ரம்ப் - நெதன்யாகுமோடியின் ஒருதலைபட்சம்:பிரதமர் மோடி அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலைப் புறக்கணித்துவிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஈரான் நடத்திய பழிவாங்கும் தாக்குதலை மட்டும் கண்டித்தது ஒருதலைப்பட்சமானது.உலக வரைபடத்தில் தெற்குப் பகுதியில் உள்ள வளரும் நாடுகள் (Global South), மற்றும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் இந்தியாவுடன் இருக்கும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனால், இந்தியா மட்டும் இந்தப் படுகொலை குறித்து மௌனமான போக்கைக் கடைப்பிடிப்பது, நமது நீண்டகால நண்பர்களிடமிருந்து நாம் விலகிச் செல்வதைக் காட்டுகிறது.&#039;இந்தியாவுக்கு தார்மீகத் தெளிவு இல்லை. எது சரி, எது தவறு என்று சொல்வதில் குழப்பம் இருக்கிறது&#039; என்று மற்ற நாடுகள் நினைக்கக்கூடும். ஒரு பெரிய தவறு நடக்கும்போது நாம் அதை எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அந்தத் தவறை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். இது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.காங்கிரஸின் நிலைபாடு:இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் தெளிவாக இருக்கிறது. ஈரானுக்குள் புகுந்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளையும், திட்டமிட்ட படுகொலைகளையும் காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற செயல்கள் ஒரு சிறிய போரை உலகப் போராக மாற்றும் ஆபத்து கொண்டவை. எனவே, இந்த விவகாரத்தில் ஈரானின் தலைவர் அயதுல்லா கமேனி மறைவுக்கு இரங்கள் தெரிவித்துகொள்கிறோம்.brics brazil 2025இந்தியா உலக அரங்கில் இன்றுவரை மதிக்கப்படுவதற்கு மூன்று முக்கிய கொள்கைகளே காரணம். எல்லா நாடுகளுக்கும் சமமான மரியாதை உண்டு என்ற இறையாண்மை சமத்துவம், ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாது என்ற கொள்கை வரையறை. எந்தப் பிரச்சனையையும் போர் மூலம் அல்லாமல் பேச்சின் மூலம் தீர்க்க வேண்டும் என்ற அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு.ஆனால், இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது இந்தியா அமைதியாக இருப்பது, நம்முடைய இந்த அடிப்படைக் கொள்கைகளையே நாம் கைவிடுவது போல இல்லையா?வாஜ்பாய் உதாரணம்:தற்போதைய பாஜக அரசுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நடவடிக்கையே உதாரணம். 2001-ல் வாஜ்பாய் ஈரானுக்கு சென்று, இந்தியாவும் ஈரானும் வரலாற்று ரீதியாக எவ்வளவு நெருக்கமான நண்பர்கள் என்பதை உறுதிப்படுத்தினார். அன்று உங்கள் வாஜ்பாய் மதித்த அந்த நீண்டகால நட்பை, இன்று அதே கட்சியைச் சேர்ந்த தற்போதைய அரசு ஏன் மதிக்கத் தவறிவிட்டது?மோடி - சோனியா காந்திஇந்தியா தன்னை &#039;உலகத் தெற்கு&#039; (Global South - வளரும் நாடுகள்) நாடுகளின் தலைவராகக் கருதுகிறது. இன்று ஒரு நாடு அநியாயமாகத் தாக்கப்படும்போது, கொள்கைக்காக இந்தியா குரல் கொடுக்கத் தயங்கினால், நாளை இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை வரும்போது மற்ற நாடுகள் எப்படி இந்தியாவை ஆதரிப்பார்கள்? இன்றைய மௌனம், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு இருக்கும் &quot;நம்பகத்தன்மையை&quot; (Credibility) அழித்துவிடும்.எனவே, இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க வேண்டும். இந்தப் போர் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம். எனவே, நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதித்தே ஆக வேண்டும்.அமைதி, அகிம்சை, நீதி&quot;உலகமே ஒரு குடும்பம்&quot; (வசுதைவ குடும்பகம்) என்பது வெறும் மேடைப் பேச்சிற்கான முழக்கம் கிடையாது. நீதி மற்றும் அமைதிக்காகக் குரல் கொடுப்பது கடினமாக இருந்தாலும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளை எதிர்க்க வேண்டி இருந்தாலும், இந்தியா தனது கொள்கையில் உறுதியா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-06/hxnuo27n/20251206125423.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரானிய, மண்ணில், நடந்த, படுகொலை:, மோடி, அரசின், மௌனம், நடுநிலை, அல்ல, கேள்விகளை, அடுக்கும், சோனியா, காந்தி</media:keywords>
    </item>
    <item>
        <title>Long war&amp;க்கு தயாராகும் Iran &amp; USA&amp;வால் சமாளிக்க முடியுமா? &amp; Prof Bernard D&amp;apos; Samy Interview  Israel</title>
        <link>https://dailytopnewz24.com/long-war-க்கு-தயாராகும்-iran-usa-வால்-சமாளிக்க-முடியுமா-prof-bernard-d-samy-interview-israel</link>
        <guid>https://dailytopnewz24.com/long-war-க்கு-தயாராகும்-iran-usa-வால்-சமாளிக்க-முடியுமா-prof-bernard-d-samy-interview-israel</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-03/hmvigw8d/WhatsApp-Image-2026-03-03-at-10.13.05-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Long, war-க்கு, தயாராகும், Iran, USA-வால், சமாளிக்க, முடியுமா, Prof, Bernard, Samy, Interview, Israel</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran &amp; America: ``4&amp;5 வாரங்கள்தான் போர் திட்டம்... தேவைபட்டால்&amp;quot; ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/iran-america-4-5-வாரங்கள்தான்-போர்-திட்டம்-தேவைபட்டால்-ஈரானை-எச்சரிக்கும்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-america-4-5-வாரங்கள்தான்-போர்-திட்டம்-தேவைபட்டால்-ஈரானை-எச்சரிக்கும்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) தொடங்கிய இந்தப் போர், தற்போது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவி வருகிறது.இன்று அதிகாலை ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், போர் விமானங்கள் வானில் வட்டமிட்டதாகவும் ஏஎஃப்பி (AFP) செய்தியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எகிப்து முதல் மேற்கு ஆசியா முழுவதும் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக அந்தந்த நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.ட்ரம்ப்இந்தப் போர் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ``இந்தப் போரின் நோக்கம் ஈரானின் ஏவுகணைகள், கடற்படை மற்றும் அணுசக்தித் திட்டங்களை அழிப்பதே தவிர, ஈரானிய ஆட்சியை வீழ்த்துவது அல்ல. நாங்கள் 4 முதல் 5  வாரங்கள் வரை போரைத் திட்டமிட்டிருந்தோம், ஆனால் தேவைப்பட்டால் நீண்ட காலம் போரிடும் திறன் எங்களிடம் உள்ளது&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.அதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்தும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தப் போர் குறித்து பேசும்போது, ``இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருந்ததை அறிந்த பின்னரே அமெரிக்கா இந்தப் போரில் இணைந்தது&quot; எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்தை அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மூத்த அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் மார்க் வார்னர், ``இஸ்ரேலின் அச்சுறுத்தல் உணர்வின் அடிப்படையில் அமெரிக்கா போரில் இறங்கியிருப்பது, இதுவரை கண்டிராத ஒரு ஆபத்தான சூழல்&quot; என்று கவலை தெரிவித்துள்ளார்.அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-18/asyiky7x/trump" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, America:, 4-5, வாரங்கள்தான், போர், திட்டம்..., தேவைபட்டால், ஈரானை, எச்சரிக்கும், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>Strait of Hormuz : `ஹோர்முஸ் நீரிணையை மூடும் ஈரான் &amp; உலகப் பொருளாதாரத்தையே ஆளும் சிறிய பகுதி!</title>
        <link>https://dailytopnewz24.com/strait-of-hormuz-ஹோர்முஸ்-நீரிணையை-மூடும்-ஈரான்-உலகப்-பொருளாதாரத்தையே-ஆளும்-சிறிய-பகுதி</link>
        <guid>https://dailytopnewz24.com/strait-of-hormuz-ஹோர்முஸ்-நீரிணையை-மூடும்-ஈரான்-உலகப்-பொருளாதாரத்தையே-ஆளும்-சிறிய-பகுதி</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் உத்தரவிட்டுள்ளது. இந்தச் செய்தி, வர்த்தக உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிறிய பகுதியான ஹோர்முஸ் நீரிணை, எப்படி உலக வர்த்தகத்துக்கு மிக முக்கியமான வழித்தடமாக இருக்கிறது என்பதை பற்றிப் பார்ப்போம்.Strait of Hormuzஹோர்முஸ் நீரிணைபழங்காலத்தில் இருந்தே ஹோர்முஸ் நீரிணை ஒரு முக்கிய வர்த்தக வழித்தடமாக இருந்திருக்கிறது. பாரசீக, கிரேக்க மற்றும் அரபு வர்த்தகர்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக பட்டு, முத்து மற்றும் மசாலா பொருள்களை வர்த்தகம் செய்திருக்கின்றனர். பழைமை வாய்ந்த பாரசீக நகரான ஹோர்முஸ் நகரத்தின் பெயரில்தான் இந்த நீரிணை அமைந்துள்ளது. அந்தக் காலத்திலேயே ஹோர்முஸ் ஒரு முக்கியமான துறைமுக நகரம்.ஹோர்முஸ் நீரிணை வரைபடம்ஹோர்முஸ் நீரிணையின் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு நாடுகளும் இருக்கின்றன. இந்த சிறிய பகுதி உலகப் பொருளாதாரத்தையே தனது உள்ளங்கையில் வைத்திருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையை தாண்டிதான் பாரசீக வளைகுடாவுக்குச் செல்ல முடியும். கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கும் ஹோர்முஸ் நீரிணையைத் தாண்டிதான் கப்பல்கள் செல்ல முடியும். உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் சப்ளையில் 20 சதவிகிதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகத்தான் நடக்கிறது. ஒரு நாளுக்கு 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் இதன் வழியாக வர்த்தகமாகின்றன. மேலும், உலகின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி எரிவாயுவில் கால் பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகமாகிறது.பாரசீக வளைகுடா, கச்சா எண்ணெய் வளம் மிகுதியான பகுதி. இந்த பாரசீக வளைகுடாவையும், ஓமான் வளைகுடாவையும், அரபிக்கடலையும் இணைக்கும் புள்ளிதான் ஹோர்முஸ் நீரிணை. 2024ம் ஆண்டிலும், 2025ம் ஆண்டின் முதல் காலாண்டிலும் உலகின் கால் பங்கு கடல்வழி எண்ணெய் வர்த்தகம் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடந்திருக்கிறது. சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளின் எல்.என்.ஜி எரிவாயுவும் இதன் வழியாக வர்த்தகமாகின்றன.இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹோர்முஸ் நீரிணை வழியாக சப்ளை செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுக்குதான் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கச்சா எண்ணெய் தவிர உணவுப் பொருள்கள், கெமிக்கல்ஸ், விவசாய உற்பத்திப் பொருள்கள், எத்தனால், எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சரக்குகள் ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகமாகின்றன. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டால் கச்சா எண்ணெய் சப்ளை தடைபடுவது மட்டுமல்லாமல் தினசரி தேவைகளுக்கு அவசியமான பல்வேறு சரக்குகளின் விலை உயர்ந்து சர்வதேச அளவில் பாதிப்பு இருக்கும்.ஹோர்முஸ் நீரிணைஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது சாத்தியமா?ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானதல்ல. நீரிணையின் வடக்குப் பகுதியில் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கடல்பகுதி இருக்கிறது. தென்பகுதியோ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஈரானுக்குச் சொந்தமில்லாத ஹோர்முஸ் நீரிணையில், பல ஆண்டுகளாக ஈரான் தனது ஆதிக்கத்தையும், ராணுவ பலத்தையும் வளர்த்து வைத்திருக்கிறது. உதாரணமாக, ஈரான் கடற்படை வேகமாக தாக்கக்கூடிய படகுகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஆழ்கடல் குண்டுகள் போன்றவற்றை ஹோர்முஸ் நீரிணை பகுதியில் இயக்கி வருகிறது. சீனாவால் தயாரிக்கப்பட்ட இ.எம்-52 ஆழ்கடல் குண்டு உட்பட ஆயிரக்கணக்கான ஆழ்கடல் குண்டுகளை ஈரான் இப்பகுதியில் வைத்திருக்கிறது. இதுதவிர, ஈரானின் கடலோர நிலப்பரப்புகளில் ஏவுகணை, டிரோன் போன்ற ராணுவ அமைப்புகளும் இருக்கின்றன.ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் ஏற்கெனவே கப்பல்களுக்குத் தொல்லை கொடுத்த வரலாறு இருக்கிறது. 1980களில் ஈரான் – ஈராக் போரின்போது, இரு நாடுகளுமே 400க்கும் மேற்பட்ட கப்பல்களை தாக்கின. ஆனால், வர்த்தகம் நடந்துகொண்டுதான் இருந்தது. சமீபகால உதாரணமாக, 2019ம் ஆண்டில் ஒரு பிரிட்டிஷ் டேங்கர் கப்பலை ஈரான் கைப்பற்றியது. 2022ம் ஆண்டில் இரண்டு கிரீஸ் நாட்டு கப்பல்களை கைப்பற்றியது. 2024ம் ஆண்டில் இஸ்ரேலுடன் தொடர்புடைய ஒரு கப்பலைப் பிடித்தது. பெரும்பாலும் பதிலடி கொடுப்பதற்காகவே கப்பல்களை ஈரான் கைப்பற்றியுள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் ஆதிக்கம் வலுவாக காணப்படுகிறது.முன்னதாக கடந்த ஆண்டு, ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதைத் தொடர்ந்து, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் முயன்றது். இதனால், மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. அப்போதும் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது குறித்த பேச்சுகள் எழுந்தது. சீனா ஈரானின் நட்பு நாடு. ஈரானிடம் இருந்து மிக அதிகளவில் கச்சா எண்ணெய்யை சீனா வாங்குகிறது. சீனாவின் 47% கச்சா எண்ணெய் தேவையை வளைகுடா நாடுகள்தான் பூர்த்தி செய்கின்றன. மத்தியக் கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. எனவே, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு சீனா ஆதரவு தெரிவிக்காது.crude oil - கச்சா எண்ணெய்ஹோர்முஸ் நீரிணை வழியான வர்த்தகத்தில்  இடையூறு ஏற்பட்டால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எகிறிவிடும். இந்தியாவைப் பொறுத்தவரை சில வாரங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பில் இருக்கும், இதுமட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்தும் இந்தியாவால் எண்ணெய் வாங்க முடியும். ஆனால், கச்சா எண்ணெய் விலை லேசாக உயர்ந்தாலும் இந்தியாவுக்கு நிச்சயமாக பாதிப்பு இருக்கும். ஈரான் போரைப் பொறுத்தவரை, அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதே ஒரே வழி! அதுதான் உலக வர்த்தகத்துக்கும் நல்லது!இஸ்ரேல் - ஈரான் பிரச்னையால் தவிக்கும் அரிசி ஏற்றுமதியாளர்கள்! பங்குகள் விலை என்னவாகும்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-23/anqclomt/1536x864cmsv266bae612-7503-5b11-b113-9a7776bd6505-3962750.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Strait, Hormuz, ஹோர்முஸ், நீரிணையை, மூடும், ஈரான், உலகப், பொருளாதாரத்தையே, ஆளும், சிறிய, பகுதி</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆக்டோபஸ் கரங்கள்: அமெரிக்காவின் உலக ஆதிக்கமும் அதன் கசப்பான விளைவுகளும் &amp; ஒரு பார்வை!</title>
        <link>https://dailytopnewz24.com/ஆக்டோபஸ்-கரங்கள்-அமெரிக்காவின்-உலக-ஆதிக்கமும்-அதன்-கசப்பான-விளைவுகளும்-ஒரு-பார்வை</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆக்டோபஸ்-கரங்கள்-அமெரிக்காவின்-உலக-ஆதிக்கமும்-அதன்-கசப்பான-விளைவுகளும்-ஒரு-பார்வை</guid>
        <description><![CDATA[ &#039;உலகின் பல்வேறு நாடுகளில் அமெரிக்கா தன் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி அபகரிக்கிறது....&#039; இது நோபல் பரிசுப் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் 1950 ஆண்டு வெளியான &quot;The United Fruit Co.&quot; என்றப் புகழ்பெற்ற கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் குறிப்பு. ஈரானின் முகம்மது மொசாத்திக் முதல் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி வரை அமெரிக்காவின் நடவடிக்கையால் பலநாடுகள், தலைவர்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கின்றன. அப்படி அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி சின்னாபின்னமான நாடுகள் குறித்த தகவல்களையும், அதற்கான காரணங்களையும் அலசலாம்.அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கைக்கு என்னக் காரணங்கள் என்பதை தெரிந்துகொள்ள, அமெரிக்காவின் தொடர் செயல்பாடுகளை மேலோட்டமாக பார்க்கலாமா...அயதுல்லா கமேனிடாலர் அரசியலின் தொடக்கம்இரண்டாம் உலகப் போர் முடிவடையும் தருவாயில், உலகப் பொருளாதாரத்தைச் சீரமைக்க 44 நாடுகளின் பிரதிநிதிகள் அமெரிக்காவில் கூடினர். அப்போது உலகிலேயே அதிக அளவு தங்க இருப்பு வைத்திருந்த நாடு அமெரிக்கா.அதனால், &quot;அமெரிக்க டாலரின் மதிப்பு தங்கத்துடன் இணைக்கப்படும்&quot; என அமெரிக்கா முடிவு செய்து அறிவித்தது. மற்ற நாடுகளும் தங்கள் கரன்சியின் மதிப்பை டாலருடன் இணைத்துக் கொண்டன. இதன் மூலம் உலகின் &#039;Reserve Currency&#039; ஆக டாலர் மாறியது.இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், சோவியத் யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றியைத் தழுவின.அதிகாரப்போட்டியின் ஆரம்பம்அதற்குப்பின், &#039;இனி உலகின் பவர் சென்டர் யார்?&#039; என குரலில்லா கேள்வி எழுந்தது. அப்போதுதான் அமெரிக்கா அணி - சோவியத் யூனியன் அணி - அணிசேரா நாடுகள் என உலகம் மூன்றாக பிரிந்தது.இதில் அமெரிக்கா - சோவியத் யூனியன் நேரடியாக ஆயுதம் ஏந்திப் போரிடாமல், உளவுத்துறை, பொருளாதாரம், அரசியல் சித்தாந்த விமர்சனம் என பனிப்போரை நிகழ்த்திக்கொண்டன.அணு ஆயுதத் தயாரிப்பு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை எல்லாவற்றிலும் போட்டி நிலவியது. 1991-ல் சோவியத் யூனியன் உடைந்தப் பிறகு உலகின் பவர் சென்டராக அமெரிக்கா தன்னை முன்னிறுத்திக்கொண்டது.அதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்ததுதான் டாலர் அரசியல்.சோவியத் - இரண்டாம் உலகப்போர்அமெரிக்காவின் எண்ணெய் அரசியல்1971-ல் அமெரிக்கா &quot;இனி டாலரைத் தங்கமாக மாற்ற முடியாது&quot; என்று அறிவித்து ஒரு அதிரடி முடிவை எடுத்தது. இதனால் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும் சூழல் உருவானது. இதைச் சமாளிக்க, 1974-ல் உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான சவூதி அரேபியாவுடன், ``சவூதி அரேபியா, தன் எண்ணெயை அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்க வேண்டும். அதற்குப் பதிலாக, அமெரிக்கா சவூதி அரேபியாவுக்கு ராணுவப் பாதுகாப்பையும், நவீன ஆயுதங்களையும் வழங்கும்.&quot; என்ற ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. எண்ணெய் உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் &#039;டாலருக்கு எண்ணெய் விற்பனை&#039; என்ற முடிவுக்கு உடன்பட்டன.அதனால், உலக நாடுகள் எண்ணெய் வாங்க தங்கள் கருவூலத்தில் டாலரைச் சேமிக்கத் தொடங்கின. இப்படித்தான் அமெரிக்க டாலர் உலகின் பொதுவான கரன்சியாக மாறியது. இது அமெரிக்காவிற்குத் தடையற்ற பொருளாதார பலத்தைக் கொடுத்தது.ஆயுதமும் - பொருளாதார வளர்ச்சியும்பனிப்போர் காலத்தில் ராணுவத் தேவைக்காக உருவாக்கப்பட்ட இணையதளம், GPS போன்ற தொழில்நுட்பங்கள், 1990-களுக்குப் பிறகு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தன. மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்றின.இரண்டாம் உலகப் போரில் தொடங்கிய ஆயுத உற்பத்தியால், அமெரிக்காவின் பொருளாதாரம் அதன் ராணுவ வலிமையோடும் பின்னிப் பிணைந்திருந்தது. அதனால்தான், அமெரிக்காவை புறக்கணிக்க நினைப்பவர்களுக்கு, அதன் ராணுவ வலிமையை எதிர்க்கும் ஆற்றலும் இருக்க வேண்டும்.எனவே, அமெரிக்கா தனக்குக் கிடைத்த இந்தச் சாதகமான சூழலைப் பயன்படுத்தி, உலக நாடுகளின் விஷயங்களில் கட்டப்பஞ்சாயத்து மூலம் அரசியல் செய்யத் தொடங்கியது.அமெரிக்காஆயுத விற்பனை யுக்திகள்`அமெரிக்கவில் உற்பத்திச் செய்யப்படும் ஆயுதங்களை விற்கவும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை இல்லாமல் ஆக்கவும் தலைவர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது. அல்கொய்தா, தாலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்கி ஊக்குவித்தது&#039; போன்றக் கொடூரமான குற்றச்சாட்டுகள் அமெரிக்கா மீது இருக்கின்றன.இனி அமெரிக்காவுக்கு கட்டுப்படாதவர்கள் என்ன ஆனார்கள் என்பதுகுறித்து உலக வரலாறு நினைவு வைத்திருப்பதைப் பார்க்கலாமா?1940-ல் இத்தாலி தேர்தலில் தலையீடு, 1949-1953-ல் அல்பேனியாவில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான முயற்சி, 1949-ல் சிரியாவில் ஆட்சிக் கவிழ்க்க உதவி என சிறியளவில் இருந்த அமெரிக்காவின் தலையீடு, முழுமையாகத் தொடங்கியது ஈரான் விஷயத்தில்தான்.ஈரானின் எண்ணெய் கிணறு: சதிவலைஈரானின் எண்ணெய் வளத்தை சுரண்டி வந்த பிரிட்டனை எதிர்த்த முகமது மொசாத்திக், மக்கள் ஆதரவுடன் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து &#039;ஈரானின் எண்ணெய் வளம் இந்த மண்ணின் மக்களுக்கே சொந்தம்&#039; என அதை நாட்டுடமையாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரிட்டன், அமெரிக்காவின் உதவியுடன் பொய் பிரசாரங்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகத்தை அரங்கேற்றியது. பிரதமர் முகமது மொசத்திக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, 1967-ல் உயிரிழந்தார். இந்தச் சதிச் செயலை 2013-ல் CIA அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.கச்சா எண்ணெய்நிலமும் அரசியலும்லத்தீன் அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் ராணுவ அதிகாரியாக இருந்து, ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாகோபோ ஆர்பென்ஸ் (Jacobo Arbenz), அமெரிக்காவின் United Fruit Company வசம் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை, ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். அதனால் ஆர்பென்ஸ் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். அவர் சென்ற பிறகு, அமெரிக்கா அமைத்த ராணுவ ஆட்சி குவாத்தமாலாவைச் சுடுகாடாக்கியது. சுமார் 40 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போரில் 2,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஒரு கம்பெனிய ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/ixo7rab9/america" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 04 Mar 2026 15:18:26 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆக்டோபஸ், கரங்கள்:, அமெரிக்காவின், உலக, ஆதிக்கமும், அதன், கசப்பான, விளைவுகளும், ஒரு, பார்வை</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் &amp; இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-இஸ்ரேல்-போர்-துபாய்-மீதான-தாக்குதல்-ட்ரம்பின்-சொத்துகள்-சிதைக்கப்பட்டனவா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-இஸ்ரேல்-போர்-துபாய்-மீதான-தாக்குதல்-ட்ரம்பின்-சொத்துகள்-சிதைக்கப்பட்டனவா</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.அதன் ஒருபகுதியாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்குச் சொந்தமான துபாய் சொத்துகள் குறிவைக்கப்பட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.ட்ரம்ப்ஈரானின் ஏவுகணைகள் துபாயின் முக்கிய இடங்களான &#039;பாம் ஜுமேரா&#039; (Palm Jumeirah) மற்றும் புகழ்பெற்ற &#039;புர்ஜ் அல் அரப்&#039; (Burj Al Arab) ஹோட்டலுக்கு அருகிலுள்ள பகுதிகளில் விழுந்து வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டு, கரும்புகை சூழ்ந்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், துபாயில் &#039;ட்ரம்ப் இன்டர்நேஷனல் கோல்ஃப் கிளப்&#039; மற்றும் &#039;ட்ரம்ப் எஸ்டேட்ஸ்&#039; போன்ற ஆடம்பரக் குடியிருப்புகள் உள்ளன. தற்போது &#039;ட்ரம்ப் டவர் துபாய்&#039; கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன. இந்த நிலையில், &#039;&#039;ஈரான் தாக்குதலில் பாம் ஜுமேரா பகுதியில் உள்ள ட்ரம்ப் குடும்பத்தின் முக்கிய முதலீட்டு மையங்கள் தகர்க்கப்பட்டன&quot; என்ற வாசகத்துடன் பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் ஆனால் இதுவரை உயிரிழந்த அல்லது பாதிக்கப்பட்ட இடங்கள் ட்ரம்ப் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பதை ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-23/8llr0lz9/WhatsApp-Image-2026-02-23-at-11.58.11-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், இஸ்ரேல், போர்:, துபாய், மீதான, தாக்குதல், ட்ரம்பின், சொத்துகள், சிதைக்கப்பட்டனவா</media:keywords>
    </item>
    <item>
        <title>US&amp;Israel Attacks Iran: &amp;quot;ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது&amp;quot; &amp; என்ன சொல்கிறது அமெரிக்கா?</title>
        <link>https://dailytopnewz24.com/us-israel-attacks-iran-ட்ரம்பைக்-கொல்ல-ஈரான்-முயன்றது-என்ன-சொல்கிறது-அமெரிக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/us-israel-attacks-iran-ட்ரம்பைக்-கொல்ல-ஈரான்-முயன்றது-என்ன-சொல்கிறது-அமெரிக்கா</guid>
        <description><![CDATA[ கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசியாவின் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தியது.அதேசமயம் ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திடீரென அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஒரே நேரத்தில் &#039;ஆபரேஷன் எபிக் ப்யூரி&#039; என்ற பெயரில் ஈரான் மீது வான்வெளித்தாக்குதலை நடத்தியது.இதையடுத்து துபாய், அபுதாபி, இஸ்ரேல் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரோடு அவரது மகள், மருமகள், பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இதனை ஈரானும் உறுதிபடுத்தியிருக்கிறது.ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்ட பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதி மைக் வால்ட்ஸ் கூறுகையில், &#039;&#039;அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல ஈரான் நிர்வாகம் முயற்சித்தது.ட்ரம்ப்கடந்த கால நடவடிக்கைகள் இருந்தபோதிலும் ஈரானியத் தலைமை இப்போது தன்னைப் பாதிக்கப்பட்ட நாடாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு பாதிக்கப்பட்டவர் போல் தோற்றமளிக்கிறார்கள். இப்போது நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளோம்&quot; என்று அவர் கூறினார்.தங்களது தலைவரின் மரணத்திற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. அதோடு புதிதாக அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது.இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், &#039;&#039;ஈரான் இன்று மிகவும் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது. இதுவரை தாக்கப்பட்டதை விடவும் கடுமையாகத் தாக்குவோம் என்று கூறி இருக்கிறது.அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது, எப்படியிருந்தாலும், அவர்கள் செய்தால், இதுவரை கண்டிராத ஒரு சக்தியால் நாங்கள் அவர்களைத் தாக்குவோம்&quot; என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் வரும் நாட்களில் மேலும் நிலைமை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-18/asyiky7x/trump" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US-Israel, Attacks, Iran:, ட்ரம்பைக், கொல்ல, ஈரான், முயன்றது, என்ன, சொல்கிறது, அமெரிக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா &amp; இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-இஸ்ரேலின்-no-1-எதிரி-யார்-இந்த-அயதுல்லா-அலி-கமேனி-வீழ்த்தப்படக்-காரணம்-என்னஓர்-அலசல்</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-இஸ்ரேலின்-no-1-எதிரி-யார்-இந்த-அயதுல்லா-அலி-கமேனி-வீழ்த்தப்படக்-காரணம்-என்னஓர்-அலசல்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும்.இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத் தளங்களைக் கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது.இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.அயதுல்லா அலி கமேனிஇந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்து வந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.கமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி &#039;ஃபார்ஸ்&#039; (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது&quot; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் - Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode
அயதுல்லா அலி கமேனியார் இந்த அயதுல்லா அலி கமேனி?ஈரானின் உயரிய தலைவராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் அயதுல்லா அலி கமேனி (86).1979-ல் ஷா மன்னரின் ஆட்சியை வீழ்த்திய இஸ்லாமியப் புரட்சியின்போது கமேனி முக்கியத்துவம் பெற்றார். 1989-ல் ருஹொல்லா கொமேனியின் மறைவுக்குப் பிறகு, மிக உயர்ந்த மதப் பதவியில் இல்லாதபோதிலும், அவர் ஈரானின் உயரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.சமரசத்திலிருந்து எதிர்ப்பு நோக்கி...ஆரம்பத்தில் &#039;சமரசம் செய்து கொள்ளக்கூடிய&#039; நபராகவே பார்க்கப்பட்டார். ஆனால், காலப்போக்கில் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல்படை (IRGC) மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருக்கமான பிணைப்பை உருவாக்கி தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார். ஈரானின் எந்தவொரு முக்கிய முடிவும், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவு குறித்த முடிவுகள், அவரது ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்டதில்லை.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நீண்டகால எதிரியாக விளங்கிய கமேனி, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை ஆதரித்தார். 2013-ல் அவர் அறிமுகப்படுத்திய Heroic flexibility என்ற கொள்கை, 2015-ல் உலக நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட வழிவகுத்தது. இருப்பினும், 2018-ல் ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி மீண்டும் தடைகளை விதித்தார். ஆனாலும், கமேனி அணு ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வந்தார்.`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு,  பகையான பின்னணி | Iran vs Israelஈரான் மீதான தாக்குதல்ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன பிரச்னை?பல ஆண்டுகளாக ஈரானும் இஸ்ரேலும் நேரடியாகப் போரிட்டதில்லை. ஆனால், இஸ்ரேல் - பாலஸ்தீனம் விவகாரங்களில் ஈரான், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்தது. பாலஸ்தீனப் போராளி அமைப்புகள் மூலம் இஸ்ரேலைத் தாக்கி வந்தது.பதிலுக்கு இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகளைக் கொல்வது, சைபர் தாக்குதல் நடத்துவது எனச் செயல்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இஸ்ரேலியத் தளபதிகள் கொல்லப்பட்டதும், ஈரான் நேரடியாக ஏவுகணைகளை ஏவியதும் இந்த &#039;நிழல் போரை&#039; நேரடிப் போராக மாற்றிவிட்டது.இதுமட்டுமில்லாமல், மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, லெபனான், ஏமன் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் அதிகரித்தது. இதற்கிடையில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பொருளாதார நெருக்கடிகளும் ஈரானுக்கு ஏற்பட்டன. இந்தச் சூழலில் போராட்டங்களும் வெடித்தன.இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். &#039;ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது, அந்த அரசாங்கத்தையே மாற்ற வேண்டும்&#039; என்ற கடுமையான நிலைப்பாட்டையும் அறிவித்தார்.கமேனி இருக்கும்வரை இது சாத்தியமில்லை என்பதால், ஈரானின் தலைமையைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டிருக்கிறார்.ட்ரம்ப் - நெதன்யாகுஈரானிய மக்களுக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைதாக்குதலுக்குப் பிறகு ட்ரம்ப், ``ஈரானின் பெருமைமிக்க மக்களே, உங்கள் விடுதலைக்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதை இன்று இரவு நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பான இடங்களிலேயே இருங்கள். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். வெளியே இருப்பது மிகவும் ஆபத்தானது. எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படும். நாங்கள் எங்களது பணியை முடித்த பிறகு, உங்கள் அரசாங்கத்தை நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். இது உங்கள் கைக்கு வரும். பல தலைமுறைகளுக்குப் பிறகு உங்களுக்குக் கிடைத்துள்ள அநேகமாக ஒரே வாய்ப்பு இதுதான்&quot; எனப் பதிவிட்டிருக்கிறார்.ஈரானிய மக்களிடம் பேசிய நெதன்யாகு, ``நமக்கு ஒரு பொதுவான எதிரி இருக்கிறான். அது உங்களை ஒடுக்குமுறைகள் மூலம் ஆட்சி செய்யும் கொடூரமான &#039;அயதுல்லா&#039; ஆட்சிதான். அவர்தான் உங்கள் அற்புதமான நாட்டைச் சீரழித்து, மிகக் கீழ்நிலைக்குக் கொண்டு சென்றவர்கள். உங்களை மொத்தமாகப் படுகொலை செய்தவர்களும் அவர்களே&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/emy2lte8/vs-43.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா, இஸ்ரேலின், எதிரி, யார், இந்த, அயதுல்லா, அலி, கமேனி, வீழ்த்தப்படக், காரணம், என்னஓர், அலசல்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான் Vs இஸ்ரேல், அமெரிக்கா போர்: குடும்பத்துடன் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-vs-இஸ்ரேல்-அமெரிக்கா-போர்-குடும்பத்துடன்-அயதுல்லா-அலி-கமேனி-கொல்லப்பட்டார்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-vs-இஸ்ரேல்-அமெரிக்கா-போர்-குடும்பத்துடன்-அயதுல்லா-அலி-கமேனி-கொல்லப்பட்டார்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நேற்று ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் தெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா போன்ற நகரங்களில் இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி தொடர்புடைய இடங்கள், ஏவுகணை தளங்கள், விமான பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதில், ஈரான் உச்சத் தலைஅவர் அயதுல்லா அலி கமேனி வசித்த இடங்களும் அடங்கும்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடங்கியது. இஸ்ரேல் தற்காப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றை தடுத்தன, ஆனால் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.அயதுல்லா அலி கமேனிஇந்தப் போர் பெரும் பதற்றமான சூழலை உருவாக்கியிருக்கும் நிலையில், அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதை மறுத்துவந்த ஈரான், இன்று காலை அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தாக்குதலுக்குப் பிறகு அயதுல்லா அலி கமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.காமேனியின் இல்லத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி &#039;ஃபார்ஸ்&#039; (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ``புரட்சித் தலைவரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோர் தியாக மரணம் அடைந்தது துரதிர்ஷ்டவசமாக உறுதி செய்யப்பட்டுள்ளது&quot; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் அயதுல்லா அலி கமேனியின் முக்கிய ஆலோசகர் அலி ஷாம்கானி மற்றும் புரட்சிகர காவல்படைத் தளபதி முகமது பாக்பூர் ஆகியோரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கிய ஈரான் - தொடரும் பதற்றம்!  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/j4h0lf12/ayatulla" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா, போர்:, குடும்பத்துடன், அயதுல்லா, அலி, கமேனி, கொல்லப்பட்டார்</media:keywords>
    </item>
    <item>
        <title>மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?</title>
        <link>https://dailytopnewz24.com/மத்திய-கிழக்கில்-பரவும்-தாக்குதல்-புர்ஜ்-கலீஃபா-மீது-ஈரான்-தாக்குதலா</link>
        <guid>https://dailytopnewz24.com/மத்திய-கிழக்கில்-பரவும்-தாக்குதல்-புர்ஜ்-கலீஃபா-மீது-ஈரான்-தாக்குதலா</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது.ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது.துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது.இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர்.இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது..ஈரான் மீதான தாக்குதல்காரணம், இங்கே தாக்குதல் ஏற்பட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். அதனால், முன்னரே அங்கே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை புர்ஜ் காலிஃபாவின் அருகில் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.ஆனால், இந்தத் தாக்குதலுக்கு புர்ஜ் காலிஃபா தான் இலக்கா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அக்கட்டடத்தின் அருகில் இருந்து கரும்புகை வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இந்தப் போர் இன்னும் பெரிதாகலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேல், அமெரிக்கா முதல் கட்டப் போரை 4 நாள்கள் வரை தொடரலாம் என்று கூறப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-28/0wtdllkt/1000055312.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மத்திய, கிழக்கில், பரவும், தாக்குதல், புர்ஜ், கலீஃபா, மீது, ஈரான், தாக்குதலா</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;இதற்கு பதில் கிடைக்காமல் போகாது&amp;apos; &amp; ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/இதற்கு-பதில்-கிடைக்காமல்-போகாது-ஈரான்-பெண்கள்-பள்ளியில்-ஏவுகணை-தாக்குதல்-85-பேர்-உயிரிழப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/இதற்கு-பதில்-கிடைக்காமல்-போகாது-ஈரான்-பெண்கள்-பள்ளியில்-ஏவுகணை-தாக்குதல்-85-பேர்-உயிரிழப்பு</guid>
        <description><![CDATA[ இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றிலும் ஏவுகணை தாக்கியுள்ளது.இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 85 பேர் உயிரிழந்துள்ளனர்.தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் உள்ள மினாபில் தான் இந்தப் பள்ளி அமைந்திருக்கிறது.ஈரான் மீதான தாக்குதல்நீளும் ஈரான் மீதான தாக்குதல்: &#039;காமேனி உயிரிழப்பா?&#039;  பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்இந்த இடம்  ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளத்தின் தாயகம். அதனால், இஸ்ரேலும், அமெரிக்காவும் அங்கே தாக்குதல் நடத்தியுள்ளன.அதில் தான் குழந்தைகள் உள்ளிட்டோர் இறந்துள்ளனர்.இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறுகையில், &quot;இடிக்கப்பட்ட கட்டிடம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள பெண்களுக்கான தொடக்கப் பள்ளி. பட்டப்பகலில் மாணவர்கள் இருக்கையில் அங்கே குண்டு வீசப்பட்டது. இந்த இடத்தில் மட்டும் டஜன் கணக்கான அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானிய மக்களுக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது&quot; என்றார்.ஈரானை தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேல்; &#039;நண்பர்களுக்கு&#039; மோடி ஆதரவா?- சாடும் எதிர்க்கட்சிகள்; காரணம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-28/3zwpowax/AP26059585591788.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இதற்கு, பதில், கிடைக்காமல், போகாது, ஈரான், பெண்கள், பள்ளியில், ஏவுகணை, தாக்குதல், பேர்‌, உயிரிழப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா &amp; ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/us-israel-war-on-iran-இஸ்ரேலுடன்-கைகோத்த-அமெரிக்கா-ஈரானைச்-சூழ்ந்த-போர்-மேகங்கள்-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/us-israel-war-on-iran-இஸ்ரேலுடன்-கைகோத்த-அமெரிக்கா-ஈரானைச்-சூழ்ந்த-போர்-மேகங்கள்-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. பதில் தாக்குதலாக, ஈரானின் IRGC( Islamic Revolutionary Guards) படை, இஸ்ரேல் நோக்கி ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இஸ்ரேல் மட்டுமின்றி, பஹ்ரேன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை நோக்கியும் ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், பஹ்ரேன் தவித்து, மற்ற நாடுகள் ஏவுகணைகளை இடைமறித்து அழித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பஹ்ரேனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5th Fleet மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வளைகுடா நாடுகளும் இந்த போரில் இழுக்கப்பட்டிருப்பதால், இது மிகப் பெரும் போராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.ஈரான் மீதான தாக்குதல்ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியது ஏன்?ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஈரான் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. அணு சக்தி என்பது ஈரானின் உரிமை என்றும், அதை மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த 2025 ஜூன் மாதம், ஈரான் தங்கள் அணுசக்தி திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்தது. அந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது, “ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் நிலையை எட்டிவிட்டது. அதற்கான யுரேனியம் செறிவூட்டல் இன்னும் சில நாட்களில் முழுமை அடையப் போகிறது. இது இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல்&quot; எனக் கூறி, ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல். இதனால், பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இஸ்ரேல் - அமெரிக்காபதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தவே, அந்த போர் 12 நாட்கள் நீடித்தது. கடைசி நாளில், அமெரிக்கா தன்னுடையை விமானப் படையை திரட்டிக் கொண்டு வந்து, பி2 பாம்பர்கள் என்ற சக்தி வாய்ந்த குண்டுகளை, நிலத்துக்கு அடியில் செயல்படும் ஈரானின் முக்கிய அணு சக்தி மையங்கள் மீது வீசி தாக்கியது. இதில் ஈரானின் அணு சக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மார்தட்டிக் கொண்டார்.8 மாதங்கள் கடந்த நிலையில், ஈரான் மீண்டும் அணு சக்தி திட்டத்தை தொடங்க முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டினார். எனவே, ஈரான் உடனடியாக அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்; அப்படியில்லை என்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம், என ட்ரம்ப் அறிவித்தார். அதற்கு ஏற்ப, அமெரிக்க ராணுவ, கடற்படை, விமானப்படையை ஈரானை சுற்றி நிலைநிறுத்தினார். அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களான, யூ.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன், யு.எஸ்.எஸ். ஜெரால்டு ஆர் போர்டு ஆகியவை ஈரானை சுற்றிய கடல் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டன. அமெரிக்காவின் சக்திவாய்ந்த போர் விமானங்களான F35, F22 ஆகியவை வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் விமானப் படைத்தளங்களில் நிலை நிறுத்தப்பட்டன.இதற்கு இடையில் ஓமன் மத்தியஸ்தம் செய்ய, அமெரிக்காவுக்கு ஈரானுக்கு இடையே பிப்ரவரி மாதம் மட்டும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் பிப்ரவரி 26-ம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு கட்ட பேச்சு வார்த்தையும் நல்ல முன்னேற்றத்தை நோக்கித்தான் போவதாக, அமெரிக்காவும், ஈரானும் தெரிவித்தனர். இருப்பினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.ட்ரம்ப்அமெரிக்காவின் மூன்று வலியுறுத்தல்கள்!

அமெரிக்கா 3 விஷயங்கள் முக்கியமாக வலியுறுத்தியது. 1. ஈரான் அணு சக்தி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். 2. ஏவுகணைத் திட்டங்களையும் முற்றிலும் கைவிட வேண்டும் 3. மத்திய கிழக்கில் ஈரான் ஆதரித்து வரும் ஆயுதக் குழுக்களான, ஹெஸ்புல்லா, ஹெவ்திக்கள், ஹமாஸ், சிரியாவின் ஆயுதக் குழுக்களுக்கு பணம் உள்ளிட்ட ஆதரவு கொடுப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்க கேட்கிறது. ஆனால், ஈரான் இதை முழுமையாக ஏற்கவில்லை. அணு சக்தி திறனை குறைப்பது பற்றி மட்டுமே ஈரான் பேச ஒப்புக் கொண்டது. மற்றவற்றைப் பற்றி பேசக் கூட ஈரான் தயாராக இல்லை. மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தையிலும் தன் நிலைப்பாட்டை மாற்றம் முடியாது என ஈரான் உறுதியாக இருந்ததால், இந்த தாக்குதலை நடத்துவதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். மிகப் பெரும் போர்:

ஈரான் மீதான இந்த போர் குறித்து வீடியோ மூலம் செய்தி வெளியிட்டிருக்கும் ட்ரம்ப், “ அமெரிக்கா ஒரு மிகப் பெரிய மோதலில் ஈடுபட்டிருக்கிறது. ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்காவின் அழிவையே விரும்புகிறது. அமெரிக்காவை தாக்கும் அச்சுறுத்தலான ஏவுகணைகளை, ஈரான் வைத்திருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பை கருதியே இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.மேலும், “ ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும், ஏவுகணை தயாரிப்பு தொழில் துறையும் முற்றிலும் அழிக்கப்படும். ஈரான் மக்களே உங்களுக்கு இதுதான் இறுதி வாய்ப்பு. நாங்கள் ஆட்சியை வீழ்த்திய பிறகு, அரசு உங்கள் கைக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைத்துவிடும். பாதுகாப்பாக இருங்கள்” என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் இறுதி நோக்கம், ஈரானில் ஆட்சி மாற்றம் என்பதை ட்ரம்ப் தனது பேச்சின் மூலம் தெளிவு படுத்தியிருக்கிறார். ஆட்சி மாற்றம் என்பது உடனடியாக நடப்பதற்கான சாத்தியக் கூறு குறைவே. ஈரான் தனது ஏவுகணை பலம் மூலமாக பதிலடி கொடுப்பதால், இது நீண்ட போராக விரிவடைய வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவுக்கு இஸ்ரேலின் அழுத்தம்:இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுஇஸ்ரேலை ஓர் அரசாக அங்கீகரித்த முதல் மத்திய கிழக்கு ஈரான்தான் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. ஆம், ஒரு காலத்தில் ஈரானும் இஸ்ரேலும் நட்பு நாடுகளாக இருந்தன. பெஹல்விக்கள் ஆட்சி அமெரிக்க, இஸ்ரேல் அரசுகளின் தலையாட்டி ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-10-05/fn5k9gdt/1719651581-1923-large.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Israel, War, Iran:, இஸ்ரேலுடன், கைகோத்த, அமெரிக்கா, ஈரானைச், சூழ்ந்த, போர், மேகங்கள், காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>நீளும் ஈரான் மீதான தாக்குதல்: &amp;apos;காமேனி உயிரிழப்பா?&amp;apos;  பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்</title>
        <link>https://dailytopnewz24.com/நீளும்-ஈரான்-மீதான-தாக்குதல்-காமேனி-உயிரிழப்பா-பாதுகாப்புத்-துறை-அமைச்சர்-கொல்லப்பட்டதாக-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/நீளும்-ஈரான்-மீதான-தாக்குதல்-காமேனி-உயிரிழப்பா-பாதுகாப்புத்-துறை-அமைச்சர்-கொல்லப்பட்டதாக-தகவல்</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும்.இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர்.ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத பகுதிகள், ஈரானின் தலைநகரம் டெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன இரு நாடுகளும். காமேனிஇப்போது வெளியாகி உள்ள தகவலின் படி, ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்சாதே மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதி முகமது பாக்பூர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்கின்றன சில ஊடகங்கள். ஆனால், இந்தத் தகவல்களை ஈரான் ஊடகம் எதுவும் உறுதி செய்யவில்லை. ஈரானின் உச்ச தலைவர் காமேனியும் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியான நிலையில், இந்தத் தகவலை இஸ்ரேலின் சேனல் 12 மறுத்துள்ளது. காமேனிக்கு சிறிதளவு காயம் அடைந்துள்ளதாக கூறியுள்ளது.இன்னும் சிறிது நேரத்தில் காமேனியின் பேச்சு ஒளிபரப்பப்படலாம் என்றும், அது முன்னரே ரெக்கார்ட் செய்யப்பட்டதாக இருக்கும் என்றும் சேனல் 12 தெரிவித்துள்ளது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-28/j5f70jc5/WhatsApp-Image-2026-02-28-at-9.06.13-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நீளும், ஈரான், மீதான, தாக்குதல்:, காமேனி, உயிரிழப்பா, பாதுகாப்புத், துறை, அமைச்சர், கொல்லப்பட்டதாக, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் &amp; Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode</title>
        <link>https://dailytopnewz24.com/iran-us-israel-war-gulf-நாடுகள்-மீதும்-பாயும்-ஏவுகணைகள்-middle-eastல்-என்ன-நடக்கிறது-decode</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-us-israel-war-gulf-நாடுகள்-மீதும்-பாயும்-ஏவுகணைகள்-middle-eastல்-என்ன-நடக்கிறது-decode</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-28/hocd0fis/WhatsApp-Image-2026-02-28-at-7.33.25-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, Israel, War:, Gulf, நாடுகள், மீதும், பாயும், ஏவுகணைகள், Middle, Eastல், என்ன, நடக்கிறது, Decode</media:keywords>
    </item>
    <item>
        <title>Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட &amp;apos;எல்லாமுமான&amp;apos; காமேனியின் மரணம்!</title>
        <link>https://dailytopnewz24.com/khamenei-துக்கமும்-கொண்டாட்டமுமாக-ஈரான்-எதிர்கொண்ட-எல்லாமுமான-காமேனியின்-மரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/khamenei-துக்கமும்-கொண்டாட்டமுமாக-ஈரான்-எதிர்கொண்ட-எல்லாமுமான-காமேனியின்-மரணம்</guid>
        <description><![CDATA[ அயதுல்லா அலி கமேனி - ஈரானில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் உச்சத் தலைவராக இருந்தவர். தற்போது ஈரானில் நடந்து வரும் போரில் உயிரிழந்துள்ளார்.இந்தச் செய்தியைக் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அடுத்த நாளான நேற்று (மார்ச் 1) ஈரானின் அதிகாரபூர்வமான செய்தி நிறுவனமான IRIB (Islamic Republic of Iran Broadcasting)-உம் உறுதி செய்தனர்.இவரின் இறப்பை ஈரான் இரண்டு வகைகளில் எதிர்கொண்டது. ஒன்று, சோகம்... அழுகை... கோபம்.மற்றொன்று, சிரிப்பு... மகிழ்ச்சி... கொண்டாட்டம்.கமேனி மரணம் - துக்கம்Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!முதல் வகைக்கான காரணத்தைப் பார்க்கலாம்...
கமேனி என்பவர் ஈரானைப் பொறுத்தவரை, &#039;எல்லாமுமானவர்&#039;. அப்படிப்பட்டவரின் இறப்பு அந்த நாட்டை எப்படி உலுக்கி இருக்கும் என்பது நமக்கே எளிதாகப் புரியும்.தங்களுடைய தலைவர் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை ஈரானில் இருக்கும் சில... பல... மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இதன் விளைவுதான், இஸ்ரேல் மீதும், அமெரிக்கப் படைகள் அமைந்துள்ள மத்தியக் கிழக்கு நாடுகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கான காரணம்.இப்படிப்பட்ட தலைவரின் இறப்பை ஈரானின் ஒரு தரப்பு மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம்...பிற மத்தியக் கிழக்கு நாடுகள் &#039;மாற்றம்... முன்னேற்றம்&#039; என்று வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், ஈரான் இன்னும் பழமையைத் தக்க வைப்பதிலேயே இருக்கிறது.இது அந்த நாட்டு மக்களுக்கு ஒருவித அயர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் - பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?அதனால், கமேனியின் மரணம் 36 ஆண்டுக்கால அதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும்; &#039;மாற்றம்... முன்னேற்றம்&#039; வரும் என்று நினைக்கிறார்கள்.கமேனியின் மரணம் ஈரானில் ஆட்சி மாற்றம் முதல் பொருளாதார மாற்றம் வரை பல மாற்றங்கள் கொண்டு வரும் என்று நினைக்கிறார்கள்.அதன் விளைவுதான், டெஹ்ரான், கராஜ், மஷாட் ஆகிய நகரங்களில் மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் கமேனியின் மரணத்தைக் கொண்டாடியது.கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/gs9v4fit/WhatsApp-Image-2026-03-01-at-10.22.42-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Khamenei:, துக்கமும், கொண்டாட்டமுமாக, ஈரான், எதிர்கொண்ட, எல்லாமுமான, காமேனியின், மரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>போர் எதிரொலி: துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய சிக்கல்! அப்போ தங்கம் விலை?</title>
        <link>https://dailytopnewz24.com/போர்-எதிரொலி-துபாயில்-இருந்து-தங்கம்-ஏற்றுமதி-செய்ய-சிக்கல்-அப்போ-தங்கம்-விலை</link>
        <guid>https://dailytopnewz24.com/போர்-எதிரொலி-துபாயில்-இருந்து-தங்கம்-ஏற்றுமதி-செய்ய-சிக்கல்-அப்போ-தங்கம்-விலை</guid>
        <description><![CDATA[ ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர், துபாய் வரையில் நீண்டு வருகிறது. இதனால், துபாயில் இருந்து பிசிக்கல் தங்கத்தை ஏற்றுமதி செய்வதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலை Reuters செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்துள்ள தகவலின் படி, துபாயின் தங்கம் புல்லியன் வர்த்தக மையத்தில் இருந்து இறக்குமதியாகும் மற்றும் துபாயில் இருந்து ஏற்றுமதியாகும் தங்கத்திற்கு வரும் நாள்களில் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளன... விதிக்கப்பட உள்ளது. துபாய்Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!&#039; - முதலீட்டாளர்களே கவனிங்க!இந்த மையம் தான் இந்தியா, ஹாங்காங், சுவிட்சார்லாந்து ஆகிய நாடுகளின் டாப் தங்கம் ஏற்றுமதியாளர். பொதுவாக, தங்கத்தின் பாதுகாப்பு கருதி விமானத்தில் தான், அது பிற நாடுகளுக்கு அனுப்பப்படும். ஈரான் துபாய் மீது நடத்தி வரும் தாக்குதலால், அங்கே விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், தங்கம் 2 - 3 நாள்களுக்கு துபாயில் இருந்து கிளம்புவது கேள்விக்குறி ஆகியுள்ளது. ஏற்கெனவே போர் பதற்றத்தால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் விலை சர்வதேச சந்தையில் கிட்டத்தட்ட 5,400 டாலருக்கு வர்த்தகம் ஆகி வருகிறது.இப்படி முக்கிய நாடுகளில் இருந்து தங்கத்தின் சப்ளை சற்று தடைப்பட்டால், தேவை கருதி தங்கம் விலை இன்னும் எகிறலாம். மெகா சரிவில் பங்குச்சந்தை; எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? - நிபுணர்கள் எச்சரிக்கை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/7kyem8hy/Gold.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>போர், எதிரொலி:, துபாயில், இருந்து, தங்கம், ஏற்றுமதி, செய்ய, சிக்கல், அப்போ, தங்கம், விலை</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: &amp;quot;மகளே, வீட்டிற்குள்ளேயே இரு&amp;quot; &amp; நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் ஈரானில் சிக்கித் தவிப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/iran-மகளே-வீட்டிற்குள்ளேயே-இரு-நூற்றுக்கணக்கான-இந்திய-மாணவர்கள்-ஈரானில்-சிக்கித்-தவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-மகளே-வீட்டிற்குள்ளேயே-இரு-நூற்றுக்கணக்கான-இந்திய-மாணவர்கள்-ஈரானில்-சிக்கித்-தவிப்பு</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலையைத் தொடர்ந்து இஸ்ரேல், அபுதாபி, துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. போர் நடந்து வரும் ஈரானில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடங்கும்.அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் போர் காரணமாக இந்தியாவிற்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். படிப்பு முடிய இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கின்றன.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இப்படுகொலையைத் தொடர்ந்து இஸ்ரேல், அபுதாபி, துபாய் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. போர் நடந்து வரும் ஈரானில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடங்கும்.அங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் போர் காரணமாக இந்தியாவிற்கு வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வருகின்றனர். படிப்பு முடிய இன்னும் 6 மாதம் மட்டுமே இருக்கின்றன. அபிஜீத் குடும்பம்அப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் தொடங்கி இருக்கிறது. இந்தப் போர் எப்போது முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இண்டர்நெட், மார்க்கெட், விமான போன்ற சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதனால் மாணவர்களின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். மாணவர்கள் தங்களைப் பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அனைத்து மாணவர்களும் பத்திரமாக வீட்டிற்குள் இருக்கும்படியும், வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.மும்பையைச் சேர்ந்த பாத்திமா என்ற மாணவியின் தாயார் சப்னம் இது குறித்து கூறுகையில், &#039;&#039;நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதாக எனது மகள் தெரிவித்துள்ளார். நான் வீட்டிற்குள் இருக்கச் சொல்லியிருக்கிறேன். தூதரகம் சொல்கின்றபடி நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்.கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்எங்கள் மகளை மத்திய அரசு பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. படிப்பு முடிய இன்னும் 6 மாதங்கள்தாம் இருக்கின்றன&#039;&#039; என்றார். ஈரானில் இருக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு நெருங்குவதால் இந்தியா திரும்பத் தயங்குகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர் மார்க்கெட் அடைக்கப்பட்டு இருப்பதால் அத்தியாவசியப் பொருள்கள் கூட வாங்க முடியாமல் தவிப்பதாக இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கமேனிமும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்ல இருந்த பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதோடு விமான டிக்கெட் முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று அபுதாபி, பஹ்ரைன், தோஹா போன்ற நாடுகளின் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் பல ஆயிரக்கணக்கானோர் சொந்த நாடுகளுக்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.மும்பயைச் சேர்ந்த அபிஜீத் என்பவர் தனது குடும்பத்தோடு பஹ்ரைனில் வசித்து வருகிறார். அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் ஈரான் போட்ட குண்டு வெடித்ததாக அபிஜீத் தெரிவித்துள்ளார். அவர்கள் இப்போது பாதுகாப்பான இடத்திற்கு மாறி இருக்கின்றனர்.கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/y68vsqd9/Smoke-1772409819921d.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, மகளே, வீட்டிற்குள்ளேயே, இரு, நூற்றுக்கணக்கான, இந்திய, மாணவர்கள், ஈரானில், சிக்கித், தவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் &amp; பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரானுக்கும்-அமெரிக்கா-இஸ்ரேலுக்கும்-தானே-போர்-பிறகு-துபாய்-கத்தார்-குவைத்-மீது-தாக்குதல்-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரானுக்கும்-அமெரிக்கா-இஸ்ரேலுக்கும்-தானே-போர்-பிறகு-துபாய்-கத்தார்-குவைத்-மீது-தாக்குதல்-ஏன்</guid>
        <description><![CDATA[ கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும், இஸ்ரேலும். ஆனால், ஈரானைத் தாண்டி துபாய், கத்தார், குவைத், லெபனான் போன்ற நாடுகளிலும் தாக்குதல் நடந்து வருகின்றன. எந்தெந்த நாடுகள் எந்தெந்த நாடுகளை தாக்குகின்றன?  தங்கள் மீதான தாக்குதலால் இஸ்ரேல், பஹ்ரைன், அபுதாபி, துபாய், கத்தார், குவைத், ஈராக், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் போன்ற நாடுகளின் மீது ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஏவி வருகிறது ஈரான். ஈரானைத் தாண்டி லெபனான் மீதும் தாக்குதல் நடத்துகின்றன அமெரிக்கா, இஸ்ரேல்.  ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்Iran: &quot;இன்னும் உயிரிழப்புகள் இருக்கும்&quot; - ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்ஈரானுக்கு இஸ்ரேல் மீதும், அமெரிக்கா மீதும் தானே பிரச்னை, இதில் பிற மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் ஏன் தாக்குதல் நடத்துகிறது என்கிற கேள்வி எழலாம். அந்தக் கேள்விக்கான பதில்...&#039;பழிக்கு பழி&#039; நடவடிக்கையாக இஸ்ரேலைத் தாக்கி வருகிறது ஈரான். ஆனால், அப்படி அமெரிக்காவை தாக்க முடியாது. காரணம், இஸ்ரேலும், ஈரானும் ஓரளவுக்கு பக்கத்து நாடுகள். ஆனால், அமெரிக்கா அப்படி இல்லை. இதனால், ஈரான் பஹ்ரைன், கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைந்திருக்கும் அமெரிக்க நிலை படைகளைத் தாக்குகிறது. இதன் மூலம், அமெரிக்காவை பழி வாங்குகிறது ஈரான். ஜோர்டான் போன்ற நாடுகள், இஸ்ரேல் மீது ஈரான் ஏவும் ஏவுகணைகளை இடைமறித்து வீழ்த்துகின்றன. அதனால், அந்த நாடுகளின் மீது தாக்குதல் நடத்துகிறது ஈரான். அடுத்து அமெரிக்காவிற்கு பொருள்கள் செல்லும் முக்கியப் போக்குவரத்து நாடுகளை அந்தப் போக்குவரத்து வழிகளைக் குறி வைத்துத் தாக்குகிறது ஈரான். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகளையும் குறி வைக்கிறது ஈரான். ஈரான் பிற நாடுகள் மீது நடத்தும் அனைத்து தாக்குதல்களும் இஸ்ரேல், அமெரிக்கா மீதான தாக்குதல் தான். ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானுடன் லெபனான் மீது தாக்குதல் நடத்த காரணம், அது ஈரானுக்கு செய்யும் உதவி தான்.லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பு ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் இறப்பிற்குப் பிறகு, ஈரானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. அதனால், அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மெகா சரிவில் பங்குச்சந்தை; எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு? - நிபுணர்கள் எச்சரிக்கை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/agpf2fzi/WhatsApp-Image-2026-03-01-at-10.22.41-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும், தானே, போர், பிறகு, துபாய், கத்தார், குவைத், மீது, தாக்குதல், ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>இஸ்ரேல் &amp; ஈரான் போர்: &amp;quot;கத்தாரில் நான் சென்றதுதான் கடைசி விமானம்&amp;quot; &amp; சந்தோஷ் நாராயணன் பதிவு</title>
        <link>https://dailytopnewz24.com/இஸ்ரேல்-ஈரான்-போர்-கத்தாரில்-நான்-சென்றதுதான்-கடைசி-விமானம்-சந்தோஷ்-நாராயணன்-பதிவு</link>
        <guid>https://dailytopnewz24.com/இஸ்ரேல்-ஈரான்-போர்-கத்தாரில்-நான்-சென்றதுதான்-கடைசி-விமானம்-சந்தோஷ்-நாராயணன்-பதிவு</guid>
        <description><![CDATA[ ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.  இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட  பலர் கொல்லப்பட்டனர்.இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்திருக்கிறது. இந்நிலையில், கத்தாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், &quot;மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட கடைசி கத்தார் விமானம் நான் பயணித்த விமானமாகத் தான் இருக்கும். சந்தோஷ் நாராயணன்அங்குள்ள (கத்தார்) எனது சகோதர சகோதரிகளின் பாதுகாப்புக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் பாதுகாப்பாக அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன். உங்களின் அக்கறையான மெசேஜ்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்&quot; என்று பதிவிட்டிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/iqk7kxjb/SanthoshNarayanan17723333997771772333406336.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இஸ்ரேல், ஈரான், போர்:, கத்தாரில், நான், சென்றதுதான், கடைசி, விமானம், சந்தோஷ், நாராயணன், பதிவு</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran war: Gulf நாடுகள் மீது தாக்குதல் | Congress குழுவைச் சந்திக்காத MK Stalin | Imperfect show</title>
        <link>https://dailytopnewz24.com/iran-war-gulf-நாடுகள்-மீது-தாக்குதல்-congress-குழுவைச்-சந்திக்காத-mk-stalin-imperfect-show</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-war-gulf-நாடுகள்-மீது-தாக்குதல்-congress-குழுவைச்-சந்திக்காத-mk-stalin-imperfect-show</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/bq1121t6/WhatsApp-Image-2026-03-01-at-8.13.45-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran, war:, Gulf, நாடுகள், மீது, தாக்குதல், Congress, குழுவைச், சந்திக்காத, Stalin, Imperfect, show</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: &amp;quot;இன்னும் உயிரிழப்புகள் இருக்கும்&amp;quot; &amp; ஈரான் மீதான போர் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/iran-இன்னும்-உயிரிழப்புகள்-இருக்கும்-ஈரான்-மீதான-போர்-குறித்த-கேள்விக்கு-ட்ரம்ப்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-இன்னும்-உயிரிழப்புகள்-இருக்கும்-ஈரான்-மீதான-போர்-குறித்த-கேள்விக்கு-ட்ரம்ப்-பதில்</guid>
        <description><![CDATA[ கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) முதல் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடர்ந்து வருகிறது.இந்தப் போர் தொடர்ந்தால் உலக நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்ளும். இதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று, &#039;கச்சா எண்ணெய் விலை&#039;.இந்த விலை உயர்வு சாமானியர்களையும் கடுமையாகப் பாதிக்கும். அதனால், அனைத்து மக்களுக்குமே இந்தப் போர் எப்போது முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.ஈரான் மீதான போர்&#039;திரும்ப வந்துட்டேன்னு சொல்லு&#039; - வெள்ளி &#039;இந்த&#039; விலையை தாண்டினால் &#039;டாப்&#039; தான்|Silver முதலீடுஎப்போது போர் முடிவுக்கு வரும்?இந்தக் கேள்விக்கான பதிலைத் தனது ட்ரூத் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வீடியோவில் அவர், &quot;நம்முடைய முழுக் கொள்கைகளும் நிறைவேறும் வரை ஈரான் மீதான போர் நடவடிக்கைகள் முழு வலுவுடன் தொடரும்&quot; என்றும், &#039;&#039;ஈரான் மீதான போர் சரியான நடவடிக்கை&#039;&#039; என்றும் பேசியிருக்கிறார்.  தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு &#039;மோசமான&#039; முதலீடு: Warren Buffet - ஏன்? | Goldநீண்ட தூரக் குறிகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வைத்திருந்த ஈரானிய ஆட்சி அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. அதனால்தான், இந்தப் போரை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்று ட்ரம்ப் வீடியோவில் கூறியிருக்கிறார்.மேலும், இந்தப் போரில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்துள்ளதாகவும், இன்னும் இறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-02/9hxgncs3/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, இன்னும், உயிரிழப்புகள், இருக்கும், ஈரான், மீதான, போர், குறித்த, கேள்விக்கு, ட்ரம்ப், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>கர்நாடகா: கமேனி படுகொலைக்கு மினி ஈரான் கிராமத்தில் 3 நாள் பந்த் அனுசரிப்பு; கடைகள் அடைப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/கர்நாடகா-கமேனி-படுகொலைக்கு-மினி-ஈரான்-கிராமத்தில்-3-நாள்-பந்த்-அனுசரிப்பு-கடைகள்-அடைப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/கர்நாடகா-கமேனி-படுகொலைக்கு-மினி-ஈரான்-கிராமத்தில்-3-நாள்-பந்த்-அனுசரிப்பு-கடைகள்-அடைப்பு</guid>
        <description><![CDATA[ ஈரானில் நேற்று முன் தினம் நடந்த அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் அந்நாட்டு உச்ச மதத்தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து ஈரானும் இஸ்ரேல் மற்றும் அண்டையில் உள்ள அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மாலையிலிருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கின்றன. படுகொலை செய்யப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்கும் இந்தியாவில் உள்ள கர்நாடகா கிராமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்காபல்லாபூர் மாவட்டத்தில் இருக்கும் அலிபூர் என்ற கிராமத்தை அனைவரும் மினி ஈரான் என்றே அழைக்கின்றனர். தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ள கமெனி 1981ம் ஆண்டு இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தபோது இந்த மினி ஈரான் கிராமத்திற்கு வந்து அங்குள்ள மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதோடு உள்ளூர் மக்களுடனும் கலந்துரையாடினார்.அலிபூர் வந்திருந்த காட்சிஇந்தக் கிராமத்தில் அதிக அளவில் ஷியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர். கமேனியும் ஷியா முஸ்லிம் ஆவார். அதனால்தான் இக்கிராமத்திற்கு வந்து சென்றார். அவர் வந்து சென்ற பிறகு அலிபூர் கிராமம் தென்னிந்தியாவில் ஷியா முஸ்லிம்களின் ஆன்மிக தலமாக அந்தஸ்து பெற்றது.கமேனியை வெறும் ஒரு வெளிநாட்டு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட வழிகாட்டியாகவும் இக்கிராம மக்கள் பார்க்கின்றனர். எனவேதான் அவரது மரணத்தை ஒட்டுமொத்த கிராமமும் சேர்ந்து துக்கமாக அனுசரித்து வருகிறது. கிராமம் முழுக்க தற்போது வீடுகள் மற்றும் மசூதிகளில் கருப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.Iran: &quot;எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்...&quot; - அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்?வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஈரானுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவு காரணமாக இக்கிராம மக்கள் கமேனி மரணத்திற்கு அறிவிக்கப்படாத 3 நாள் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பந்த் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்மீக வழிகாட்டியாக மதிக்கப்படும் கமெனியின் கொலைக்குத் தங்கள் வருத்தத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்த பொதுமக்கள் தெருக்களில் கூடி ஒருவரை ஒருவர் துக்கம் விசாரித்துக்கொள்வது மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களை அடைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர்.அலிபூர் கிராம மக்கள் தெருக்களில் கமேனி புகைப்படத்துடன் அமைதிப் பேரணி நடத்தினர்.இப்பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் இது குறித்து கூறுகையில், &#039;&#039;அவர் வெறும் ஷியா தலைவர் மட்டுமல்ல, அவரது செய்தி அனைத்து சமூகங்களுக்கும் பொருந்தும். அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன. சில அரபு நாடுகளும் இதை ஆதரித்தன.இது உலகிற்கு ஒரு இழப்பு. எனவே நாங்கள் அலிபூரில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் மூன்று நாட்களுக்கு மூடிவிட்டோம்&quot; என்று கூறினார்.அமெரிக்கா - இஸ்ரேலின் NO 1 எதிரி; யார் இந்த அயதுல்லா அலி கமேனி? வீழ்த்தப்படக் காரணம் என்ன?|ஓர் அலசல்அயதுல்லா கமேனிஇச்சம்பவத்தைத் தொடர்ந்து அலிபூரில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.உச்சத் தலைவரின் வருகையை நினைவுபடுத்தும் விதமாகவும், கிராமத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்குக் காரணமாகவும் அவரின் துக்கச் சடங்குகள் முடியும் வரை பந்த் தொடரும் என்று உள்ளூர் சமூகத் தலைவர்கள் தெரிவித்தனர்.US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா - ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/3rlu7zfa/01074541a1bcd2a.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கர்நாடகா:, கமேனி, படுகொலைக்கு, மினி, ஈரான், கிராமத்தில், நாள், பந்த், அனுசரிப்பு, கடைகள், அடைப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>கமேனி கொலை: ஈரான் இடைக்கால மதத்தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராபி நியமனம்</title>
        <link>https://dailytopnewz24.com/கமேனி-கொலை-ஈரான்-இடைக்கால-மதத்தலைவராக-மூத்த-மதகுரு-அயதுல்லா-அராபி-நியமனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/கமேனி-கொலை-ஈரான்-இடைக்கால-மதத்தலைவராக-மூத்த-மதகுரு-அயதுல்லா-அராபி-நியமனம்</guid>
        <description><![CDATA[ ஈரானில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார்.இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானில் புதிய மதத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. ஈரான் ராணுவம் தொடர்ந்து இன்றும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான் தலைநகர் டெக்ரான் மீது இன்று தாக்குதல் நடத்தியது.இத்தாக்குதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் தலைமை மதகுருவான கமேனி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் 111வது பிரிவின் கீழ் அவசர தற்காலிகத் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமையில் 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.கப்பல் மீது தாக்குதல்இத்தலைமைக்கு மூத்த மதகுரு அயதுல்லா அலிரேசா அராபி தலைவராகச் செயல்படுவார். நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவர் தலைவராக இருப்பார்.அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அவர் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி கோலாம்-ஹோசைன் மொஹ்செனி-எஜே ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நாட்டை வழிநடத்துவார்.1959 இல் பிறந்த 67 வயதான அயதுல்லா அலிரேசா அராபி ஈரானின் மதகுருக்களில் மூத்த நபராவார். இவர் இடைக்கால தலைமை ஏற்பதற்கு முன்பு, ஒரே நேரத்தில் பல முக்கியப் பதவிகளை வகித்தார். அவர் ஈரானின் தேசிய இஸ்லாமிய செமினரிகளின் நெட்வொர்க்கிற்குத் தலைமை தாங்குகிறார். கார்டியன் கவுன்சிலின் மதகுரு உறுப்பினராகப் பணியாற்றுகிறார் மற்றும் நிபுணர்களின் சபையில் அமர்ந்துள்ளார்.இது தவிர ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRGC) தளபதி ஜெனரல் முகமது பக்பூர் சனிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தளபதி ஜெனரலாக அஹ்மத் வஹிதி நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் - இனி ஈரான் எதிர்காலம் எதை நோக்கி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/mj4rcqyh/iran-ayatollah-arafi-01122116-16x90.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கமேனி, கொலை:, ஈரான், இடைக்கால, மதத்தலைவராக, மூத்த, மதகுரு, அயதுல்லா, அராபி, நியமனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Ali Khamenei: &amp;quot;பழிவாங்குவதற்கு ஈரானுக்குக் கடமையும் உரிமையும் உள்ளன&amp;quot; &amp; ஈரான் அதிபர் பெஷேஷ்கியான்</title>
        <link>https://dailytopnewz24.com/ali-khamenei-பழிவாங்குவதற்கு-ஈரானுக்குக்-கடமையும்-உரிமையும்-உள்ளன-ஈரான்-அதிபர்-பெஷேஷ்கியான்</link>
        <guid>https://dailytopnewz24.com/ali-khamenei-பழிவாங்குவதற்கு-ஈரானுக்குக்-கடமையும்-உரிமையும்-உள்ளன-ஈரான்-அதிபர்-பெஷேஷ்கியான்</guid>
        <description><![CDATA[ மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான தாக்குதலில் ஈரானின் முக்கியத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.நேற்று நடைபெற்ற தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.IRAN SUPREME LEADER KHAMENIஇதனைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி கமேனியைக் கொன்றது முஸ்லிம்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பு என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் தெரிவித்துள்ளார்.ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான அறிக்கையில் அவர் கூறியதாவது, &quot;ஈரானின் உச்ச தலைவர் மற்றும் உலக அளவில் ஷியா இஸ்லாமின் முக்கிய தலைவரின் கொலை, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஷியாக்களுக்கு எதிரான திறந்த போர் அறிவிப்பாகக் கருதப்படுகிறது. Iran President Masoud Pezeshkianகமேனியின் கொலைக்குப் பழிவாங்குவது கடமை ஆகும்.இந்த வரலாற்றுக் குற்றத்தின் நிர்வாகிகள் மற்றும் திட்டமிட்டவர்களைப் பழிவாங்குவது ஈரானின் சட்டபூர்வமான கடமையும் உரிமையும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.US-Israel Attacks Iran: &quot;ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது&quot; - என்ன சொல்கிறது அமெரிக்கா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/lo57ud23/PUZS7T2XV5JXXLKJJBICB7JDCE.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ali, Khamenei:, பழிவாங்குவதற்கு, ஈரானுக்குக், கடமையும், உரிமையும், உள்ளன, ஈரான், அதிபர், பெஷேஷ்கியான்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: &amp;quot;எனக்கு அடுத்து ஈரானின் தலைவர்...&amp;quot; &amp; அயதுல்லா கமேனி யார், யாரைப் பரிந்துரைத்தார்?</title>
        <link>https://dailytopnewz24.com/iran-எனக்கு-அடுத்து-ஈரானின்-தலைவர்-அயதுல்லா-கமேனி-யார்-யாரைப்-பரிந்துரைத்தார்</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-எனக்கு-அடுத்து-ஈரானின்-தலைவர்-அயதுல்லா-கமேனி-யார்-யாரைப்-பரிந்துரைத்தார்</guid>
        <description><![CDATA[ ஈரானை 37 ஆண்டுகளாக இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த அயதுல்லா அலி கமேனியின் மரணத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அரசு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.இதனைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள்கள் துக்க காலமும், 7 நாள்கள் தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போது ஒட்டுமொத்த உலகின் பார்வையும் ஈரானின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியின் மீது விழுந்துள்ளது.அயதுல்லா அலி கமேனிகமேனியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் மோஜ்தபா (56) தலைவராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தப் பதவி பரம்பரையாகத் தொடருவதை கமேனி விரும்பவில்லை என்றும், மோஜ்தபா உயர்மட்ட மத குரு அல்ல என்பதால் அவருக்கு வாய்ப்பு குறைவு என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், &quot;ஈரானை வழிநடத்த சில நல்ல வேட்பாளர்கள் உள்ளனர்; அவர்கள் யார் என்று எனக்குத் தெரியும், ஆனால் இப்போது சொல்ல முடியாது&quot; என அதிபர் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.US-Israel Attacks Iran: &quot;ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது&quot; - என்ன சொல்கிறது அமெரிக்கா?கடந்த ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேலுடன் சேர்ந்து, ஈரான் மீது 12 நாள் போரை அமெரிக்கா தொடங்கியபோது, உச்சத் தலைவர் தலைமறைவாக இருந்தபோது, அவருக்குப் பின் விரைவாக நியமிக்கப்படக்கூடிய மூன்று வேட்பாளர்களை அவர் பெயர் குறிப்பிட்டிருந்தார்.1. ஈரானின் நீதித்துறைத் தலைவர் கோலம் - ஹொசைன் மொஹ்சேனி-எஜேய்.2. கமேனியின் தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹெஜாசி.3. ஈரான் புரட்சியைத் தொடங்கிய ரூஹொல்லா கமேனியின் பேரன் ஹசன் கமேனி. இவர் சீர்திருத்தவாதக் கருத்துடையவராகப் பார்க்கப்படுகிறார்.அயதுல்லா அலி கமேனிஈரானின் அடுத்த தலைவரை 88 மத குருக்களைக் கொண்ட &#039;நிபுணர்கள் குழு&#039;தான் தேர்ந்தெடுக்கும். அந்தப் பட்டியலில் அயதுல்லா அலி கமேனியின் மகன் உட்பட சில வேட்பாளர்கள் இந்தப் பதவிக்கான சாத்தியமான போட்டியாளர்களாகக் கருதப்படுகின்றனர்.அலிரேசா அராபி (67): கமேனிக்கு நெருக்கமானவர், நிபுணர்கள் குழுவின் துணைத் தலைவர். மத ரீதியாகப் பலம் வாய்ந்தவர் என்றாலும், ராணுவத்துடன் இவருக்கு நெருக்கம் குறைவு.Iran US Israel War: Gulf நாடுகள் மீதும் பாயும் ஏவுகணைகள் - Middle Eastல் என்ன நடக்கிறது? | Decode
முகமது மெஹ்தி மிர்பாகேரி (60): அதீத பழமைவாதக் கருத்துடையவர். மேற்கத்திய நாடுகளைக் கடுமையாக எதிர்ப்பவர். &quot;நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாதது&quot; என்பது இவரது கொள்கை.ஹாஷெம் ஹொசைனி புஷெஹ்ரி (60): நிபுணர்கள் குழுவின் முதல் துணைத் தலைவர். கமேனிக்கு மிகவும் விசுவாசமானவர் எனக் கருதப்படுபவர்.அயதுல்லா அலி கமேனிஹசன் கோமெய்னி (50): இஸ்லாமியக் குடியரசின் நிறுவனர் அயதுல்லா ருஹோல்லா கமேனியின் பேரன். அவர் புரட்சிகர சிந்தனையாளர். ஆனால் ஒருபோதும் அரசப் பதவியை வகித்ததில்லை. உயர்மட்ட அளவில் செல்வாக்கு குறைந்தவர்.ஈரானின் அடுத்த தலைவர் வெறும் மதத் தலைவராக மட்டும் இல்லாமல், சக்திவாய்ந்த &#039;புரட்சிகரக் காவல்படை&#039;யை (IRGC) அரவணைத்துச் செல்பவராகவும், அமெரிக்காவின் தற்போதைய கடும் அழுத்தத்தைச் சமாளிப்பவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, ஹசன் கொமேனி போன்ற மிதவாதிகள் தலைவரானால் அது ஈரானின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு,  பகையான பின்னணி | Iran vs Israel ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-03-01/ze9xxtp3/iran" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 02 Mar 2026 15:28:46 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, எனக்கு, அடுத்து, ஈரானின், தலைவர்..., அயதுல்லா, கமேனி, யார், யாரைப், பரிந்துரைத்தார்</media:keywords>
    </item>
    <item>
        <title>இரான் மீது எப்போது தாக்குதல்? &amp; ட்ரம்ப் தலை அசைவிற்காக காத்திருக்கும் அமெரிக்கப் படைகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/இரான்-மீது-எப்போது-தாக்குதல்-ட்ரம்ப்-தலை-அசைவிற்காக-காத்திருக்கும்-அமெரிக்கப்-படைகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/இரான்-மீது-எப்போது-தாக்குதல்-ட்ரம்ப்-தலை-அசைவிற்காக-காத்திருக்கும்-அமெரிக்கப்-படைகள்</guid>
        <description><![CDATA[ 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின்... மீண்டுமா? - அமெரிக்கா - இரான் இடையே உருவாகி உள்ள இந்த மோதல்போக்கு இந்தக் கேள்வியை எழுப்புகிறது. இரான் மீது அமெரிக்கா தாக்குதல் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் இரான் மீது கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது. அது இரான் வைத்திருக்கும் அணு ஆயுதத்திற்கு எதிராகத்தான். அப்போது அமெரிக்காவும் அதே காரணத்தைக் கூறி இரான் மீது தாக்குதல் நடத்தியது. &#039;அது வெற்றிகரமான தாக்குதல்&#039; என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பறைசாற்றினார். இரான் உள்நாட்டு போராட்டம்Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா?அதன் பின், அவ்வப்போது ட்ரம்ப் மற்றும் இரானின் உச்சத் தலைவர் இடையே வார்த்தைப்போர் நடந்து வந்தாலும், வேறொன்று பெரிதாக இல்லை. ஆனால், 2025-ம் ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில், இரான் நாட்டிற்குள் உள்நாட்டுப் போராட்டம் தொடங்கியது. இதற்கு பணவீக்கம் மற்றும் ஊழல் அதிகரித்தது காரணம் ஆகும். அமெரிக்கா Vs இரான் இதைச் சொல்லி, &#039;போராட்டக்காரர்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடந்தால், இதுவரை இல்லாத அளவிற்கான தாக்குதலைச் சந்திக்கும் இரான்&#039; என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் ட்ரம்ப். இந்த எச்சரிக்கை வலுப்பதும்... பின் தணிவதுமாக இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்கா, இரானுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.நேற்று முன் தினம்கூட (பிப்ரவரி 17), அமெரிக்கா, இரான் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின், இரான் &#039;சில கொள்கைகளை வகுக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது&#039; என்று கூறியது... ஆனால், அமெரிக்காவோ முரணாக, &#039;இன்னும் நிறைய விஷயங்கள் கலந்தாலோசிக்க உள்ளது&#039; என்று தெரிவித்தது.ட்ரம்ப்சென்னை: எக்மோர் ஸ்டேஷனில் இருந்து ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? - இதுவெல்லாம் மாறுகிறது கவனிங்க!வெளியான தகவல்
இந்த நிலையில் தான் CNN செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த வாரத்தின் இறுதியில் அமெரிக்கா, இரான் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறதாம். ஆனால், இந்தத் தாக்குதலுக்கு ஒப்புதல் தருவதில் பெரும் யோசனையில் இருக்கிறாராம் ட்ரம்ப்.ஏற்கெனவே, இரானை நோக்கி அமெரிக்க கப்பற்படை சென்றுகொண்டிருக்கிறது என்று ட்ரம்ப் கடந்த மாதம் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, ட்ரம்ப் தலையசைத்தால் இரானை அமெரிக்கா தாக்கும். &#039;இப்போதைய சூழலில், ஒரு நாட்டின் மீது தாக்குதல் தேவையா?&#039; என்பதுதான் ட்ரம்பின் யோசனையாக இருக்கிறதா என்று கூறுகிறார்கள்.  வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 &#039;இல்லை&#039; சம்பளதாரர்களே! மாற்று என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-06-24/deer3cum/america-iran" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இரான், மீது, எப்போது, தாக்குதல், ட்ரம்ப், தலை, அசைவிற்காக, காத்திருக்கும், அமெரிக்கப், படைகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>Lost 140,000 Followers: அம்பலமான உண்மை முகம்! &amp; லட்சக்கணக்கான ஃபாலோயர்களை இழந்த சீன இன்ஃப்ளூயன்சர்?</title>
        <link>https://dailytopnewz24.com/lost-140000-followers-அம்பலமான-உண்மை-முகம்-லட்சக்கணக்கான-ஃபாலோயர்களை-இழந்த-சீன-இன்ஃப்ளூயன்சர்</link>
        <guid>https://dailytopnewz24.com/lost-140000-followers-அம்பலமான-உண்மை-முகம்-லட்சக்கணக்கான-ஃபாலோயர்களை-இழந்த-சீன-இன்ஃப்ளூயன்சர்</guid>
        <description><![CDATA[ ஒரு சீன இன்ஃப்ளூயன்சர் தனது ரசிகர்களுடன் நேரலையில் (Livestream) பேசிக்கொண்டிருக்கும் போது, இத்தனை நாளாக அவர் பயன்படுத்திய `பியூட்டி ஃபில்டர்&#039; திடீரென வேலை செய்யாமல் போனது. இதனால் சில வினாடிகளுக்கு அவரது உண்மையான முகம் பார்வையாளர்களுக்குத் தெரிந்தது. அடுத்த சில வினாடிகளில் மீண்டும் ஃபில்டர் வேலை செய்யத் தொடங்கி, அவரது முகத்தை மிகவும் வெள்ளையாகவும், பொம்மை போலவும் மாற்றியது.china influencer இந்த 4 வினாடி வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. ஃபில்டர் இல்லாமல் அவரது உண்மையான முகத்தைப் பார்த்ததால், சில நிமிடங்களிலேயே சுமார் 1,40,000 ஃபாலோயர்கள் அவரைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டார்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.வீடியோ வைரலானாலும், உண்மையிலேயே 1,40,000 ஃபாலோயர்களை இழந்தாரா என்பதற்கோ அல்லது இந்தச் சம்பவம் முழுமையாக உண்மையானது தானா என்பதற்கோ எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இல்லை. மேலும், வீடியோவில் இருக்கும் அந்தப் பெண் யார் என்பதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் `பியூட்டி ஃபில்டர்களின்&#039; அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் எதிர்மறையான தாக்கங்கள் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சிலர் அவர் பொய் முகத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி விட்டதாகக் குற்றம்சாட்டுகின்றனர். இன்னும் சிலர், ஃபில்டர் செய்யப்பட்ட செயற்கையான முகத்தை விட அவரது இயற்கையான முகம் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவர் ஃபில்டர்களைத் தவிர்க்கலாம் என்றும் ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.இதே போன்று 2019-ஆம் ஆண்டில், கியாவோ பிலுவோ (Your Highness Qiao Biluo) என்ற பிரபலமான சீன இன்ஃப்ளூயன்சரின் நேரலையில் ஃபில்டர் கோளாறு ஏற்பட்டபோது, இளம்பெண் போல காட்சியளித்த அவர் உண்மையில் ஒரு 58 வயதுப் பெண்மணி என்ற உண்மை வெளிவந்த சம்பவத்தையும் இது பலருக்கு நினைவூட்டியுள்ளது.Qiao Biluoஇது போன்ற சம்பவங்களில் மக்கள் கோபப்படுவது அந்தப் பெண்ணின் உண்மையான முகத்தைப் பார்த்து அல்ல; இத்தனை நாள்களாகத் தங்களை நம்பவைத்த அந்தப் போலித்தனத்தைப் பார்த்துதான். ஃபில்டர்கள் மூலம் உருவாக்கப்படும் முகம் ஒரு வெறும் மாயை. அந்த மாயையை நிஜம் என நம்பி அன்பைப் பொழிந்தவர்களுக்கு, அது வெறும் தொழில்நுட்பத்தின் மாயம் எனத் தெரியவரும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.உண்மையில், அந்தப் பெண்ணின் உண்மையான முகத்தைப் பார்த்த பல நெட்டிசன்கள், &quot;ஃபில்டரில் தெரிந்த உயிரற்ற வெளிறிய முகத்தை விட, முதிர்ச்சியும் கதகதப்பும் நிறைந்த அவரது இயற்கையான முகம் மிகவும் அழகாக இருக்கிறது&quot; என்றுதான் கருத்துத் தெரிவித்துள்ளனர்.உண்மையான முகமே ஆகச்சிறந்த அழகு!அழகு என்பது கறையற்ற சருமத்திலோ, ஃபில்டர்கள் தரும் செயற்கையான பளபளப்பிலோ இல்லை. அது நம் உணர்வுகளைச் சுமந்து நிற்கும் நிஜ முகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் உள்ள சுருக்கங்களும், நிறமும், அடையாளங்களும் அவர்களது வாழ்க்கைப் பயணத்தின் சாட்சிகள். அதைப் மறைத்து ஒரு பிளாஸ்டிக் பொம்மையைப் போல மாறுவது அழகல்ல.filter ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களிடம் எதிர்பார்ப்பது, தங்களைப் போலவே குறைகள் இருந்தாலும் உண்மையாக இருக்கக்கூடிய ஒரு மனிதரைத்தான். அந்த சீன இன்ஃப்ளூயன்ஸர் எந்த ஃபில்டரின் உதவியும் இல்லாமல், ஆரம்பத்திலிருந்தே தன் உண்மையான முகத்துடனேயே வந்திருந்தால், அவர் இழந்த 1.4 லட்சம் பேரை விடப் பல மடங்கு உண்மையான அன்பான ஃபாலோயர்களைச் சம்பாதித்திருக்க முடியும். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/0ddrv701/20260219035433sdjjfdkjhd.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Lost, 140, 000, Followers:, அம்பலமான, உண்மை, முகம், லட்சக்கணக்கான, ஃபாலோயர்களை, இழந்த, சீன, இன்ஃப்ளூயன்சர்</media:keywords>
    </item>
    <item>
        <title>AI Summit &amp; China Robodog &amp; அம்பலமான Galgotias University மோசடி | Decode</title>
        <link>https://dailytopnewz24.com/ai-summit-china-robodog-அம்பலமான-galgotias-university-மோசடி-decode</link>
        <guid>https://dailytopnewz24.com/ai-summit-china-robodog-அம்பலமான-galgotias-university-மோசடி-decode</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/0xaygjem/WhatsApp-Image-2026-02-18-at-9.43.04-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Summit, China, Robodog, அம்பலமான, Galgotias, University, மோசடி, Decode</media:keywords>
    </item>
    <item>
        <title>Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா&amp; காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/gold-rate-இறங்குமுகத்தில்-தங்கம்-அமெரிக்கா-ரஷ்யா-சீனா-காத்திருக்கும்-3-செக்-இனி-விலை-ஏறுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/gold-rate-இறங்குமுகத்தில்-தங்கம்-அமெரிக்கா-ரஷ்யா-சீனா-காத்திருக்கும்-3-செக்-இனி-விலை-ஏறுமா</guid>
        <description><![CDATA[ 2025-ம் ஆண்டு தாறுமாறாக எகிறிக் கொண்டிருந்த தங்க விலை, கடந்த சில நாள்களாகப் பம்முகிறது. அதுவும் குறிப்பாக, இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து, தங்க விலை சிறிய ஏற்றங்கள், அதன் பின் தொடர் சரிவுகள் என ரிப்பீட் மோடில் இருந்து வருகிறது.ஏன் இந்த இறங்குமுகத்திற்குக் காரணம் என்று பார்த்தால்...
இந்த மாதம் (பிப்ரவரி) தொடங்கியதில் இருந்து உலக அளவில் எந்தப் பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களும் நடக்கவில்லை. தங்கம்வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 &#039;இல்லை&#039; சம்பளதாரர்களே! மாற்று என்ன?உலகளவில் மிக முக்கிய பிரச்னைகளாகப் பேசப்பட்டு வந்த ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கா - ஈரான் பிரச்னை என இரண்டும் இப்போது பேச்சுவார்த்தையில் இருந்து வருகின்றன.அதனால், இன்னும் சரியுமா என்று கேட்டால், அதற்கான பதில் Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் தந்ததுதான். அதாவது, கடும் ஏற்றங்களைச் சந்தித்த தங்கம், இப்போது &#039;கரெக்ஷன்&#039; ஆகி வருகிறது.ஒருவேளை, தங்க விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,400 - 4,500 டாலர்களைத் தொட்டால்தான், அது சரிவைச் சந்திக்கும் என்று கூறியிருந்தார்.ஏறும்... ஆனா ஏறாது&#039;அப்போ... இப்போ சர்வதேச சந்தையில் விலை என்ன?&#039; என்ற உங்கள் மைண்ட் வாய்ஸிற்கான பதில் - சமீப நாள்களாக, தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,900 - 5,000 டாலர்களுக்குள் வர்த்தகம் ஆகி வருகிறது. இந்த ரேஞ்சுக்குள்ளேயே தொடர்ந்து வருகிறது.அதனால், இப்போதைக்குப் பயப்பட வேண்டாம். &#039;தங்கம் விலை இனி ஏறாதா?&#039; என்று கேட்டால், &#039;ஏறும்... ஆனா, ஏறாது&#039; என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்காவெள்ளியில் முதலீடு செய்திருக்கிறீர்களா? - கடும் வீழ்ச்சியை சந்திக்குமா? - இப்போதே Alert ஆகுங்க!காரணம், 2025-ம் ஆண்டு தங்க விலை பெரும் ஏற்றத்தைச் சந்தித்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்தது.அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஜனவரி மாத மீட்டிங் மினிட்ஸ் (மீட்டிங் குறித்த அறிக்கை) நேற்று வெளியானது. அதில் அடுத்து வட்டி விகிதக் குறைப்பு இல்லை என்று தெரிகிறது. இந்தக் காரணத்தினால் தங்கம் விலையில் ஏற்றம் இருக்காது.இன்னொரு பக்கம், மேலே சொன்ன மாதிரி ரஷ்யா - உக்ரைன் போர், அமெரிக்கா - ஈரான் பிரச்னைப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றனதான்.ஆனால்...சமீபத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை நடந்தது. அது குறித்து அப்போது பாசிட்டிவாகச் சொன்னாலும், இப்போது அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.மேலும், நேற்று ஜெனீவாவில் அமெரிக்கா - ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அதில் எதுவும் பாசிட்டிவான முடிவுகள் எட்டப்படவில்லை போலும். இதனால், ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.சீனாரஷ்யா எடுத்த &#039;ஒரு&#039; முடிவு? தங்கம் விலையைக் கடும் வீழ்ச்சியில் தள்ளப் போகிறதா?|Goldஅடுத்ததாக, சீனப் புத்தாண்டால், சீனாவின் சந்தை இப்போது விடுமுறையில் உள்ளது. இந்த விடுமுறை பிப்ரவரி 23 வரை இருக்கும். இது முடிந்து, சீனாவின் நகர்வுகள் என்னவாக இருக்கும்... சீனா, தங்கம் வாங்கிக் குவித்ததால்தான், தங்கம் விலை உயர்ந்தது. விடுமுறை முடிந்து அது என்ன செய்யும் என்பதைப் பார்க்க வேண்டும்.ஆக, தங்க விலைக்கு அடுத்தடுத்து 3 செக்குகள் இருக்கின்றன. இவை அனைத்தும் பாசிட்டிவ் முடிவைக் கண்டால்தான், தங்க விலை ரேஞ்சிற்குள்ளேயே வர்த்தகம் ஆகும். இல்லையேல், மீண்டும் தங்க விலை ஒரு ஏற்றத்தைச் சந்திக்கலாம்.தங்க விலை எப்போதும் சர்வதேச மாற்றங்களைக் கொண்டே மாறும் என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள்.PM RAHAT: &#039;இதற்கு&#039; ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How toData in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parametersAnalyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration) ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-02/qtaj7ehn/Untitled-4.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gold, Rate:, இறங்குமுகத்தில், தங்கம், அமெரிக்கா, ரஷ்யா, சீனா-, காத்திருக்கும், செக், இனி, விலை, ஏறுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>ஏஐ மாநாட்டில் சீன நாய் ரோபோ; வைரலான பேராசிரியர்; மன்னிப்புக் கேட்ட பல்கலைக்கழகம்; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/ஏஐ-மாநாட்டில்-சீன-நாய்-ரோபோ-வைரலான-பேராசிரியர்-மன்னிப்புக்-கேட்ட-பல்கலைக்கழகம்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/ஏஐ-மாநாட்டில்-சீன-நாய்-ரோபோ-வைரலான-பேராசிரியர்-மன்னிப்புக்-கேட்ட-பல்கலைக்கழகம்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கடைகளை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. இதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு கடையைத் திறந்து அதில் தங்களது தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது. இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், &#039;&#039;&#039;ஓரியன்&#039; என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மிகவும் &quot;குறும்புத்தனம்&quot; (naughty) மிக்கது. கண்காணிப்புப் பணிகளைத் திறம்படச் செய்யும்&#039;&#039; என்று விவரித்தார். மேலும், &#039;&#039;செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) 350 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யும் முதல் தனியார் பல்கலைக்கழகம் நாங்கள்தான்&quot; என்று அவர் குறிப்பிட்டார். தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங்ஆனால் அந்த ரோபோ நாயைப் பார்த்த பலரும் இது சீன தயாரிப்பு என்பதைக் கண்டுபிடித்தனர். சமூக வலைத்தளப் பயனர்கள் அந்த ரோபோ நாய், சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்பதைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளப் பயனர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர். சீனாவின் தயாரிப்பான அந்த ரோபோ நாய் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து மாநாட்டு அமைப்பாளர்கள் உடனே சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஸ்டாலை அகற்றும்படி உத்தரவிட்டனர். அதோடு அக்கடைக்கான மின்சார இணைப்பையும் துண்டித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்ட முறையான மன்னிப்பு கடிதத்தில், கண்காட்சி அரங்கில் (pavilion) இருந்த பிரதிநிதிகளில் ஒருவரான பேராசிரியர் நேஹா சிங், அந்தப் பொருளின் தொழில்நுட்பப் பின்னணி குறித்து சரியான தகவல் தெரியாதவர் என்றும், ஊடகங்களிடம் பேச அவருக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.நேஹா சிங்மேலும் கேமரா முன் பேசுவதில் அவருக்கு இருந்த மிகுந்த உற்சாகம் காரணமாகவே அவர் தவறான தகவல்களைத் தந்துவிட்டதாக பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.இதற்குப் பதிலளித்த நேஹா சிங், தன் தரப்பில் தகவல் தொடர்பில் சிறு குறைபாடு இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார்.இருப்பினும், தனது கருத்தில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று விளக்கமளித்துள்ளார். கண்காட்சியில் இடம் பெற்ற சீன நாய் ரூ.2-3 லட்சத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது. இச்சம்பவத்தால் நொய்டா பல்கலைக்கழகத்திற்குத் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.India AI Summit 2026: ஏ.ஐ வந்தால் அரசியல்வாதிகளின் வேலை பறிபோகுமா? - ஒரு ஜாலி ரிப்போர்ட்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-19/mf82iep8/5dc43o2ggalgotias-neha-singh-robot-dog650x40018February26.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஏஐ, மாநாட்டில், சீன, நாய், ரோபோ, வைரலான, பேராசிரியர், மன்னிப்புக், கேட்ட, பல்கலைக்கழகம், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>உக்ரைன் &amp; ரஷ்யா: &amp;quot;20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும்&amp;quot; &amp; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி</title>
        <link>https://dailytopnewz24.com/உக்ரைன்-ரஷ்யா-20-வருடங்கள்-அமெரிக்கா-பாதுகாப்பு-தர-வேண்டும்-உக்ரைன்-அதிபர்-ஜெலன்ஸ்கி</link>
        <guid>https://dailytopnewz24.com/உக்ரைன்-ரஷ்யா-20-வருடங்கள்-அமெரிக்கா-பாதுகாப்பு-தர-வேண்டும்-உக்ரைன்-அதிபர்-ஜெலன்ஸ்கி</guid>
        <description><![CDATA[ ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது. போர்க்களத்தில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் வரும் பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.Munich Security Conference 2026இந்த நிலையில், ஜெர்மனியில் முனிச் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference 2026) நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ``உக்ரைனின் நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டப்பூர்வமாக வலுவான ஒப்பந்தங்கள் அவசியம். அமெரிக்கா தற்போது 15 ஆண்டுகாலப் பாதுகாப்பு ஏற்பாட்டை முன்மொழிந்துள்ள நிலையில், அதனை 20 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்.2027-ம் ஆண்டிற்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உறுதியான தேதியை ஐரோப்பிய நாடுகள் அறிவிக்க வேண்டும். எங்கள் மக்கள் அங்கே வாழ்கிறார்கள். அதேநேரம், அமைதிக்காக டான்பாஸ் (Donbas) பிராந்தியத்திலிருந்து உக்ரைன் பின்வாங்க வேண்டும் என்ற ஆலோசனையை ஏற்க முடியாது. அமைதிக்கான சமரசங்கள் பெரும்பாலும் உக்ரைன் தரப்பிலிருந்தே எதிர்பார்க்கப்படுவது அதிருப்தியளிக்கிறது.ஜெலன்ஸ்கிமேலும், உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களும் கவலையளிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த அழுத்தம் கொடுத்து வருகிறார். எப்போது போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அதிலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே உக்ரைன் தேர்தல்களை நடத்த முடியும்.&quot; எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-15/9iyipcwt/Volodymyr-Zelenskyy" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உக்ரைன், ரஷ்யா:, 20, வருடங்கள், அமெரிக்கா, பாதுகாப்பு, தர, வேண்டும், உக்ரைன், அதிபர், ஜெலன்ஸ்கி</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா: இந்திய மாணவர் கலிபோர்னியாவில் மர்ம மரணம்; தூதரகம் சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-இந்திய-மாணவர்-கலிபோர்னியாவில்-மர்ம-மரணம்-தூதரகம்-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-இந்திய-மாணவர்-கலிபோர்னியாவில்-மர்ம-மரணம்-தூதரகம்-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் பிரிவில் முதுகலைப் படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 9-ம் தேதி முதல் இவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, அவர் தங்கியிருந்த பகுதிக்கு அருகில் உள்ள டில்டன் பிராந்திய பூங்கா (Tilden Regional Park) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே, சாகேத்தின் பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பையை போலீசார் கண்டெடுத்தனர்.Consulate General of India in San Francisco is deeply concerned about the disappearance of Saketh Sreenivasaiah, an Indian post-graduate student of UC Berkeley, hailing from the State of Karnataka. The Consulate is in touch with the family and also is in contact with the…— India in San Francisco (@CGISFO) February 14, 2026


தொடர்ந்து, அன்சா ஏரி மற்றும் பெர்க்லி ஹில்ஸ் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஆறு நாள்களுக்குப் பிறகு சாகேத்தின் உடல் மீட்கப்பட்டதாகச் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி செய்துள்ளது.இதுகுறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சாகேத்தின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து வருகிறது&quot; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பெங்களூருவைச் சேர்ந்த சாகேத், சென்னை ஐஐடி-யில் இளங்கலை முடித்தவர். Microchannel cooling system for hyperloop தொடர்பான காப்புரிமை பெற்ற ஆறு பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையில், வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம், ``இந்தியத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளன. அவர்களின் பாதுகாப்புக்காக அவ்வப்போது வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றன&quot; என்று தெரிவித்துள்ளது.வகுப்பறையில் சக மாணவியை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட மாணவர்; பஞ்சாப்பில் அதிர்ச்சி! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-15/2ckmivkr/vs-40.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா:, இந்திய, மாணவர், கலிபோர்னியாவில், மர்ம, மரணம், தூதரகம், சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ட்ரம்ப் மீது அத்தனை காதல்: மதுரோ டு கிரீன்லேண்ட் &amp; வெள்ளை மாளிகையின் வித்தியாச காதலர் தின போஸ்ட்</title>
        <link>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-மீது-அத்தனை-காதல்-மதுரோ-டு-கிரீன்லேண்ட்-வெள்ளை-மாளிகையின்-வித்தியாச-காதலர்-தின-போஸ்ட்</link>
        <guid>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-மீது-அத்தனை-காதல்-மதுரோ-டு-கிரீன்லேண்ட்-வெள்ளை-மாளிகையின்-வித்தியாச-காதலர்-தின-போஸ்ட்</guid>
        <description><![CDATA[ இன்று பிப்ரவரி 14 - காதலர் தினம். காதலர் தின வாழ்த்தை ஒவ்வொரு விதமாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஸ்டைலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு காதலர் தின வாழ்த்தைக் கூறியுள்ளது, வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் நான்கு போட்டோக்களைப் பகிர்ந்து &#039;உங்களுக்காக&#039; என்று பதிவிட்டுள்ளது. இங்கு &#039;உங்களுக்காக&#039; என்று தெரிவித்திருப்பது ட்ரம்பை தான். வெள்ளை மாளிகை&#039;வரி வேண்டாம்&#039; சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; &#039;பார்த்துக்கொள்கிறேன்&#039; மிரட்டும் ட்ரம்ப் |Explainedமுதல் போட்டோவில், வெனிசுலா அதிபர் மதுரோ கைதுப் போட்டோவைப் பகிர்ந்து, &#039;நீங்கள் எனது இதயத்தைக் கைப்பற்றியிருக்கிறீர்கள்&#039; என்றும்...இரண்டாவது போட்டோவில், ட்ரம்ப் கையெழுத்திட்ட 4547-வது நிர்வாக ஆணையைப் பகிர்ந்து, &#039;நீங்கள் என் காதலர்&#039; என்றும்...மூன்றாவது போட்டோவில், சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய வெளிநாட்டினரை ட்ரம்ப் வெளியேற்றியது குறித்து, &#039;ஜனநாயக கட்சியினருக்கு சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் மீது எத்தனை காதலோ, உங்கள் மீது அத்தனை காதல்&#039; என்றும்...நான்காவது போட்டோவில், கிரீன்லேண்டை இதய வடிவில் உருவகப்படுத்தியும்...- பதிவிட்டிருக்கிறது. இந்தியா மீது திடீர் &#039;ஐஸ்&#039; மழையைப் பொழியும் சீனா! - இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained4547-வது நிர்வாக ஆணை என்பது 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2028-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்காக, அவர்களது எதிர்காலத்திற்கு 1,000 டாலர்கள் வழங்கப்படுகிறது. PM RAHAT: &#039;இதற்கு&#039; ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How toMade just for you  pic.twitter.com/DhSgnGK1M6— The White House (@WhiteHouse) February 14, 2026  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-14/qzuf9hcx/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ட்ரம்ப், மீது, அத்தனை, காதல்:, மதுரோ, டு, கிரீன்லேண்ட், வெள்ளை, மாளிகையின், வித்தியாச, காதலர், தின, போஸ்ட்</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்தியா மீது திடீர் &amp;apos;ஐஸ்&amp;apos; மழையைப் பொழியும் சீனா! &amp; இந்தத் திடீர் பாசம் ஏன்?| Explained</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-மீது-திடீர்-ஐஸ்-மழையைப்-பொழியும்-சீனா-இந்தத்-திடீர்-பாசம்-ஏன்-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-மீது-திடீர்-ஐஸ்-மழையைப்-பொழியும்-சீனா-இந்தத்-திடீர்-பாசம்-ஏன்-explained</guid>
        <description><![CDATA[ இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி... ஆசிய நாடுகளிலேயே யார் டாப் இடத்தைப் பிடிப்பது என்கிற போட்டி பல தசாப்தங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறன. இதன் விளைவு தான் அடிக்கடி இந்தியா, சீனா இடையே நடக்கும் &#039;பங்காளி சண்டைகள்&#039;. 2020-ம் ஆண்டு எல்லைப் பிரச்னைக்கு பிறகு இந்தியா, சீனா உறவில் பெரும் விரிசல் உண்டாகியது. இரு நாடுகளும் நேரடி விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு அந்த விரிசல் இருந்தது. பிரிக்ஸ் &#039;வரி வேண்டாம்&#039; சொந்தக் கட்சியினரே எதிராக வாக்கு; &#039;பார்த்துக்கொள்கிறேன்&#039; மிரட்டும் ட்ரம்ப் |Explainedபிரிக்ஸ்
ஆனால், கடந்த சில மாதங்களாக, இந்த விரிசலின் அளவு குறைந்து, உறவு கூட ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆரம்பம் &#039;பிரிக்ஸ்&#039; அமைப்பிற்குப் பிரச்னை வந்தப் போது தொடங்கியது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய உலகில் உள்ள தென்னாடுகளின் கூட்டமைப்பு &#039;பிரிக்ஸ்&#039;. அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் டார்கெட் செய்தவற்றில் &#039;பிரிக்ஸ்&#039; முக்கியமான ஒன்று. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாணயத்தை உருவாக்க உள்ளது என்று குற்றம் சாட்டினார் ட்ரம்ப். இதனால், பிரிக்ஸ் நாடுகளின் மீது வரி விதிக்க உள்ளதாகவும் அச்சுறுத்தினார். இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகள் தங்களது ஒற்றுமையைக் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதையடுத்து, 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா சென்றார் இந்திய பிரதமர் மோடி. அதன் பிறகு, இரு நாடுகளின் உறவும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்கியதில் இருந்து மெல்ல மெல்ல சுமுக நிலைக்குத் திரும்பி வருகின்றன. ஆனால், திடீரென்று இப்போது இந்தியாவிற்கு ஆதரவாக பேசித் தள்ளுகிறது சீனா.&gt; சீனாவின் நிர்வாக துணை வெளியுறவு அமைச்சர் மா சாவோக்சு. இவர் சமீபத்தில், &#039;இந்தியாவும், சீனாவும் கூட்டாளிகள்... பகையாளிகள் அல்ல&#039; என்று  கருத்து தெரிவித்துள்ளார். &gt; ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இன்னும் உறுப்பு நாடல்ல. ஆனால், சீனா நிரந்தர உறுப்பினர்கடந்த 10-ம் தேதி, &#039;இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர சீட் பெற நினைப்பதை சீனா மதிக்கிறது... புரிந்துகொள்கிறது&#039; என்று கருத்து தெரிவித்துள்ளது சீனா. மா சாவோக்சு - விக்ரம் மிஸ்ரிசந்தையில் தொடக்கத்திலேயே 6% குறைந்த IT பங்குகள் - என்ன காரணம்? இது தொடருமா?&gt; இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குவதை முழுமையாக ஆதரித்துள்ளது சீனா. இவை எல்லாமே &#039;அட&#039; ரகம் தான். &#039;இதெல்லாம் பெரிய விஷயமா?&#039; என்று தோன்றலாம். ஆனால், போட்டி நாடான இந்தியாவிற்கு சீனா இதுபோல ஆதரவாகப் பேசுவது பெரிய விஷயமல்ல... மிகப்பெரிய விஷயம். ஆனால், இவற்றால் இந்தியா உடனே குளிர்ந்து போய்விடக் கூடாது. பின்னணி என்ன?
&#039;இதன் பின்னணி என்ன?&#039; என்பதை நிச்சயம் யோசிக்க வேண்டும். ட்ரம்ப்பின் வரியால் ஏற்கெனவே உலக நாடுகள் திணறிக்கொண்டிருக்கின்றன. இதற்கு சீனா விதிவிலக்கு அல்ல. இன்னொரு பக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தில் சில சீனப் பொருள்களுக்கு அதிக வரி. இது சீனாவிற்கு சற்று சிரமம் தான். அதனால், இந்தியா போன்ற பெரிய சந்தையைப் பிடிக்க நினைக்கிறது சீனா. ஏற்கெனவே இந்திய சந்தையை ஆக்கிரமித்து இருந்தது சீனா. ஆனால், 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, இந்தச் சப்ளை செயின் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதி-இறக்குமதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் &#039;இந்த&#039; அனைத்து இடங்களிலும் பான் கார்டு அவசியம்!இந்தக் காலகட்டம் இந்தியாவிற்கும் மூலப்பொருள்கள் கொள்முதலை சிரமமாக்கியது. அதனால், மீண்டும் இந்திய சந்தையைத் தேடுகிறது சீனா. இந்தியா, அமெரிக்கா இடையே தற்போது ஒப்பந்தம் இறுதியாகி உள்ளது. இது இரு நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தலாம். சீனாவின் போட்டி நாடுகளில் முக்கியமான ஒன்று அமெரிக்கா. இந்தியா - அமெரிக்கா ஒற்றுமை சீனாவிற்கு ஆபத்து தான். ஆக, இந்த ஒற்றுமையைச் சற்று தணிக்கவே சீனாவின் இந்தப் பாசம் என்று எடுத்துக்கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைக்கு முழு ஆதரவை சீனா தெரிவித்திருக்கிறது என்று முன்பு பார்த்தோம். மேற்கத்திய நாடுகளுக்கு டஃப் போட்டி கொடுக்கத் தொடங்கப்பட்டதே பிரிக்ஸ் அமைப்பு. மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சிக்கு இணையாக அல்லது வளர்ச்சியைத் தாண்டி வளர வேண்டும் என்பது தான் இந்தியா, சீனாவின் கொள்கை. இதனால், பிரிக்ஸின் வலிமை தொடர வேண்டும் என்பதும் இந்தியாவிற்கு சீனா கொடுக்கும் ஆதரவிற்கு ஒரு காரணம். ஆக, சீனாவின் ஒவ்வொரு அசைவுகளுக்குப் பின் இருக்கும் காரணத்தையும் நிச்சயம் மறுக்க முடியாது... தவிர்க்க முடியாது. இதனால், சீனாவின் ஆதரவை இரு கரங்கள் விரித்து இந்தியா ஏற்றுக்கொண்டாலும், அதில் நிச்சயம் மிக மிக கவனம் தேவை!Seva Teerth: &#039;குடிமக்கள் இறைவனுக்கு சமம்&#039; - புதிய பிரதமர் அலுவலகத்தில் மோடி போட்ட 4  கையெழுத்துகள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-13/j3kf200k/Modi-Xi-JInping.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, மீது, திடீர், ஐஸ், மழையைப், பொழியும், சீனா, இந்தத், திடீர், பாசம், ஏன், Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா: அதிகாரியால் விபத்தில் கொல்லப்பட்ட இந்திய மாணவி; ரூ. 260 கோடி இழப்பீடு வழங்க முடிவு</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-அதிகாரியால்-விபத்தில்-கொல்லப்பட்ட-இந்திய-மாணவி-ரூ-260-கோடி-இழப்பீடு-வழங்க-முடிவு</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-அதிகாரியால்-விபத்தில்-கொல்லப்பட்ட-இந்திய-மாணவி-ரூ-260-கோடி-இழப்பீடு-வழங்க-முடிவு</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த மாணவி ஜாஹ்னவி கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.23 வயதான ஜாஹ்னவி கண்டுலா, சியாட்டிலில் உள்ள Northeastern University-யில் தகவல் அமைப்பு துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சியாட்டில் நகர சாலையைக் கடக்கும்போது காவல் துறை அதிகாரி கெவின் டேவ் இயக்கிய ரோந்து வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.ஜாஹ்னவி கண்டுலாவிசாரணையில், 25 மைல் வேக வரம்பு கொண்ட பகுதியில் அதிகாரி மணிக்கு 74 மைல் வேகத்தில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. அவர் போதை மருந்துக் கடத்தல் குறித்த அழைப்பு வந்ததை அடுத்து இந்த வேகத்தில் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் சென்றபோது அவசரகால விளக்குகளையும் சைரனையும் பயன்படுத்தியுள்ளார்.உடன் இருந்த மற்றொரு அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா பதிவில், ஜாஹ்னவியின் உயிரை அவமதிக்கும் வகையில் சிரித்துக்கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகியதையடுத்து பல போராட்டங்கள் வெடித்தன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து 2025ல் விபத்தை ஏற்படுத்திய அதிகாரி கெவின் டேவ் பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் குற்றவியல் குற்றச்சாட்டு பதிவு செய்யப் போதிய ஆதாரம் இல்லை என்று கிங் கவுண்டி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், கண்டூலாவின் குடும்பத்திற்கு, சியாட்டில் நகரம் $29 மில்லியன் (சுமார் ₹262 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.ஜாஹ்னவி கண்டுலா“ஜாஹ்னவி கண்டுலாவின் மரணம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. இந்த நிதி தீர்வு அவரது குடும்பத்திற்கு ஓரளவு மனநிறைவைத் தரும் என நம்புகிறோம். அவரது வாழ்க்கை குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் முக்கியமானது,” என்று நகர வழக்கறிஞர் எரிகா எவன்ஸ் தெரிவித்துள்ளார்.2023-ல் நடந்த இந்தச் சம்பவம், 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சட்ட நடவடிக்கை முடிவுக்கு வந்ததையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்த காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.கல்லாதது உலகளவு 1: மத்திய கிழக்கில் போர் மேகங்கள்; அமெரிக்கா மீண்டும் ஈரானை ஏன் தாக்கத் துடிக்கிறது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-12/j5pbt8xj/New-Project-46.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா:, அதிகாரியால், விபத்தில், கொல்லப்பட்ட, இந்திய, மாணவி, ரூ., 260, கோடி, இழப்பீடு, வழங்க, முடிவு</media:keywords>
    </item>
    <item>
        <title>வடகொரியா:  அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!</title>
        <link>https://dailytopnewz24.com/வடகொரியா-அதிகாரத்தின்-அடுத்த-வாரிசு-தலைமைப்-பொறுப்புக்கு-மகளை-முன்னிறுத்தும்-கிம்-ஜாங்-உன்</link>
        <guid>https://dailytopnewz24.com/வடகொரியா-அதிகாரத்தின்-அடுத்த-வாரிசு-தலைமைப்-பொறுப்புக்கு-மகளை-முன்னிறுத்தும்-கிம்-ஜாங்-உன்</guid>
        <description><![CDATA[ வடகொரியாவின் உச்சபட்ச அதிகார மையமாகத் திகழும் கிம் ஜாங் உன், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அந்த நாட்டைத் தனது வலுவான தலைமையின் கீழ் வழிநடத்தி வருகிறார்  . தனது தந்தை கிம் ஜாங் இல்லின் மறைவுக்குப் பிறகு, சுமார் 27 வயதிலேயே பொறுப்பேற்ற அவர், அணு ஆயுத பலம் மற்றும் ராணுவக் கட்டமைப்பில் வடகொரியாவை உலக நாடுகளுக்குச் சவாலாக மாற்றினார்.அவரது உடல்நிலை மற்றும் ஆட்சி நீட்டிப்பு குறித்து அவ்வப்போது உலக அரங்கில் பல்வேறு யூகங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது தனது வாரிசு குறித்த ரகசியத்தை அவர் உடைக்கத் தொடங்கியுள்ளார். தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், தனது இளம் வயது மகளான &#039;கிம் ஜு-ஏ&#039;வை தனது அதிகாரப்பூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தென் கொரிய உளவு அமைப்புகள் அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளன. மிகச் சிறிய வயதிலேயே நாட்டின் முக்கிய நிகழ்வுகளில் அவர் முன்னிலைப்படுத்தப்படுவது, ஒரு புதிய அரசியல் சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே, கிம் ஜாங் உன் தனது மகளை ராணுவ அணிவகுப்புகள், ஏவுகணை சோதனைகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களுக்குத் தொடர்ந்து அழைத்துச் செல்கிறார். ஆரம்பத்தில் ஒரு தந்தையின் பாசமாகப் பார்க்கப்பட்ட இந்த விஷயம், தற்போது வடகொரியாவின் அதிகார மாற்றத்திற்கான அறிகுறியாக மாறியுள்ளது.தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு, வடகொரியாவில் கிம் ஜு-ஏ-வுக்கு அளிக்கப்படும் மரியாதை மற்றும் அவர் பொதுவெளியில் தோன்றும் விதம் ஆகியவை, அவரே அடுத்த தலைவர் என்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அரசு ஊடகங்கள் அவரை &quot;வழிகாட்டும்  நபர்&quot; (Great Person of Guidance) என்று அழைக்கத் தொடங்கியுள்ளன. இது அந்த நாட்டின் உச்சகட்ட தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் மிக உயரிய அடைமொழியாகும். வடகொரிய வரலாற்றிலேயே ஒரு பெண் தலைவராக உருவெடுப்பது என்பது மிகப்பெரிய மாற்றமாகும். இதுவரை கிம் குடும்பத்தின் ஆண்கள் மட்டுமே நாட்டைத் தலைமை தாங்கி வந்துள்ளனர். இந்தச் சூழலில், தனது மகளுக்குச் சிறு வயதிலேயே ராணுவப் பயிற்சி மற்றும் அரசியல் விழிப்புணர்வை கிம் ஜாங் உன் வழங்கி வருவதாகத் தெரிகிறது. இது அந்த நாட்டு மக்களிடையேயும், சர்வதேச அரசியலிலும் ஒருவிதமான ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த அதிகார மாற்றம் அவ்வளவு எளிதாக நடந்துவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங் ஏற்கனவே அந்த நாட்டு அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். இந்நிலையில், மகளை வாரிசாக முன்னிறுத்துவது குடும்பத்திற்குள் அல்லது ராணுவத்திற்குள் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. எது எப்படியோ, வடகொரியாவின் &#039;அடுத்த முகம்&#039; ஒரு இளம்பெண்ணாக இருக்கப்போவது மட்டும் இப்போதைக்கு உறுதியாகத் தெரிகிறது. இந்த நகர்வுகள் அனைத்தும் கிம் ஜாங் உன் தனது குடும்பத்தின் அதிகாரத்தை நான்காவது தலைமுறைக்கும் கொண்டு செல்ல எடுக்கும் மிகத்தெளிவான திட்டமிடலாகவே பார்க்கப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-12/dzw66bc5/WhatsApp-Image-2026-02-12-at-7.45.52-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வடகொரியா:, அதிகாரத்தின், அடுத்த, வாரிசு, தலைமைப், பொறுப்புக்கு, மகளை, முன்னிறுத்தும், கிம், ஜாங், உன்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;எந்த சாதி என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது&amp;quot; &amp; சாதி சர்ச்சை குறித்து பட்டிமன்றம் ராஜா</title>
        <link>https://dailytopnewz24.com/எந்த-சாதி-என்று-யோசிக்கும்-சின்ன-புத்தி-எனக்குக்-கிடையாது-சாதி-சர்ச்சை-குறித்து-பட்டிமன்றம்-ராஜா</link>
        <guid>https://dailytopnewz24.com/எந்த-சாதி-என்று-யோசிக்கும்-சின்ன-புத்தி-எனக்குக்-கிடையாது-சாதி-சர்ச்சை-குறித்து-பட்டிமன்றம்-ராஜா</guid>
        <description><![CDATA[ பட்டிமன்ற மேடைப் பேச்சின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவாக்கியவர் பட்டிமன்றம் ராஜா. பட்டிமன்றத்தைத் தாண்டி சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள சென்றவர், அங்கு தனக்கு உணவு கொடுத்த பெண்ணிடம்  அவருடைய சாதி குறித்து பட்டிமன்றம் ராஜா கேட்டதாக பேஸ்புக் பக்கங்களில் சிலர் பகிர்ந்து வந்தனர். இப்படி பரவி வந்தத் தகவலைத் தொடர்ந்து, காணொளி மூலமாக பேசி அந்தத் தகவலை மறுத்திருக்கிறார் ராஜா. ‘பட்டிமன்றம்’ ராஜாபட்டிமன்ற ராஜா பேசுகையில், “அமெரிக்காவில் அட்லாண்டா மாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக நாங்கள் வந்திருந்தோம். அந்த நிகழ்வுக்கு வந்த பல தமிழ் சொந்தங்கள் தங்கள் இல்லங்களில் இருந்து சாப்பாடு செய்து எங்களுக்குக் கொண்டு வந்தார்கள். சில நேரங்களில் அங்குள்ள உணவு நம் ஊர் உணவுகளைவிட சுவையாக இருக்கும். அங்கு வருகிறவர்கள் தங்கள் ஊர் பெயரையும் சொல்லுவார்கள். அப்போது ஒருவர் என்னிடம் காரைக்குடியிலிருந்து வருவதாகச் சொன்னார். நான் அவரிடம் ‘செட்டிநாடா?’ என்று கேட்டதாகத்தான் நினைவில் இருக்கிறது. நான் அவரிடம் ‘செட்டியாரா?’ என்று கேட்கவில்லை. உணவு சுவையாக இருந்தது என்றுதான் நான் யோசித்தேன். அவர்கள் யார், எந்த சாதியினர் என்று யோசிக்கும் சின்ன புத்தி எனக்குக் கிடையாது.நான் பல ஊர்களுக்குப் பயணித்திருக்கிறேன். எங்கேயாவது சாதிய உணர்வோடு நான் இருந்திருக்கிறேனா? தமிழர் என்ற சாதியைத்தான் நான் பெருமையாகக் கருதுகிறேன். அந்த நிகழ்வு பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் பிப்ரவரி 9-ஆம் தேதிதான் இப்படியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒருவேளை நான் அப்படிக் கேட்டிருந்தால், அவர்கள் அப்போதே என்னிடம் கேட்டிருக்கலாம். எல்லோரும் மகிழ்ச்சியாக, பனிக்குளிருக்கு மத்தியில் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். அங்கு வந்த எங்களுக்கு மக்கள் உணவு கொடுக்கும்போது, அவர்களுடைய முகம் உறவினர்களைவிட நெருக்கமாக எங்களுக்குத் தெரியும். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என தமிழ் சொல் கூறுகிறது. எங்களுக்காகப் பயணித்து உணவு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் சாதி பற்றிக் கேட்பேனா? இது தவறான பதிவு. மிகவும் மனவலியோடு இதைப் பகிர்கிறேன். தமிழ்ச் சொந்தங்கள், இந்தக் கருத்துகளைப் புறந்தள்ளுங்கள்.” என்றிருக்கிறார். ராஜாவுக்கு ஆதரவாக அவருடன் பயணித்த பலரும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். I’ve personally travelled with him for few events and have shared the stage and green rooms with him as well. In all my interactions, he has never asked for anything inappropriate like this or behaved in that manner with any of us. https://t.co/gKp17ccwZy— Ramkumar Comic (@ramkumarcomic) February 11, 2026


 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-11/yg1caa2z/67ec9d9a15117.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எந்த, சாதி, என்று, யோசிக்கும், சின்ன, புத்தி, எனக்குக், கிடையாது, சாதி, சர்ச்சை, குறித்து, பட்டிமன்றம், ராஜா</media:keywords>
    </item>
    <item>
        <title>Naravane: பரபரப்பைக் கிளப்பும் &amp;apos;Four Stars of Destiny&amp;apos;; நாரவனேயின் &amp;apos;ஒற்றை&amp;apos; வாக்கிய பதில் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/naravane-பரபரப்பைக்-கிளப்பும்-four-stars-of-destiny-நாரவனேயின்-ஒற்றை-வாக்கிய-பதில்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/naravane-பரபரப்பைக்-கிளப்பும்-four-stars-of-destiny-நாரவனேயின்-ஒற்றை-வாக்கிய-பதில்-என்ன</guid>
        <description><![CDATA[ இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனேயின் புத்தகம் &#039;ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி&#039;. இந்தப் புத்தகம்தான் கடந்த வாரத்தில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைப் பரபரப்பாக்கி வருகிறது.இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு நடந்த இந்தியா - சீனா தாக்குதலில் இந்திய அரசு ராணுவத்துடன் ஒத்துழைக்காதது குறித்து குறிப்பிட்டிருக்கிறார் நாரவனே.இதை மேற்கோள் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி படிக்க முயன்றபோது, நாடாளுமன்றத்தில் அமளிதுமளியானது.இதையடுத்து இந்தப் புத்தகம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றது.Four Stars of DestinyNaravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ்பென்குயின் நிறுவனத்தின் பதில்
இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அதன் நகல்கள் ஆன்லைனில் சுற்றி வருகின்றன.இது குறித்து இந்தப் புத்தகத்தின் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், &quot;நாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது&quot; என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.நாரவனே &#039;ஒற்றை&#039; பதில்
இந்தப் புத்தகம் பரபரப்பாகப் பேசப்படத் தொடங்கியதில் இருந்து ஜெனரல் நாரவனே எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.ஆனால், நேற்று பென்குயின் நிறுவனத்தின் பதிவை ஷேர் செய்து, &#039;இதுதான் இந்தப் புத்தகத்தின் ஸ்டேட்டஸ்&#039; என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மேல், அந்தப் புத்தகத்தைச் சுற்றி நடக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் அவர் பதிலளிக்கவில்லை.Gold Rate: தங்கம் &#039;இந்த&#039; விலைக்குக் கீழ் இறங்கிவிட்டால்? உஷார் மக்களே! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-11/hyi887jz/Untitled-design-6.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Naravane:, பரபரப்பைக், கிளப்பும், Four, Stars, Destiny, நாரவனேயின், ஒற்றை, வாக்கிய, பதில், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Naravane: ஆன்லைனில் ஷேர் ஆகும் நாரவனே புத்தகம்; FIR பதிவுசெய்த டெல்லி போலீஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/naravane-ஆன்லைனில்-ஷேர்-ஆகும்-நாரவனே-புத்தகம்-fir-பதிவுசெய்த-டெல்லி-போலீஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/naravane-ஆன்லைனில்-ஷேர்-ஆகும்-நாரவனே-புத்தகம்-fir-பதிவுசெய்த-டெல்லி-போலீஸ்</guid>
        <description><![CDATA[ இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நாரவனே. இவர் &#039;ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி&#039; என்னும் புத்தகத்தை எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகி இருந்திருக்க வேண்டியது. ஆனால், மத்திய பாதுகாப்புத் துறை அனுமதியளிக்காததால் இந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. ராகுல் காந்திதங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Goldஇந்தியா - சீனா தாக்குதல்
இந்தப் புத்தகத்தில் 2020-ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே நடந்த தாக்குதல் குறித்து எழுதியிருக்கிறார் நாரவனே. அதில் சீனப் படைகள் இந்தியாவை நோக்கி நகரத் தொடங்கியபோது, அவர் தொடர்ந்து மத்திய அமைச்சர்களுக்கு போன் செய்ததாகவும்... ஆனால், அவர்கள் காலம் தாமதித்து பதில் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.அந்தப் பதிலும், &#039;உங்களுக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ, அதைச் செய்யுங்கள்&#039; என்பதாக இருந்திருக்கிறது.இதைக் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் படிக்க முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. இதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் உள்ளிட்ட பல ஆளும் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகுந்த கவனத்தைப் பெற்றது.&#039;எங்களுக்கு தான் உரிமை!&#039;
இதையடுத்து, இந்தப் புத்தகத்தின் நகல்கள் ஆன்லைனில் கிடைக்கத் தொடங்கியுள்ளன... பெருமளவு ஷேர் ஆகவும் செய்கின்றன. இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையை வைத்திருக்கும் பென்குயின் இந்தியா நிறுவனம், தாங்கள் இந்தப் புத்தகத்தை எந்த வகையிலும் வெளியிடவில்லை என்றும், இந்தப் புத்தகத்தை வெளியிடும் உரிமையும் எங்களிடம்தான் இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளது. இதையொட்டி, வெளியாகாத புத்தகத்தின் நகல் ஆன்லைனில் ஷேர் ஆவதற்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர் டெல்லி போலீஸார். $500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-10/ddii00fr/Untitled-design-5.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Naravane:, ஆன்லைனில், ஷேர், ஆகும், நாரவனே, புத்தகம், FIR, பதிவுசெய்த, டெல்லி, போலீஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>விண்வெளிப் போரில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் சீனா; அசரவைக்கும் புதிய மைக்ரோவேவ் தொழில்நுட்பம்!</title>
        <link>https://dailytopnewz24.com/விண்வெளிப்-போரில்-அமெரிக்காவை-பின்னுக்குத்-தள்ளும்-சீனா-அசரவைக்கும்-புதிய-மைக்ரோவேவ்-தொழில்நுட்பம்</link>
        <guid>https://dailytopnewz24.com/விண்வெளிப்-போரில்-அமெரிக்காவை-பின்னுக்குத்-தள்ளும்-சீனா-அசரவைக்கும்-புதிய-மைக்ரோவேவ்-தொழில்நுட்பம்</guid>
        <description><![CDATA[ விண்வெளிப் பாதுகாப்புத் துறையில் சீனா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. எலான் மஸ்க்கின் &#039;ஸ்டார்லிங்க்&#039;  போன்ற செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யும் வகையில், ஒரு சக்திவாய்ந்த &#039;மைக்ரோவேவ் ஆயுதத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இந்தத் தொழில்நுட்பம் விண்வெளியில் எந்தவிதமான குப்பைகளையும் (Space Debris) உருவாக்காமல், இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அவற்றின் மின்னணு பாகங்களைச் சிதைக்கும் வல்லமை கொண்டது.சீனாவின் வடமேற்கு அணுசக்தி தொழில்நுட்ப நிறுவனத்தைச் (NINT) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகிலேயே மிகச்சிறிய மைக்ரோவேவ் டிரைவர் ஒன்றை உருவாக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.TPG1000Cs என்று அழைக்கப்படும் இந்தச் சாதனம் சுமார் நான்கு மீட்டர் நீளமும், ஐந்து டன் எடையும் கொண்டது. இது நிலத்திலிருந்து 20 ஜிகாவாட்  அளவுள்ள மின் துடிப்புகளை விண்வெளியை நோக்கிப் பாய்ச்சும் திறன் கொண்டது. வழக்கமாக ஒரு செயற்கைக்கோளைச் செயலிழக்கச் செய்ய 1 ஜிகாவாட் சக்தியே போதுமானது எனும் நிலையில், சீனாவின் இந்த ஆயுதம் அதன் தேவையை விடப் பல மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது.இந்த ஆயுதத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இது ஒரு நிமிடம் வரை தொடர்ந்து செயல்படக்கூடியது. இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட பல மைக்ரோவேவ் ஆயுதங்கள் சில நொடிகள் மட்டுமே செயல்படும் திறன் கொண்டிருந்தன.AI - Generated image&#039;மிடல் 7131&#039; (Midel 7131) என்ற சிறப்பு திரவ மின்சுற்றுப் பொருளைப் பயன்படுத்தியதன் மூலம், இந்த ஆயுதத்தின் அளவைக் குறைத்து அதன் சக்தியை அதிகரிக்க முடிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது போர்க்களத்தில் வாகனங்களில் ஏற்றிச் சென்று பயன்படுத்தும் அளவிற்கு எளிய வடிவில் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் தொழில்நுட்பம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உக்ரைன் போரில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் ஆற்றிய முக்கியப் பங்கு, இத்தகைய பெரிய செயற்கைக்கோள் கூட்டமைப்புகளைச் சிதைப்பதற்கான ஆயுதங்களை உருவாக்கச் சீனாவைத் தூண்டியுள்ளது.AI - Generated imageவிண்வெளியில் ஏவுகணைகளை ஏவிச் செயற்கைக்கோள்களைத் தகர்த்தால், அது விண்வெளிக் குப்பைகளை உருவாக்கி மற்ற செயற்கைக்கோள்களையும் பாதிக்கும். ஆனால், இந்த மைக்ரோவேவ் ஆயுதம் எவ்விதக் குப்பையையும் உருவாக்காமல் மின்னணுப் போர் முறையில் இலக்கை மட்டும் அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/2z6zkzji/satilite.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விண்வெளிப், போரில், அமெரிக்காவை, பின்னுக்குத், தள்ளும், சீனா, அசரவைக்கும், புதிய, மைக்ரோவேவ், தொழில்நுட்பம்</media:keywords>
    </item>
    <item>
        <title>பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த சீனர்! &amp; இது நமக்கு சாத்தியமா?</title>
        <link>https://dailytopnewz24.com/பழைய-சிம்-கார்டுகளில்-இருந்து-191-கிராம்-தங்கம்-எடுத்த-சீனர்-இது-நமக்கு-சாத்தியமா</link>
        <guid>https://dailytopnewz24.com/பழைய-சிம்-கார்டுகளில்-இருந்து-191-கிராம்-தங்கம்-எடுத்த-சீனர்-இது-நமக்கு-சாத்தியமா</guid>
        <description><![CDATA[ சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஹுயிஜோ நகரை சேர்ந்தவர் கியாவோ (Qiao). இவர் பயன்படுத்தாத சிம் கார்டுகளில் இருந்து சுமார் 191 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்துள்ளதாக கூறி வெளியிட்ட வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. &#039;உண்மையிலேயே சிம் கார்டில் தங்கம் இருக்கிறதா?&#039; என்கிற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்துள்ளது.தங்கம்தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Goldசிம் கார்டுகள் மற்றும் மின்னணு கழிவுகளில் மிகச் சிறிய அளவில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை தான். இதற்கு காரணம், தங்கம் எளிதில் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டது... இதற்கு அரித்துப்போகும் தன்மையும் கிடையாது.சிம் கார்டுகளில் தங்கம் &#039;பயன்படுத்தப்படுகிறது&#039; என்றாலும், ஒவ்வொரு சிம் கார்டிலும் சராசரியாக 0.02 முதல் 0.05 மில்லிகிராம் (அதாவது 0.00002 முதல் 0.00005 கிராம்) வரை மட்டுமே இருக்கும்.அதனால், 191 கிராம் தங்கம் பெற பல்லாயிரக்கணக்கான சிம் கார்டுகள் தேவை.கியோவோவிற்கு 191 கிராம் தங்கம் என்பது எப்படி சாத்தியமாகியது? 
கியாவோ நீண்ட காலமாகவே பழைய சிம் கார்டுகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனக் கழிவுகளைச் சேமித்து வந்திருக்கிறார். சுமார் 2 டன் (2000 கிலோ) கழிவுகளில் இருந்து தான், 191 கிராம் தங்கத்தைப் பெற்றுள்ளார். இதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. இதற்கு  அரித்தல், வடிகட்டல், சூடாக்குதல் போன்ற பல படிநிலைகளுக்கு பின்பே, இந்தத் தங்கத்தைப் பெற்றுள்ளார். அப்படி அவர் பெற்ற தங்கத்தின் மதிப்பு சுமார் 200,000 யுவான் (இந்திய ரூபாயில் சுமார் 26–28 லட்சம்).தங்கம்$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்இதை அனைவரும் செய்யலாமா? 
இது ஆபத்தான பிராசஸ் என்று கியோவோவே எச்சரித்திருக்கிறார். ஏதேனும் ஒரு பிராசஸ் தவறானாலும், விஷ வாயுக்கள் வெளியேறி உயிருக்கு ஆபத்தாகலாம் என்று எச்சரித்திருக்கிறார்.2020-ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/07wprq7d/Sim-Card.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பழைய, சிம், கார்டுகளில், இருந்து, 191, கிராம், தங்கம், எடுத்த, சீனர், இது, நமக்கு, சாத்தியமா</media:keywords>
    </item>
    <item>
        <title>2020&amp;ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?</title>
        <link>https://dailytopnewz24.com/2020-ல்-இந்தியா-உடனான-தாக்குதலுக்கு-பின்-அணு-ஆயுத-சோதனையை-நடத்தியதா-சீனா</link>
        <guid>https://dailytopnewz24.com/2020-ல்-இந்தியா-உடனான-தாக்குதலுக்கு-பின்-அணு-ஆயுத-சோதனையை-நடத்தியதா-சீனா</guid>
        <description><![CDATA[ ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது.அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.அப்படி என்ன பேசினார்?2020-ம்‌ ஆண்டு இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே (ஜூன் 22), சீனா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது என்கிற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைத் பற்றி தெரிவித்துள்ளார் டினானோ.இந்தச் சோதனை இந்தியாவிற்கு அருகே உள்ள லாப் நூரில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.அணு ஆயுத சோதனைஅமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explainedஇந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா &#039;Decoupling&#039; முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.அதாவது, இந்தச்‌‌ சோதனையால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை அடக்க பெரிய நிலத்தடி குழிகளுக்குள் வெடிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக கூறுகிறது.இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.&#039;இந்த&#039; விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன?சீனாவின் மறுப்பு&quot;அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது.இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது.அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான்‌ முக்கிய குற்றவாளி&quot; என்று அணு ஆயுதக் குறைப்பின் சீனாவின்‌ தூதரான ஷென் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-31/daym7yrp/Gzp20mMbAAAS7dx.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 19 Feb 2026 18:59:47 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>2020-ல், இந்தியா‌, உடனான, தாக்குதலுக்கு, பின், அணு, ஆயுத, சோதனையை, நடத்தியதா, சீனா</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா, ரஷ்யா &amp; கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explained</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-ரஷ்யா-கச்சா-எண்ணெய்-இறக்குமதியில்-இந்தியாவிற்கு-ப்ளஸ்-மைனஸ்-என்ன-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-ரஷ்யா-கச்சா-எண்ணெய்-இறக்குமதியில்-இந்தியாவிற்கு-ப்ளஸ்-மைனஸ்-என்ன-explained</guid>
        <description><![CDATA[ &#039;இந்தியா எங்கிருந்து எண்ணெய் வாங்கப்போகிறது?&#039; - இது இப்போது அமெரிக்கா Vs ரஷ்யாவில் மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்று. ரஷ்யா - உக்ரைன் போரை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று கடுமையாக முயன்று வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அதற்கு ரஷ்ய அதிபர் புதின் இறங்கி வருவதாக இல்லை. இதனால், அவருக்கு நெருக்கடி கொடுத்து வழிக்கு கொண்டுவர நினைக்கிறார் ட்ரம்ப். அதில் ஒன்று தான் - கடந்த ஆகஸ்ட் மாதம், இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குகிறது. அதில் வரும் பணம் ரஷ்யாவின் உக்ரைன் உடனான போருக்கு உதவுகிறது என்று குற்றம்சாட்டி, கூடுதல் 25 சதவிகித வரியை இந்தியா மீது விதித்தது. இதற்கு முன்னே, இந்தியா மீது 25 சதவிகித வரியை அமெரிக்கா விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. புதின் - ட்ரம்ப்&#039;இனி Copper புது Gold-ஆ?&#039; முதலீட்டாளர்களுக்கு ஒரே ஒரு சிக்கல்; அதற்கு தீர்வு என்ன?வரி விதிப்பிற்கு பின், அவ்வப்போது &#039;இந்தியா ரஷ்ய எண்ணெயை இனி வாங்காது என்று கூறிவிட்டது... உறுதியளித்துவிட்டது&#039; என்று பல முறை ட்ரம்ப் கூறிவிட்டார். இந்தத் திங்கட்கிழமை (பிப்ரவரி 2), ட்ரம்ப் இந்தியா மீதிருந்த வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்தார்... இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் குறித்தும் அறிவித்தார். அப்போதும் கூட இதைத் தான் சொன்னார். ஆனால், &#039;அடுத்த நிலைப்பாடு என்ன&#039; என்பது குறித்து இந்தியா இந்த நொடி வரை வாயைத் திறக்கவில்லை. இந்தியா, ரஷ்யா, கச்சா எண்ணெய்
2021-ம் ஆண்டு தரவுகளின் படி, இந்தியா தனது ஒட்டுமொத்த எண்ணெய் இறக்குமதியில் 0.2 சதவிகிதம் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது. ஆனால், இப்போது இந்தியா தனது 88 சதவிகித கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. &#039;ஏன் இந்த அசுர வளர்ச்சி?&#039; என்ற கேள்விக்கு, &#039;ரஷ்யா - உக்ரைன் போர்&#039; தான் காரணம். கச்சா எண்ணெய்Russian Oil: &#039;எங்கள் வணிகம் உலக சந்தைக்கு முக்கியம்&#039; - பாசிட்டிவ் ரஷ்யா; சைலண்ட் மோட் இந்தியா2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போரைத் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மீது வரிகளையும், தடைகளையும் மாறி மாறி விதித்தன. இதனால், ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும் தள்ளாட்டத்தைக் கண்டது. காரணம், ரஷ்யாவின் முக்கிய வருமானங்களில் ஒன்று, &#039;கச்சா எண்ணெய் ஏற்றுமதி&#039;. அதனால், பிற நாடுகளை ரஷ்யா தங்களிடம் இருந்து எண்ணெய் வாங்க வைக்க குறைந்த விலைக்கு விற்றது. இதைப் பயன்படுத்தி இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கின. 2022-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்த தரவுகள்...(*இது ஒரு நாள் கணக்கிற்கானது)2022-ம் ஆண்டின் மத்தியில் இருந்து 10 லட்சம்+ பேரல்கள், 2023 - 20 லட்சம்+ பேரல்கள்,2024 - 17 - 18 லட்சம் பேரல்கள், 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் 17 - 20 லட்சம் பேரல்கள். அதன் பிறகு, இறக்குமதி படிப்படியாகக் குறைந்தது. இடையில் நவம்பர் மாதம் மட்டும் 20 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இது அதிகமாகும். கச்சா எண்ணெய் இறக்குமதிGold: வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வருகிறீர்களா? இனி உங்களுக்கு இந்தச் சலுகை!இதே காலகட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிய தரவுகள்...(*இதுவும் ஒரு நாள் கணக்கிற்கானது)2022-ம் ஆண்டு குறித்த தரவுகள் இல்லை. 2023-ம் ஆண்டு 3 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான பேரல்கள், 2024-ம் ஆண்டு அவ்வப்போது 3 - 4 லட்சம் பேரல்கள், 2025-ம் ஆண்டு 2.80 - 4 லட்சம் பேரல்கள். ஒப்பந்தம் குறித்த அறிவிப்பின் போது, இந்தியா வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார் ட்ரம்ப்.ஆனால், இந்தியா 2022-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை பெரிதாக வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை. அதற்கான தரவுகள் எங்கேயும் இடம்பெறவில்லை. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் என்ன லாபம்?
பல்வேறு ஆய்வுகளின் படி, 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை, இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததில் 17 பில்லியன் டாலர்களைச் சேமித்துள்ளது. ஆனால், இந்தச் சேமிப்பு சாமானியர்களுக்கு உதவவில்லை என்றாலும், இந்திய ஏற்றுமதிகளுக்கு உதவியது. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து இந்திய நிறுவனங்கள் சுத்திகரித்து, அதை ஏற்றுமதி செய்யும். அதற்கு இந்தச் சேமிப்புகள் பெரிய லாபமாக இருக்கும். தூரத்தை வைத்து பார்க்கும்போது, இந்தியாவிற்கு ரஷ்யா மிகப்பெரிய ப்ளஸ். மோடி - புதின்இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: &#039;மகுடத்தில் ரத்தினக் கல்&#039;- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Pointsரஷ்யாவில் இருந்து குறைந்தபட்சம் 24 நாள்களிலும், அதிகபட்சம் 40 நாள்களிலும் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு கொண்டு வந்துவிடலாம். அதனால், போக்குவரத்து செலவுகளும் குறையும். ரஷ்யா நடத்தும் போர், உலக நாடுகள் அதன் மீது விதித்துள்ள வரிகள், தடைகள் போன்றவை அதனுடனான வணிகத்திற்கு பெரும் குறை. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி
அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியா மீது விதித்துள்ள வரி குறைகிறது.மேலும், இந்தியா உடன் அமெரிக்காவிற்கு ஒப்பந்தமும் முடிவாகி உள்ளது. இவை இரண்டுமே இந்தியாவிற்கு மிகப்பெரிய ப்ளஸ். எண்ணெய் இறக்குமதிக்கு பெயர்போன பகுதி மத்திய கிழக்காசிய நாடுகள். அங்கே நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நேரத்தில், இந்தியா போன்ற பெரிய நாடு கச்சா எண்ணெயை அமெரிக்காவில் இருந்து வாங்குவது சந்தையை விரிவுபடுத்துகிறது.அமெரிக்காவின் எண்ணெய் தரமான எண்ணெய். அதனால், அதை இந்திய நிறுவனங்கள் சுத்திகரிப்பது எளிது. இதனால், சுத்திகரிப்பு செலவுகள் பெருமளவில் குறைக்கப்படும்.மைனஸ் பக்கத்தைப் பார்த்தால்...
அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்கும்போது ரஷ்யாவில் இருந்து பேரலுக்கு 10 - 11 டாலர்கள் தள்ளுபடி கிடைத்த சலுகை இங்கே கிடைக்காது. அடுத்த ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-06/t8j7ln9u/EXPLAINED-3.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா, ரஷ்யா, கச்சா, எண்ணெய், இறக்குமதியில், இந்தியாவிற்கு, ப்ளஸ், மைனஸ், என்ன, Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>Epstein Files: &amp;quot;என் படங்களைவிட, என் பெயரில் வரும் செய்திகள்தான் பிரபலம்&amp;quot; &amp; சர்ச்சைக்கு அனுராக் பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/epstein-files-என்-படங்களைவிட-என்-பெயரில்-வரும்-செய்திகள்தான்-பிரபலம்-சர்ச்சைக்கு-அனுராக்-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/epstein-files-என்-படங்களைவிட-என்-பெயரில்-வரும்-செய்திகள்தான்-பிரபலம்-சர்ச்சைக்கு-அனுராக்-பதில்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. உலகின் முக்கிய அரசியல் முகங்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களும் புகைப்படங்களும் அந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் சில முக்கிய நபர்களுடன் உரையாடிய மின்னஞ்சல்களும் வெளிவந்துள்ளன. Epstein Filesஅதில் ஒரு மின்னஞ்சலில் ஒரு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்ற பாலிவுட் இயக்குநர் ஒருவர் வருகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதைச் சுட்டிக்காட்டிப் பலரும் அனுராக் காஷ்யப்பின் பெயரும் இந்தக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.இந்நிலையில், இந்தச் சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு இது தொடர்பாகப் பேசியவர், &quot;இதைப் பற்றி எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. மேடையில் பேசுவதற்கு ஒரு மாதத்திற்குச் சுமார் 15 அழைப்புகள் எனக்கு வரும். நான் அதற்கு அரிதாகவே பதிலளிப்பேன். மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பெய்ஜிங் பகுதிக்கு நான் சென்றதில்லை. இது சில ரேண்டம் மின்னஞ்சல்தான். அந்த மின்னஞ்சலே அதற்கு விளக்கமளிக்கிறது. என் பெயரில் வரும் செய்திகள் என் படங்களைவிட அதிகம் பிரபலமாக இருக்கின்றன&quot; எனக் கூறியுள்ளார்.Anurag Kashyapஇந்த மின்னஞ்சல் உரையாடல்களில் நடிகை நந்திதா தாஸின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நந்திதா தாஸுக்கும் சிறப்பு விருந்தினராக அழைப்பு வந்திருக்கிறது. அப்படித்தான் இவருடைய பெயர் மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.Epstein Files: `மோடி ஆன் போர்டு&#039; முதல் அனில் அம்பானியின் ஆலோசனை வரை; பட்டியலிலுள்ள இந்தியர்கள் யார்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-06/x0ynn9kk/40637959_1915880032040330_343503046129256739_n.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Epstein, Files:, என், படங்களைவிட, என், பெயரில், வரும், செய்திகள்தான், பிரபலம், சர்ச்சைக்கு, அனுராக், பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்திய &amp; அமெரிக்க ஒப்பந்தம்... மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா மத்திய அரசு?</title>
        <link>https://dailytopnewz24.com/இந்திய-அமெரிக்க-ஒப்பந்தம்-மக்களின்-நம்பிக்கையைக்-காப்பாற்றுமா-மத்திய-அரசு</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்திய-அமெரிக்க-ஒப்பந்தம்-மக்களின்-நம்பிக்கையைக்-காப்பாற்றுமா-மத்திய-அரசு</guid>
        <description><![CDATA[ இழுபறியில் இருந்துவந்த இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக வெளியான அறிவிப்பு, பொருளாதார ரீதியாக முக்கியமான நிகழ்வு. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள், கால வரையறை, இந்தியா ஏற்றுக்கொண்ட சமரசங்கள் ஆகியவை குறித்து, இரண்டு நாடுகளின் அரசு தரப்புகளிலிருந்து வெளிப்படையான விளக்கம் இல்லாதது பல கேள்விகளை எழுப்புகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா  நிறுத்தும். 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களை இறக்குமதி செய்யும். அமெரிக்கப் பொருள்களுக்கான வரிகளை பூஜ்ஜியமாக்கும்’ என்று அடுக்கடுக்காகக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கூற்றுகளுக்கு இந்திய அரசு மௌனம் காப்பது, நமக்கு எழும் சந்தேகங்களை மேலும் தீவிரப்படுத்துகிறது.இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு இதுவரை ‘பல்தரப்பு கொள்முதல்’ என்ற கொள்கையின் அடிப்படையில்தான் நடந்துவருகிறது. மலிவான ரஷ்ய எண்ணெய், இந்தியாவின் இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்த உதவியது. அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகுவது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் சுயாதீனக் கோணத்திலும் கேள்விக்குறியாகும். அமெரிக்காவிடமிருந்து மட்டும்தான் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலைக்குச் சென்றால், அதுவே நாளை நமக்குப் பெரும் ஆபத்துகளுக்கு வழிவகுக்கலாம்.அதேபோல், பெரும்பான்மை இந்திய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயம் மற்றும் பால் பொருள்கள் போன்ற துறைகளில் அமெரிக்காவின் பொருள்களுக்குச் சந்தை வாய்ப்புகளை அனுமதிப்பது, இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடும். ‘விவசாயிகளின் நலனில் சமரசமில்லை’ என்ற மோடி அரசின் அறிவிப்பும், நடப்பவையும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.மேலும், இந்தியப் பொருள்களுக்கு அதிக வரிகளை அமெரிக்கா விதிக்கும் சூழலில், அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா பூஜ்ஜிய வரி விதிப்பது, சமநிலை இல்லாத ஒப்பந்தமாக மாற்றும் அபாயமும் உள்ளது.உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியுடன் ஒப்பந்தம் செய்துகொள்வது நம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமானதுதான். ஆனால், எந்த ஓர் ஒப்பந்தமும் இந்தியாவின் நீண்டகாலப் பொருளாதார நலன், மக்களின் நலன், நாட்டின் சுயாதீன நிலை, விவசாயம் போன்ற ஆதாரமான துறைகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது. அரசும் அதிகாரிகளும் இதை மனதில் வைத்து ஒப்பந்தங்களை வகுக்க வேண்டும்.‘அமெரிக்காவிடம் இந்தியா அடிபணிந்து விட்டதா?’ என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது. வர்த்தக ஒப்பந்தம் குறித்த முழு விவரங்களும் அதிகாரபூர்வமாக வெளிவரும்போது, மக்களின் கேள்விக்கான விடை கிடைக்கும்.- ஆசிரியர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-10/icf2hmjm/NVThalaiyangamdesktop.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்திய, அமெரிக்க, ஒப்பந்தம்..., மக்களின், நம்பிக்கையைக், காப்பாற்றுமா, மத்திய, அரசு</media:keywords>
    </item>
    <item>
        <title>India &amp; US Trade Deal: &amp;apos;இது சரணாகதி அல்ல; இதுதான் &amp;apos;Strategic Autonomy&amp;apos;&amp;apos; &amp; எஸ்.ஜி சூர்யா | களம் 02</title>
        <link>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இது-சரணாகதி-அல்ல-இதுதான்-strategic-autonomy-எஸ்ஜி-சூர்யா-களம்-02</link>
        <guid>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இது-சரணாகதி-அல்ல-இதுதான்-strategic-autonomy-எஸ்ஜி-சூர்யா-களம்-02</guid>
        <description><![CDATA[ எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்&#039;.களம் 02Dr. எஸ்.ஜி.சூர்யா, மாநில இளைஞரணி தலைவர், பா.ஜ.க(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) உலக அரசியலில் &#039;டொனால்ட் ட்ரம்ப்&#039; என்ற பெயர் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது. &#039;AMERICA FIRST’ என அவர் கர்ஜிக்க, ஐரோப்பா முதல் சீனா வரை பல வல்லரசு நாடுகள் வர்த்தகப் போருக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த இக்கட்டான சூழலிலும், 140 கோடி இந்தியர்களின் சார்பாகப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மட்டும் ஒரு ராஜதந்திரப் புன்னகையோடு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அரங்கேறிய இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியா மீதான விதிக்கப்பட்ட 50% வரியை 18%-ஆக குறைத்துள்ளது.இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியானதில் இருந்தே, எதிர்க்கட்சிகள் வழக்கம் போல தங்களின் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களை அள்ளி வீசத் தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகள் வழக்கம் போலக் கூப்பாடு போடுகின்றன. ஆனால், அந்தக் கூச்சல்களைத் தாண்டி உண்மையான தரவுகளை அலசினால், அமெரிக்காவுடனான இந்த வர்த்தகப் புரிதல் எப்படி இந்தியப் பொருளாதாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்போகிறது என்பது தெளிவாகப் புரியும்.மோடி - ட்ரம்ப்மாற்றப்பட்ட விதிகளும், கிடைத்த வெற்றியும்டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பே, மெக்சிகோ, கனடா, சீனா மீது வரி விதிப்பேன் என்று மிரட்டினார். ஆனால், இந்தியாவுடன் மட்டும் அவர் கனிவான போக்கை கடைப்பிடிக்கக் காரணம், மோடி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கட்டமைத்த தனிப்பட்ட நட்புறவும், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியும்தான்.அமெரிக்கச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்கு இதுவரை இருந்த 50% வரையிலான வரிகள் (Tariffs), இப்போது 18% ஆகக் குறையவுள்ளன. இது சாதாரண விஷயமல்ல. ஜவுளி (Textiles), தோல் பொருட்கள் (Leather) மற்றும் ஆபரணங்கள் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு (MSME) இது மிகப்பெரிய வரப்பிரசாதம்.ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியா உபரி (Trade Surplus) நிலையில் உள்ளது. அதாவது நாம் இறக்குமதி செய்வதை விட, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதே அதிகம். 2023-24 நிதியாண்டில் மட்டும் அமெரிக்காவுடனான நம் வர்த்தக உபரி சுமார் 35 பில்லியன் டாலர்களுக்கும் மேல். இப்போது வரிகள் குறைக்கப்படுவதால், இந்த உபரி மேலும் அதிகரித்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு (Forex Reserves) பன்மடங்கு உயரும். கையிருப்பு அதிகரித்தால் சாமானியனுக்கு என்ன லாபம்?இது வெறும் வங்கிக் கணக்கு எண்களின் விளையாட்டு அல்ல; நம் நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு அரண். அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதால் ஏற்படும் நேரடி நன்மைகள்:ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகும்: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பைத் திடீர் சரிவிலிருந்து காக்க ரிசர்வ் வங்கியால் (RBI) சந்தையில் தலையிட முடியும். இது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்கும்.பொருளாதாரச் சுதந்திரம்: நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்றவை பெட்ரோல் வாங்கவும், மருந்து வாங்கவும் டாலர் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) மண்டியிட்டு, அவர்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளுக்குத் தலையாட்டின. இந்தியாவுக்கு அந்த நிலை ஒருபோதும் வராது. நம் சொந்தக் காலில் நிற்கவும், யாருடைய நிர்பந்தமும் இன்றித் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் இந்த வலுவான கையிருப்பு அவசியம்.முதலீட்டாளர்களின் நம்பிக்கை: வலுவான கையிருப்பு உள்ள நாட்டில் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் (FDI) நம்பிக்கையோடு நீண்டகால முதலீடுகளைச் செய்யும். இது இந்தியாவில் புதிய தொழிற்சாலைகளையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.எஸ்.ஜி.சூர்யா எரிசக்தி மற்றும் பாதுகாப்பு: Diversification என்னும் கேடயம்இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்முதல் பற்றியது. 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியா வாங்குமா என்ற கேள்வி. இது ஏதோ நாளைக்கே கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது போன்றதல்ல. இதைச் சிலர் &#039;அமெரிக்காவிடம் சரணாகதி&#039; என்கிறார்கள். இது சரணாகதி அல்ல; இதுதான் &#039;Strategic Autonomy&#039; எனப்படும் இந்தியாவின் தன்னாட்சி அதிகாரம்.வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள். நாம் ஏன் பல்முனைச் சார்பு (Diversification) கொள்கையைக் கையில் எடுக்க வேண்டும் என்பதற்கு உக்ரைன்-ரஷ்யா போரே சாட்சி. எண்ணெய்ப் பொருளாதாரம்: போர் தொடங்கியபோது, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என்று நெருக்கடி கொடுத்தன. ஆனால் பிரதமர் மோடி, &#039;என் நாட்டு மக்களின் நலனே முக்கியம்&#039; என்று கூறி, ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை வாங்கினார். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியா பல்லாயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது மட்டுமல்லாமல், உள்நாட்டில் பெட்ரோல் விலை விண்ணைத் தொடாமல் கட்டுப்படுத்தியது. பாதுகாப்புத் துறை: முன்பு நாம் ஆயுதங்களுக்கு ரஷ்யாவை மட்டுமே 70% நம்பியிருந்தோம். ஒருவேளை ரஷ்யாவிடம் உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தால், நம் ராணுவம் முடங்கிவிடும் ஆபத்து இருந்தது. மோடி அரசு வந்த பிறகுதான் பிரான்ஸிடமிருந்து ரஃபேல், அமெரிக்காவிடமிருந்து அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ப்ரிடேட்டர் ட்ரோன்கள் (Predator Drones), ரஷ்யாவிடமிருந்து S-400 என்று நம் தேவைகளைப் பிரித்து வாங்கினோம்.இப்போது அமெரிக்காவிடம் எரிவாயு மற்றும் தொழில்நுட்பம் வாங்குவது, ரஷ்யாவை விட்டு விலகுவத ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-05/wjeahstp/WhatsApp-Image-2026-02-05-at-12.46.19.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>India, Trade, Deal:, இது, சரணாகதி, அல்ல, இதுதான், Strategic, Autonomy, எஸ்.ஜி, சூர்யா, களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Russian Oil: &amp;apos;எங்கள் வணிகம் உலக சந்தைக்கு முக்கியம்&amp;apos; &amp; பாசிட்டிவ் ரஷ்யா; சைலண்ட் மோட் இந்தியா</title>
        <link>https://dailytopnewz24.com/russian-oil-எங்கள்-வணிகம்-உலக-சந்தைக்கு-முக்கியம்-பாசிட்டிவ்-ரஷ்யா-சைலண்ட்-மோட்-இந்தியா</link>
        <guid>https://dailytopnewz24.com/russian-oil-எங்கள்-வணிகம்-உலக-சந்தைக்கு-முக்கியம்-பாசிட்டிவ்-ரஷ்யா-சைலண்ட்-மோட்-இந்தியா</guid>
        <description><![CDATA[ &quot;ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா கூறிவிட்டது. அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்க உறுதியளித்திருக்கிறார் இந்தியப் பிரதமர் மோடி&quot;இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் மற்றும் வரிக் குறைப்பு பற்றி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவு.ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைக்க உள்ளதா என்பது குறித்து இன்னமும் இந்தியா எதுவும் சொல்லவில்லை.ட்ரம்ப் பதிவு வெளியிட்ட அன்றே, &#039;எங்களிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியா எங்களிடம் எதுவும் கூறவில்லை&#039; என்று எதிர்வினையாற்றி இருந்தது ரஷ்யா.டிமிட்ரி பெஸ்கோவ்இன்னும் ஒரே ஒரு மாதம் தான், &#039;வேற லெவல்&#039; ஆகப்போகும் இந்திய ரூபாய் - அமெரிக்க வங்கி தகவல்!அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியா ஒத்துக்கொண்டதாக ட்ரம்ப் கூறியது குறித்து ரஷ்யாவின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேசியபோது,&quot;இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருள்களை ரஷ்யா மட்டும் சப்ளை செய்வதில்லை என்பது எங்களுக்கு நன்கு தெரியும். இந்தியா எப்போதுமே இந்தப் பொருள்களைப் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. அதனால், இது ஒன்றும் புதிதாக எங்களுக்குத் தெரியவில்லை&quot; என்று கூறியுள்ளார். இந்தியா - ரஷ்யா எண்ணெய் வர்த்தகம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா ஜகரோவா பேசியபோது,&quot;ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா வாங்குவது இரு நாடுகளுக்கு உதவுவதாகவும், உலக எரிசக்தி சந்தையின் நிலைத்தன்மைக்கு இது உதவுவதாகவும் இருக்கிறது என்று ரஷ்யா கருதுகிறது.இந்தத் துறையில் இந்தியாவுடன் இணக்கமாக இருப்பதைத் தொடர ரஷ்யா தயாராக இருக்கிறது&quot; என்று தெரிவித்துள்ளார்.இந்த விஷயத்தில், &#039;என்ன நிலைப்பாடு?&#039; என்பதை இனி இந்தியாதான் வாயைத் திறந்து சொல்ல வேண்டும்.Gold: வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வருகிறீர்களா? இனி உங்களுக்கு இந்தச் சலுகை! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-05/kk47dir1/AP25339337632695.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Russian, Oil:, எங்கள், வணிகம், உலக, சந்தைக்கு, முக்கியம், பாசிட்டிவ், ரஷ்யா, சைலண்ட், மோட், இந்தியா</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;6 நாட்களில் என்ன நடந்தது? ஏன் மோடி விரிவாகப் பேச மறுக்கிறார்?&amp;quot;&amp; வர்த்தக ஒப்பந்தம் குறித்து ரகுபதி</title>
        <link>https://dailytopnewz24.com/6-நாட்களில்-என்ன-நடந்தது-ஏன்-மோடி-விரிவாகப்-பேச-மறுக்கிறார்-வர்த்தக-ஒப்பந்தம்-குறித்து-ரகுபதி</link>
        <guid>https://dailytopnewz24.com/6-நாட்களில்-என்ன-நடந்தது-ஏன்-மோடி-விரிவாகப்-பேச-மறுக்கிறார்-வர்த்தக-ஒப்பந்தம்-குறித்து-ரகுபதி</guid>
        <description><![CDATA[ இந்தியா - அமெரிக்கா வரி ஒப்பந்தம் குறித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அதில், &quot; நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது!நாட்டின் காவலாளி (செளகிதார்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி, பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார்!மோடி, டிரம்ப்எப்ஸ்டீன் கோப்புகளில் மோடியின் பெயர்.!ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்புக்கும் வரப் போகும் பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு. உலகில் இரண்டு வெவ்வேறு நாடுகளில் நடக்கும் விவகாரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதுதான் கேயாஸ் தியரியின் தத்துவம்! இந்த கேயாஸ் தியரி, பிரதமர் மோடியின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது. அமெரிக்கப் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ள தகவல் கடந்த 30-ஆம் தேதி வெளியான பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் பிரதமர் மோடியும் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் இந்தியாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.6 நாட்களில் என்ன நடந்தது?இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவிகிதப் பரஸ்பர வரியும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவிகித அபராத வரியும் என்று மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியப் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 6 நாளிலேயே இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சதவிகித வரியை 18 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குறைத்தார். இடைப்பட்ட 6 நாட்களில் என்ன நடந்தது? என்பதை கேயாஸ் தியரி சொல்லும்!’’அமெரிக்கா வரியைக் குறைத்தது போல, இந்தியாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியைப் பூஜ்யமாக்க நடவடிக்கையை முன்னெடுப்பார்கள். பிரதமர் மோடி, அமெரிக்கப் பொருட்களை மிக அதிகமாக 500 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 45.5 லட்சம் கோடி ரூபாய்) எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் பொருட்கள், நிலக்கரி மற்றும் பல பொருட்களைக் கூடுதலாக வாங்கவும் சம்மதித்துள்ளார்’’ எனச் சொல்லியிருக்கிறார் ட்ரம்ப்.டிரம்ப்அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம்இந்த அறிவிப்பு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவிடம் இருந்து விவசாயப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்று டிரம்ப் அறிவித்ததை அடிபணிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அமெரிக்கப் பொருள்களுக்கு இறக்குமதி வரியைப் பூஜ்யமாக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் மோடி.அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ள முடிவு, இந்திய விவசாயிகளுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் வரியை 18 சதவிகிதமாகக் குறைக்க வைத்துவிட்டோம் எனத் தம்பட்டம் அடித்தாலும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கும், சிறு குறு தொழில்துறையினருக்கும் ஏற்படப்போகும் பேராபத்தை 18 சதவிகித வரி குறைப்பைக் காட்டி மறைக்க முயல்கிறது மோடி அரசு. அமெரிக்க ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை... அமெரிக்காவிடம் இருந்து இந்திய மதிப்பில் 45.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் பொருட்களை வாங்கப் பிரதமர் மோடியைச் சம்மதிக்க வைத்துவிட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றிக் களிப்போடு சொல்கிறார். அதாவது, இந்தியாவின் மொத்த பட்ஜெட் மதிப்பில் இது 85 சதவிகிதம். 45.5 லட்சம் கோடி ரூபாய் என்கிற யானை, இந்தியாவின் உள்ளூர் வர்த்தகம் என்கிற கரும்புக் காட்டிற்குள் நுழைந்து துவம்சம் செய்யப் போகிறது. நாட்டின் காவலாளி (செளகிதார்) எனச் சொல்லிக் கொள்ளும் மோடி, பொருளாதார சூறையாடலை அமெரிக்க நடத்த இந்தியாவின் வாசலை திறந்துவிட்டிருக்கிறார்.18 சதவிகித வரியை அமெரிக்க ஒன்றும் சும்மா கொடுத்துவிடவில்லை. சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ரஷியாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்த சொல்லி, இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 18 சதவீத வரியை விதித்துவிட்டு, இந்தியாவில் விற்கப்படும் அமெரிக்கப் பொருட்களுக்குப் பூஜ்ய வரி என்று சொல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நீ அரிசி கொண்டுவா! நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டையும் கலந்து ஊதி ஊதிச் சாப்பிடுவோம் என்பதைப் போல, அமெரிக்கா உமியைக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வளத்தை ஊதி ஊதிச் சாப்பிடப் போகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் அடிபணிந்து கிடக்கிறார் பிரதமர் மோடி. நம்மை கட்டுப்படுத்த அமெரிக்கா மாகாணங்களில் இந்தியாவும் ஒன்றா? இந்தியாவை, அமெரிக்காவிடம் மோடி அடகு வைத்துவிட்டாரா? போரே நடக்காமல், ஏவுகணைகள் ஏவாமல் இந்தியா மீது ஒரு பொருளாதாரப் போரை நடத்தியிருக்கிறது அமெரிக்கா. அதற்குத் துணை போயிருக்கிறார் பிரதமர் மோடி.அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவின் எதிர்காலத்திற்குச் சிறந்தது என எப்படிக் கொண்டாட முடியும்? 45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியாவிற்குள் அனுமதிக்கும் அளவிற்கு இந்தியச் சந்தையைக் கட்டுப்பாடின்றித் திறந்து வைத்தால், இந்திய விவசாயிகள், வியாபாரிகள், சிறுகுறு தொழில்துறையினரின் வாழ்வாதாரம் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும்.எழும் சந்தேகம்! இந்தியாவின் மிகப்பெரிய சந்தையும், மக்கள் தொகையும் தங்கள் நாட்டின் வேளாண் பொருட்களை அதிக அளவிற்கு விற்பதற்கு உதவும். இதனால் கிராமப்புற அமெரிக்காவின் பொருளாதாரம் செழிக்கும் என்று அமெரிக்காவின் வேளாண்துறை அமைச்சர் ப்ரூக் ரோலின்ஸ் கூறியிருக்கிறார். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்துறையை அமெரிக்காவிற்கு அடகு வைக்கும் முயற்சியா இந்த வர்த்தக ஒப்பந்தம் என்கிற சந்தேகம் எழுகிறது.அமெரிக்காவில் இருந்து குறைந்த விலையில் சோயாபீன், சோளம், பருத்தி மற்றும் கோதுமை போன்றவை இறக்குமதியானால், இந்திய விவசாயிகளின் விளைபொருட்களுக்கான விலை உள்நாட்டுச் சந்தையில் பெருமளவில் குறையக்கூடும். பாதாம், ஆப்பிள் போன்ற பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதால் வியாபாரப் போட்டி அத ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-29/hqnx4r8o/raguapthi-2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நாட்களில், என்ன, நடந்தது, ஏன், மோடி, விரிவாகப், பேச, மறுக்கிறார்-, வர்த்தக, ஒப்பந்தம், குறித்து, ரகுபதி</media:keywords>
    </item>
    <item>
        <title>`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!&amp;apos; &amp; எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/இதற்கு-பில்-கேட்ஸ்-பதிலளிக்க-வேண்டும்-எப்ஸ்டீன்-ஃபைல்ஸ்-குறித்து-முன்னாள்-மனைவி-மெலிண்டா-கேட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/இதற்கு-பில்-கேட்ஸ்-பதிலளிக்க-வேண்டும்-எப்ஸ்டீன்-ஃபைல்ஸ்-குறித்து-முன்னாள்-மனைவி-மெலிண்டா-கேட்ஸ்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. எப்ஸ்டீன் - ட்ரம்ப்இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பேசுபொருளாகி இருக்கின்றன.இந்நிலையில் பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரம் குறித்து NPR என்ற ஊடகத்திற்கு பேட்டி ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.அதில், &quot;எப்ஸ்டீன் ஃபைல்ஸில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எனக்கு நம்பமுடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மெலிண்டா கேட்ஸ்இதில் தொடர்புடைய பில் கேட்ஸ் உட்பட அனைவரும் இது குறித்து எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். எந்த சிறுமிக்கும் ஏற்படவே கூடாத ஓர் அவல நிலை, எஃப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஏற்பட்டிருக்கிறது. என் மகள் வயதில் இருக்கும் அச்சிறுமிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கிப் போனது&quot; என்று தெரிவித்திருக்கிறார். &quot;மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!&quot;-  ராகுல் காந்தி விமர்சனம்  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-04/mgjwj9xj/260203-melinda-french-gates-mn-1155-6998ed.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இதற்கு, பில், கேட்ஸ், பதிலளிக்க, வேண்டும், எப்ஸ்டீன், ஃபைல்ஸ், குறித்து, முன்னாள், மனைவி, மெலிண்டா, கேட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>India &amp; US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை&amp;apos; | இனியன் ராபர்ட் | களம் 01</title>
        <link>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இந்தியா-அமெரிக்காவின்-பக்கம்-சாயும்-நிலை-இனியன்-ராபர்ட்-களம்-01</link>
        <guid>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இந்தியா-அமெரிக்காவின்-பக்கம்-சாயும்-நிலை-இனியன்-ராபர்ட்-களம்-01</guid>
        <description><![CDATA[ எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்&#039;. செய்தித்தொடர்பாளர், காங்கிரஸ்களம் 01: இனியன் ராபர்ட்(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)இந்தியா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருப்பது பல அடுக்குகளில் கவலையை ஏற்படுத்துகிறது. இந்திய அரசே இதை மக்களிடமும் நாடாளுமன்றத்திலும் தெளிவாக விளக்காமல், இன்னொரு நாட்டின் தலைவர் அறிவிப்பது இந்திய ஜனநாயக மரபுகளுக்கு முரணானதாகும். இது ஒரு வர்த்தக உடன்பாடு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தையும் வெளிநாட்டு கொள்கை திசையையும் தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்பட வேண்டும். ட்ரம்ப்இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வரலாற்றில், “அணிசேரா கொள்கை” (Non-Alignment Policy) மிக முக்கியமான இடத்தை பெற்றது. இந்த கொள்கை சுதந்திரத்துக்குப் பிறகு ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசின் காலத்திலிருந்து இந்தியாவின் அடிப்படை வெளிநாட்டு கொள்கையாக பின்பற்றப்பட்டது. எந்த ஒரு பெரிய சக்தி கூட்டணியுடனும் இணங்காமல், உலக நாடுகளுடன் சமநிலையுடன் உறவு பேணுவதன் மூலம் இந்தியா தனது இறையாண்மையையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடையாளத்தையும் உறுதியாக நிலைநிறுத்தியது. இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் போன்ற சக்திகளின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் கூட இந்தியா தனது சொந்த பாதையை தேர்வு செய்யும் வலிமையை பெற்றது. அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலைஆனால் இன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அணிசேரா கொள்கை  மெதுவாக கைவிடப்பட்டு, அமெரிக்காவின் பக்கம் அதிகமாக சாயும் நிலை உருவாகி வருகிறது. இந்த சாய்வு இந்தியாவின் நீண்டகால நலனுக்கும் இறையாண்மைக்கும் உகந்ததா என்பது தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசியல் அணுகுமுறை உலகத்திற்கே தெரிந்த ஒன்று. அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் கூட்டணிகளுக்கு கூட முழு நம்பிக்கை காட்டாதவர்.மோடி நேட்டோ போன்ற பாதுகாப்பு கூட்டமைப்புகளை விமர்சித்ததும், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் இருந்து விலகியதும் அவரது தீவிர வலதுசாரி தேசியவாத அரசியலின் வெளிப்பாடுகளாகும். பொருளாதாரத்தில் “முதலில் அமெரிக்கா” என்ற கொள்கையை முன்வைத்து, மற்ற நாடுகளின் சந்தைகளை தங்களுக்காக திறக்க வைக்கும் அணுகுமுறையே அவரது அரசியல் நடைமுறையாக இருந்தது. இத்தகைய தலைமை இந்திய தொழில்களையும் விவசாயத்தையும் வளர்க்கும் என்ற நம்பிக்கை உறுதியற்றதாகவே தெரிகிறது. இன்றைய உலகத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகம் பல இடங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. வெனிசுவேலாவில் அரசியல் தலையீடுகள், ஈரான்மீது கடுமையான பொருளாதார தடைகள், கிரீன்லாண்ட் குறித்து கூட அமெரிக்காவின் விரிவாக்க கனவுகள், இவை அனைத்தும் அமெரிக்காவின் புதிய காலனிய மனப்பான்மையின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகின்றன. இத்தகைய சக்தியுடன் மிக நெருக்கமாக இணைவது இந்தியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மரபுகளை மறைமுகமாக ஒப்புக்கொள்வதற்கு சமமானதாகும்.இனியன் ராபர்ட்ரஷ்யாவின் பங்களிப்பு..!இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைக்க அல்லது நிறுத்த சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்திய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய முடிவாகும். பல தசாப்தங்களாக ரஷ்யா இந்தியாவின் நம்பகமான நண்பனாக இருந்து வந்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் ரஷ்யாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறைந்த விலையில் கிடைத்த ஆற்றல் வளங்கள் இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு வகித்தன. ‘மேக் இன் இந்தியா’ - அரசியல் விளம்பரமாக மாறும்!இப்போது அந்த உறவை புறக்கணித்து அதிக விலையில் அமெரிக்க ஆற்றல் வளங்களை சார்ந்துகொள்வது, நேரடியாக இந்திய மக்களின் வாழ்க்கைச் செலவை உயர்த்தும். எரிபொருள் விலை உயர்வு என்பது போக்குவரத்து செலவுகள் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கடுமையாக பாதிக்கும்.அதே நேரத்தில், அமெரிக்கப் பொருட்களுக்கு சுங்க வரிகள் பெருமளவு குறைக்கப்படுகின்றன என்ற தகவல்கள் இந்திய விவசாயிகளுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. அமெரிக்காவின் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டி போடுவது இந்திய உற்பத்தியாளர்களால் சாத்தியமல்ல. இது இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்குத் திறந்துவிடும் அபாயத்தை உருவாக்குகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கம் இதனால் வெறும் அரசியல் விளம்பரமாக மாறும் நிலை உருவாகலாம்.மோடி, ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் சில NRI ஆர்எஸ்எஸ் காரர்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. அமெரிக்காவில் வாழும் சில குழுக்கள் தங்களது சொந்த பொருளாதார நலன்களுக்காக இந்திய அரசின் முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது இந்திய மக்களின் நலனை மையமாகக் கொண்ட ஒப்பந்தமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் லாப நோக்கத்தில் உருவான முடிவாக மாறியுள்ளதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.இந்தியாவின் பொருளாதார மற்றும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள் அனைத்தும் தேசிய நலனையும் இறையாண்மையையும் மையமாக வைத்தே எடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு உலக சக்தியின் அழுத்தத்திற்கும் தலைவணங்குவது இந்தியாவின் மரபல்ல. அணிசேரா கொள்கை இந்தியாவை உலக அரங்கில் மரியாதைக்குரிய நாடாக மாற்றியது.US India Trade deal: PM Modi-க்கு அழுத்தம் கொடுத்தாரா Trump | Decode முடிவாக, இந்தியா–அமெரிக ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-04/hgt0aptv/WhatsApp-Image-2026-02-04-at-16.24.39.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>India, Trade, Deal:, இந்தியா, அமெரிக்காவின், பக்கம், சாயும், நிலை, இனியன், ராபர்ட், களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?</title>
        <link>https://dailytopnewz24.com/gold-ட்ரம்ப்-அசைவில்-ஏற்ற-இறக்கங்களைச்-சந்திக்கும்-தங்க-விலை-அதற்கு-அப்படி-என்னதான்-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/gold-ட்ரம்ப்-அசைவில்-ஏற்ற-இறக்கங்களைச்-சந்திக்கும்-தங்க-விலை-அதற்கு-அப்படி-என்னதான்-காரணம்</guid>
        <description><![CDATA[ கடந்த சில மாதங்களாகவே, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் தங்கம் விலை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. அவர் சீனாவைச் சீண்டும் போதெல்லாம் தங்கம் விலை தாறுமாறாக எகிறியது. வெனிசுலா அதிபர் மதுரோவை அவரது கோட்டைக்கே சென்று அமெரிக்கா கைது செய்தபோதும்... கிரீன்லேண்டிற்கு ட்ரம்ப் குறி வைத்தபோதும் தங்கம் விலை உச்சத்தை அல்ல... நிறைய உச்சங்களைச் சந்தித்தது. சமீப மாதங்களில், தங்கம் விலை உச்சத்தைத் தொட்ட போதெல்லாம், வழக்கத்திற்கு மாறாக, நம் வீட்டுப் புலம்பல்களில் &#039;ட்ரம்ப்&#039; பெயரும் சேர்த்து ஒலித்தது. அமெரிக்க டாலர்&#039;ஆகஸ்ட்&#039; மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detailஅப்படி ட்ரம்பிற்கும், தங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி எல்லாருக்குள்ளும் உள்ளது. அதற்கான பதில்தான் இது...&quot;வர்த்தகத்திற்கு உலக அளவில் அமெரிக்க டாலர்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.பொதுவாகவே ஒவ்வொரு நாட்டின் நாணயங்களின் மதிப்பும் அந்த நாட்டின் பணவீக்கம், மத்திய வங்கி, பொருளாதாரம், வர்த்தகத்தைப் பொறுத்து அமையும்.இதற்கு அமெரிக்க டாலர்களும் விதிவிலக்கு அல்ல.அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித மாற்றம் என்ன செய்தது?
2025-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மூன்று முறை வட்டி விகிதத்தைக் குறைத்தது. இதற்கு அங்குள்ள பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மையும் முக்கிய காரணம். வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது, மக்கள் கடன் வாங்கி செலவு செய்வார்கள். நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதனால், பணவீக்கமும் குறையும். இன்னொரு பக்கம், கடன் வாங்கி புதிய பிசினஸ் தொடங்குவார்கள் அல்லது இருக்கும் பிசினஸை விரிவுபடுத்துவார்கள். இதனால், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஆகும். வட்டி குறைப்பு - அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கிஇந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு?ஆனால், பணப்புழக்கம் அதிகரிக்கும்போது, டாலருக்கான மவுசு குறையும். காரணம், சப்ளை அதிகரிக்கும்போது, டிமாண்ட் தானாகக் குறையும்தானே. இதனால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் குறையும்போதெல்லாம், அமெரிக்க டாலரின் மதிப்பு தள்ளாடியது. ட்ரம்பின் பரஸ்பர வரி
கடந்த ஏப்ரல் மாதம், பெரும்பாலான நாடுகளின் மீது பரஸ்பர வரியைப் போட்டுத் தள்ளினார் ட்ரம்ப். இதனால், உலக அளவில் நிலையற்ற தன்மை உருவாகியது.உலக நாடுகள் பிற சந்தைகளை நோக்கி, தங்களது வர்த்தகத்தை விரிவாக்கத் தொடங்கின.இதுவும் அமெரிக்க டாலரின் மதிப்பை ஆட்டம் காணச் செய்தது.முன்னர் சொன்னதுதான், உலக நாடுகள் வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தி வருகின்றன.அமெரிக்க டாலர் மதிப்பு குறையும்போது, அதை யாரும் வைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் தானே.ட்ரம்ப் அடிக்கடி... புதுப்புது... அதிர்ச்சிகர அறிவிப்புகளை வெளியிடுகிறார். இது அமெரிக்கச் சந்தையைப் பாதிக்கிறது... உலக அளவில் நிலையற்ற தன்மையை உருவாக்குகிறது... கூடவே, அமெரிக்க டாலரின் மதிப்பையும் குறைக்கிறது.இதனால், ஒரு பாதுகாப்பான முதலீடு முக்கியம் என்று உலக நாடுகள் தங்கத்தின் பக்கம் திரும்பின.ட்ரம்ப்Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? - பட்ஜெட் அறிவிப்பு படி, யாருக்கு வரி? யாருக்கு வரி இல்லை?உலக அளவில் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தன. டாலரின் மதிப்பும் சரியாக இல்லை. இதனால், முதலீட்டாளர்களும் தங்கத்தின் பக்கம் தங்களது முதலீடுகளைத் திருப்பினர்.ஆக, அனைவருமே தங்கத்தின் பக்கம் திரும்பும்போது, தங்க விலை ஏறியது.உலகத்தில் இருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேலான தங்கம் தோண்டி எடுக்கப்பட்டு விட்டது என்று தரவுகள் கூறுகின்றன. டிமான்ட் அதிகமாகிக் கொண்டே போகின்றன. ஆனால், சப்ளை குறைவாகத்தான் இருக்கிறது. இதுவும் தங்கத்தின் விலையை ஏற்றியது.&#039;பெரிய அண்ணன்&#039; அமெரிக்கா
அமெரிக்கா உலக நாடுகளின் &#039;பெரிய அண்ணன்&#039; என்று கூறப்படுகிறது. பெரிய அண்ணன் புதுப்புது அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது.... அவை உலக அளவில் நிலையற்ற தன்மை உருவாக்கியது.பெரிய அண்ணனின் நாணயம் தள்ளாடியது என்பதுதான் ஒட்டுமொத்த தங்க விலை ஏற்றத்திற்குப் பின்னணி.ஆக, &#039;ட்ரம்ப்&#039; என்ற நபரால் தங்க விலை உயரவில்லை. அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு பெரிய அண்ணன் என்பதால் தங்க விலை ஏறியது.அமெரிக்காவில் நிலையற்ற தன்மை ஏற்படும்போதுதான், தங்க விலை உயருமா என்று கேட்டால், &#039;இல்லை&#039; என்பதுதான் பதில்.தங்கம் விலை உயர்வுBudget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் - தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?சமீப உதாரணம்... 2023-ம் ஆண்டை எடுத்துக்கொள்வோம். அந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை தங்கம் விலை ஏறுமுகத்தில் இருந்தது.ஆனால், ஜூலைக்குப் பின், இறங்குமுகத்தில் சென்றது. அந்த அக்டோபர் 7-ம் தேதிதான், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தொடங்கியது. அதன் பின், தங்கம் விலை ஏறத்தொடங்கியது.எந்த நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட்டாலும்... எந்த நாடு உலக அளவில் நிலையற்றத் தன்மையை ஏற்படுத்தினாலும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை நோக்கிச் செல்வார்கள்.முதலீடுகள் ஒருபக்கத்தை நோக்கிச் செல்லும்போது, அது ஏறுமுகத்தைக் காணும்.இதுதான் தங்கம் விலை ஏற்றத்திற்கான காரணம்.Budget 2026: இனி &#039;இதற்கு&#039; வரி இல்லை, குறையும் TCS, புதிய சட்டம் அமல்; வரி அறிவிப்புகள் என்னென்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-03/vvzadv5w/Untitled-design-3.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gold:, ட்ரம்ப், அசைவில், ஏற்ற, இறக்கங்களைச், சந்திக்கும், தங்க, விலை, அதற்கு, அப்படி, என்னதான், காரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்தியா &amp; அமெரிக்கா ஒப்பந்தம்: &amp;apos;மகுடத்தில் ரத்தினக் கல்&amp;apos;&amp; பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-அமெரிக்கா-ஒப்பந்தம்-மகுடத்தில்-ரத்தினக்-கல்-பியூஷ்-கோயல்-என்ன-சொல்கிறார்-quick-points</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-அமெரிக்கா-ஒப்பந்தம்-மகுடத்தில்-ரத்தினக்-கல்-பியூஷ்-கோயல்-என்ன-சொல்கிறார்-quick-points</guid>
        <description><![CDATA[ இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்திய நேரப்படி, நேற்று இரவு, இந்திய பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அந்தப் போன்காலுக்கு பின், மேலே சொன்ன &#039;ஹேப்பி நியூஸை&#039; தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தனர் இருவரும். இந்த ஹேப்பி நியூஸிற்கு பின்னால் இருக்கும் ஒப்பந்தம் குறித்து இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலின் முக்கிய பாயின்ட்கள் இதோ...மோடி, ட்ரம்ப்&#039;ஆகஸ்ட்&#039; மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail&gt; இந்தியாவின் மகுடத்தில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒரு ரத்தினம். இது மோடியின் ஆட்சிக் காலத்தை உரக்க சொல்லும். &gt; இந்த ஒப்பந்தம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 140 கோடி இந்தியர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கும். &gt; போட்டியாளர்களுக்கு மத்தியில், இந்தியாவே அமெரிக்காவிடம் இருந்து சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. &gt; அமெரிக்க அதிகாரிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை பல மாதங்களாக சென்று கொண்டிருந்தது. பல பிரச்னைகள், தடைகளைத் தாண்டித் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். &gt; மோடி எப்போதுமே இந்திய விவசாயிகள், கால்நடை வைத்திருப்பவர்கள், பால் பொருள் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பார். ஆக, இந்த ஒப்பந்தத்திலுமே விவசாயம் மற்றும் பால்பொருள் துறையை மோடி பாதுகாத்திருக்கிறார். &gt; சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, இன்ஜினீயரிங் பொருள் துறை, ஜவுளித்துறை, தோல் துறை, நகைகள் ஆகியவற்றிற்கு இந்த ஒப்பந்தத்தில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. &gt; இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹை-டெக் துறையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உதவும். &gt; இந்த ஒப்பந்தம் இரு பொருளாதாரங்களையும் வலுப்படுத்தும். &gt; இந்த ஒப்பந்தம் குறித்த முழு தகவல்களையும் இரு நாடுகளும் விரைவில் தெரிவிக்கும். இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-03/i2d3slp8/Piyush-Goyal.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, அமெரிக்கா, ஒப்பந்தம்:, மகுடத்தில், ரத்தினக், கல்-, பியூஷ், கோயல், என்ன, சொல்கிறார், Quick, Points</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;இந்தியா ஒரு காலனி அல்ல&amp;apos;&amp;  அமெரிக்காவுடனான வரி ஒப்பந்தம் குறித்து ஜோதிமணி விமர்சனம்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-ஒரு-காலனி-அல்ல-அமெரிக்காவுடனான-வரி-ஒப்பந்தம்-குறித்து-ஜோதிமணி-விமர்சனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-ஒரு-காலனி-அல்ல-அமெரிக்காவுடனான-வரி-ஒப்பந்தம்-குறித்து-ஜோதிமணி-விமர்சனம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும், இந்தியாவும் ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அதன்படி இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% இருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதேபோல அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு பூஜ்ஜிய வரி என அறிவித்திருக்கும் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். மோடி, ட்ரம்ப்இந்த விவகாரம் உலக அளவில் பேசுப்பொருளான நிலையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்த்து வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், &quot;இந்தியா ஒரு காலனி அல்ல. ட்ரம்ப் அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்துள்ளார்.இந்த ஒப்பந்தத்திற்கு முன்:  *அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதித்த வரி: 15–70%* இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த வரி: 2–3%இந்த“ஒப்பந்தத்துக்குப்” பிறகு* அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் வரி: பூஜ்ஜியம்* இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி: 18%* இது பேச்சுவார்த்தை அல்ல.* இது முழுமையான சரணடைதல்.அமெரிக்கா இப்போது புதிய கிழக்கு இந்தியா கம்பெனியாக இந்தியாவில் நுழைய மோடி அரசு  சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. இந்தியாவின் செல்வத்தையும் எதிர்காலத்தையும் அமெரிக்காவின் காலடியில் ஒப்படைத்துள்ளது.இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்!இந்திய சந்தைகள் அமெரிக்க விவசாயப் பொருட்கள் ,எரிசக்தி, நிலக்கரி ஆகியவற்றுக்கு அகலமாகத் திறக்கப்பட்டுள்ளன.ஆனால் இந்திய விவசாயிகள், சிறு ,குறு,நடுத்தர தொழில்கள், இந்திய தற்சார்பு உற்பத்தி ( Make in India ) அனைத்தும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.அமெரிக்க வேளாண் அமைச்சர் கூட, இந்தியாவை அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு ஒரு மாபெரும் புதிய சந்தை என வெளிப்படையாகக் கொண்டாடுகிறார்.இது ஒவ்வொரு இந்திய விவசாயியையும் அச்சுறுத்தக் கூடிய விஷயம்.இந்தியா யாரிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதையும் அமெரிக்கா தீர்மானிக்கிறது.பிரதமர் நரேந்திர மோடி இந்தியா ஒரு காலனி அல்ல...$500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ‘ஷாப்பிங் லிஸ்ட்’ பற்றி அமெரிக்கா பேசுகிறது.அவர்கள் இதை “America First” வெற்றி என அறிவிக்கிறார்கள் .அவர்கள் சொல்வது சரிதான்.இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு இவ்வளவு நல்லதென்றால்,ஏன் இதை முதலில் ட்ரம்ப் அறிவித்தார்?ஏன் பாராளுமன்றம் இருளில் வைக்கப்பட்டுள்ளது?இந்தியா ஒரு காலனி அல்ல.அமெரிக்காவுக்கே மட்டும் பயன் தரும் இப்படிப்பட்ட முழுமையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள முடியாதது.இந்த ஒப்பந்தம் குறித்து பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு ஒப்பந்தத்தின் உண்மையானப் பிரிவுகளை மோடி அரசு தெரிவிக்க வேண்டும்&quot; என்று பதிவிட்டிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-28/snf1huo4/ஜோதிமணி.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, ஒரு, காலனி, அல்ல-, அமெரிக்காவுடனான, வரி, ஒப்பந்தம், குறித்து, ஜோதிமணி, விமர்சனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? &amp; நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்!</title>
        <link>https://dailytopnewz24.com/ராகுல்-பற்றவைத்த-சீன-நெருப்பு-நள்ளிரவில்-நடந்த-உரையாடல்-நரவானே-புத்தகமும்-அரசியல்-பூகம்பமும்</link>
        <guid>https://dailytopnewz24.com/ராகுல்-பற்றவைத்த-சீன-நெருப்பு-நள்ளிரவில்-நடந்த-உரையாடல்-நரவானே-புத்தகமும்-அரசியல்-பூகம்பமும்</guid>
        <description><![CDATA[ நாடாளுமன்ற மக்களவையில் இரண்டாவது நாளாக `அமளி அனல்&#039; தகித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்றைய தினம் கையிலெடுத்த `சீன ஊடுருவல்&#039; விவகாரம்தான். ‘Four Stars of Destiny’முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே எழுதி இன்னும் வெளியிடப்படாத நினைவுக்குறிப்பான  ‘Four Stars of Destiny’ புத்தகம் குறித்த செய்திக்கட்டுரையை மேற்கோள்காட்டி ராகுல் பேச முற்பட, அதற்கு பாஜக எம்.பி-க்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. `வெளியாகாத புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பேசுவது என்பது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது.&#039; - இதுவே பாஜக தரப்பில் முன்வைக்கப்படும் வாதம். இந்த விவகாரத்தின் எதிரொலியாக அவை நடவடிக்கைகள் நேற்றைய தினம் பாதிக்கப்பட்டன. ராகுல் காந்திநாடாளுமன்றத்திலிருந்து வெளியேறிய ராகுல், `அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரிக்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். அதை நிச்சயம் நான் சொல்வேன். யாரும் தடுக்க முடியாது&#039; எனக் கூறியிருந்தார்.இணைய தேடலில் வைரல்...இதன் தொடர்ச்சியாக இன்று கூட்டத்தொடரில், காங்கிரஸ் எம்.பி-க்கள் ராகுல் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து, பேப்பரைக் கிழித்து சபாநாயகரை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி-க்கள் மாணிக்கம் தாக்கூர், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இணைய தேடலில் வைரலானது `Four Stars of Destiny’ என்ற செர்ச் கீவொர்டு. அப்படி என்ன இருக்கிறது அந்தப் புத்தகத்தில்?

இன்னும் வெளியிடப்படாத அந்தப் புத்தகம் குறித்து பொது வெளியில் கிடைக்கப்பெறும் தகவல்களை வைத்து, இனி பார்க்கலாம்!இந்திய ராணுவத்தின் தளபதியாக 2019-2022 வரை பதவி வகித்தவர்தான் ஜெனரல் நரவானே. கொரோனா பேரிடர் காலத்தில் ராணுவப் படைகளை திறம்பட நிர்வகித்தவர். ராணுவ ஜெனரல் என்பதைத் தாண்டி, புத்தக ஆசிரியராகவும் அறியப்படுகிறார். அவர் எழுதிய ‘Four Stars of Destiny’ என்ற புத்தகம்தான் தற்போது வரை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மதிப்பாய்வில் இருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்துக்கு முன்பு நரவானே எழுதிய `The Cantonment Conspiracy&#039; என்ற மர்டர் மிஸ்ட்ரி புத்தகம் வெளியாகி விற்பனையில் இருக்கிறது. அமேசான் உள்ளிட்ட தளங்களில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.மனோஜ் முகுந்த் நரவானேஇந்த இரண்டு புத்தகங்களுமே Penguin Random House India பதிப்பகத்தின் வெளியீடுகள்தான். இதில் ‘Four Stars of Destiny’ புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. 2024-ம் ஆண்டே வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து வெளியீட்டாளருக்கு, `பதிப்பாய்வு முடியும் வரை, இதன் உள்ளடக்கத்தையோ, பகுதிகளையோ, புத்தகத்தின் சாஃப்ட் காப்பீஸ்-களையோ வெளியிட வேண்டாம்&#039; என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.கடந்த வருடம் இலக்கிய திருவிழா ஒன்றில் இந்தப் புத்தகம் குறித்து அதன் ஆசிரியரான நரவானேவிடம் கேட்கப்பட்டது. `இந்தப் புத்தகத்தை எழுதிய அனுபவம் மிகச் சிறப்பானது. நான் எழுதி, அவர்களிடம் (பதிப்பகம்) கொடுத்துவிட்டேன். இனி அது அவர்கள் வேலை&#039; எனக் குறிப்பிட்டார்.இதற்கிடையில் 2023-ம் ஆண்டு டிசம்பரில் PTI செய்தி நிறுவனம், இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் எனக் குறிப்பிட்டு, சிலவற்றை வெளியிட்டது. அதில்தான், ஜெனரல் நரவானே - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையே 2020-ம் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி இரவு நடைபெற்ற உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தப் புத்தகம் குறித்து CARAVAN இதழில் வெளியாகியிருந்த கட்டுரையை மேற்கோள்காட்டி தான் ராகுல் காந்தி மக்களவையில் பேச முயன்றார்.The Cantonment Conspiracyஆகஸ்ட் 31-ம் தேதி இரவு, இந்திய ராணுவத்துக்கு அத்தனை அழுத்தம் மிகுந்ததாக இருந்ததாக, அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் படைகள், கிழக்கு லடாக்கில் உள்ள ரெச்சின் லாவில் LAC கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கி நகர்ந்து வந்திருக்கின்றன.நரவானே அந்த நினைவுக்குறிப்பு புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லப்படும் உரையாடல் இனி...``அது ஆகஸ்ட் 31-ம் தேதி 2020... டாங்கிகளுடன் முன்னேறிய சீன மக்கள் விடுதலை ராணுவப் படைகள் குறித்து இரவு 8:15 மணியளவில் ஜெனரல் ஜோஷி, மிகவும் பதற்றத்துடன் என்னை அழைத்தார். `சீன மக்கள் விடுதலை ராணுவத்தினர் காலாட் படை, 4 டாங்கிகளுடன் மெதுவாக ரெச்சின் லா நோக்கி முன்னேறுகின்றனர்&#039; என்றார்.&quot;மோடி ஜி பயப்படுகிறார்; எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும்.!&quot;-  ராகுல் காந்தி விமர்சனம் `என்னுடைய உத்தரவு என்ன?&#039;உடனே பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முப்படை தலைமை தளபதி ஆகியோரை தொலைபேசி மூலமாக அணுகினேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் எனக்கு கேட்க இருந்தது ஒரே கேள்விதான். `என்னுடைய உத்தரவு என்ன?&#039; அவர்கள் முன்னேறிக் கொண்டே இருந்தனர். ஆனால், `ஹை கமாண்ட் உத்தரவு வரும் வரை சுட வேண்டாம்&#039; என்பது எனக்கு வழங்கப்பட்ட தெளிவான உத்தரவாக இருந்தது. இரவு 9:10 மணியளவில் எனக்கு மேலும் ஒரு தகவல் வந்தடைந்தது... அவர்கள் முன்னேறி, ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்கிறார்கள் என்று. ராஜ்நாத் சிங்9:25 மணிக்கு மீண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு, நிலைமை மிகவும் பதற்றமாக இருக்கிறது என்பதை விவரித்தேன். மேலும், தெளிவான உத்தரவை வேண்டினேன். இதற்கிடையில் இரு நாட்டு அதிகாரிகள் இடையே ஹாட்லைன் மூலம் தகவல் பரிமாற்றம் நடந்தது. சீன தளபதி, `இரு தரப்பும் மேலதிக நடவடிக்கைகளை நிறுத்தி மறுநாள் காலை 9:30 மணியளவில் உள்ளூர் ராணுவ ஜெனரல்கள் சந்திப்பை நடத்தலாம்&#039; என முன்மொழிந்தார். இந்த தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இரவு 10 மணியளவில் கடத்தினேன்.இந்தியா- சீனா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-03/tth7rct0/WhatsApp-Image-2026-02-03-at-17.06.47.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ராகுல், பற்றவைத்த, சீன, நெருப்பு, நள்ளிரவில், நடந்த, உரையாடல், நரவானே, புத்தகமும், அரசியல், பூகம்பமும்</media:keywords>
    </item>
    <item>
        <title>Tax War: ரஷ்யாவின் &amp;apos;வீட்டோ&amp;apos; முதல் ட்ரம்ப்பின் &amp;apos;சந்தை&amp;apos; வரை... விடையின்றி நிற்கும் கேள்விகள்?!</title>
        <link>https://dailytopnewz24.com/tax-war-ரஷ்யாவின்-வீட்டோ-முதல்-ட்ரம்ப்பின்-சந்தை-வரை-விடையின்றி-நிற்கும்-கேள்விகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/tax-war-ரஷ்யாவின்-வீட்டோ-முதல்-ட்ரம்ப்பின்-சந்தை-வரை-விடையின்றி-நிற்கும்-கேள்விகள்</guid>
        <description><![CDATA[ அறிவிக்கப்படாத வரிப் போர்!அமெரிக்காஅமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும்படியான வேலைகளைச் செய்துவருகிறார். அதே நேரம், திடீர் திடீரென அவரின் சமூக வலைதளங்களில் பற்றவைக்கும் தீ காட்டுத்தீப் போல பேசுபொருளாகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரை நிறுத்தினேன் என்பதில் தொடங்கி, இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்தது, அதை 500 சதவிகிதமாக மாற்றப் போகிறேன் என அறிவித்தது வரை, இந்தியாவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் பா.ஜ.க அரசை விமர்சிக்கும்படியான கன்டென்ட்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.மோடி, ட்ரம்ப்இந்த அறிவிக்கப்படாத வரிப் போரால், ஆசியாவிலேயே அமெரிக்காவின் அதிக வரி விதிக்கப்பட்ட நாடு என்றப் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் இருந்தது. ஆனால், நேற்றைய இரவு அமெரிக்கா அதிபருக்கும் - இந்தியப் பிரதமருக்கும் நடந்த உரையாடலுக்குப் பிறகு இந்தியா மீதான பரஸ்பர வரியை 50 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்கு பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது.மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ரூ.42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. மேலும், அமெரிக்க வேளாண் விளைபொருட்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமிக்ககும் வகையிலான ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது என இதற்கு இந்தியா கொடுத்த விலை அதிகம் என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதே நேரம், இந்தியாவின் இந்த முடிவு தேசிய நலன்களைப் பாதுகாக்கும் மூலோபாய நகர்வு என்றும் சிலர் கருதுகின்றனர்.பொருளாதார ஒப்பந்தம்ரஷ்யா - இந்தியா உறவு!இதற்கிடையில், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒப்புதலால் ரஷ்யாவுக்கு இந்தியா கொடுத்த ஆதரவு நிலைப்பாடு குறித்த கேள்விகளும், இந்தியாவுடன் ரஷ்யா செய்துகொண்ட ஒப்பந்தகளின் நிலையும் தொக்கி நிற்கிறது.ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடிரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாடை முன்வைத்து வருகிறது. &#039;இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்தே தீருவேன்&#039; எனக் கங்கணம்கட்டிக்கொண்டு அதிபராக ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்த நாடுகளின் மீது வரியை வாரி வழங்கினார். இதனால், கடுமையான சிக்கலை எதிர்க்கொண்ட நாடுகளில் இந்தியாவும் உண்டு.அப்போதுகூட &#039;இந்தியா - ரஷ்யா உறவில் எந்த விரிசலையும் ஏற்படுத்த முடியாது&#039; என இருநாடுகளும் பரஸ்பரம் அறிவித்துக்கொண்டன. கடந்த டிசம்பரில் நடைபெற்ற இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டுக்கு வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு கோலகல வரவேற்பளித்து கட்டித் தழுவி மகிழ்ந்தார் இந்தியப் பிரதமர் மோடி.அந்த உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக, ரஷ்ய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி வசதிகளை இந்தியாவில் அமைப்பதற்கு ஆர்வம்காட்டின. எண்ணெய் மற்றும் எரிசக்தித் துறைகளுக்கு அப்பாற்பட்டு, பொறியியல், கப்பல் கட்டுதல், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க மின்சாரம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உலோகம் போன்ற பல்வேறு துறைகளில் உறவுகளை விரிவாக்கும் நோக்கில், இந்தியாவுடன் கூட்டு முயற்சிகளைத் தொடங்க ரஷ்யா திட்டமிட்டது. அதற்காக பல ரஷ்ய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றன.மோடி, புதின்இது தொடர்பாக அப்போது ரஷ்யாவின் வர்த்தகப் பிரதிநிதி ஆண்ட்ரி சோபோலேவ், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான டிஏஎஸ்எஸ் (TASS) செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ``ரஷ்யாவின் அயல்நாட்டுப் பொருளாதாரத் திட்டத்தில் இந்தியா ஒரு முதன்மை இலக்கு. வளம் மற்றும் எரிசக்தி அல்லாத தயாரிப்புகளின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த இரு நாடுகளும் தீவிரமாக உள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் $100 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் இருதரப்பு வர்த்தக இலக்கை நோக்கிய முன்னேற்றம் ஊக்கமளிக்கிறது. இந்திய ஏற்றுமதி குறைந்தபட்சம் $30-35 பில்லியனையும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி சுமார் $60-65 பில்லியனையும் கொண்டிருக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது&quot; எனக் குறிப்பிட்டிருந்தார்.பலமான உறவு!இணைந்த கைகள்இதுமட்டுமில்லாமல், சமநிலையான உலகை உருவாக்க இரு நாடுகளும் BRICS, SCO மற்றும் G20 போன்ற தளங்களில் இணைந்து செயல்படுகின்றன. இந்தியா அணிசேரா நாடாக இருந்தாலும், வரலாற்றில் ரஷ்யாவுடன் ஒரு ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது. S-400, சுகோய் விமானங்கள் என இந்தியாவின் ராணுவத் தேவைகளில் சுமார் 60 -70 ரஷ்யாவையே சார்ந்துள்ளன. காஷ்மீர் விவகாரம் போன்ற முக்கியமான நேரங்களில், ஐநா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா தனது &#039;வீட்டோ&#039; அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதரவளித்திருக்கிறது.உக்ரைன் - ரஷ்யாப் போர் தொடர்பாகக் ஐ.நா-வில் வக்கெடுப்பு நடந்தபோதும், அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி, ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்காமல், ``இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கிறோம். எந்தப் பிரச்னையானாலும் அமர்ந்து பேசினால் சரியாகிவிடும்&quot; என இந்தியா வெளிநடப்பு செய்துவந்தது.ஐ.நாஅதே காரணம் வேறு முடிவு...அதேக் காரணத்தை முன்வைத்து அதிபர் ட்ரம்ப் வரிவித்தபோதும் கூட தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியில் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருந்தது இந்தியா. ரஷ்ய அதிபர் புதினும் ​​அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியாவிற்கு எரிபொருள் விநியோகத்தை தடையின்றி தொடரத் தயாராக இருப்பதாகக் கூறினார்.இப்படி இருநாடுகளின் உறவும் பல ஆண்டுகளாக பலமாக இருந்த நிலையில், தற்போது உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் முடிவை இந்தியா அறிவித்திருக்கிறது. இதற்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-03/6i4fnkcw/india-america-russia" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tax, War:, ரஷ்யாவின், வீட்டோ, முதல், ட்ரம்ப்பின், சந்தை, வரை..., விடையின்றி, நிற்கும், கேள்விகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>``இந்திய பிரதமரை அடிபணிய வைக்க ட்ரம்ப் என்ன செய்தார்?&amp;quot; &amp; விசிக தலைவர் திருமாவளவன்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்திய-பிரதமரை-அடிபணிய-வைக்க-ட்ரம்ப்-என்ன-செய்தார்-விசிக-தலைவர்-திருமாவளவன்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்திய-பிரதமரை-அடிபணிய-வைக்க-ட்ரம்ப்-என்ன-செய்தார்-விசிக-தலைவர்-திருமாவளவன்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது.மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.ட்ரம்ப் - மோடிஇந்த நிலையில், அமெரிக்கா - இந்தியா ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எம்.பி.திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் வழங்கியிருக்கும் ஒத்திவைப்பு தீர்மான மனுவில், ``முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையை விவாதிப்பதற்காக அவையின் அலுவல்களை ஒத்திவைப்பதற்கான ஒரு தீர்மானத்தை முன்மொழிய அனுமதி கோருகிறேன். அமெரிக்கா விதித்த நிபந்தனைகளுக்கு இந்தியப் பிரதமர் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.பிரதமர்  தேசிய நலன்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார்அமெரிக்கா தனது வரிகளை 7 சதவீதம் குறைக்கும், மறுபுறம், இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எந்த வரியையும் விதிக்காது மற்றும் அதன் வரிகளை பூஜ்ஜியமாகக் குறைக்கும். மேலும், இந்தியா அமெரிக்காவுடனான அதன் வர்த்தக அளவை மேலும் 500 பில்லியன் டாலர்களால் அதிகரிக்க வேண்டும்.ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியது உண்மையாக இருந்தால், அது இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையையே சமரசம் செய்து கொண்டுள்ளது என்று அர்த்தம். ட்ரம்பின் அறிக்கை, பிரதமர் நமது தேசிய நலன்களை முற்றிலுமாக கைவிட்டுவிட்டார் என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், பிரதமரின் வலைதளப்பதிவில், அவர் அமெரிக்க வரி குறைப்பை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளார்.திருமாவளவன்இந்தியாவின் வரி குறைப்பு பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டது மற்றும் கூடுதலாக 500 பில்லியன் டாலர் இறக்குமதிகள் பற்றிய உண்மைகளை அவர் மறைத்துள்ளார். இது மக்களை ஏமாற்றும் செயல். ஈரானை அடிபணியவைக்க ட்ரம்ப் படைகளை குவித்தார். இந்திய பிரதமரை அடிபணிய வைக்க அவர் என்ன செய்தார்? பிரதமர் ட்ரம்புடன் தான் விவாதித்ததை இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.இந்தியா - அமெரிக்கா வரி: &quot;கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார்&quot; - காங்கிரஸ் விமர்சனம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-18/g32tvgmd/thirumavalavan" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்திய, பிரதமரை, அடிபணிய, வைக்க, ட்ரம்ப், என்ன, செய்தார், விசிக, தலைவர், திருமாவளவன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Narges Mohammadi: அமைதிக்கான நோபல் வென்றவருக்கு 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை! &amp; காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/narges-mohammadi-அமைதிக்கான-நோபல்-வென்றவருக்கு-75-ஆண்டுகள்-சிறைத்-தண்டனை-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/narges-mohammadi-அமைதிக்கான-நோபல்-வென்றவருக்கு-75-ஆண்டுகள்-சிறைத்-தண்டனை-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ 2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி. &#039;குற்றம் செய்ய ஒன்று கூடுதல் மற்றும் கூட்டுச் சதி செய்தல்&#039; என்கிற அடிப்படையில், நேற்று ஈரானிய நீதிமன்றம் முகமதிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும், அவரது பரப்புரை செயல்பாடுகளுக்காக கூடுதலாக 1.5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, இவர் 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். கூடுதலாக, இரண்டு ஆண்டுகள் கோஸ்ஃப் என்கிற ஈரானிய நகரத்திற்கு உள்நாட்டுக் கடத்தல் செய்யப்படுவார்... இரண்டு ஆண்டுகள் இவர் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நர்கீஸ் முகமதி | Narges Mohammadiபொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன?ஈரானிய பெண்களின் உரிமைக்காகப் போராடியதற்காக, 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம், முகமதி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்து கொண்டும் தொடர்ந்து அரசிற்கு எதிராகப் போராடியதற்காக, 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கூடுதல் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், முகமதியின் உடல்நிலை காரணமாகவும், சிகிச்சை காரணமாகவும் அந்த ஆண்டின் டிசம்பர் மாதம் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம், மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இப்போது முகமதிக்கு கூடுதலாக 7.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Career: &#039;Law வேண்டாம்; &#039;டிகிரி&#039; போதும்&#039; - ஒரு லட்சம் வரை சம்பளம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வேலை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-09/7dm94tgf/Narges-Mohammadii.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Narges, Mohammadi:, அமைதிக்கான, நோபல், வென்றவருக்கு, 7.5, ஆண்டுகள், சிறைத், தண்டனை, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>2022&amp;ல் இந்தியா‌ உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?</title>
        <link>https://dailytopnewz24.com/2022-ல்-இந்தியா-உடனான-தாக்குதலுக்கு-பின்-அணு-ஆயுத-சோதனையை-நடத்தியதா-சீனா</link>
        <guid>https://dailytopnewz24.com/2022-ல்-இந்தியா-உடனான-தாக்குதலுக்கு-பின்-அணு-ஆயுத-சோதனையை-நடத்தியதா-சீனா</guid>
        <description><![CDATA[ ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாடு நடந்து வருகிறது.அதில் நேற்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.அப்படி என்ன பேசினார்?2022-ம்‌ ஆண்டு இந்தியா, சீனாவிற்கு இடையே தாக்குதல் நடந்தது. அந்தத் தாக்குதலில் 20 இந்திய வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே (ஜூன் 22), சீனா அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது என்கிற அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைத் பற்றி தெரிவித்துள்ளார் டினானோ.இந்தச் சோதனை இந்தியாவிற்கு அருகே உள்ள லாப் நூரில் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.அணு ஆயுத சோதனைஅமெரிக்கா, ரஷ்யா - கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவிற்கு ப்ளஸ், மைனஸ் என்ன? | Explainedஇந்தச் சோதனையை உலகளாவிய கண்காணிப்பு நிறுவனங்கள் கண்டுபிடிக்காமல் இருக்க, சீனா &#039;Decoupling&#039; முறையைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.அதாவது, இந்தச்‌‌ சோதனையால் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை அடக்க பெரிய நிலத்தடி குழிகளுக்குள் வெடிக்கும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாக கூறுகிறது.இந்தச் சோதனையில் சீனா சர்வதேச அணு ஆயுதக் கொள்கைகளை மீறியது என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.&#039;இந்த&#039; விவசாயிகளா நீங்கள்? இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் உங்களுக்குள்ள ப்ளஸ் என்ன?சீனாவின் மறுப்பு&quot;அணு ஆயுத விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது.இந்தப் பொய்க் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக எதிர்க்கிறது.அணு ஆயுத பந்தயத்தில் அமெரிக்கா தான்‌ முக்கிய குற்றவாளி&quot; என்று அணு ஆயுதக் குறைப்பின் சீனாவின்‌ தூதரான ஷென் ஜியான் கருத்து தெரிவித்துள்ளார்.இந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் 25% வரி - இந்திய‌ - அமெரிக்க ஒப்பந்தம் முக்கிய 7 அம்சங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-31/daym7yrp/Gzp20mMbAAAS7dx.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>2022-ல், இந்தியா‌, உடனான, தாக்குதலுக்கு, பின், அணு, ஆயுத, சோதனையை, நடத்தியதா, சீனா</media:keywords>
    </item>
    <item>
        <title>IND vs USA: &amp;quot;எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்&amp;quot;&amp; அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்</title>
        <link>https://dailytopnewz24.com/ind-vs-usa-எங்கள்-தோல்விக்கு-இதுதான்-முக்கியக்-காரணம்-அமெரிக்க-கேப்டன்-மோனாங்க்-படேல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ind-vs-usa-எங்கள்-தோல்விக்கு-இதுதான்-முக்கியக்-காரணம்-அமெரிக்க-கேப்டன்-மோனாங்க்-படேல்</guid>
        <description><![CDATA[ ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி  20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி 20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்திய அணிஇந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் அணியின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார்.&quot;இந்த ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. முக்கியமான சில வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். அதுதான் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் இந்திய அணியை 13 ரன்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் 160 என ஒரு நல்ல இலக்கை தொட்டுவிட்டார்கள். ரசிகர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்கள். அதையும் நாங்கள் சிறப்பாக கையாண்டோம் என்று நினைக்கிறேன்.அமெரிக்க அணி இந்தப் போட்டியில் சில, சில தவறுகளை நாங்கள் செய்தோம். அதனை எல்லாம் சரி செய்து கொண்டு அடுத்த போட்டியில் பலமான அணியாக திரும்பி வருவோம்&quot; என்று தெரிவித்திருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-08/potb0d6l/HAk3MPkacAMiZ3-.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>IND, USA:, எங்கள், தோல்விக்கு, இதுதான், முக்கியக், காரணம்-, அமெரிக்க, கேப்டன், மோனாங்க், படேல்</media:keywords>
    </item>
    <item>
        <title>India &amp; US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!&amp;apos; &amp; க.கனகராஜ் | களம் 03</title>
        <link>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இந்த-ஒப்பந்தம்-அமெரிக்காவின்-நிர்ப்பந்தம்-மட்டுமே-ககனகராஜ்-களம்-03</link>
        <guid>https://dailytopnewz24.com/india-us-trade-deal-இந்த-ஒப்பந்தம்-அமெரிக்காவின்-நிர்ப்பந்தம்-மட்டுமே-ககனகராஜ்-களம்-03</guid>
        <description><![CDATA[ எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்&#039;.களம் 03க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் - சிபிஐ(எம்)(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மாபெரும் வெற்றி என மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டாடி மகிழ்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இருதரப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக எக்ஸ் தளத்தில் பதிவிடுவது, அதை பகிர்ந்து இந்தியாவின் பிரதமர், அமைச்சர்களும் கொண்டாடுவது மிக மோசமான முன்னுதாரணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்று தேடித்தேடி பார்த்தால் நிகரமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், வர்த்தக கொள்கைக்கும், பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்று உறுதியாக சொல்ல முடியும்.ஏற்றுமதி - இறக்குமதி  இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மீது 25 சதவிகிதம் இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதற்காக 25 சதவிகிதம் தண்டனை வரி என்பதை குறைத்து 18 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 18 சதவிகிதம் வரி என்பது இதர நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது அதிகம் தான் என்றாலும், இந்திய பொருட்களால் போட்டியிட முடியும் என்பது சற்று பலன் தரக்கூடியதுதான். ஆனால், இதற்காக நாம் இழப்பது எவ்வளவு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.இறக்குமதிக்கு இலக்கா அல்லது இழப்பிற்கு இலக்கா?2025 ஆம் ஆண்டு முழுவதும் மொத்தமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் அளவு சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாகும். அது இப்போது 10 மடங்காக அதிகரித்து 45 லட்சம் கோடி ரூபாய் (500 பில்லியன் டாலர்) அளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு இறக்குமதி வரி விதிப்பு மூலம் இந்தியா சுமார் 25,000 கோடி ரூபாய் வரியாக பெற்றிருக்கிறது. இந்நிலையில், இறக்குமதி 10 மடங்காகும் என்ற சொல்லப்படும் நிலையில் இறக்குமதிக்கான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் அளவிலேயே இறக்குமதி மட்டும் உயர்கிறது என்று வைத்துக் கொண்டால் சுமார் 2 1/2 லட்சம் கோடி அளவிற்கு நாம் இறக்குமதி வரி வசூலிக்க வேண்டும்.சிபிஐ(எம்) க.கனகராஜ் ஆனால், அது இனிமேல் முற்றிலுமாக இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இந்திய கஜானவிற்கு வரவேண்டிய இரண்டரை லட்சம் கோடி இனி வராது. ஒரு ஒப்பந்தத்தின் மூலம் மாறுதல் செய்கிறோம். அப்படியே ஒப்பீடு செய்வது சரியல்ல என்று ஒருவர் சொல்லக்கூடும். அப்படி வைத்துக் கொண்டால் கூட அமெரிக்கா சொல்லும் 45 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதிக்கு 10 சதவிகிதம் வரி விதித்தால் அது 4 1/2 லட்சம் கோடி. 5 சதவிகிதம் விதித்தால் 2 1/4 லட்சம் கோடி. ஒரு சதவிகிதம் விதித்தால் கூட 45,000 கோடி.ஆனால், இதை முற்றிலுமாக விட்டுக்கொடுக்க மோடி அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இந்திய மக்களின் பிரதான உணவு தானியங்களான அரிசிக்கும், கோதுமைக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. உத்தேசமாக, இதன் மூலமாக மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாயை இந்திய அரசாங்கம் பெறுகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை விட்டுத்தர முன்வருகிற இந்தியா உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி-யை விலக்கிக் கொள்ள தயாராக இல்லை. India - US Trade Deal: &#039;இது சரணாகதி அல்ல; இதுதான் &#039;Strategic Autonomy&#039;&#039; - எஸ்.ஜி சூர்யா | களம் 02இரண்டாவதாக, இந்தியாவிற்கு தேவைப்படுகிற பொருளை தேவைப்படுகிற அளவிற்கு இறக்குமதி செய்யலாம். ஆனால், 45 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யச் சொல்வதும் அதுபற்றி மோடி அரசாங்கம் மௌனம் காப்பதும் ஏனென்று தெரியவில்லை. 45 லட்சம் கோடி என்பது இந்தியாவின் 2026 பட்ஜெட்டில் 84 சதவிகிதம். இந்த அளவிற்கு இறக்குமதி செய்வது என்று இலக்கு வைப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்.ஒரு நாடு தன் தேவைக்குத்தான் இறக்குமதி செய்ய வேண்டுமே தவிர, இன்னொரு நாட்டின் வியாபாரத்திற்காக தன் நாட்டு தொழில்களை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று விடுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. இது வெறும் பொருள் இறக்குமதி சார்ந்ததாக மட்டும் இருக்காது. இந்திய தொழில்கள் பாதிக்கப்படும், தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள், அந்நிய செலாவணி குறையும், நடப்பு கணக்கில் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும். இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் டொனால்ட் ட்ரம்ப் சொல்கிறார் என்பதற்காக அமைதி காப்பது இந்தியாவின் நலனை காவுக் கொடுப்பதாகும்.மோடி - ட்ரம்ப் ரஷ்ய கச்சா எண்ணையும் வெனிசுலா கச்சா எண்ணையும்ஏதோ தான் அமைதிக்காக அவதாரம் எடுத்தது போல் டொனால்ட் ட்ரம்ப் பேசித் திரிகிறார். நரேந்திர மோடி தனது நன்றி அறிவிப்பு எக்ஸ் பதிவில் டொனால்ட் ட்ரம்ப்பின் அமைதி முயற்சிகளை பாராட்டி புளகாங்கிதம் அடைந்துள்ளார். ஒரு நாட்டின் அதிபரை திருட்டுத்தனமாக இரவு நேரத்தில் புகுந்து மனைவியோடு கடத்திக் கொண்டுவந்து தன் நாட்டில் சிறை வைப்பது அமைதி நடவடிக்கையா? 66,000 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்தபோது இஸ்ரேலுக்கு துணையாக நின்றது அமைதி நடவடிக்கையா? கனடாவை தனது மாநிலங்களில் ஒன்றாக இணைத்துக் கொள்ள போகிறேன் என்று கொக்கரிப்பது அமைதி நடவடிக்கையா?கீரின்லாந்து எனக்குத்தான் சொந்தம் என்று திமிர்த்தனமாக பேசுவது அமைதி நடவடிக்கையா? இத்தனை இருந்தபிறகும், ரஷ்யா போரில் ஈடுபடுவதற்கு எண்ணை வியாபாரம் தான் காரணம், எனவே போருக்கு எதிராக எனது நடவடிக்கை இது என்று ட்ரம்ப் பசப்பித்திரிகிறார். இதே ட்ரம்ப் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து போரை நிறுத்து என்று சண்டியர்த்தனம் செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொண்டவர். அதன்பிறகு அரிய வகை தனிமங்களை அடிமாட்டு வ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-07/ao7symxc/Screenshot-from-2026-02-07-17-02-01.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>India, Trade, Deal:, இந்த, ஒப்பந்தம், அமெரிக்காவின், நிர்ப்பந்தம், மட்டுமே, க.கனகராஜ், களம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`அமெரிக்காவில் முதலீடு... உறுதி அளிக்கவில்லை; ஆனால் வர்த்தகம் அதிகரிக்கும்&amp;apos;&amp; விளக்கும் பியூஷ் கோயல்</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்காவில்-முதலீடு-உறுதி-அளிக்கவில்லை-ஆனால்-வர்த்தகம்-அதிகரிக்கும்-விளக்கும்-பியூஷ்-கோயல்</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்காவில்-முதலீடு-உறுதி-அளிக்கவில்லை-ஆனால்-வர்த்தகம்-அதிகரிக்கும்-விளக்கும்-பியூஷ்-கோயல்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்தது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையில் அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.மோடி - ட்ரம்ப்இந்த நிலையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் , ``இந்தியா அமெரிக்காவுக்கு எந்த முதலீட்டு உறுதிமொழியும் (investment commitment) அளிக்கவில்லை. ஆனால், &#039;விக்சித் பாரத் 2047&#039; இலக்கை நோக்கி இந்தியா வேகமாக வளர்ச்சி அடைவதால், அடுத்த காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து அதிக அளவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்பது இயல்பானது. அம்ரித் காலத்தில் விக்சித் பாரத் 2047 நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.இதனால், பெரிய அளவிலான எரிசக்தி (energy), டேட்டா சென்டர் உபகரணங்கள், ஐசிடி பொருட்கள் தேவைப்படும். நமது எஃகு உற்பத்தி திறன் தற்போதைய 140 மில்லியன் டன்னிலிருந்து அடுத்த சில ஆண்டுகளில் 300 மில்லியன் டன்னாக உயரும். அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விமானங்கள் மட்டும் 70-80 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும். என்ஜின்கள், உதிரி பாகங்கள் சேர்த்தால் 100 பில்லியன் டாலரை எட்டும்.பியூஷ் கோயல்முதல் கட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் கிட்டத்தட்ட தயாராகிவிட்டன. அடுத்த 4-5 நாட்களில் கூட்டு அறிக்கை வெளியாகும். அதன் பின்னர் அமெரிக்கா, இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி 50%-லிருந்து 18%-ஆக குறைக்கும்.சட்டப்பூர்வமான ஒப்பந்தம் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னரே இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரியைக் குறைக்க முடியும். இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய வாய்ப்புகளைத் திறக்கும். விவசாயிகள், மீனவர்கள், MSME-களுக்கு பயன் தரும்&quot; எனத் தெரிவித்தார்.India - US Trade Deal: `இந்தியா, அமெரிக்காவின் பக்கம் சாயும் நிலை&#039; | இனியன் ராபர்ட் | களம் 01 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-06/lta2oa4p/1965546-piyush-goyal.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்காவில், முதலீடு..., உறுதி, அளிக்கவில்லை, ஆனால், வர்த்தகம், அதிகரிக்கும்-, விளக்கும், பியூஷ், கோயல்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;வருந்துகிறேன்; அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன்&amp;quot; &amp; எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து பில் கேட்ஸ்</title>
        <link>https://dailytopnewz24.com/வருந்துகிறேன்-அதற்காக-நான்-மன்னிப்பும்-கேட்கிறேன்-எப்ஸ்டீன்-ஃபைல்ஸ்-குறித்து-பில்-கேட்ஸ்</link>
        <guid>https://dailytopnewz24.com/வருந்துகிறேன்-அதற்காக-நான்-மன்னிப்பும்-கேட்கிறேன்-எப்ஸ்டீன்-ஃபைல்ஸ்-குறித்து-பில்-கேட்ஸ்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜெஃப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019 ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார்.எப்ஸ்டீன் பல்வேறு தரப்பினருடன் உரையாடிய மின்னஞ்சல்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள், விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றைப் பொதுவெளியில் வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நவம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. எப்ஸ்டீன் - ட்ரம்ப்இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி 35 லட்சப் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் ஃபைல்ஸ்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் பில் கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உட்பட பலரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.சமூக வலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும்  வெளியாகி பேசுபொருளாகி இருக்கின்றன.இந்நிலையில் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து 9 ஆஸ்திரேலியா செய்தி நிறுவனத்துக்கு பில் கேட்ஸ் நேர்காணல் அளித்திருக்கிறார். நேர்காணலில் பேசிய அவர், ``எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துகிறேன். அதற்காக நான் மன்னிப்பும் கேட்கிறேன். நான் 2011-ல் எப்ஸ்டீனைச் சந்தித்தேன். பில்கேட்ஸ்மூன்று ஆண்டுகளில் அவருடன் பலமுறை இரவு விருந்துகளில் கலந்துகொண்டேன். ஆனால் அவரது கரீபியன் தீவுக்குச் சென்றதில்லை. பெண்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை. அவர் பல பணக்காரர்களைத் தெரிந்தவர் என்பதால், அவர்களிடம் உலக சுகாதாரத்திற்கு நிதியைப் பெற தூண்ட முடியும் என்று நினைத்தேன். ஆனால் அது ஒரு பயனற்ற முயற்சி என்பது பின்புதான் தெரிந்தது&quot; என்று தெரிவித்திருக்கிறார்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-02-06/ubmim0bm/2025-09-24T162224Z191026484RC2GYGAP98HWRTRMADP3UN-ASSEMBLY-BLOOMBERG-FORUM-1024x670.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 09 Feb 2026 15:20:28 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வருந்துகிறேன், அதற்காக, நான், மன்னிப்பும், கேட்கிறேன், எப்ஸ்டீன், ஃபைல்ஸ், குறித்து, பில், கேட்ஸ்</media:keywords>
    </item>
    <item>
        <title>Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/greenland-ட்ரம்ப்-போடும்-ஸ்கெட்ச்-எதற்கு-முரண்டு-பிடிக்கும்-நேட்டோ-நாடுகள்-davos-அஜென்டா-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/greenland-ட்ரம்ப்-போடும்-ஸ்கெட்ச்-எதற்கு-முரண்டு-பிடிக்கும்-நேட்டோ-நாடுகள்-davos-அஜென்டா-என்ன</guid>
        <description><![CDATA[ முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... ட்ரம்ப் &#039;அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்&#039; என கடுமையாக அடம்பிடிக்கிறார். அமெரிக்காவின் &#039;பாதுகாப்பு&#039; மட்டும் ட்ரம்பின் இந்த அடத்திற்கு காரணம் அல்ல. ட்ரம்பிற்கு ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்?
கிரீன்லேண்டின் இருப்பிடமும்... கிரீன்லேண்டில் இருக்கும் இருப்பும் இதற்கு முக்கிய காரணம். புரியவில்லையா...? அதாவது கிரீன்லேண்ட் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு நடுவில் உள்ளது. கிரீன்லேண்ட்ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்!அதனால், கிரீன்லேண்டைப் பிடித்தால், அமெரிக்காவில் இருந்து வெளியே செல்லும் வர்த்தக பொருள்கள், அமெரிக்காவிற்குள் வரும் வர்த்தக பொருள்கள் என அனைத்திற்கும் அந்த நாடு ஈசியான பாதையாக இருக்கும். இதன் மூலம் கால நேரத்தையும், செலவுகளையும் அதிகம் குறைக்கலாம். இன்னொன்று, அங்கு லித்தியம், நியோடைமியம் போன்ற கனிம பொருள்கள் கொட்டி கிடக்கின்றன. இவை ஸ்மார்ட் போன், எலெக்ட்ரிக் வாகனங்கள்... போன்ற இன்றைய அப்-டு-டேட் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்கா கைப்பற்றுவதால் உற்பத்தி மற்றும் வணிகத்தில் லாபம் பெறலாம். அடுத்தது, கிரீன்லேண்டில் எண்ணெய் வளம் உள்ளது. ஏற்கெனவே, வெனிசுலாவை ட்ரம்ப் எண்ணெய் வளத்திற்காக தான் பிடித்துள்ளார் என்பது உலகம் அறிந்த ரகசியம். அப்போது, அவர் கிரீன்லேண்டை விட்டு வைக்க வாய்ப்பே இல்லை. கடைசியாக... ஆனால், முக்கியமாக... ட்ரம்ப் அரசியல்வாதி என்பதை தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு பிசினஸ்மேன். கிரீன்லேண்டை அவர் ஒரு &#039;பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக&#039; பார்க்கிறார்.கிரீன்லேண்டை அடைவது மூலம் அமெரிக்காவை இன்னும் பெரிதாக்கலாம். அங்கேயும் முதலீடுகளைக் குவிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். இத்தனை ப்ளஸ்கள் கொட்டி உள்ள கிரீன்லேண்டை ட்ரம்ப் &#039;மிஸ்&#039; செய்வாரா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. NATO ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள &#039;சம்பவங்கள்&#039; என்னென்ன? |In Depthகிரீன்லேண்டை விட்டுத்தராத நாடுகள்..!தற்போது டென்மார்க்கிற்கு கீழ் உள்ளது கிரீன்லேண்ட். டென்மார்க் கிரீன்லேண்டை விட்டுத் தருவதாக இல்லை. கிரீன்லேண்ட் தாங்கள் தனி நாடாக இயங்கவே விரும்புகிறது. அதனால், நேட்டோ நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ட்ரம்பின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றனர். இவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் 1-ம் தேதியில் இருந்து, நேட்டோ நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளின் மீது 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார். வரும் ஜூனுக்கு பின்னும், இவர்கள் இழுத்தடித்து கொண்டிருந்தால், இந்த வரி 25 சதவிகிதமாக உயரும் என்று எச்சரித்திருக்கிறார்.ஆனால், இந்த நாடுகளும் விட்டுத் தருவதாக இல்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று, இந்த விஷயத்தைக் கையாள்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.மேலும், நேட்டோ மற்றும் ஐரோப்ப நாடுகள் இணைந்து அமெரிக்காவின் மீது வரி விதிக்கவும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.ட்ரம்ப்கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?ட்ரம்ப் பகிர்ந்த புகைப்படம் 
இந்த நிலையில் தான், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், கிரீன்லேண்டில் ட்ரம்ப் அமெரிக்க கொடியை நடுவது போலவும். கிரீன்லேண்ட் - அமெரிக்காவின் பிராந்தியம், 2026 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில், ட்ரம்புடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க் ரூபியோவும் இருக்கிறார்கள். Davos அஜென்டாதற்போது டாவோஸில் உலக பொருளாதார மன்றம் நடைபெற்று வருகிறது. இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இதில் ட்ரம்பும் கலந்துகொள்ள இன்று சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை தாண்டி, அங்கு வந்துள்ள உலகத் தலைவர்களிடம் கிரீன்லேண்ட் குறித்து பேச வேண்டும் என்பது ட்ரம்பின் முக்கிய அஜென்டா என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.&#039;இது எதுவரை போகும்?&#039; என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-21/cd7zsaeb/Trump-Greenland.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Greenland:, ட்ரம்ப், போடும், ஸ்கெட்ச், எதற்கு, முரண்டு, பிடிக்கும், நேட்டோ, நாடுகள், DAVOS, அஜென்டா, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>வேலூர்: CMC மருத்துவர் அறையில் அமெரிக்க போதைப்பொருள்; அமலாக்கத்துறை விசாரணையில் வெளியான தகவல் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/வேலூர்-cmc-மருத்துவர்-அறையில்-அமெரிக்க-போதைப்பொருள்-அமலாக்கத்துறை-விசாரணையில்-வெளியான-தகவல்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/வேலூர்-cmc-மருத்துவர்-அறையில்-அமெரிக்க-போதைப்பொருள்-அமலாக்கத்துறை-விசாரணையில்-வெளியான-தகவல்-என்ன</guid>
        <description><![CDATA[ வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் முதுநிலை அறுவை சிகிச்சை மருத்துவராக கேரளாவைச் சேர்ந்த பெல்கிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர், வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவிலுள்ள சி.எம்.சி ஆண் மருத்துவர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ளார்.இந்நிலையில், சட்டவிரோத போதைப்பொருள் பணப்பரிமாற்ற விவகாரம் தொடர்பாக, கடந்த 16-ம் தேதி, மருத்துவர் பெல்கிங் தங்கியிருந்த அறையில் அமலாக்கத்துறையினர் அதிரடியாகச் சோதனை செய்தனர்.அப்போது, 5 வகையான வெளிநாட்டு போதைப்பொருள்கள் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்த அமலாக்கத்துறையினர், இதுபற்றி வேலூர் வடக்கு காவல் நிலையத்திலும் புகாரளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகவுள்ள மருத்துவர் பெல்கிங்கைத் தேடி வருகின்றனர்.கோவா வழக்கில், அமலாக்கத்துறை வெளியிட்ட புகைப்படங்கள்இது குறித்து, போலீஸார் கூறுகையில், ``அண்மையில் கோவா மாநிலத்தில் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை அமலாக்கத்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.அவரின் பணப்பரிவர்த்தனைகளை ஆய்வுசெய்தபோது, வேலூர் சி.எம்.சி மருத்துவர் பெல்கிங் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.2 லட்சம் வரவு வந்துள்ளது. அதைத்தொடர்ந்தே, மருத்துவர் பெல்கிங் பற்றிய விசாரணையை அமலாக்கத்துறையினர் தொடங்கினர்.பெல்கிங் அறையில் இருந்தவை, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 5 விதமான போதைப்பொருள்கள் எனத் தெரியவந்திருக்கிறது. மேலும், கஞ்சா, போதை மாத்திரை பவுடர், போதை காளான் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெளிநாட்டு போதைப்பொருள்கள் என்பதால், அவற்றின் மதிப்பு உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. மருத்துவர் பெல்கிங் கைது செய்யப்பட்டால்தான் மற்ற விவரங்கள் தெரியவரும்’’ என்றனர்.வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் தொடர்பா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-12-06/h0f6ctjk/67525e375650d.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வேலூர்:, CMC, மருத்துவர், அறையில், அமெரிக்க, போதைப்பொருள், அமலாக்கத்துறை, விசாரணையில், வெளியான, தகவல், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>``எனக்கு நோபல் பரிசு தரவில்லை... அதனால் &amp;apos;அமைதி&amp;apos; பேச்சுக்கே இடமில்லை&amp;quot; – வைரலாகும் ட்ரம்ப் கடிதம்!</title>
        <link>https://dailytopnewz24.com/எனக்கு-நோபல்-பரிசு-தரவில்லை-அதனால்-அமைதி-பேச்சுக்கே-இடமில்லை-வைரலாகும்-ட்ரம்ப்-கடிதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/எனக்கு-நோபல்-பரிசு-தரவில்லை-அதனால்-அமைதி-பேச்சுக்கே-இடமில்லை-வைரலாகும்-ட்ரம்ப்-கடிதம்</guid>
        <description><![CDATA[ டென்மார்க் கட்டுப்பாட்டில், சுயராஜ்யத்தில் இருக்கும் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கிடையில், உலகம் முழுவதும் 8 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்குக் கொடுக்க வேண்டும் என, ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், நோபல் கமிட்டி, கடந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியது. இந்த நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து, தனக்கு வழங்கப்பட்டு இருந்த அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்பிடம் வழங்கினார். இந்த விவகாரம் உலக அரங்கில் நகைப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. டிரம்ப்புக்கு நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில், ``சுமார் 8 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், எனக்கு அந்தப் பரிசை வழங்க வேண்டாம் என்று உங்கள் நாடு முடிவு செய்துவிட்டது. அதனால் இனிமேல் &#039;அமைதி&#039; பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக நான் உணரவில்லை.இப்போது அமெரிக்காவிற்கு எது தேவையோ அதைப் பற்றி மட்டுமே நான் சிந்திப்பேன். டென்மார்க்கால் கிரீன்லாந்தை ரஷ்யா, சீனாவிடமிருந்து பாதுகாக்க முடியாது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படகு அங்கு தரையிறங்கியது என்பதற்காக அந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. அமெரிக்காவின் படகுகளும் அங்கே தரையிறங்கியுள்ளன. மேலும், கிரீன்லாந்து மீது அமெரிக்காவிற்கு முழுமையான கட்டுப்பாடு இல்லையென்றால், உலகம் பாதுகாப்பாக இருக்காது.நேட்டோநேட்டோ உருவான காலத்திலிருந்து வேறு எவரும் செய்யாத பல நன்மைகளை நான் செய்துள்ளேன். இப்போது நேட்டோ எனக்காக ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. கிரீன்லாந்து விவகாரத்தில் நேட்டோ உதவ வேண்டும்.&quot; எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையை முன்னணி செய்தி நிறுவனங்களால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், சமூக வலைதளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் இதுவே இப்போது விவாதப் பொருளாக உள்ளது.ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள &#039;சம்பவங்கள்&#039; என்னென்ன? |In Depth ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-05/vshdtm71/20250605120605.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எனக்கு, நோபல், பரிசு, தரவில்லை..., அதனால், அமைதி, பேச்சுக்கே, இடமில்லை, –, வைரலாகும், ட்ரம்ப், கடிதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் &amp;அரசியலில் அவர்செய்த அதகள &amp;apos;சம்பவங்கள்&amp;apos; என்னென்ன? |In Depth</title>
        <link>https://dailytopnewz24.com/ஆட்சியில்-ஓராண்டை-நிறைவு-செய்யும்-ட்ரம்ப்-அரசியலில்-அவர்செய்த-அதகள-சம்பவங்கள்-என்னென்ன-in-depth</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆட்சியில்-ஓராண்டை-நிறைவு-செய்யும்-ட்ரம்ப்-அரசியலில்-அவர்செய்த-அதகள-சம்பவங்கள்-என்னென்ன-in-depth</guid>
        <description><![CDATA[ டொனால்ட் ஜெ ட்ரம்ப் – ‘இரண்டாவது முறையாக’ அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, நாளையுடன் (ஜனவரி 20) ஓராண்டு முடிவடைகிறது. இந்த ஓராண்டிலேயே ட்ரம்பின் அதிரடிகளால் உலக நாடுகளும், உலக நாடுகளின் பொருளாதாரமும் திணறிவிட்டன. கடந்த ஓராண்டாக, ‘அமெரிக்க அதிபர்’ ட்ரம்ப் செய்த &#039;சம்பவ&#039;ங்களைப் பார்க்கலாமா? ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் முதன்முதலாக கையில் எடுத்த பெரிய அஸ்திரம், ‘வெளியேற்றம்’.வெளியேற்றம்ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்!“அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக பலர் குடியேறியிருக்கிறார்கள். இவர்கள் அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்… போதை மருந்து கடத்துகிறார்கள்” என்று புகார்களை அடுக்கினார். இதை சரிசெய்ய அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றினார். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வலுகட்டாயமாக வெளியேற்றுவதைக்கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் கண்ணியமாக வெளியேற்றப்படாததை நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்குப் புறம்பாக குடியேறிய மக்கள் கை, கால் விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். பொதுவாக, போர்க் குற்றவாளிகள் தான் ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்படுவர். ஆனால், பொதுமக்கள் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டனர்.ஏன் இங்கே பொதுமக்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறிய அனைத்து மக்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்று கூறமுடியாது.காரணம், பல மக்கள் தங்களது நாட்டில் வேலை கிடைக்காததால்... சரியான நிதி ஆதாரம் இல்லாததால் தான், அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியது தவறு தான். ஆனால், உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்குக் கண்ணியம் என்பது அடிப்படையானது.மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகள் ட்ரம்பின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும், இந்தியா இதை அமைதியாகவே கடந்தது.ட்ரம்ப் - பரஸ்பர வரிட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?அடுத்தது, அமெரிக்காவின் &#039;சுதந்திர தினம்&#039;.இதை அமெரிக்காவின் சுதந்திர தினம் என்று கூறுவதை விட, ட்ரம்பின் சுதந்திர தினம் என்று கூறலாம். காரணம், இந்தச் சுதந்திர தினத்தை அறிவித்ததே ட்ரம்ப் தான். அனைத்து நாடுகளும் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி வசூல் செய்கின்றன. இதனால், அமெரிக்கா பாதிக்கப்படுகிறது என்று கூறி, நாடுகள் மற்றும் அதன்  அமெரிக்கப் பொருள்களுக்கு விதிக்கும் வரியைப் பொறுத்து, அந்தந்த நாடுகளுக்குப் பரஸ்பர வரியை விதித்தார். ட்ரம்ப் கூறிய அந்தச் சுதந்திர நாள், ஏப்ரல் 2, 2025. இந்தியாவிற்கு ஆரம்பத்தில் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. இந்த வரியினால் மிகவும் பாதிக்கப்பட்டது சீனா தான். பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி அறிவிக்கப்பட்டாலும், அதை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யவும்... குறைக்கவும் அவகாசம் கொடுத்தார் ட்ரம்ப். ஆனால், சீனாவிற்கு மட்டும் உடனடியாக வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இதை சீனா சும்மா விடவில்லை. பதிலுக்கு, அமெரிக்காவின் மீது வரி விதித்தது.இதனால், கோபமடைந்த அமெரிக்கா, சீனா மீது மீண்டும் வரி விதித்தது. இதற்கு பதிலடியாக, சீனா அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதித்தது.இப்படியே மாறி மாறி நடந்து, அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. சீனா அமெரிக்கா மீது 110 சதவிகித வரை வரி விதித்தது.பிறகு, 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், இரு நாடுகளும் அமைதியாகி, பேச்சுவார்த்தையைத் தொடங்கின. இப்போது வரை பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. எந்த முடிவும் எட்டப்படவில்லை.பேச்சுவார்த்தைக்கு இடையில் அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்கள் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனப் பொருள்களுக்கு 100 சதவிகிதம் வரி என்று அறிவித்தார். ஆனால், அது அமலுக்கு வரவில்லை.ட்ரம்ப் - நோபல் பரிசுட்ரம்பிற்கு &#039;நோ&#039; நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் - கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்?அடுத்த முக்கியமான சம்பவம் - அது &#039;நோபல் பரிசு ஆசை&#039;.ட்ரம்பிற்கு ஏனோ நோபல் பரிசு மீது தீராத ஆசை போலும். நான் அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன் என்று பட்டியலை அடுக்கி, பல முறை நோபல் பரிசைக் கேட்டார் ட்ரம்ப். ட்ரம்பிற்கு நோபல் பரிசு தர இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் பரிந்துரைத்தனர். ஆனால், இவர்களெல்லாம் மே மாதத்திற்கு பிறகே, ட்ரம்பின் பெயரைப் பரிந்துரைத்தார்கள். ஜனவரி மாதத்திற்குள் பரிந்துரைத்தால் தான், ட்ரம்பினால் நோபல் அமைதிப் பரிசு பெற்றிருக்க முடியும். அதனால், 2025-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசைத் தட்டிச் சென்றார் வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ. இதில் ட்ரம்பிற்கு &#039;வருத்தம் தாம்பா&#039;.தற்போது லேட்டஸ்டாக மச்சாடோ ட்ரம்பிற்கு நோபல் அமைதிப் பரிசைத் தந்திருக்கிறார். ஆனால், இது நோபல் பரிசு கமிட்டியின் விதிமுறைகள் படி செல்லாது.மச்சாடோவிற்கு முன்பே, FIFA அமைப்பு ட்ரம்பிற்கு &#039;ஃபிஃபா அமைதி பரிசை&#039; வழங்கியது. இந்த அமைப்பு அமைதிப் பரிசு வழங்க தொடங்கிய முதல் ஆண்டு சென்ற ஆண்டு தான்.ட்ரம்ப் நோபல் பரிசு கேட்ட தனது அமைதிக் கொடி பட்டியலில், &#039;இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தமும்&#039; இருந்தது.&#039;நான் தான்&#039; இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறி வருவதை இந்தியா பலமுறை மறுத்துவிட்டது. இருந்தாலும், இன்னமும் அவர் அந்தக் கூற்றைக் கூறுவதை நிறுத்தவில்லை.புதின் - ட்ரம்ப்அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறுத்தமா?|Explainedஇப்போது ட்ரம்பின் &#039;ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த&#039; முயற்சிகள்.ரஷ்ய அதிபர் புதினும், ட்ரம்பும் நண்பர்கள்  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-19/mm9cl8t3/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆட்சியில், ஓராண்டை, நிறைவு, செய்யும், ட்ரம்ப், -அரசியலில், அவர்செய்த, அதகள, சம்பவங்கள், என்னென்ன, In, Depth</media:keywords>
    </item>
    <item>
        <title>``எந்த நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது&amp;quot; &amp; ட்ரம்புக்கு எதிராகும் ஐரோப்பிய ஒன்றியம்!</title>
        <link>https://dailytopnewz24.com/எந்த-நாட்டின்-மிரட்டலோ-அச்சுறுத்தலோ-எங்களை-பாதிக்காது-ட்ரம்புக்கு-எதிராகும்-ஐரோப்பிய-ஒன்றியம்</link>
        <guid>https://dailytopnewz24.com/எந்த-நாட்டின்-மிரட்டலோ-அச்சுறுத்தலோ-எங்களை-பாதிக்காது-ட்ரம்புக்கு-எதிராகும்-ஐரோப்பிய-ஒன்றியம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரும் அதிபர் ட்ரம்புக்கு எதிராக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றனர். இம்மானுவேல் மக்ரோன் தனது எக்ஸ் பக்கத்தில், ``வரி அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்தச் சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பிய இறையாண்மையை உறுதிசெய்யும் வகையில், ஐரோப்பியர்கள் ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள்.இம்மானுவேல் மக்ரோன்பிரான்ஸ் நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு உறுதியுடன் இருக்கிறோம். இந்த அடிப்படையில்தான், கிரீன்லாந்தில் டென்மார்க்கால் ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவப் பயிற்சியில் பங்கேற்க நாங்கள் முடிவு செய்தோம். உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ அல்லது உலகின் வேறு எந்தவொரு நாட்டின் மிரட்டலோ, அச்சுறுத்தலோ எங்களை பாதிக்காது.&quot; எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.பிரிட்டிஷ் பிரதமர் கீர் ஸ்டார்மர் கூறியதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், ``நேட்டோ கூட்டாளிகளின் கூட்டுப் பாதுகாப்பைப் உறுதி செய்யும், நட்பு நாடுகள் மீது வரிகளை விதிப்பது முற்றிலும் தவறு. நிச்சயமாக, இது குறித்து நாங்கள் அமெரிக்க நிர்வாகத்துடன் நேரடியாகப் பேசுவோம். பிரான்ஸ் பார்வையில், கிரீன்லாந்தின் எதிர்காலத்தை டென்மார்க்கும் கிரீன்லாந்தும்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.&quot; என உறுதியான பதிலை கொடுத்திருக்கிறார்.வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-18/jzrbheod/vs-36.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எந்த, நாட்டின், மிரட்டலோ, அச்சுறுத்தலோ, எங்களை, பாதிக்காது, ட்ரம்புக்கு, எதிராகும், ஐரோப்பிய, ஒன்றியம்</media:keywords>
    </item>
    <item>
        <title>வரிப் போர்: கிரீன்லாந்து; அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் நட்பு நாடுகளுக்கும் வரி; அதிபர் ட்ரம்ப்!</title>
        <link>https://dailytopnewz24.com/வரிப்-போர்-கிரீன்லாந்து-அமெரிக்காவுக்கு-எதிராக-இருக்கும்-நட்பு-நாடுகளுக்கும்-வரி-அதிபர்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/வரிப்-போர்-கிரீன்லாந்து-அமெரிக்காவுக்கு-எதிராக-இருக்கும்-நட்பு-நாடுகளுக்கும்-வரி-அதிபர்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது அவசியம் எனக் கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கிரீன்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். அதே நேரம் உலகநாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றன. மேலும், கடந்த வாரம், ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டென்மார்க்கின் கோரிக்கையின் அடிப்படையில், ஐரோப்பிய நாடுகள் சில கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக சிறு ராணுவப் படைகளை அனுப்பியிருந்தன.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்இந்த நிலையில், கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு எதிராக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகள் மீதும் கூடுதல் வரி விதித்து அறிவித்திருக்கிறார். 2025-ல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இந்த வரி குறித்து அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சோஷியலில், ``டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நெதர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட நாடுகள், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குச் செய்யும் ஏற்றுமதிகளுக்கு 10% வரி செலுத்த வேண்டும்.இந்த வரி விகிதம் ஜூன் 2026 முதல் 25% ஆக உயரும். கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி செலுத்தப்பட வேண்டும்.&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், ஐரோப்பிய நாடுகளின் படை கிரீன்லாந்தில் இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், ``கனிம வளம் நிறைந்த ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்து, நேட்டோ கூட்டணியில் உறுப்பினராக உள்ள டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசம்.தற்போது ஐரோப்பிய நாடுகள் சில அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன. அது நமது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியிருக்கிறது.&quot; எனத் தெரிவித்திருக்கிறார்.Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-18/asyiky7x/trump" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வரிப், போர்:, கிரீன்லாந்து, அமெரிக்காவுக்கு, எதிராக, இருக்கும், நட்பு, நாடுகளுக்கும், வரி, அதிபர், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>உலக நாடுகளுக்கு நெருக்கடி? &amp; $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா &amp; யாரும் செய்திராத சாதனை |Explained</title>
        <link>https://dailytopnewz24.com/உலக-நாடுகளுக்கு-நெருக்கடி-12-டிரில்லியன்-அபரிமிதத்தில்-சீனா-யாரும்-செய்திராத-சாதனை-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/உலக-நாடுகளுக்கு-நெருக்கடி-12-டிரில்லியன்-அபரிமிதத்தில்-சீனா-யாரும்-செய்திராத-சாதனை-explained</guid>
        <description><![CDATA[ இதுவரை எந்த உலக நாடுகளுமே தொடாத உச்சத்தை சீனா தற்போது தொட்டுள்ளது. ஆம்… வர்த்தகத்தில் 1.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு அபரிமிதத்தை எட்டியுள்ளது. இதுவரை எந்த நாடுமே இவ்வளவு பெரிய அபரிமிதத்தை எட்டியதில்லை.அபரிமிதம் என்றால் என்ன என்கிற கேள்வி எழுகிறதா? சீனா சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கும். சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருக்கும். கடந்த ஆண்டில், சீனா இறக்குமதி செய்ததை விட, ஏற்றுமதியை அதிகம் செய்திருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதிகொஞ்சமா பணம் போடுங்க; ஆனா, கண்டிப்பா முதலீடு செஞ்சுடுங்க! - உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை!இந்த விளக்கத்தை எண்களில் பார்க்கலாம். 2025-ம் ஆண்டு, சீனா 3.77 டிரில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இறக்குமதியை 2.58 டிரில்லியனிற்குத் தான் செய்துள்ளது. இந்த இரண்டு கணக்கையும் கழித்துப் பார்த்தால், நமக்கு வரும் பதில் 1.19 டிரில்லியன் டாலர்கள் .2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட, 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 6.6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சீனா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இவை. நெருக்கடி தந்த ட்ரம்ப்
இந்த வர்த்தக அபரிமிதத்தை எளிதாக சீனா தொட்டுவிடவில்லை. 2025-ம் ஆண்டில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே சீனாவிற்கு அவர் பல நெருக்கடிகளைத் தந்து வந்தார். எந்த நாட்டிற்கும் இல்லாத அளவிற்கு, சீனா மீது பரஸ்பர வரியைப் போட்டு தாக்கினார் ட்ரம்ப். தான் அதிபராக பொறுப்பேற்றதுமே சீனா அமெரிக்காவிற்கு ஃபென்டனைல் ஏற்றுமதி செய்கிறது என்று கூடுதல் 10 சதவிகித வரியை அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தபோது, சீனாவிற்கு எக்கச்சக்கமாக வரியை விதித்தார். ட்ரம்ப் - பரஸ்பர வரிகடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில்பதிலுக்கு, சீனாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரியை அதிகரித்தது. இந்த வர்த்தக போரினால், சீனப் பொருள்களுக்கு அமெரிக்கா 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. அமெரிக்கப் பொருள்களுக்கு சீனா 110 சதவிகிதம் வரை வரி விதித்தது. இந்தப் போர் ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் தங்களது வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். அதனால், அமெரிக்கா சீனப் பொருள்களுக்கு 30 சதவிகிதம் என வரியைக் குறைத்தது அமெரிக்கா. பின்னர், அக்டோபர் மாதம், சீனா தனது கனிமப் பொருள்களுக்கு விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், ட்ரம்ப் சீனாவிற்கு 130 சதவிகித வரி என அறிவித்தார்.இப்படி கடந்த ஆண்டு முழுவதுமே, சீனா மீது அமெரிக்கா வரி விதிப்பதும்… பின்னர் விலக்குவதுமாக இருந்தது.பிற நாடுகளுக்கு வரி அமலாவதற்கு ஓரளவு அவகாசம் கொடுக்கப்பட்டாலும், சீனாவிற்கு மட்டும் இந்த வரிகள் கிட்டத்தட்ட உடனடியாக அமலுக்கு வந்தன.இதை 20 – 30 வரிகளில் படித்துவிடுவது எளிதாக இருக்கலாம். இத்தனை வரிகளை ஒரு நாடு தாங்குவது அவ்வளவு எளிதல்ல.ட்ரம்ப் - ஜி ஜின்பிங்Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் &#039;இந்த 10&#039; விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க!காரணம், 2025-ம் ஆண்டு, ஜனவரி முதல் அக்டோபர் வரை, சீனா அமெரிக்காவிற்கு 2.66 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.மேலும், அமெரிக்காவின் டாப் சப்ளையர் நாடு சீனா.இப்படியொரு சந்தை உள்ள ஒரு நாட்டில் அதிக வரியை சந்திப்பது எந்த நாட்டிற்கும் நெருக்கடியானது.இவற்றைத் தாண்டி, சீனா வர்த்தக அபரிமிதத்தைத் தொட்டுள்ளது பெரும் ஆச்சரியம் தான்.ரூட்டை மாற்றிய சீனா
இந்த ஆச்சரியத்தைத் தொட, சீனா பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. தனது ரூட்டை மாற்றியது அவ்வளவு தான். ட்ரம்பின் வரிகளால், அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைந்தன. இதை சமன் செய்ய தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்ப நாடுகள், தென் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியை முன்பை விட கூடுதலாக்கியது. இந்த மாற்றத்தினால், கடந்த நவம்பர் மாதத்திலேயே 1 டிரில்லியன் டாலர் அபரிமிதத்தை சீனா தாண்டியிருக்கிறது. ஆக, இந்த வளர்ச்சி அமெரிக்காவைத் தாண்டி உள்ளது. இந்த வர்த்தக அபரிமிதத்தைத் தொட 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, வர்த்தக அபரிமிதம் என்றால் அதிக உற்பத்தி இருந்திருக்க வேண்டும்... அப்போது தான் ஏற்றுமதி அதிகம் செய்ய முடியும். அதிக உற்பத்தியை ஒரு ஆண்டில் திடீரென செய்துவிட முடியாது. ஆக, சீனா பல ஆண்டுகளாக கட்டி வந்த… கடைப்பிடித்து வந்த தொழில் கொள்கை தான் இப்போதைய இந்த வளர்ச்சிக்குக் காரணம். சீனா வளர வளர தனது உற்பத்தித் திறனையும் அதிகரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?இரண்டு, 2021-ம் ஆண்டில் சீனா ரியல் எஸ்டேட்டில் பெரும் சறுக்கலைக் கொண்டது. அதுவரை சீனாவின் வளர்ச்சியில் ரியல் எஸ்டேட் துறை பெரும்பங்காற்றியது. ஆம்… சீன மக்கள் வீடுகளை நல்ல முதலீடாக பார்த்து வந்தனர். அதனால், அவர்கள் தங்க ஒரு வீடு, முதலீட்டிற்கு ஒரு அல்லது பல வீடு என்கிற கான்செப்ட்டைப் பின்பற்றி வந்தனர். இதனால், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கடன் வாங்கி பல வீடுகளைக் கட்டி குவித்தனர். இதனால், வீடுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கும் கடன்களைக் கட்டுக்குள் கொண்டுவர கடும் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது.இதனால், மேலும் கடன் வாங்க முடியாமல், டெவலப்பர் நிறுவனங்களால் வீட்டைக் கட்டி முடிக்க முடியவில்லை. ஏற்கெனவே வாங்கிய கடனையும் அடைக்க முடியவில்லை.விளைவு, ரியல் எஸ்டேட் துறை சீனாவில் பலத்த சரிவை சந்தித்தது. வீடுகளின் விலையும் சரிந்தன.முதலீடுகளாக வீட்டை வாங்கி போட்டிருந்த சீன மக்களுக்கு இது பெரும் அடி.இதனால், அவர்கள் செலவு செய்வதை பெருமளவு குறைத்தனர். சீனாவின் உள்நாட்டுத் தேவை பலத்த சரிவைக் கண்டது.மக்களின் தேவை குறையும்போது, இறக்குமதி செய்யப்படுவது குறையும்.அப்போது, தானாகவே ஏற்றுமதி அதிகரிக் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-17/eubwaq40/EXPLAINED.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உலக, நாடுகளுக்கு, நெருக்கடி, 1.2, டிரில்லியன், அபரிமிதத்தில், சீனா, யாரும், செய்திராத, சாதனை, Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!</title>
        <link>https://dailytopnewz24.com/iran-9-வயதில்-ஈரானிலிருந்து-வெளியேற்றம்-ஈரானின்-கடைசி-ஷாவின்-மகளான-லெய்லா-பஹ்லவியின்-சோக-கதை</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-9-வயதில்-ஈரானிலிருந்து-வெளியேற்றம்-ஈரானின்-கடைசி-ஷாவின்-மகளான-லெய்லா-பஹ்லவியின்-சோக-கதை</guid>
        <description><![CDATA[ ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டும் மன்னராட்சி முறையை மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவியின் கடைசி மகளும், ரெசா பஹ்லவியின் இளைய தங்கையுமான லெய்லா பஹ்லவியின் சோகக் கதையைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர். அந்தக் கதையைப் பார்ப்போமா...Reza Pahlavi 1979-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி உச்சத்தில் இருந்தபோது, &#039;ஷாவுக்கு மரணம்&#039; என்ற கோஷத்துடன் மக்கள் கூட்டம் அரச அரண்மனைகளை சுற்றி வளைத்தது. இதனால், ஈரானின் கடைசி ஷா முகமது ரிசா பஹ்லவி மற்றும் அவரது மனைவி எம்பிரஸ் பரா பஹ்லவியின் குடும்பம் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தக் குடும்பத்தின் இளைய மகள் இளவரசி லெய்லா பஹ்லவி 1970-ஆம் ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி தெஹ்ரானில் பிறந்தவர். ஈரானை விட்டு வெளியேறும்போது லெய்லாவுக்கு வயது 9.புரட்சியால் குடும்பத்தின் உரிமைகள், குடியுரிமை அனைத்தும் பறிக்கப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்ட பிறகு, பஹ்லவி குடும்பம் எகிப்து, மொராக்கோ, பஹாமாஸ், மெக்ஸிகோ, அமெரிக்கா, பனாமா உள்ளிட்ட பல நாடுகளில் தங்கினர். கொலை முயற்சி அச்சுறுத்தல்கள் காரணமாக எந்த நாடும் நீண்டகாலம் தஞ்சம் அளிக்க மறுத்தது. 1980-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி, முகமது ரிசா பஹ்லவி மேம்பட்ட லிம்போமா நோயால் எகிப்தின் கெய்ரோவில் உயிரிழந்தார். இது லெய்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. Leila Pahlaviபிறகு, இவர்களின் குடும்பம் அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள கிரீன்விச்சில் குடியேறியது. லெய்லா நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பள்ளியில் பயின்றார். 1988-ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்தவர், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளை சரளமாகப் பேசவும் அவர் கற்றுக் கொண்டார். ஆனால், நாடு கடத்தப்பட்ட விஷயம், தந்தையின் இழப்பு அவரிடையே ஆழமான தாக்கத்தை உண்டாக்கியது. அது அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது.இதனால் அவர் சோர்வு நோய் (chronic fatigue syndrome), மனச்சோர்வு, அனோரெக்ஸியா உள்ளிட்ட பல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் பல்வேறு இடங்களுக்குப் பயணித்து சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். இதனால் தூக்க மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகளுக்கும் அவர் அடிமையானார். இப்படியான மருந்துகளை அதிகமாக உட்கொண்டதால், 2001-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி லண்டனின் லியோனார்ட் ஹோட்டலில் அவரது அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். Leila Pahlavi Cementeryஅப்போது அவருக்கு வயது 31. பிரேதப் பரிசோதனையில், தூக்க மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டதும், கொக்கைன் போதைப்பொருள் எடுத்துக் கொண்டதும் கண்டறியப்பட்டது. அவர் தனது மருத்துவரின் மேசையிலிருந்து மருந்துகளைத் திருடியதாகவும் தெரியவந்தது. இளவரசி லெய்லாவின் உடல் பாரிஸில் உள்ள பாஸி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. குழந்தைப் பருவத்திலேயே தாயக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, அந்நிய நாட்டில் அடையாள நெருக்கடி உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொண்டார். லெய்லா எப்போதும் பொது வாழ்க்கையைத் தவிர்த்து, தனியாக வாழ விரும்பினார். ஈரானில் தற்போது மீண்டும் மன்னராட்சி திரும்ப வேண்டும் என மக்கள் குரலெழுப்பும் நிலையில், இளவரசி லெய்லாவின் இந்த சோகக் கதை மீண்டும் நினைவுகூரப்படுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-16/nl01evt5/Princess-Leila-Pahlavi-–82-1024x721.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, வயதில், ஈரானிலிருந்து, வெளியேற்றம், ஈரானின், கடைசி, ஷாவின், மகளான, லெய்லா, பஹ்லவியின், சோக, கதை</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும்  அழகான செயல்&amp;quot; &amp; நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ; நெகிழ்ந்த ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/பரஸ்பர-மரியாதையை-வெளிப்படுத்தும்-அழகான-செயல்-நோபல்-பரிசை-வழங்கிய-மச்சாடோ-நெகிழ்ந்த-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/பரஸ்பர-மரியாதையை-வெளிப்படுத்தும்-அழகான-செயல்-நோபல்-பரிசை-வழங்கிய-மச்சாடோ-நெகிழ்ந்த-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வழங்கியதாகத் தெரிவித்திருக்கிறார்.  அடம் பிடித்த ட்ரம்ப்தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருந்தார்.மரியா கொரினா மச்சாடோ  - ட்ரம்ப் பகிர்ந்துகொள்கிறேன்!இதனிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவின் அதிரடி ராணுவ நடவடிக்கையால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவியும் நோபல் பரிசு வென்றவருமான மரியா கொரினா மச்சாடோ,  `எனக்கு கிடைத்த நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்&#039; என்று தெரிவித்திருந்தார். நோபல் கமிட்டி எதிர்ப்பு ஆனால் “ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை&quot; என்று மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மரியா கொரினா மச்சாடோ  - ட்ரம்ப் நோபல் பரிசை வழங்கிய மச்சாடோஇந்நிலையில் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மச்சாடோ வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு பதக்கத்தை அவருக்கு வழங்கியிருக்கிறார்.ட்ரம்ப் நெகிழ்ச்சி பதிவு இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ட்ரம்ப், &quot; வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. அவர் ஒரு சிறந்த பெண். பல துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறார். நான் செய்த பணிகளுக்காக தன்னுடைய அமைதிக்கான நோபல் பரிசை மரியா எனக்கு வழங்கினார். இது பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஓர் அழகான செயல். நன்றி, மரியா!&quot; என்று பதிவிட்டிருக்கிறார்.மரியா கொரினா மச்சாடோட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன்!செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மச்சாடோ, &quot; தனது நோபல் பரிசை ட்ரம்பிற்கு கொடுத்துவிட்டேன். இது அவருடைய தனித்துவமான அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும். அதிபர் ட்ரம்பை நம்பலாம்&quot; என்று தெரிவித்திருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-16/m43yhv4z/onpe1e98trump-nobel625x30016January26.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பரஸ்பர, மரியாதையை, வெளிப்படுத்தும், அழகான, செயல், நோபல், பரிசை, வழங்கிய, மச்சாடோ, நெகிழ்ந்த, ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/trump-75-நாடுகளுக்கான-விசா-சேவையை-நிறுத்திய-அமெரிக்கா-ட்ரம்பின்-இந்த-அதிரடி-நடவடிக்கை-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/trump-75-நாடுகளுக்கான-விசா-சேவையை-நிறுத்திய-அமெரிக்கா-ட்ரம்பின்-இந்த-அதிரடி-நடவடிக்கை-ஏன்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது வரும் ஜனவரி 21-ம் தேதி முதல், 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. டிரம்ப்அதாவது ஆப்கானிஸ்தான், அல்பேனியா, அல்ஜீரியா, ஆன்டிகுவா மற்றும் பார்புடா, ஆர்மீனியா, பஹாமாஸ், வங்கதேசம், பார்படாஸ், பெலாரூஸ், பெலிஸ், பூட்டான், போஸ்னியா, பிரேசில், மியான்மர், கம்போடியா, கேமரூன், கேப் வெர்டே, கொலம்பியா, கோட் டி&#039;ஐவரி, கியூபா, காங்கோ ஜனநாயக குடியரசு, டொமினிகா, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா, ஃபிஜி, காம்பியா, ஜார்ஜியா, கானா, கிரெனடா, குவாத்தமாலா, கினி, ஹைதி, ஈரான், ஈராக், ஜமைக்கா, ஜோர்டான், கஜகஸ்தான், கொசோவோ, குவைத், கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், லைபீரியா, லிபியா, மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, மான்டனீக்ரோ, மொராக்கோ, நேபாளம், நிகரகுவா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, ரஷ்யா, ருவாண்டா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், செனகல், சியரா லியோன், சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா, தான்சானியா, தாய்லாந்து, டோகோ, துனிசியா, உகாண்டா, உருகுவே, உஸ்பெகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட நாடுகளுக்கு குடியேற்ற விசா நிறுத்தப்பட்டுள்ளது.டிரம்ப்இந்த தடையிலிருந்து, சுற்றுலா விசா, வணிக விசா மற்றும் மாணவர் விசாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &quot;அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் பெறக்கூடிய குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளில் இருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன.அமெரிக்க மக்களின் செல்வத்தை இவர்கள் சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த தடை என்பது தொடரும்&quot; என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்தியா பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் சூழலிலும் பாகிஸ்தானையும் இந்த பட்டியலில் சேர்த்து இருப்பது தற்போது விவாதத்தை எழுப்பி இருக்கிறது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை தந்திருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-04/c853fd44-351e-4f2f-a178-393e10049ae4/AP20088645312572.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Trump:, நாடுகளுக்கான, விசா, சேவையை, நிறுத்திய, அமெரிக்கா, ட்ரம்பின், இந்த, அதிரடி, நடவடிக்கை, ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்?  &amp; பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்!  | In&amp;depth</title>
        <link>https://dailytopnewz24.com/iran-இன்னொரு-இலங்கையாகிறதா-இரான்-பொருளாதார-நெருக்கடியும்-அரசியல்-ஆட்டமும்-in-depth</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-இன்னொரு-இலங்கையாகிறதா-இரான்-பொருளாதார-நெருக்கடியும்-அரசியல்-ஆட்டமும்-in-depth</guid>
        <description><![CDATA[ முன்னாள் ஆசிரியர் , பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) தலைநகரில் வெடித்த வர்த்தகர்கள் போராட்டம்!கடந்த இரு வாரங்களாக இரான் பெரும் கொந்தளிப்பிலிருக்கிறது. இரானின் இஸ்லாமிய மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்கள் இரானிய ஆட்சிக்கு உலை வைத்துவிடுமா என்ற கேள்வியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை அடுத்து, இந்த உள் நாட்டு கிளர்ச்சி,  மற்றொரு பிராந்தியப் போரைத் தூண்டுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இரானின் தலை நகர் டெஹ்ரானில் கடந்த டிசம்பர் 28ந்தேதி முதலில் தொடங்கியது பிரச்னை.  இரானிய நாணயமான, ரியாலின் மதிப்பு , அமெரிக்க டாலருக்கு எதிராக அதல பாதாளத்தில் வீழ்ந்த நிலையில் ( 1 டாலர் - கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரியால் ) , டெஹ்ரானின் முக்கிய வணிக வீதியில் உள்ள பெரிய மார்க்கெட் வர்த்தகர்கள் கடையடைப்பு நடத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் பின்னர் சேர்ந்துகொள்ள எதிர்ப்புகள் பெருகின. இரான் போராட்டம்!இந்தக் கொந்தளிப்புக்கு காரணம் , கடந்த பல ஆண்டுகளாகவே இரான் எதிர்கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள்தான் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது கடந்த ஆண்டு நடத்திய 12 நாள் குண்டுத்தாக்குதலும் இரானியப் பொருளாதாரத்தை மேலும் அழிவுப்பாதைக்குக் கொண்டுசென்றது. இரானின் அணு சக்தித் திட்டம் குறித்து ஒபாமா நிர்வாகம் இரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் நிர்வாகம் வெளியேறியது. அதை அடுத்து கடுமையாக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் இரானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தின. இரானிய நாணயத்தின் தொடர் வீழ்ச்சி... விலைவாசி உயர்வு!கடந்த ஆண்டு ஓர்  அமெரிக்க டாலருக்கு எதிராக 7 லட்சம் ரியால்கள் என்ற அளவில் மோசமான நிலையில் இருந்த இரானிய நாணயம், டிசம்பர் மாதம் மேலும் சரிந்து ஒரு மில்லியன் ரியால் என்ற அளவுக்கு மேல் வீழ்ந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கொண்டு சென்றது.இரானியப் பணவீக்கம் சுமார் 40 சதவீதம் என்ற அளவுக்கு ராக்கெட் போல் பாய்ந்த நிலையில்,பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தையும் , வணிகர்களின் வர்த்தகத்தையும் பாதித்தது.இந்த நிலையில் வெடித்த டெஹ்ரான் போராட்டங்கள், மேலும் நாடெங்கும் பரவின. இரான் முழுவதும் சுமார் 68 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.Iranஇந்த ஆர்ப்பாட்டங்களை கடந்த காலங்களில் ஒடுக்கியதைப் போலவே இம்முறையும் ஒடுக்க இரான் எத்தனித்தது.ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளை போராட்டக்காரர்களை ஒடுக்க இரானின் மதகுருமார்கள் அரசு ஏவியது.பொதுமக்கள் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படைகள் பல இடங்களில் துப்பாக்கிப் பிரயோகங்களை நடத்தியதில், பல நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கின்றனர்.2,000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!இந்த வன்முறைகளில் சுமார் 2,400 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இரான் அரசு இதை மறுக்கிறது. இரானின் வெளி நாட்டு எதிரிகள் செய்யும் பொய்ப் பிரசாரம் என்று இரான் வர்ணிக்கிறது.செய்தித் தணிக்கைபோர் என்றாலே முதல் பலி உண்மைச் செய்திதான் என்பார்கள். எதேச்சாதிகார நாடுகளிலும் நிலைமை அப்படித்தான் என்பது தெரிந்த விஷயம்.இரான் ஏற்கனவே கடும் செய்தித் தணிக்கையை அனுபவித்துவரும் நாடு. வெளிநாட்டு ஊடகங்கள் எதுவும் அங்கு செயல்படுவதில்லை. இந்த நிலையில் இந்தப் போராட்ட செய்திகள் இணையம் மூலமாக மட்டுமே வெளி உலகுக்குத் தெரியவரும் என்பதை உணர்ந்த இரானிய அரசு, கடந்த ஒருவாரமாக இணைய சேவையை முடக்கியிருக்கிறது.இரான்ஆனால் இதையும் மீறி, இரானில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வி.பி.என் போன்ற வலையமைப்புகளை பயன்படுத்தி ஓரளவு செய்திகளை வெளியே கொண்டுவந்திருக்கின்றனர்.எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் விண்வெளி வழியே இணையசேவைகளை தரும் நிறுவனம். இந்த ஸ்டார்லின்க் ஏற்கனவே இரானில் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதை ரகசியமாக பயன்படுத்தி பல இரானியர்கள் செய்திகளை வெளி உலகுக்குத் தெரியப்படுத்திவருகிறார்கள்.டெஹ்ரானில் சுமார் 200 போராட்டக்காரர்களின் சடலங்கள் ஒரு மருத்துவமனை சடலக்கிடங்கில் அடுக்கி வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியெ கொண்டுவந்தது இந்த மாதிரி ரகசிய இணைய சேவைகள் மூலமாகத்தான்.போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை?

இதனிடையே, இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பலருக்கு அவசர அவசரமாக இரானிய நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து வருவதாகவும் செய்திகள் வந்தன. இதைக் கண்டித்து தனது சமூக ஊடகமான Truth Socialல் பதிவு ஒன்றை செய்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போராட்டக்காரர்கள் மீது மரண தண்டனை விதிப்பதை இரானிய அரசு நிறுத்தவேண்டும் இல்லையேல் அமெரிக்கா நேரடியாக தலையிடும் என்று எச்சரித்தது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் எர்பான் சொல்தானி என்ற 26 வயது இளைஞர். இவர் டெஹ்ரான் அருகே பர்திஸ் என்ற நகரில் துணிக்கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருபவர். இவரைக் கைது செய்த இரான் பாதுகாப்புப் படையினர், இவர் மீது இரண்டே நாட்களில் விசாரணை நடத்தி மரண தண்டனை விதித்து, புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் அச்சுறுத்தலை அடுத்து அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.அமெரிக்கா, மேற்குலக நிலைப்பாடு!வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்ற நிலைப்பாட்டை தனது கொள்கையாகவே முழங்கி, ஆட்சியைப் பிடித்த ட்ரம்ப், பதவிக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இரான் மீது தாக்குதல், உக்ரைன் விவகாரத்தில் முன்னுக்கு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-15/7za95epz/Untitled-design.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, இன்னொரு, இலங்கையாகிறதா, இரான், பொருளாதார, நெருக்கடியும், அரசியல், ஆட்டமும், In-depth</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;நீங்கள் இறந்துவிட்டீர்களா?&amp;apos; &amp; சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலி!</title>
        <link>https://dailytopnewz24.com/நீங்கள்-இறந்துவிட்டீர்களா-சிங்கிள்கள்-மத்தியில்-டிரெண்ட்-ஆன-புதிய-செயலி</link>
        <guid>https://dailytopnewz24.com/நீங்கள்-இறந்துவிட்டீர்களா-சிங்கிள்கள்-மத்தியில்-டிரெண்ட்-ஆன-புதிய-செயலி</guid>
        <description><![CDATA[ தனித்து வாழ்பவர்கள் நலமாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட ‘Are you dead?’ என்ற செயலி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சீனாவில் தனிநபர் குடும்பங்களின் எண்ணிக்கை 2030-ம் ஆண்டுக்குள் 20 கோடியாக அதிகரிக்கும் என அந்நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனியாக வாழ்ந்து வரும் இளைஞர்கள் நலமாக இருப்பதை உறுதிப்படுத்த ‘Are you dead?’ என்ற செயலி பயன்படுத்தப்படுகிறது.சிங்கிள்கள் மத்தியில் டிரெண்ட் ஆன புதிய செயலிசீன மொழியில் Sileme (நீங்கள் இறந்துவிட்டீர்களா?) என்ற பெயரில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. தினமும் அந்த செயலியில் இருக்கும் பெரிய பட்டனை பயன்படுத்துபவர் அழுத்த வேண்டும். இரண்டு நாள்களுக்கு மேல் அந்த செயலியில் செக் இன் செய்து பட்டனை அழுத்தாவிட்டால், அதிலிருக்கும் அவசர தொடர்பு எண்ணுக்கு இந்த செயலி தகவல் அனுப்பும் வகையில் இது செயல்படுகிறது. கடந்த ஆண்டு, மே மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பலரும் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.முதலில் இலவசமாக வெளியிடப்பட்ட இந்த செயலிக்கு வரவேற்பு அதிகரித்ததால், அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 8 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.103.45 செலுத்தி இதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியானது சீனாவில் அதிகம் பேர் பதிவிறக்கம் செய்த கட்டண செயலிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதே போல ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் வாழும் சீனர்களும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.சீனாவில் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது. இதனைப் பெரும்பாலும் இளம் வயதினரே பயன்படுத்துவதால், முதியோருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட செயலியை உருவாக்குவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.Chinese“எந்த வயது உடையவராக இருந்தாலும் அவர்களுக்கு இந்த செயலி அவசியம் வேண்டும்”, “ நான் தனியாக இருக்கும்போது இறந்து போனால் என் உடலை யார் எடுத்துச் செல்வார்கள் என்ற கவலை இனிமேல் இல்லை”, &quot;வீட்டை விட்டு வெகு தூரம் சென்று, தனியாக தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த செயலி உதவும்” என... இந்த செயலிக்கு சீனர்கள் மத்தியில் வரவேற்பு குவிகிறது. மறுபுறம், பயனுள்ளதாக இருந்தாலும், இப்படியா பெயர் வைப்பது? ‘Are you okay? ‘How are you?’ என்பது மாதிரியான நேர்மறையான சொற்களை பயன்படுத்தலாமே’ என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-14/rroklbrv/demumu.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நீங்கள், இறந்துவிட்டீர்களா, சிங்கிள்கள், மத்தியில், டிரெண்ட், ஆன, புதிய, செயலி</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;HELP IS ON ITS WAY&amp;apos; &amp; ஈரான் மக்களுக்கு ட்ரம்ப் மெசேஜ்; மீண்டும் ஈரானை தாக்குமா அமெரிக்கா?</title>
        <link>https://dailytopnewz24.com/help-is-on-its-way-ஈரான்-மக்களுக்கு-ட்ரம்ப்-மெசேஜ்-மீண்டும்-ஈரானை-தாக்குமா-அமெரிக்கா</link>
        <guid>https://dailytopnewz24.com/help-is-on-its-way-ஈரான்-மக்களுக்கு-ட்ரம்ப்-மெசேஜ்-மீண்டும்-ஈரானை-தாக்குமா-அமெரிக்கா</guid>
        <description><![CDATA[ ஈரானில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்னையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகுந்து என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்... செய்துகொண்டிருக்கிறார். நேற்று முன்தினம், ஈரான் உடன் வணிகம் செய்யும் அனைத்து நாடுகளின் மீதும் அமெரிக்கா 25 சதவிகிதம் வரி விதிக்கும் என்று கூறியிருந்தார் ட்ரம்ப்.முன்னர், ஈரான் போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு தாக்குதல் நடத்தினால், அது இதுவரை காணாத விளைவுகளைச் சந்திக்கும் என்று வேறு எச்சரித்திருந்தார். இந்த நிலையில் தான், ஈரான் போராட்டத்தில், 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என்கிற செய்தி வெளியாகி உள்ளது.ட்ரம்ப் பதிவுவர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explainedட்ரம்ப் பதிவு 
நேற்று ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். &quot;ஈரான் நாட்டுப்பற்றாளர்களே, தொடர்ந்து போராடுங்கள். உங்களுடைய அமைப்பைக் கையிலெடுங்கள். போராட்டக்காரர்களை கொல்பவர்கள் மற்றும் அவர்களைத் துன்புறுத்துபவர்களின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டும். போராட்டக்காரர்களைக் கொல்லும் இந்த அறிவில்லாத கொலைகள் முடியும் வரை, ஈரான் அதிகாரிகளுடன் நடக்கும் அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்துவிட்டேன். உதவி உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது&quot; என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.மீண்டும் தாக்குதலா?
ஏற்கெனவே, ஈரான் மீது கடும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார் ட்ரம்ப். &#039;HELP IS ON ITS WAY&#039; என்று அவர் குறிப்பிட்டிருப்பதை வைத்துப் பார்த்தால், மீண்டும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துமா என்கிற கேள்வி எழுகிறது. காரணம், 2025-ம் ஆண்டு ஜூன் மாதம், ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூண்ட போது, தன் பங்கிற்கு, அமெரிக்காவும் ஈரானில் தாக்குதலை நடத்தியது. ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-14/dy7ru09r/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>HELP, ITS, WAY, ஈரான், மக்களுக்கு, ட்ரம்ப், மெசேஜ், மீண்டும், ஈரானை, தாக்குமா, அமெரிக்கா</media:keywords>
    </item>
    <item>
        <title>Iran: பற்றி எரியும் ஈரான்; போராட்ட பூமியில் 2,000&amp;ஐ தொட்ட உயிர் பலி! &amp; தற்போதைய நிலவரம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/iran-பற்றி-எரியும்-ஈரான்-போராட்ட-பூமியில்-2000-ஐ-தொட்ட-உயிர்-பலி-தற்போதைய-நிலவரம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/iran-பற்றி-எரியும்-ஈரான்-போராட்ட-பூமியில்-2000-ஐ-தொட்ட-உயிர்-பலி-தற்போதைய-நிலவரம்-என்ன</guid>
        <description><![CDATA[ மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் ஈரான் நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப் போராட்டம் நடந்துவருகிறது. தெஹ்ரான் நகரின் மையப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதனால் நகரம் ஒருவித அச்ச உணர்வுடனேயே காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 4 நாள்களாக ஈரானின் தகவல் தொடர்பு முடக்கப்பட்டிருந்தது.Iran Protestsஇணையச் சேவைகள் இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை. இந்த நிலையில், ஈரானியர்கள் இன்றுதான் வெளிநாடுகளுக்கு அலைபேசி மூலம் தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட்டனர். மேலும், வெளிநாட்டு சமூக ஊடகத் தளங்களுக்கான தடை நீடிக்கும் நிலையில், உள்நாட்டு வலைதளங்களை மட்டுமே மக்கள் அணுக முடிகிறது.நடைபெற்று வரும் தீவிரப் போராட்டங்களில், பொதுமக்கள், காவல்துறை என இரு தரப்பிலும் இதுவரை சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசு அதிகாரி ஒருவர் இன்று (ஜனவரி 13, 2026) தெரிவித்திருக்கிறார்.இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ``ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைத் தொடரும் நாட்டின் மீது 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்&quot; என எச்சரித்துள்ளார். ஈரானைத் தனிமைப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, சர்வதேச வர்த்தகப் பாதைகளில் பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.Iran Protestsஅமெரிக்காவின் இந்த அறிவிப்பு இந்தியாவிற்கு, குறிப்பாக வேளாண் ஏற்றுமதித் துறைக்கு மறைமுகமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பாஸ்மதி அரிசியின் முக்கிய இறக்குமதியாளராக இருக்கும் நாடு ஈரான். தற்போது அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் மூன்றாம் நாடுகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், பணப் பரிமாற்றச் சிக்கல்கள், காப்பீட்டு அபாயங்கள் மற்றும் வர்த்தகர்களின் தயக்கம் காரணமாக இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கணிசமாகப் பாதிக்கப்படக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-13/n80uc3ox/Iran-Protests" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Iran:, பற்றி, எரியும், ஈரான், போராட்ட, பூமியில், 2, 000-ஐ, தொட்ட, உயிர், பலி, தற்போதைய, நிலவரம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>பிரபலமாகும் ``Are you dead?&amp;quot; செயலி: சீனாவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை! &amp; என்ன காரணம்?</title>
        <link>https://dailytopnewz24.com/பிரபலமாகும்-are-you-dead-செயலி-சீனாவில்-முதலிடத்தைப்-பிடித்து-சாதனை-என்ன-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரபலமாகும்-are-you-dead-செயலி-சீனாவில்-முதலிடத்தைப்-பிடித்து-சாதனை-என்ன-காரணம்</guid>
        <description><![CDATA[ நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் ``நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?&quot; என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் &quot;தனிமை மரணங்கள்&quot; (Lonely Deaths) பெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளன. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக சீனாவின் செங்சோவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சீனாவில் &quot;சி-லே-மா&quot; (Si Le Ma - Are you dead?) என்ற செயலியை உருவாக்கியிருக்கிறார்கள். &quot;நீங்கள் இறந்துவிட்டீர்களா?&quot; என்று நேரடியாகப் பொருள் தரும் இந்தப் பெயரைக் கொண்ட செயலி, 2026-ம் ஆண்டில் சீனாவின் கட்டணச் செயலிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதே நேரம், அந்நாட்டு இணையதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.தனிமைஇந்த ஆப்பை டவுன்லோடு செய்யும் பயனர்கள், தங்களுக்கு நெருக்கமான ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை &#039;அவசரத் தொடர்பு&#039; (Emergency Contact) எண்ணாகப் பதிய வேண்டும். பயனர் தினமும் இந்தச் செயலிக்குள் சென்று, தான் நலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவேளை, பயனர் தொடர்ந்து இரண்டு நாள்களுக்குச் செயலிக்குள் வராமல் இருந்தால், அவர் உயிருடன் இருக்கிறாரா? என்பதைச் சரிபார்க்கும்படி அந்த அவசரத் தொடர்பு நபருக்குச் செயலி தானாகவே மின்னஞ்சல் அனுப்பிவிடும்.சீனாவில் மிகவும் பிரபலமான &quot;ஈ-லே-மா&quot; (உங்களுக்குப் பசிக்கிறதா?) என்ற உணவு விநியோகச் செயலியின் பெயரைப் போலவே, &quot;சி-லே-மா&quot; என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மரணத்தை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் வாழ்க்கையின் மதிப்பை உணர வைக்கும் என இதன் உருவாக்குநர்களில் ஒருவரான லியூ தெரிவித்துள்ளார்.ஆரம்பத்தில் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் செயலி, தற்போது சுமார் 1.15 டாலர் (சுமார் 8 யுவான்) கட்டணத்தில் கிடைக்கிறது. ஆப்ஒரு வருடத்தைக்கூட நிறைவு செய்யாத இந்தச் செயலி, சீனாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதற்குக் காரணம், அங்கு அதிகரித்து வரும் தனிமைதான் எனச் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். தொழில்நுட்பம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமல்ல, மனிதர்களின் அடிப்படைப் பாதுகாப்பு மற்றும் வாழ்வின் இறுதிக்கணங்கள் கண்ணியமாக இருப்பதை உறுதி செய்யவும் உதவும் என்பதற்கு இந்தச் செயலி ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது என்றப் பாராட்டும் பெற்றிருக்கிறது.திருமணத்துக்கு முன் தனிமை; பணத்தைச் சுருட்டியதும் எஸ்கேப் - யார் இந்த மன்மதன் சூர்யா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-13/ecg6mrec/Lonely" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிரபலமாகும், Are, you, dead, செயலி:, சீனாவில், முதலிடத்தைப், பிடித்து, சாதனை, என்ன, காரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரானுடன்-வணிகமா-ட்ரம்ப்-போட்ட-25-வரி-மீண்டும்-இந்தியாவுக்குப்-பாதிப்பு-மொத்தம்-எவ்வளவு-வரி</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரானுடன்-வணிகமா-ட்ரம்ப்-போட்ட-25-வரி-மீண்டும்-இந்தியாவுக்குப்-பாதிப்பு-மொத்தம்-எவ்வளவு-வரி</guid>
        <description><![CDATA[ கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்தது. அப்போது ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது.இதனால், கடந்த சில மாதங்களாக, ஈரான், அமெரிக்காவிற்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்த நிலையில், ஈரானில் விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்ற காரணங்களால் தற்போது அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்‌ அந்த நாட்டு மக்கள்.டொனால்டு ட்ரம்ப்வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explainedட்ரம்பஇதில் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் அரசிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார்.மேலும், ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால், இதுவரை காணாத தாக்குதலை ஈரான் காணும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ட்ரம்ப்.அடுத்ததாக, தனது வழக்கமான அஸ்திரமான &#039;வரி&#039;யை ஈரானிற்கு எதிராக ஏவியுள்ளார் ட்ரம்ப். அதாவது, ஈரான் உடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் உடனடியாக 25 சதவிகித வரி அமலுக்கு வருகிறது என்று தனது ட்ரூத் பக்கத்தில் கூறியுள்ளார்.இந்தியாவிற்குப் பாதிப்பா?இந்த உத்தரவால் இந்தியாவும் நிச்சயம் பாதிக்கப்படும்.இந்தியா பாஸ்மதி அரிசி, அரிசி, டீ, சர்க்கரை, பழங்கள் போன்றவற்றை ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது.ஈரானிலிருந்து பேரீச்சம்ப்பழம், கிவி, பிஸ்தா, ஆப்பிள் போன்றவற்றை இறக்குமதி செய்கிறது.2024-ம் ஆண்டின் தரவுகளின்படி, 698.51 மில்லியன்‌ டாலர் அளவிற்கு ஈரானுக்கு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது இந்தியா.இதுபோக, டீ, காபி, மசாலாக்களை 73.93 மில்லியன் டாலர்களுக்கும், பழங்களை 66.12 மில்லியன் டாலர்களுக்கும், இயந்திரங்களை 32.65 மில்லியன் டாலர்களுக்கும் இந்தியா ஈரானுக்கு ஏற்றுமதி செய்கிறது.ஏற்றுமதி - இறக்குமதி Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்?இறக்குமதி86.48 மில்லியன் டாலருக்கு எண்ணெய் சார்ந்த பொருள்களையும், 55.65 மில்லியன் டாலருக்கு உப்பு, கற்கள், சிமெண்ட், பிளாஸ்டர் போன்ற பொருள்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது இந்தியா.இந்த ஏற்றுமதிப் பட்டியல்களும், இறக்குமதிப் பட்டியல்களும் இன்னும் நீள்கின்றன.இந்தியாவிற்கு 75 சதவிகிதமா?இப்போது ஏற்கெனவே ரஷ்ய இறக்குமதிகளால் 25 சதவீத வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவீத வரியைச் சந்தித்து வருகிறது இந்தியா.இதில் இந்த 25 சதவீத வரியும் சேர்ந்தால் 75 சதவீத வரியாக மாறும்.இதை இந்திய அரசு அப்படியே விட்டுவிடாது. நிச்சயம் ஏதாவது முடிவெடுக்கும்.ஆனால், அந்த முடிவு எதுவாக இருந்தாலும், இந்திய - அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இது பாசிட்டிவ் ஆனதா... நெகட்டிவ் ஆனதா என்பது இந்தியாவின் முடிவைப் பொறுத்தே அமையும்.12 நாள்களில் &#039;அமோக&#039; வளர்ச்சி: கிரீன்லேண்டை குறி வைக்கும் ட்ரம்ப்; உடனே தங்கம், வெள்ளியை கவனிங்க! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-28/fkwvw5a7/69014d3ba106a.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரானுடன், வணிகமா, ட்ரம்ப், போட்ட, 25, வரி, மீண்டும்‌, இந்தியாவுக்குப், பாதிப்பு, மொத்தம், எவ்வளவு, வரி</media:keywords>
    </item>
    <item>
        <title>``நிதிச் சிக்கல்களைக் காட்டிலும் மன அமைதி முக்கியம்&amp;quot; &amp; ரூ.2.7 கோடி சம்பள வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!</title>
        <link>https://dailytopnewz24.com/நிதிச்-சிக்கல்களைக்-காட்டிலும்-மன-அமைதி-முக்கியம்-ரூ27-கோடி-சம்பள-வேலையை-உதறித்தள்ளிய-இளைஞர்</link>
        <guid>https://dailytopnewz24.com/நிதிச்-சிக்கல்களைக்-காட்டிலும்-மன-அமைதி-முக்கியம்-ரூ27-கோடி-சம்பள-வேலையை-உதறித்தள்ளிய-இளைஞர்</guid>
        <description><![CDATA[ இன்றைய கார்ப்பரேட் உலகில் மிக உயர்ந்த சம்பளம், பதவி உயர்வு என இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், நியூயார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், தனது தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக ரூ. 2.7 கோடி (3,00,000 டாலர்) சம்பள வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற வார்டன் பள்ளியில் சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டு மேலாண்மையில் பட்டம் பெற்ற டேனியல் மின் என்ற இளைஞர் தனது 21-வது வயதிலேயே &#039;க்ளூலி&#039; (cluely) என்ற செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக (CMO) பணியில் சேர்ந்தார்.டேனியல் மின்மிக இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பும், கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைத்ததால் ஆரம்பத்தில் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார். 21 வயதில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் உழைப்பதுதான் சாதனை எனவும் நம்பியுள்ளார். ஆனால், சில மாதங்களிலேயே இடைவிடாத வேலைப் பளுவும், அந்தப் பதவியின் அழுத்தமும் அவரைப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.இது தொடர்பாக டேனியல் மின் தன் சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``நண்பர்களுடன் ஒரு வேளை இரவு உணவு உண்பது, என் தம்பியின் 12-வது பிறந்தநாளுக்கு அவனுக்கு சர்ப்பிரைஸ் கொடுப்பது போன்ற மிகச் சிறிய மகிழ்ச்சியைக் கூட நான் இழக்கத் தொடங்கினேன். நிறுவனத்தின் வளர்ச்சியில் நான் காட்ட வேண்டிய தீவிரம், எனது தனிப்பட்ட வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிட்டது.வேலையில் ஏற்பட்ட சலிப்பும், அதிருப்தியும் ஒருகட்டத்தில் வெளிப்படத் தொடங்கியது. இதைக் கவனித்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராய் லீ என்னிடம் பேசியபோது நான் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதேன். அப்போதுதான் நான் வேலையை விட்டு விலகப்போவதைத் தைரியமாக அவரிடம் சொன்னேன்.டேனியல் மின்ராய் லீ எனது தனிப்பட்ட நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றாலும், &quot;நான் ஏற விரும்பிய ஏணி இதுவல்ல&quot; என்ற உண்மையை உணர்ந்தபோது ஏற்பட்ட வலியே எனது ராஜினாமாவுக்குக் காரணம். மேலும், அவ்வளவு பெரிய வருமானத்தை இழந்ததால் நிதி ரீதியான சவால்கள் வரும் என்று தெரிந்துதான் இந்த முடிவை எடுத்தேன். &quot;நிதிச் சிக்கல்களைக் காட்டிலும், இந்தப் பதவியில் நீடிப்பது என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகப் பெரிய இழப்பாக அமையும்.&quot; என அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.அவரது வீடியோவை பகிர்ந்த பலரும், நிச்சயமாக வாழ்க்கை என்பது வேலைமட்டுமல்ல... அதையும் தாண்டிய அனுபவம் எனப் பகிர்ந்து வருகின்றனர்.இளைஞர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் - இளம் தலைமுறையினரிடையே   எப்படி இருக்கிறது புத்தக ரசனை?! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-12/2fsl2k1e/Daniel-Min" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நிதிச், சிக்கல்களைக், காட்டிலும், மன, அமைதி, முக்கியம், ரூ.2.7, கோடி, சம்பள, வேலையை, உதறித்தள்ளிய, இளைஞர்</media:keywords>
    </item>
    <item>
        <title>`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்&amp;apos; &amp; ட்ரம்ப்&amp;ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த சர்ச்சை!</title>
        <link>https://dailytopnewz24.com/trump-வெனிசுலாவின்-தற்காலிக-அதிபர்-ட்ரம்ப்-ன்-சமூக-வலைதளப்-பதிவால்-எழுந்த-சர்ச்சை</link>
        <guid>https://dailytopnewz24.com/trump-வெனிசுலாவின்-தற்காலிக-அதிபர்-ட்ரம்ப்-ன்-சமூக-வலைதளப்-பதிவால்-எழுந்த-சர்ச்சை</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தன்னை &quot;வெனிசுலாவின் தற்காலிக அதிபர்&quot; எனப் பதிவிட்டிருக்கும் செய்தி, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. நிக்கோலஸ் மதுரோவையும், அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸையும் ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்து, அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையானது.ட்ரம்ப்இதற்கிடையில், கைதுசெய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோவும், அவரின் மனைவியும் அமெரிக்காவின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா உட்பட பல நாடுகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன.இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ``சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்&quot; எனக் குறிப்பிட்டு கவலை தெரிவித்திருந்தது.இந்த நிலையில், நேற்று ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப், ``கியூபா வெனிசுலாவிலிருந்து கிடைத்த பெரும் அளவிலான எண்ணெய் மற்றும் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தது. அதற்குப் பதிலாக, கியூபா இரண்டு வெனிசுலா சர்வாதிகாரிகளுக்கும் பாதுகாப்பு சேவைகளை வழங்கியது. ஆனால் இனிமேல் அது நடக்காது.டெல்சி ரோட்ரிக்ஸ் | Delcy Rodriguezகியூபாவிற்கு இனி எண்ணெய், பொருளாதாரம் என எதுவும் செல்லாது. காலம் கடந்துபோவதற்குள், கியூபா ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்&quot; என எச்சரிக்கை விடுத்திருந்தார்.அதைத் தொடர்ந்து, அவரின் பதிவில் விக்கிப்பீடியா சுயவிவரப் பக்கத்தின் எடிட் செய்யப்பட்டப் படத்தைப் பகிர்ந்திருந்தார். அதில், `` &#039;வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர்&#039; - பதவிக்காலம் ஜனவரி 2026&quot; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வெனிசுலாவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிகாரபூர்வமாக தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்&#039; பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-12/1m2mv6i3/Trump-crowns-himself-‘acting-president-of-Venezuela’" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Trump, வெனிசுலாவின், தற்காலிக, அதிபர், ட்ரம்ப்-ன், சமூக, வலைதளப், பதிவால், எழுந்த, சர்ச்சை</media:keywords>
    </item>
    <item>
        <title>வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? &amp; 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained</title>
        <link>https://dailytopnewz24.com/வர்த்தகர்கள்-மீண்டும்-iran-தலையெழுத்தை-மாற்றுவார்களா-15-நாள்களைக்-கடந்த-போராட்டம்-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/வர்த்தகர்கள்-மீண்டும்-iran-தலையெழுத்தை-மாற்றுவார்களா-15-நாள்களைக்-கடந்த-போராட்டம்-explained</guid>
        <description><![CDATA[ ஓர்  இரவு அனைத்தையும் மாற்றுமா? ஈரானில் மாற்றியிருக்கிறது... மாறியிருக்கிறது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலையில் இருந்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், முந்தைய நாள் உறங்கும்போது இருந்த சமையல் எண்ணெய், சிக்கன் போன்றவற்றின் விலை, அடுத்த நாள் அபரிமிதமாக உயர்ந்ததுதான். ஆம்... ஈரானின் தற்போதைய பணவீக்க விகிதம் கிட்டத்தட்ட 42 சதவிகிதம். இந்தியாவின் தற்போதைய பணவீக்க விகிதம் 2 - 3 சதவிகிதம். மக்கள் தொகை, பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு போன்றவற்றால் இந்தியாவையும், ஈரானையும் ஒப்பிட முடியாது தான். ஆனாலும், உதாரணத்திற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ஈரானின் நாணயமான ரியால் பெரிதும் வீழ்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஓர் அமெரிக்க டாலரின் மதிப்பு 9,94,055 ரியால் ஆகும்.ஈரான் போராட்டம்இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explainedஉலக அளவில் மிக மோசமாக இருக்கும் நாணயங்களில் ஈரானின் ரியால் டாப் இடங்களில் ஒன்றைப் பிடிக்கிறது. இதில் எல்லாம் வெறுத்துப் போய்தான், ஈரான் மக்கள் தங்களது அரசிற்கு எதிராக கொதித்து எழுந்துள்ளனர். ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பஜாரில் முதன்முதலாக போராட்டம் தொடங்கியது. அது கொஞ்சம் கொஞ்சமாய் பரவி, இப்போது ஈரான் முழுக்க 15 நாள்களைக் கடந்து போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஏன் அதிக பணவீக்கம்? 
பிற நாடுகளில் இருந்து பொருள்களை இறக்குமதி செய்ய அமெரிக்க டாலர்கள் தேவை. ஆனால், அதை இறக்குமதியாளர்களுக்கு ஈரான் அரசு தரவில்லை.அதனால், இறக்குமதியாளர்களால் இறக்குமதிகளைச் செய்ய முடியவில்லை. பல பொருள்களை ஈரானின் சந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை. இதனால், விலைவாசி அதிக உயர்ந்தது. மக்கள் பாதிக்கப்பட்டனர். ஈரானின் பஜார் வர்த்தகர்கள் வீதியில் இறங்கி, போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த, மாதம் 7 அமெரிக்க டாலர்கள் கொடுக்க முன்வந்தது ஈரான் அரசு. ஆனால், அது போராட்டக்காரர்களைக் கொஞ்சம்கூட அசைத்துப் பார்க்கவில்லை. ஈரான் போராட்டம்வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் &#039;அகண்ட அமெரிக்கா&#039; கனவு | Explained பஜார் வர்த்தகர்களின் சக்தி
&#039;பஜார் வர்த்தகர்களின் போராட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறுமா?&#039; என்கிற கேள்வி, இந்த இடத்தில் உங்களுக்கு எழலாம். ஈரானைப் பொறுத்தவரை எழும். ஈரானில் மதத் தலைமைகளும், பஜார் வர்த்தகர்களும் முக்கியமான சக்திகள். 1979-ஆம் ஆண்டு நடந்த ஈரானியப் புரட்சிக்கு நிதியுதவி அளித்தவர்கள் இவர்கள்தான். அந்தப் புரட்சியில்தான், அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரானை ஆட்சி செய்து வந்த ஷா முகமது ரெசா பஹ்லவி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். ஆக, ஈரான் அரசிற்கும், ஈரானின் மதத் தலைமைகளுக்கும், ஈரான் பஜார் வர்த்தகர்களுக்கும் எப்போதும் ஒரு கூட்டு இருந்தது. அதுதான் இப்போது உடைந்துள்ளது. கமேனியின் மீது கோபம்
ஈரானைப் பொறுத்தவரை, கமேனி மத குரு. அங்கு நடக்கும் ஒவ்வோர் அரசியல் நகர்வுகளும் கமேனியின் கண் அசைவில்தான் நடக்கும். ஈரானை வெளி உலகில் பிரதிநிதித்துவப்படுத்துவதும் அவரே. அவருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று ஈரான் மக்கள் கொந்தளித்திருப்பது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும். அதிபர் பெஷேஷ்கியன் | Masoud PezeshkianVenezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்?அதிபர் பெஷேஷ்கியன்
ஈரானில் நடக்கும் போராட்டத்திற்கு பணவீக்கத்தை மட்டும் கைகாட்டி நின்றுவிடக் கூடாது. அதையும் தாண்டி, ஊழல் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. ஈரானில் ஊழல்கள் தலைவிரித்து ஆடுகிறது. 2024-ம் ஆண்டு ஈரானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மசூத் பெஷேஷ்கியன். `ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவேன்... ஈரானின் நடுத்தர மக்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் நண்பனாக இருப்பேன்&#039; என்று கூறி, பெருவாரியான ஓட்டுகளை அள்ளினார் இவர். ஆனால், இவர் ஆட்சிப் பொறுப்பேற்றும் மாற்றத்தில் &#039;மா&#039;வைக் கூட காணவில்லை ஈரான் மக்கள். அதுவும் ஈரான் மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணம். ஈரான் Vs அமெரிக்கா
உள்நாட்டிலிருந்து தான் ஈரானுக்கு பிரச்னை என்றால், வெளிநாடுகளும் ஈரானை விட்டுவைக்கவில்லை. முக்கியமாக, அமெரிக்கா. அமெரிக்கா உடன் முட்டி மோதிகொண்டிருக்கிறது ஈரான் அரசு. இதனால், கடந்த சில மாதங்களில் தாக்குதல் முதல் தடை வரை பலவற்றைச் சந்தித்துவிட்டது ஈரான். இவை ஈரான் அரசை எந்த அளவுக்குத் தாக்குகிறதோ, அதே அளவுக்கு அந்த நாட்டின் மக்களையும் பாதிக்கும். இதெல்லாமே ஈரான் மக்களின் கொதிப்பிற்கும், போராட்டத்திற்கும் காரணம். இந்தப் போராட்டத்தில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ட்ரம்ப்12 நாள்களில் &#039;அமோக&#039; வளர்ச்சி: கிரீன்லேண்டை குறி வைக்கும் ட்ரம்ப்; உடனே தங்கம், வெள்ளியை கவனிங்க!அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ஈரானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், இதுவரை அல்லாத அளவிற்கு பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்தார். இதற்கு கமேனி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். இப்போதைய நிலவரப்படி, ட்ரம்ப் ஈரான் அரசு பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளது என்று கூறியுள்ளார். இது அவருக்கும், ஈரான் அரசுக்கும்தான் வெளிச்சம். ஈரான் முன்னிருக்கும் கண்ணிவெடிகள்
ட்ரம்ப் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்க, பெஷேஷ்கியன் மெல்ல வெள்ளைக்கொடியை எடுத்துள்ளார். அவர் தற்போது போராட்டக்காரர்களின் கோரிக்கையைக் கேட்க தயார் என்று கூறியிருக்கிறார். இது எப்படி முடியும் என்பதைப் பொறுத்துதான் ஈரானின் எதிர்காலம் அமையும். ஏற்கெனவே ஈரானின் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், மக்கள் போராட்டம் என்றால், அது நிலைமையை இன்னமும் மோசமாக்கும். சில மாதங்களுக்கு முன், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. தாக்குதல் முடிந்தாலும், ஈரானுக ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-12/u7041q5y/Explained.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வர்த்தகர்கள், மீண்டும், Iran, தலையெழுத்தை, மாற்றுவார்களா, நாள்களைக், கடந்த, போராட்டம், Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>Venezuela: ஆணையிடும் ட்ரம்ப்; அதிருப்தியில் US எண்ணெய் நிறுவனங்கள்; கச்சா எண்ணெய் விலை என்னவாகும்?</title>
        <link>https://dailytopnewz24.com/venezuela-ஆணையிடும்-ட்ரம்ப்-அதிருப்தியில்-us-எண்ணெய்-நிறுவனங்கள்-கச்சா-எண்ணெய்-விலை-என்னவாகும்</link>
        <guid>https://dailytopnewz24.com/venezuela-ஆணையிடும்-ட்ரம்ப்-அதிருப்தியில்-us-எண்ணெய்-நிறுவனங்கள்-கச்சா-எண்ணெய்-விலை-என்னவாகும்</guid>
        <description><![CDATA[ &#039;போதைப்பொருள் கடத்தல்&#039; - இந்தக் குற்றச்சாட்டைச் சொல்லித்தான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைச் சிறைப்பிடித்தார்.அதன் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதுமே வெனிசுலாவின் எண்ணெய் மீதுதான்.&#039;&#039;மதுரோவின் கைதிற்கு முன்னும், பின்னும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களிடம் பேசினேன்... வெனிசுலாவின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் 30 - 50 மில்லியன் பேரல்கள் உயர்தர எண்ணெய்களை அமெரிக்காவிற்குத் தருவார்... உடனடியாக வெனிசுலாவில் தேர்தல் நடத்த முடியாது...&#039;&#039; - இப்படியான ட்ரம்பின் பேச்சுகள் அனைத்துமே மேலே சொன்னதைப் பறைசாற்றுகின்றன.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்வெனிசுலா, கிரீன்லேண்ட், கொலம்பியா.! - நீளும் ட்ரம்பின் &#039;அகண்ட அமெரிக்கா&#039; கனவு | Explained ட்ரம்பின் இந்த அதிரடிகள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை மாற்றுமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.&quot;சமீபத்தில் மிகப்பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.அந்தச் சந்திப்பில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடு செய்ய வேண்டும் என்றும், அந்த எண்ணெயை அமெரிக்காவிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.இதை அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்று கிட்டத்தட்ட கட்டளையைப் போன்றே கூறியிருக்கிறார் அவர். ஆனால், இதில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. தயக்கத்துடன் இருக்கின்றன.அதிருப்திக்கு இரண்டு காரணங்கள் 
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, வெனிசுலாவில் இப்போது நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை.இன்னொன்று, வெனிசுலாவில் இருப்பது புளிப்புக் கச்சா எண்ணெய் (Sour Crude Oil). அதை எடுத்து, பிராசஸ் செய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதிக பணமும்... முதலீடுகளும் தேவை.எண்ணெய் நிறுவனங்களிடம் ட்ரம்ப் பேசும்போது, உலக அளவில் கச்சா எண்ணெயின் விலையை 50 டாலர்கள் எனக் குறைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.ஆனால், ட்ரம்பின் அந்தச் சந்திப்பு தற்போதைய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பெரிதாக மாற்றவில்லை.இந்தச் சந்திப்பின் விளைவாக ஏதாவது நடந்தால், பின், கச்சா எண்ணெய்யின் விலையில் மாற்றம் இருக்கலாம்&quot; என்றார்.இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2026-01-12/dxa6rxkk/Untitled-design-4.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Wed, 21 Jan 2026 16:43:09 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Venezuela:, ஆணையிடும், ட்ரம்ப், அதிருப்தியில், எண்ணெய், நிறுவனங்கள், கச்சா, எண்ணெய், விலை, என்னவாகும்</media:keywords>
    </item>
    <item>
        <title>வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த &amp;apos;5&amp;apos; தான் காரணம் &amp; மத்திய அமைச்சர்</title>
        <link>https://dailytopnewz24.com/வெளிநாடுகளில்-இருந்து-அதிகம்-வெளியேற்றப்படும்-இந்தியர்கள்-இந்த-5-தான்-காரணம்-மத்திய-அமைச்சர்</link>
        <guid>https://dailytopnewz24.com/வெளிநாடுகளில்-இருந்து-அதிகம்-வெளியேற்றப்படும்-இந்தியர்கள்-இந்த-5-தான்-காரணம்-மத்திய-அமைச்சர்</guid>
        <description><![CDATA[ இந்த ஆண்டு மட்டும் 81 நாடுகளில் இருந்து 26,400  இந்தியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இது மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை சொன்ன தகவல்.இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவில் இருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியர்களை வெளியேற்றியது மிக முக்கியமாக பேசப்பட்டது... மிக அதிகமாக கவனிக்கவும் பட்டது.ஆனால், இந்த ஆண்டு இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.சவுதி அரேபியா SIR: உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டதா? புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க எளிய வழி!ஆம்... 11,000 இந்தியர்களை வெளியேற்றி உள்ளது சவுதி அரேபியா. அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.ஒரு ஆண்டில் 26,400 இந்தியர்கள் வெளியேற்றம் என்பது கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய எண்ணிக்கை.ஏன் அதிகளவில் வெளியேற்றம்?இதற்கான பதிலையும் வெளியுறவுத்துறை அமைச்சகமே வழங்கி உள்ளது.இதற்கு கூறப்படும் முக்கியமான காரணங்கள்...1. விசா காலம் முடிந்தும் அங்கேயே தங்குவது2. வேலை செய்வதற்கான தகுந்த பெர்மிட் இல்லாதது3. அந்தந்த நாட்டின் தொழிலாளர் சட்டத்தை மீறுவது4. முதலாளிகளிடம் இருந்து சென்று விடுவது5. அங்கே ஏதேனும் குற்றங்களில் ஈடுபடுவதுபோன்ற காரணங்களுக்காக வெளியேற்றப்படுகிறார்கள் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.முதலீடு முதல் பிசினஸ் வரை &#039;சக்சஸ்&#039; ஆக Warren Buffet-ன் &#039;20 ஸ்லாட்&#039; தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-27/c76ic982/IMG20251227090113.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெளிநாடுகளில், இருந்து, அதிகம், வெளியேற்றப்படும், இந்தியர்கள், இந்த, 5, தான், காரணம், மத்திய, அமைச்சர்</media:keywords>
    </item>
    <item>
        <title>Nigeria: &amp;quot;கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொல்கிறார்கள்; அதனால் ISIS தீவிரவாதிகளைத் தாக்கினோம்&amp;quot; &amp; ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/nigeria-கிறிஸ்தவர்களைக்-குறிவைத்து-கொல்கிறார்கள்-அதனால்-isis-தீவிரவாதிகளைத்-தாக்கினோம்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/nigeria-கிறிஸ்தவர்களைக்-குறிவைத்து-கொல்கிறார்கள்-அதனால்-isis-தீவிரவாதிகளைத்-தாக்கினோம்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந்து அவ்வப்போது நைஜீரியா குறித்து பேசிவரும் ட்ரம்ப், `` நைஜீரியாவில் கிறிஸ்தவ மதம் இருப்புக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. கிறிஸ்தவ சமூகங்களை இலக்காகக் கொண்ட வன்முறையைத் தடுக்கத் தவறிய மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ ரீதியாகத் தலையிட வேண்டும் எனக் கருதுகிறேன்&quot; என்றெல்லாம் அச்சுறுத்தி வந்தார்.நைஜீரியாஇந்த நிலையில் வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை இலக்காக வைத்து நேற்று தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்திருக்கிறார். ட்ரம்ப், ``கிறிஸ்தவர்கள் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டதற்குப்  பதிலடியாகவே ராணுவம் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தலைமைத் தளபதி எனது உத்தரவின் பேரில், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கயவர்களுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்புஅவர்கள் பல ஆண்டுகளாக அப்பாவி கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு கொடூரமாகக் கொன்று வருகின்றனர். கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நான் இதற்கு முன்பு அந்தப் பயங்கரவாதிகளுக்கு எச்சரித்திருந்தேன், இன்று இரவு அது நடந்தது.அமெரிக்காவால் மட்டுமே செய்யக்கூடிய வகையில், போர்த் துறை பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியது. எனது தலைமையின் கீழ், நமது நாடு தீவிரவாத இஸ்லாமியப் பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது. கடவுள் நமது ராணுவத்தை ஆசீர்வதிக்கட்டும்.ட்ரம்ப்மேலும் இறந்த பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அவர்கள் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதைத் தொடர்ந்தால், இன்னும் பலர் கொல்லப்படுவார்கள்&quot; எனத் தெரிவித்திருக்கிறார்.இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நைஜீரிய அரசு, ``ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருவரையும் குறிவைக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமே துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற ட்ரம்பின் கூற்றுகள் முழுமையானது அல்ல.மத சுதந்திரத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை ட்ரம்ப் புறக்கணிக்கிறார். ஆனால், போராளிக் குழுக்களுக்கு எதிராக எங்கள் படைகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறோம்&quot; எனத் தெரிவித்திருக்கிறது.&#039;பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை&#039; - ட்ரம்ப் அரசு அறிவிப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-28/3x7bm3eu/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Nigeria:, கிறிஸ்தவர்களைக், குறிவைத்து, கொல்கிறார்கள், அதனால், ISIS, தீவிரவாதிகளைத், தாக்கினோம், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>வரலாற்று சிறப்பு; தென்கொரியாவில் நடைபெற்ற உலகளாவிய திருக்குறள் மாநாடு</title>
        <link>https://dailytopnewz24.com/வரலாற்று-சிறப்பு-தென்கொரியாவில்-நடைபெற்ற-உலகளாவிய-திருக்குறள்-மாநாடு</link>
        <guid>https://dailytopnewz24.com/வரலாற்று-சிறப்பு-தென்கொரியாவில்-நடைபெற்ற-உலகளாவிய-திருக்குறள்-மாநாடு</guid>
        <description><![CDATA[ தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தென்கொரியாவின் தலைநகர் சியோலில் முதல் முறையாக ‘உலகளாவிய திருக்குறள் மாநாடு’ (ITCSK 2025) வெற்றிகரமாக நடைபெற்றது. தென்கொரியா வரலாற்றில் முதன்முதலாக நடைபெறும் தமிழ் மாநாடு என்ற பெருமையைப் பெற்ற இந்நிகழ்வு, சேஜோங் பல்கலைக்கழகத்தில் (Sejong University, South Korea) நவம்பர் 8ம் தேதி நடைபெற்றது.மாநாடு நடந்த நவம்பர் 8-ம் நாளானது திருக்குறளை முதன்முதலில் ஐரோப்பிய மொழியான லத்தீனில் 1730-ம் ஆண்டு மொழிபெயர்த்த இத்தாலிய ஆய்வாளர் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) அவர்களின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) ஏற்பாட்டில் ‘காலத்தை கடந்த உண்மைகள் - சமூகம், அரசியல், பண்பாடு முதல் உலகளாவிய பொருத்தம் வரை’ என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது.இம்மாநாட்டில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், ராணுவ அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் திருக்குறளின் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் அமைப்பை சமகால சவால்களுக்கான தீர்வுகளாக எடுத்துரைக்கும் வகையில், திருக்குறள் மற்றும் சமூகம், அறிவியல், கல்வி, நெறிமுறைகள், மதம், திராவிட கருத்தியல், தலைமைத்துவம், சமத்துவம், அன்பு, மேலாண்மை, உளவியல் போன்ற பன்முக தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து சிறப்பு சேர்த்தனர்.முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பு பாராட்டுமாநாட்டின் சிறப்பம்சமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுப் பட்டயமும் பாராட்டுக் கேடயமும் வழங்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியை விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தியதற்காகவும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் SCOUT முயற்சியின் மூலம் ஆறு இந்திய மாணவர்களை தென்கொரியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் இரண்டு வார ஆராய்ச்சி அனுபவத்திற்கு அனுப்பியதற்காகவும் இந்த பாராட்டு வழங்கப்பட்டது. இந்தியாவிற்கும் தென்கொரியாவிற்குமான உறவை கல்வி மூலம் பலப்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை இந்த விருது மதிப்பளிக்கிறது என்று மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.தமிழ் மொழி சேவையாளர்களுக்கு கெளரவம்மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு சிறப்பான பணியாற்றிய பலரும் மதிப்பளிக்கப்பட்டனர். செவாலியர் கலைமாமணி டாக்டர் வி.ஜி. சந்தோஷம் (விஜிபி குழுமம் தலைவர்) அவர்களுக்கு ‘திருவள்ளுவர் உலகத் தூதர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய அவரது அசாதாரண பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டது.புதுமைத்தேனீ மா. அன்பழகன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு ‘உலகளாவிய தமிழ் இலக்கிய சேவையாளர் விருது’ வழங்கப்பட்டது. 37 நூல்கள் படைத்து, 140 தமிழ் நூல்கள் வெளியிட உதவிய அவரது தொடர்ச்சியான பணி இவ்விருதுக்கு காரணம்.மேலும், Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம், S.J அவர்களுக்கு &quot;சிறந்த கல்வியாளர் விருது&quot;, திரு. ஜங்கனம் கிம் &amp;  திரு. யாங் கீ மூன் அவர்களுக்கு &quot;கொரிய-தமிழ் மொழி ஆய்வு&quot; விருது, பேராசிரியர் ப. அருளி (இந்தியா) அவர்களுக்கு &quot;தமிழ் சொற்பிறப்பியல் ஆய்வுகள்&quot; விருது ஆகியவை வழங்கப்பட்டன.ஆய்வுக்கட்டுரைகளுக்கு பரிசுத்தொகை120 ஆய்வு கட்டுரைகளில் 50 கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, November 1 -2 ஜூம் வழியாக அறிஞர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் முதல் 20 ஆய்வுக்கட்டுரைகள் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளாகத் தேர்தெடுக்கப்பட்டு, சிறந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகளுக்கு தலா 100,000 கொரிய வோன் (ரூ.6,000) பரிசுத்தொகையும், 12 சிறந்தக் கட்டுரைகளுக்குத் தலா 20,000 கொரிய வோன் (ரூ.1,000) பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. சிறந்த கட்டுரைகள் சர்வதேசஆய்விதழ்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுபோல பள்ளி மாணவர்கள், 1 முதல், 5ம் வகுப்பு பிரிவில் பங்கேற்று, குறள்கள் ஒப்புவித்து சான்றிதழ் பெற்றனர்.சிறப்பு உரையாளர்களின் ஆழமான கலந்துரையாடல்மாநாட்டில் பல முக்கிய அறிஞர்கள் சிறப்புரை ஆற்றினர். லயோலா கல்வியியல் கல்லூரி செயலாளரான Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம், S.J. அவர்கள் &quot;திருக்குறள் மற்றும் சமூக நீதி&quot; என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றினார். புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள் &quot;உலகில் தனித்துவ இலக்கியம் திருக்குறளே&quot; என்ற தலைப்பிலும், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி (கனடா) அவர்கள் &quot;திருக்குறளின் உலகளாவிய செல்வாக்கு&quot; என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பிரான்சைச் சேர்ந்த முனைவர் அலெஸ் தேவராஜ் அவர்கள் &quot;திருவள்ளுவர் கட்டமைப்பில் காமம்&quot; என்ற தலைப்பிலும், முனைவர் ஆரோக்கியராஜ் அவர்கள் திருக்குறள் - கொரியா அரசர் சேஜோங் அரசியல் தத்துவம் என்ற தலைப்பிலும், திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்த்த கவிஞர் சகாய டர்சியூஸ் பீ அவர்கள் &quot;திருக்குறளும் கொரிய தத்துவமும் - ஓர் ஒப்பீட்டு ஆய்வு&quot; என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர்.முனைவர் D. ஞானராஜ் அவர்கள் &quot;திருவள்ளுவர் சொல்லும் கல்வி மற்றும் ஜாக் மெசிரோவின் உருமாற்றக் கற்றல் கோட்பாட்டிற்கும் இடையிலான ஒற்றுமைகள்&quot; என்ற தலைப்பில் ஆராய்ச்சி சார்ந்த உரையாற்றினார். திருமதி சாந்தி பிரின்ஸ் அவர்கள் “திருக்குறளும் தலைமைத்துவமும்” எனும் தலைப்பிலும் முனைவர் ஹரிபாலன் அவர்கள் “தமிழும் கொரியாவும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.புதுச்சேரி முதலமைச்சரின் பாராட்டு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் இந்த வரலாற்று சிறப்பு மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். &quot;தமிழர்கள் அதிக அளவில் குடியேறி வாழாத ஒரு நாட்டில், தமிழ் மொழியின் பெருமையையும் திருவள்ளுவர் பெருந்தகையின் அழியாத தத்துவங்களையும் உலகிற்கு எடுத்துரைக்கும் தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது&quot; என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  மேலும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயக்குனர் முனைவர் சந ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-24/p7tk22pb/WhatsApp-Image-2025-12-19-at-3.52.25-PM-3.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வரலாற்று, சிறப்பு, தென்கொரியாவில், நடைபெற்ற, உலகளாவிய, திருக்குறள், மாநாடு</media:keywords>
    </item>
    <item>
        <title>இஸ்ரோவின் பாகுபலியில் விண்ணில் பாய்ந்த அமெரிக்காவின் &amp;apos;BlueBird Block&amp;2&amp;apos; எதற்காக இந்த செயற்கைக்கோள்?</title>
        <link>https://dailytopnewz24.com/இஸ்ரோவின்-பாகுபலியில்-விண்ணில்-பாய்ந்த-அமெரிக்காவின்-bluebird-block-2-எதற்காக-இந்த-செயற்கைக்கோள்</link>
        <guid>https://dailytopnewz24.com/இஸ்ரோவின்-பாகுபலியில்-விண்ணில்-பாய்ந்த-அமெரிக்காவின்-bluebird-block-2-எதற்காக-இந்த-செயற்கைக்கோள்</guid>
        <description><![CDATA[ தகவல் தொடர்பு சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள அமரிக்காவின் BlueBird Block-2 செயற்கைக்கோள் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிச.24) ஏவப்பட்டிருக்கிறது. அமரிக்காவின் இந்த செயற்கைகோளை இஸ்ரோவின் LVM3 -M6 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.  LVM3 -M6 ராக்கெட் இஸ்ரோஇஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவின் இரண்டாவது தளத்தில் இன்று காலை 8.54 மணிக்கு  LVM3 -M6 ராக்கெட் ஏவப்பட திட்டமிட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் 90 விநாடிகள் தாமதத்திற்கு பின்னர் ராக்கெட் ஏவப்பட்டது.  தரையில் இருந்து புறப்பட்ட ராக்கெட் 15 நிமிடம் 62 வினாடிகளில் 520 கி.மீ உயரத்தில் உள்ள புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் ப்ளூ பேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. BlueBird Block-2 செயற்கைக்கோளின் திட்டம் என்ன?இதுவரை இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோளில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் BlueBird Block-2 தான்.இதன் எடை 6100 கிலோ என்று கூறப்படுகிறது.அமெரிக்காவின் தலைமையிடமாகக்கொண்ட AST Space Mobile நிறுவனம் வடிவமைத்துள்ள BlueBird Block-2 செயற்கைக்கோள் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.இந்திய மதிப்பில் இந்த செயற்கைக்கோளின் மதிப்பு சுமார் 560 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.BlueBird Block-2 தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் மிகப் பெரிய வணிகத் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் இது. விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட்போன்களுக்கு செல்லுலார் இணைப்பை வழங்குவதன் மூலம் உலகளாவிய தகவல்தொடர்பு களத்தை பெரிதும் மாற்றியமைக்கும் திறனை இந்த செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது. எந்த கூடுதல் சாதனங்களும் (dish, antenna, special receiver) இல்லாமல், சாதாரண 4G &amp; 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக இணைப்பு கொடுப்பதுதான் இதன் பிரதான நோக்கம். காடு, மலை, கடல், கிராமப்புறங்கள், பாலைவனம் போன்ற இடங்களில் மொபைல் டவர் இல்லாவிட்டாலும் இன்டர்நெட் வசதி கிடைக்கச் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்ப்ளூ பேர்ட் செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் LVM3-M6 ராக்கெட், இஸ்ரோவின் ஆறாவது LVM வகை ராக்கெட்டாகும்.இந்த ராக்கெட் இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்படுகிறது.சுமார் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்ட ராக்கெட்டில் திட, திரவ மற்றும் கிரையோஜனிக் அடுக்குகள் உள்ளன.சந்திரயான் 1, சந்திரயான் 2 போன்ற விண்கலன்கள் இதே LVM3 ராக்கெட் மூலம் தான் ஏவப்பட்டிருந்தது.BlueBird Block-2 இஸ்ரோ தலைவர்LVM3 -M6 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர். வி. நாராயணன்,&quot;இந்த ராக்கெட் ஏவப்பட்டது இந்தியாவிற்கு ஒரு புதிய மைல்கல் சாதனையாகும்.இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள் இது.இந்தப் பணியின் மூலம், இந்தியா இப்போது 34 நாடுகளைச் சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய பெருமையையும் பெற்றுள்ளது.இந்த வெற்றி ககன்யான் திட்டத்தின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது&quot; என்று கூறியிருக்கிறார்.மோடி பாராட்டுLVM3 -M6 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தைத்  தெரிவித்திருக்கிறார். &quot;இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக்கோளான, அமெரிக்காவின் BlueBird Block-2 விண்கலத்தை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக்  குறிக்கிறது.பிரதமர் மோடிஇது இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது.உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் இந்தியா வளர்ந்து வருவதை இது உறுதிப்படுத்துகிறது.இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.இதற்காக கடினமாக உழைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து மேலும் உயரப் பறக்கிறது&quot; என்று மோடி பாராட்டியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-24/2ew1bzc7/06004ff2-1b66-40a6-b8e0-19d78fdb92a8.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இஸ்ரோவின், பாகுபலியில், விண்ணில், பாய்ந்த, அமெரிக்காவின், BlueBird, Block-2, எதற்காக, இந்த, செயற்கைக்கோள்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;அமெரிக்காவை விட்டு வெளியே செல்லாதீர்கள் H&amp;1B விசாதாரர்களே&amp;apos; &amp; ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்காவை-விட்டு-வெளியே-செல்லாதீர்கள்-h-1b-விசாதாரர்களே-ஆப்பிள்-கூகுள்-நிறுவனங்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்காவை-விட்டு-வெளியே-செல்லாதீர்கள்-h-1b-விசாதாரர்களே-ஆப்பிள்-கூகுள்-நிறுவனங்கள்</guid>
        <description><![CDATA[ விசா விலை உயர்வு, சமூக வலைதள சோதனை என ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான நெருக்கடிகளை தந்து வருகிறது ட்ரம்ப் அரசு.இந்தச் சூழலில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒரு விஷயத்தைத் தெரிவித்திருக்கிறது.ஹெச்-1பி விசா உள்ளிட்ட சில‌ விசாக்கள் வைத்திருக்கும் பணியாளர்களை அமெரிக்காவை விட்டு வேறு எந்த நாட்டிற்கும் செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தி உள்ளது.ஆப்பிள் - கூகுள்US: `H-1B visa&#039; மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடிஎன்ன காரணம்?குறிப்பிட்ட பணியாளர்கள் அமெரிக்காவைத் தாண்டி வேறு எங்காவது சென்றால், அவர்கள் மீண்டும் விசா ஸ்டாம்பிங் பெற, 12 மாதங்கள் வரை ஆகலாம்.இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அமெரிக்காவிற்கு வெளியேதான் இருக்க வேண்டும். இதனால், அவர்களது பணி தடைப்படலாம்.12 மாத காலம் வரையிலான தாமதத்திற்கு சமூக வலைதள சோதனையை மிக முக்கியமாகக் கூறுகிறது கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதை பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது.H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-11/bq7339n2/H-1B-visa.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்காவை, விட்டு, வெளியே, செல்லாதீர்கள், H-1B, விசாதாரர்களே, ஆப்பிள், கூகுள், நிறுவனங்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>RBI&amp;ன் ஓரேயொரு மூவ்: வலுவான இந்திய ரூபாய்; ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் &amp; அது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/rbi-ன்-ஓரேயொரு-மூவ்-வலுவான-இந்திய-ரூபாய்-ஓடி-வந்த-வெளிநாட்டு-முதலீட்டாளர்கள்-அது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/rbi-ன்-ஓரேயொரு-மூவ்-வலுவான-இந்திய-ரூபாய்-ஓடி-வந்த-வெளிநாட்டு-முதலீட்டாளர்கள்-அது-என்ன</guid>
        <description><![CDATA[ சில நாள்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அது 91-ஐ தாண்டி எல்லாம் சென்றது. இந்த நிலையில் தான், நேற்று சந்தையின் முடிவில் 90.38-க்கு இறங்கி இந்திய ரூபாயின் மதிப்பு வலுவானது. இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணத்தை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; குறைய வாய்ப்புள்ளதா? இப்போது முதலீடு செய்யலாமா? இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைத் தொட்டதையொட்டி, இந்திய ரிசர்வ் வங்கி நேற்று சந்தையின் ஆரம்பத்தில் இருந்தே டாலர்களை விற்று வந்தது. அப்படி 5 பில்லியன் டாலர்களை விற்றது.இதனால், இந்திய ரூபாயின் மதிப்பு தானாக சந்தையில் வலுவானது. ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இந்த ரூபாய் மதிப்பு வலுவினால், இந்திய சந்தையை நோக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்திருக்கின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு நேற்று வந்தது மிக முக்கிய நிகழ்வாகும். டிசம்பர் மாதம் தொடங்கி 17 நாள்களைக் கடந்துவிட்டோம். ஆனால், நேற்று தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பெரியளவில் முதலீடு செய்துள்ளனர். அவர்கள் நேற்று கிட்டத்தட்ட ரூ.1,171 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். தற்போது ஒப்பந்தம், உலக அளவிலான அறிக்கை என உலகளவில் சந்தையில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைக்கு வந்த காரணம், இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்கும் என்பதனால் தான்&quot;.NPS-ல் &#039;சூப்பர் 10&#039; மாற்றங்கள் - இனி முதலீடு டு பணம் எடுப்பது.. எல்லாமே ஈசி! | தேசிய பென்சன் திட்டம்பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள &#039;Vikatan Play&#039;-ல் &#039;Opening Bell Show&#039; தினமும் காலை கேளுங்கள்.Vikatan Play-ல் Opening Bell Show ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-18/okalmcnq/Indian-Rupee.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>RBI-ன், ஓரேயொரு, மூவ்:, வலுவான, இந்திய, ரூபாய், ஓடி, வந்த, வெளிநாட்டு, முதலீட்டாளர்கள், அது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ஈரான்: மழையால் ரத்த நிறமான கடல்; வியக்க வைக்கும் ஹோர்முஸ் தீவின் அறிவியல் அதிசயம்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரான்-மழையால்-ரத்த-நிறமான-கடல்-வியக்க-வைக்கும்-ஹோர்முஸ்-தீவின்-அறிவியல்-அதிசயம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரான்-மழையால்-ரத்த-நிறமான-கடல்-வியக்க-வைக்கும்-ஹோர்முஸ்-தீவின்-அறிவியல்-அதிசயம்</guid>
        <description><![CDATA[ ஈரானின் பெர்சிய வளைகுடாவில் அமைந்துள்ள ஹோர்முஸ் தீவு (Hormuz Island), அதன் தனித்துவமான நிலப்பரப்பால் உலகப் புகழ்பெற்றது. பொதுவாக இந்தத் தீவு பல வண்ண மண்ணைக் கொண்டிருப்பதால் &#039;வானவில் தீவு&#039; என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, தீவின் கடற்கரை ஓரம் உள்ள கடல் நீர் சிவப்பு நிறமாக மாறியது. இது பார்ப்பதற்கு கடல் இரத்தமாக மாறியது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த விசித்திரமான நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இந்த நிற மாற்றத்திற்குப் பின்னால் ஒரு தெளிவான அறிவியல் காரணம் உள்ளது. ஹோர்முஸ் தீவின் மண் மற்றும் பாறைகளில் &#039;ஹெமடைட்&#039; (Hematite) எனப்படும் இரும்பு ஆக்சைடு (Iron Oxide) தாது மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. வறண்ட காலங்களில் இந்தச் சிவப்பு மண் நிலப்பரப்பிலேயே இருக்கும். Today’s rain on Hormuz Island in southern Iran caused the seawater along the shore to turn red, creating striking scenes. pic.twitter.com/wU4xhZKKOa— Weather Monitor (@WeatherMonitors) December 16, 2025 ஆனால், பலத்த மழை பெய்யும்போது, மலையிலிருந்து வழிந்தோடும் மழைநீர் இந்தச் சிவப்பு மண்ணை அரித்துக்கொண்டு வேகமாக கடலை நோக்கிப் பாய்கிறது. இவ்வாறு டன் கணக்கிலான சிவப்பு மண் கடலில் கலப்பதால், கடற்கரை ஓரத்திலுள்ள நீல நிற நீர் முற்றிலும் மறைந்து இரத்தச் சிவப்பாக மாறுகிறது.இந்தத் தீவின் மண் வெறும் காட்சிப் பொருள் மட்டுமல்ல, இது பொருளாதார ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மிக முக்கியமானது. இங்குள்ள சிவப்பு மண்ணை உள்ளூர் மக்கள் &#039;சுராக்&#039; (Surakh) என்று அழைக்கிறார்கள். இது உலகில் உண்ணக்கூடிய ஒரே மண் வகையாகக் கருதப்படுகிறது. அவர்கள் இந்த மண்ணை ஒரு சுவையூட்டியாகப் பயன்படுத்தி ரொட்டி, ஊறுகாய்களில் சேர்க்கின்றனர். மேலும், இந்த மண்ணிலிருந்து பெறப்படும் தாதுக்கள் பெயிண்ட், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த நிகழ்வு முற்றிலும் இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது. இதில் எந்தவிதமான நச்சுத்தன்மையோ அல்லது வேதிப் பொருட்களோ இல்லை என்பதால் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மழை நின்ற சில நாட்களில் இந்தத் தாதுக்கள் கடலின் அடியில் படிந்துவிடுவதால், நீர் மீண்டும் தனது இயல்பான நிறத்திற்குத் திரும்பிவிடும். இத்தகைய அபூர்வமான இயற்கை நிகழ்வைக் காண்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தத் தீவிற்குப் படையெடுக்கின்றனர்.Israel vs Iran conflict : ஈரான் சறுக்கியதா சாதித்தா? | Decode ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-18/lv760lm1/cdsss.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரான்:, மழையால், ரத்த, நிறமான, கடல், வியக்க, வைக்கும், ஹோர்முஸ், தீவின், அறிவியல், அதிசயம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை&amp;apos; &amp; ட்ரம்ப் அரசு அறிவிப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/பாலஸ்தீன-மக்கள்-அமெரிக்காவிற்குள்-நுழையத்-தடை-ட்ரம்ப்-அரசு-அறிவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/பாலஸ்தீன-மக்கள்-அமெரிக்காவிற்குள்-நுழையத்-தடை-ட்ரம்ப்-அரசு-அறிவிப்பு</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவிற்குள் பிற நாட்டு மக்கள் நுழைவதைக் கொஞ்சம் கொஞ்சம் கடினமாக்கி வருகிறார். முன்பு...
ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதித்தது அமெரிக்கா. புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய கடுமையான விதிமுறைகளை விதித்தது அமெரிக்க அரசு. பயணத் தடைஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி ஏன்? - 6 காரணங்கள் | Quick Pointsநேற்று...
நேற்று மீண்டும் புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், சிரியா நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு முழுமையான தடை விதித்துள்ளது அமெரிக்கா. மேலும், பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய பயண ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு. பாலஸ்தீனிய ஆணையம் என்று குறிப்பிட்டிருப்பது ஏன்? பாலஸ்தீனை இன்னும் ஒரு நாடாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. இதனால், பாலஸ்தீனிய மக்களை பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.ஏற்கெனவே, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீது அமெரிக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில், பாலஸ்தீனிய மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்திருக்கிறது.&#039;நிதிஷின் மனநலம் பரிதாபகராமக உள்ளது&#039; - பெண் மருத்துவரின் ஹிஜாப்பை இழுத்த முதல்வர்; வலுக்கும் கண்டனம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-17/a8upl00y/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாலஸ்தீன, மக்கள், அமெரிக்காவிற்குள், நுழையத், தடை, ட்ரம்ப், அரசு, அறிவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் வீழ்ச்சி ஏன்? &amp; 6 காரணங்கள் | Quick Points</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்க-டாலருக்கு-எதிரான-இந்திய-ரூபாய்-வீழ்ச்சி-ஏன்-6-காரணங்கள்-quick-points</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்க-டாலருக்கு-எதிரான-இந்திய-ரூபாய்-வீழ்ச்சி-ஏன்-6-காரணங்கள்-quick-points</guid>
        <description><![CDATA[ அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த சரிவிற்கு சில முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அவை: 1. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பிற்கு பிறகு, பல நாடுகள் அமெரிக்கா உடன் ஒப்பந்தத்தை முடித்துவிட்டது. ஆனால், இன்னும் இந்தியா பேச்சுவார்த்தையிலேயே இருந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அவ்வப்போது பாசிட்டிவ் சிக்னல் வந்தாலும், இன்னும் ஒப்பந்தம் முடிவாகவில்லை. இந்திய ரூபாய் வீழ்ச்சி`இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு தங்கம் முக்கிய காரணமா?’ - விளக்கும் பொருளாதார நிபுணர் நாகப்பன்2. வரி போன்ற காரணங்களால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்து முதலீடுகளை எடுத்து செல்கின்றனர். இதனால், இந்தியாவிற்குள் டாலர்கள் வரத்து குறைகிறது. இன்னொரு பக்கம், இந்த முதலீட்டாளர்கள் முதலீடுகளை டாலராக மாற்றி தான் வெளியே எடுத்துச் செல்கிறார்கள். இதனால், இங்கு டாலருக்கான டிமாண்ட் அதிகரிக்கின்றன. விளைவாக, டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகின்றன. 3. மேலே சொன்ன விஷயத்தில், இன்னொன்றும் கவனிக்க வேண்டும். அது இந்தியாவின் ஜி.டி.பி தொடர்ந்து வளர்ச்சியில் தான் இருக்கிறது. ஆனால், இதை தாண்டியும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றி வருகின்றனர். 4. இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் இந்திய ரிசர்வ் வங்கி பெரிதாக தலையிடவில்லை.5. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கிறது. இருந்தும், இந்தியா தொடர்ந்து தங்கம், வெள்ளியை இறக்குமதி செய்து வருகிறது. இதனாலும், டாலர் இந்தியாவில் இருந்து வெளியே செல்கிறது.6. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போதும் டாலர்கள் அதிகம் வெளியே செல்கின்றன. இதுவும் டாலரின் டிமாண்டை அதிகரிக்கின்றது.Gold Rate: ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1,320 சரிந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-16/ovm1gecf/dollar-rupee-copy_616174bb7ee17.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்க, டாலருக்கு, எதிரான, இந்திய, ரூபாய், வீழ்ச்சி, ஏன், காரணங்கள், Quick, Points</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;இந்தியா மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்&amp;quot; &amp; அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்; காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-மீதான-வரியை-ரத்து-செய்ய-வேண்டும்-அமெரிக்க-நாடாளுமன்றத்தில்-தீர்மானம்-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-மீதான-வரியை-ரத்து-செய்ய-வேண்டும்-அமெரிக்க-நாடாளுமன்றத்தில்-தீர்மானம்-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத பரஸ்பர வரி, 25 சதவீத கூடுதல் வரி என மொத்தம் 50 சதவீத வரியும் தொடர்ந்து இருந்து வருகிறது.இப்படி இந்தியா மீது மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெரும்பாலான உலக நாடுகள் மீது வரி விதித்துள்ளார். இந்த வரிக்கு எதிராக தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுந்துள்ளது.வரிஎன்ன குரல்?டெபோரா ரோஸ், மார்க் வீசி, ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரம்ப் அவசர சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ள வரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.இந்த வரிகளால் அமெரிக்க தொழிலாளர்கள், அமெரிக்க நுகர்வோர்கள், இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஏன்?இந்த மசோதாவில் குறிப்பாக இந்தியா குறித்து பேசியுள்ளனர். வட கரோலினா, வட டெக்ஸான் போன்ற மாகாணங்கள் இந்தியாவுடன் கலாசார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் தொடர்பு உடையவை. இந்த வரியினால் அந்த மாகாண மக்கள் விலைவாசி உயர்வு தொடங்கி பலவற்றில் மிகவும் பாதிப்படைந்துள்ளதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது.Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!- ட்ரம்ப் புதிய அறிவிப்பு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-15/mw67pxkn/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, மீதான, வரியை, ரத்து, செய்ய, வேண்டும், அமெரிக்க, நாடாளுமன்றத்தில், தீர்மானம், காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Trump Gold Card: ரூ.9 கோடி இருக்கிறதா? நீங்களும் அமெரிக்காவில் குடியேறலாம்!&amp; ட்ரம்ப் புதிய அறிவிப்பு</title>
        <link>https://dailytopnewz24.com/trump-gold-card-ரூ9-கோடி-இருக்கிறதா-நீங்களும்-அமெரிக்காவில்-குடியேறலாம்-ட்ரம்ப்-புதிய-அறிவிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/trump-gold-card-ரூ9-கோடி-இருக்கிறதா-நீங்களும்-அமெரிக்காவில்-குடியேறலாம்-ட்ரம்ப்-புதிய-அறிவிப்பு</guid>
        <description><![CDATA[ நேற்று முன்தினம் (டிசம்பர் 10) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் &#039;கோல்டு கார்டு&#039; விசா திட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இது முன்னரே அறிவித்த திட்டம் தான். ஆனால், நேற்று முன்தினம் முதல் அமலாகியுள்ளது. &#039;ட்ரம்ப் கோல்டு கார்டு&#039; என்றால் என்ன? 
ட்ரம்ப் கோல்டு கார்டு - இதை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான சட்டரீதியான பாஸ் என்றே கூறலாம். இந்தக் கோல்டு கார்டு மூலம் தனிநபர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்தக் கோல்டு கார்டு 1990-களில் இருந்த EB-5 விசா திட்டத்திற்கு மாற்றாகும். ட்ரம்ப் கோல்டு கார்டு |Trump Gold CardUS: `H-1B visa&#039; மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் அரசு; இம்முறை குடும்பத்தினருக்கும் நெருக்கடிEB-5 விசா திட்டம் என்றால் என்ன?
EB-5 திட்டம் என்பது 1990-களில் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும். இந்த முதலீடுகள் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை  உருவாக்க நினைத்தது அமெரிக்க அரசு. அதை செய்தும் காட்டியது. இந்தத் திட்டத்தின் 2.o தற்போதைய &#039;ட்ரம்ப் கோல்டு கார்டு&#039; திட்டம். இந்தக் கார்டிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அமெரிக்காவிற்குள் செல்ல தகுதியான மற்றும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுள்ள தனிநபர்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டை சேர்ந்த ஊழியர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வர நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். ட்ரம்ப் கோல்டு கார்டிற்கு விண்ணப்பித்திருப்பவர்களின் இணையர்கள், அவர்களுடைய 21 வயது நிரம்பாத குழந்தைகளும் இந்தக் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம். ட்ரம்ப் கோல்டு கார்டுகுடியுரிமைக்காக அமெரிக்கா சென்று குழந்தை பெற்றுக்கொள்ள பிளானா?-  இனி &#039;நோ&#039; விசா!விலை என்ன?
இந்தக் கார்டிற்கான பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும். இதை ரீஃபண்ட் பெற முடியாது. அடுத்ததாக தனிநபர்கள் ஒரு விண்ணப்பத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் கட்ட வேண்டும். இது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.9 கோடி. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு ஊழியருக்கும் 2 மில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும். மேலே குறிப்பிட்ட தனிநபர் அல்லது ஊழியர்களின் இணையர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். இது போக, விசாவிற்கான செலவு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கான செலவுகள் தனியாக இருக்கும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
trumpcard.gov இணையதளத்திற்கு சென்று, தனிநபர், கார்ப்பரேட், பிளாட்டினம் வெயிட்லிஸ்ட் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். உங்களது தகவல்களை பதிவிட வேண்டும். அடுத்தடுத்த அப்டேட்டுகளை தெரிந்துகொள்ள myUSCIS.gov கணக்கை உருவாக்கிவிட வேண்டும். இப்போது பிராசஸிங் ஃபீஸாக 15,000 டாலர்களை முதலில் கட்ட வேண்டும். அடுத்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு துறை உங்களைப் பற்றி ஆய்வு செய்யும். அது &#039;ஓகே&#039; ஆனதும், விண்ணப்பித்திற்கேற்ப 1 மில்லியன் டாலர், 2 மில்லியன் டாலர்கள் கட்டினால், நீங்கள் செய்ய வேண்டிய பிராசஸ் முடிந்தது.  அமெரிக்க டாலர்கள்உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இருக்கிறதா? இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா? செக் செய்வது எப்படி?சிக்கலும்...
இந்தக் கோல்டு கார்டு பெற்ற பின் சிக்கல் வரவும் வாய்ப்புள்ளது. கோல்டு கார்டு பெற்றவர்கள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டாலோ, அங்கே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டாலோ, கோல்டு கார்டு திரும்ப பெறப்படும். ஒரு கண்டிஷன்
இந்தக் கார்டை பெறும் நபர் அவருக்கு வரும் எந்தவொரு வருமானமாக இருந்தாலும் (உலகளாவிய வருமானம் உட்பட), அதற்கு அமெரிக்க வருமான வரியையே பின்பற்ற வேண்டும். `போருக்கு பின் பைக் சாகசங்கள்&#039; - பாலஸ்தீன இளைஞர்களின் தொடக்கம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-12/cf0pap5c/Trump-Trump-Gold-Card.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Trump, Gold, Card:, ரூ.9, கோடி, இருக்கிறதா, நீங்களும், அமெரிக்காவில், குடியேறலாம்-, ட்ரம்ப், புதிய, அறிவிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>H&amp;1B விசா புதிய கட்டுப்பாடு: &amp;quot;தொடர்ந்து பேசுவோம்&amp;quot; &amp; இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/h-1b-விசா-புதிய-கட்டுப்பாடு-தொடர்ந்து-பேசுவோம்-இந்தியர்களுக்கு-இந்திய-அரசின்-விளக்கம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/h-1b-விசா-புதிய-கட்டுப்பாடு-தொடர்ந்து-பேசுவோம்-இந்தியர்களுக்கு-இந்திய-அரசின்-விளக்கம்-என்ன</guid>
        <description><![CDATA[ ஹெச்-1பி விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்கள் சோதனையிடப்படும் என்பதுதான் ஹெச்-1பி விசாவிற்கு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசின் லேட்டஸ்ட் நெருக்கடி.இதனால், இந்தியாவில் டிசம்பர் 15-ம் தேதி முதல் முடிவாகியிருந்த ஆயிரக்கணக்கான ஹெச்-1பி விசா நேர்காணல்கள் தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன.இதுகுறித்து நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், &quot;ஹெச்-1பி விசா பிரச்னை குறித்து அமெரிக்காவிடம் பேசியுள்ளோம்.இந்தியர்களுக்கு இதில் ஏற்பட்டுள்ள பிரச்னையைச் சரிசெய்ய தொடர்ந்து அமெரிக்கா உடன் பேசுவோம்&quot; என்று தெரிவித்துள்ளார்.ரந்தீர் ஜெய்ஸ்வால்ஏன் இது முக்கியம்?இந்திய அரசு ஹெச்-1பி விசா பிரச்னையில் தலையிட்டு முடிவெடுப்பது மிக மிக முக்கியம்.அமெரிக்காவின் ஹெச்-1பி விசா பெறும் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தியர்களே.சமூக வலைத்தளச் சோதனை காரணத்தால் மே மாதம் வரையில் நேர்காணல்கள் தள்ளிப் போயிருக்கின்றன.அதுவரை இவர்களுக்கு வேலை இருக்காது; நிதி நெருக்கடி ஏற்படும். இவர்களின் குடும்பம் பாதிக்கப்படும்.மே மாதம் வரையில் நேர்காணல் தள்ளிப்போனால், குடும்பத்துடன் அமெரிக்கா செல்லத் திட்டம் வைத்திருப்பவர்கள் பெரிய பிரச்னையைச் சந்திக்க நேரிடும்.காரணம், மே மாதம் நேர்காணல் முடித்து அமெரிக்கா செல்லும்போது, குழந்தைகளுக்குப் பள்ளி, கல்லூரியில் அட்மிஷன் கிடைப்பது சிரமம்.இதைச் சுற்றி இப்படி பல பிரச்னைகள் இருக்கின்றன. ஆக, இதில் இந்திய அரசு இன்னும் முனைப்பு காட்ட வேண்டும். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-04-03/ubwa1q6r/Newssense-article-2025-04-03T170407.641.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Dec 2025 15:18:29 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>H-1B, விசா, புதிய, கட்டுப்பாடு:, தொடர்ந்து, பேசுவோம், இந்தியர்களுக்கு, இந்திய, அரசின், விளக்கம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>நிலநடுக்கத்தின்போது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரையே திருமணம் செய்துகொள்ளும் பெண் &amp; அடடே லவ் ஸ்டோரி</title>
        <link>https://dailytopnewz24.com/நிலநடுக்கத்தின்போது-உயிரை-காப்பாற்றிய-ராணுவ-வீரரையே-திருமணம்-செய்துகொள்ளும்-பெண்-அடடே-லவ்-ஸ்டோரி</link>
        <guid>https://dailytopnewz24.com/நிலநடுக்கத்தின்போது-உயிரை-காப்பாற்றிய-ராணுவ-வீரரையே-திருமணம்-செய்துகொள்ளும்-பெண்-அடடே-லவ்-ஸ்டோரி</guid>
        <description><![CDATA[ சீனாவில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு பெண் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது உயிரை காப்பாற்றிய ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 2008ஆம் ஆண்டு சீனாவின் வென்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அப்போது 22 வயதான லியோங் என்பவர் அவசர மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.சம்பவம் நடந்த இடத்தில் பத்து வயதான லியூ என்ற பெண் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். லியோங் மற்றும் அவரது மீட்பு குழுவினர்கள் அங்கு பலரையும் காப்பாற்றிய நிலையில் இடிபாடுக்குள் சிக்கியிருந்த லியூவையும் அவர் மீட்டுள்ளார்.  marriageசவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, 2020 ஆண்டு தனது பெற்றோருடன் லியூ உணவருந்திக் கொண்டிருக்கும்போது ஒருவரை அவர் பார்த்திருக்கிறார். அவர் தன்னை காப்பாற்றிய மீட்பு வீரர் போன்று இருப்பதாக தனது தாயிடம் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அவரிடமே அவரது பெயரை கூறி நீங்களா? என்று கேட்டிருக்கிறார். அவர் ”ஆம் லியோங் தான்” என்று கூறியிருக்கிறார்.அதன் பிறகு நடந்த சம்பவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அன்று இரவே இருவரும் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கி இருக்கின்றனர். அதன் பின்னர் தங்களது உணர்வுகளை பகிர தொடங்கி இருக்கின்றனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபரையே லியூ திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.இது குறித்து லியூ கூறுகையில்&quot;அவரை நன்றி உணர்வுக்காக நேசிக்கவில்லை, ஒன்றாக நேரம் செலவழித்த பின்னர் மட்டுமே என் வாழ்க்கையை ஒப்படைக்க கூடிய நபர் இவர் தான் என்பதை உணர்ந்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-08/ir4xdx0r/hero-imag-2025-12-08T141439.879.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நிலநடுக்கத்தின்போது, உயிரை, காப்பாற்றிய, ராணுவ, வீரரையே, திருமணம், செய்துகொள்ளும், பெண், அடடே, லவ், ஸ்டோரி</media:keywords>
    </item>
    <item>
        <title>US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்&amp;apos;&amp;apos; &amp; ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/us-உங்கள்-மனைவி-உஷாவை-இந்தியாவுக்கு-அனுப்புங்கள்-ஜேடி-வான்ஸ்-மீது-கடும்-விமர்சனம்-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-உங்கள்-மனைவி-உஷாவை-இந்தியாவுக்கு-அனுப்புங்கள்-ஜேடி-வான்ஸ்-மீது-கடும்-விமர்சனம்-ஏன்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண்பாடானது (hypocritical), வெளிநாட்டவர்மீது வெறுப்பை கக்கும் (xenophobic) பேச்சு&#039; என அரசியல் விமர்சகர்கள் சாடியுள்ளனர்.பலர், வான்ஸின் மனைவி உஷா இந்தியக் குடியேறிகளின் மகள் என்பதைக் குறிப்பிட்டு, “அவரை (உஷா) இந்தியாவுக்கே திருப்பி அனுப்புங்கள்!” என்று வலியுறுத்தியுள்ளனர்.trump - Vanceஅதிகப்படியான குடியேற்றத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் பறிபோகின்றன என்று குற்றம் சாட்டி, வான்ஸ் தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.அவர் கூறும் கருத்துக்கு எதிரான பொருளாதார ஆய்வுகள் அனைத்தும் ‘பழைய அமைப்பின் மூலம் பணக்காரர்களானவர்கள்’ நிதியில் நடத்தப்பட்டவை என்று குற்றம்சாட்டியிருந்தார்.வான்ஸ் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான வஜாஹத் அலி, “நீங்கள் உஷாவையும், அவரது இந்தியக் குடும்பத்தையும், உங்கள் இரு இனக் குழந்தைகளையும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்” என்று கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார்.Wajahat Ali Postஇந்த கடுமையான தாக்குதலுக்கு முன்னதாக வான்ஸ் பேசிய சில கருத்துகளும் காரணமாக அமைந்தன. “அமெரிக்கர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரர் ஒத்த இனம், மொழி அல்லது தோல் நிறத்தைப் கொண்டிருப்பதை விரும்புவது முற்றிலும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதும்” என்று அவர் பேசியிருந்தார்.உஷாவைக் குறிவைக்க என்ன காரணம்?சில நாட்களுக்கு முன்னர் டர்னிங் பாயிண்ட் யு.எஸ்.ஏ அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய வான்ஸ், தனது மனைவி உஷா ஒருநாள் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொள்வார் என நம்புவதாகத் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.ஜே.டி.வான்ஸ்,  உஷா வான்ஸ்பின்னர், உஷாவுக்கு “மதம் மாறும் திட்டம் இல்லை” என்றும், அவரது நம்பிக்கைகளை தான் மதிப்பதாகவும் தெளிவுபடுத்தி, சர்ச்சையை தவிர்க்க முயன்றார்.ட்ரம்ப் நிர்வாகம் குடியேற்றவாதிகளுக்கு எதிரான சட்டங்களை பலமடங்கு கடுமையாக்கி வரும் சூழலில், ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவியைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது. JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்&#039;&#039; - இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-08/wgryirsw/Usha_Chilukuri_Vance_3.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US:, உங்கள், மனைவி, உஷாவை, இந்தியாவுக்கு, அனுப்புங்கள், ஜேடி, வான்ஸ், மீது, கடும், விமர்சனம், ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Ukraine War: ஐரோப்பவுக்கு துரோகம் செய்கிறதா அமெரிக்கா? &amp; பிரான்ஸ் அதிபரின் சந்தேகமும் விளக்கமும்!</title>
        <link>https://dailytopnewz24.com/ukraine-war-ஐரோப்பவுக்கு-துரோகம்-செய்கிறதா-அமெரிக்கா-பிரான்ஸ்-அதிபரின்-சந்தேகமும்-விளக்கமும்</link>
        <guid>https://dailytopnewz24.com/ukraine-war-ஐரோப்பவுக்கு-துரோகம்-செய்கிறதா-அமெரிக்கா-பிரான்ஸ்-அதிபரின்-சந்தேகமும்-விளக்கமும்</guid>
        <description><![CDATA[ உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் ரஷ்யாவுடன் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஐரோப்பாவுக்கு துரோகம் செய்கிறது என தனிப்பட்ட முறையில் பேசியதாக செய்திகள் பரவின.இதனை மறுத்த மாக்ரோன், “ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்தவிதமான அவநம்பிக்கையும் இல்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் அதிபர் - அமெரிக்க அதிபர்இம்மானுவேல் மாக்ரோன் சந்தேகமும் விளக்கமும்!சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களிடம், “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு இடையே ஒற்றுமை மிக அவசியம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுக்க அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்களின் தேவை உள்ளது” எனப் பேசியுள்ளார்.Modi - Macron பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் எடுத்த செல்ஃபி... ஜெய்ப்பூரில் ரோடு-ஷோ!கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 4, 2025), ஜெர்மன் பத்திரிகையான டெர் ஸ்பீகல் (Der Spiegel) ஒரு ரகசிய தொலைபேசி உரையாடல் பற்றி செய்தி வெளியிட்டது. அதில், உக்ரைன்–ரஷ்யா இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளை மாக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் சந்தேகிப்பதாகக் கூறப்பட்டது.அதில், “பாதுகாப்பு உத்தரவாதங்கள் பற்றித் தெளிவு இல்லாமல், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்கா உக்ரைனுக்குத் துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளது” என்று மாக்ரோன், உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலென்ஸ்கியை எச்சரித்ததாக கூறப்பட்டிருந்தது.இந்த பத்திரிகை செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் இம்மானுவேல் மாக்ரோன்.புதின் - ட்ரம்ப்Ukraine-க்கு துரோகம் செய்கிறாரா ட்ரம்ப்?ஒரு மாதத்திற்கு முன்பு உக்ரைன் போரை நிறுத்துவதற்கான 28 அம்ச அமைதித் திட்டத்தை வாஷிங்டன் முன்வைத்தது. அந்தத் திட்டம், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் உள்ளீடு இல்லாமல் தயாரிக்கப்பட்டது. மேலும், இது ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகளைப் பிரதிபலிப்பதாக விமர்சிக்கப்பட்டது.வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, டிரம்பின் தூதரான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் இந்த வாரம் மாஸ்கோவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.இருவரும் கிரெம்லினில் விளாடிமிர் புடினுடன் ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, விட்காஃப் வியாழக்கிழமை மியாமியில் உக்ரைனின் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் ருஸ்டெம் உமெரோவைச் சந்தித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளின்போது, ஐரோப்பா பேச்சுவார்த்தை செயல்முறையில் ஈடுபடுத்தப்படவில்லை. இது, ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டை டிரம்ப் நிர்வாகம் விரும்பவில்லை என்பதைப் பிரதிபலிக்கிறது; இதனால் இந்த ஒப்பந்தம் குறித்து ஐரோப்பா சந்தேகிக்கிறது.USA: பிரான்ஸ் அதிபர் காரை தடுத்த அமெரிக்க போலீஸ்; நடந்தே தூதரகம் சென்ற மக்ரோன் - Viral Video ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-06/p69kuab7/Emmanuel-Marcron-Zelensky.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ukraine, War:, ஐரோப்பவுக்கு, துரோகம், செய்கிறதா, அமெரிக்கா, பிரான்ஸ், அதிபரின், சந்தேகமும், விளக்கமும்</media:keywords>
    </item>
    <item>
        <title>``இந்த ஆடையை உங்க மனைவிகிட்ட கொடுங்க, அவங்களுக்கு தெரியும்&amp;apos;&amp;apos; &amp; சர்ச்சையை கிளப்பிய ஆடை நிறுவனம்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்த-ஆடையை-உங்க-மனைவிகிட்ட-கொடுங்க-அவங்களுக்கு-தெரியும்-சர்ச்சையை-கிளப்பிய-ஆடை-நிறுவனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்த-ஆடையை-உங்க-மனைவிகிட்ட-கொடுங்க-அவங்களுக்கு-தெரியும்-சர்ச்சையை-கிளப்பிய-ஆடை-நிறுவனம்</guid>
        <description><![CDATA[ சீனாவைச் சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை நிறுவனம் ஒன்று, தங்கள் தயாரிப்பில் இடம்பெற்ற வாசகத்திற்காக கடும் விமர்சனத்திற்குப் பாயப்பட்டுள்ளது.&quot;துணி துவைப்பது பெண்களுக்கான வேலை&quot; என்ற தொனியில் அந்த நிறுவனம் கூறிய வாசகம், இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ‘கு ஜுவோ காங் ஜெங்’ (Gu Zhuo Kang Zheng) என்ற ஆடை நிறுவனம், ஆண்கள் அணியும் ஆடைகளை விற்பனை செய்து வருகிறது.இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் கோட்டில் இருந்த குறிப்பு தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.அந்த ஆடையின் பின்புறத்தில் இருந்த லேபிளில், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் &quot;தயவுசெய்து இதை உங்கள் அன்புக்குரிய பெண்ணிடம் கொடுங்கள், அவருக்கு எல்லாம் தெரியும்&quot; என்று அச்சிடப்பட்டிருந்தது.ஆடையை எப்படித் துவைக்க வேண்டும், எந்திரத்தில் துவைக்கலாமா அல்லது கையில் துவைக்கலாமா என்ற எந்த தொழில்நுட்ப வழிகாட்டுதலும் அதில் இல்லை. அதற்கு பதிலாக, &quot;பெண்ணிடம் கொடுத்துவிடுங்கள், அவர் பார்த்துக்கொள்வார்&quot; என்ற தொனியில் குறிப்பிட்டிருந்தது.இந்த ஆடையை வாங்கிய இணையவாசி ஒருவர், அந்த லேபிளின் புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டவுடன் இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்துள்ளது. பலரும் அந்த நிறுவனத்தின் செயலைக் கடுமையாக விமர்சித்தனர். இந்த விவகாரம் வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆடை நிறுவனம் பொதுமன்னிப்பு கோரியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-05/fiv1xyb6/hero-imag-2025-12-05T111243.994.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்த, ஆடையை, உங்க, மனைவிகிட்ட, கொடுங்க, அவங்களுக்கு, தெரியும், சர்ச்சையை, கிளப்பிய, ஆடை, நிறுவனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி&amp;apos; &amp; குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஆணுறை-கருத்தடை-பொருள்களுக்கு-வரி-குழந்தைகள்-பெற-ஊக்குவிக்கும்-சீன-அரசு-என்ன-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆணுறை-கருத்தடை-பொருள்களுக்கு-வரி-குழந்தைகள்-பெற-ஊக்குவிக்கும்-சீன-அரசு-என்ன-காரணம்</guid>
        <description><![CDATA[ உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்காக ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடைப் பொருட்களின் விலையை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் போன்றவை, அண்மையில் அறிவிக்கப்பட்ட மதிப்புக்கூட்டு வரிச் (Value-added Tax - VAT) சட்டத்தின் கீழ், வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதிகரிக்கும் பாலியல் நோய்கள்சீன அரசு &#039;ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை&#039; என்ற கொள்கையை வலியுறுத்தி வந்தபோது இந்த வரி விலக்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தற்போது ஒரு ஆணுறை $0.60 (இந்திய மதிப்பில் சுமார் 50 ரூபாய்) என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. இது ஆஸ்திரேலியாவின் சில்லறை விலையில் பாதியாகும். ஆனால் வரி விதிப்புக்குப்பிறகு இந்த நிலை எப்படியாக மாறும் எனக் கூற முடியாது. தற்போதைய தகவல்கள் படி 13% வரிவிதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.Chinese Studentsஇந்த வரி விதிப்பு, பெண்கள், இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஒரு பின்னடைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், இது பாலின சமத்துவத்தைப் புறக்கணிப்பதோடு, கருத்தடை மிகவும் தேவைப்படுவோருக்குக் கிடைப்பதை மேலும் கடினமாக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.&quot;பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் நோக்கில், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி இளைஞர்களுக்கு கருத்தடைப் பொருட்களைக் கிடைக்கும்படி வைத்திருப்பது மிகவும் முக்கியம். சில நாடுகள் இளைஞர்களுக்கு ஆணுறைகளை இலவசமாகக் கூட கொடுக்கும் இடத்துக்கு நகர்ந்துள்ளன. ஆனால், இதற்கு வரி விதிப்பது, ஆணுறை கிடைப்பதை தடுப்பதோடு, நோய்த்தொற்று தடுப்பு முயற்சிகளையும் பாதிக்கக்கூடும்&quot; என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஜூன் மாதம் வெளியான ஓர் ஆய்வு, சீனாவில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளின் பாதிப்பும், இறப்பு விகிதமும் சமீபத்திய ஆண்டுகளில் உயர்ந்து வருவதைக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.சீன அதிபர் ஜி ஜின்பிங்அரசின் மக்கள்தொகை கொள்கை மக்களைப் பற்றியது அல்லதற்போது பிறப்பு விகிதம், &#039;மக்கள்தொகைக் கட்டுப்பாடு&#039; என்ற நிலையில் இருந்து &#039;கருவுறுதலை ஊக்குவித்தல்&#039; என்ற நிலைக்கு சீனா மாறியுள்ளது. சீனாவின் கடுமையான &#039;ஒரு குழந்தை கொள்கை&#039; ஒரு தசாப்தத்திற்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. 2016-ல் &#039;இரண்டு குழந்தை கொள்கை&#039; எனவும், பின்னர் 2021-ல் &#039;மூன்று குழந்தை கொள்கை&#039; என்றும் அது மாற்றப்பட்டது.கருத்தடைப் பொருட்கள் வரி விலக்கை இழந்த நிலையில், திருமணத் தகவல் மையங்கள் இப்போது புதிதாக வரி விலக்கு அளிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.சீன அரசு ஊடகங்கள், பெண்கள் பல்கலைக்கழகப் படிப்புக் காலத்திலேயே திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊக்குவித்து வருகின்றன. இது பெண்களின் கல்வி மற்றும் தொழில் முடிவுகளைப் பாதிக்கக்கூடும் என்று அமைப்புகள் எச்சரிக்கை விடுக்கின்றன.இந்த புதிய வரி விதிப்பு ஒரு பொருளாதாரச் திருத்தம் மட்டுமல்ல, குடும்பம், திருமணம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை அரசு அணுகும் விதத்தில் ஏற்பட்ட ஒரு பெரிய அரசியல் மாற்றம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.Chinese Pregnant Womanசீனாவின் அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் படித்துக்கொண்டே பெற்றோருக்குரிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது பற்றியும், வளாகத்தில் குழந்தைகளைப் பெறுவதன் சமூக நன்மைகளைப் பற்றியும் செய்தி வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன.&quot;குறைந்த வயதிலேயே திருமணம் மற்றும் பெற்றோருக்குரிய அழுத்தம், எதிர்காலத்தில் பெண்களின் கல்வி முடிவுகளை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்விகளை இது எழுப்புகிறது&quot; என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.குறைந்த வயது பெற்றோர்களை உருவாக்குவது இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான சரியான வழியாக இருக்க முடியாது எனக் கருதுகின்றனர்.சீனாவின் மக்கள் தொகை கொள்கை ஒருபோதும் மக்களைப் பற்றியது அல்ல. ஆனால் இந்தமுறை சீன அரசின் செயல்பாடுகள் மக்கள் தொகையை அதிகரிப்பதை நோக்கி இருக்கிறதா அல்லது பெண்களை குழந்தை பெற்றெடுக்கும் &#039;வளமாக&#039; மாற்றுகிறதா என்ற கேள்வி சீன இளைஞர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.சீனா: &quot;இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம்&quot; - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-04/9fyulccv/ajays-98.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆணுறை, கருத்தடை, பொருள்களுக்கு, வரி, குழந்தைகள், பெற, ஊக்குவிக்கும், சீன, அரசு, என்ன, காரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை</title>
        <link>https://dailytopnewz24.com/un-15-பில்லியன்-அமெரிக்க-டாலர்-நிலுவை-ரூ5000-கோடி-பட்ஜெட்-கட்-நிதிப்-பற்றாக்குறை-ஐநா-சபை</link>
        <guid>https://dailytopnewz24.com/un-15-பில்லியன்-அமெரிக்க-டாலர்-நிலுவை-ரூ5000-கோடி-பட்ஜெட்-கட்-நிதிப்-பற்றாக்குறை-ஐநா-சபை</guid>
        <description><![CDATA[ ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன் அமெரிக்க டாலர் நிலுவைத் தொகையாக உள்ளது.மேலும், 2025ஆம் ஆண்டுக்கான 877 மில்லியன் அமெரிக்க டாலரும் செலுத்தப்படாமல் இருப்பதால், மொத்த நிலுவைத் தொகை சுமார் 1.586 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.ஐநாஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் வெறும் 145 நாடுகள் மட்டுமே 2025ஆம் ஆண்டுக்கான தங்கள் நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலுவைக் காரணமாக, ஐ.நா. தனது வருடாந்திர பட்ஜெட்டில் கணிசமான குறைப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.பட்ஜெட் குறைப்பு மற்றும் அதன் தாக்கங்கள்ஏற்கெனவே UN80 சீர்திருத்த முயற்சியின் கீழ் ஐ.நா. சபை செலவினங்களைக் குறைக்க முயலும் சூழலில், பெரும்பாலான பணிகள் நிதிப் பற்றாக்குறையால் தடைபடுவதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.&quot;உறுப்பு நாடுகள் தங்கள் பங்களிப்புகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்துமாறு நான் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளேன்&quot; என்று வருந்தியுள்ளார்.ஐநா சபைதிருத்தப்பட்ட திட்டத்தின்படி, 2026ஆம் ஆண்டுக்கான ஐ.நா.வின் வழக்கமான பட்ஜெட் 3.238 பில்லியன் டாலராக இருக்கும். இது 2025 உடன் ஒப்பிடும்போது 577 மில்லியன் டாலர் (சுமார் 5,200 கோடி ரூபாய்) அல்லது 15.1% குறைவாகும்.வேலை இழப்புகள் மற்றும் பணிகளில் தாக்கம்இந்த நிதி நெருக்கடியின் காரணமாக 2,681 வேலைகள் நீக்கப்படும். இது ஐ.நா. அதிகாரிகளில் சுமார் 18.8% ஆகும். சிறப்பு அரசியல் பணிகளில் 2025 உடன் ஒப்பிடுகையில் 21% குறைப்பு மேற்கொள்ளப்படும்.இதன் விளைவாக, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் உலகின் அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடுகளில் ஐ.நா.வின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, ஐ.நா.வின் முக்கிய நிலையங்களைச் செலவு குறைவான நகரங்களுக்கு மாற்றுவது, ஊழியர்களின் விருப்ப ஓய்வை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்த ஐ.நா. திட்டமிட்டுள்ளது.Gaza: ``உலகின் மௌனம் அச்சுறுத்துகிறது&#039;&#039; -இஸ்ரேலை எதிர்த்து காசாவுக்கு உதவ முயலும் கிரேட்டா தன்பெர்க் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2022-04/6dcb65af-299d-4591-8a63-29cb329fe4d5/WhatsApp_Image_2022_04_18_at_12_06_52_PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>UN:, 1.5, பில்லியன், அமெரிக்க, டாலர், நிலுவை, ரூ.5000, கோடி, பட்ஜெட், கட், நிதிப், பற்றாக்குறை, ஐநா, சபை</media:keywords>
    </item>
    <item>
        <title>Napoleon: &amp;apos;&amp;apos;அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது&amp;apos;&amp;apos;&amp; மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்</title>
        <link>https://dailytopnewz24.com/napoleon-அதிக-பொருட்செலவில்-படமாக்கப்படவுள்ளது-மீண்டும்-தயாரிப்பின்-பக்கம்-வரும்-நெப்போலியன்</link>
        <guid>https://dailytopnewz24.com/napoleon-அதிக-பொருட்செலவில்-படமாக்கப்படவுள்ளது-மீண்டும்-தயாரிப்பின்-பக்கம்-வரும்-நெப்போலியன்</guid>
        <description><![CDATA[ நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த &#039;வல்லவனுக்கும் வல்லவன்&#039; என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன்நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய &#039;ஜீவன் ஃபிலிம்ஸ்&#039; நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை &#039;ஓநாய்கள் ஜாக்கிரதை&#039; படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம்.அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், &quot;உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை &#039;ஜீவன் ஃபிலிம்ஸ்&#039; என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன்.         View this post on Instagram            A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)
எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.&quot; எனத் தெரிவித்திருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-02/7d8fywr0/Napoleon.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 12 Dec 2025 10:12:19 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Napoleon:, அதிக, பொருட்செலவில், படமாக்கப்படவுள்ளது-, மீண்டும், தயாரிப்பின், பக்கம், வரும், நெப்போலியன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Elon Musk:``என் மகன்களில் ஒருவரின் பெயரில் &amp;apos;சேகர்&amp;apos; எனச் சேர்த்திருக்கிறேன்&amp;quot; &amp; எலான் மஸ்க்</title>
        <link>https://dailytopnewz24.com/elon-muskஎன்-மகன்களில்-ஒருவரின்-பெயரில்-சேகர்-எனச்-சேர்த்திருக்கிறேன்-எலான்-மஸ்க்</link>
        <guid>https://dailytopnewz24.com/elon-muskஎன்-மகன்களில்-ஒருவரின்-பெயரில்-சேகர்-எனச்-சேர்த்திருக்கிறேன்-எலான்-மஸ்க்</guid>
        <description><![CDATA[ &quot;WTF is&quot; பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன் உரையாற்றினார். அதில் எலான் மஸ்க் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடலில், எலான் மஸ்க்,`` உங்களுக்குத் தெரியுமா என் மனைவி ஷிவோன் ஜிலிஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். அவளுக்கும் எனக்கும் பிறந்த என் மகன்களில் ஒருவருக்கு, இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமண்யன் சந்திரசேகரின் பெயரில் வரும் சேகர் என்பதை இணைத்திருப்போம்.Shivon Zilis என் மனைவி கனடாவில் வளர்ந்தாள். அவள் குழந்தையாக இருந்தபோது தத்துகொடுக்கப்பட்டாள். அவளுடைய இந்திய தந்தை கனடாவின் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக இருக்கலாம் எனக் கருதுகிறேன். சரியான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது. ஆனால் அது இப்போது மாறி வருவதாகத் தெரிகிறது&quot; என்றார்.ஷிவோன் ஜிலிஸ்யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷிவோன் ஜிலிஸ், 2017-ல் எலான் மஸ்க்கின் AI நிறுவனமான நியூராலிங்கில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சிறப்பு திட்டங்களின் இயக்குநராக உள்ளார். ஜிலிஸ் - எலான் மஸ்க் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.Elon Musk: விநாயகர் சிலை குறித்து AI-ல் தேடிய எலான் - பதிலால் வியந்த நெட்டிசன்கள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/4ipxyzd6/Shivon-Zilis" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Elon, Musk:என், மகன்களில், ஒருவரின், பெயரில், சேகர், எனச், சேர்த்திருக்கிறேன், எலான், மஸ்க்</media:keywords>
    </item>
    <item>
        <title>H&amp;1B Visa திட்டத்தை நிறுத்த வேண்டுமா? இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யும் எலான் மஸ்க்</title>
        <link>https://dailytopnewz24.com/h-1b-visa-திட்டத்தை-நிறுத்த-வேண்டுமா-இந்தியர்களுக்கு-சப்போர்ட்-செய்யும்-எலான்-மஸ்க்</link>
        <guid>https://dailytopnewz24.com/h-1b-visa-திட்டத்தை-நிறுத்த-வேண்டுமா-இந்தியர்களுக்கு-சப்போர்ட்-செய்யும்-எலான்-மஸ்க்</guid>
        <description><![CDATA[ ஜெரோதாவின் இணை நிறுவனர் நிகில் காமத்தின் &#039;பீப்பிள் பை WTF&#039; என்கிற பாட்காஸ்டில் கலந்துகொண்டிருக்கிறார் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். அந்தப் பாட்காஸ்ட்டில் எலான் மஸ்க் இந்தியர்கள் குறித்தும், ஹெச்-1பி விசா குறித்தும் பேசியுள்ளார். &quot;திறமையான இந்தியர்களால் அமெரிக்கா நிறைய பலனடைந்திருக்கிறது. தற்போதைய ஹெச்-1பி விசா கெடுபிடி நடைமுறைக்கு, அதில் செய்யப்பட்ட மோசடிகளே காரணம். முந்தைய அரசாங்கம் எந்தவொரு கெடுபிடியும் இல்லாமல், ஹெச்-1பி விசாவை மிகவும் எளிதாகக் கொடுத்தது. அதுவும் ஒரு காரணம். People by WTF - பாட்காஸ்ட்&#039;இப்போ&#039; வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!திறமையான மக்கள் பற்றாக்குறை...
அமெரிக்காவிற்கு வரும் பிற நாட்டினரால், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது என்று கூறுவது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. நான் நேரடியாகப் பார்த்தவரையில் இங்கே எப்போதும் திறனுள்ள மக்கள் பற்றாக்குறை இருக்கிறது. கடினமான பணிகளைச் செய்துமுடிக்கும் திறமையான ஆட்களை இங்கே கண்டுபிடிப்பது மிகவும் சிரமமானது. அதனால், இன்னும் நிறைய திறமையான மக்கள் இங்கே இருந்தால் நல்லது. ஹெச்-1பி விசா திட்டத்தை நிறுத்த வேண்டுமா?
என்னுடைய நிறுவனம் எப்போதும் திறமையான மக்களை பணியமர்த்துவதில் தான் கவனமாக இருக்கும். ஆனால், சில நிறுவனங்கள் ஹெச்-1பி விசாவில் மோசடி செய்கின்றனர். ஆனால், அதற்காக ஹெச்-1பி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அந்த மோசடியை தான் சரிசெய்ய வேண்டும்&quot; என்றார்.`மோசடி, நம்பிக்கை மீறல், லஞ்சம்&#039; - வழக்கில் மன்னிப்பு கோரும் நெதன்யாகு; இஸ்ரேல் அதிபர் பதில் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-12-01/8in7l1fg/Screenshot-2025-12-01-113206.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>H-1B, Visa, திட்டத்தை, நிறுத்த, வேண்டுமா, இந்தியர்களுக்கு, சப்போர்ட், செய்யும், எலான், மஸ்க்</media:keywords>
    </item>
    <item>
        <title>``உலகப் பொருளாதாரத்தை அரசியல் வென்றது&amp;quot;&amp; அமைச்சர் ஜெய்சங்கரின் &amp;apos;அபாய குறியீடு&amp;apos; உரை</title>
        <link>https://dailytopnewz24.com/உலகப்-பொருளாதாரத்தை-அரசியல்-வென்றது-அமைச்சர்-ஜெய்சங்கரின்-அபாய-குறியீடு-உரை</link>
        <guid>https://dailytopnewz24.com/உலகப்-பொருளாதாரத்தை-அரசியல்-வென்றது-அமைச்சர்-ஜெய்சங்கரின்-அபாய-குறியீடு-உரை</guid>
        <description><![CDATA[ இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் உலகளாவிய அபாயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். கொல்கத்தா ஐஐஎம் வெளிவுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், ``நாம் வாழும் இந்தக் காலம் பொருளாதாரத்தை மிஞ்சும் அரசியல் நிகழக்கூடிய காலம். இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல... அமைச்சர் ஜெய்சங்கர்சமகால வர்த்தக அமைப்பின் நீண்டகால உத்தரவாத நாடான அமெரிக்கா, தீவிரமாகப் புதிய ஈடுபாட்டு விதிமுறைகளை அமைத்து வருகிறது. ஒவ்வொரு நாட்டையும் பொதுவான விதிகளின் கீழ் கையாளாமல், தனித்தனியாகக் கையாள்வதன் மூலம் இதை நிறைவேற்றி வருகிறது. உதாரணமாக, சீனா நீண்ட காலமாக அதன் சொந்த விதிகளின்படி அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தது. இப்போதும் அதைத் தொடர்ந்து செய்கிறது. ஆனால், இரு நாடுகளின் அரசியல் நிலைப்பாடு காரணமாக இந்த வர்த்தகத்தில் பல சிக்கல்கள் திட்டமிட்டு (வரிகளின் மூலம்) எழுப்பப்படுகின்றன.உலகமயமாக்கல் மற்றும் விநியோகப் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் பிற நாடுகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்காக, எதிர்பாராத அனைத்து சிக்கல்களுக்கும் எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் பதிலளிக்கின்றன.உலகளாவிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு தற்போது சீனாவில் நடைபெறுகிறது. இது, விநியோகச் சங்கிலிகளின் &#039;மீள்தன்மை (Resilience)&#039; மற்றும் &#039;நம்பகத்தன்மை&#039; ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.உலகளவில் நடந்துவரும் மோதல்கள் மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகள் போன்றவை விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்படும் சாத்தியத்தை அதிகரித்திருக்கின்றன.அமைச்சர் ஜெய்சங்கர்இந்தியா தற்போது நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், எரிசக்தி மற்றும் மின்சாரம் போன்ற உள்கட்டமைப்புகளின் அடிப்படையில் சில வெற்றிகரமான ஆசிய பொருளாதாரங்களுடனான இடைவெளியை வேகமாகக் குறைத்துவருகிறது.எந்தத் தரநிலைகளின்படி பார்த்தாலும் நாம் இப்போது முன்னேறி வருகிறோம். இந்தியாவால் ஏற்படும் முன்னேற்றங்களை உலகம் கவனித்து வருகிறது. எனவே, இதைக் கருத்தில்கொண்டு, இன்று நாம் புதிய வர்த்தக ஏற்பாடுகளை உருவாக்கவும் மற்றும் புதிய இணைப்பு முயற்சிகளை ஊக்குவிக்கவும் ஆலோசித்து வருகிறோம்.&quot; எனத் தனது உரையை நிறைவு செய்தார்.மலேசியாவில் மார்கோ ரூபியோவை சந்தித்த ஜெய்சங்கர்; வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பாசிட்டிவ் சிக்னல்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-30/drllbmlr/jaishankar-1.jfif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உலகப், பொருளாதாரத்தை, அரசியல், வென்றது-, அமைச்சர், ஜெய்சங்கரின், அபாய, குறியீடு, உரை</media:keywords>
    </item>
    <item>
        <title>வெனிசுலா VS ட்ரம்ப்: போதைப்பொருட்களுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்கள் மீதானா பசியா?</title>
        <link>https://dailytopnewz24.com/வெனிசுலா-vs-ட்ரம்ப்-போதைப்பொருட்களுக்கு-எதிரான-போரா-எண்ணெய்-வளங்கள்-மீதானா-பசியா</link>
        <guid>https://dailytopnewz24.com/வெனிசுலா-vs-ட்ரம்ப்-போதைப்பொருட்களுக்கு-எதிரான-போரா-எண்ணெய்-வளங்கள்-மீதானா-பசியா</guid>
        <description><![CDATA[ தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வான்வெளிகள் மூடப்பட்டதாகக் கருத வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியிருப்பதை, காலனித்துவ அச்சுறுத்தல் எனக் கடுமையாக எதிர்த்துள்ளது வெனிசுலா அரசு. சட்டப்படி, ஒரு நாட்டின் வான்வெளியை மூடுவதற்கு அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால், டிரம்ப்பின் சமூக வலைதளப் பதிவு, அந்தப் பகுதிக்கு விமானப் பயணம் மேற்கொள்வோருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, விமான நிறுவனங்கள் அங்கு சேவை செய்வதைத் தவிர்க்க வழிவகுக்கிறது.அமெரிக்காவின் ராணுவ அணிவகுப்புகடந்த சில மாதங்களாக அமெரிக்கா, கரீபியன் பகுதியில் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு (USS Gerald Ford) மற்றும் சுமார் 15,000 துருப்புக்களை வெனிசுலாவைத் தாக்கும் தொலைவில் நிலைநிறுத்தியுள்ளது.USS Gerald R. Ford (CVN 78)1989-ல் பனாமாவை ஆக்கிரமித்ததிலிருந்து அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் மேற்கொண்டதிலேயே இதுதான் மிகப்பெரிய படை அணிவகுப்பாகும். இது போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காகத்தான் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ, போதைப்பொருள் கடத்தலை காரணமாகக் காட்டி, தன்னை வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.விமான சேவைகளுக்கு மிரட்டல்?ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில், &quot;அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மனிதர்களைக் கடத்துபவர்களும், &#039;வெனிசுலாவுக்கு மேலேயும் அதைச் சுற்றியுள்ள முழு வான்வெளியும் மூடப்பட்டதாகக் கருதவும்&#039;.&quot; என்று எழுதியிருந்தார்.அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சில நாட்களுக்கு முன்னரே, வெனிசுலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்து விமான நிறுவனங்களை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.Venezuela in Mapகடந்த திங்கள் அன்று, சர்வதேச விமான சேவைகள் வெனிசுலாவில் சேவையைத் தொடரவேண்டும் என அந்த நாட்டு அரசு 48 மணி நேரம் காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் ஸ்பெயினின் இபேரியா (Iberia), டாபி போர்ச்சுகல் (TAP Portugal), கோல் (Gol), லேடம் (Latam), ஏவியன்கா (Avianca) மற்றும் டர்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines) ஆகிய ஆறு பெரிய சர்வதேச விமான நிறுவனங்கள், விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு அளிக்கப்பட்ட 48 மணி நேர காலக்கெடுவைத் தவறவிட்டதால், அவை வெனிசுலாவில் தரையிறங்க வெனிசுலா அரசு புதன்கிழமை தடை விதித்தது.இதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகள் &quot;தரை மார்க்கமாக&quot; &quot;மிக விரைவில்&quot; தொடங்கும் என்று டிரம்ப் கடந்த வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.போதைப்பொருளுக்கு எதிரான போரா? எண்ணெய் வளங்களுக்கான பசியா?வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா வாராந்திர குடியேற்றவாசிகள் திரும்பும் விமானச் சேவையை &#039;தன்னிச்சையாக நிறுத்திவிட்டது&#039; என்று குற்றம் சாட்டியுள்ளது.&quot;அமெரிக்காவின் அநாகரீகமான ஆக்கிரமிப்புச் செயலை உறுதியாக நிராகரிக்க சர்வதேச சமூகம், உலகின் இறையாண்மை கொண்ட அரசாங்கங்கள், ஐ.நா. மற்றும் அது தொடர்புடைய பன்னாட்டு அமைப்புகளுக்கு நாங்கள் நேரடியாக அழைப்பு விடுக்கிறோம்&quot; என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Nicolás Maduro போதைப்பொருள் ஏற்றிச் சென்றதாக அமெரிக்கப் படைகள் குறைந்தது 21 படகுகளின் மீது தாக்குதல் நடத்தி, 80-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளது. இருப்பினும், அந்தப் படகுகளில் போதைப்பொருள் இருந்தது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வழங்கவில்லை.மடுரோவின் 2018 மறுதேர்தல் முறைகேடானது என்று வெனிசுலா எதிர்க்கட்சிகள் மற்றும் பல வெளிநாடுகள் குற்றம் சாட்டின. ஆனால் அமெரிக்கா, எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவே ஆட்சிக் கவிழ்ப்பு (Regime Change) நடத்த சதி செய்வதாக வெனிசுலா அதிபர் குற்றம் சாட்டுகிறார்.அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையின் நோக்கம் மடுரோவைத் பதவி நீக்கம் செய்வதே என்று வெனிசுலா அரசாங்கம் நம்புகிறது. நீண்ட காலமாக அமெரிக்க அரசு வெனிசுலா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து, அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் உணவு இறக்குமதியை கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.தனது வழிகாட்டி ஹியூகோ சாவேஸ் போலவே, மடுரோவும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அமெரிக்கா ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு அதன் எண்ணெய் வளத்தை சுரண்ட ஆட்சிக்கவிழ்ப்பு முதல் கொலை வரை பலவேறு சதிகளில் ஈடுபடுவதாக இவர்கள் தரப்பு குற்றம்சாட்டுகிறது.மடுரோ மீது பல்வேறு குற்றவியல் புகார்களை முன்வைத்துள்ள அமெரிக்க அரசு, மடுரோவைக் கைது செய்ய உதவும் தகவல்களுக்கு அமெரிக்கா பெரும் தொகையைச் சன்மானமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.US vs Nenezuelaவெனிசுலா அதிபர் போதைப்பொருள் கூட்டத்தின் தலைவரா?அத்துடன், அமெரிக்கா, &#039;கார்டெல் டி லாஸ் சோல்ஸ்&#039; (Cartel de los Soles) என்ற குழுவை ஒரு வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்தக் குழுவுக்கு மடுரோதான் தலைமை தாங்குகிறார் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.ஒரு அமைப்பைத் தீவிரவாதக் குழு என்று முத்திரை குத்துவது, அதை இலக்கு வைத்து அழிப்பதற்கான பரந்த அதிகாரங்களை அமெரிக்கச் சட்டம் அமலாக்கம் மற்றும் ராணுவ முகமைகளுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.இந்த அறிவிப்பு குறித்து வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் &quot;தீவிரமாக, உறுதியாக, மற்றும் முற்றிலும் நிராகரிக்கிறோம்&quot; எனக் கூறியுள்ளது.இந்தக் கார்டெல்லின் உயர் பதவியில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வெனிசுலாவின் உள்நாட்டு மற்றும் நீதித்துறை அமைச்சர் டியோஸ்டாடோ காபெல்லோ (Diosdado Cabello), நீண்ட காலமாகவே இது ஒரு &quot;கற்பன ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-30/g1mihv2s/Trump" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெனிசுலா, ட்ரம்ப்:, போதைப்பொருட்களுக்கு, எதிரான, போரா, எண்ணெய், வளங்கள், மீதானா, பசியா</media:keywords>
    </item>
    <item>
        <title>Putin: டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்; இந்தச் சந்திப்பு ஏன் முக்கியமானது?</title>
        <link>https://dailytopnewz24.com/putin-டிசம்பரில்-இந்தியா-வரும்-ரஷ்ய-அதிபர்-இந்தச்-சந்திப்பு-ஏன்-முக்கியமானது</link>
        <guid>https://dailytopnewz24.com/putin-டிசம்பரில்-இந்தியா-வரும்-ரஷ்ய-அதிபர்-இந்தச்-சந்திப்பு-ஏன்-முக்கியமானது</guid>
        <description><![CDATA[ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் காரணமாக அமெரிக்க அரசு இந்தியா மீது வரி விதித்தது முதல் இந்தியா - ரஷ்யா உறவுகள் வலுவடைந்து வருகின்றன. இந்த சூழலில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.Putin வருகை - இந்திய அரசு சொல்வதென்ன?புதின்இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &quot;பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புதின், 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்&quot; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பயணத்தின்போது, அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். அத்துடன், ரஷ்ய அதிபரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்று விருந்தளிக்கிறார்.புதினின் இந்த இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும், &#039;சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மையை&#039; வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு திட்டத்தை அமைப்பதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்திய மற்றும் ரஷ்யத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.Ajit Dovalரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வரவிருப்பது குறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தபோது தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டிருந்தது.பிரதமர் மோடியும், புதினும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின்போதுச் சந்தித்தனர். அப்போது, ரஷ்ய அதிபரின் லிமோசின் காரில் இருவரும் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த மாதத் தொடக்கத்தில், ரஷ்ய அதிபரின் உதவியாளர் நிகோலாய் பாத்ருஷேவ் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோதும், மோடி புதினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த மாதம் புதினை இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிரதமர் கூறியிருந்தார்.Presidents of America and Ukraine இந்தியா - ரஷ்யா உறவுஇந்தியா மற்றும் ரஷ்யா இடையே, சோவியத் காலத்திலிருந்தே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுடன் வலுவான நட்புறவு இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன. இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் ரஷ்யா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி அளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.உக்ரைன் போருக்கு மத்தியில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், புதின் தனது வெளிநாட்டுப் பயணங்களை வெகுவாகக் குறைத்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியா ஒரு உறுப்பினராக இல்லாததால், புதினை கைது செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை. டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான சிக்கலான உறவுக்கு மத்தியில், புதின் அவர்களின் இந்தப் பயணம் இந்தியா-ரஷ்யா உறவின் வலிமையை காட்டுவதாகவும், இந்தியாவின் புவிசார் அரசியல் உத்தியில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.`உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-03/ksvmun2a/புதின்-மோடி-.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Putin:, டிசம்பரில், இந்தியா, வரும், ரஷ்ய, அதிபர், இந்தச், சந்திப்பு, ஏன், முக்கியமானது</media:keywords>
    </item>
    <item>
        <title>வெள்ளை மாளிகை வாசலில் துப்பாக்கிச் சூடு: பெண் காவலர் பலி; `பைடன்தான் காரணம்&amp;apos; &amp;ட்ரம்ப் குற்றச்சாட்டு</title>
        <link>https://dailytopnewz24.com/வெள்ளை-மாளிகை-வாசலில்-துப்பாக்கிச்-சூடு-பெண்-காவலர்-பலி-பைடன்தான்-காரணம்-ட்ரம்ப்-குற்றச்சாட்டு</link>
        <guid>https://dailytopnewz24.com/வெள்ளை-மாளிகை-வாசலில்-துப்பாக்கிச்-சூடு-பெண்-காவலர்-பலி-பைடன்தான்-காரணம்-ட்ரம்ப்-குற்றச்சாட்டு</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகையில், தேசிய காவல்படை உறுப்பினர்களான சிறப்பு நிபுணர் சாரா பெக்ஸ்ட்ரோம், ஸ்டாஃப் சார்ஜென்ட் ஆண்ட்ரூ வுல்ஃப் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.அப்போது அங்கு வந்த ஒருவர் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களைத் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இரு பாதுகாப்பு வீரர்களும் கடுமையாகக் காயமடைந்தனர்.ட்ரம்ப்அவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சாரா பெக்ஸ்ட்ரோம் உயிரிழந்தார். மற்றொரு காவல்துறை நிபுணர் சிகிச்சையில் இருக்கிறார். இந்த நிலையில், வெள்ளை மாளிகை அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.இது தொடர்பாக வெளியான செய்தியில், இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா (29). இவர் 2021-ல் அமெரிக்காவில் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் பயங்கரவாதச் செயல் குற்றச்சாட்டில் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) விசாரணையில் இருக்கிறார்.பலியான சாரா பெக்ஸ்ட்ரோம்இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம், அகதிகள் வருகையைக் காட்டும் ஒரு விமானப் படத்தைக் காட்டி, &quot;மிகவும் ஆபத்தான மற்றும் குற்றப் பின்னணி கொண்ட மக்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு வந்தார்கள். அமெரிக்கா விரும்பும் தகுதியான நல்லவர்கள் அல்ல.தற்போது இந்த நிலைமை குழப்பமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தேக நபர் ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டவர். அவரை ஜோ பைடன் அரசுதான் இங்குக் கொண்டு வந்தது.அமெரிக்காவுக்குள் வரும் மக்களைக் கட்டுப்படுத்துவதைவிடப் பெரிய பாதுகாப்புப் பிரச்னை எதுவும் இல்லை. உண்மையைச் சொன்னால், இப்படிப்பட்டவர்களை நாங்கள் இங்கு விரும்பவில்லை&quot; என்றார்.மீண்டும் H-1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-07/26d99c69-10ab-4b6a-9d4c-ea446d4235bb/vikatan_2020_08_e11b5797_75c9_4c50_a26e_21e722b817e5_louis_velazquez_XWW746i6WoM_unsplash.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெள்ளை, மாளிகை, வாசலில், துப்பாக்கிச், சூடு:, பெண், காவலர், பலி, பைடன்தான், காரணம், -ட்ரம்ப், குற்றச்சாட்டு</media:keywords>
    </item>
    <item>
        <title>Hong Kong: 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள்: ஒரே நேரத்தில் தீ பற்றிய சோகம்; 44 பேர் பலி!</title>
        <link>https://dailytopnewz24.com/hong-kong-32-மாடிகள்-கொண்ட-8-கட்டிடங்கள்-ஒரே-நேரத்தில்-தீ-பற்றிய-சோகம்-44-பேர்-பலி</link>
        <guid>https://dailytopnewz24.com/hong-kong-32-மாடிகள்-கொண்ட-8-கட்டிடங்கள்-ஒரே-நேரத்தில்-தீ-பற்றிய-சோகம்-44-பேர்-பலி</guid>
        <description><![CDATA[ சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு நாடான ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 44 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஹாங்காங்கில் உள்ள தை போவில் அமைந்துள்ளது வாங் ஃபுக் நீதிமன்றம் (Wang Fuk Court) என்ற உயரமான குடியிருப்பு வளாகம். இந்த வளாகத்தில் 32 மாடிகள் கொண்ட 8 கட்டிடங்கள் இருக்கின்றன. அதனால் மிகுந்த அடர்த்தியான குடியிருப்பு வளாகம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கட்டிடம் பழுதுபார்க்கப்பட்டு வந்தது. அதற்காக மூங்கில் சாரக்கட்டுகளால் கட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், சீன நேரத்தின்படி நேற்று பிற்பகல் 2:50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.Hong Kong: தீ விபத்து பலத்த காற்று, எளிதில் தீபற்றும் மூங்கில் சாரக்கட்டுகள் போன்றவற்றால், தீ மளமளவென அடுத்தடுத்த கட்டிடங்களுக்கும் பரவியிருக்கிறது. இந்த தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 44 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 279 பேர் காயமடைந்ததாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து 900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார். மீட்புப் பணியைத் துரிதப்படுத்தி, இன்னும் கட்டிடத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.Hong Kong: 31 தளங்கள் கொண்ட 8 கட்டடங்களில் தீ விபத்து; குறைந்தபட்சம் 13 பேர் மரணம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-27/qf8jihqj/Hong-Kong" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Hong, Kong:, மாடிகள், கொண்ட, கட்டிடங்கள்:, ஒரே, நேரத்தில், தீ, பற்றிய, சோகம், பேர், பலி</media:keywords>
    </item>
    <item>
        <title>மீண்டும் H&amp;1B விசாவிற்கு வந்த சோதனை; ட்ரம்ப் அரசாங்கத்தின் அடுத்த நெருக்கடி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/மீண்டும்-h-1b-விசாவிற்கு-வந்த-சோதனை-ட்ரம்ப்-அரசாங்கத்தின்-அடுத்த-நெருக்கடி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/மீண்டும்-h-1b-விசாவிற்கு-வந்த-சோதனை-ட்ரம்ப்-அரசாங்கத்தின்-அடுத்த-நெருக்கடி-என்ன</guid>
        <description><![CDATA[ வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் அதிகம் குடியேறுவதை தடுப்பதும், அமெரிக்கர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதும் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஃபுல் ஃபோக்கஸ். அவர் முன்னெடுத்த தேர்தல் பிராசாரமும் இது தான். அதற்கேற்ற மாதிரி அதிபராக பதவியேற்றதும் அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றினார். அடுத்ததாக விசா நடைமுறைகளை கெடுபிடிகளை அதிகரித்து வருகிறார். அதில் ஒன்று தான் ஹெச்-1பி விசா கட்டண உயர்வு. இது இந்தியர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. காரணம், இந்த விசா வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. ஹெச்-1பி விசாH-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு?&#039;பிராஜெக்ட் ஃபயர்வால்&#039; திட்டம்
இந்த சூழலில் தான், ஹெச்-1பி விசாவிற்கு மேலும் கெடுபிடியை கூட்டுவதை போல, &#039;பிராஜெக்ட் ஃபயர்வால் (Project Firewall)&#039; என்கிற திட்டத்தை கொண்டு வந்துள்ளது ட்ரம்பின் அரசாங்கம். இந்தக் குழு ஹெச்-1பி விசா விண்ணப்பத்தை தவறாக நிறுவனங்கள் பயன்படுத்துகிறதா என்பதை கண்காணிக்கும். இந்தக் குழுவின் முக்கிய வேலை, வரும் விண்ணப்பங்களை, &#039;குறிப்பிட்ட வேலையை அமெரிக்கர்கள் செய்ய முடியுமா?&#039; என்பதை ஆராய்வது தான். இதன் மூலம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கலாம்... சம்பளத்தை உயர்த்தலாம் என்பதை ட்ரம்ப் அரசாங்கத்தின் திட்டம் ஆகும். H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-26/y7hktt4g/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மீண்டும், H-1B, விசாவிற்கு, வந்த, சோதனை, ட்ரம்ப், அரசாங்கத்தின், அடுத்த, நெருக்கடி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>Fei&amp;Fei Li: நிறுவனம் ஆரம்பித்த ஒரே ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்! &amp; யார் இந்த AI உலகின் `ராஜமாதா&amp;apos;?</title>
        <link>https://dailytopnewz24.com/fei-fei-li-நிறுவனம்-ஆரம்பித்த-ஒரே-ஆண்டில்-ஒரு-பில்லியன்-டாலர்-யார்-இந்த-ai-உலகின்-ராஜமாதா</link>
        <guid>https://dailytopnewz24.com/fei-fei-li-நிறுவனம்-ஆரம்பித்த-ஒரே-ஆண்டில்-ஒரு-பில்லியன்-டாலர்-யார்-இந்த-ai-உலகின்-ராஜமாதா</guid>
        <description><![CDATA[ எங்கும் ஏஐ... எதிலும் ஏஐ... என தற்போது ஏஐ துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. அந்தத் துறையில் முக்கியமான ஒருவர் தான் ஏஐ துறையின் &#039;ராஜமாதா&#039; என்று அழைக்கப்படும் ஃபெய் - ஃபெய் லி. யார் இந்த ஃபெய் - ஃபெய் லி? 
சீனாவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லி, பொருளாதார தேவைகளுக்காக தனது 15 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய இளம் வயதில் நியூ ஜெர்சியில் அவர்கள் குடும்பத்திற்கு இருந்த சொந்தமான சின்ன டிரைவாஷ் கடையில் உதவிகளை செய்து வந்தார். இங்கே வேலை செய்த நேரம் போக, மீதி நேரங்களில் அவர் இருப்பிடத்திற்கு அருகே இருந்த சீன உணவகங்களில் பணிபுரிந்துள்ளார். ஃபெய் - ஃபெய் லிGold Rate: மீண்டும் உயரும் தங்கம் விலை; காரணம் என்ன? இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?கல்லூரி படிப்பு
வீட்டிற்கு உதவி, சின்ன சின்ன வேலைகள் என எது செய்து வந்தாலும், படிப்பை மட்டும் அவர் விட்டுக்கொடுக்கவில்லை. லி பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பையும், கலிஃபோர்னியாவில் உள்ள கால்டெக்கில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த பின், கூகுள் கிளவுட் நிறுவனத்தில் ஏஐ பிரிவில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். 2018-ம் ஆண்டு சில காரணங்களுக்காக அந்தப் பணியில் இருந்து விலக, ஏ.ஐ மீது அவருக்கு இருந்த பற்று கொஞ்சம் கூட குறையவில்லை. அதனால், அந்தத் துறையில் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார். ஏ.ஐ-க்கே பயிற்சியளிக்கும் கருவி 2007-ம் ஆண்டு, லி தன்னுடன் வேலை பார்ப்பவர்களையும் சில மாணவர்களை இணைத்து &#039;இமேஜ்நெட்&#039; என்கிற திட்டத்தை உருவாக்கினார். இது 14 மில்லியனுக்கும் அதிகமான லேபிள் இடப்பட்ட படங்களைக் கொண்டு மிகப்பெரிய தொகுப்பு ஆகும். இது தான் பின்னாளில் ஏ.ஐ-க்கே பயிற்சி அளிப்பதற்கான முக்கிய கருவியாக மாறியது. இமேஜ்நெட் வருவதற்கு முன், ஏஐ படங்களில் உள்ள பொருள்களை புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டது. ஆனால், இமேஜ்நெட்டிற்கு பின், ஆப்ஜெக்ட் டிடெக்‌ஷன், முகம் அடையாளம் காணுதல் போன்ற பல விஷயங்கள் ஏஐ-க்கு ஈசியாகின. &#039;குயின் எலிசபெத்&#039; பட்டம் பெற்ற போதுமனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்! &#039;குயின் எலிசபெத்&#039; ஃபெய் - ஃபெய் லி
லியின் ஆர்வம் மற்றும் கடின முயற்சியால் கடந்த ஆண்டு &#039;World labs&#039; என்னும் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ஆரம்பித்த ஓராண்டிலேயே பெரிய பெரிய உயரங்களை தொட்டது இந்த நிறுவனம். தற்போது இந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டுமே 1 பில்லியன் டாலர். நிறுவனத்தில் பணிபுரிவதோடு மட்டும் நின்றுவிடாமல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இதுவரை சில பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள &#039;குயின் எலிசபெத்&#039; பட்டத்தையும் பெற்றுள்ளார். வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை:  கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-26/opth08ai/Fei_Fei_Li_AI.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Fei-Fei, Li:, நிறுவனம், ஆரம்பித்த, ஒரே, ஆண்டில், ஒரு, பில்லியன், டாலர், யார், இந்த, உலகின், ராஜமாதா</media:keywords>
    </item>
    <item>
        <title>சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்</title>
        <link>https://dailytopnewz24.com/சீன-விமான-நிலையத்தில்-அருணாச்சலப்-பெண்-தடுத்து-நிறுத்தம்-சீனாவின்-பதிலுக்கு-இந்தியா-கண்டனம்</link>
        <guid>https://dailytopnewz24.com/சீன-விமான-நிலையத்தில்-அருணாச்சலப்-பெண்-தடுத்து-நிறுத்தம்-சீனாவின்-பதிலுக்கு-இந்தியா-கண்டனம்</guid>
        <description><![CDATA[ சீனாவின் நடவடிக்கை&quot;நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன். நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறினார்கள். இதற்கு காரணமாக, அவர்கள் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் பிராந்தியம் என்று கூறுகிறார்கள்&quot; - இது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கின் சமீபத்திய பதிவு. ஷாங்காய் விமான நிலையம்Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது&#039; ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?இந்தப் பதிவு இந்தியா - சீனா உறவில் சிக்கலை கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் மாநிலமாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை, 2006-ம் ஆண்டு முதல் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை இந்தியா சற்றும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் பதில்
&#039;பிரேமா வாங்ஜோம் தோங்டாக் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்&#039; - இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும் காரணம் இது. இந்தியாவின் பதிலடி
பிரேமா தடுக்கப்பட்டதற்கும், சீனாவின் பதிலுக்கும் கடுமையான பதிலடியை தந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால். அவர், &quot;அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி ஆகும். இது வெளிப்படையான உண்மை. இதை சீனா எவ்வளவு மறுத்தாலும், அது மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றாது. ரந்தீர் ஜெய்ஸ்வால்அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா - என்ன நடக்கிறது?இந்தத் தடுப்பு விவகாரத்தை பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான பயண மரபுகளை மீறும் இந்த செயலுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. சீனாவின் இந்த செயல், அனைத்து தேசத்தினரும் அவர்களது நாட்டில் 24 மணி நேரம் எந்த விசாவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்கிற அவர்களது சொந்த விதிமுறையை மீறியது ஆகும்&quot; என்று பதிவிட்டுள்ளார். Our response to media queries on statements made by the Chinese Foreign Ministry⬇️ https://t.co/3JUnXjIBLc pic.twitter.com/DjEdy7TmTK— Randhir Jaiswal (@MEAIndia) November 25, 2025 `இனி இது கூடாது&#039;- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-26/et0ljtmb/India-China.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சீன, விமான, நிலையத்தில், அருணாச்சலப், பெண், தடுத்து, நிறுத்தம்:, சீனாவின், பதிலுக்கு, இந்தியா, கண்டனம்</media:keywords>
    </item>
    <item>
        <title>Yaodong: 4 கோடி சீனர்கள் வசிக்கும் &amp;apos;ரகசிய&amp;apos; குகை வீடுகள் &amp; வியக்க வைக்கும் பின்னணி</title>
        <link>https://dailytopnewz24.com/yaodong-4-கோடி-சீனர்கள்-வசிக்கும்-ரகசிய-குகை-வீடுகள்-வியக்க-வைக்கும்-பின்னணி</link>
        <guid>https://dailytopnewz24.com/yaodong-4-கோடி-சீனர்கள்-வசிக்கும்-ரகசிய-குகை-வீடுகள்-வியக்க-வைக்கும்-பின்னணி</guid>
        <description><![CDATA[ உலகம் முழுவதும் நவீன கட்டுமான முறைகளைத் தேடி வரும் நிலையில் சீனாவின் 4,000 ஆண்டுகள் பழைமையான &#039;யாவ்டோங்&#039; (Yaodong) எனப்படும் குகை வீடுகளில் இன்றும் மக்கள் வசித்து வருவது பற்றித் தெரியுமா? தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும், சீனாவில் இன்றும் சுமார் 4 கோடி மக்கள் இந்தப் பாரம்பரிய மண் குகை வீடுகளில் வசித்து வருகின்றனர் &#039;யாவ்டோங்&#039; என்பதற்கு &quot;சூளை குகைகள்&quot; என்று பொருளாம். இவை பார்ப்பதற்கு செங்கல் சூளைகளின் வளைவான உட்புறத்தைப்போலவே இருக்குமாம். ஷாங்சி, ஷான்சி, கான்சு மற்றும் ஹெனான் ஆகிய மாகாணங்களில் இதுபோன்ற குகை வீடுகள் அதிகம் காணப்படுகின்றன. yaodongஇப்பகுதிகளில் காணப்படும் மண் வகையே, மலையைக் குடைந்து வீடு கட்டுவதற்கு வசதியாக அமைந்துள்ளது. கி.மு 2100–1600 காலத்திலேயே இந்த வீடுகள் தோன்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தக் குகை வீடுகளின் மிகச்சிறந்த அம்சமே இவற்றின் இயற்கை வெப்பநிலை கட்டுப்பாட்டு முறை என்கின்றனர். வெளியில் வெயில் சுட்டெரித்தாலும், குகைக்குள் குளிர்ச்சியாக இருக்குமாம். அதேபோன்று கடும் குளிர் காலத்தில், இந்த மண் சுவர்கள் வெப்பத்தைத் தக்கவைத்து இதமான சூழலைத் தருமாம்.மேலும் குளிர் காலத்தை சமாளிக்க இந்த வீடுகளில் &#039;காங்&#039; (Kang) எனப்படும் ஒரு சிறப்பான அம்சம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கற்களால் கட்டப்பட்ட படுக்கை அமைப்பை வீட்டின் அடுப்பங்கரையுடன் இணைகின்றனர். சமைக்கும்போது ஏற்படும் வெப்பம் மற்றும் புகை, இந்தப் படுக்கைக்கு அடியில் உள்ள குழாய்கள் வழியாகச் சென்று, படுக்கையை சூடுபடுத்துகிறது. இதுவே அவர்களை குளிர்காலத்தில் இதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நவீன நகர வாழ்க்கையைவிட, இயற்கையோடு இணைந்த இந்தக் குகை வாழ்க்கை முறை ஆரோக்கியமானது என்கின்றனர் இதில் வசிப்பவர்கள்.எவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்த வீடுகளில் சில ஆபத்துகளும் உள்ளன. குறிப்பாக நிலநடுக்கம் ஏற்படும்போது, மென்மையான மண் சரிந்து விழும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.        View this post on Instagram            
 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-25/23d40jij/hero-imag-2025-11-25T132110.754.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Yaodong:, கோடி, சீனர்கள், வசிக்கும், ரகசிய, குகை, வீடுகள், வியக்க, வைக்கும், பின்னணி</media:keywords>
    </item>
    <item>
        <title>அடுத்த ஆண்டு சீனா செல்லும் ட்ரம்ப்; தைவானை கேட்கும் சீனா &amp; என்ன நடக்கிறது?</title>
        <link>https://dailytopnewz24.com/அடுத்த-ஆண்டு-சீனா-செல்லும்-ட்ரம்ப்-தைவானை-கேட்கும்-சீனா-என்ன-நடக்கிறது</link>
        <guid>https://dailytopnewz24.com/அடுத்த-ஆண்டு-சீனா-செல்லும்-ட்ரம்ப்-தைவானை-கேட்கும்-சீனா-என்ன-நடக்கிறது</guid>
        <description><![CDATA[ வரி... பிரச்னை... சமாதானம்... ரிப்பீட்டு - இப்படி தான் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்கா - சீனா உறவு இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம், சீனா மீது அதிக வரிகளை விதித்தார் ட்ரம்ப். அதன் பிறகு சமாதானம் ஆகி, அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது... அது வெற்றிகரமாக நடந்து வருவதாகவே தகவல்கள் பரவின... இரு நாடுகளும் அதை தான் சொன்னது. ட்ரம்ப்&#039;இன்னும் 9 நாள்கள் தான்&#039; SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது?அடுத்த பிரச்னை
அந்த நேரத்தில்தான், சீனா தங்கள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யும் அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், கோபமுற்ற ட்ரம்ப், சீனா மீது 100 சதவிகித வரி விதிக்க இருப்பதாக எச்சரித்தார். அதன் பின், அதே மாத கடைசியில், ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்துக்கொண்டனர். அந்தச் சந்திப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றாலும், அது முக்கியமாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது. ஆக, இப்போது அமெரிக்கா, சீனா உறவு சமாதான படலத்தில் உள்ளது.தொலைபேசி அழைப்பு
இந்த நிலையில்தான், நேற்று ட்ரம்ப் - ஜின்பிங் தொலைபேசியில் பேசியிருக்கின்றனர். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், &quot;நானும் ஜியும் உக்ரைன் விஷயம், ஃபென்டனைல், சோயா பீன்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். சீனா உடனான நம்முடைய உறவு மிகவும் வலுவாக உள்ளது. என்னை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீஜிங்கிற்கு அதிபர் ஜி அழைத்தார். நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். அவரும் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா வருவதாக ஒப்புக்கொண்டார்&quot; என்று பதிவிட்டுள்ளார். ட்ரம்ப் - ஜி ஜின்பிங்&#039;உதவி செய்தும் நன்றி காட்டவில்லை&#039; உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?இந்தத் தொலைபேசி அழைப்பு குறித்து வெளியுறவுத் துறையின் சீன செய்தி தொடர்பாளர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஜி ஜின்பிங் தைவானை சீனா உடன் இணைப்பது குறித்து பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த உறவு அப்படியே தொடருமா... அல்லது அடுத்து எதாவது பிரச்னை ஏற்பட்டு விரிசல் உண்டாகுமா... காலம் தான் பதிலளிக்கும். President Xi Jinping spoke with U.S. President Donald J. Trump on the phone.President Xi noted that since the Busan meeting, the China-U.S. relationship has generally maintained a steady and positive trajectory, and this is welcomed by the two countries and the broader… pic.twitter.com/OChLjr7PpL— Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) November 24, 2025  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/nmgnkc5o/WhatsApp-Image-2025-10-30-at-7.51.30-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அடுத்த, ஆண்டு, சீனா, செல்லும், ட்ரம்ப், தைவானை, கேட்கும், சீனா, என்ன, நடக்கிறது</media:keywords>
    </item>
    <item>
        <title>`US விசா கிடைக்காத விரக்தி&amp;apos; &amp; உயிரை மாய்த்துக்கொண்ட  மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்</title>
        <link>https://dailytopnewz24.com/us-விசா-கிடைக்காத-விரக்தி-உயிரை-மாய்த்துக்கொண்ட-மருத்துவர்-ஹைதராபாத்தில்-சோகம்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-விசா-கிடைக்காத-விரக்தி-உயிரை-மாய்த்துக்கொண்ட-மருத்துவர்-ஹைதராபாத்தில்-சோகம்</guid>
        <description><![CDATA[ ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.ஹைதராபாத்தின் மற்றொரு பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை (நவ. 22) அவரது வீட்டின் கதவை உடைத்து பார்க்கும்போது அவர் பேச்சு மூச்சற்று இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.Visaரோஹிணி என்ற அந்த பெண்ணின் வீட்டுக் கதவு திறக்காததால் அவரது வீட்டுப் பணிப்பெண் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார்.அங்கு கிடைத்த தற்கொலை கடிதத்தில் அவரது அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்தும் மன அழுத்தத்துடன் போராடி வருவது குறித்தும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.ரோஹிணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனினும் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தெரிவிக்கவில்லை.doctors deathரோஹிணியின் தாய் இலட்சுமி கூறுவதன்படி, அவர் தனது மருத்துவர் பணியில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அமெரிக்கா வேலைக்குச் செல்வது குறித்து பெரிய கனவுகளைக் கண்டிருக்கிறார்.ஆனால் விசா வழங்கப்படாததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.கிர்கிஸ்தானில் 2005-10 ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்த ரோகிணி, இந்தியாவில் பணியில் இருந்தாலும், அமெரிக்காவில் நோயாளிகள் எண்ணிக்கைக் குறைவு மற்றும் வருமானம் அதிகம் என்பதனால் அமெரிக்காவுக்குச் செல்ல நினைத்துள்ளார். விசா கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார்.திருமணம் செய்து கொள்ளாத ரோகிணி சொந்த வாழ்க்கையை விட பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சில்கல்குடா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.H1-B விசா கட்டுப்பாடுகள்: &quot;அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தியாவுக்கு மாற்றலாம்&quot; - நிபுணர்கள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-24/s4frdijj/Dead" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 01 Dec 2025 13:40:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US, விசா, கிடைக்காத, விரக்தி, உயிரை, மாய்த்துக்கொண்ட, மருத்துவர், ஹைதராபாத்தில், சோகம்</media:keywords>
    </item>
    <item>
        <title>McDonald&amp;apos;s: &amp;apos;40 ஆண்டுகளாக எங்களுடன்&amp;apos; &amp; இந்திய வம்சாவளி ஊழியருக்கு ரூ. 35 லட்சம் பரிசளித்த நிர்வாகம்</title>
        <link>https://dailytopnewz24.com/mcdonalds-40-ஆண்டுகளாக-எங்களுடன்-இந்திய-வம்சாவளி-ஊழியருக்கு-ரூ-35-லட்சம்-பரிசளித்த-நிர்வாகம்</link>
        <guid>https://dailytopnewz24.com/mcdonalds-40-ஆண்டுகளாக-எங்களுடன்-இந்திய-வம்சாவளி-ஊழியருக்கு-ரூ-35-லட்சம்-பரிசளித்த-நிர்வாகம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் (McDonald&#039;s) உணவகத்தில் 40 ஆண்டுகளாகப் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஊழியர் ஒருவருக்கு, சுமார் 35 லட்சம் ரூபாய் வெகுமதி அளித்து கௌரவிக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பர்கன் சிங் என்ற இந்திய வம்சாவளி நபர், கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து மெக்டொனால்ட்ஸில் பணியாற்றி வருகிறார். இவருடைய இந்த நீண்ட கால சேவையைப் பாராட்டி அந்த உணவக நிர்வாகம் அவருக்கு ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.அதுமட்டுமின்றி, அவரின் 40 ஆண்டு கால உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் 40,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 35.5 லட்சம் ரூபாய்) வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.McDonaldsபர்கன் சிங் தனது தந்தையுடன் இணைந்து மெக்டொனால்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் மேஜைகளைச் சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது மற்றும் சமையலறையில் உதவிகள் செய்வது போன்ற வேலைகளைச் செய்து வந்திருக்கிறார்.அதன்பின்னர் வேலையின் மீது அதிக கவனம் செலுத்தி, கடையின் அனைத்து செயல்பாடுகளையும் கற்றுக்கொண்டிருக்கிறார். சில மாதங்களிலேயே அவரது திறமையைப் பார்த்து நிர்வாகம் அவருக்கு &#039;ஸ்விங் மேனேஜர்&#039; (Swing Manager) என்ற பதவி உயர்வை வழங்கியிருக்கிறது.இந்த உணவகத்தின் உரிமையாளரான லின்சே வாலன் இது குறித்து கூறுகையில், &quot;பர்கன் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிட்டார். அவர் தனது தந்தையுடன் இங்கே வேலைக்குச் சேர்ந்தார். இன்று நான் நான்கு மெக்டொனால்ட்ஸ் கிளைகளை நிர்வகித்து வருகிறேன். அதில் பர்கன் ஒரு முக்கிய தூணாக இருக்கிறார்&quot; என்று பெருமிதமாகக் கூறியிருக்கிறார்.வெடிச் சத்தமும் வீங்கிய முதுகும் - அமெரிக்க வாழ் தமிழரின் தீபாவளி நினைவுகள் | My Vikatan ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-07/b1dfa8ff-b01e-4daf-bae6-c49de10db995/McDonald_s_logo_svg.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>McDonalds:, 40, ஆண்டுகளாக, எங்களுடன், இந்திய, வம்சாவளி, ஊழியருக்கு, ரூ., லட்சம், பரிசளித்த, நிர்வாகம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`புது ருசி, புது அனுபவம்&amp;apos; &amp; சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி&amp;apos; &amp; என்ன விலை தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/புது-ருசி-புது-அனுபவம்-சீனாவில்-பிரபலமாகும்-கரப்பான்-பூச்சி-காஃபி-என்ன-விலை-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/புது-ருசி-புது-அனுபவம்-சீனாவில்-பிரபலமாகும்-கரப்பான்-பூச்சி-காஃபி-என்ன-விலை-தெரியுமா</guid>
        <description><![CDATA[ உலகம் முழுவதும் காபி பிரியர்கள் விதவிதமான சுவைகளில் காபி குடித்திருப்பார்கள்., ஆனால் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய வகை காபி, கேட்பவர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது. பீஜிங்கில் &#039;கரப்பான் பூச்சி காஃபி&#039; (Cockroach Coffee) என்ற காஃபி விற்பனைக்கு வந்துள்ளது.பொதுவாக காபியின் மீது சாக்லேட் பவுடர் அல்லது கிரீம் தூவி அலங்கரிப்பார்கள். ஆனால், பீஜிங்கில் உள்ள ஒரு பிரபலமான கடையில் (Insect Museum) விற்கப்படும் இந்த காஃபியில், கரப்பான் பூச்சி தூவப்படுகிறது.கேட்பதற்கே விசித்திரமாக இருக்கும் இந்த காபியின் விலை ஒரு கப்புக்கு 45 யுவான் (இந்திய மதிப்பில் இது சுமார் 520 ரூபாய்) ஆகும்.. கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சீனாவில் பிரபலமாகும் ` கரப்பான் பூச்சி காஃபி&#039; இதை குடித்த வாடிக்கையாளர்கள் இதன் சுவை குறித்து கூறுகையில் &quot;இது வழக்கமான காஃபி சுவையில் இல்லாமல், கருகிய வாசனையுடனும், லேசான புளிப்பு சுவையுடனும் இருக்கிறது,&quot; என்று தெரிவித்துள்ளனர்.﻿இது குறித்து அந்த கடையின் ஊழியர் ஒருவர் கூறுகையில் &quot;நாங்கள் ஒரு பூச்சி அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறோம். எனவே எங்கள் தீம் மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு உணவு வகைகளை வழங்க நினைத்தோம். அதனால் தான் இந்த கரப்பான் பூச்சி காஃபியை அறிமுகம் செய்தோம். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது&quot; என்று கூறியுள்ளார்.கரப்பான் பூச்சிகள் என்றாலே நோய்களை பரப்பக்கூடியவை என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருக்கும். ஆனால், இந்த காபியில் பயன்படுத்தப்படும் பூச்சிகள் உண்பதற்கேற்ற வகையில் பிரத்யேகமாக வளர்க்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுவதாக கடையின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Death cafe: டீ, காபி உடன் மரணம் பற்றிய உரையாடல் - இந்த டெத் கஃபே எதற்காக உள்ளது தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-21/5col9mxc/hero-imag-2025-11-21T120420.643.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>புது, ருசி, புது, அனுபவம், சீனாவில், பிரபலமாகும், கரப்பான், பூச்சி, காஃபி, என்ன, விலை, தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>US: `சல்மான் கானைக் கொலை செய்ய முயன்ற அன்மோல் பிஷ்னோய்&amp;apos; &amp; இன்று இந்தியாவுக்கு நாடு கடத்தல்</title>
        <link>https://dailytopnewz24.com/us-சல்மான்-கானைக்-கொலை-செய்ய-முயன்ற-அன்மோல்-பிஷ்னோய்-இன்று-இந்தியாவுக்கு-நாடு-கடத்தல்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-சல்மான்-கானைக்-கொலை-செய்ய-முயன்ற-அன்மோல்-பிஷ்னோய்-இன்று-இந்தியாவுக்கு-நாடு-கடத்தல்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவிலிருந்து புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் இருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை அவரவர் நாட்டிற்கு கட்டாயமாக நாடு கடத்துவது வழக்கமாக நடைபெறுகிறது. இதற்கு முன்பு, நூற்றுக்கணக்கானோர் இந்தியாவுக்குக் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், தற்போது மேலும் இருநூறு பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குக் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 197 பேர் போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருந்தவர்கள் ஆவார்கள்.மேலும், இந்தியாவில் மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் படுகொலை செய்யப்பட்டார்.நாடு கடத்தல்நடிகர் சல்மான் கான் வீட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் சல்மான் கானைக் கொலை செய்ய முயன்றது உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட அன்மோல் பிஷ்னோய் அவர்களோடு சேர்ந்து இந்தியாவுக்குக் நாடு கடத்தப்படுகிறார். அவர் குஜராத்தில் சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் அவர்களின் சகோதரர் ஆவர்.அமெரிக்காவில் இருந்து இந்தியாவில், குறிப்பாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் கொலை, பணம் பறித்தல் மற்றும் பல்வேறு குற்றங்களில் அன்மோல் பிஷ்னோய் ஈடுபட்டு வந்தார்.2022 ஆம் ஆண்டு, பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். சித்து மூஸ்வாலா படுகொலையிலும் அன்மோல் பிஷ்னோய்க்கு முக்கிய பங்கு உள்ளது.விமானம் அன்மோல் கைதுரஷ்ய ஆவணங்களை பயன்படுத்தி, அமெரிக்கா மற்றும் கனடா இடையே தொடர்ந்து பயணம் செய்து வந்தார். இந்தியா வழங்கிய தகவலின் அடிப்படையில், அன்மோல் பிஷ்னோயின் நடமாட்டத்தை கண்டறிந்து அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர்.கடந்த ஆண்டு கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்ட அன்மோல் பிஷ்னோய் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு, ஜி.பி.எஸ் சாதனம் மூலம் அவரது நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்க அமெரிக்காவில் அடைக்கலம்; அன்மோல் பிஷ்னோய்யின் திட்டமென்ன?ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்புஜி.பி.எஸ் சாதனம் அன்மோல் பிஷ்னோயின் உடலில் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. அதனை எளிதில் அகற்ற முடியாது. ஜாமீனில், வீட்டுக்காவலில் அல்லது பரோலில் உள்ளவர்களை அமெரிக்க அரசு இவ்வாறு கண்காணிக்கும் நடைமுறை உள்ளது. அன்மோல் பிஷ்னோய் மட்டுமல்லாமல், பஞ்சாப்பை சேர்ந்த இரண்டு கிரிமினல்களும் அதே விமானத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவில் இருந்து விமானம் இந்தியாவிற்காக கிளம்பி விட்டது.ஜி.பி.எஸ்இன்று டெல்லி வருகைஅந்த விமானம் இன்று காலை 10 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவில் இருந்து அன்மோல் நாடு கடத்தப்பட்டதை கொலை செய்யப்பட்ட மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகன் ஜீசான் சித்திக் உறுதிப்படுத்தியுள்ளார்.அமெரிக்க அரசு இதுபற்றி அவருக்கு மெயில் அனுப்பியதாகவும், அன்மோல் பிஷ்னோய் டெல்லியில் இறங்கியவுடன் மத்திய அரசு கைது செய்ய வேண்டும் என்றும் ஜீசான் சித்திக் தெரிவித்துள்ளார்.மும்பை போலீஸார் அன்மோல் பிஷ்னோயை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இரண்டு முறை அமெரிக்காவிற்கு கடிதம் எழுதியிருந்தனர்.அவன் இந்தியாவிற்கு வந்தவுடன், எந்த விசாரணை ஏஜென்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். அன்மோல் பிஷ்னோய் கனடாவிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரது கைது மற்றும் நாடு கடத்தல் பல முக்கிய வழக்குகளில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அன்மோல் மீது மும்பை, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு விவகாரம்... லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அமெரிக்காவில் கைது..! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-19/wbwqv83t/anmol-bishnoi-is-the-younger-brother-of-jailed-gangster-lawrence-bishnoi-184321289-16x90.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 24 Nov 2025 17:04:00 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US:, சல்மான், கானைக், கொலை, செய்ய, முயன்ற, அன்மோல், பிஷ்னோய், இன்று, இந்தியாவுக்கு, நாடு, கடத்தல்</media:keywords>
    </item>
    <item>
        <title>``பசியில் 50 எலிகளை சாப்பிட்டேன்&amp;apos;&amp;apos; &amp; 35 நாள்கள் காட்டில் வாழ்ந்த சீன பெண்; எதற்காக இப்படி செய்தார்?</title>
        <link>https://dailytopnewz24.com/பசியில்-50-எலிகளை-சாப்பிட்டேன்-35-நாள்கள்-காட்டில்-வாழ்ந்த-சீன-பெண்-எதற்காக-இப்படி-செய்தார்</link>
        <guid>https://dailytopnewz24.com/பசியில்-50-எலிகளை-சாப்பிட்டேன்-35-நாள்கள்-காட்டில்-வாழ்ந்த-சீன-பெண்-எதற்காக-இப்படி-செய்தார்</guid>
        <description><![CDATA[ சீனாவில் நடைபெற்ற சாகசப் போட்டி ஒன்றில் 35 நாட்கள் காட்டில் தங்கியிருந்த பெண் ஒருவர் 50 எலிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஒரு தீவில், &#039;காட்டுயிர் பிழைப்பு&#039; என்ற போட்டி அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது.இதில் கலந்துகொண்ட 25 வயதான ஜாவோ டைஜு என்ற பெண், நவம்பர் 5 ஆம் தேதி வரை மொத்தம் 35 நாட்கள் அந்தத் தீவில் தங்கியிருந்தார்.காட்டின் கடுமையான சூழலை எதிர்கொண்டு நீண்ட நாட்கள் தாங்கியதற்காக, அவருக்கு மூன்றாம் பரிசு மற்றும் 7,500 யுவான் (சுமார் ₹88,608) வழங்கப்பட்டது. Ratsஇந்த 35 நாட்களில், கடுமையான காலநிலை, பூச்சி கடிகள் போன்ற பல சவால்களை இவர் எதிர்கொண்டார். இந்த சவால்களுக்கு இடையில் அவரது உடல் எடை 85 கிலோவிலிருந்து 71 கிலோவாக, கிட்டத்தட்ட 14 கிலோ குறைந்துள்ளது. காட்டில் கிடைத்த புரதச்சத்து நிறைந்த உணவுகள் தான் எடை குறைப்பிற்கு முக்கிய காரணம் என்று அவர் கூறியுள்ளார்.தனது உணவுக்காக நண்டுகள், கடல் முள்ளெலிகள் மற்றும் நத்தைகள் போன்றவற்றை வேட்டையாடி உண்டு, 35 நாட்களில் சுமார் 50 எலிகளை வேட்டையாடி, சுத்தம் செய்து, வறுத்து சாப்பிட்டதாக அவர் கூறியுள்ளார்.நவம்பர் 4 ஆம் தேதி தீவை சூறாவளி தாக்கிய பிறகு, போட்டியில் இருந்து வெளியேற ஜாவோ முடிவு செய்து, தனது இலக்கை அடைந்துவிட்டதாகவும், தற்போது ஓய்வெடுக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி: `தவறுதலாக விடுவிக்கப்பட்ட சிறைக்கைதி; மறுநாளே மீண்டும் கைது!&#039; - தவறு நடந்தது எங்கே? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-18/8kufcsdr/hero-imag-2025-11-18T105428.811.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பசியில், எலிகளை, சாப்பிட்டேன், நாள்கள், காட்டில், வாழ்ந்த, சீன, பெண், எதற்காக, இப்படி, செய்தார்</media:keywords>
    </item>
    <item>
        <title>``ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து&amp;apos;&amp;apos; &amp; டெலிவரி பாயாக மாறிய பட்டதாரி</title>
        <link>https://dailytopnewz24.com/ரூ5-லட்சம்-சம்பளம்-வேலை-இழந்ததால்-மனைவி-விவாகரத்து-டெலிவரி-பாயாக-மாறிய-பட்டதாரி</link>
        <guid>https://dailytopnewz24.com/ரூ5-லட்சம்-சம்பளம்-வேலை-இழந்ததால்-மனைவி-விவாகரத்து-டெலிவரி-பாயாக-மாறிய-பட்டதாரி</guid>
        <description><![CDATA[ சீனாவில் பட்டதாரி ஒருவர், தனது அதிக சம்பளம் கொண்ட வேலையை இழந்ததால், மனைவி அவரை விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.சீனாவின் ஹாங்சோ நகரைச் சேர்ந்த 43 வயதான கியான்கியான், ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இவர் ஒரு அரசு நிறுவனத்தில் மாதம் 50,000 யுவான் (சுமார் ரூ. 5.8 லட்சம்) சம்பளத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்தார்.காதல் ஆன்லைன் விளையாட்டின் மூலம் சந்தித்த ஒரு பெண்ணை, திருமணம் செய்துகொண்டுள்ளார்.திருமணத்திற்குப் பிறகு, அவரின் மனைவி எந்த வேலைக்கும் செல்லாமல், கியான்கியானின் வருமானத்தில் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.தனது அழகைப் பராமரிக்க விலை உயர்ந்த அழகுசாதனப் பொருட்களை வாங்குவது, அழகு சார்ந்த சிகிச்சைகள் செய்துகொள்வது என அவரின் மனைவி அதிகமாக செலவு செய்து வந்துள்ளார்.ஒருகட்டத்தில், மனைவியின் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், தனது வீட்டையும் விற்க வேண்டிய நிலைக்கு கியான்கியான் தள்ளப்பட்டிருக்கிறார்.பிரிவுகியான்கியான் திடீரென தனது வேலையை இழந்திருக்கிறார். இதனால் அவரின் வருமானம் கடுமையாக குறைந்திருக்கிறது.. மாதம் 10,000 யுவானுக்கும் (சுமார் ரூ. 1.24 லட்சம்) குறைவாக சம்பாதிக்கும் நிலைக்கு அவருக்கு ஏற்பட்டுள்ளது.வருமானம் குறைந்ததால், அவரின் மனைவி உடனடியாக விவாகரத்து கோரியிருக்கிறார். அப்போதுதான், தன் மனைவி தன்னை விரும்பவில்லை, தனது பணத்தை மட்டுமே விரும்பினார் என்பதை கியான்கியான் உணர்ந்துகொண்டார்.தற்போது, கியான்கியான் உணவு டெலிவரி செய்யும் நபராக பணியாற்றி வருகிறார். &quot;தற்போது தனிமையில் இருந்தாலும், சுதந்திரமாக உணர்கிறேன்&quot; என்று அவர் கூறியிருக்கிறார். முந்தைய வாழ்க்கையை விட இப்போது வாழ்க்கை எளிமையாக இருந்தாலும் நிம்மதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-17/w1hl4qjy/hero-imag-2025-11-17T144229.854.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரூ.5, லட்சம், சம்பளம், வேலை, இழந்ததால், மனைவி, விவாகரத்து, டெலிவரி, பாயாக, மாறிய, பட்டதாரி</media:keywords>
    </item>
    <item>
        <title>’சிங்கக்குட்டியுடன் விளையாடலாம்’; வினோத சேவையால் சர்ச்சையில் சிக்கிய சீன ஹோட்டல்</title>
        <link>https://dailytopnewz24.com/சிங்கக்குட்டியுடன்-விளையாடலாம்-வினோத-சேவையால்-சர்ச்சையில்-சிக்கிய-சீன-ஹோட்டல்</link>
        <guid>https://dailytopnewz24.com/சிங்கக்குட்டியுடன்-விளையாடலாம்-வினோத-சேவையால்-சர்ச்சையில்-சிக்கிய-சீன-ஹோட்டல்</guid>
        <description><![CDATA[ சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர்களைக் கவருவதற்கு ஒரு வினோதமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளனர். தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருந்தினர்கள் தங்களது அறையில் சிங்கக்குட்டியுடன் விளையாடலாம் என அறிவிக்கப்பட்ட இந்த சேவைக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.﻿சீனாவின் ஜிமு நியூஸ் வெளியிட்ட செய்தியின்படி, சீனாவில் உள்ள ஒரு ரிசார்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு &#039;லயன் கப் வேக்-அப் சர்வீஸ்&#039; (Lion Cub Wake-Up Service) என்ற பெயரில் சேவையை வழங்கி வருகிறது. இதற்காக ஒரு இரவு தங்குவதற்கு 628 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,804) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.lion cub இந்த சேவையின் கீழ், தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை, சுமார் ஏழு நிமிடங்கள் சிங்கக்குட்டி விருந்தினர்களின் அறைக்குக் கொண்டுவரப்படும். இந்த நேரத்தில் அவர்கள் அதனுடன் விளையாடலாம்.இந்த அனுபவத்தைப் பெற விரும்பும் விருந்தினர்கள் சேவை ஒப்பந்ததில் கையெழுத்திட வேண்டுமாம். அதில் சிங்கக்குட்டி அறைக்குள் இருக்கும்போது, ஹோட்டல் ஊழியர் ஒருவர் தொடர்ந்து கண்காணிப்பார் என்றும், விருந்தினர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இந்த வினோத சேவை குறித்த செய்தி பரவியதும், இதற்கு எதிரான விமர்சனங்கள் வலுத்துள்ளன. சிங்கக்குட்டியை அதன் இருப்பிடத்திலிருந்து பிரித்து, ஒரு அறைக்குள் அனுப்புவது விலங்குகள் காட்சிப்படுத்தல் சட்டத்தின் கீழ் வருமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.சீனாவில் இது போன்று நடப்பது முதல்முறையல்ல. கடந்த ஜூன் மாதம், சோங்கிங் நகரில் உள்ள ஒரு ஹோட்டல் &#039;ரெட் பாண்டா வேக்-அப் சர்வீஸ்&#039; என்ற சேவையை அறிமுகப்படுத்தியது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவியதும், உள்ளூர் வனத்துறை உடனடியாகத் தலையிட்டு அந்தச் சேவையை நிறுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-17/6pyuaibg/2e7b25c1-bd6d-4c68-95de-8cd09bfce642.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>’சிங்கக்குட்டியுடன், விளையாடலாம்’, வினோத, சேவையால், சர்ச்சையில், சிக்கிய, சீன, ஹோட்டல்</media:keywords>
    </item>
    <item>
        <title>``ஈரானைவிட இஸ்ரேல் அச்சுறுத்தலானது&amp;quot; &amp; 200 வருட பழைமையான ஆக்ஸ்போர்ட் யூனியனில் தீர்மானம் நிறைவேற்றம்</title>
        <link>https://dailytopnewz24.com/ஈரானைவிட-இஸ்ரேல்-அச்சுறுத்தலானது-200-வருட-பழைமையான-ஆக்ஸ்போர்ட்-யூனியனில்-தீர்மானம்-நிறைவேற்றம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஈரானைவிட-இஸ்ரேல்-அச்சுறுத்தலானது-200-வருட-பழைமையான-ஆக்ஸ்போர்ட்-யூனியனில்-தீர்மானம்-நிறைவேற்றம்</guid>
        <description><![CDATA[ பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 69,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.கடந்த அக்டோபரில் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டாலும், காசாவில் இஸ்ரேலியப் படைகளின் வன்முறைகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.இந்த நிலையில், இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி (Oxford Union Society), பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் எனத் தீர்மானம் நிறைவேற்றியருக்கிறது.Oxford Union Societyநவம்பர் 13-ம் தேதி ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டியில் இந்தத் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தில் பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh) உள்ளிட்டோரும், ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer) உள்ளிட்டோரும் எதிரெதிர் பக்கத்தில் இருந்தனர்.தீர்மானத்தை ஆதரித்து பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே தனது உரையில், ``இஸ்ரேல் காலனித்துவ சக்திகளால் நிறுவப்பட்ட ஒரு காலனித்துவ நாடு.சட்டத்துக்கு அப்பாற்பட்ட நாடாக இஸ்ரேல் செயல்படுகிறது, ஐ.நா தீர்மானங்களை மதிப்பதேயில்லை.இஸ்ரேல் அரசானது அணு ஆயுதம் ஏந்தியதாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனவெறியை அடிப்படையாகக் கொண்ட காலனித்துவ ஆட்சியின் மையமாகவும் உள்ளது.இங்கே மிருகத்தனமான ஆக்கிரமிப்பு, குற்றங்கள், இனப்படுகொலை நடக்கிறது. இஸ்ரேல் இப்பகுதியை (பாலஸ்தீனம்) மீண்டும் மீண்டும் மோதல்களுக்குள் இழுத்து வருகிறது.இஸ்ரேல் ஒரு தீய நாடு, அது தடுத்து நிறுத்தப்படவேண்டும். இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது, காலனித்துவ மனநிலையில் உள்ளது.பிராந்தியத்தில் ஸ்திரமின்மைக்கு இஸ்ரேல்தான் மிகப்பெரிய காரணம் என்று நாம் அனைவரும் சொல்லவேண்டும்&quot; என்று கூறினார்.பாலஸ்தீன முன்னாள் பிரதமர் முகமது ஷ்டய்யே (Mohammad Shtayyeh)அவரைத்தொடர்ந்து, இந்தத் தீர்மானத்தை எதிர்த்து உரையாற்றிய ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர், ``இஸ்ரேல் ஈரானைவிட பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்து தவறானது மட்டுமல்லாமல், யதார்த்தத்தில் தலைகீழானது.பிராந்திய ஸ்திரத்தன்மையானது, போர்களை யார் தொடங்குகிறார்கள் என்பதன் மூலம் அளவிடப்படுகிறதே தவிர, யார் அவற்றை நிறுத்துகிறார்கள் என்பதன் மூலம் அல்ல.ஐந்து அரபு நாடுகளில் பயங்கரவாத பிரதிநிதிகளுக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதில்லை. ஆனால், ஈரானிலுள்ள இஸ்லாமிய ஆட்சி அதைச் செய்கிறது. முழு மத்திய கிழக்கு நாடுகளும் இதனை அறியும்.Gaza: Trump கூறிய பிறகும் தாக்குதலை தொடரும் Israel - அமைதி திரும்புமா? | Decode
அதனால்தான் அரபு நாடுகள் தாங்கள் உயிர்வாழ்வதற்காக இஸ்ரேலை அமைதியாக நம்பியுள்ளன.ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி 170 ட்ரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மக்கள் மீது முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தியது இதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாகும்.தாங்கள் உயிர்வாழ்வதற்கு இஸ்ரேல் கூட்டாளி என்றும், ஈரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி ஒரு இருத்தலியல் அச்சுறுத்தல் என்றும் அரபு நாடுகள் அறிந்திருக்கின்றன.ஐ.நா கண்காணிப்பு இயக்குநர் ஹில்லெல் நியூயர் (Hillel Neuer)ஹமாஸை ஒரு மினி ராணுவமாக ஈரான் மாற்றியுள்ளது. ஈரானிய பயிற்சியுடன் அந்த ஹமாஸ், பாலஸ்தீனியர்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பதிலாக, வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அடியில் ஒரு கோட்டையைக் கட்டியது.அதன் விளைவு, யூதர்கள் மீது ஹோலோகாஸ்டுக்குப் (இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜி படை லட்சக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்த சம்பவம்) பிறகு அக்டோபர் 7-ம் தேதி (2023) படுகொலை நிகழ்த்தப்பட்டது&quot; என்றார்.இறுதியில் இருதரப்பு வாதங்களுக்கு பின் நடந்த வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக 265 வாக்குகளும், எதிராக 113 வாக்குகளும் பதிவாகின.இதன் மூலம், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் என்ற தீர்மானத்தை ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி நிறைவேற்றியது.மீண்டும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - ட்ரம்ப் பதில் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-16/wdxsuyj5/oxfordunion.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஈரானைவிட, இஸ்ரேல், அச்சுறுத்தலானது, 200, வருட, பழைமையான, ஆக்ஸ்போர்ட், யூனியனில், தீர்மானம், நிறைவேற்றம்</media:keywords>
    </item>
    <item>
        <title>காட்டிக்கொடுத்த மொழி:
அமெரிக்க குடியுரிமை பெற  9 வயது இளையவரை திருமணம்செய்த 73 வயது குஜராத் மூதாட்டி</title>
        <link>https://dailytopnewz24.com/காட்டிக்கொடுத்த-மொழிஅமெரிக்க-குடியுரிமை-பெற-9-வயது-இளையவரை-திருமணம்செய்த-73-வயது-குஜராத்-மூதாட்டி</link>
        <guid>https://dailytopnewz24.com/காட்டிக்கொடுத்த-மொழிஅமெரிக்க-குடியுரிமை-பெற-9-வயது-இளையவரை-திருமணம்செய்த-73-வயது-குஜராத்-மூதாட்டி</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினரை கைது செய்து கை, கால்களை கட்டி தனி விமானத்தில் போட்டு அவர்களது சொந்த நாட்டில் கொண்டு போய் இறக்கிவிடும் செயலை செய்தார். அதோடு வெளிநாட்டினரின் விசாவை நீட்டிப்பதற்கும் பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். அதனால் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டினருக்கான விசா கட்டணத்தையும் கடுமையாக அதிகரித்துவிட்டார். இதனால் வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் அமெரிக்க குடியுரிமை பெறுவதிலும் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து சென்ற குஜராத்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற பல தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டு வருவது இப்போது தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 73 வயது பெண் கடந்த 2017ம் ஆண்டு தனது மகன் மற்றும் மருமகளுடன் சுற்றுலா விசாவில் அமெரிக்காவிற்கு சென்றார். அவர்கள் அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு அப்பெண்ணின் மகன் அமெரிக்காவில் நிதி மோசடி செய்து வந்தார். அடிக்கடி யாரிடமாவது பெரிய அளவில் பணம் வாங்கிவிட்டு தலைமறைவாகிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது 73 வயது மூதாட்டி அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தன்னை விட 9 வயது குறைவான ஆப்பிரிக்கா வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பிரஜையை திருமணம் செய்துள்ளார். அவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகு திருமண சான்றிதழும் பெற்றுவிட்டனர். ஆனால் குஜராத் பெண்ணிற்கு ஆங்கிலம் தெரியாது. அவர் திருமணம் செய்து கொண்ட நபருக்கு குஜராத்தி தெரியாது. இதனால் அவர்கள் இருவரும் எப்படி பேசிக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு 73 வயது பெண் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தார்.விண்ணப்பம் பரிசீலனைக்கு வந்தபோது அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் திருமணம் செய்து கொண்ட இருவரும் எப்படி மொழியை புரிந்து கொள்ளமுடியாமல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டனர் என்று கேள்வி எழுப்பினர். அதோடு இத்திருமணத்தில் சந்தேகம் எழுப்பினர். மொழி அவரது குடியுரிமை கோரிக்கைக்கு தடையாக வந்து நின்றது. இறுதியில் அம்மூதாட்டியின் மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்துவிட்டனர். இப்போது அப்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அமெரிக்காவில் இருந்து வெளியேற அமெரிக்க அரசு 90 நாட்கள் கெடு விதித்து இருக்கிறது. அமெரிக்காவில் குடியுரிமை பெற திருமணம் ஒரு வழியாகும். அதனை பயன்படுத்தி சிலர் போலி திருமணம் செய்து குடியுரிமை பெறுகின்றனர். இது போன்ற போலி திருமணத்தால் உண்மையிலேயே திருமணம் செய்து குடியுரிமை பெற நினைப்பவர்கள் கூட கடுமையான சவால்களை சந்திக்கின்றனர்.கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த ஹர்ஜித் கவுர் என்ற பெண்ணை அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து இந்தியாவிற்கு நாடு கடத்தினர். அப்பெண் அமெரிக்காவில் அகதி அந்தஸ்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு அகதி அந்தஸ்து கொடுக்காமல் அவர் அமெரிக்காவில் தங்கிக்கொள்ள தொடர்ந்து அவரது விசா நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. கடைசியாக விசா நீட்டிப்புக்கு விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று பஞ்சாப்பிற்கு நாடு கடத்திவிட்டனர். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-15/bm7sq8rg/greencard17421132930561744207520133.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காட்டிக்கொடுத்த, மொழி:
அமெரிக்க, குடியுரிமை, பெற, வயது, இளையவரை, திருமணம்செய்த, வயது, குஜராத், மூதாட்டி</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஜப்பானுக்கு செல்லாதீர்கள்&amp;apos; &amp; தனது நாட்டு மக்களை எச்சரித்த சீனா!; வெடிக்கும் மோதல்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஜப்பானுக்கு-செல்லாதீர்கள்-தனது-நாட்டு-மக்களை-எச்சரித்த-சீனா-வெடிக்கும்-மோதல்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஜப்பானுக்கு-செல்லாதீர்கள்-தனது-நாட்டு-மக்களை-எச்சரித்த-சீனா-வெடிக்கும்-மோதல்</guid>
        <description><![CDATA[ &#039;தைவானில் எந்தச் சூழல் ஏற்பட்டால், அது ஜப்பானுக்கான &#039;அச்சுறுத்தலாக&#039; பார்க்கப்படும்?&#039;&#039;தைவான் அருகே போர்கப்பல்கள், படைகள் என எது நிறுத்தப்பட்டாலும், அது ஜப்பானுக்கான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்&#039;.இது கடந்த 7-ம் தேதி, ஜப்பான் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமர் சானே தகாச்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும்.இந்த உரையாடல் தான் தற்போது ஜப்பான், சீனா இடையே பிரச்னை ஏற்படுத்தியுள்ளது.சானே தகாச்சிUS Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு&#039; - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்&#039; அடித்த ட்ரம்ப்என்ன பிரச்னை?
2015-ம் ஆண்டு ஜப்பான் பாதுகாப்பு சட்டத்தின் படி, &#039;நாட்டிற்கான அச்சுறுத்தல்&#039; என்று ஏதாவது கருதப்பட்டால், அந்தச் சூழலுக்கு எதிராக ஜப்பான் தன்னுடைய தற்காப்பு படையை களமிறக்கலாம்.தைவானை சீனா பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்தச் சூழலில், ஜப்பான் பிரதமர் தைவான் குறித்து இப்படி பேசியிருப்பது சீனாவிற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.சீன தூதர் பதிவு
அடுத்த நாளான, 8-ம் தேதி, ஜப்பான் ஒசாகாவில் சீன தூதர், தகைச்சி பேசியிருந்த செய்திக் கட்டுரையை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, &#039;தேவையில்லாமல் தலையிடுபவரின் விளைவுகளை சந்திக்க நேரிடும்&#039; என்கிற அர்த்தத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதை சொலவடைபோல் பதிவிட்டிருந்ததில், &#039;தலை வெட்டப்படும்&#039; என்கிற வார்த்தை இடம்பெற்றிருந்தது.சீனாUS Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்?சீன தூதர் ஜப்பான் பிரதமரின் தலையை வெட்டுவதாக கூறுகிறார் என்று ஜப்பானில் பெரிய பிரச்னை வெடித்தது. இதையடுத்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது.இருந்தும் ஜப்பான் - சீனா இடையே வார்த்தைப்போர் தடித்துக்கொண்டே போகிறது. இந்த நிலையில் தான், ஜப்பானின் சீன தூதரகம், &quot;சீனர்கள் யாரும் ஜப்பானுக்கு வர வேண்டாம்&quot; என்று அறிவுறுத்தியுள்ளது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-15/07fa1tjg/Japan-China.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஜப்பானுக்கு, செல்லாதீர்கள், தனது, நாட்டு, மக்களை, எச்சரித்த, சீனா, வெடிக்கும், மோதல்</media:keywords>
    </item>
    <item>
        <title>US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு&amp;apos; &amp; தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்&amp;apos; அடித்த ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/us-tariffs-தாறுமாறாக-விலைவாசி-உயர்வு-தேர்தலில்-பதிலடி-கொடுத்த-மக்கள்-பேக்-அடித்த-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-tariffs-தாறுமாறாக-விலைவாசி-உயர்வு-தேர்தலில்-பதிலடி-கொடுத்த-மக்கள்-பேக்-அடித்த-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்திருக்கிறார். இதனால், அதிக வரி செலுத்தி இறக்குமதி ஆகும் பொருள்கள் அமெரிக்க சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த வரிகள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் யுக்தி என்று ட்ரம்ப் கூறுகிறார்.நியூயார்க்US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்?மக்களின் பரிசு
ஆனால், ஏற்கெனவே குறைவான வேலைவாய்ப்பு, பணவீக்கம் போன்றவற்றால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அதிக விலை என்பது அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.எலெக்ட்ரானிக் பொருள்கள், ஆடம்பர பொருள்களுக்கு மட்டுமல்ல, மளிகை பொருள்கள் கூட அதிக விலைக்கு தான் விற்கப்படுகின்றன.சமீபத்தில் விர்ஜினியா, நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களில் தேர்தல்கள் நடந்தன விலை உயர்விற்கு பதிலடியாக, இந்தத் தேர்தல்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு மக்கள் தோல்வியையே பரிசளித்தனர்.&#039;பேக்&#039; அடித்த ட்ரம்ப்
இதையடுத்து தற்போது ட்ரம்ப் அமெரிக்கர்களின் உணவுகளில் மிக முக்கியமாக இடம்பெறும் பொருள்களுக்கு &#039;இறக்குமதி பரஸ்பர வரி&#039;யை ரத்து செய்துள்ளார். இதில் பீஃப், டீ, ஆரஞ்சு, மசாலா பொருள்கள், தக்காளி, வாழைப்பழம் போன்றவை அடங்கும். டொனால்டு ட்ரம்ப்  ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரி தான் விலக்கப்பட்டுள்ளதே தவிர, முன்பு வசூலிக்கப்பட்டு கொண்டிருந்த வரி தொடர்ந்து இந்தப் பொருள்களுக்கு வசூலிக்கப்படும். அதாவது கடந்த ஆகஸ்ட் முதல் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் தான் ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கெனவே அந்தப் பொருள்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த வரிகள் தொடரும். தவறாக சித்தரிக்கப்பட்ட ட்ரம்ப் பேச்சு; சிக்கலில் BBC - என்ன நடந்தது? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-15/mw67pxkn/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Tariffs:, தாறுமாறாக, விலைவாசி, உயர்வு, தேர்தலில், பதிலடி, கொடுத்த, மக்கள், பேக், அடித்த, ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்&amp;முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்?</title>
        <link>https://dailytopnewz24.com/us-shutdown-43-நாள்கள்-முடங்கிய-அமெரிக்க-அரசு-நிர்வாகம்-காரணம்-முடிவு-என்ன-ட்ரம்ப்-என்ன-செய்தார்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-shutdown-43-நாள்கள்-முடங்கிய-அமெரிக்க-அரசு-நிர்வாகம்-காரணம்-முடிவு-என்ன-ட்ரம்ப்-என்ன-செய்தார்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட அரசு முடக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.கடந்த அக்டோபர் 1-ம் தேதி, ‘அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்’ என்ற செய்தியைக் கேட்டதும், பலருக்கும் தலையும் புரிந்திருக்காது, வாலும் புரிந்திருக்காது.என்னது அரசு நிர்வாக முடக்கமா, அது எப்படி நடக்கும்? இந்த நிலையில் அமெரிக்கா எப்படி இயங்கும்? போன்ற ஏராளமான கேள்விகளும் எழுந்திருக்கும். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இதோ:அரசு நிர்வாக முடக்கம் என்றால் என்ன?
அமெரிக்காவின் நிதியாண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஆகும்.ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். வெள்ளை மாளிகை ரஷ்யாவிடம் இருந்து விலகி செல்கிறதா? - டிசம்பருக்கு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை கண்டுகொள்ளாத இந்தியா!நிதி ஒதுக்கீடு மசோதா எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு, அரசு பணியாளர்களுக்கான சம்பளம், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு ஆகிய தகவல்களை கொண்டிருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவின் &#039;பட்ஜெட்&#039;, அமெரிக்காவின் &#039;நிதி ஒதுக்கீடு மசோதா&#039; ஆகும்.இப்படி ஒதுக்கப்படும் நிதி குறிப்பிட்ட ஆண்டிற்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டிற்கு நிச்சயம் புதிய நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.ஒருவேளை அது நிறைவேற்றப்படவில்லை என்றால், நிதிகள் இல்லாமல் அரசு நிர்வாகம் அப்படியே முடங்கிவிடும். இதைத்தான் &#039;அரசு நிர்வாக முடக்கம்&#039; (US Shutdown) என்று கூறுகிறார்கள்.அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுவது எப்படி? 
ஆளும் கட்சி கொண்டுவரும் நிதி ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்க்கட்சியின் ஒப்புதல் கிடைக்காமல் போகும் பட்சத்தில் அரசு நிர்வாக முடக்கம் ஏற்படுகிறது.அந்த மசோதாவில் இரு கட்சிகளுக்கும் ஒப்புதல் ஏற்படும் வரை இந்த முடக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கும்.தற்போது ஏன் இந்த முடக்கம்?
அமெரிக்காவில் இரண்டு கட்சிகள் தான் உள்ளன. ஒன்று, அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி. மற்றொன்று, முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி.ஜனநாயகக் கட்சியின் பலமே மருத்துவத் துறையைச் சார்ந்த அவர்களது திட்டங்கள் ஆகும்.முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியில், மருத்துவக் காப்பீட்டிற்கான மானியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது, குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்களுக்கு மருத்துவக் காப்பீட்டில் மானியம் வழங்கப்படும்.பாரக் ஒபாமாஅதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா?இதை டிரம்ப் அரசு ரத்து செய்துவிட்டது. அதனால், அந்த மானியம் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரையே செல்லும். அதற்கு மேல் மருத்துவக் காப்பீட்டில் எந்த மானியமும் கிடைக்காது.ஜனநாயகக் கட்சியின் வெற்றிகரமான திட்டத்தை குடியரசு கட்சி ரத்து செய்வதை அந்தக் கட்சியினர் சிறிதும் விரும்பவில்லை.இதனால், இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்ட போது, ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டர்கள் அதை எதிர்த்து வாக்களித்தனர்.பொதுவாக, நிதி ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற 60 வாக்குகள் தேவை. ஆனால், செப்டம்பர் 30-ம் தேதி இந்த மசோதா 54–44 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றது.நல்ல சான்ஸ்
அதிபராக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்... அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகம் செய்யப்படுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார். பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது, ஆட்குறைப்பு நடக்கும். பணியில் தப்பி பிழைத்துள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்குமே பணி முடக்கத்தின் போதிருந்த வேலை நாள்களுக்கான சம்பளம் கிடைக்காது. இவை அனைத்தையும் ட்ரம்ப் நல்ல சான்ஸாக பார்த்தார். அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் இருந்தனர். இதனால், ட்ரம்ப் &#039;ஹேப்பி அண்ணாச்சி&#039; மோடில் இருந்தார்.  அதிபராக பதவியேற்றதிலிருந்து டிரம்ப், அரசு அலுவலகங்களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும்… அரசு அலுவலகங்களில் தேவையில்லாத செலவுகள் அதிகமாக நடைபெறுகின்றன என தொடர்ந்து கூறி வந்தார்.பொதுவாக, அரசு நிர்வாக முடக்கத்தின் போது ஆட்குறைப்பு நடைபெறும். பணியில் தொடர்ந்த அனைத்து அரசு பணியாளர்களுக்கும் பணி முடக்கத்தின் போது வேலை செய்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படாது. இவற்றையெல்லாம் டிரம்ப் ஒரு நல்ல வாய்ப்பாகக் கண்டார்.அவர் நினைத்தது போலவே, கிட்டத்தட்ட 75,000 அரசு பணியாளர்கள் எந்த ஊதியமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பணியாளர்கள் எந்த சம்பளமும் இல்லாமல் பணியில் தொடர்ந்தனர்.இதனால், டிரம்ப் ‘ஹேப்பி அண்ணாச்சி’ மூடில் இருந்தார்.ட்ரம்ப்மீண்டும் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை; இப்போது முதலீடு செய்ய ஏற்றது எது? தங்கமா, வெள்ளியா? |Q&amp;Aஎப்போது பிரச்னை தொடங்கியது?
முதலில் அரசு நிர்வாக முடக்கம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று தான் நினைக்கப்பட்டது. ஆனால், 10 நாள்கள், 20 நாள்கள், 25 நாள்கள், 30 நாள்கள், என அரசு நிர்வாக முடக்கம் தொடர்ந்துகொண்டே வந்தது.இந்த முடக்கத்தால், எந்தவொரு அதிகாரப்பூர்வ தரவுகளையும் அரசால் எடுக்க முடியவில்லை. இதனால், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய யோசித்தார்கள். மக்களிடையே அடுத்து என்ன ஆகும்... வேலைவாய்ப்பிற்கு என்ன செய்வது போன்ற கேள்விகள் எழுந்தன. அரசுக்குமே எந்தத் திட்டத்தையும் உருவாக்கவும் முடியவில்லை... செயல்படுத்தவும் முடியவில்லை.இதனால், ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியில், விமான நிலையங்களை மூடுவது வரை சென்றது.இடையில், 14 முறை செனட் கூடியும், எந்த முடிவுமே எட்டப்படவில்லை. இருதரப்பிற்கும் சமாதனம் ஏற்படுவதாக தெரியவில்லை, இருதரப்புமே விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.எப்படி முடிவுக்கு வந்தது?
இவை அனைத்துமே ட்ரம்ப் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், இருதரப்பிற்கும் இடையே பேச்சுவார்த் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-14/6wh27ma1/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Shutdown:, நாள்கள், முடங்கிய, அமெரிக்க, அரசு, நிர்வாகம், காரணம்-முடிவு, என்ன, ட்ரம்ப், என்ன, செய்தார்</media:keywords>
    </item>
    <item>
        <title>நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் &amp; காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/நீதிபதி-கவாய்க்கு-எதிராக-அமெரிக்கா-வாழ்-இந்துக்கள்-போராட்டம்-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/நீதிபதி-கவாய்க்கு-எதிராக-அமெரிக்கா-வாழ்-இந்துக்கள்-போராட்டம்-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கவாய் சமீபத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனை Stop Hindu Genocide என்ற அமைப்பு ஒருங்கிணைத்திருக்கிறது. நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன? இந்த அமைப்பு கடந்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு நேரடியாக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறது. அதில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மேற்பார்வையில் உள்ள கஜுராஹோ கோயிலில் இருப்பதாகக் கூறப்படும் வரலாற்று சிறப்புமிக்க விஷ்ணு சிலையை மீட்டெடுக்கக் கோரிய மனு மீது செப்டம்பர் 16 அன்று நடத்தப்பட்ட விசாரணையில் கவாய் கூறிய கருத்துகள் கடவுள் நம்பிக்கையை நிராகரிப்பதாக உள்ளது என அவருக்கு எதிராக குரலெழுப்பி வருகின்றனர். அந்த வழக்கில் நீதிபதி கவாய், &quot;நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள். கடவுளிடமே ஏதாவது செய்ய சொல்லுங்கள். இது ஒரு தொல்பொருள் தளம், ASI அனுமதி வழங்க வேண்டும்....&quot; எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. Stop Hindu Genocide அமைப்பு தலைமை நீதிபதி கவாய் இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனக் கூறி நான்கு நாட்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறது.*Press Release - Chief justice Gavai was paraded naked in the middle of famous NYC Times Square along with famous Times Square massive billboard showing his head with a shoe thrown at him demanding to apologize to Hindus worldwide and resign.*Hindus worldwide take serious… pic.twitter.com/ZYWAcafGuu— Stop Hindu Genocide (@SPHinduGenocide) November 12, 2025  கவாய் மட்டுமல்லாமல் முன்னாட்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் யு.யு.லலித், ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சூர்யா காந்த் உள்ளிட்ட பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறது இந்த அமைப்பு. அவர்களின் கடிதத்தில் பண்டிகை நடைமுறைகள் மற்றும் கோயில் மேலாண்மை மீதான நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை எதிர்த்துள்ளனர். &quot;ஜனநாயகத்தின் தூணான இந்தியாவின் நீதித்துறை, அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் பாரம்பரியத்தின் மீது மிகுந்த மரியாதையுடன் தொடர்ந்து சேவை செய்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம்&quot; என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் பிற நகரங்களிலும் இதுபோன்ற விழிப்புணர்வு போராட்டங்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.US: ``இந்திய CEO-க்கள் சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர்&#039;&#039; - ஊழியர் குற்றச்சாட்டு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-13/0fwu8myy/Anti-Hindu.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நீதிபதி, கவாய்க்கு, எதிராக, அமெரிக்கா, வாழ், இந்துக்கள், போராட்டம், காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H&amp;1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!</title>
        <link>https://dailytopnewz24.com/us-ரூட்டை-மாற்றுகிறாரா-ட்ரம்ப்-h-1b-விசா-வெளிநாட்டு-மாணவர்களுக்கு-திடீர்-ஆதரவு</link>
        <guid>https://dailytopnewz24.com/us-ரூட்டை-மாற்றுகிறாரா-ட்ரம்ப்-h-1b-விசா-வெளிநாட்டு-மாணவர்களுக்கு-திடீர்-ஆதரவு</guid>
        <description><![CDATA[ அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை விடுத்து வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அழைத்து வருகிறார்கள். அமெரிக்காவில் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.  என்று வெளிநாட்டினர் மீதும், வெளிநாட்டு மாணவர்கள் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ட்ரம்ப் அரசு.இதற்காக, விசா, கல்வி விசா, H-1B விசா என விசாக்களுக்கு தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அமெரிக்க அரசு. இதனால், அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினர் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.இந்த நிலையில், இதுவரை பேசி வந்ததற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கருத்துகளை முன்வைத்துள்ளார்.அமெரிக்கா - வெளிநாட்டு மாணவர்கள்ரஷ்யாவிடம் இருந்து விலகி செல்கிறதா? - டிசம்பருக்கு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை கண்டுகொள்ளாத இந்தியா!வெளிநாட்டு மாணவர்கள்வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பது தொடர்பாக, &quot;வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்கு டிரில்லியன் டாலர் கணக்கில் வருமானத்தைக் கொண்டு வருகின்றனர். இது அமெரிக்க மாணவர்கள் மூலம் வரும் வருமானத்தை விட, இரண்டு மடங்கு அதிகமாகும்.இதனால், அவர்கள் எனக்கு வேண்டும் என்பதில்லை. நான் அவர்களை வணிக ரீதியாக பார்க்கிறேன்.இந்த மாணவர்களை பாதியாக குறைத்து நம்முடைய பல்கலைக்கழகம் மற்றும் காலேஜ் சிஸ்டத்தையும், அவர்கள் வருமானத்தையும் பாதிக்க நான் விரும்பவில்லை. எனக்கு அது நடக்க வேண்டாம்&quot; என்று ட்ரம்ப் பேசியுள்ளார்.ஹெச்-1பி விசாஅடுத்ததாக ஹெச்-1பி விசா குறித்து, &quot;அமெரிக்கர்களிடம் சில திறமைகள் இல்லைதான். உற்பத்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில், அமெரிக்கர்களுக்கு, அதிக அனுபவம் இல்லை. அதனால், அவர்களை பயிற்சி இல்லாமல் இந்தத் துறைகளில், ஈடுபடுத்த முடியாது.H1B விசா அதிகரிக்கும் இந்தியா - அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? - அது நல்லதா?அதனால், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து திறமையானவர்களை இங்கே அழைத்து வர வேண்டும்&quot; என்று ட்ரம்ப் கூறியுள்ளார். முன்பு ட்ரம்ப் பேசியதற்கும், இப்போது பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ட்ரம்பின் இந்த மாற்றம் எவ்வளவு நாள் வரை செல்லுமோ,  இவர் இந்தக் கருத்தில் இருந்து எப்போது அந்தர்பல்டி அடிப்பாரோ, அத்தனையையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-13/mvaysdnz/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:31 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US:, ரூட்டை, மாற்றுகிறாரா, ட்ரம்ப், H-1B, விசா, வெளிநாட்டு, மாணவர்களுக்கு, திடீர், ஆதரவு</media:keywords>
    </item>
    <item>
        <title>5 வயதில் விமானம் தாங்கி கப்பலுக்கு நன்கொடை; 26 ஆண்டுகள் கழித்து கிடைத்த கெளரவம்!</title>
        <link>https://dailytopnewz24.com/5-வயதில்-விமானம்-தாங்கி-கப்பலுக்கு-நன்கொடை-26-ஆண்டுகள்-கழித்து-கிடைத்த-கெளரவம்</link>
        <guid>https://dailytopnewz24.com/5-வயதில்-விமானம்-தாங்கி-கப்பலுக்கு-நன்கொடை-26-ஆண்டுகள்-கழித்து-கிடைத்த-கெளரவம்</guid>
        <description><![CDATA[ சிறுவயதில் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக, விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்காக தனது சேமிப்பைக் கொடுத்த ஒருவருக்கு, 26 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அரசு அவரை நேரில் அழைத்து கௌரவித்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.தெற்கு சீனாவைச் சேர்ந்த சென் யூவென் என்ற நபர், தனது ஐந்து வயதில் விமானம் தாங்கி கப்பல் கட்டும் திட்டத்திற்கு 140 யுவான் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.அவரது தேசப்பற்றுக்கு மதிப்பளித்து, தற்போது சீன அரசு அவரை கடற்படை தளத்திற்கு அழைத்து, ஒரு நினைவுப் பரிசையும் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.குவாங்சி மாகாணத்தில் உள்ள சின்ஷோ நகரைச் சேர்ந்தவர் சென் யூவென். இவரது தந்தை ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதால், சென் யூவெனுக்கு சிறுவயதிலிருந்தே ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்பு மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. 1999ஆம் ஆண்டில், அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது, சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்கு நன்கொடை வழங்குவது குறித்து அவரது தந்தையும் நண்பர்களும் பேசுவதைக் கேட்டிருக்கிறார்.உடனே சென் யூவென் தனது சேமிப்பான 140 யுவானை, தந்தை உதவியுடன் சீன ராணுவத்தின் பொது ஆயுதத் துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.﻿ சில மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு ஒரு பதிலும் வந்திருக்கிறது.அவரது நன்கொடை விதிமுறைகளின்படி திருப்பி அனுப்பப்பட்டதுடன், தேசப் பாதுகாப்பிற்கான அவரது ஆதரவைப் பாராட்டி ஒரு வாழ்த்து அட்டையும் அனுப்பப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் சென் யூவெனின் சிறுவயது நன்கொடை கதை சமூக ஊடகங்களில் பரவி பெரும் கவனம் பெற்றது.﻿​ சென் யூவென் சட்டம் பயின்று, தற்போது பெய்ஜிங்கில் உள்ள ஒரு அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.﻿ அவரது கதை பரவலானதைத் தொடர்ந்து, சீனாவின் அரசு கப்பல் கட்டும் கழகம் (China State Shipbuilding Corporation) அவரை நவம்பர் 10 அன்று கடற்படைத் தளத்தைப் பார்வையிட அழைத்தது. அவருக்கு நினைவு பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-18/cwtoizej/hero-imag-2025-11-18T122426.573.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 18 Nov 2025 13:32:30 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வயதில், விமானம், தாங்கி, கப்பலுக்கு, நன்கொடை, ஆண்டுகள், கழித்து, கிடைத்த, கெளரவம்</media:keywords>
    </item>
    <item>
        <title>US: ``இந்திய CEO&amp;க்கள் சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர்&amp;apos;&amp;apos; &amp; ஊழியர் குற்றச்சாட்டு</title>
        <link>https://dailytopnewz24.com/us-இந்திய-ceo-க்கள்-சாதி-பாகுபாடு-அரசியலை-இறக்குமதி-செய்கின்றனர்-ஊழியர்-குற்றச்சாட்டு</link>
        <guid>https://dailytopnewz24.com/us-இந்திய-ceo-க்கள்-சாதி-பாகுபாடு-அரசியலை-இறக்குமதி-செய்கின்றனர்-ஊழியர்-குற்றச்சாட்டு</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் H1-B விசாவில் பணியாற்றி வரும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர் தான் பணியாற்றும் அமெரிக்க நிறுவனமும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் தன்னை கட்டாயப்படுத்தி அதிகம் வேலை வாங்குவது, கூலித் திருட்டு மற்றும் சாதி அடிப்படையிலான சுரண்டலுக்கு உட்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.Worklife Descriminationபிரெய்ட்பார்ட் நியூஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, அம்ருதேஷ் வல்லபனேனி என்ற ஊழியருக்கு கிரீன் கார்ட் பெற்றுத்தருவதாக அவரது நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. அதனைப் பயன்படுத்தி அவர் மீது அதீத அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களது நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என மிரட்டியிருக்கின்றனர்.அம்ருதேஷ் வல்லபனேனி வழக்கு தொடர உதவிய ஆலோசகர் ஜெய் பால்மர், &quot;இந்திய தொழிலாளர்களின் முக்கிய இலக்கு அமெரிக்காவில் தங்குவதாக இருப்பதால், இது அவர்களுக்கு ஸ்க்விட் கேம் போன்றது.&quot; என ஊடகத்தில் பேசியுள்ளார்.மேலும் அவர், &quot;இந்திய சி.இ.ஓக்கள் அவர்களின் சொந்த நாட்டு சாதி பாகுபாடு அரசியலை இறக்குமதி செய்கின்றனர். இது மிகவும் கொடிய சுரண்டல் கலாச்சாரம்&quot; என்றும் பேசியுள்ளார். பால்மர் இதற்கு முன் சில தொழிலாளர் கடத்தல் குற்றங்களையும் ஊழல்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.Americaசிரிசாஃப்ட் என்ற நிறுவனம் வல்லபனேனியை ஹெச்-1பி விசா தருவதாகக் கூறி வேலைக்கு சேர்த்துள்ளது. பின்னர், அவரை வெவ்வேறு நிறுவனங்களில் அரசு நிர்ணயிக்கும் அடிப்படை ஊதியத்தில் கான்ட்ராக்ட் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கிறது.கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, தொழிலாளர் கடத்தல் மற்றும் விசா ஆவணங்களை நிறுத்தி வைப்பது போன்ற குற்றங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக வல்லபனேனியின் வழக்கில் கூறப்பட்டுள்ளது.அவருக்கு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், வழக்கமான கட்டணத்தை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான இதுபற்றிய அறிக்கைக்கு சிரிசாஃப்ட் (Siri Software Solutions) நிறுவனம் எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை.அமெரிக்கா: 6000 மாணவர்கள் விசா ரத்து; ட்ரம்ப் நிர்வாகம் சொல்லும் காரணம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/pprvxgia/H1-B-Visa" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:11:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US:, இந்திய, CEO-க்கள், சாதி, பாகுபாடு, அரசியலை, இறக்குமதி, செய்கின்றனர், ஊழியர், குற்றச்சாட்டு</media:keywords>
    </item>
    <item>
        <title>சீனா: &amp;quot;இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம்&amp;quot; &amp; சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!</title>
        <link>https://dailytopnewz24.com/சீனா-இந்த-மாத்திரை-சாப்பிட்டால்-150-ஆண்டுகள்-வாழலாம்-சீன-நிறுவனத்தின்-கண்டுபிடிப்பு</link>
        <guid>https://dailytopnewz24.com/சீனா-இந்த-மாத்திரை-சாப்பிட்டால்-150-ஆண்டுகள்-வாழலாம்-சீன-நிறுவனத்தின்-கண்டுபிடிப்பு</guid>
        <description><![CDATA[ சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் குறித்து பேசியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் சீனாவில் நீண்ட ஆயுள் குறித்து ஆராயும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, இன்னும் சில ஆண்டுகளில் 150 வயது வரை வாழ்வதற்கான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும் எனக் கூறியிருக்கிறது. Anti Ageing நியூயார்க் டைம்ஸ் தளம் கூறுவதன்படி, அந்த நிறுவனம் வயதாவதைத் தடுப்பதற்கான ஆண்டி ஏஜிங் மாத்திரைகளை உருவாக்குவதில் வெற்றிகண்டு வருகிறது.திராட்சை விதைகளில் இருந்து எடுக்கப்படும் ரசாயனம் இந்த மாத்திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்பார்ப்பதை விட விரைவாகவே ஆயுளை அதிகரிக்கும் மாத்திரைகள் பயன்படுத்தப்படும் எனக் கூறுகின்றனர். லோன்வி பயோசயின்சஸ் (Lonvi Biosciences) என்ற அந்த நிறுவனம் உருவாக்கும் திராட்சை விதை மாத்திரை, உடலில் உள்ள ஜாம்பி செல்களைக் குறிவைத்து செயல்படும். zombie cells என்பது சேதமடைந்த அதே நேரத்தில் இறக்காமல் உடலில் இருந்து தீங்கான வேதிப்பொருட்களை வெளியிடும் செல்களாகும். இவை வயதாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. Human Cell ஆய்வில் வெற்றிகண்ட திராட்சை விதை மாத்திரை!தெற்கு சீனாவின் ஷென்சென் நகரத்தில் உள்ள லோன்வி நிறுவனம் திராட்சை விதையில் இருக்கும் பிரோசியானிடின் சி1 (Procyanidin C1) என்ற பொருளைக் கொண்டு அது உருவாக்கியிருக்கும் மாத்திரைகளால் மனித ஆயுளை 150 ஆண்டுகளாக உயர்த்த முடியும் என்கிறது.அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லியு கிங்குவா, &quot;150 ஆண்டுகள் வாழ்வது இன்னும் சில ஆண்டுகளில் யதார்த்தமானதாக இருக்கும்&quot; எனக் கூறியுள்ளார்.நேச்சர் மெட்டபாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், விஞ்ஞானிகள் திராட்சை விதை சாற்றிலிருந்து கிடைக்கும் புரோசியானிடின் C1 (PCC1)-ஐப் பயன்படுத்தி எலிகளின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலத்தை வெற்றிகரமாக நீட்டித்துள்ளனர். விரைவில் உலகத்தலைவர்களின் ஆசையை நிறைவேற்றும் இந்த மாத்திரைகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.Elon Musk: இந்தியாவின் செயற்கைக்கோளை ஏவ Space X நிறுவனத்தை நாடும் இஸ்ரோ -
ஏன்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/uhnewp3d/Research-Lab" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:11:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சீனா:, இந்த, மாத்திரை, சாப்பிட்டால், 150, ஆண்டுகள், வாழலாம், சீன, நிறுவனத்தின், கண்டுபிடிப்பு</media:keywords>
    </item>
    <item>
        <title>Hongqi Bridge: சீனாவின் &amp;apos;ஹாங்கி பாலம்&amp;apos; சரிவு &amp; வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்</title>
        <link>https://dailytopnewz24.com/hongqi-bridge-சீனாவின்-ஹாங்கி-பாலம்-சரிவு-வைரலாகும்-திக்-திக்-வீடியோ-காட்சிகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/hongqi-bridge-சீனாவின்-ஹாங்கி-பாலம்-சரிவு-வைரலாகும்-திக்-திக்-வீடியோ-காட்சிகள்</guid>
        <description><![CDATA[ சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.சிச்சுவான் மாகாணத்தின் மார்காங் பகுதியில் அமைந்துள்ள இந்த &#039;ஹாங்கி பாலம்&#039; (Hongqi bridge) 758 மீட்டர் நீளம் கொண்டது.சிச்சுவான், சீனாவின் மத்திய பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டிருந்த மலைப்பகுதி மற்றும் அருகிலுள்ள சாலைகளில் திடீரென விரிசல்கள் காணப்பட்டன. மேலும் மலைப்பகுதியில் நில நகர்வுகள் இருப்பதையும் பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாலத்தை போக்குவரத்திற்காக மூடியது. இந்த விரைவான முடிவால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மறுநாள் அதாவது நேற்று நிலைமை மோசமடைந்து மலைப்பகுதி சரிந்து பாலத்தின் மீது விழுந்தது. இதில் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே இருந்த ஆற்றில் விழுந்தது. பாலம் இடிந்து விழும் காட்சிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகின.The Hongqi Bridge in Shuangjiangkou, Sichuan Province, China, partially collapsed today. Authorities believe that cracks in the nearby mountainside — likely caused by water accumulation from a nearby reservoir — played a major role in the incident. pic.twitter.com/v1bdbj5KLJ— Weather Monitor (@WeatherMonitors) November 11, 2025


சிச்சுவான் என்ற குழுமத்தால் (Sichuan Road &amp; Bridge Group) கட்டப்பட்ட இந்த பாலம், இந்த ஆண்டின் தொடக்கத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், சீனாவின் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/dazrl4zn/hero-imag-2025-11-12T132135.691.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:11:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Hongqi, Bridge:, சீனாவின், ஹாங்கி, பாலம், சரிவு, வைரலாகும், திக், திக், வீடியோ, காட்சிகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>”மகளுக்குப் பிடிக்குமென ஹோட்டல் தொடங்கிய தந்தை”&amp; 900 கி.மீ கடந்த பாசப் பயணம்</title>
        <link>https://dailytopnewz24.com/மகளுக்குப்-பிடிக்குமென-ஹோட்டல்-தொடங்கிய-தந்தை-900-கிமீ-கடந்த-பாசப்-பயணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/மகளுக்குப்-பிடிக்குமென-ஹோட்டல்-தொடங்கிய-தந்தை-900-கிமீ-கடந்த-பாசப்-பயணம்</guid>
        <description><![CDATA[ சீனாவில் தனது மகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்பதற்காக, நல்ல வேலையை விட்டுவிட்டு, மகளின் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைந்த தந்தையின் பாசம் கவனம் பெற்று வருகிறது.லீ என்பவரின் மகள், ஜிலின் மாகாணத்தில் உள்ள சிப்பிங் நகரில் உள்ள ஜிலின் நார்மல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். விடுதியில் தங்கிப் படிக்கும் அவர், ஒருநாள் தன் தந்தையிடம் பேசும்போது, வீட்டில் சமைத்த ஃபிரைடு ரைஸ் சாப்பிட மிகவும் ஆசையாக இருப்பதாக சாதாரணமாகக் கூறியுள்ளார். Representational Imageமகளின் இந்த வார்த்தை, அவரை ஆழமாகத் தொட்டுள்ளது. உடனடியாக, அவர் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மகளுக்காக அவர், படிக்கும் கல்லூரிக்கு அருகே ஒரு உணவகத்தை அமைக்க முடிவு செய்திருக்கிறார் லீ. கடந்த சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் இவரின் மனைவி உயிரிழந்த நிலையில், மகளை லீ தான் அரவணைத்து வருகிறார்.தனது வேலையை விட்ட லீ, சுமார் 900 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, மகள் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஒரு சிறிய தள்ளுவண்டி உணவகத்தைத் தொடங்கியிருக்கிறார்.மகளுக்குப் பிடித்தமான பொருட்களைக் கொண்டு ஃபிரைடு ரைஸ் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு கடையில் வியாபாரம் நடக்கவில்லை, இதனால் லீ வருத்தமடைந்துள்ளார்.தந்தையின் சோகத்தைக் கண்ட மகள், தனது தந்தையின் கடை மற்றும் அவரது பாசம் குறித்த கதையை பல்கலைக்கழகத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார். &quot; அப்பா மிகவும் சோகமாக இருக்கிறார். தனது தந்தை சுகாதாரமான முறையில் தான் உணவுகளை தயாரிக்கிறார், விற்பனையை அதிகரிக்க அனைவரும் ஆதரவு தாருங்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பதிவு உடனடியாக வைரலாகி, பலரின் கவனத்தை பெற்றது. மறுநாள் காலை, லீயின் கடைக்கு முன் மாணவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கூட்டம் அலைமோதியதும் குறிப்பிடத்தக்கது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-12/18exm966/hero-imag-2025-11-12T110046.641.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:11:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>”மகளுக்குப், பிடிக்குமென, ஹோட்டல், தொடங்கிய, தந்தை”-, 900, கி.மீ, கடந்த, பாசப், பயணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>அதிகரிக்கும் இந்தியா &amp; அமெரிக்கா நெருக்கம்; ரஷ்யாவை டீலில் விடுகிறதா இந்தியா? &amp; அது நல்லதா?</title>
        <link>https://dailytopnewz24.com/அதிகரிக்கும்-இந்தியா-அமெரிக்கா-நெருக்கம்-ரஷ்யாவை-டீலில்-விடுகிறதா-இந்தியா-அது-நல்லதா</link>
        <guid>https://dailytopnewz24.com/அதிகரிக்கும்-இந்தியா-அமெரிக்கா-நெருக்கம்-ரஷ்யாவை-டீலில்-விடுகிறதா-இந்தியா-அது-நல்லதா</guid>
        <description><![CDATA[ &#039;இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை வெகுவாக குறைத்துவிட்டது... அதனால், நாமும் இந்தியா மீது விதித்திருக்கும் வரியை குறைக்க உள்ளோம்&#039; என்று நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். உண்மையிலேயே, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்துவிட்டதா என்று கேட்டால், &#039;அது உண்மை&#039; தான்.கச்சா எண்ணெய்அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு &#039;நோ&#039; விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?குறைந்த ரஷ்ய எண்ணெய் இறக்குமதி
2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 4,675 மில்லியன் டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதுவே இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 3,332 மில்லியன் டாலர்களுக்கு தான் எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இது 28.9 சதவிகித சரிவாகும். இன்னொரு பக்கம், இந்தியா அமெரிக்காவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது. இது கடந்த 2021-ம் ஆண்டிற்கு பிறகு, கடந்த மாதம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்காவில் இருந்து தினமும் 2.07 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் (அக்டோபர்), தினமும் 5.93 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கை விட அதிகமாகும். வரி பிரச்னை
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்ப் முதன்முதலாக உலக நாடுகளுக்கு &#039;பரஸ்பர வரி&#039;யை அறிவித்தார். இதில் பிற நாடுகளின் மீது எக்கச்சக்க வரி விதிக்கப்பட, பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றன. அதில் இந்தியாவும் ஒன்று. பேச்சுவார்த்தைக்கு சென்ற அனைத்து நாடுகளுடனும் ஓரளவு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. ஆனால், இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இன்னமும் நடந்துகொ...ண்டே இருக்கிறது. மோடி - புதின் &#039;74% இந்தியர்களின் கல்வி விசா நிராகரிப்பு&#039; - கனடா அரசு இந்திய மாணவர்களை டார்கெட் செய்வது ஏன்?இந்தியா - ரஷ்யா
இதற்கிடையில், ஒப்பந்தங்கள் கையெழுத்தான நாடுகளுக்கு குறைந்த வரியும், கையெழுத்தாகாமல் இருக்கும் நாடுகளுக்கு ஒருவித வரியும் கடந்த ஆகஸ்ட் மாதம் விதிக்கப்பட்டது. அதில் இந்தியாவிற்கு 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. அடுத்ததாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி வருவதாகவும், அந்தப் பணம் ரஷ்யா உக்ரைன் மீது செய்யும் போருக்கு உதவுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதனால், இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி விதித்தது அமெரிக்கா. ஆக, இப்போது இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவிகித வரி வசூலித்து வருகிறது. ரஷ்யாவை விட்டுக்கொடுக்காத இந்தியா
ஆரம்பத்தில், அமெரிக்கா என்ன தான் வரி போட்டாலும், ரஷ்யாவின் உறவை விட்டுக்கொடுப்பதாக இல்லை இந்தியா. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷ்ய பயணம் நல்ல சாட்சி. அதன் பின்னர், ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், &quot;இந்திய அரசு இந்திய மக்களின் நலனை தான் கருத்தில் கொள்ளும். அதை பொறுத்து தான், இந்தியா வர்த்தகம் செய்யும். அதனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும்&quot; என்று வெளிப்படையாகவே பேசினர்.ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில், சீனாவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி. இது ட்ரம்பிற்கான ஒரு சிக்னலாகவே பார்க்கப்பட்டது. ட்ரம்ப் வரி விதித்தும்... வர்த்தக பேச்சுவார்த்தை ஒரு சுமுக தீர்வை நோக்கி எட்டாத போதும், மோடி - புதின் சந்திப்பு முக்கியமாக பார்க்கப்பட்டது. அதுவும் சீனாவில் என்பது இன்னும் சிறப்பு. மோடி, ட்ரம்ப்`ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ - இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப்ட்ரம்ப் நெருக்கம்
இந்த சந்திப்பிற்கு பிறகு, ட்ரம்ப் மோடியுடனும், இந்தியா உடனும் சற்று நெருக்கத்தை அதிகப்படுத்தினார். மோடியை புகழ்ந்து தள்ளினார். அதன் பிறகு, இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அடுத்தடுத்து நடந்த வர்த்தக பேச்சுவார்த்தைகள் இப்போது வரை பாசிட்டிவாகவே சென்றுகொண்டிருக்கின்றன. நேற்று ட்ரம்ப் விரைவில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் நடக்க உள்ளது என்று கூறியுள்ளார். அதுவும் இருதரப்பிற்குமே நன்மை பயக்கும் ஒப்பந்தம் என்றும் கூறியுள்ளார். இந்த நேரத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளது இந்தியா. இந்தியா என்ன சொன்னது?
இதுவரை ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம் என்று ஸ்ட்ராங்காக கூறி வந்த இந்தியாவும், இப்போது பட்டும் படாமலும் பேசுகிறது.கடந்த மாதம் ட்ரம்ப், &#039;நான் மோடியிடம் பேசினேன். இந்தியா மெல்ல மெல்ல ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தும்&#039; என்று பேசினார். அதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமோ, &quot;நிலையற்ற ஆற்றல் சூழலில், இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே எங்களுடைய நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. இதைப் பொறுத்து தான் எங்களுடைய இறக்குமதி கொள்கை இருக்கின்றன.நிலையான எரிசக்தி விலையையும், பாதுகாப்பான விநியோகத்தையும் உறுதிப்படுத்துவது எங்களுடைய ஆற்றல் கொள்கையின் இரட்டை இலக்குகள். இந்தியா தவறாக சித்தரிக்கப்பட்ட ட்ரம்ப் பேச்சு; சிக்கலில் BBC - என்ன நடந்தது?அமெரிக்காவைப் பொறுத்தவரை, நாங்கள் பல ஆண்டுகளாக எரிசக்தி கொள்முதல்களை விரிவுப்படுத்த முயன்று வருகிறோம். இது சில ஆண்டுகளாக சீராக முன்னேறி வருகிறது.இப்போதைய அரசாங்கம் இந்தியா உடனான எரிசக்தி ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன&quot; என்று ட்ரம்ப் பேச்சிற்கு பின் பதிலளித்தது. ஆனால், ட்ரம்ப் கூறுவதுபோல, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா என்பது குறித்த பதிலே அந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கவில்லை. கேள்வி
இப்போது, &#039;அமெரிக்காவிற்காக ரஷ்யாவை விட்டுத்தருகிறதா இந்தியா?&#039; என்கிற கேள்வி எழுந்து வருகிறது. &#039;இது இந்தியாவிற்கு நன்மை பயக்குமா?&#039; என்கிற சந்தேகமும் எழுகிறது.ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறது என்று ட்ரம்ப் இந்தியா மீதான வரிக்கு ட்ரம்ப ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-11/cc4onygd/Trump.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:11:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அதிகரிக்கும், இந்தியா, அமெரிக்கா, நெருக்கம், ரஷ்யாவை, டீலில், விடுகிறதா, இந்தியா, அது, நல்லதா</media:keywords>
    </item>
    <item>
        <title>வாடகை ரூ.1250; அபராதம் ரூ.3.5 லட்சம் &amp; கோபத்தால் கட்டிய ஃபைன் &amp; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/வாடகை-ரூ1250-அபராதம்-ரூ35-லட்சம்-கோபத்தால்-கட்டிய-ஃபைன்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/வாடகை-ரூ1250-அபராதம்-ரூ35-லட்சம்-கோபத்தால்-கட்டிய-ஃபைன்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்திருக்கிறார். அதன்பின்னர் அதனை ரத்துசெய்ய விரும்பியிருக்கிறார், ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. இதனால் கோபமடைந்த அந்த பெண், வேண்டுமென்றே அறையை வெள்ளத்தில் மூழ்கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலில், பெண் ஒருவர் இரவு தங்குவதற்காக 108 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,250) செலுத்தி அறை ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அறைக்குள் நுழைந்த பிறகு அதை ரத்து செய்ய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அறை தரமற்றதாக இருப்பதாகவும் ஒலித்தடுப்பு வசதி இல்லாமல் இருப்பதாகவும் அவர் புகார் கூறியிருக்கிறார்.Water ( Representational Image)ஹோட்டல் விதிகளின்படி, செக்-இன் செய்த பிறகு முன்பதிவை ரத்து செய்ய முடியாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமாதான முயற்சியாக அவருக்கு வேறு ஒரு சிறந்த அறையைக் கட்டணமின்றித் தருவதாகவும் ஹோட்டல் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பெண் அதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்திருக்கின்றனர்.இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்தப் பெண், காவல்துறை வரும் வரை காத்திருந்த நேரத்தில், குளியலறையில் இருந்த அனைத்து குழாய்களையும் திறந்துவிட்டார். சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை தண்ணீர் தொடர்ந்து ஓடியதால், அந்த அறை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தண்ணீர் கசிந்து இரண்டாவது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கும் பரவியது.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டிருக்கிறார்.அறையில் ஏற்பட்ட சேதங்கள், சுவர்கள் பழுதுபார்ப்பு ஆகியவற்றுக்காக ஹோட்டலுக்கு இழப்பீடு வழங்க அவர் சம்மதித்திருக்கிறார்.இதையடுத்து, அறை வாடகையான 108 யுவானை விட சுமார் 280 மடங்கு அதிகமான, அதாவது 30,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.5 லட்சம்) அபராதமாகச் செலுத்தியுள்ளார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-11/oflfea9x/people-2593251_1280.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:11:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வாடகை, ரூ.1250, அபராதம், ரூ.3.5, லட்சம், கோபத்தால், கட்டிய, ஃபைன், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>`ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ &amp; இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/ஒப்பந்தம்-எப்போது-வரி-குறைக்கப்படுமா-இந்தியாவுக்கு-இரண்டு-குட்-நியூஸ்-சொன்ன-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒப்பந்தம்-எப்போது-வரி-குறைக்கப்படுமா-இந்தியாவுக்கு-இரண்டு-குட்-நியூஸ்-சொன்ன-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ தற்போது அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 25 சதவிகித வரி ப்ளஸ் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரி வசூலித்து வருகிறது. இதை குறைக்கவும், வர்த்தக ஒப்பந்தத்திற்காகவும் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்திய அரசு. இந்த நிலையில், நேற்று இந்தியாவின் அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பதவியேற்பு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது.ட்ரம்ப் - செர்ஜியோ கோர்அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு &#039;நோ&#039; விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?விரைவில் ஒப்பந்தம் 
அந்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், &quot;இந்தியா உடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். அது முன்பு இருந்த ஒப்பந்தத்தை விட, முற்றிலும் வேறானதாக இருக்கும். இப்போது இந்தியாவிற்கு என்னை பிடிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கு மீண்டும் என்னை பிடிக்கும். நியாயமான ஒப்பந்தம் போடவிருக்கிறோம். அவர்கள் மிக நல்ல பேச்சுவார்த்தைகாரர்கள். அதனால், செர்ஜியோ அது குறித்து பார்க்க வேண்டும். இந்தியா உடனான ஒப்பந்தம் விரைவில் நடக்க உள்ளது. அது அனைவருக்கும் நல்லதாக இருக்கும்&quot; என்று கூறியுள்ளார். வரி குறைப்பு..?
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், &quot;இப்போது ரஷ்ய எண்ணெய் பிரச்னையால், இந்தியாவிடம் இருந்து அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அவர்கள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை வெகுவாக குறைத்துவிட்டார்கள். அதனால், இந்தியா மீதான வரியும் குறைக்கப்படும்&quot; என்று கூறியுள்ளார். &#039;அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்&#039; - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-11/wyef4q0n/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 13 Nov 2025 10:11:20 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒப்பந்தம், எப்போது, வரி, குறைக்கப்படுமா’, இந்தியாவுக்கு, இரண்டு, குட், நியூஸ், சொன்ன, ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு &amp;apos;நோ&amp;apos; விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-உடல்-பருமன்-சர்க்கரை-நோய்-உள்ளவர்களுக்கு-நோ-விசா-ட்ரம்ப்பின்-புதிய-கெடுபிடி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-உடல்-பருமன்-சர்க்கரை-நோய்-உள்ளவர்களுக்கு-நோ-விசா-ட்ரம்ப்பின்-புதிய-கெடுபிடி-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க வேண்டாம் என்று உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விசாH-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு?என்னென்ன மருத்துவ உதவி அல்லது சிகிச்சை?இந்த மருத்துவ உதவி மற்றும் சிகிச்சைகளில் இதய நோய், சுவாச நோய், புற்றுநோய், சர்க்கரை நோய், நரம்பு சம்பந்தமான பிரச்னைகள், உளவியல் ரீதியான பிரச்னைகளும் அடங்கும்.உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட விசா தருவதில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, இவர்களுக்கு எதிர்காலத்தில் ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.நிதி பாதுகாப்பு இருக்கிறதா?இந்தக் கட்டுப்பாடுகளில் இது யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தெளிவாகக் கூறப்படவில்லை. இப்போதைக்கு விசா விண்ணப்பிப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்தக் கோளாறு இருப்பவர்களுக்கு ஒருவேளை விசா வழங்கப்பட்டால் அவர்களது மருத்துவச் செலவுகளைக் பார்த்துக்கொள்ள கூடிய அளவுக்கு, குறிப்பிட்ட நபருக்கு நிதி பாதுகாப்பு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பொறுத்தவரை, குடியேற்றங்களைக் குறைக்க வேண்டும். இதற்காகத்தான், விசா நடைமுறைகளில் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அவரது அரசாங்கம்.அமெரிக்கா செல்ல உங்களுக்கு ஐடியா இருக்கிறதா? - விசாவிற்கு &#039;இந்த&#039; தகவல் கட்டாயம்! - புது ரூல் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-21/acjg0gpc/1738638177-7501.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:05:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா:, உடல், பருமன், சர்க்கரை, நோய்‌, உள்ளவர்களுக்கு, நோ, விசா, ட்ரம்ப்பின், புதிய, கெடுபிடி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி</title>
        <link>https://dailytopnewz24.com/நியூயார்க்-ஒற்றை-அறை-ஒழுகும்-குளியலறை-டு-11000-சதுர-அடி-பிரமாண்ட-மாளிகை-சாதித்த-ஜோஹ்ரான்-மம்தானி</link>
        <guid>https://dailytopnewz24.com/நியூயார்க்-ஒற்றை-அறை-ஒழுகும்-குளியலறை-டு-11000-சதுர-அடி-பிரமாண்ட-மாளிகை-சாதித்த-ஜோஹ்ரான்-மம்தானி</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் நிதி மற்றும் கலாசார மையமான நியூயார்க் நகரத்தின் 111-வது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானியின் (Zohran Mamdani) வெற்றி, நியூயார்க் அரசியலில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. உகாண்டாவில் பிறந்து, இந்தியாவில் வேரூன்றி, குயின்ஸ் மாகாணத்தின் அஸ்டோரியாவில் எளிய வாடகை குடியிருப்பில் வாழ்ந்த இந்த 34 வயது ஜனநாயக சோசலிசவாதி, நகரத்தின் வரலாற்றில் முதல் முஸ்லிம் மற்றும் முதல் தெற்காசிய மேயர் என்ற பெருமையைப் பெறுகிறார்.ஜோஹ்ரான் மம்தானிசாதாரண மக்களைப் பாதிக்கும் அத்தியாவசியப் பிரச்னைகளான வாடகை உயர்வு, வாழ்வாதாரச் செலவு மற்றும் சுகாதாரச் சிக்கல்களை மையமாகக் கொண்ட அவரது தேர்தல் பிரசாரம், அடித்தள மக்களின் நம்பிக்கையை வென்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி, அரசியல் ஆளுமைகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி, உழைக்கும் வர்க்க மக்களின் குரல் மேலோங்குவதை உறுதி செய்துள்ளது.நியூயார்க் நகருக்கு `இந்திய வம்சாவளி’ மேயர்... கடும் விரக்தியில் ட்ரம்ப் - யார் இந்த ஸோரான் மம்தானி?மம்தானியின் தற்போதைய வாழ்க்கைச் சூழல், அவர் அடுத்து செல்லவிருக்கும் இடத்துடன் முற்றிலும் வேறுபட்டது. அவரும் அவரது மனைவி ரமா துவாஜியும் தற்போது அஸ்டோரியாவில் சுமார் 800 சதுர அடி கொண்ட ஒரு படுக்கை அறை கொண்ட குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.இந்தக் குடியிருப்பில் ஒருநாள் காலை குளியலறை ஒழுகியதால், தரையெங்கும் துண்டுகளைப் பரப்பிய அனுபவத்தை அவர் நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டார்.இந்த எளிய பின்னணியில், நியூயார்க் மேயரின் அதிகாரப்பூர்வ இல்லமான, 226 ஆண்டுகள் பழமையான மற்றும் 11,000 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரமாண்டமான கிரேசி மாளிகைக்கு (Gracie Mansion) அவர் மாறவுள்ளார்.ஜோஹ்ரான் மம்தானிஈஸ்ட் நதி காட்சியுடன், ஃபயர்ப்ளேஸ், பிரமாண்டத் தோட்டம், நிரந்தர சமையல்காரர் போன்ற வசதிகளைக் கொண்ட இந்த மாளிகையில் பாதுகாப்பு வசதிகள் அதிகம் இருப்பதால், பெரும்பாலான மேயர்கள் இங்கு குடியேறுவதே வழக்கம். எனினும், தான் எங்கு வசிக்கப் போகிறேன் என்பதை மம்தானி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.ஜோஹ்ரான் மம்தானிமம்தானியின் தேர்தல் பிரசாரம், சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய அடித்தள மக்கள் இயக்கத்தின் (grassroots movement) மூலமாகத் திரட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களால் பலப்படுத்தப்பட்டது. அவரது செய்தி, இந்தி, அரபு மற்றும் ஸ்பானிஷ் போன்ற பல்வேறு மொழிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, நியூயார்க்கின் பன்முக சமூகங்களிடையே ஆழமாக வேரூன்றியது.ஜோஹ்ரான் மம்தானி: நேரு டு பாலிவுட் பாடல் - இந்திய வம்சாவளி நியூயார்க்  மேயரின் வெற்றி கொண்டாட்டம்தனது இஸ்லாமிய அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, இஸ்லாமிய வெறுப்புத் தாக்குதல்களை அவர் எதிர்கொண்டபோதும், உழைக்கும் வர்க்க மக்களுக்காகப் போராடுவதன் மூலம், அவர் நியூயார்க் வரலாற்றில் ஒரு முக்கிய அரசியல் மாற்றத்தின் அடையாளமாக உருவெடுத்துள்ளார். அவரது வெற்றி, நியூயார்க் நகரத்தில் அரசியல் சித்தாந்தம் மற்றும் அதிகார மையங்கள் மாறுவதைச் சுட்டிக்காட்டுகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-09/rxncey3v/AP25309177164223.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:05:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>நியூயார்க்:, ஒற்றை, அறை, ஒழுகும், குளியலறை, டு, 11, 000, சதுர, அடி, பிரமாண்ட, மாளிகை, சாதித்த, ஜோஹ்ரான், மம்தானி</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!</title>
        <link>https://dailytopnewz24.com/ஆன்லைனில்-கிரீம்-வாங்கி-பயன்படுத்திய-பெண்-பாம்பு-தோல்-போல்-மாறியதால்-அதிர்ச்சி</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆன்லைனில்-கிரீம்-வாங்கி-பயன்படுத்திய-பெண்-பாம்பு-தோல்-போல்-மாறியதால்-அதிர்ச்சி</guid>
        <description><![CDATA[ சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங்கியதையடுத்து இவர் இணையதளத்தில் பார்த்து ஒரு கிரீமை வாங்கி உள்ளார். ஆன்லைனில் விளம்பரத்தை பார்த்து வாங்கிய அந்த கிரீமை கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார். இந்த கிரீமை முழுமையாக நம்பியதால் சுமார் ஒரு லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் 12 லட்சம் வரை) செலவு செய்திருக்கிறார். எதற்காக இதனை தொடர்ந்து பயன்படுத்தி இருக்கிறார் என்றால், ஆரம்பத்தில் அந்த கிரீம் அரிப்பை கட்டுப்படுத்தி நல்ல பலனை அவருக்கு தந்திருக்கிறது.  creamஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த தொற்று மோசமடைந்து சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் பாம்புகளில் இருக்கும் கோடுகள் போன்று தோன்றுகிறது. கால்களில் வீக்கம், தொடர் வாந்தி, குமட்டல் ஆகியவை ஏற்பட்டிருக்கிறது.இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரை பரிசோதனை செய்த தோல் மருத்துவர், அந்தப் பெண்ணின் உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு மிகக் குறைவாக இருப்பதைக் கண்டறிந்து இருக்கின்றார். அவரது உடல் அத்தியாவசிய ஹார்மோன்களை போதுமான அளவு உற்பத்தி செய்யாததால் &#039;செகண்டரி அட்ரினோகார்டிகல் இன்சஃபிஷியன்சி&#039; (Secondary Adrenocortical Insufficiency) என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவர் வாங் ஃபே கூறுகையில், &quot;ஆன்லைனில் ஸ்டீராய்டு இல்லாத, தூய மூலிகை என்று கூறி ஆன்லைனில் விற்கப்படும் பல க்ரீம்களில் சக்திவாய்ந்த ஸ்டீராய்டுகள் கலக்கப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் உடனடி நிவாரணம் அளித்தாலும் நீண்ட காலம் பயன்படுத்தினால், இது போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இது போன்ற தோல் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி அதற்கேற்ற சரியான மருந்துகளை பயன்படுத்துமாறும்” கூறியிருக்கிறார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-07/4xscfsk2/hero-imag-2025-11-07T122801.028.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:05:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆன்லைனில், கிரீம், வாங்கி, பயன்படுத்திய, பெண், பாம்பு, தோல், போல், மாறியதால், அதிர்ச்சி</media:keywords>
    </item>
    <item>
        <title>US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே &amp; ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!</title>
        <link>https://dailytopnewz24.com/us-இனி-பாஸ்போட்ர்டில்-இரண்டு-பாலினம்-மட்டுமே-ட்ரம்ப்பின்-கட்டுப்பாட்டுக்கு-நீதிமன்றம்-அனுமதி</link>
        <guid>https://dailytopnewz24.com/us-இனி-பாஸ்போட்ர்டில்-இரண்டு-பாலினம்-மட்டுமே-ட்ரம்ப்பின்-கட்டுப்பாட்டுக்கு-நீதிமன்றம்-அனுமதி</guid>
        <description><![CDATA[ அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இது திருநங்கையர் மற்றும் இதர பாலினத்தவர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.ட்ரம்ப் நிர்வாகம் LGBTQ+ சமூகத்துக்கு இடையிலான மோதலில் ட்ரம்ப்புக்கு இது மற்றொரு வெற்றி, LGBTQ+ அடையாளங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் தோல்வி.ட்ரம்ப் ட்ரம்ப் இந்தப் பாஸ்போர்ட் பாலினக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தும்போது, இது அரசியலமைப்புக்கு எதிரானது என பாலின செயல்பாட்டாளர்கள் வாதாடினர்.   ஆனால் உச்ச நீதிமன்றம், &quot;பாஸ்போர்டில் பிறப்பின்போதான பாலினத்தைக் காண்பிப்பது, எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனக் காண்பிப்பதைப் போல சாதாரணமானதுதான். சம பாதுகாப்புக் கொள்கையை அது மீறவில்லை. இரண்டிலும் அரசு யாரையும் வித்தியாசமாக நடத்தாமல் ஒரு வரலாற்று உண்மைக்கு சான்றளிக்கிறது.&quot; எனக் கூறியிருக்கிறது.ஜோ பைடன் இதன் மூலம் ஜோ பைடன் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆண், பெண், இரட்டைத் தன்மை இல்லை ஆகிய மூன்று தேர்வுகளுக்குப் பதில், இனி ஆண் / பெண் என்ற இரண்டு தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.Trump 2.0: இரண்டு பாலினம், எல்லையில் கறார், குடியுரிமை மறுப்பு... முதல் நாளில் சர்ச்சை கையெழுத்துகள் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-07/ec95hp3b/LGBTQ-passport" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:05:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US:, இனி, பாஸ்போட்ர்டில், இரண்டு, பாலினம், மட்டுமே, ட்ரம்ப்பின், கட்டுப்பாட்டுக்கு, நீதிமன்றம், அனுமதி</media:keywords>
    </item>
    <item>
        <title>ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை &amp; ஏன் தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-சந்திப்பில்-ஜி-ஜின்பிங்-சிரித்த-புகைப்படங்கள்-சீனாவில்-வெளியிடவில்லை-ஏன்-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/ட்ரம்ப்-சந்திப்பில்-ஜி-ஜின்பிங்-சிரித்த-புகைப்படங்கள்-சீனாவில்-வெளியிடவில்லை-ஏன்-தெரியுமா</guid>
        <description><![CDATA[ சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன.தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். இந்த இருதரப்பு சந்திப்பில் சோயாபீன்கள், ஃபெண்டானில், அரிய தாதுக்கள் மற்றும் கணினி சிப்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.Xi Jinping - Trump Meetingஇந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படங்கள், ஜி ஜின்பிங்கின் ஒரு புதிய முகத்தை வெளிப்படுத்தியுள்ளன. அந்த புகைப்படங்களில், இரு அதிபர்களும் தங்கள் அலுவலர்களுடன் எதிரெதிராக அமர்ந்திருந்தனர்.அதில், ட்ரம்ப் நீட்டிய காகிதத்தைப் பார்த்து ஜி ஜின்பிங் கண்களை மூடிக்கொண்டு சிரிப்பது போல் தெரிகிறார். அவருக்கருகே இருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் சிரிக்கிறார்.கடந்த மாதம் இதேபோல தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் உடனான சந்திப்பில், பரிசுப்பொருட்களை பரிமாறும் போது ஜி ஜின்பிங் நகைச்சுவையாக சிரித்தார். அந்த தருணம் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.Trump - Xi Jinpingஅப்போது லீ, மரத்தாலான செஸ் பலகையை சீன அதிபருக்குக் கொடுத்தார். ஜி ஜின்பிங் அவருக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட Xiaomi மொபைலை வழங்கினார். இதற்குப் பிறகு, லீ “இதன் தகவல் தொடர்பு பாதுகாப்பு எப்படி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்ப, “பின்னால் கதவு இருக்கிறதா என நீங்களே சோதனை செய்யலாம்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார் ஜி ஜின்பிங்.சீனா தனது தயாரிப்புகளில் பின் கதவை வைத்து, பயனருக்குத் தெரியாமல் கேட்ஜெட்டுகளை அணுகுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி முன்வைக்கப்படுவது வழக்கம். ஆனால் சீன அதிபரின் நகைச்சுவையும் சிரிப்பும் வழக்கத்திற்கு மாறானவை.சீனாவில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல்கள் வெளியாவதும், அரசின் பிம்பமும் தீவிரமான கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மேற்கத்திய ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன.அமெரிக்கா - சீனாஅரசாங்கம் உருவாக்கும் பிம்பத்துடன் ஒத்துப்போகாத அதிபரைப் பற்றிய எந்தவொரு செய்திக்களையும் தணிக்கை செய்து எளிதில் அகற்றிவிடுகின்றனர். இதனால் சீன தளங்களான Weibo, Douyin மற்றும் Xiaohongshu ஆகியவற்றில் அதிபர் சிரிக்கும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பார்க்க முடியாது.சில தளங்களில் பரிசுகளை மாற்றிக்கொள்ளும் சாதாரண புகைப்படங்களை மட்டும் பார்க்க முடியும் என என்.டி.டி.வி செய்தியறிக்கை தெரிவிக்கிறது.சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-07/kswrzpp2/china-president.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:05:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ட்ரம்ப், சந்திப்பில், ஜி, ஜின்பிங், சிரித்த, புகைப்படங்கள், சீனாவில், வெளியிடவில்லை, ஏன், தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>Ghazala Hashmi: இந்திய வம்சாவளி; அமெரிக்காவில் முஸ்லிம் லெப்டினன்ட் கவர்னர்! &amp; கஸாலா ஹாஷ்மி யார்?</title>
        <link>https://dailytopnewz24.com/ghazala-hashmi-இந்திய-வம்சாவளி-அமெரிக்காவில்-முஸ்லிம்-லெப்டினன்ட்-கவர்னர்-கஸாலா-ஹாஷ்மி-யார்</link>
        <guid>https://dailytopnewz24.com/ghazala-hashmi-இந்திய-வம்சாவளி-அமெரிக்காவில்-முஸ்லிம்-லெப்டினன்ட்-கவர்னர்-கஸாலா-ஹாஷ்மி-யார்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் (Attorney General) ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலின் முடிவில் வர்ஜீனியாவின் முக்கியமான மூன்று பதவிகளுக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.வர்ஜீனியாவின் முதல் பெண் கவர்னராக அபிகெயில் ஸ்பான்பெர்கர், (Abigail Spanberger), லெப்டினன்ட் கவர்னராக முஸ்லிம் பெண் கஸாலா ஹாஷ்மி (Ghazala Hashmi) தேர்வாகியுள்ளனர்.லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மியார் இந்த கஸாலா ஹாஷ்மி?அமெரிக்காவின் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் கஸாலா ஹாஷ்மி.1964 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஜியா ஹாஷ்மி மற்றும் தன்வீர் ஹாஷ்மிக்கு பிறந்தவர் கஸாலா ஹாஷ்மி. தனது குழந்தைப் பருவத்தை மலக்பேட்டில் உள்ள தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் கழித்தார்.இவரின் தந்தை அமெரிக்காவில் பணியாற்றி வந்ததால், 4 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் குடியேறியது கஸாலா ஹாஷ்மியின் குடும்பம்.கஸாலா ஹாஷ்மியின் தந்தையான பேராசிரியர் ஜியா ஹாஷ்மி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் எல்.எல்.பி. பட்டம் பெற்றுள்ளார்.அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அங்கு பல்கலைக்கழக ஆசிரியராக பணியைத் தொடங்கினார்.லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மிசர்வதேச ஆய்வுகள் மையத்தை நிறுவி அதன் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். கஸாலா ஹாஷ்மியின் தாயார் தன்வீர் ஹாஷ்மி, தெலங்கானாவின் உஸ்மானியா மகளிர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. மற்றும் பி.எட். பட்டம் பெற்றுள்ளார்.கல்வியில் மிகவும் சிறந்த மாணவியாக இருந்த கஸாலா ஹாஷ்மி, ஜார்ஜியா தெற்கு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தையும், அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.கல்லூரி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் வாலிடிக்டோரியனாக (Valedictorian) தேர்வு செய்யப்பட்ட இவர், பல உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகளின் மூலம் தனது கல்விக் காலத்தைக் கடந்தார்.கல்வியைத் தொடர்ந்து ரிச்மண்ட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ரெனால்ட்ஸ் சமூகக் கல்லூரியிலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார்.1991 ஆம் ஆண்டு கஸாலா ஹாஷ்மி தனது கணவர் அசார் ரஃபீக்குடன் ரிச்மண்ட் பகுதிக்கு குடிபெயர்ந்தார். இந்த தம்பதியருக்கு யாஸ்மின் மற்றும் நூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.அரசியல் அனுபவமே இல்லாத கஸாலா ஹாஷ்மி, 2019 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். அதன்பின் ஐந்து ஆண்டுகள் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.லெப்டினன்ட் கவர்னர் கஸாலா ஹாஷ்மிஅதன் பலனாக, 2024 ஆம் ஆண்டு செனட் கல்வி மற்றும் சுகாதாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.இந்தப் பதவி, குழந்தைப் பேறு உரிமை மற்றும் பொதுக் கல்விக்கான உரிமை ஆகிய இரண்டு முக்கியமான ஜனநாயக முன்னுரிமைகளை உள்ளடக்கிய முக்கிய தலைமைப் பதவியாகும்.இதுதவிர, தனது பதவிக்காலத்தில் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், நீதித்துறை போன்ற துறைகளில் சமத்துவமின்மை தொடர்பான பிரச்சினைகளில் கவனம் செலுத்தியுள்ளார். அதன் மூலம் பிறரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உழைத்துள்ளார்.இந்த நிலையில்தான் வர்ஜீனியாவின் லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கான தேர்தலில் களமிறங்கினார். இந்த தேர்தலின் முடிவில், ஆளும் குடியரசுக் கட்சியிடம் இருந்த மாநில செனட் பதவியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் கைப்பற்றினார்.இவரின் இந்த அபூர்வமான வளர்ச்சி, ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்காக கஸாலா ஹாஷ்மி தொடர்ந்து குரல் கொடுத்ததுதான் இந்த வெற்றிக்கான காரணம் என அரசியல் வட்டாரங்கள் உரக்கப் பேசுகின்றன.US Election: தொடர் தோல்வியில் ட்ரம்ப்; முக்கிய பதவிகளில் வெற்றியைக் குவிக்கும் எதிர்க்கட்சி! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-06/3y9qmi6j/Ghazala-Hashmi-.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:05:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Ghazala, Hashmi:, இந்திய, வம்சாவளி, அமெரிக்காவில், முஸ்லிம், லெப்டினன்ட், கவர்னர், கஸாலா, ஹாஷ்மி, யார்</media:keywords>
    </item>
    <item>
        <title>பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்</title>
        <link>https://dailytopnewz24.com/பிரிந்து-24-ஆண்டுகள்-தொழில்-தொடங்க-பணம்-கொடுத்த-முன்னாள்-காதலியை-தேடும்-சீன-காதலர்</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரிந்து-24-ஆண்டுகள்-தொழில்-தொடங்க-பணம்-கொடுத்த-முன்னாள்-காதலியை-தேடும்-சீன-காதலர்</guid>
        <description><![CDATA[ சீனாவில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கடன் கொடுத்த முன்னாள் காதலியைத் தேட, ஊடக உதவியை நாடியுள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது. லீ என்ற அந்த நபர், 24 ஆண்டுகளுக்கு முன்பு மா என்ற தனது முன்னாள் காதலியிடம் இருந்து 10,000 யுவான் (சுமார் ₹1.24 லட்சம்) கடனாகப் பெற்றிருந்தார். தற்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதற்காக, அவரைத் தேடி வருகிறார்.1991 ஆம் ஆண்டில் லீயும், மாவும் ஒரு நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தபோது சந்தித்திருக்கின்றனர். அப்போது லீக்கு 23 வயது, மாவுக்கு 25 வயது. மாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. சுமார் எட்டு ஆண்டுகள் காதலித்திருக்கின்றனர்.  காதல்லீயின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால், லீ தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் சுமுகமாகப் பிரிந்தனர்.​பிரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, 2001 ஆம் ஆண்டு லீ சொந்தமாகத் தொழில் தொடங்க நினைத்தபோது, அவருக்குப் பண உதவி தேவைப்பட்டது. அப்போது அவரது முன்னாள் காதலியான மா, எந்தத் தயக்கமும் இன்றி 10,000 யுவான் பணத்தை அவருக்குக் கொடுத்து உதவியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இது ஒரு பெரிய தொகையாகக் கருதப்பட்டது என்று லீ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.​​பணம் பெற்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு, லீ தனது மொபைல் போனைத் தொலைத்ததால், மாவின் தொடர்பு எண்ணை இழந்தார். அன்று முதல் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த அவர், தற்போது &quot;சியோலி ஹெல்ப்ஸ் யூ&quot; என்ற உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் உதவியுடன் மாவைத் தேடி வருகிறார். இந்த தேடுதல் முயற்சிக்கு லீயின் மனைவியும் ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-05/d6ib83gh/love-592224_1280.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:05:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிரிந்து, ஆண்டுகள், தொழில், தொடங்க, பணம், கொடுத்த, முன்னாள், காதலியை, தேடும், சீன, காதலர்</media:keywords>
    </item>
    <item>
        <title>இன்று அமெரிக்க உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வரும் ட்ரம்ப் வரி வழக்கு! &amp; வரிகள் திரும்ப பெறப்படுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/இன்று-அமெரிக்க-உச்ச-நீதிமன்ற-விசாரணைக்கு-வரும்-ட்ரம்ப்-வரி-வழக்கு-வரிகள்-திரும்ப-பெறப்படுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/இன்று-அமெரிக்க-உச்ச-நீதிமன்ற-விசாரணைக்கு-வரும்-ட்ரம்ப்-வரி-வழக்கு-வரிகள்-திரும்ப-பெறப்படுமா</guid>
        <description><![CDATA[ இன்று (அமெரிக்க நேரப்படி) உலக நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்ட வரி வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.ஏன் இந்த வரி?
உலக நாடுகளுடன் அமெரிக்காவிற்கு நிறைய வரி பற்றாக்குறை உள்ளது. அமெரிக்கப் பொருள்களுக்கு பிற நாடுகள் அதிக வரிகளை விதிக்கிறது என்று ட்ரம்ப் முதன்முதலாக உலக நாடுகளின் மீது அதிக வரிகளை விதித்து உத்தரவிட்டார்.இந்த வரிகளை ட்ரம்ப் ‘தேசிய அவசரநிலை மற்றும் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977’-க்கு கீழ் தான் நடைமுறைக்கு கொண்டார்.ட்ரம்ப் - பரஸ்பர வரிஅதன் பிறகு, இந்த வரிகளின் அமலுக்கு கொஞ்சம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கால அவகாசத்தில் உலக நாடுகள் கட கடவென வர்த்தக ஒப்பந்தங்களைப் பேசி முடித்தது. இதனால், ஒப்பந்தங்கள் முடிந்த நாடுகளுக்கு ட்ரம்ப் வரிகளை குறைத்தார்.இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகள் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இன்னொரு பக்கம், இந்த வரி உலக நாடுகள் எப்படி பாதிக்கிறதோ, அமெரிக்க மக்களும் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். Zohran Mamdani: NewYork தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் -யார் இவர்வழக்கு
இதனையடுத்து, இந்த வரிகளை எதிர்த்து அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், &quot;தேசிய அவசர நிலையின் போது, அதிபருக்கு பல அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த அதிகாரங்களில் வரிகள் விதிப்பது அடங்காது&quot; என்று தீர்ப்பு வழங்கினர்.இதை எதிர்த்து தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாடினார் ட்ரம்ப்.இன்று அந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கை உலகம் உற்றுநோக்கி வருகிறது.அமெரிக்க உச்ச நீதிமன்றம்அமெரிக்க அரசாங்கம் தயார்
ஒருவேளை, இந்த வழக்கில் வரிக்கு எதிராக தீர்ப்பு வந்தால், இதுவரை அமெரிக்கா வசூலித்த வரிகளை அந்தந்த நாடுகளுக்கே திருப்பி செலுத்த வேண்டியதாக இருக்கும்.இதை தவிர்க்க, இந்த வரிகளை அமெரிக்காவிற்குள்ளேயே வைத்துக்கொள்ள பிற வரிச் சட்டங்களை தயார் செய்து வருவதாகவும், கையிலெடுக்க உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.மேற்கூறிய சட்டங்களுக்கு கீழ், வரி விதிக்க முடியாது என்றாலும், ட்ரம்ப் அரசு வேறு சட்டங்களின் வழியே உலக நாடுகளின் மீது வரிகளை தொடர்ந்து விதிக்குமாம். அதற்கான நடைமுறைகளையும் தயார் செய்துவிட்டது.ஆக, தயாராக இருங்கள், உலக நாடுகளே!US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை&#039;&#039; -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் முரண்டு ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-14/5rld8xyj/Trump.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:05:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இன்று, அமெரிக்க, உச்ச, நீதிமன்ற, விசாரணைக்கு, வரும், ட்ரம்ப், வரி, வழக்கு, வரிகள், திரும்ப, பெறப்படுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>Zohran Mamdani: NewYork தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி, இயக்குநர் மீரா நாயர் மகன் &amp;யார் இவர்</title>
        <link>https://dailytopnewz24.com/zohran-mamdani-newyork-தேர்தலில்-வெற்றி-பெற்ற-இந்திய-வம்சாவளி-இயக்குநர்-மீரா-நாயர்-மகன்-யார்-இவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/zohran-mamdani-newyork-தேர்தலில்-வெற்றி-பெற்ற-இந்திய-வம்சாவளி-இயக்குநர்-மீரா-நாயர்-மகன்-யார்-இவர்</guid>
        <description><![CDATA[ நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி சாதனை வெற்றி பெற்றவர், அமெரிக்காவின் இன்றைய பேசுபொருள்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறந்த நகரமான நியூயார்க்கில், &quot;இவருக்கு வாக்களித்தால் நியூயார்க் நகரத்திற்கான ஃபெடரல் நிதி குறைக்கப்படும்&quot; என்று எச்சரித்தும், 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஜோஹ்ரான் மம்தானி.1969-ம் ஆண்டிற்கு பிறகு, நியூயார்க் நகரத்தில் 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி.சொஹ்ரான் மம்தானிUS: நியூயார்க் மேயர் தேர்தல்; டிரம்பை எதிர்த்து அபார வெற்றி பெற்ற இளைஞர் `ஜோஹ்ரான் மம்தானி&#039; யார்?யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?
34 வயது ஆகும் ஜோஹ்ரான் மம்தானி உகாண்டாவில் பிறந்தவர். இவரது தந்தை உகாண்டாவை சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி. இவரது தாய் இந்தியாவின் ஒடிசாவை சேர்ந்த மீரா நாயர்.மீரா நாயர் திரைப்பட இயக்குநர் ஆவார். சலாம் பாம்பே, நியூயார்க் ஐ லவ் யூ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.நியூயார்க் நகரத்தில் மேயராக பதவியேற்கும் முதல் முஸ்லீம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்கிற குணப்பெயரும் இவருக்கு கிடைத்துள்ளது.கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நியூயார்க் நகரத்தின் இளம் மேயர் எனும் பெருமையும் இவர் பெற்றுள்ளார்.இவர் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி நியூயார்க் மேயராக பதவியேற்க உள்ளார்.முன்னெடுத்த பிரசாரங்கள்: நியூயார்க் நகரத்தின் மேயர் தேர்தலில் அவர் முன்னெடுத்த முக்கிய பிரசாரங்கள்:&gt; இன வேறுபாட்டுக்கு எதிரான மாற்றம்&gt; பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான மாற்றம்&gt; இலவச குழந்தைகள் நலன்&gt; அரசு நடத்தும் மளிகை கடைகள்&gt; இலவச பேருந்து சேவை&gt; போலீஸாரிடமிருந்து உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் புதிய பாதுகாப்புத் துறைஜோஹ்ரான் மம்தானிடாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்!சந்தித்த எதிர்ப்புகள் என்னென்ன?
ஜோஹ்ரான் மம்தானி அறிவித்த இலவசங்களுக்கு நிதி எங்கு இருந்து வரும் என்று பிற வேட்பாளர்கள் கேள்வி எழுப்பினர்.டிரம்ப் அவரை கம்யூனிஸ்ட் எனவும், தீவிர அச்சுறுத்தல்பாடாகவும் நேரடியாகச் சாடியுள்ளார்.இந்தத் தேர்தலில் அவருக்கு எதிராக சுயநிர்ணய வேட்பாளர் மற்றும் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோர் போட்டியிட்டனர்.ஆண்ட்ரூ கியூமோவிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார் டிரம்ப், மேலும் இவருக்கு பெருமளவு நிதியுதவி செய்தார் உலகத்தின் டாப் பணக்காரர் எலான் மஸ்க்.வெற்றி பேச்சு
தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஜோஹ்ரான் மம்தானி, &quot;அரசியலில் மீண்டும் நம்பிக்கையை மீட்டெடுக்க நீங்கள் உதவியுள்ளீர்கள்.இப்போதுள்ள அரசியல் இருளில், நியூயார்க் நகரம் வெளிச்சமாக இருக்கும்&quot; என்று பேசியுள்ளார்.நியூயார்க் வெற்றி ஏன் முக்கியம்? 
அமெரிக்காவில் மிக முக்கியமான நகரம் நியூயார்க். ட்ரம்ப் பிறந்த நகரமும் இது. இந்த நகரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கையைத் தாண்டி, ட்ரம்ப் கட்சிக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்பது மிக முக்கியமானது.இது அந்த நகரத்தின் மக்களுக்கு ட்ரம்பின் மீதுள்ள அதிருப்தியை காட்டுகிறது என்றும் கருதலாம்.ட்ரம்ப்ட்ரம்ப் என்ன சொல்கிறார்? 
ஜோஹ்ரான் மம்தானி வெற்றிக்கு பிறகு, ட்ரம்ப், &quot;இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் தோல்விக்கு இரண்டு காரணங்கள் உள்ளன - ஒன்று, டொனல்ட் ட்ரம்ப் என்கிற பெயர் பலோட்டில் இல்லை. மற்றொன்று, இப்போது அமெரிக்காவில் அரசு நிர்வாகம் மூடப்பட்டுள்ளது&quot; என்று பேசியுள்ளார்.அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப்  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-05/k0olhg6f/Zohran_Mamdani_Newyork_Mayor.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:05:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Zohran, Mamdani:, NewYork, தேர்தலில், வெற்றி, பெற்ற, இந்திய, வம்சாவளி, இயக்குநர், மீரா, நாயர், மகன், -யார், இவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>US: நியூயார்க் மேயர் தேர்தல்; டிரம்பை எதிர்த்து அபார வெற்றி பெற்ற இளைஞர் `ஜோஹ்ரான் மம்தானி&amp;apos; யார்?</title>
        <link>https://dailytopnewz24.com/us-நியூயார்க்-மேயர்-தேர்தல்-டிரம்பை-எதிர்த்து-அபார-வெற்றி-பெற்ற-இளைஞர்-ஜோஹ்ரான்-மம்தானி-யார்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-நியூயார்க்-மேயர்-தேர்தல்-டிரம்பை-எதிர்த்து-அபார-வெற்றி-பெற்ற-இளைஞர்-ஜோஹ்ரான்-மம்தானி-யார்</guid>
        <description><![CDATA[ நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார்.1969-ம் ஆண்டுக்குப் பிறகு, 2 மில்லியன் வாக்குகளுக்கு மேல் பெற்ற முதல் மேயராகும் பெருமையை ஜோஹ்ரான் மம்தானி பெற்றிருக்கிறார்.அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரத்தின் மேயர் தேர்தலில், சுயேட்சை வேட்பாளர் மற்றும் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் கர்டிஸ் ஸ்லிவா ஆகியோருக்கு எதிராக ஜோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார்.ஜோஹ்ரான் மம்தானிஅமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப் இதில், ஆண்ட்ரூ கியூமோவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் ஆகியோரின் ஆதரவு பெருமளவில் இருந்தது.இந்தச் சூழ்நிலையிலேயே அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஜோஹ்ரான்.“பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான மாற்றத்தைக் கொண்டு வருவேன்” என்பதே ஜோஹ்ரான் முன்னெடுத்த முக்கிய பிரசாரம் ஆகும்.யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?
உகாண்டாவில் பிறந்த ஜோஹ்ரான் மம்தானி, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த மேயராக பொறுப்பேற்க உள்ளார்.கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில், நியூயார்க் நகரத்தின் இளம் மேயராக இவர் பதவியேற்க உள்ளார். இவரது வயது வெறும் 34.இவரது தந்தை உகாண்டாவைச் சேர்ந்த எழுத்தாளர் மஹ்மூத் மம்தானி; தாய் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் மீரா நாயர் ஆவார்கள்.ஜோஹ்ரான் மம்தானிஉலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?முக்கிய வாக்குறுதிகள் என்ன?
ஜோஹ்ரான் மம்தானி இனவேற்றுமைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அவருடைய தேர்தல் வாக்குறுதிகளாக இலவச குழந்தைகள் நலன், அரசே நடத்தும் மளிகைக் கடைகள், இலவச பேருந்து சேவை, போலீஸிடம் இருந்து உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் புதிய பாதுகாப்புத் துறை அமைத்தல் ஆகியவற்றை கூறினார்.இதற்கான நிதி ஜோஹ்ரான் மம்தானிக்கு எங்கிருந்து கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர்.ட்ரம்ப் எதிர்ப்பு
இதையெல்லாம் தாண்டி, டிரம்ப் ஜோஹ்ரான் மம்தானியை கம்யூனிஸ்ட் என்றும், தீவிர அச்சுறுத்தலாகவும் குறிப்பிட்டார்.மேலும், “ஜோஹ்ரான் மம்தானி மேயராக வெற்றி பெற்றால், நியூயார்க் நகரத்திற்கு கிடைக்க வேண்டிய ஃபெடரல் நிதியை வெகுவாக குறைப்பேன்.அவரது தலைமையின் கீழ் நியூயார்க் நகரம் வெற்றி பெறவோ, பிழைக்கவோ வாய்ப்பே இல்லை” என்று எச்சரித்திருந்தார்.ஜோஹ்ரானுக்கு அனுபவமே இல்லை என்றும் அவர் சாடியிருந்தார். டொனால்டு ட்ரம்ப்H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம்எப்போது பொறுப்பேற்பார்?
இருந்தபோதும், இப்போது சூப்பர் வெற்றியை பெற்றுள்ளார் ஜோஹ்ரான் மம்தானி. இது டிரம்ப்‌க்கு எதிராக நியூயார்க் மக்கள் எடுத்த முக்கிய முடிவாகக் கருதலாம். காரணம், டிரம்ப் வெளிப்படையாகவே நிதியை காட்டி மிரட்டினாலும், 2 மில்லியனுக்கும் மேல் வாக்களித்து சாதனை வெற்றியை ஜோஹ்ரானுக்கு வழங்கியுள்ளனர் நியூயார்க் மக்கள்.அமெரிக்காவின் மிக முக்கிய நகரமான நியூயார்க் நகரத்தில், டிரம்ப் கொள்கைகளுக்கு எதிரான ஒருவரை மேயராக மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது மிக முக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.ஜோஹ்ரான் மம்தானி வரும் ஜனவரி 1-ம் தேதி பொறுப்பேற்பார். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-05/v01b12kn/Newyork-Mayor-Zohran-Mamdani.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 10 Nov 2025 17:05:06 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US:, நியூயார்க், மேயர், தேர்தல், டிரம்பை, எதிர்த்து, அபார, வெற்றி, பெற்ற, இளைஞர், ஜோஹ்ரான், மம்தானி, யார்</media:keywords>
    </item>
    <item>
        <title>America: தப்பிய ஆய்வகக் குரங்குகள்; பிள்ளைகளைக் காக்க குரங்கை கொன்ற தாய்; சர்ச்சையின் பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/america-தப்பிய-ஆய்வகக்-குரங்குகள்-பிள்ளைகளைக்-காக்க-குரங்கை-கொன்ற-தாய்-சர்ச்சையின்-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/america-தப்பிய-ஆய்வகக்-குரங்குகள்-பிள்ளைகளைக்-காக்க-குரங்கை-கொன்ற-தாய்-சர்ச்சையின்-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், ஆய்வகத்திலிருந்து தப்பித்த குரங்கை ஒரு பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தைகளின் பாதுகாப்புக்காகவே இந்தச் செயலைச் செய்ததாக அவர் கூறியிருக்கிறார்.மிசிசிப்பியின் ஹைடெல்பெர்க் நகருக்கு அருகே வசிக்கும் ஜெசிகா பாண்ட் பெர்குசன் என்ற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது வீட்டுத் தோட்டத்தில் ஒரு குரங்கு ஓடுவதைக் கண்டார். தனது துப்பாக்கியுடன் வெளியே வந்த ஜெசிகா, குரங்கு இருப்பதைக் கண்டார். ஆய்வகத்திலிருந்து தப்பித்த குரங்குகளிடம் ஆபத்தான நோய்க்கிருமிகள் இருப்பதாக ஏற்கெனவே உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் அவர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறினார்.monkey இதுகுறித்து ஜெசிகா கூறுகையில், &quot;எந்தவொரு தாயும் தனது பிள்ளைகளைக் காக்க என்ன செய்வாரோ, அதைத்தான் நானும் செய்தேன். நான் சுட்டதும் அது அங்கேயே நின்றது. மீண்டும் சுட்டேன். அது பின்வாங்கி கீழே விழுந்தது,&quot; என்று தெரிவித்தார்.ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான ஜெசிகா அந்தக் குரங்கு வேறு ஒருவரின் குழந்தையைத் தாக்கியிருந்தால், அதைத் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு தனக்கும் இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.குரங்குகள் தப்பியது எப்படி?கடந்த வாரம் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழகத்தின் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையத்திலிருந்து 21 ரீசஸ் வகை குரங்குகளை ஏற்றிச் சென்ற ஒரு லாரி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தைத் தொடர்ந்து, மூன்று குரங்குகள் தப்பி ஓடிவிட்டன. இந்தக் குரங்குகளுக்கு ஹெபடைடிஸ் சி மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ் தொற்றுகள் இருக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.விபத்திலிருந்து தப்பித்த மூன்று குரங்குகளில் ஒன்றுதான் தற்போது ஜெசிகாவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.குரங்கு கடித்ததால் குரங்குபோல நடந்துகொண்டாரா? - சமூக ஊடகத்தில் பரவிய வீடியோ | Fact Check ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2023-10/de5c8604-ced1-4b93-84dc-c9e30888127e/GridArt_20231015_180624604.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:55:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>America:, தப்பிய, ஆய்வகக், குரங்குகள், பிள்ளைகளைக், காக்க, குரங்கை, கொன்ற, தாய், சர்ச்சையின், பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>சீனாவில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் பாறை; அறிவியல் சொல்லும் ரகசியம் இதுதான்</title>
        <link>https://dailytopnewz24.com/சீனாவில்-30-ஆண்டுகளுக்கு-ஒருமுறை-முட்டையிடும்-பாறை-அறிவியல்-சொல்லும்-ரகசியம்-இதுதான்</link>
        <guid>https://dailytopnewz24.com/சீனாவில்-30-ஆண்டுகளுக்கு-ஒருமுறை-முட்டையிடும்-பாறை-அறிவியல்-சொல்லும்-ரகசியம்-இதுதான்</guid>
        <description><![CDATA[ சீனாவின் குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாறை, சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த விசித்திரமான நிகழ்வு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மர்மமான நிகழ்வின் பின்னணியில் உள்ள அறிவியல் காரணத்தை விரிவாகக் காண்போம்.சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள &#039;சான் டா யா&#039; (Chan Da Ya﻿) என்று அழைக்கப்படும் மலைப்பாறை, எரிமலை போலவோ அல்லது வேறு எந்த இயற்கைச் சீற்றங்கள் போலவோ இல்லாமல், அமைதியான அதிசயத்தை நிகழ்த்துகிறது.The mountain that lays “eggs” every 30 yearsஅறிவியல் என்ன சொல்கிறது?புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த மலைப்பாறையை ஆய்வு செய்தபோது, சில தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். இந்த மலைப்பாறை இரண்டு விதமான பாறைகளால் ஆனதாக அறியப்பட்டுள்ளது. மென்மையான சுண்ணம்புப் பாறை மற்றும் கடினமான பாறை அடுக்குகள் கலந்து இங்கு காணப்படுவதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக காற்று மற்றும் மழையால் மென்மையான பாறை அடுக்குகள் அரிக்கப்படுவதாகவும், ஆனால் அதனுள் இருக்கும் கடினமான முட்டை வடிவிலான பாறைகள் அரிக்கப்படாமல் அப்படியே இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்மென்மையான பாறை அடுக்குகள் முழுமையாக அரிக்கப்பட்ட பிறகு உள்ளே இருக்கும் கடினமான முட்டைக் கற்கள் மெதுவாக வெளிப்பட்டு இறுதியில் பாறையிலிருந்து பிரிந்து கீழே விழுகின்றன. ஒரு கல் முழுமையாக வெளிவர சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கற்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கேம்ப்ரியன் காலத்தில் உருவானவை என சில புவியியலாளர்கள் கருதுகின்றனர்.​கலாசார முக்கியத்துவம்இந்த மலைக்கு அருகில் உள்ள குலு சாய் கிராமத்தில் வசிக்கும் &#039;ஷூய்&#039; (Shui﻿) பழங்குடியின மக்களுக்கு, இந்த முட்டைக் கற்கள் வெறும் பாறைகள் அல்ல. அவர்கள் இவற்றை அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும், தங்களைக் காக்கும் புனிதப் பொருளாகவும் கருதுகின்றனர். பல குடும்பங்கள் இந்த கற்களை தங்கள் வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர். இது அவர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படுகிறது.​​ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-04/58yb4qzb/hero-imag-2025-11-04T115635.585.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:55:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சீனாவில், ஆண்டுகளுக்கு, ஒருமுறை, முட்டையிடும், பாறை, அறிவியல், சொல்லும், ரகசியம், இதுதான்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது; அமெரிக்காவும் சோதிக்கும்&amp;quot; &amp; ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!</title>
        <link>https://dailytopnewz24.com/பாகிஸ்தான்-அணு-ஆயுதங்களை-சோதிக்கிறது-அமெரிக்காவும்-சோதிக்கும்-ட்ரம்ப்-பரபரப்பு-பேச்சு</link>
        <guid>https://dailytopnewz24.com/பாகிஸ்தான்-அணு-ஆயுதங்களை-சோதிக்கிறது-அமெரிக்காவும்-சோதிக்கும்-ட்ரம்ப்-பரபரப்பு-பேச்சு</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுவருவதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக எழுந்துள்ளது. அமெரிக்க அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைத்துள்ள அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவதற்கான சாக்காக இந்த கருத்தை அவர் கூறுவதாக விமர்சிக்கப்படுகிறது.அணு ஆயுத சோதனை சிபிஎஸ் நியூஸுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதாகவும் ஆனால் அமெரிக்கா அதிலிருந்து விலகியிருப்பதாகவும் கூறியுள்ளார். &quot;ரஷ்யாவும் சீனாவும் சோதனைகளை நடத்துகிறது. ஆனால் அவர்கள் அதுபற்றி பேச மாட்டார்கள். ஆனால் நாம் அப்படியில்லை. நாம் வெளிப்படையான சமூகம். நாம் வேறுபட்டவர்கள். நாம் வெளிப்படையாகப் பேசவில்லை என்றால் செய்தியறிக்கைகள் விடுவார்கள். ஆனால் அங்கே அப்படி எழுதுவதற்கான நிரூபர்கள் இல்லை.நாம் சோதனைகளை நடத்தப்போகிறோம். ஏனென்றால் அவர்கள் சோதனைகளை நடத்துகிறார்கள். மற்றவர்களும் நடத்துகிறார்கள். வடகொரியாவும் பாகிஸ்தானும் சோதனைகளை நடத்துகிறார்கள்.&quot; எனப் பேசியுள்ளார் ட்ரம்ப்.American president says that Pakistan is testing nuclear weapons. This part is in the unedited version put out by Trump. CBS has edited it out in the version they put out. pic.twitter.com/lMkbVZHtVN— ExtraOrdinary (@Extreo_) November 3, 2025


அணு ஆயுத சோதனையைத் தொடர்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அமெரிக்க ஆயுத அமைப்புகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்ற ட்ரம்ப், ரஷ்யாவின் மேம்பட்ட அணுசக்தி சோதனைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.அமெரிக்காவின் கடைசி அணு ஆயுத சோதனை 1992ம் ஆண்டு நடைபெற்றது. வட கொரியாவைத் தவிர வேறு எந்த நாடும் கடந்த தசாப்தகாலமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை என்றாலும் மக்களுக்கு நடப்பது குறித்து தெரியவில்லை என வாதிடுகிறார் ட்ரம்ப். பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது என ட்ரம்ப் கூறியிருப்பதைப் பொருட்படுத்தி இந்தியா கவனமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமா அல்லது அமெரிக்க ஜனாதிபதியின் இந்த பேச்சை கடந்து செல்லலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.Trump: &quot;புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்...&quot; - அமைதிக்கு அமெரிக்கா காட்டும் வழி என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-03/2ohn9k44/Trump.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:55:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பாகிஸ்தான், அணு, ஆயுதங்களை, சோதிக்கிறது, அமெரிக்காவும், சோதிக்கும், ட்ரம்ப், பரபரப்பு, பேச்சு</media:keywords>
    </item>
    <item>
        <title>சீனா செய்த தரமான சம்பவம்; குறைகிறதா தங்கம் விலை? இனி தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்கும்?</title>
        <link>https://dailytopnewz24.com/சீனா-செய்த-தரமான-சம்பவம்-குறைகிறதா-தங்கம்-விலை-இனி-தங்கம்-விலை-நிலவரம்-எப்படி-இருக்கும்</link>
        <guid>https://dailytopnewz24.com/சீனா-செய்த-தரமான-சம்பவம்-குறைகிறதா-தங்கம்-விலை-இனி-தங்கம்-விலை-நிலவரம்-எப்படி-இருக்கும்</guid>
        <description><![CDATA[ &#039;இதுவரை தங்கம் விற்பனைக்கு கிடைத்து வந்த வரிச் சலுகை இனி கிடைக்காது&#039; என்று சீன தங்க நிறுவனங்களுக்கு சீன நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. என்ன வரிச் சலுகை?
முன்பு, ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் இருந்து, தங்கம் வாங்கினால் மதிப்பு கூட்டு வரி (VAT) கட்ட வேண்டியதாக இருக்கும். பின், அதே தங்கத்தை விற்கும்போது, இந்த வரியை மீண்டும் கட்ட வேண்டியதில்லை. தற்போது இந்த வரிச் சலுகை தான் நிறுத்தப்பட்டுள்ளது. இனி ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் இருந்து தங்கம் வாங்கும்போதும் சரி, விற்கும்போதும் சரி மதிப்பு கூட்டு வரி கட்ட வேண்டும். இது கடந்த 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. வாங்கிய தங்கத்தை அப்படியே விற்றாலும் அல்லது அந்தத் தங்கத்தை நாணயம், நகை என எந்த விதமாகவும் விற்றாலும், எதுவாக இருந்தாலும் இந்த நடைமுறை பொருந்தும். சீனாவிலை ஏறும்போது தங்கம், வெள்ளி ETF வாங்கிவிட்டேன்; இப்போது குறைகிறதே, என்ன செய்வது? | Q&amp;Aஇது எப்படி சீன வர்த்தகத்தை பாதிக்கும்? 
இந்த வரிச் சலுகை ரத்தை சீன தங்க நிறுவனங்கள் எப்படியும் வாடிக்கையாளர்கள் தலையில் தான் கட்டுவார்கள். இந்த ரத்தினால் ஏற்படும் விலை உயர்வு சீன வாடிக்கையாளர் தங்கம் வாங்கும்போது பிரதிபலிக்கும். இதனால், சீனாவில் தங்கத்தின் டிமாண்ட் குறையும். மக்கள் தங்கம் வாங்குவதை குறைப்பார்கள். இதனால், தங்கம் விலையும் குறையலாம். ஏன் இந்த வரிச் சலுகை ரத்து?
சீனாவில் தங்கம் விற்கும்போது அரசிடம் இருந்து வரிச் சலுகை கிடைத்தாலும், அந்த வரியை வாடிக்கையாளர்களிடம் இருந்து சில சீன தங்க நிறுவனங்கள் தொடர்ந்து பெற்று வந்தது. ஆனால், வசூல் செய்த வரியை அந்த நிறுவனங்கள் சீன அரசிடம் கட்டவில்லை. அவர்களே வைத்துக்கொண்டார்கள். இதனால், தங்க வர்த்தகத்தில் பல வரி ஏய்ப்புகள் நடந்தன. இதை தடுக்கவே சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த வரி ஏய்ப்பை தடுப்பதன் மூலமும், வரி வசூல் செய்வதன் மூலமும் சீன அரசு தங்களது வருமானத்தை பெருக்கும். தங்களது பொருளாதாரத்தையும் மேம்படுத்தும். தங்கம்இதனால், உலக நாடுகளில் என்ன மாற்றம் நிகழும்?
உலக அளவில் சீனாவில் அதிக தங்க நுகர்வு இருந்து வருகிறது. அங்கே தங்கம் டிமாண்ட் குறையும்போது, உலகளவிலும் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், தங்கம் விலையை இந்த ஒரு விஷயம் மட்டும் நிர்ணயம் செய்துவிடாது. உலக அளவில் நடக்கும் பிற அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களும் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.இந்த வாரத்தில் ஏறியும், இறங்கியும் வந்த தங்கம் விலை; அடுத்த வாரம் எப்படி இருக்கும்?Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parametersAnalyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration) ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-03/42vfq2hh/China-Gold.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:55:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சீனா, செய்த, தரமான, சம்பவம், குறைகிறதா, தங்கம், விலை, இனி, தங்கம், விலை, நிலவரம், எப்படி, இருக்கும்</media:keywords>
    </item>
    <item>
        <title>``தைவானை தாக்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்&amp;quot; &amp; சீனாவை எச்சரித்த ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/தைவானை-தாக்கினால்-என்ன-நடக்கும்-என்பது-அவர்களுக்கே-தெரியும்-சீனாவை-எச்சரித்த-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/தைவானை-தாக்கினால்-என்ன-நடக்கும்-என்பது-அவர்களுக்கே-தெரியும்-சீனாவை-எச்சரித்த-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ 31-ம் தேதி தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தென் கொரியா சென்றிருந்தனர். அப்போது இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர். அமெரிக்க அதிபரின் சீனா பொருள்கள் மீதான வரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருளான நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா சென்ற அதிபர் ட்ரம்ப், தனியார் செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.டொனால்ட் ட்ரம்ப்அப்போது,``சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவில் உள்ள மக்களும் தைவானை தாக்கினால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அறிந்திருக்கிறார்கள்&#039; என்றார்.சீனா தைவான் மீது இராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்தால் அமெரிக்க இராணுவம் அதில் தலையிடுமா என்றக் கேள்விக்கு, ``எனது ரகசியங்களை வெளியிட முடியாது.  இது நடந்தால் அது நடக்கும் என உங்களுக்கு என்னால் தெளிவாக சொல்ல விரும்பவில்லை.நீங்கள் கேள்வி கேட்பதால் மட்டும் நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்பவன் அல்ல. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை சீனா புரிந்துகொள்கிறது.சீன அதிபர் மக்களிடம் உரையாற்றும்போது வெளிப்படையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிபராக இருக்கும்வரை நாம் எதுவும் செய்ய மாட்டோம்&#039; எனக் கூறியிருக்கிறார்.&quot; என்றார்.ஆனால் சமீபகாலமாக சீனா விரிவான இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது. கிட்டத்தட்ட தினமும் தைவானின் வான்வெளிக்கு அருகில் போர் விமானங்களை அனுப்புகிறது.சீனா Vs  தைவான் தைவான் ஜலசந்தியில் சாத்தியமான மோதல் குறித்த அச்சங்களை அதிகரித்துள்ளது என தி எபோக் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.2027 ஆம் ஆண்டுக்குள் சாத்தியமான படையெடுப்பிற்கு தயாராகுமாறு சீன இராணுவத்தை ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையும் மதிப்பீட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-03/jh3vnno9/WhatsApp-Image-2025-10-30-at-7.51.30-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:55:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தைவானை, தாக்கினால், என்ன, நடக்கும், என்பது, அவர்களுக்கே, தெரியும், சீனாவை, எச்சரித்த, ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>AI துறைகளில் கடும் போட்டி; சீனாவில் இளம் விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த மரணங்கள் &amp; அதிர்ச்சி ரிப்போர்ட்</title>
        <link>https://dailytopnewz24.com/ai-துறைகளில்-கடும்-போட்டி-சீனாவில்-இளம்-விஞ்ஞானிகளின்-அடுத்தடுத்த-மரணங்கள்-அதிர்ச்சி-ரிப்போர்ட்</link>
        <guid>https://dailytopnewz24.com/ai-துறைகளில்-கடும்-போட்டி-சீனாவில்-இளம்-விஞ்ஞானிகளின்-அடுத்தடுத்த-மரணங்கள்-அதிர்ச்சி-ரிப்போர்ட்</guid>
        <description><![CDATA[ சீனாவில் இளம் விஞ்ஞானிகளின் மரணங்களைச் சார்ந்த புதிய புள்ளிவிவரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.CSND என்ற ஆன்லைன் தளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 60 வயதுக்குட்பட்ட 76 ஆராய்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.AI கடந்த ஆண்டு முழுவதும் இந்த எண்ணிக்கை 44 ஆக இருந்தது. இந்த மரணங்கள் நோய், விபத்துகள் மற்றும் தற்கொலைகள் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்பட்டுள்ளன.இந்த பட்டியலில், நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான டோங் சிஜியா, 33 வயதில் மரணமடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.பல விஞ்ஞானிகளின் மரணத்திற்குப் பின்னால் அதிகப்படியான பணிச்சுமை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெஜியாங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியு யோங்ஃபெங் (47), மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்தார்.சட்டப்படி 183 நாட்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில், அவர் 319 நாட்கள் பணிபுரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.​பணிச்சுமை செயற்கை நுண்ணறிவு  போன்ற துறைகளில் அமெரிக்காவுடன் நிலவும் கடுமையான போட்டி, விஞ்ஞானிகளுக்கு பெரும் அழுத்தத்தை அளிப்பதாகவும் இதன் காரணமாக, பல முக்கிய விஞ்ஞானிகள் இளம் வயதிலேயே மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த மரணங்கள் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள மனித இழப்புகளை எடுத்துரைப்பதாக அந்த தரவுகள் கூறுகின்றன.வாட்டிவதைக்கும் மனஅழுத்தம்... ஆபீஸிலிருந்தபடியே விரட்டியடிக்க 10 வழிமுறைகள்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-03/ivc87rho/hero-imag-2025-11-03T114249.852.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:55:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>துறைகளில், கடும், போட்டி, சீனாவில், இளம், விஞ்ஞானிகளின், அடுத்தடுத்த, மரணங்கள், அதிர்ச்சி, ரிப்போர்ட்</media:keywords>
    </item>
    <item>
        <title>Golden Toilet: 101 கிலோ தங்கத்தில் கழிவறைக் கோப்பை; 10 மில்லியன் டாலர் செலவு &amp; எங்கே தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/golden-toilet-101-கிலோ-தங்கத்தில்-கழிவறைக்-கோப்பை-10-மில்லியன்-டாலர்-செலவு-எங்கே-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/golden-toilet-101-கிலோ-தங்கத்தில்-கழிவறைக்-கோப்பை-10-மில்லியன்-டாலர்-செலவு-எங்கே-தெரியுமா</guid>
        <description><![CDATA[ புதிய வீடுகளை கட்டுபவர்கள் இன்றைக்கு புதுப்புது வடிவங்களில் கழிவறைகளை அமைத்து வருகின்றனர். கழிவறைகளுக்காகவே பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் குடும்பங்களும் உள்ளன. இப்படிப்பட்ட ஆடம்பர கழிவறைகளை விரும்பும் குடும்பங்களுக்காக, அமெரிக்காவில் தங்கத்தில் ஒரு கழிவறை தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 101.2 கிலோ தங்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கழிவறை தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. இதை தயாரிக்க 10 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகியுள்ளது.Golden Toilet உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த கழிவறையாகக் கருதப்படும் இந்த தங்கக் கழிவறையை “அமெரிக்கா” என்ற பெயரில், இத்தாலிய கலைஞர் மொரிசியோ கட்டெலன் உருவாக்கியுள்ளார்.2019ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் ப்ளென்ஹெய்ம் அரண்மனையில் இருந்து ஒரு தங்கக் கழிவறை திருடப்பட்டது. அந்தக் கழிவறையை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால், திருடப்பட்ட கழிவறை இதுவரை மீட்கப்படவில்லை.அதேபோன்ற ஒரு தங்கக் கழிவறைதான் இப்போது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வாங்கிச் சென்று பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை — இது முழுமையாக செயல்படக்கூடிய ஒரு கழிவறையாகும். எனவே, ஏலத்தில் வாங்கிச் சென்று வீட்டு கழிவறையில் பொருத்தி பயன்படுத்தலாம்.மொரிசியோ கட்டெலன் இதற்கு முன்பு சுவரில் ஒட்டக்கூடிய வாழைப்பழத்தைப் போல ஒரு நல்லியை (art installation) உருவாக்கியிருந்தார். அது கடந்த ஆண்டு 6.2 மில்லியன் டாலருக்கு ஏலமிடப்பட்டது. இதேபோன்று, 2016ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய மண்டியிடும் அடால்ஃப் ஹிட்லர் சிற்பம் 17.2 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.இதற்கு முன்பு “அமெரிக்கா” எனப் பெயரிடப்பட்ட தங்கக் கழிவறை 2016ஆம் ஆண்டு தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இரண்டு தயாரிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று 2017ஆம் ஆண்டு ஏலத்தில் விடப்பட்டு, அதை ஒருவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வருகிறார். மற்றொன்று நியூயார்க் அருங்காட்சியகத்தின் (museum) கழிவறையில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.Golden Toilet அதனை இதுவரை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அதுவே தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. வரும் 18ஆம் தேதி ஏலம் தொடங்குகிறது. ஆரம்ப ஏலத் தொகை 10 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்கக் கழிவறையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானபோது, நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.ஒருவர், “ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்டாலும், 10 ரூபாய்க்கு வடை சாப்பிட்டாலும், இந்த தங்கக் கழிவறையில்தான் போக வேண்டும்!” என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.பெருங்குடலை அலசி நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கலாமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-11-02/018lwypo/Golden-Toilet.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:55:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Golden, Toilet:, 101, கிலோ, தங்கத்தில், கழிவறைக், கோப்பை, மில்லியன், டாலர், செலவு, எங்கே, தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>JD Vance: ``எனக்கு அது ஒரு பிரச்னை இல்லை; ஆனால்&amp;apos;&amp;apos; &amp; இந்து மனைவி உஷா குறித்து அமெரிக்க துணை அதிபர்</title>
        <link>https://dailytopnewz24.com/jd-vance-எனக்கு-அது-ஒரு-பிரச்னை-இல்லை-ஆனால்-இந்து-மனைவி-உஷா-குறித்து-அமெரிக்க-துணை-அதிபர்</link>
        <guid>https://dailytopnewz24.com/jd-vance-எனக்கு-அது-ஒரு-பிரச்னை-இல்லை-ஆனால்-இந்து-மனைவி-உஷா-குறித்து-அமெரிக்க-துணை-அதிபர்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), தனது இந்து மனைவி உஷா ஒருநாளில் கிறிஸ்துவராக மாறுவார் என்று நம்புவதாகவும், தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக வளர்க்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.உஷா, தன்னிடம் மதம் மாறும் எண்ணம் இல்லை எனப் பலமுறை கூறியுள்ள நிலையில், வான்ஸின் கூற்று மிகவும் போலியானது என பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.Usha Vanceடர்னிங் பாயிண்ட் அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய வான்ஸ், &quot;ஆனால் அவள் கிறிஸ்துவராக மாறவில்லை என்றால், கடவுள் எல்லோருக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொல்கிறார் என அர்த்தம்; அதனால் எனக்கு அது ஒரு பிரச்னையாக இருக்காது,&quot; என்றும் கூறியிருந்தார். ஆனாலும், இணையத்தில் பலரும் வான்ஸின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.உஷா வான்ஸ் சொல்வது என்ன?ஜே.டி. வான்ஸ் மற்றும் உஷாவுக்கு இவான், விவேக் மற்றும் மிராபெல் என மூன்று குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன் குழந்தைகளின் இறைநம்பிக்கை குறித்து பழமைவாத பிரசாரகர் மேகன் மெக்கெய்னின் நிகழ்ச்சியில் பேசிய உஷா, &quot;நாங்கள் குழந்தைகளைக் கத்தோலிக்க பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்தோம். அவர்களுக்கு இரண்டு தேர்வுகளையும் வழங்குவோம், சரியா? அவர்கள் கத்தோலிக்க முறைப்படி ஞானஸ்நானம் பெற விரும்புகிறார்களா என்பதைத் தேர்ந்தெடுக்கட்டும்&quot; எனப் பேசியிருந்தார்.Vance Family in Indiaமேலும் தனது கணவரின் நம்பிக்கையைப் பற்றிப் பேசுகையில், &quot;நான் ஜே.டியை சந்திக்கும்போது அவர் கத்தோலிக்கராக இல்லை. எங்கள் முதல் குழந்தை பிறந்தபிறகே அவர் மாறினார். அப்போது எங்களுக்குள் நிறைய விவாதங்கள் இருந்தன. ஏனெனில் கத்தோலிக்கராக மாறும்போது, குழந்தைகளை அந்த வழியில் வளர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. நான் கத்தோலிக்கராக இல்லாதபோது, அவர் அதை எப்படி செய்வது என்பதில் பல உரையாடல்கள் நடந்தது. ஆனால் எனக்கு மதம் மாறுவதுபோன்ற சிந்தனையே இல்லை,&quot; எனப் பேசியுள்ளார்.அத்துடன் உஷா, தான் கத்தோலிக்கர் அல்ல என்பது குழந்தைகளுக்குத் தெரியும் என்றும், இந்து பாரம்பரியத்தைப் புரிந்துகொள்ளும் புத்தகங்களை அவர்களுக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் இந்தியா வந்தபோது, உஷா மற்றும் குழந்தைகளுடன் சில ஆன்மிகத் தலங்களுக்கும் சென்றிருந்தார். உஷா மற்றும் வான்ஸ் திருமணத்தில் இந்து சமயச் சடங்குகளும் பின்பற்றப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.ஜே.டி. வான்ஸ் - உஷா சிலுக்குரி வான்ஸ்வான்ஸ் மற்றும் உஷாவின் மாறுபட்ட நம்பிக்கையைக் கொண்ட திருமணம் பேச்சுப் பொருளாவது இது முதன்முறையல்ல.2016ம் ஆண்டு, உஷாவின் துல்லியமும் திறமையும் தான் தன்னை கத்தோலிக்கராக மாறச் செய்தது என வான்ஸ் குறிப்பிட்டிருந்தார். அப்போதும் அவர்மீது விமர்சனங்கள் எழுந்தன, ஏனெனில் அவர் உஷாவை “இந்துவாக” அல்லாமல் “agnostic” (அக்னாஸ்டிக் - கடவுள் உள்ளாரா இல்லையா என்பதில் உறுதியற்றவர்) எனக் குறிப்பிட்டிருந்தார்.மறுபுறம், தன்னை இந்துவாகக் கருதும் உஷா, தனது பெற்றோரின் இந்து மத நம்பிக்கையே தன்னை நல்ல நபராக உருவாக்கியதாக நம்புகிறார். மேலும் ஜே.டியின் ஆன்மிகத் தேடலுக்குத் தானும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.Trump: நியூயார்க் டைம்ஸுக்கு எதிராக அவதூறு வழக்கு; ரூ.1.3 லட்சம் கோடி இழப்பீடு கேட்கும் ட்ரம்ப்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-31/4gg07b1w/Screenshot-2025-10-31-at-9.29.39-PM.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 04 Nov 2025 14:55:16 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Vance:, எனக்கு, அது, ஒரு, பிரச்னை, இல்லை, ஆனால், இந்து, மனைவி, உஷா, குறித்து, அமெரிக்க, துணை, அதிபர்</media:keywords>
    </item>
    <item>
        <title>கொள்ளையடிக்க சென்ற ஹோட்டலில் உல்லாசம்; சிசிடிவி கேமராவில் சிக்கிய காதல் ஜோடி &amp; வீடியோவால் அதிர்ச்சி</title>
        <link>https://dailytopnewz24.com/கொள்ளையடிக்க-சென்ற-ஹோட்டலில்-உல்லாசம்-சிசிடிவி-கேமராவில்-சிக்கிய-காதல்-ஜோடி-வீடியோவால்-அதிர்ச்சி</link>
        <guid>https://dailytopnewz24.com/கொள்ளையடிக்க-சென்ற-ஹோட்டலில்-உல்லாசம்-சிசிடிவி-கேமராவில்-சிக்கிய-காதல்-ஜோடி-வீடியோவால்-அதிர்ச்சி</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் நள்ளிரவில் திருடச் சென்ற ஜோடி, உணவகத்திற்குள் நுழைந்ததும் பாலியல் செயலில் ஈடுபட்டு பின்னர் கொள்ளையடித்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர்களின் அனைத்து நடத்தைகளும் அங்கு பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.சிசிடிவி கேமராவில் சிக்கிய காதல் ஜோடிகடந்த சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள ‘மான் செரி’ (Mon Cheri) என்ற பிரபலமான உணவகத்திற்குள் நுழைந்துள்ளனர்.திருடுவதற்காக நுழைந்த இவர்கள் அங்கு முதலில் பாலியல் செயலில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னரே அவர்கள் திருட்டு வேலையை நடத்தி இருக்கின்றனர்.சிசிடிவி கேமராவில் சிக்கிய காதல் ஜோடிசுமார்$450 டாலர் (இந்திய மதிப்பில் 39,000 ரூபாய்), ஊழியர்கள் பயன்படுத்தும் ஐ போன், மதுபான பாட்டில் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். திருடுவதற்காக அந்த உணவகத்தின் கதவுகளையும் அவர்கள் சேதப்படுத்தி இருக்கின்றனர்.இந்த வினோத திருட்டு சம்பவம் குறித்து உணவகத்தின் உரிமையாளர் லெக்ஸி கலிஸ்கன் கூறுகையில்,&quot;இது மிகவும் விசித்திரமான மற்றும் அருவருப்பான செயல். எங்களின் உணவகம் காதல் மற்றும் கொண்டாட்டங்களுக்கு பிரபலமானது. ஒருவேளை எங்கும் ரோஜாப்பூக்களாக இருந்ததால், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளில் பதிவான ஆதாரங்களைக் கொண்டு இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.ரீல்ஸ் பார்த்து ஆபத்தை உணராமல் அணைகளில் குவிந்த மக்கள்! -துரித நடவடிக்கை எடுத்த  புதுச்சேரி ஆட்சியர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/1cr8bjuu/Brown_Simple_Adventure_YouTube_Banner_1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>கொள்ளையடிக்க, சென்ற, ஹோட்டலில், உல்லாசம், சிசிடிவி, கேமராவில், சிக்கிய, காதல், ஜோடி, வீடியோவால், அதிர்ச்சி</media:keywords>
    </item>
    <item>
        <title>உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/உலக-நாடுகள்-மீது-ட்ரம்ப்-போட்ட-வரிகள்-அள்ளி-தந்த-வருமானம்-எவ்வளவு-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/உலக-நாடுகள்-மீது-ட்ரம்ப்-போட்ட-வரிகள்-அள்ளி-தந்த-வருமானம்-எவ்வளவு-தெரியுமா</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வரிகளை விதித்து தள்ளியிருக்கிறார். இந்த வரிகள் அமெரிக்காவிற்கு அதிக பணத்தைக் கொண்டு வரும். இதனால், அமெரிக்காவின் கடன்களை வெகுவாக குறைக்கலாம். அமெரிக்க மக்களுக்கு பெரிய நன்மை பயக்கும் என்று ட்ரம்ப் கூறிவருகிறார். இப்படி ட்ரம்ப் விதித்த வரிகள் அமெரிக்காவிற்கு எவ்வளவு பணத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதற்கான தரவுகள் வெளியாகி உள்ளன. ஏற்றுமதி2023-24 நிதியாண்டில், அமெரிக்காவின் சுங்க வரித் துறையின் வருமானம் 77 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த நிதியாண்டில் அதாவது 2024-25 நிதியாண்டில், அமெரிக்காவின் சுங்க வரித் துறையின் வருமானம் 194.86 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட, 156 சதவிகிதம் அதிகம் ஆகும். கடந்த நிதியாண்டில், அமெரிக்காவின் ஒட்டுமொத்த வருமானத்தின் சுங்க வரிகளின் பங்கு என்பது 1.57 சதவிகிதமாக இருந்தது. அது இந்த நிதியாண்டில் 3.72 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை நிதியாண்டு என்பது அக்டோபர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஆகும். முதல்முறையாக சந்தித்துகொள்ளும் ட்ரம்ப், ஜின்பிங்: ஏன் இது முக்கியம்? இருவரின் எதிர்பார்ப்புகள் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-21/70s1w1t2/1859786-aa-3409096.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உலக, நாடுகள், மீது, ட்ரம்ப், போட்ட, வரிகள், அள்ளி, தந்த, வருமானம், எவ்வளவு, தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>முதல்முறையாக சந்தித்துகொள்ளும் ட்ரம்ப், ஜின்பிங்: ஏன் இது முக்கியம்? இருவரின் எதிர்பார்ப்புகள் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/முதல்முறையாக-சந்தித்துகொள்ளும்-ட்ரம்ப்-ஜின்பிங்-ஏன்-இது-முக்கியம்-இருவரின்-எதிர்பார்ப்புகள்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/முதல்முறையாக-சந்தித்துகொள்ளும்-ட்ரம்ப்-ஜின்பிங்-ஏன்-இது-முக்கியம்-இருவரின்-எதிர்பார்ப்புகள்-என்ன</guid>
        <description><![CDATA[ தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தற்போது நடந்து வருகிறது. தான் முதல்முறையாக அமெரிக்க அதிபராக இருந்தபோது ஜின்பிங்கை சந்தித்த ட்ரம்ப், இப்போது தான் மீண்டும் அவரை சந்திக்கிறார். நாளை தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள சென்ற இடத்தில் தான் ட்ரம்ப், ஜின்பிங் சந்திப்பு நடந்து வருகிறது. இந்த இருவரின் சந்திப்பு அமெரிக்கா, சீனாவிற்கு மட்டும் முக்கியமானது அல்ல, உலக நாடுகள் அனைத்துக்குமே ஏதோ ஒரு விதத்தில் மிக முக்கியமானது. ட்ரம்ப் - ஜி ஜின்பிங்ஏன் முக்கியம்?
சமீபத்தில் சீனா தான் ஏற்றுமதி செய்யும் சில அரிய கனிமங்களின் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. &#039;இது உலகளாவிய வர்த்தகத்தைப் பாதிக்கும்&#039; என்று சீனப் பொருள்களின் மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்தார் ட்ரம்ப். இதை சீனா கடுமையாக எதிர்த்தது. இந்த நிலையில் தான், இந்தச் சந்திப்பு நடந்து வருகிறது. எதிர்பார்ப்புகள்
இந்தச் சந்திப்பில் ட்ரம்பின் எதிர்பார்ப்பு, அமெரிக்காவின் சோயா பீன்ஸை சீனா வாங்க வேண்டும் என்பதாக இருக்கிறது. ஜின்பிங் சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். முக்கியமாக, இருவருமே வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னோக்கி உள்ளனர். இவை அனைத்தும் நிறைவேறுமா என்று இன்னும் சில மணிநேரத்தில் தெரிந்துவிடும்.மீண்டும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - ட்ரம்ப் பதில் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/uk62s13o/WhatsApp-Image-2025-10-30-at-7.51.21-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முதல்முறையாக, சந்தித்துகொள்ளும், ட்ரம்ப், ஜின்பிங்:, ஏன், இது, முக்கியம், இருவரின், எதிர்பார்ப்புகள், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! &amp; மாறும் கூட்டணி கணக்குகள்!</title>
        <link>https://dailytopnewz24.com/ஆப்கானுடன்-கைகுலுக்கும்-இந்தியா-பாகிஸ்தானுடன்-குலாவும்-அமெரிக்கா-மாறும்-கூட்டணி-கணக்குகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஆப்கானுடன்-கைகுலுக்கும்-இந்தியா-பாகிஸ்தானுடன்-குலாவும்-அமெரிக்கா-மாறும்-கூட்டணி-கணக்குகள்</guid>
        <description><![CDATA[ (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் பிபிசி உலகசேவை ஆசிரியர், லண்டன்கட்டுரையாளர் : மணிவண்ணன் திருமலைதெற்காசியப் பிராந்திய அரசியல் களத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக செய்தித் தலைப்புகளில் அடிபட்டவை  இரண்டு விஷயங்கள். ஒன்று , இந்தியாவுடன் இறக்குமதி வரி விவகாரம் தொடங்கி  விசா பிரச்சனைகள் வரை கடுமை காட்டி, கடந்த சுமார் 30 ஆண்டுகளாக நெருக்கமான இந்திய அமெரிக்க உறவுகளில் ஒரு பெரும் விரிசலை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,   மேலும் இந்தியாவுக்கு எரிச்சலையூட்டும் விதமாக,  பாகிஸ்தானுடன் காட்டத் தொடங்கியிருக்கும் திடீர் நெருக்கம். இரண்டாவது,  அதே போல,  கடந்த சுமார் 25 வருடங்களாக இந்தியாவுக்குத் தலைவலியாக இருந்த ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள்,  இந்தியாவுடன் சுமுக உறவுக்குத் தயார் என்று கோடி காட்டியிருப்பதும்,  இந்தியாவும் அதற்கு சற்று சாதகமாக சமிக்ஞை செய்திருப்பதும்தான். மோடி, ட்ரம்ப்...ஆப்கானிஸ்தான் - இந்திய உறவுகளில் ஏற்படத் தொடங்கி இருப்பது போலத் தெரியும் மாற்றங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டக்கியின் விஜயத்திலிருந்து  வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், இதற்கான அடித்தளம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவால் போடப்பட்டிருக்கிறது.  ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, இந்தியாக்கு அந்நாட்டுடன் நெருங்கிய கலாசார, வரலாற்றுத் தொடர்புகள் இருந்திருக்கின்றன.  ஆனால் , இஸ்லாமியக் கடும்போக்கு தாலிபான்கள் அரசு 90களின் மத்தியில் அங்கு அமைந்ததிலிருந்து உறவுகள் பாதிக்கப்பட்டன.  1999ல்  இந்திய பயணிகள் விமானத்தை பாகிஸ்தானிலிருந்து இயங்கிய தீவிரவாதிகள் கடத்தி, ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்தில் பிடித்து வைத்து,  பயணிகளை விடுவிக்க,  இந்தியச் சிறைகளில் இருந்த பாகிஸ்தானியத் தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கோரி,  அதற்கு அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான அரசு இசைந்ததும்  இந்தியாவால் மறக்கமுடியாத வரலாறு.கள யதார்த்தங்களும், இந்திய ஆப்கான் உறவுகளும்!இதன் பின்னர்,  2001 செப்டம்பர் 11  இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து, அமெரிக்காவின் சீற்றத்துக்கு ஆளான தாலிபான் அரசு,  அமெரிக்க படையெடுப்பால் அகற்றப்பட்டு,  மேற்குலகின் ஆதரவு பெற்ற ஹமித் கார்சாய் அரசு ஆப்கானிஸ்தானில் உருவான பின்னர், இந்திய-ஆப்கானிஸ்தான் உறவுகள் மேம்படத்  தொடங்கின. ஆப்கானிஸ்தானுடன் மீண்டும் தூதரக உறவுகளை உருவாக்கிய இந்தியா,  போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதர புத்தாக்கத்துக்கும் பல கோடிக்கணக்கான டாலர்கள் நிதி உதவி செய்தது.  இந்த இந்திய உதவிக்குப் பின்னால், ஒரு புவிசார் அரசியல் யதார்த்தக் கணக்கும் இருந்தது.  இந்தியாவின் பரம வைரியான பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தானை தனது, “கேந்திர அரசியல் கொல்லைப்புறமாக”வே பார்த்து வந்திருக்கிறது.  தனது கிழக்கு எல்லையில் இந்தியாவின் அரசியல்-ராணுவ நகர்வுகளுக்கு ஈடுகொடுக்கவும்,  சமன் செய்யவும், தன் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் ஆப்கானிஸ்தானை அது பயன்படுத்திக்கொண்டிருந்தது. அதிலும் தாலிபானுடன் பாகிஸ்தானின் நட்பு அதற்கு ஒரு “நல்வாய்ப்பாக” அமைந்திருந்தது. இந்தியா - தாலிபன் அமைச்சர்  இதைக் கணக்கில் கொண்டுதான், தாலிபான் அரசு 2001ல் அமெரிக்கப் படையெடுப்பால் வீழ்ந்த போது, இந்தியா , மேற்குலக ஆதரவுடன் அமைந்த புதிய ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவும், ராஜிய அங்கீகாரமும் தந்து,  தாலிபான் காலத்தில் துண்டிக்கப்பட்டிருந்த தூதரக உறவுகளை புதுப்பித்தது. ஆனால் அமெரிக்காவின் ஆப்கன் ஈடுபாடு தோல்வியில் முடிந்து,  2021 ஆகஸ்டில்  அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி,  காபூல் மீண்டும் தாலிபான் வசம் போன நிலையில்,  இந்தியா அவசர அவசரமாக தனது காபூல் தூதரகத்தையும்,  ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் தொடங்கப்பட்டிருந்த  நான்கு  துணைத் தூதரகங்களையும் மூடி,  தன் ராஜிய அலுவலகர்களையும்,  மற்ற இந்தியப் பிரஜைகளையும் ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொண்டது.  இந்தியாவில் இயங்கி வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம்,  பழைய அரசின் பிரதிநிதிகளைக் கொண்டே சில மாதங்கள் இயங்கி பின்னர் அவை செயலிழந்து போயின. பாகிஸ்தானின் கணக்குஇதற்கிடையே,  தாலிபான் அரசு மீண்டும் அமைந்ததால் பாகிஸ்தான் அடைந்த பெரு மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்கவில்லை.  இதற்குக் காரணம், பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் டெஹ்ரிக் இ தாலிபான் என்ற பாகிஸ்தானத் தாலிபான் அமைப்பினர் சமீப சில மாதங்களாக நடத்திவரும் தாக்குதல்கள்தான் என்று கூறப்படுகிறது.  பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் அதற்கு அப்பால் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நடத்தப்பட்டவை என்பதால், பாகிஸ்தான் இத்தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஆப்கான் தாலிபான் அரசு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டியது. இதை தாலிபான் அரசு மறுக்க, இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்து, உறவுகள் மோசமடைந்தன.   பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைஇந்தப் பின்னணியில்தான் ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவி வந்த முறுகல் நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  `எதிரியின் எதிரி நண்பன்&#039; என்ற கொள்கையைப் பின்பற்றி இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் பழையை விரோதங்களை மறந்து புதிதாக உறவுக்குக் கை கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. 2021ல் காபூலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபான் அரசை ரஷ்யா தவிர வேறெந்த பெரிய நாடுகளும் உலக அளவில் அங்கீகரிக்காத நிலையில்,  இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் தனக்கு சர்வதேச அளவில் இருக்கும்  “தீண்டத்தகாத” அரசு என்ற நிலையை மாற்ற உதவும் என்று தாலிபான் அரசு நம்புகிறது. தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் முட்டக்கி ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் தடைகள் விதிக்கப்பட்டவர். அவர் இந்தியா வருவதற்கு,  சிறப்பு சலுகையாக,  ஐநா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-29/g262rbci/WhatsApp-Image-2025-10-29-at-12.37.30.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஆப்கானுடன், கைகுலுக்கும், இந்தியா, பாகிஸ்தானுடன், குலாவும், அமெரிக்கா, மாறும், கூட்டணி, கணக்குகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>`இப்படியும் கொண்டாடலாம்’ &amp; அன்று ராஜாவை தூக்கி எறிந்த வீரரை வென்ற குகேஷ்; சைலன்ட் ரியாக்‌ஷன் வைரல்</title>
        <link>https://dailytopnewz24.com/இப்படியும்-கொண்டாடலாம்-அன்று-ராஜாவை-தூக்கி-எறிந்த-வீரரை-வென்ற-குகேஷ்-சைலன்ட்-ரியாக்ஷன்-வைரல்</link>
        <guid>https://dailytopnewz24.com/இப்படியும்-கொண்டாடலாம்-அன்று-ராஜாவை-தூக்கி-எறிந்த-வீரரை-வென்ற-குகேஷ்-சைலன்ட்-ரியாக்ஷன்-வைரல்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் ஷோ டவுன் 2025 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் உலக செஸ் சாம்பியன் குகேஷும் அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுராவும் மோதினர்.இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் டெக்சாஸில் High-Voltage Chess Spectacle எனும் பிரமாண்ட செஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் இதே போட்டியாளர்கள் மோதினர். இறுதி ஒரு நிமிட புல்லட் சுற்றில் 5-0 என்ற அளவில் இந்திய வீரர் குகேஷை ஹிகாரு நகாமுரா வீழ்த்தினார். ஒவ்வொரு போட்டி முடிந்ததும், வென்றவர் தோற்றவரிடம் கை குலுக்குவதோ, அல்லது தலையசைத்து விடைபெறுவது என்ற வழக்கம் இருக்கிறது.Remember this arrogant Hikaru Nakamura? He had thrown Gukesh’s king off board after a win. Today, Gukesh not only threw Hikaru’s Crown off his head by beating World No.2 in clutch chess, but also his arrogance with grace.You&#039;re a real champ, Gukesh  pic.twitter.com/CIVGb7GQrJ— BhikuMhatre (@MumbaichaDon) October 28, 2025


ஆனால், ஹிகாரு நகாமுரா வெற்றிப் பெற்றதும் குகேஷின் கிங் காயினைத் தூக்கி பார்வையாளர்களிடம் வீசினார். அவரின் இந்த செயல் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. பலரும் இது குகேஷுக்கு நடந்த அவமரியாதை என்றும், சிலர் செஸ் போட்டிக்கே நடந்த மரியாதைக் குறைவு என்றும் விமர்சித்தனர். அதே நேரம் அந்தப் போட்டியே பார்வையாளர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதால், ஹிகாரு நகாமுராவின் செயலுக்கு ஆதரவும் இருந்தது.இந்த நிலையில்தான் அதே போட்டியாளர்கள் மீண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இந்தப் போட்டியில் இந்திய வீரர் குகேஷ் 2-வது சுற்றின், ஆட்டம் 1-ல் ஹிகாரு நகாமுராவை வீழ்த்தினார். நகாமுராவை வீழ்த்திய பிறகு குகேஷ் அமைதியாக, காய்களை அடுகிக்கி வைத்து வழக்கம் போல் மிக சாதரணமாக நடந்து கொண்ட விதம் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் இதயங்களை வென்றது. &#039;நம்மை அவமானப்படுத்தியவரை இப்படியும் வெற்றிக்கொள்ள வேண்டும்&#039; என பலரும் குகேஷின் செயல்பாட்டை, இயல்பைப் பாராட்டிவருகின்றனர்.Gukesh: குரோஷியா செஸ் தொடரில் சாம்பியன் வென்றார் குகேஷ்; மூன்றாம் இடம் பிடித்த கார்ல்சன்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-04/f5e54949-4508-4c03-82f3-f787337a5619/gukesh_is_the_youngest_chess_player_and_the_only_minor_on_v0_W3ZP99fb1MWyUPRyEA7Qg6qP8Gn92_kz6_dIQk1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இப்படியும், கொண்டாடலாம்’, அன்று, ராஜாவை, தூக்கி, எறிந்த, வீரரை, வென்ற, குகேஷ், சைலன்ட், ரியாக்‌ஷன், வைரல்</media:keywords>
    </item>
    <item>
        <title>US &amp; China: தனியும் பதற்றம் &amp; உயர்ந்த Metal பங்குகள் | IPS FInance &amp; 346 | NSE | BSE</title>
        <link>https://dailytopnewz24.com/us-china-தனியும்-பதற்றம்-உயர்ந்த-metal-பங்குகள்-ips-finance-346-nse-bse</link>
        <guid>https://dailytopnewz24.com/us-china-தனியும்-பதற்றம்-உயர்ந்த-metal-பங்குகள்-ips-finance-346-nse-bse</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-28/gu26ov8y/WhatsApp-Image-2025-10-28-at-6.40.03-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>China:, தனியும், பதற்றம், உயர்ந்த, Metal, பங்குகள், IPS, FInance, 346, NSE, BSE</media:keywords>
    </item>
    <item>
        <title>விண்வெளியில் தீக்குச்சியைப் பற்ற வைத்தால் என்னவாகும்? &amp; சீன வீரர்கள் நடத்திய திக் திக் சோதனை!</title>
        <link>https://dailytopnewz24.com/விண்வெளியில்-தீக்குச்சியைப்-பற்ற-வைத்தால்-என்னவாகும்-சீன-வீரர்கள்-நடத்திய-திக்-திக்-சோதனை</link>
        <guid>https://dailytopnewz24.com/விண்வெளியில்-தீக்குச்சியைப்-பற்ற-வைத்தால்-என்னவாகும்-சீன-வீரர்கள்-நடத்திய-திக்-திக்-சோதனை</guid>
        <description><![CDATA[ சீன விண்வெளி வீரர்கள், தங்கள் விண்வெளி நிலையத்தில் தீக்குச்சியைப் பற்ற வைத்து சோதனை நடத்திருக்கின்றனர்.  இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.சீனாவின் ‘தியாங்கோங்’ (Tiangong) விண்வெளி நிலையத்தில் பணியாற்றி வரும் விண்வெளி வீரர்களான குய் ஹைச்சாவோ மற்றும் ஜு யாங்ஜு அங்கு இருக்கும் பள்ளி மாணவர்களுடன்  நேரலையில் கலந்துரையாடியிருக்கின்றனர். அப்போது, புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் ஒரு நெருப்புச் சுடர் எப்படி எரியும் என்பதை விளக்க, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்ற முயன்றனர்.அவர்கள் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்தபோது, அந்த நெருப்புச் சுடர் நாம் பூமியில் பார்ப்பது போல் இல்லாமல் ஒரு கோள வடிவில் நிலையாக, நீல நிறத்தில் எரிவதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். spaceவிண்வெளியில் தீயின் வடிவம் ஏன் மாறுகிறது?பூமியில் நாம் ஒரு தீயை ஏற்றும்போது வெப்பக் காற்று, அடர்த்தி குறைவாக இருப்பதால், மேல்நோக்கி எழும்புகிறது. இந்த நிகழ்வான ‘வெப்பச்சலனம்’, கீழே இருந்து குளிர்ச்சியான, ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை இழுத்து, நெருப்புச் சுடருக்கு ஒரு கண்ணீர்த் துளி போன்ற வடிவத்தைக் கொடுக்கிறது.விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத வெப்பச்சலனம் என்ற நிகழ்வே நடைபெறாது. சூடான வாயுக்கள் மேல்நோக்கி எழும்பாது. இதனால் நெருப்புச் சுடர், தன்னைச் சுற்றி இருக்கும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி, அனைத்துத் திசைகளிலும் சமமாகப் பரவி, ஒரு கோள வடிவத்தை அடைகிறது.சோதனைக்கான காரணம் என்ன?இந்த எளிமையான சோதனை, விண்வெளியில் வெப்பம், காற்று, மற்றும் எரிதல் ஆகியவை எவ்வாறு வித்தியாசமாகச் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.சீனாவின் தியாங்கோங் நிலையத்தில் நடத்தப்பட்ட இந்த நேரடியான சோதனை, விண்வெளி அறிவியலின் ஒரு சிக்கலான தத்துவத்தை எளிய முறையில் விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-27/0u0gup8f/hero-imag-2025-10-27T133056.061.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>விண்வெளியில், தீக்குச்சியைப், பற்ற, வைத்தால், என்னவாகும், சீன, வீரர்கள், நடத்திய, திக், திக், சோதனை</media:keywords>
    </item>
    <item>
        <title>``காலக்கெடு, தலையில் துப்பாக்கியுடன் ஒப்பந்தங்கள் செய்ய மாட்டோம்&amp;apos;&amp;apos; &amp; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்</title>
        <link>https://dailytopnewz24.com/காலக்கெடு-தலையில்-துப்பாக்கியுடன்-ஒப்பந்தங்கள்-செய்ய-மாட்டோம்-மத்திய-அமைச்சர்-பியூஷ்-கோயல்</link>
        <guid>https://dailytopnewz24.com/காலக்கெடு-தலையில்-துப்பாக்கியுடன்-ஒப்பந்தங்கள்-செய்ய-மாட்டோம்-மத்திய-அமைச்சர்-பியூஷ்-கோயல்</guid>
        <description><![CDATA[ இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்த முயன்றுவரும் சூழலில், நம் நாடு அவசர அவசரமாகவோ, அழுத்தத்தின் கீழோ ஒப்பந்தங்களில் கையெழுத்திடாது எனப் பேசியுள்ளார் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.ஐரோப்பியாவில் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தைஜெர்மனியில் பெர்லின் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட அவர், &quot;நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தீவிர உரையாடலில் ஈடுபட்டுள்ளோம். அமெரிக்காவுடனும் பேசி வருகிறோம். ஆனால் நாங்கள் அவசரமாக ஒப்பந்தங்களைச் செய்வதில்லை. காலக்கெடுவோடு அல்லது எங்கள் தலையில் துப்பாக்கியுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளமாட்டோம்.இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைக்க முன்வந்தாலும் விரைவாக ஒப்பந்தத்தை முடிக்க நாட்டின் நலன்களை விட்டுக்கொடுக்காது.வர்த்தக ஒப்பந்தங்களை குறுகிய கால நன்மைகளை விட நீண்ட கால கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.மேலும் இந்தியாவின் ஏற்றுமதியாளர்களுக்கு நியாயமான நெறிமுறைகளை உறுதிசெய்யவும் அதீத கட்டணத்தின் தாக்கத்தைக் குறைக்கவும் புதிய சந்தைகளையும் இந்தியா ஆராய்ந்து வருகிறது. வெளிப்புற அழுத்தங்களால் அல்லாமல் நாட்டின் நலன்களையும் மூலோபாயத்தையும் கருத்தில்கொண்டே முடிவு எடுக்கப்படும்.இந்திய - ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தைதேசத்தின் நலனைத் தவிர வேறு எதன் அடிப்படையிலும் இந்தியா அதன் நண்பர்களைத் தேர்வு செய்ததில்லை&quot; என்றார்.மேலும் இந்தியா பரஸ்பர மரியாதையுடனேயே நட்பைப் பேணும் என்றும், யாரிடம் வர்த்தகம் செய்யலாம், செய்யக் கூடாது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ளாது என்று அமெரிக்காவைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தருவதை ஒட்டி அவரது கருத்துக்கள் அமைந்தன.சமீபகாலமாக இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துள்ளது. இதனால் மோடி அரசாங்கம் டொனால்ட் ட்ரம்புக்கு அஞ்சி நாட்டின் நலன்களை விட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் இழுபறி; பியூஷ் கோயல் பயணம் வெற்றியைத் தருமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-24/g3cme5ql/Piyush-Goyal-.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காலக்கெடு, தலையில், துப்பாக்கியுடன், ஒப்பந்தங்கள், செய்ய, மாட்டோம், மத்திய, அமைச்சர், பியூஷ், கோயல்</media:keywords>
    </item>
    <item>
        <title>`உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ &amp; Silicon Valley&amp;யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா?</title>
        <link>https://dailytopnewz24.com/உடலுறவும்-உளவும்-தற்செயல்போல்-தான்-இருக்கும்-ஆனால்-silicon-valley-யை-பதறவைக்கும்-சீனா-ரஷ்யா</link>
        <guid>https://dailytopnewz24.com/உடலுறவும்-உளவும்-தற்செயல்போல்-தான்-இருக்கும்-ஆனால்-silicon-valley-யை-பதறவைக்கும்-சீனா-ரஷ்யா</guid>
        <description><![CDATA[ &#039;அடுத்த தலைமுறை போர்கள் துப்பாக்கிகளாலோ, ஏவுகணைகளாலோ இருக்காது. சைபர் தாக்குதல்களும், பயோ-வெப்பன்களும் பயன்படுத்தப்படும்&#039; எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக காதலையும், செக்ஸையும் உளவு பார்க்கும் போர் ஆயுதமாக பயன்படுத்துவதாகக் எச்சரித்துள்ளது அமெரிக்க உளவுத்துறை.சிலிக்கான் பள்ளத்தாக்கில் பணியாற்றும் அந்த வல்லுநர், ஒரு கூட்டத்தில் அப்பெண்ணை சந்திக்கிறார். அப்பெண் புத்திசாலியாகவும், வசீகரமாகவும், அவனது வேலையில் உண்மையான ஆர்வமுள்ளவளாகவும் தெரிகிறார். அவர்களுக்குள் தொடர்பு ஏற்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் தொழில்நுட்ப எல்லையிலிருந்து ரகசியங்களை எடுத்து அனுப்ப, வடிவமைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட உளவுத்துறை நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்பெண் இருப்பதை அந்த வல்லுநர் உணர்கிறார். இதுதான் இன்றைய சிலிக்கான் பள்ளத்தாக்கில் உளவு பார்ப்பதன் யதார்த்தம் என்கிறார்கள். இவை அனைத்தும் தற்செயலாகவே நடப்பது போல் நடக்கும். ஆனால் எல்லாம், நன்கு திட்டமிடப்பட்டது என்பது தான் அதிர்ச்சியான தகவல். குறிப்பாக சிலிக்கான் பள்ளத்தாக்குப் போன்ற தொழில்நுட்ப மையங்களில் உயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், வியாபார ரகசியங்கள், அரசின் ரகசியங்களை கண்டறிய அழகிய பெண்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளனர். காதல், பழக்கவழக்கத்துடன் தொடங்கும் இதனை சில நேரங்களில் நீண்டகாலத் தொடர்பில் இருப்பதற்காகக் குழந்தை பெற்றுக்கொள்வதுவரை கொண்டுசெல்லலாம் என்கின்றனர். Californiaஇந்த உளவாளிகள் பெரு நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட்-அப்கள் வரை பணியாற்றும் எஞ்சினியர்களைக் குறிவைக்கின்றனர். உடலுறவை அதன்பாலான நம்பிக்கையைப் பயன்படுத்தி உளவுபார்த்தல் sexpionage என அழைக்கப்படுகிறது. பாமிர் கன்சல்டிங்கின் (அமெரிக்காவுக்கு சீனா தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம்) தலைமை புலனாய்வு அதிகாரி ஜேம்ஸ் முல்வெனான், &quot;ஒரே மாதிரியான கவர்ச்சிகரமான இளம் சீனப் பெண்களிடமிருந்து எனக்கு மிகவும் அதிகப்படியான லிங்க்ட்-இன் கோரிக்கைகள் வருகின்றன&quot; எனக் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.மேலும் அவர் கலாச்சார ரீதியாகவும் சட்டரீதியாக இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது என்பதனால் உடலுறவைக் கருவியாக பயன்படுத்துவதில் சீன தரப்புக்கு அதிக பலம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.புதிய உளவு வழிமுறை!மற்றொரு உளவுத்துறை அதிகாரி, சீனப் பெண் ஒருவர் அமெரிக்க ஏரோஸ்பே இஞ்சினியரை மணந்ததாகக் கூறியுள்ளார். முக்கியமான, ரகசியமான புராஜெக்ட்களில் வேலை செய்யும் அந்த நபரைக் கவர்ந்து அவர் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்டு, நீண்டகாலமாக தகவல்களைத் தெரிந்துகொண்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.Young Chinese Professional சீனா, சாதாரண குடிமக்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், கிரிப்டோ ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை உளவாளிகளாகப் பயன்படுத்தி அமெரிக்காவுக்கு போட்டியாக ஸ்டார்ட் அப்களை உருவாக்குவதாக குற்றம்சாட்டுகின்றனர்.இதனால் வருடத்துக்கு சுமார் 600 பில்லியன் டாலர் வரை (ரூ.50 லட்சம் கோடி) இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர். அத்துடன் சீன முதலீட்டாளர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஸ்டார்ட்-அப்கள் ஐடியாவை இழந்துவிடும் அபாயம் உள்ளது அல்லது சீனாவுக்கு இடத்தை மாற்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறது.உளவுக்கு இரையாகும் Silicon Valley!சிலிக்கான் பள்ளத்தாக்கு ஒரு கண்டுபிடிப்புகளின் கூடம். உலகம் முழுவதும் தொழில்நுட்பங்களைச் சார்ந்த பொருளாதாரத்துக்கு முக்கிய ஆதாரம் சிலிக்கான் பள்ளத்தாக்கு.Silicon Valleyநாளைய உலகில் நம்மைச் சுற்றியிருக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் இடம். இங்கு உளவு பார்த்து தாக்குதல் தொடுக்கப்போவது இல்லை என்றாலும் தொழில்நுட்பத்தில் அடுத்த மிகப் பெரிய விஷயம் என்ன என்பதை அறிந்துகொள்வது, உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செய்ய உதவும். இதனால் மிக மிகப் பரவலாக சிலிக்கான் பள்ளத்தாக்கில் அழகான சீன/ரஷ்ய பெண்கள் உளவாளிகளாக சுற்றி வருகின்றனர் என எச்சரிக்கிறது அமெரிக்க உளவுத்துறை.கலிஃபோர்னியாவில் பல இன, கலாசாரத்தைச் சேர்ந்த மக்கள் சேர்ந்து வாழ்வது உளவுபார்ப்பவர்களுக்கு பணியை எளிமையாக்கி விடுகிறது. அதிபர் ட்ரம்ப்பின் வெளிநாட்டு குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கைக்கு அதிகபட்ச எதிர்ப்பு எழுந்தது கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்துதான். மாகாண ஜனநாயகக் கட்சி அரசு வெளிநாட்டு இன மக்களுக்கும் ஆதரவாக இருப்பதனால் இந்த உளவாளிகளைப் பற்றிய தகவல்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மாகாண அரசின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் அரசியல் நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா: 6000 மாணவர்கள் விசா ரத்து; ட்ரம்ப் நிர்வாகம் சொல்லும் காரணம் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-23/nu1uq80h/Woman" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உடலுறவும், உளவும், தற்செயல்போல், தான், இருக்கும், ஆனால்’, Silicon, Valley-யை, பதறவைக்கும், சீனா, ரஷ்யா</media:keywords>
    </item>
    <item>
        <title>ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு‌ அமெரிக்கா தடை: பாதிக்கும் ரிலையன்ஸ்; இந்தியாவின் நிலைப்பாடு என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/ரஷ்ய-எண்ணெய்-நிறுவனங்களுக்கு-அமெரிக்கா-தடை-பாதிக்கும்-ரிலையன்ஸ்-இந்தியாவின்-நிலைப்பாடு-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/ரஷ்ய-எண்ணெய்-நிறுவனங்களுக்கு-அமெரிக்கா-தடை-பாதிக்கும்-ரிலையன்ஸ்-இந்தியாவின்-நிலைப்பாடு-என்ன</guid>
        <description><![CDATA[ ரஷ்ய எண்ணெய் இறக்குமதி&#039;இனி இந்தியா மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் வாங்குவதைத் குறைக்கும்&#039; - இது கடந்த இரண்டு - மூன்று நாள்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கும் ஒன்று.இன்னொரு பக்கம், தற்போது அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயிலுக்கு தடை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு நிறுவனங்களுடன் பிற நிறுவனங்களோ, நாடுகளோ வர்த்தகம் மேற்கொண்டால், அது அமெரிக்காவின் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். ஆனால், அமெரிக்கா எந்த மாதிரியான தடையை விதித்துள்ளது என்பது இன்னும்‌ தெளிவாக தெரியவில்லை.இந்தத் தடைகள் இந்தியாவிற்கு ரஷ்யா செய்யும் எண்ணெய் ஏற்றுமதியைக் கடுமையாக பாதிக்க உள்ளது.முகேஷ் அம்பானிசிக்கலில் ரிலையன்ஸ் நிறுவனம்இந்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய பொது சந்தையில் இருந்து தான் எண்ணெயை வாங்குகின்றன. ஆனால், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரோஸ்நெஃப்ட் நிறுவனத்துடன் 25 ஆண்டுகால ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.‌ இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் கையெழுத்தானது.இந்த நிலையில், தற்போதைய தடை விதிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பெரிதாக பாதிக்க உள்ளது.அதனால் தான், இந்தத் தடைகளால், இந்தியாவில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி பாதிக்கும் என்று கூறப்படுகிறது.தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளது.இந்தியா என்ன செய்ய உள்ளது?ஆனால், இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்கப்போவதில்லை என்ற ட்ரம்ப்பின் கூற்று குறித்து இந்திய அரசு இன்னும் எந்தத் தெளிவான விளக்கத்தையும் வழங்கவில்லை.முன்பு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை, &#039;இந்திய தேசத்தின் நலன் கருதி ரஷ்யாவில் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும்&#039; என்று கூறி வந்தார்கள்.ஆனால், லேட்டஸ்டாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், &#039;நிலையற்ற ஆற்றல் சூழலில், இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே எங்களுடைய நிலையான முன்னுரிமை. ரந்தீர் ஜெய்ஸ்வால்இப்போதைய அமெரிக்க அரசாங்கம் இந்தியா உடனான எரிசக்தி ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன&quot; என்று கூறியிருந்தார்.அவர் ரஷ்யா உடனான எண்ணெய் வர்த்தகம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆக, அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றால், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா என்ன சொல்கிறது? ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இனி எண்ணெய் வாங்குமா? ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின்‌ நிலைப்பாட்டைப் பொறுத்தே தங்களுடைய வர்த்தகம் அமையும் என்கிறது.இவைகளுக்கான பதில் இந்திய அரசு வாயைத் திறந்தால் மட்டுமே கிடைக்கும்.இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் இழுபறி; பியூஷ் கோயல் பயணம் வெற்றியைத் தருமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-23/pfmxs69s/Untitled-design202510231500130000.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ரஷ்ய, எண்ணெய், நிறுவனங்களுக்கு‌, அமெரிக்கா, தடை:, பாதிக்கும், ரிலையன்ஸ், இந்தியாவின், நிலைப்பாடு, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>US: 2 மாதங்களில் 1 டிரில்லியன்‌ டாலர்  அமெரிக்க கடன் அதிகரிப்பு &amp; என்ன காரணம்?</title>
        <link>https://dailytopnewz24.com/us-2-மாதங்களில்-1-டிரில்லியன்-டாலர்-அமெரிக்க-கடன்-அதிகரிப்பு-என்ன-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-2-மாதங்களில்-1-டிரில்லியன்-டாலர்-அமெரிக்க-கடன்-அதிகரிப்பு-என்ன-காரணம்</guid>
        <description><![CDATA[ கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், அமெரிக்காவின் கடன் 1 டிரில்லியன்‌ டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் கடன்  37 டிரில்லியன்‌ டாலராக இருந்தது. அது மிக மிக வேகமாக வளர்ந்து அக்டோபர் மாத நிலவரப்படி, தற்போது 38 டிரில்லியன்‌ டாலராக உயர்ந்துள்ளது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது விதித்த வரியால் அமெரிக்காவிற்கு பல லட்சம் கோடி வருமானம் என்று கூறுகிறார்.வரிஇவ்வளவு கடன்‌ ஏன்?அமெரிக்காவின் பட்ஜெட் அதன் வருமானத்தைத் தாண்டியதாக இருக்கிறது.அடுத்ததாக, சமூக பாதுகாப்பு மற்றும் மருத்துவத்திற்கான அமெரிக்கா அதிகம் செலவளிக்கிறது.ட்ரம்ப் சமீபத்தில் அமெரிக்க மக்களுக்கு பல வரி சலுகைகளை வழங்கியுள்ளார். இதனால், அமெரிக்க அரசின் வருமானம் பெரியளவில் குறைந்துள்ளது.இதையெல்லாம் தாண்டி, தற்போது அமெரிக்காவில் அரசு நிர்வாக முடக்கம் இருந்து வருகிறது. இது கடந்த மாதத்தின் பாதியில் தான் தெடங்கியிருந்தாலும், இதன்‌ பங்கு கணிசமாக நிச்சயம் உள்ளது.Trump: &quot;7 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்&quot; - அடம்பிடிக்கும் டொனால்டு ட்ரம்ப் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-21/acjg0gpc/1738638177-7501.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US:, மாதங்களில், டிரில்லியன்‌, டாலர், அமெரிக்க, கடன், அதிகரிப்பு, என்ன, காரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`இது சட்டத்திற்கு புறம்பானது&amp;apos; &amp; WTO&amp;ல் இந்தியா மீது புகார் கொடுத்த சீனா; காரணம் என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இது-சட்டத்திற்கு-புறம்பானது-wto-ல்-இந்தியா-மீது-புகார்-கொடுத்த-சீனா-காரணம்-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இது-சட்டத்திற்கு-புறம்பானது-wto-ல்-இந்தியா-மீது-புகார்-கொடுத்த-சீனா-காரணம்-என்ன</guid>
        <description><![CDATA[ &#039;இது உலகளாவிய வர்த்தக விதிமீறல்&#039; என்று இந்தியா மீது உலக வர்த்தக அமைப்பில் புகாரளித்துள்ளது சீனா.என்ன பிரச்னை?இந்தியாவிற்குள் உற்பத்தியை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகை திட்டங்களை வழங்கி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் அட்வான்ஸ்ட் கெமிக்கல் செல் பேட்டரி ஸ்டோரேஜ் தயாரிப்புகள்,ஆட்டோமொபைல் சார்ந்த உற்பத்திகள், பயணிகள் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புகள் போன்றவற்றை இந்தியாவிற்குள் தயாரிக்க ஊக்குவித்து இந்திய அரசு சலுகை திட்டங்களை வழங்கி வருகிறது.இந்தத் திட்டங்கள் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதிகளை குறைக்கவும் செயலாற்றுகிறது.இன்னும் மிக முக்கியமாக, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற முயலுகிறது.எலெக்ட்ரிக் வாகனங்கள்இதில் சீனாவுக்கு என்ன பாதிப்பு?உலகளவில் ஆட்டோமொபைல் பாகங்கள், எலெக்ட்ரிக் பேட்டரிகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.இந்தியாவின் இந்தத் திட்டங்களால் சீனாவில் உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு மாற்றலாம்.அடுத்ததாக, சீனாவிடம் இந்தப் பொருள்களை வாங்கி வரும் உலக நாடுகள் இந்தியாவின் பக்கம் திரும்பலாம். இதனால், சீனாவின் ஏற்றுமதிகள் கடுமையாக பாதிப்படையலாம்.சீனா இந்தியாவை பெரியளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களின் சந்தையாக பார்க்கிறது. இந்தியாவிலேயே சலுகைகளுடன் வாகனங்கள் தயாரிக்கப்படும் போது, இறக்குமதி வாகனங்களை விட, இந்த வாகனங்களின்‌ விலை குறைவாக இருக்கும்.சீனாவின் கூற்று என்ன?இந்தியாவின் சலுகை திட்டங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. இது சர்வதேச வர்த்தகச் சட்டத்தின் மீறல் ஆகும்.மேலும், இத்தகைய திட்டங்கள் சீனாவின் ஏற்றுமதியைக் கடுமையாக பாதிக்கும்.ஆக, இது மானியங்கள் மற்றும் எதிர் நடவடிக்கை நடவடிக்கைகள் ஒப்பந்தம் (SCM), கட்டணங்கள் மற்றும் வர்த்தகத்திற்கு தொடர்பான பொது ஒப்பந்தம், 1994 (GATT) மற்றும் வர்த்தகம் தொடர்பான முதலீட்டு நடவடிக்கைகள் ஒப்பந்தம் (TRIM) ஆகியவற்றின் விதிமீறல் என்று சீனா குற்றம்சாட்டுகின்றது.உலக வர்த்தக மையம்இப்போது சீனா என்ன கேட்கிறது?இந்தத் திட்டங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி வேண்டும்.ஒருவேளை இது பலனளிக்காவிட்டால், அடுத்ததாக, இந்தியா மீது சீனா உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடுக்கும்.இந்தியா மற்றும் சீனா- இரண்டு நாடுகளும் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் என்பதால் இது தான் நடைமுறை.இந்தியா மட்டுமல்லஅமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் கூட எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி மற்றும் பேட்டரி தயாரிப்புகளுக்கு சலுகைகள் வழங்கி வருகின்றன.இதனால், இந்தப் புகார் எப்படி முடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.கூகுள் கிளவுட் தலைமை பொறுப்பு: டெக் உலகை ஆளும் தமிழர்கள் பட்டியலில் `கார்த்திக் நரேன்&#039; - யார் இவர்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2020-07/8dcb8069-8760-4cc5-aadd-0cca7df65754/CC_2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இது, சட்டத்திற்கு, புறம்பானது, WTO-ல், இந்தியா, மீது, புகார், கொடுத்த, சீனா, காரணம், என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை; ஆனால்..&amp;quot; &amp;155 சதவிகித வரி விதிப்பு  குறித்து ட்ரம்ப் விளக்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/சீனாவிடம்-நட்பாக-இருக்கவே-எனக்கு-ஆசை-ஆனால்-155-சதவிகித-வரி-விதிப்பு-குறித்து-ட்ரம்ப்-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/சீனாவிடம்-நட்பாக-இருக்கவே-எனக்கு-ஆசை-ஆனால்-155-சதவிகித-வரி-விதிப்பு-குறித்து-ட்ரம்ப்-விளக்கம்</guid>
        <description><![CDATA[ சீனா நியாயமான வர்த்தக ஒப்பந்தத்துக்கு முன்வரவில்லை என்றால் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவிகித வரி விதித்து மொத்த வரியை 155 சதவிகிதமாக அதிகரிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.அடுத்த சில வாரங்களில் ட்ரம்ப் - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் இரு நாட்டின் உறவிலும் விரிசலை உண்டாக்கலாம்.ட்ரம்ப்Trump: ``எனது நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன்&#039;&#039; - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்சீனா ட்ரம்பின் இந்த வரி அச்சுறுத்தல்களுக்கு பணியாது. காரணம், கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தபோது, சீனா எதிர்வினையாக வரி விதித்ததே தவிர, பணியவில்லை.இதனால், ட்ரம்ப் செயல்கள் மீண்டும் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப் போரை உண்டாக்கலாம். இது பிற உலக நாடுகளையும் நிச்சயம் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசைஇந்நிலையில் சீனாவின் மீதான இந்த 155 சதவிகித வரி விதிப்பு எச்சரிக்கைக் குறித்து  ட்ரம்ப், &quot;சீனாவிடம் நட்பாக இருக்கவே எனக்கு ஆசை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாவே சீனாதான் அமெரிக்காவிடம் கடுமையாக நடந்துகொள்கிறது. இதற்கு முன் இருந்த அமெரிக்க அதிபர்கள் வெளிநாட்டு வணிகத்தில் மெத்தனமாக இருந்துவிட்டனர். அதை சீனா மட்டுமல்ல பல்வேறு நாடுகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். என்னால் அப்படிவிட முடியாது. ட்ரம்ப்ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியா உடனான வர்தகங்கள் எல்லாம் நல்லமுறையில் நடந்து கொண்டிருக்கின்றன. சீனாவுடனான இந்த ஒப்பந்தம் என்பது அமெரிக்காவின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது.&quot; என்று பேசியிருக்கிறார்   ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-22/k3mbda6q/G3z5owuWQAAnneC.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சீனாவிடம், நட்பாக, இருக்கவே, எனக்கு, ஆசை, ஆனால்.., -155, சதவிகித, வரி, விதிப்பு, குறித்து, ட்ரம்ப், விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;காதலர் தினத்தை விட இந்த நாளில் சிங்கிள்ஸ் அதிகமாக தனிமையை உணர்கிறார்களா?&amp;quot; &amp; ஆய்வில் வெளியான தகவல்</title>
        <link>https://dailytopnewz24.com/காதலர்-தினத்தை-விட-இந்த-நாளில்-சிங்கிள்ஸ்-அதிகமாக-தனிமையை-உணர்கிறார்களா-ஆய்வில்-வெளியான-தகவல்</link>
        <guid>https://dailytopnewz24.com/காதலர்-தினத்தை-விட-இந்த-நாளில்-சிங்கிள்ஸ்-அதிகமாக-தனிமையை-உணர்கிறார்களா-ஆய்வில்-வெளியான-தகவல்</guid>
        <description><![CDATA[ அயல்நாடுகளில் ஹாலோவீன் கொண்டாடும் பழக்கங்கள் உள்ளன. பொதுவாக ஹாலோவீன் என்பது வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த நாள் சிலருக்குத் தனிமையை உணர வைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.டேட்டிங் டாட் காம் நடத்திய ஆய்வின்படி அமெரிக்காவில் 59% பேருக்கு ஹாலோவீன் தினம், ஆண்டின் மிக உணர்ச்சி ரீதியான கடினமான நாளாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சிலர் இதை காதலர் தினத்தை விட வேதனையும் தனிமையும் அதிகம் இருக்கும் நாளாகக் கூறியுள்ளனர்.இந்தத் தினத்தில் தங்களுக்கான உடைகள் இல்லாமல், துணை இல்லாமல், குடும்பப் புகைப்படங்கள் எடுக்கும் தருணங்கள் இல்லாமல் அவர்களின் மனநிலை மிகவும் தனிமை உணர்வதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.hallowen celebration REP imageசமூக ஊடகங்கள் அவர்களின் தனிமையை மேலும் தீவிரப்படுத்துவதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். அங்கே பகிரப்படும் புகைப்படங்களாலும் அல்லது சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதாலும் இது போன்ற உணர்வுகள் ஏற்பட்டுள்ளதாகப் பலர் தெரிவித்திருக்கின்றனர்.சமீபத்தில், ஓரிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், &quot;தனிமையைப் போக்கும் மருந்தாக இந்தச் சமூக ஊடகங்கள் அமையவில்லை. மாறாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற தளங்கள் அதிகம் பயன்படுத்துவதால் தனிமை உணர்வு மேலும் வலுப்பெறுகிறது&quot; என்று தெரிவித்திருக்கின்றனர்.அமெரிக்க மக்களில் சுமார் 50% பேர் ஏற்கனவே தனிமையில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இது கொரோனா பிந்தைய காலங்களில் மேலும் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.`18 வயசு கீழ உள்ளவங்க, இதயம் பலவீனம் ஆனவங்க, இந்தப் படத்தைப் பார்க்காதீங்க!’ - `ஹாலோவீன்&#039; படம் எப்படி? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-21/3o5ykx76/0a48f593-da33-4e22-8768-af457399a52a.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காதலர், தினத்தை, விட, இந்த, நாளில், சிங்கிள்ஸ், அதிகமாக, தனிமையை, உணர்கிறார்களா, ஆய்வில், வெளியான, தகவல்</media:keywords>
    </item>
    <item>
        <title>அடுத்த 5 ஆண்டுகளில், ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?அதிர்ச்சி வேண்டாம் மக்களே!</title>
        <link>https://dailytopnewz24.com/அடுத்த-5-ஆண்டுகளில்-ஒரு-கிராம்-தங்கம்-விலை-எவ்வளவு-தெரியுமாஅதிர்ச்சி-வேண்டாம்-மக்களே</link>
        <guid>https://dailytopnewz24.com/அடுத்த-5-ஆண்டுகளில்-ஒரு-கிராம்-தங்கம்-விலை-எவ்வளவு-தெரியுமாஅதிர்ச்சி-வேண்டாம்-மக்களே</guid>
        <description><![CDATA[ தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்ந்ந்...து கொண்டே போகிறது. நடுத்தர மக்களுக்கு இது எட்டாக்கனியாக மாறி வருகிறது. இந்த நிலையில், அடுத்த 5-10 ஆண்டுகளில் ஒரு கிராம் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் சண்முகநாதன்.&quot;2022-ம் ஆண்டில் இருந்தே, பொருளாதார காரணங்களினால், அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துவருகிறது.இதைத் தடுக்க, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, பலமுறை வட்டி விகிதத்தை உயர்த்திப்பார்த்தது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக, அப்போதும் டாலர் மதிப்பு உயரவில்லை.சண்முகநாதன் நாகசுந்தரம்அதிபரான ட்ரம்ப்இந்த நிலையில் தான், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார் ட்ரம்ப். இது சந்தைக்கோ, டாலருக்கோ எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. அதற்கு பதிலாக, அமெரிக்க டாலரின் மதிப்பு முன்பை விட வேகமாக குறைய தொடங்கிவிட்டது.அமெரிக்க டாலரின் மதிப்பு ஒருபக்கம் வேகமாக குறைந்து வருவதுபோல, இன்னொரு பக்கம், அது அமெரிக்க மக்களின் நுகர்வையும் பாதித்தது. இதை சரிகட்ட, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி சமீபத்தில் 0.25 சதவிகித வட்டி குறைப்பை செய்தது. இன்னும் சில வட்டி குறைப்புகள் இருக்கும் என்றும் கூறியுள்ளது.தங்கம் முதலீடுஅமெரிக்க ஃபெடரல் வங்கியின் இந்த நகர்வு, இன்னமும் டாலர் மதிப்பை வீழ்ச்சியடையத் தான் செய்யும். இதனால், முதலீட்டாளர்கள் டாலரைத் தாண்டி, வேறு முதலீட்டைத் தேடுவார்கள்.இந்த இடத்தில் தான் தங்கம் மாற்றாக வருகிறது. பொதுவாகவே, தங்கம் என்பது உலக அளவில் பாதுகாப்பான முதலீடு.அமெரிக்க டாலர் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் தங்கத்தின் பக்கம் திருப்புகின்றனர். உலக நாடுகளின் வங்கிகளும் தொடர்ந்து தங்கம் வாங்கி குவித்து வருகிறது.ட்ரம்ப்குறைக்கப்படும் வட்டி விகிதம்எப்போதுமே வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, தங்கம் விலை அதிகரிக்கும் என்று சொல்ல முடியாது. வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக இருந்தால், தங்கம் விலை பெரியளவில் மாற்றம் இருக்காது.ஆனால், இப்போது நிலைமையே வேறு. ஏற்கெனவே அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியில் தான் உள்ளது. அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் நுகர்வைக் கருதி, வட்டி விகிதத்தைக் குறைக்கிறது அமெரிக்க ஃபெடரல் வங்கி. இதனால் தான், தற்போது தங்கம் அமெரிக்க டாலரைக் காட்டிலும் வலுவாகி, தொடர்ந்து உயர்ந்து வருகிறது.1970-ம் ஆண்டு...1970-ம் ஆண்டு, இதே மாதிரியான ஒரு சூழல் ஏற்படும்போது, அப்போது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தி, முதலில் பணவீக்கத்தைத் தான் கட்டுக்குள் கொண்டுவந்தது.அதனால், இப்போதும் குறுகிய கால வேலைவாய்ப்பைப் பார்க்காமல், அமெரிக்க ஃபெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதைப் பார்க்க வேண்டும். இதை அமெரிக்கா செய்யும்போது ஓரளவு தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.தங்கம்ஒருபுறம், உலக நாடுகளில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை, வரிகள், பணவீக்கம் போன்றவை தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், தங்கம் மீண்டும் உலக அளவில் முக்கியத்துவம் பெறுவதே, இந்த விலை உயர்விற்கு மிக முக்கிய காரணம். இதை குறைக்க வேண்டுமானாலும், அமெரிக்க டாலரின் மதிப்பை பாசிட்டிவ் நகர்விற்கு கொண்டுசெல்ல வேண்டும்.அப்படியில்லாமல், இதே நிலைமை நீடித்தால், இன்னும் 5-10 ஆண்டுகளில், ஒரு அவுன்ஸ் தங்கம் 30,000-40,000 டாலராக மாறலாம். அது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பின் படி பார்த்தால், கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தைத் தொடும்&quot; என்று கூறுகிறார்.அம்மாடியோவ்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-18/aqadu1o1/Gold.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அடுத்த, ஆண்டுகளில், ஒரு, கிராம், தங்கம், விலை, எவ்வளவு, தெரியுமாஅதிர்ச்சி, வேண்டாம், மக்களே</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;ஒப்பந்தம் அல்லது 155% வரி&amp;apos; &amp; மிரட்டும் ட்ரம்ப்; சீனா அடிப்பணியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/ஒப்பந்தம்-அல்லது-155-வரி-மிரட்டும்-ட்ரம்ப்-சீனா-அடிப்பணியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒப்பந்தம்-அல்லது-155-வரி-மிரட்டும்-ட்ரம்ப்-சீனா-அடிப்பணியுமா</guid>
        <description><![CDATA[ சீனா தான் ஏற்றுமதி செய்து வந்த சில அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. &#039;இந்தக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தகத்தைப் பாதிக்கும்&#039; என்று அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்... சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியையும் விதித்தது.ட்ரம்ப் எச்சரிக்கை
கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கும் விதமாக நேற்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் &quot;சீனா நம் மீது அதிக மரியாதையைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் வரி மூலம் நமக்கு நிறைய பணத்தைக் கட்டுகிறார்கள். இப்போது அவர்கள் நமக்கு 55 சதவிகித வரியைக் கட்டுகிறார்கள். இது மிகப்பெரிய தொகை ஆகும்.ட்ரம்ப் - ஜி ஜின்பிங்சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explainedஇதுவரை பல உலக நாடுகள் அமெரிக்காவைப் பயன்படுத்தி கொண்டது. ஆனால், இனி அது நடக்காது. வரும் நவம்பர் 1-ம் தேதிக்குள் சீனா அமெரிக்கா உடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், சீனா தற்போது கட்டி வரும் 55 சதவிகித வரி 155 சதவிகிதமாக உயரலாம்&quot; என்று பேசியுள்ளார். சீனா அடிபணியுமா?
அடுத்த சில வாரங்களில் ட்ரம்ப் - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் இரு நாட்டின் உறவிலும் விரிசலை உண்டாக்கலாம். சீனா ட்ரம்பின் இந்த வரி அச்சுறுத்தல்களுக்கு பணியாது. காரணம், கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தப்போது, சீனா எதிர்வினையாக வரி விதித்ததே தவிர, பணியவில்லை. இதனால், ட்ரம்ப் செயல்கள் மீண்டும் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போரை உண்டாக்கலாம். இது பிற உலக நாடுகளையும் நிச்சயம் பாதிக்கும்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-15/mbu0rm7e/trump_4_1024x683.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:05 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒப்பந்தம், அல்லது, 155, வரி, மிரட்டும், ட்ரம்ப், சீனா, அடிப்பணியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் &amp; ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?</title>
        <link>https://dailytopnewz24.com/வெற்றிகரமாக-முடிந்த-ட்ரம்ப்-ஜின்பிங்-சந்திப்பு-என்னென்ன-முக்கிய-முடிவுகள்-எடுக்கப்பட்டுள்ளன</link>
        <guid>https://dailytopnewz24.com/வெற்றிகரமாக-முடிந்த-ட்ரம்ப்-ஜின்பிங்-சந்திப்பு-என்னென்ன-முக்கிய-முடிவுகள்-எடுக்கப்பட்டுள்ளன</guid>
        <description><![CDATA[ உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்...
கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக வரி என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்தார் ட்ரம்ப். அமெரிக்கப் பொருள்கள் மீது அனைத்து நாடுகளும் அதிக வரி விதிக்கிறது... அமெரிக்காவில் பெரிய அளவில் வர்த்தக பற்றாக்குறை உள்ளது... என்று உலக நாடுகள் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சகட்டு மேனிக்கு வரிகளைப் போட்டு தாக்கினார். ட்ரம்ப் - ஜி ஜின்பிங்முதல்முறையாக சந்தித்துகொள்ளும் ட்ரம்ப், ஜின்பிங்: ஏன் இது முக்கியம்? இருவரின் எதிர்பார்ப்புகள் என்ன?இதில் பிற நாடுகளுக்கு கால அவகாசம் கொடுத்தாலும் சீனாவிற்கு எந்த சலுகையும் கொடுக்கவில்லை. இதற்கு பதிலடியாக சீனா அமெரிக்கா மீது வரி விதிக்க, அமெரிக்கா மீண்டும் வரியை ஏற்றியது. இப்படி மாற்றி மாற்றி ஏற்றி சீனா மீதான வரிகள் 145 சதவிகிதம் வரை சென்றது... அமெரிக்கா மீதான வரி 110 சதவிகிதம் வரை சென்றது. ஜூன் மாதம் சமாதானம் ஏற்பட இரு நாடுகளும் வரியை நிறுத்தி வைத்தது. அதன் பிறகு, பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்து வந்தது. கூடுதல் 100 சதவிகிதம் வரி...
கடந்த மாதம், சீனா தான் ஏற்றுமதி செய்யும் சில கனிம வளங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தது. இது உலக வர்த்தகங்களைப் பாதிக்கும் என்று ட்ரம்ப் சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரி என அறிவித்தார். இது வர்த்தக போராக உருமாறுமோ என்று நினைத்திருந்த நேரத்தில் தான், ட்ரம்ப் - ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்துள்ளது. இந்தச் சந்திப்பிற்கு தயாராவதைப் போல, சமீபத்தில் அமெரிக்காவிடம் இருந்து இரண்டு தொகுதி சோயா பீன்ஸ்களை வாங்கியுள்ளது சீனா. சீனா அமெரிக்காவிடம் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவது ட்ரம்பின் தொடர் எதிர்பார்ப்பு ஆகும். ட்ரம்ப் - ஜி ஜின்பிங்சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explainedசந்திப்பு...
நாளை தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடக்க உள்ளது. இதில் கலந்துகொள்ள சென்ற ட்ரம்ப், ஜின்பிங் சந்தித்துகொண்டுள்ளனர். கடைசியாக, ட்ரம்ப் முதல்முறையாக அமெரிக்க அதிபராக இருந்தப்போது சந்தித்துகொண்டார்கள். அதன் பிறகு, இப்போது தான் இருவரும் சந்தித்து கொள்கிறார்கள். இந்தச் சந்திப்பு தென் கொரியாவின் புசானில் நடந்தது. என்னென்ன முடிவானது? 
இந்தச் சந்திப்பின் முடிவில், சீனா மீது அமெரிக்கா விதித்திருந்த வரியான 57 சதவிகிதம் 47 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. சீனா அமெரிக்காவிடம் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவதாக கூறியுள்ளது. அரிய கனிமங்களின் மீது சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகளிலும் சமாதானம் எட்டப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்து இன்னும் விரிவாக தெரியவில்லை. இரு நாடுகளும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் மேலும் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதனால்...
இந்தச் சந்திப்பிற்கு 10-க்கு 12 மதிப்பெண்களைக் கொடுத்துள்ளார் ட்ரம்ப். ஜின்பிங்குமே இந்தச் சந்திப்பில் திருப்தியாக உள்ளார். இதனால், இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையே பாசிட்டிவ் முடிவை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல்.. உலக நாடுகளின் வர்த்தகங்களிலுமே ஒரு பாசிட்டிவிட்டியைத் தரும். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/nmgnkc5o/WhatsApp-Image-2025-10-30-at-7.51.30-AM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வெற்றிகரமாக, முடிந்த, ட்ரம்ப், ஜின்பிங், சந்திப்பு, என்னென்ன, முக்கிய, முடிவுகள், எடுக்கப்பட்டுள்ளன</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்காவில்-வேலை-செய்யும்-வெளிநாட்டினருக்கு-மீண்டும்-மீண்டும்-செக்-வைக்கும்-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்காவில்-வேலை-செய்யும்-வெளிநாட்டினருக்கு-மீண்டும்-மீண்டும்-செக்-வைக்கும்-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு மீண்டும் செக் வைத்துள்ளது ட்ரம்ப் அரசாங்கம். என்ன அது?
இதுவரை அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்களை தொடர்ந்து பணிபுரியும் அனுமதிக்க விண்ணப்பித்தால் போதும். தானாகவே அவர்களுக்கு பணிபுரிவதற்கான அனுமதி புதுப்பிக்கப்பட்டு தரப்படும். ஆனால், இனி அப்படி கிடையாது. தொடர்ந்து பணிபுரிவதற்காக விண்ணப்பித்திருப்பவர்களை இனி தேசிய பாதுகாப்பு அடிப்படையில் சோதிக்கப்படுவார்கள். அதில் தேர்வானால் மட்டுமே, அவர்களது பணி புரிவதற்கான அனுமதி நீட்டிக்கப்படும். இந்த நடைமுறை இன்று (அமெரிக்க நேரப்படி) முதல் அமலாகிறது. அக்டோபர் 30-க்கு முன்பு, விண்ணப்பித்து, அனுமதி பெற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அமெரிக்காமுன்பு
அமெரிக்காவில் முன்பிருந்த ஆட்சியில், வேலைக்கான அனுமதி முடிந்த பின்னும், அந்த வேலை நீட்டிப்புக்கான சரியான நேரத்தில் விண்ணப்பித்திருந்தால், அடுத்த 540 நாள்களுக்கு தானாக அனுமதி நீட்டிக்கப்படும். இதற்கு தான் தற்போது தடை விதித்துள்ளது அமெரிக்க அரசு. இதனால், பல வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டாலும், குறிப்பாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே ஹெச்-1பி விசா கட்டண உயர்வு விஷயம் இந்தியர்களை பெரிதாக பாதித்த நிலையில், இந்த நகர்வும் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரிய அடி. H-1B விசாவில் மீண்டும் மாற்றம்: அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய உத்தரவு - முழு விவரம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/yg9l9213/donald-trump-gettyimages-687193180.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்காவில், வேலை, செய்யும், வெளிநாட்டினருக்கு, மீண்டும், மீண்டும், செக், வைக்கும், ட்ரம்ப்</media:keywords>
    </item>
    <item>
        <title>மியான்மரில் சீன மாஃபியா பிடியில் தப்பிய 500 இந்தியர்கள்; தாய்லாந்து டு தாய்நாடு திரும்புவது எப்போது?</title>
        <link>https://dailytopnewz24.com/மியான்மரில்-சீன-மாஃபியா-பிடியில்-தப்பிய-500-இந்தியர்கள்-தாய்லாந்து-டு-தாய்நாடு-திரும்புவது-எப்போது</link>
        <guid>https://dailytopnewz24.com/மியான்மரில்-சீன-மாஃபியா-பிடியில்-தப்பிய-500-இந்தியர்கள்-தாய்லாந்து-டு-தாய்நாடு-திரும்புவது-எப்போது</guid>
        <description><![CDATA[ ``மியான்மரில் இருந்து தாய்லாந்துக்குத் தப்பி வந்த 500 இந்தியர்களை, இந்தியா மீண்டும் அழைத்துக்கொள்ளும்&#039;&#039; என்று தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.மியான்மரில் மாஃபியாக்களால் நடத்தப்படும் கே.கே பார்க் மோசடி, சைபர் கிரைம் காம்பவுண்டில் மியான்மர் ராணுவம் சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்தவாரம் நடத்தப்பட்ட சோதனையின் விளைவாக 28 நாடுகளைச் சேர்ந்த 1500 பேர் தாய்லாந்து எல்லை நகரமான மே சோட்டுக்குத் தப்பிச் சென்றனர்.இந்த சோதனையில் இருந்து தப்பிய 500 இந்தியர்கள் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர்.KK Park cybercrime compoundபெருகிய மோசடி காம்பவுண்ட்கள்கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மியான்மர், லாவோஸ், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் எல்லைகளில் மோசடி மையங்கள் பெருகியுள்ளன. லட்சக்கணக்கான மக்களை கடத்திச் சென்று இந்த மையங்களில் வேலை செய்ய வைப்பதன்மூலம் பில்லியன் கணக்கான டாலர்கள் சம்பாதித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. கே.கே பார்க் நாடு கடந்த சைபர் மோசடிகளுக்கு பெயர்பெற்ற இடமாக உள்ளது. இந்த பெரிய வளாகமும் மற்ற மையங்களும் பெரும்பாலும் சீன மாஃபியா கும்பல்களால் நடத்தப்படுகின்றன. இவற்றைப் பாதுகாக்க உள்ளூர் ஆயுத கும்பல்களும் சில நேரங்களில் மியான்மர் ராணுவத்துடன் இணைந்த குழுக்களும் செயல்படுகின்றன.பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் திருப்பி அனுப்பத் திட்டம்தப்பி வந்தவர்களின் சட்டப் பின்னணியை சரிபார்த்து விரைவாக திருப்பி அனுப்ப இந்தியாவின் தூதர் தாய்லாந்து குடியேற்ற தலைமை அதிகாரியை சந்திப்பார் என பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார்.&quot;அவர்கள் நமக்கு இந்த சுமையைத் தர விரும்பவில்லை. நேரடியாக மே சோட்டுக்கு விமானம் அனுப்பவுள்ளனர்&quot; எனக் கூறியுள்ளார் அனுடின்.தாய்லாந்தில் தேவையான சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்தபிறகு அவர்களின் தேசிய குடியுரிமை சரிபார்க்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என வெளியுறவுத்துறை செயலளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.லண்டன் தெருக்களில் &#039;பான் மசாலா&#039; கறைகள்; பரவும் வீடியோ - இந்தியர்கள் மீது அதிருப்தி! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-30/y4qj550d/PM-Anutin.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Fri, 31 Oct 2025 10:38:04 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மியான்மரில், சீன, மாஃபியா, பிடியில், தப்பிய, 500, இந்தியர்கள், தாய்லாந்து, டு, தாய்நாடு, திரும்புவது, எப்போது</media:keywords>
    </item>
    <item>
        <title>`உங்கள் மீது வரி விதிப்பேன்&amp;apos; &amp; பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? &amp; என்ன நடக்கிறது?</title>
        <link>https://dailytopnewz24.com/உங்கள்-மீது-வரி-விதிப்பேன்-பொங்கும்-ட்ரம்ப்-ஓரணியில்-இந்தியா-பிரேசில்-சீனா-என்ன-நடக்கிறது</link>
        <guid>https://dailytopnewz24.com/உங்கள்-மீது-வரி-விதிப்பேன்-பொங்கும்-ட்ரம்ப்-ஓரணியில்-இந்தியா-பிரேசில்-சீனா-என்ன-நடக்கிறது</guid>
        <description><![CDATA[ அமெரிக்க கருவூல அலுவலகத்தின் லேட்டஸ்ட் தரவுகளின்படி, இந்தியா, பிரேசில், சீனா மற்றும் இன்னும் சில நாடுகள் தொடர்ந்து அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்புகளைக் குறைத்து வருகின்றன. இது கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான தரவு. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவது. உலகளவில் நிலவும் அரசியல் நிலையற்றத்தன்மை.  அதிகரித்து வரும் தங்கம் விலை போன்றவை சில உலக நாடுகள் அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்பைக் குறைத்து வருவதற்கான காரணமாக இருக்கலாம்.பிரிக்ஸ்ஆனால், இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகள் கருவூலப் பத்திரங்களின் இருப்பைக் குறைப்பதை அமெரிக்கா நிச்சயம் கவனிக்கும்.பிரிக்ஸ்
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே, ட்ரம்ப் பிரிக்ஸ் கூட்டமைப்பை தொடர்ந்து சாடி வருகிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் சுருக்கமே பிரிக்ஸ். உலகில் உள்ள தெற்கு நாடுகளின் கூட்டமைப்பு இது. இந்தக் கூட்டமைப்பு ஒன்றுசேர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுமோ, அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாணயத்தைக் கொண்டுவருமோ என்கிற சந்தேகங்கள் ட்ரம்பிற்கு எப்போதும் உண்டு. இந்த நிலையில் தான், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேற்று நேர்காணல் ஒன்றில் ட்ரம்ப்,&quot;யாருக்காவது பிரிக்ஸ் உடன் இணைய வேண்டுமானால், அது பரவாயில்லை. ஆனால், நாங்கள் உங்கள் மீது அதிக வரி விதிக்கப்போகிறோம்&quot; என்று பிற நாடுகளை எச்சரித்து, &#039;பிரிக்ஸ் டாலரின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது&#039; என்கிற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.ஏன் பிரிக்ஸ் மீது ட்ரம்பிற்கு இவ்வளவு கோபம்? 
பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளுமே உலக அளவில் மிக முக்கியமான மற்றும் கவனிக்கத்தக்க நாடுகள். இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சீனாவின் வளர்ச்சி வேகம் அமெரிக்காவைத் தாண்டியதாக இருக்கிறது. எப்போதுமே ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கு உறவு அவ்வளவு சுமூகமானதாக இருக்காது. மோடி - புதின் - ஜின்பிங்இந்தியா, சீனா, ரஷ்யா செய்கைகள்
சீனா, ரஷ்யா உடன் அமெரிக்கா எப்போதுமே முட்டி மோதிக்கொண்டிருந்தாலும், இந்தப் பட்டியலில் இந்தியா சமீபத்தில் இணைந்துள்ளது. அதற்கு காரணம் வரி. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, சீனாவில் நடந்த ஷாங்காய் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினின் செயல்பாடுகள் இருந்தது. அடுத்ததாக, ட்ரம்ப் எவ்வளவோ எச்சரித்தும் இன்னமும் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து தான் எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது. சீனா
சீனா சமீபத்தில் அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு அமெரிக்கா வரிகளையும், தடைகளையும் விதிக்க தொடங்க, மெல்ல சீனாவும் எதிர்வினையாற்ற தொடங்கியிருக்கிறது.ரஷ்யா
&#039;என்னுடைய நண்பர் தான்; அதிபராக பதவியேற்றதும் விரைவில் போர் நிறுத்தம் செய்துவிடுவேன்&#039; என்று புதினை நம்பி முன்பு ட்ரம்ப் பேசி வந்தார். இப்போது வரை, புதின் அதற்கு உடன்படவில்லை. ட்ரம்பின் அதிரடிகளுக்கு ரஷ்யா பணியவும் இல்லை. லூலாபிரேசில்
ரஷ்யா உடனான வர்த்தகத்தினால் இந்தியா, பிரேசில் மீது 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரி விதித்துள்ளது. இது ரஷ்யா உடனான வர்த்தகத்தைக் குறைக்கும் என்று அமெரிக்கா பார்த்தால், இப்போது இந்தியாவும், பிரேசிலும் கூட்டு சேர்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்திட பார்த்து வருகிறது. இவை எல்லாமே செய்வது பிரிக்ஸ் நாடுகள் தான். அதனால், பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் நிச்சயம் அடுத்த நகர்வை எடுத்து வைக்கலாம். டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-15/mbu0rm7e/trump_4_1024x683.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:10:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உங்கள், மீது, வரி, விதிப்பேன், பொங்கும், ட்ரம்ப், ஓரணியில், இந்தியா, பிரேசில், சீனா, என்ன, நடக்கிறது</media:keywords>
    </item>
    <item>
        <title>டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்!</title>
        <link>https://dailytopnewz24.com/டாப்-10-இடங்களில்-இருந்து-கீழிறங்கிய-அமெரிக்க-பாஸ்போர்ட்-இதுக்கு-காரணமும்-ட்ரம்ப்-தான்</link>
        <guid>https://dailytopnewz24.com/டாப்-10-இடங்களில்-இருந்து-கீழிறங்கிய-அமெரிக்க-பாஸ்போர்ட்-இதுக்கு-காரணமும்-ட்ரம்ப்-தான்</guid>
        <description><![CDATA[ கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலின் டாப் 10 இடங்களில் இருந்து அமெரிக்காவின் பாஸ்போர்ட் கீழிறங்கியுள்ளது.சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எப்படி நிர்ணயிக்கப்படும்?
குறிப்பிட்ட பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதை பொறுத்து, சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியிடப்படும். ட்ரம்ப்ட்ரம்பின் அதிரடிகள்
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவில் பிற நாட்டு மக்கள் குடியேறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அமெரிக்காவில் விசா நடைமுறைகளிலும் கடும் கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.இதன் விளைவாக, சமீபத்தில் வெளியான லண்டனைச் சேர்ந்த ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, அமெரிக்காவின் பாஸ்போர்ட் 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. 12-வதுஇடம்பொதுவாக, அமெரிக்கா பாஸ்போர்ட் முதல் 10 இடங்களில் இருக்கும். ஆனால், தற்போதைய சூழல் காரணமாக, அது 12-வது இடத்தைப் பிடித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் 10 இடங்களில் இருந்து அமெரிக்கா பாஸ்போர்ட் இறங்குவது இதுவே முதல்குறை. முதல் 5 இடங்களைப் பிடித்த நாடுகள்
இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தைத் தென் கொரியா, மூன்றாவது இடத்தை ஜப்பான், நான்காவது இடத்தை ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஐந்தாவது இடத்தை ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து பிடித்துள்ளது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-15/pypyjf75/American-Passport.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:10:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டாப், இடங்களில், இருந்து, கீழிறங்கிய, அமெரிக்க, பாஸ்போர்ட், இதுக்கு, காரணமும், ட்ரம்ப், தான்</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களைக் கையாண்ட இந்திய வம்சாவளி கைது &amp; சீனாவுக்காக உளவு பார்த்தாரா?</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்க-ராணுவத்தின்-ரகசிய-ஆவணங்களைக்-கையாண்ட-இந்திய-வம்சாவளி-கைது-சீனாவுக்காக-உளவு-பார்த்தாரா</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்க-ராணுவத்தின்-ரகசிய-ஆவணங்களைக்-கையாண்ட-இந்திய-வம்சாவளி-கைது-சீனாவுக்காக-உளவு-பார்த்தாரா</guid>
        <description><![CDATA[ ``புகழ்பெற்ற இந்திய வம்சாவளி வெளியுறவுக் கொள்கை நிபுணரும் பாதுகாப்பு மூலோபாய நிபுணருமான ஆஷ்லே ஜே டெல்லிஸ் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக தக்கவைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்&quot; என்று வர்ஜீனியா கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.carnegie endowmentஆஷ்லே ஜே டெல்லிஸ், சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை என்ற உலகளாவிய ஆய்வு நிறுவனத்தில், டாடாவின் மூலோபாய விவகாரங்களுக்கான தலைவராவார் (Tata Chair for Strategic Affairs). `கார்னகி அறக்கட்டளை&#039; உலக அரசியல், பாதுகாப்பு, அமைதி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் (Think Tank) நிறுவனமாகும்.தடை செய்யப்பட்ட அரசு சொத்துக்களைக் கையாள்வது தொடர்பான ஃபெடரல் விசாரணையில் 64 வயதாகும் டெல்லிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சட்டத்துக்குப் புறம்பாக வைத்திருப்பதையோ அல்லது தக்கவைத்துக்கொள்வதையோ தடைசெய்யும் 18 USC § 793(e) ஐ டெல்லிஸ் மீறியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். National Security Councilகுற்றம் நிரூபிக்கப்படும்வரை டெல்லிஸ் நிரபராதியாகக் கருதப்படுவார். மேலும் இதுவரையில் அவர் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால் டெல்லிஸ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வதுடன் $250,000 (ரூ.2,21,50,080) அபராதமும் விதிக்கப்படும்.யார் இந்த ஆஷ்லே ஜே டெல்லிஸ்?டெல்லிஸ் அமெரிக்காவில் உள்ள தெற்காசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க-இந்தியா உறவுகளின் முன்னணி நிபுணராவார். இவர் அமெரிக்க அரசின் பல முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவர் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளரின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றியபோது, அமெரிக்க-இந்திய சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். American foreign policy expert Tellisதேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அரசாங்கப் பணிக்கு முன், டெல்லிஸ் RAND கார்ப்பரேஷனில் மூத்த கொள்கை ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார். Striking Asymmetries: Nuclear Transitions in Southern Asia, Revising US Grand Strategy Toward China ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலைப் படையை தீவிரவாத அமைப்பாக அறிவித்த அமெரிக்கா! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-15/o86mwarf/Ashley-J-Tlllis" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:10:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்க, ராணுவத்தின், ரகசிய, ஆவணங்களைக், கையாண்ட, இந்திய, வம்சாவளி, கைது, சீனாவுக்காக, உளவு, பார்த்தாரா</media:keywords>
    </item>
    <item>
        <title>`பொறுப்புள்ள&amp;apos; சீனாவை எதிர்க்க இந்தியாவின் ஆதரவை நாடும் அமெரிக்கா! &amp; என்ன பிரச்னை?</title>
        <link>https://dailytopnewz24.com/பொறுப்புள்ள-சீனாவை-எதிர்க்க-இந்தியாவின்-ஆதரவை-நாடும்-அமெரிக்கா-என்ன-பிரச்னை</link>
        <guid>https://dailytopnewz24.com/பொறுப்புள்ள-சீனாவை-எதிர்க்க-இந்தியாவின்-ஆதரவை-நாடும்-அமெரிக்கா-என்ன-பிரச்னை</guid>
        <description><![CDATA[ கடந்த வாரம், சீனா தனது 5 அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கனிமங்கள் செமிகண்டக்டர்கள், ராணுவ இயந்திரங்கள் போன்ற உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. `இது உலக நாடுகளைப் பாதிக்கும்&#039; என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியை விதித்தார்.சீனா&#039;பொறுப்புள்ள&#039; சீனா
இந்தக் கட்டுப்பாடுகள் விதிப்பிற்கு சீனா, &quot;தற்போது உலக அளவில் நிலையற்றத்தன்மையும், ராணுவத் தாக்குதல்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த அரிய கனிமங்கள் ராணுவ உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதை சீனா கண்டறிந்துள்ளது. சீனா ஒரு பொறுப்புள்ள நாடாக, உலக அளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க, அச்சுறுத்தல் இருக்கக்கூடிய கனிமங்களின் ஏற்றுமதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது&quot; என்று காரணம் கூறுகிறது.இந்தியாவின் ஆதரவு
ஆனாலும், இந்தக் காரணத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை போலும். அதனால் தான், நேர்காணல் ஒன்றில் நேற்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், &quot;இது சீனா Vs பிற உலக நாடுகள் ஆகும். சீனா தற்போது அறிவித்துள்ள ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வர உள்ளது. இதற்கு நாம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். இந்தக் கட்டுப்பாட்டை சீனா ஏன் முடிவு செய்துள்ளது என்பது சரியாகத் தெரியவில்லை.அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்பாதுகாப்பு, எலெக்ட்ரிக் வாகனங்கள், எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளுக்கு முக்கிய தேவைகளான அரிய கனிமங்களின் மீது தங்களுக்கு இருக்கும் ஆதிக்கத்தை சீனா ஆயுதமாக்குவதை அமெரிக்கா அனுமதிக்காது. நாம் நமது இறையாண்மையை பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப் போகிறோம். நாம் ஏற்கெனவே நம் கூட்டாளிகளிடம் இது குறித்து பேசிவிட்டோம். அவர்களை இந்த வாரம் சந்திக்கிறோம். இதற்கான உலகளாவிய ஆதரவை ஐரோப்பிய நாடுகள், இந்தியா மற்றும் ஆசிய நாடுகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்&quot; என்று பேசியுள்ளார்.சீனாவின் இந்தக் கட்டுப்பாடு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
உலகளவில் பெரிய அளவிலான ஏற்றுமதிகளை சீனா தான் செய்து வருகிறது. சீனா இந்த மாதிரியான கட்டுப்பாடுகளை விதிக்கும்போது, அந்தக் கனிமங்களின் விலை கூடும் மற்றும் டிமாண்ட் அதிகரிக்கும். இதனால், உலகளவில் பல உற்பத்திகள் பாதிக்கக்கூடும். இது உலகளாவிய சவாலாக மாறலாம். காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? - இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-06/0lmkr7dy/6892a4932f43b.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:10:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பொறுப்புள்ள, சீனாவை, எதிர்க்க, இந்தியாவின், ஆதரவை, நாடும், அமெரிக்கா, என்ன, பிரச்னை</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;ட்ரம்புக்கு நோபல் பரிசு&amp;apos; &amp; வைரலாகும் இத்தாலி பிரதமரின் ரியாக்‌ஷன் &amp; என்ன நடந்தது| Viral Video</title>
        <link>https://dailytopnewz24.com/ட்ரம்புக்கு-நோபல்-பரிசு-வைரலாகும்-இத்தாலி-பிரதமரின்-ரியாக்ஷன்-என்ன-நடந்தது-viral-video</link>
        <guid>https://dailytopnewz24.com/ட்ரம்புக்கு-நோபல்-பரிசு-வைரலாகும்-இத்தாலி-பிரதமரின்-ரியாக்ஷன்-என்ன-நடந்தது-viral-video</guid>
        <description><![CDATA[ இஸ்ரேல் - காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்தார். அதன் அடிப்படையில், இருதரப்பின் ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக் (Sharm El-Sheikh - அமைதி நகரம் The City of Peace என்ற புனைப்பெயரைக் கொண்ட) நகரத்தில் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிஃப், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.ட்ரம்ப், ஜியோர்ஜியா மெலோனி, ஷெஹ்பாஸ் ஷெரிஃப், கெய்ர் ஸ்டார்மர்இந்த மாநாட்டில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், ``நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? அன்று நீங்கள் என்னிடம் சொன்னதைச் சொல்லுங்கள்&quot; என்று கூறி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பைப் பேச அழைத்தார். அதைத் தொடர்ந்து மேடையில் ஏறிய ஷெரீப், ``அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதியின் மனிதர். இது சமகால வரலாற்றில் மிகச் சிறந்த நாட்களில் ஒன்றாகும்.ஏனெனில் அதிபர் ட்ரம்பின் அயராத முயற்சிகள் மூலம் பெரும் அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்களை நிறுத்துவதிலும், காசாவில் போர்நிறுத்தத்தை அடைய உதவியதிலும் ட்ரம்பின் அசாதாரண பங்களிப்புகளுக்காக பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது.ட்ரம்ப் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். ட்ரம்ப் அமைதிப் பரிசுக்கான மிகவும் உண்மையான மற்றும் அற்புதமான தேர்வாளராக இருப்பார்&quot; என உரையாற்றினார்.Just fell short of calling him Daddy, would have completed the boot licking. pic.twitter.com/PsfrmoEP3S— Priyanka Chaturvedi (@priyankac19) October 14, 2025


இந்த உரையில் அதிபர் ட்ரம்ப் குறித்து பாகிஸ்தான் பிரதமர் பேசும்போது இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் ரியாக்‌ஷன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இந்த உரைக்குப் பிறகு அதிபர் ட்ரம்ப், ``ஆஹா! நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் சொல்ல வேறு எதுவும் இல்லை. அமைதிக்கான நோபல் பரிசு மிகவும் அழகானவருக்கு வழங்கப்பட்டது. மிக்க நன்றி&quot; எனக் கூறிவிட்டுச் சென்றார்.&quot;அழகா இருக்கீங்க; புகைபிடிப்பதை நிறுத்தலாம்ல&quot; - இத்தாலி பெண் பிரதமருக்கு துருக்கி பிரதமர் அட்வைஸ் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-14/9e06f72q/Italian-PM-Meloni’s-reaction" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:10:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ட்ரம்புக்கு, நோபல், பரிசு, வைரலாகும், இத்தாலி, பிரதமரின், ரியாக்‌ஷன், என்ன, நடந்தது, Viral, Video</media:keywords>
    </item>
    <item>
        <title>ஒரு நாளுக்கு இரு முறை உயரும் தங்கம் விலை; இதற்கு காரணமே அமெரிக்காவும், சீனாவும் தான்! &amp; ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/ஒரு-நாளுக்கு-இரு-முறை-உயரும்-தங்கம்-விலை-இதற்கு-காரணமே-அமெரிக்காவும்-சீனாவும்-தான்-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஒரு-நாளுக்கு-இரு-முறை-உயரும்-தங்கம்-விலை-இதற்கு-காரணமே-அமெரிக்காவும்-சீனாவும்-தான்-ஏன்</guid>
        <description><![CDATA[ ஜனவரி 1, 2025-ம் தேதியில் இருந்து இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.4,600-உம், பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.37,000 உயர்ந்துள்ளது.என்ன காரணம்? 
இந்தத் தாறுமாறு விலை உயர்விற்கு உலக அளவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் மிக முக்கிய காரணங்கள். அமெரிக்க பொருளாதாரத்தின் காரணமாக, அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இன்னமும் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தங்கம்சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explainedஅடுத்ததாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இது நிச்சயம் பிற உலக நாடுகளைப் பாதிக்கிறது. இன்னொரு புறம், ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகள், அமெரிக்க டாலரின் மதிப்பை வீழ்ச்சி அடைய செய்கிறது. மேலும், பல உலக நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. உலக நாடுகளின் வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது.இவை எல்லாமே... தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணங்கள். இரு நாடுகள் காரணம்
ஆனால், கடந்த ஒரு வாரமாக, சென்னையில் தங்கம் விலை காலை, மாலை என ஒரு நாளுக்கு இரண்டு முறை மாறி வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை (அக்டோபர் 7) முதல் இன்று வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.625-ம், பவுனுக்கு ரூ.5,000-மும் உயர்ந்துள்ளது. இதற்கு காரணமாக அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளைக் கூறலாம். உலக அளவில் கனிம வளங்களை அதிகம் வைத்திருக்கும் மற்றும் சப்ளை செய்யும் டாப் நாடு சீனா. அது கடந்த 9-ம் தேதி, தாங்கள் ஏற்றுமதி செய்யும் எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. அமெரிக்கா - சீனாஉலக நாடுகளுக்கு சீனா வைத்த செக்; 100% வரியை உயர்த்திய ட்ரம்ப் - என்ன நடந்தது?இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரி விதித்தார். அதற்கு சீனா நிச்சயம் எதிர்வினையாற்றும். அதனால், மீண்டும் உலகில் வர்த்தகப் போர் ஏற்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பயத்தினாலும், தற்போது தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலர்களைத் தாண்டி விற்பனை ஆகி வருகிறது.இதனால், சர்வதேச சந்தையில் நிகழும் மாற்றங்களால், அது இந்தியாவில் பிரதிபலித்து ஒரு நாளுக்கு இருமுறை தங்கம் விலை மாறுகிறது. ஏற்கெனவே எகிறி கொண்டிருந்த தங்கம் விலையை, இந்தப் பயம் மேலும் உயர்த்துகிறது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-30/251lh4tz/Gold.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 16 Oct 2025 14:10:41 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஒரு, நாளுக்கு, இரு, முறை, உயரும், தங்கம், விலை, இதற்கு, காரணமே, அமெரிக்காவும், சீனாவும், தான், ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Gaza: இஸ்ரேல் &amp; ஹமாஸ் போர் நிறுத்தம்; &amp;quot;இது எளிதானது அல்ல&amp;quot; &amp; ட்ரம்பைப் பாராட்டும் ஜோ பைடன்</title>
        <link>https://dailytopnewz24.com/gaza-இஸ்ரேல்-ஹமாஸ்-போர்-நிறுத்தம்-இது-எளிதானது-அல்ல-ட்ரம்பைப்-பாராட்டும்-ஜோ-பைடன்</link>
        <guid>https://dailytopnewz24.com/gaza-இஸ்ரேல்-ஹமாஸ்-போர்-நிறுத்தம்-இது-எளிதானது-அல்ல-ட்ரம்பைப்-பாராட்டும்-ஜோ-பைடன்</guid>
        <description><![CDATA[ இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் எகிப்தில் கையெழுத்தானது. இதனைப் பாராட்டி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் | எகிப்துபதிவு...
&quot;நினைத்துப் பார்க்க முடியாத நரகத்தை அனுபவித்து வந்த 20 பணயக் கைதிகள் தங்கள் குடும்பத்தோடு இணைவதற்கும்... அளவிட முடியாத இழப்புகளைச் சந்தித்து வந்த காசா மக்கள் கடைசியாக அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும்... கிடைத்த இந்த நாளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்... எனக்கு நிம்மதியாகவும் இருக்கிறது. இதற்கான பாதை எளிதானது அல்ல. பணயக் கைதிகளை அவர்களது வீட்டிற்குக் கொண்டு சேர்ப்பதற்கும், பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதியைத் தரவும், போரை நிறுத்தவும் எனது நிர்வாகம் தொடர்ந்து உழைத்து வந்தது.Gaza: ட்ரம்ப் தலைமையில் முடிவுக்கு வந்த இஸ்ரேல் - காசா போர்; ஆனாலும், சில கேள்விகள்! அவை என்னென்ன?பாராட்டுகள்!புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டுவந்த அதிபர் ட்ரம்பிற்கும், அவரது குழுவிற்கும் என்னுடைய பாராட்டுகள். அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் உதவியோடு தற்போது மத்திய கிழக்கு அமைதிப் பாதைக்கு வந்துள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்குச் சம அளவிலான அமைதி, கண்ணியம் மற்றும் பாதுகாப்புடன் நீடித்த எதிர்காலம் அமையும் என்று நான் நம்புகிறேன்&quot; என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.I am deeply grateful and relieved that this day has come – for the last living 20 hostages who have been through unimaginable hell and are finally reunited with their families and loved ones, and for the civilians in Gaza who have experienced immeasurable loss and will finally…— Joe Biden (@JoeBiden) October 13, 2025  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2024-07/06711bae-a933-4a02-8e84-a502dca556cf/669664f469dd9.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:08 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gaza:, இஸ்ரேல், ஹமாஸ், போர், நிறுத்தம், இது, எளிதானது, அல்ல, ட்ரம்பைப், பாராட்டும், ஜோ, பைடன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Gaza: ட்ரம்ப் தலைமையில் முடிவுக்கு வந்த இஸ்ரேல் &amp; காசா போர்; ஆனாலும், சில கேள்விகள்! அவை என்னென்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/gaza-ட்ரம்ப்-தலைமையில்-முடிவுக்கு-வந்த-இஸ்ரேல்-காசா-போர்-ஆனாலும்-சில-கேள்விகள்-அவை-என்னென்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/gaza-ட்ரம்ப்-தலைமையில்-முடிவுக்கு-வந்த-இஸ்ரேல்-காசா-போர்-ஆனாலும்-சில-கேள்விகள்-அவை-என்னென்ன</guid>
        <description><![CDATA[ இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில் நடந்த காசா அமைதி கூட்டத்தில் போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர். இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் | எகிப்துபேச்சுவார்த்தை...
கடந்த 29-ம் தேதி, இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கான 20 அம்சங்களை ட்ரம்ப் பரிந்துரைத்தார். அதை அன்றே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டார். அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3), ஹமாஸும் ட்ரம்ப் பரிந்துரைத்த ஒரு சில அம்சங்களை ஒப்புக்கொண்டது. மற்றவற்றைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டது. அதற்கேற்ற மாதிரி, கடந்த வாரம், எகிப்தில் இஸ்ரேல், காசா தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் அனைவரும் உடன்பட, நேற்று இரு நாடுகளும் தாங்கள் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளை விடுவித்தன. இதனையடுத்து நேற்று வெற்றிகரமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.சில கேள்விகள்...
இருந்தும், இன்னும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சில கேள்விகள் இருந்துகொண்டே இருக்கின்றன... முதல்கட்டமாக, பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். அடுத்த கட்டமாக என்ன நடக்கும்? எப்போது காசாவில் இருந்து இஸ்ரேல் தனது படைகளை முழுவதுமாகத் திரும்பப்பெறும்? எப்போது, யார் காசாவில் அமைதி நிலைநாட்டுவதற்கான சமாதானக் குழுவை அமைப்பார்கள்? அடுத்ததாக, இஸ்ரேல், காசா தரப்பில் இருந்து என்ன நடவடிக்கையை மேற்கொள்வார்கள்? அதில் உலக நாடுகள் என்ன பங்கு வகிக்கும்?இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்? ஒப்புக்கொண்ட ஹமாஸ்; இஸ்ரேலுக்கு ட்ரம்ப் உத்தரவு என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-14/j2kv1sg0/Israel-Gaza-ceasefire.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:08 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gaza:, ட்ரம்ப், தலைமையில், முடிவுக்கு, வந்த, இஸ்ரேல், காசா, போர், ஆனாலும், சில, கேள்விகள், அவை, என்னென்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண் &amp; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/திருமணத்தை-நிறுத்திவிட்டு-கட்டிப்பிடித்த-மணமகனிடம்-கட்டணம்-வசூல்-செய்த-சீனப்பெண்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/திருமணத்தை-நிறுத்திவிட்டு-கட்டிப்பிடித்த-மணமகனிடம்-கட்டணம்-வசூல்-செய்த-சீனப்பெண்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம் இருந்து &#039;கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்&#039; கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த இப்பெண், தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து 200,000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 23 லட்சம்) வரதட்சணை பெற்றுள்ளார். chinese weddingஆனால், திருமணம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ’அந்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய விரும்பவில்லை&#039; என்று கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.மாப்பிள்ளைக்கு வருமானம் மிகவும் குறைவு, அவர் மிகவும் நேர்மையானவர் என்பதால் அந்தப் பெண் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் வரதட்சணை பணத்தை மாப்பிள்ளை வீட்டார்கள் திருப்பிக் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண் 200,000 யுவானில் இருந்து 30,000 யுவான் (சுமார் ரூ. 3.5 லட்சம்) பிடித்துக் கொண்டு மீதமுள்ள யுவானைத் தான் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார். chinese wedding&#039;கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்&#039; மற்றும் இதர செலவுகளுக்காக அந்தத் தொகையை எடுத்துக்கொள்ளப்போவதாகவும் கூறியிருக்கிறார். அதாவது திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது, புகைப்படக்காரர் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கச் சொன்னதால் மட்டுமே மாப்பிள்ளை அப்பெண்ணைக் கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில் இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, பெண் 170,500 யுவானை (சுமார் ரூ. 20 லட்சம்) மாப்பிள்ளை வீட்டாரிடம் திருப்பித் தர ஒப்புக்கொண்டிருக்கிறார். மாப்பிள்ளையிடம் இருந்து &#039;கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்&#039; கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனா: திருமணத்திற்கு வந்த தோழிகளை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட நபர்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/dioyo8vm/c9781b73-1d13-406f-824e-431529f141a5.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:08 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>திருமணத்தை, நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த, மணமகனிடம், கட்டணம், வசூல், செய்த, சீனப்பெண், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>``15 வருஷமா துணையோடு சேரவில்லை, எப்படி முட்டையிட்டது 62 வயது மலைப்பாம்பு?&amp;apos;&amp;apos; &amp; வியக்கும் விஞ்ஞானிகள்</title>
        <link>https://dailytopnewz24.com/15-வருஷமா-துணையோடு-சேரவில்லை-எப்படி-முட்டையிட்டது-62-வயது-மலைப்பாம்பு-வியக்கும்-விஞ்ஞானிகள்</link>
        <guid>https://dailytopnewz24.com/15-வருஷமா-துணையோடு-சேரவில்லை-எப்படி-முட்டையிட்டது-62-வயது-மலைப்பாம்பு-வியக்கும்-விஞ்ஞானிகள்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் இருக்கும் 62 வயது பெண் மலைப்பாம்பு ஒன்று, ஆண் பாம்புடன் தொடர்பு இல்லாமல் முட்டைகளை இட்டு விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வு, அறிவியல் உலகில் கவனம் பெற்று வருகிறது.இந்த நிகழ்வு &#039;பார்த்தினோஜெனிசிஸ்&#039; எனப்படும் கன்னிப்பெருக்கம் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். கருவுறுதல் இன்றி முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் இந்த அரிய வகை இனப்பெருக்க முறை குறித்து தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பந்து மலைப்பாம்புகள் (Ball Pythons) பொதுவாக 20 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர்வாழும். ஆனால், செயின்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் இருந்த இந்த பாம்பு, 62 வயதை எட்டியுள்ளது. இதுவே ஒரு சாதனையாகப் பார்க்கப்படும் நிலையில், இது முட்டையிட்டது விஞ்ஞானிகளை மேலும் ஆச்சரியப்படுத்தியது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண் பாம்பின் சேர்க்கை இல்லாமல் இருந்த அந்த பெண் பாம்பு முட்டையிட்டுள்ளது. இப்படி இருக்கும் சூழலில் எப்படி முட்டையிட்டது என்பது கேள்வியை எழுப்பியுள்ளது.இதுகுறித்து பேசிய உயிரியல் பூங்காவின் ஊர்வனவியல் மேலாளர் மார்க் வானர், &quot;வரலாற்றிலேயே இவ்வளவு வயதான பாம்பு முட்டையிட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை&quot; என்று குறிப்பிட்டிருக்கிறார்.”ராஜ நாகம் என்பது ஓர் இனம் அல்ல..” - விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்த ஆச்சரிய தகவல்கள் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/9lzfpvoo/118fa3f5-dce0-46f0-8e55-c242abe4ca20.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:08 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>15, வருஷமா, துணையோடு, சேரவில்லை, எப்படி, முட்டையிட்டது, வயது, மலைப்பாம்பு, வியக்கும், விஞ்ஞானிகள்</media:keywords>
    </item>
    <item>
        <title>சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா &amp; மீண்டும் வர்த்தகப் போர்? | Explained</title>
        <link>https://dailytopnewz24.com/சீனா-விதித்த-ஏற்றுமதி-கட்டுப்பாடுகள்-டென்ஷனான-அமெரிக்கா-மீண்டும்-வர்த்தகப்-போர்-explained</link>
        <guid>https://dailytopnewz24.com/சீனா-விதித்த-ஏற்றுமதி-கட்டுப்பாடுகள்-டென்ஷனான-அமெரிக்கா-மீண்டும்-வர்த்தகப்-போர்-explained</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. ஏன்?
கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய ஐந்து கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது சீனா. அந்தக் கட்டுப்பாடுகளின் படி, இனி ஏதேனும் ஒரு நாடோ அல்லது வெளிநாட்டு நிறுவனமோ, இந்தக் கனிமங்களை வாங்க வேண்டுமானால் ஸ்பெஷல் அனுமதி பெற வேண்டும். இதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் மாதமும், சீனா ஏழு அரிய கனிம வளங்களின் ஏற்றுமதிகளுக்கு இதுப்போல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அரிய கனிமங்கள்அடுத்ததாக...
அரிய கனிமங்களை தோண்டி எடுக்கும் சிறப்பு தொழில்நுட்ப இயந்திரங்களை சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கும் தற்போது சில தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறன. மேலும் குறைந்தபட்சம் 0.1 சதவிகிதத்தில் இருந்து அரிய கனிமங்கள் கொண்டிருக்கும் அரிய கனிம காந்தங்கள் மற்றும் சில செமி கண்டக்டர்களை சீனாவில் இருந்து வாங்கவும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஸ்பெஷல் அனுமதி பெற வேண்டும். ஸ்பெஷல் அனுமதி, தடை என்பது இந்தக் கனிமங்களையோ, இயந்திரங்களையோ வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கும்போது, அது எதற்காக வாங்கப்படுகிறது என்று கட்டாயம் சீனாவிடம் தெரிவிக்க வேண்டும்.  அந்தக் காரணத்தைப் பொறுத்தே, அவைகளை ஏற்றுமதி செய்வது குறித்து சீனா முடிவு செய்யும். இந்தக் கட்டுப்பாடுகள் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எதற்காக இந்தக் கட்டுப்பாடுகள்? 
இந்தக் கட்டுப்பாடுகள் குறித்து சீனா வர்த்தக அமைச்சகத் தரப்பு, &quot;இந்தக் கட்டுப்பாடுகள் சீனாவின் ஏற்றுமதிகளை முறைப்படுத்துவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கை. தற்போது உலக அளவில் நிலையற்றத்தன்மையும், ராணுவத் தாக்குதல்களும் நடந்து வருகின்றது. இந்த நிலையில், இந்த அரிய கனிமங்கள் ராணுவ உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதை சீனா கண்டறிந்துள்ளது. சீனா ஒரு பொறுப்புள்ள நாடாக, உலக அளவிலான அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்க, அச்சுறுத்தல் இருக்கக்கூடிய கனிமங்களின் ஏற்றுமதிகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. இது கட்டுப்பாடுகள் தானே தவிர, தடை அல்ல. நிறுவனங்கள் தேவையான உரிமங்கள் வைத்திருந்தால், இப்போதும் சீனா அந்தக் கனிமங்களை ஏற்றுமதி செய்யும். இது குறித்து பிற நாடுகளுக்கு முன்னரே சீனா அறிவித்துவிட்டது&quot; என்று கூறியுள்ளது. அமெரிக்காஅமெரிக்காவிற்கு என்ன பிரச்னை? 
சீனா அரிய கனிமங்களின் ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் வர்த்தகம், உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தைப் பாதிப்படைய வைக்க நினைக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நினைக்கிறார். இது உண்மையா என்று கேட்டால் ஒருவகையில் உண்மை தான். பெரிய அளவிலான கனிமங்கள் சீனாவிடம் தான் உள்ளது. சீனா தனது கட்டுப்பாட்டுகளை அதிகரிக்கும்போது, பிற இடங்களில் இந்தக் கனிமங்களின் விலை அதிகரிக்கும். இதனால், உலக அளவில் உற்பத்திகள் குறையும். அவை குறையும் போது, அதை வைத்து உற்பத்தி செய்யும் பொருள்களின் விலையும் கணிசமாக உயரும். இந்தக் கனிமங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் மோட்டர்கள், செமி கண்டக்டர்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆக, இந்தக் கட்டுப்பாடுகளால் இவைகளின் விலை உயரலாம். ராணுவ தளவாடங்களுக்காக நாடுகள் இந்தக் கனிமங்களை வாங்கும்போது, அந்தக் காரணத்தை சீனாவிடம் உலக நாடுகள் கூறுவதில் சிக்கலை சந்திக்கும். உற்பத்திகள் பாதிக்கப்படும்போது, தானாக வர்த்தகங்களும், பொருளாதாரமும் பாதிப்படையும். இந்தியாவிற்கு ஏதேனும் பிரச்னையா?
இந்தக் கட்டுப்பாடுகளினால் நிச்சயம் இந்தியாவிற்கு பிரச்னை உள்ளது. இறக்குமதிகளுக்கு இந்தியா சீனாவை மிகவும் நம்பியுள்ளது. இதனால், இந்தியாவின் ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்பத்துறை பெரிதும் பாதிப்படையும். ஏற்கெனவே, அமெரிக்காவின் வரியால் இந்தியாவின் தொழில்துறை பாதிப்படைந்துள்ளது. இப்போது சீனாவின் இந்தக் கட்டுப்பாடுகளும் சேர்வது மேலும் நெகட்டிவாக மாறும். அதனால், இப்போதே இந்தியா இந்தச் சிக்கலை சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும். அமெரிக்கா - சீனாஅமெரிக்கா - சீனா பேச்சுவார்த்தை
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, ட்ரம்பின் பரஸ்பர வரி அறிவிப்பிற்கு பிறகு, அமெரிக்காவும், சீனாவும் வரி விதிப்புகள் மூலம் மாறி மாறி மோதிக்கொண்டன. இந்த மோதலால் அமெரிக்கா சீனா மீது 145 சதவிகித வரி வரை விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருள்களின் மீது 110 சதவிகிதம் வரை வரி விதித்தது. இவை ஒருவழியாக, கடந்த ஜூன் மாதத்தில் நடந்த இரு நாடுகளின் பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது. இதனால், இரு நாடுகள் பரஸ்பரமாக விதித்த வரிகளை நிறுத்தி வைத்தது. அமெரிக்கா, சீனாவிற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தான், சீனா இந்தக் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதை எதிர்க்கும் விதமாக, ட்ரம்ப் தற்போது சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார். ஏற்கெனவே தற்போது சீன பொருள்களுக்கு அமெரிக்கா 30 சதவிகித வரி விதித்து வருகிறது. ஆக, இந்த வரியால் இரு நாடுகளின் உறவும் தற்போது பாதிப்படைந்துள்ளது. சீனாவின் பதிலடி
&#039;அமெரிக்காவும் தேச நலன் என்கிற பெயரில் அந்த நாட்டின் ஏற்றுமதிகளைக் நீண்ட காலமாக கட்டுப்படுத்தி வருகிறது. ஆனால், இப்போது சீனா ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும்போது மட்டும் அமெரிக்கா எதிர்க்கிறது. இது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு&#039; என்று சீனா குற்றம்சாட்டுகிறது. அமெரிக்காவிற்கு செல்லும் சீன கப்பல்களுக்கு புதிய துறைமுக கட்டணத்தை வசூலிக்க உள்ளது அமெரிக்கா. இதற்கு பதிலடியாக சீனா, அமெரிக்க கொடியோடு வரும் கப்பல், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கப்பல் போன்ற அமெரிக்காவிற்கு சம்பந்தமான எந்தவொரு கப்பல்களுக்கும் சீனா புதிய துறைமுகக் கட்டணத்தை வசூலிக்க உள்ளது. அமெரிக்காவின் கட்டணம் என்று அமலுக்கு வருகிறதோ, அதே அன்று சீனாவும் அந்தக் கட்டணத்தை வசூலிக்கும் என்றும் சீனா கூறியுள்ளது.உலக நாடுகள்உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு? 
இது கிட்டத்தட்ட அமெரிக்கா, சீனா நாடுகளுக்கான ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/wa1llj5b/America-Vs-China.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 14 Oct 2025 10:42:08 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சீனா, விதித்த, ஏற்றுமதி, கட்டுப்பாடுகள், டென்ஷனான, அமெரிக்கா, மீண்டும், வர்த்தகப், போர், Explained</media:keywords>
    </item>
    <item>
        <title>``முதலில் மோசடி கால் என நினைத்தேன், ஆனால்&amp;quot; &amp; லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு வென்ற மூதாட்டி</title>
        <link>https://dailytopnewz24.com/முதலில்-மோசடி-கால்-என-நினைத்தேன்-ஆனால்-லாட்டரியில்-ஒரு-மில்லியன்-டாலர்-பரிசு-வென்ற-மூதாட்டி</link>
        <guid>https://dailytopnewz24.com/முதலில்-மோசடி-கால்-என-நினைத்தேன்-ஆனால்-லாட்டரியில்-ஒரு-மில்லியன்-டாலர்-பரிசு-வென்ற-மூதாட்டி</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்திருப்பதாக வந்த ஃபோன் காலை முதலில் மோசடி அழைப்பு என நினைத்து புறக்கணித்திருக்கிறார். அதன் பின்னர் உண்மை என அறிந்ததும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணத்தில் உள்ள வெஸ்ட்லாந்து பகுதியை சேர்ந்தவர் வாலரி வில்லியம்ஸ். 65 வயதான இவர் லாட்டரி செயலியை தொடர்ந்து ஸ்கேன் செய்து வந்திருக்கிறார். தனக்கு பரிசு விழாத லாட்டரி டிக்கெட்டுகளை தொடர்ந்து ஸ்கேன் செய்து வந்த அவருக்கு தானாகவே செகண்ட் சேல்ஸ் என்ற இரண்டாவது வாய்ப்பு டிராவில் பங்கேற்க செயலி அனுமதித்திருக்கிறது. அதை அவர் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் வில்லியம்ஸ்க்கு லாட்டரி அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது.Lottery (representative)அவர் ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை வென்றதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் முதலில் இதனை மோசடி அழைப்பு என்று அவர் நினைத்துப் புறக்கணித்திருக்கிறார். அதன் பின்னர் லாட்டரி அதிகாரிகளிடம் அது குறித்து அவர் கேட்டு தகவலை உறுதிப்படுத்திய பிறகு உண்மையை அறிந்துகொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “லாட்டரி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தபோது அது ஒரு மோசடி அழைப்பு என நினைத்துப் பதில் அளிக்கத் தயங்கினேன். ஆனாலும் என்ன சொல்கிறார் என்று பார்க்கத்தான் அழைப்பை ஏற்றேன். அதன் பிறகு பரிசுத்தொகை பற்றி எனக்குக் கூறிய பிறகு நம்பவில்லை. அதிகாரிகளிடம் விசாரித்தபின் உண்மை என அறிந்து, அதிர்ச்சியில் உறைந்தேன்” என்று கூறுகிறார் வில்லியம்ஸ்.கேரளா: &quot;வேலையை விடும் திட்டமில்லை&quot; - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக்குச் செல்லும் நபர் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-12/73yixrza/hero-imag-2025-10-12T151654.391.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முதலில், மோசடி, கால், என, நினைத்தேன், ஆனால், லாட்டரியில், ஒரு, மில்லியன், டாலர், பரிசு, வென்ற, மூதாட்டி</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்தியா வந்த அமெரிக்க தூதர்; இது இந்தியா &amp; அமெரிக்க உறவில் பாசிட்டிவ் மாற்றத்தை தருமா?</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-வந்த-அமெரிக்க-தூதர்-இது-இந்தியா-அமெரிக்க-உறவில்-பாசிட்டிவ்-மாற்றத்தை-தருமா</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-வந்த-அமெரிக்க-தூதர்-இது-இந்தியா-அமெரிக்க-உறவில்-பாசிட்டிவ்-மாற்றத்தை-தருமா</guid>
        <description><![CDATA[ கடந்த வாரம், இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோர் உறுதி செய்யப்பட்டார். இதனையடுத்து, இந்தியா வந்த செர்ஜியோ கோர், நேற்று இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.மோடி பதிவு 
இது குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், &quot;இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செர்ஜியோ கோரை வரவேற்பதில் மகிழ்ச்சி. அவருடைய பணிக்காலத்தில் இந்தியா, அமெரிக்கா உறவு மேலும் வலுவடையும் என்று நான் உறுதியாக இருக்கிறேன்&quot; என்று குறிப்பிட்டுள்ளார். ஜெய்சங்கர் - செர்ஜியோ கோர்செர்ஜியோ கோர் என்ன சொல்கிறார்?
மோடியுடனான சந்திப்பு குறித்து செர்ஜியோ கோர், &quot;பிரதமர் மோடியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியாவுடனான நமது உறவு வரும் மாதங்களில் மேலும் வலுப்பெறும்&quot; என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செர்ஜியோ கோர் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்.இந்திய - அமெரிக்க உறவு
கடந்த சில மாதங்களாக, வர்த்தகம், வரி என இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் விழுந்துள்ளது. அனுபவம் மிகுந்த இவருடைய வருகை இதை சரிசெய்யும் என்று இருதரப்பும் நம்புகிறது. கடந்த வாரம், ட்ரம்பிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி தொடர்ந்து வர்த்தகம் சம்பந்தமாக பேசுவோம் என்று கூறியிருக்கிறார். இது இந்தியா - அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை பாசிட்டிவாக நடந்து வருவதற்கான சமிக்ஞையாக எடுத்துக்கொள்ளலாம். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-12/mxkcm1i7/Modi-Sergio-Gor.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, வந்த, அமெரிக்க, தூதர், இது, இந்தியா, அமெரிக்க, உறவில், பாசிட்டிவ், மாற்றத்தை, தருமா</media:keywords>
    </item>
    <item>
        <title>``வர்த்தகப் போர் வேண்டாம், ஆனால் நாங்கள் பயப்படவில்லை&amp;apos;&amp;apos; &amp; ட்ரம்பின் 100% வரிக்கு சீனா பதில்</title>
        <link>https://dailytopnewz24.com/வர்த்தகப்-போர்-வேண்டாம்-ஆனால்-நாங்கள்-பயப்படவில்லை-ட்ரம்பின்-100-வரிக்கு-சீனா-பதில்</link>
        <guid>https://dailytopnewz24.com/வர்த்தகப்-போர்-வேண்டாம்-ஆனால்-நாங்கள்-பயப்படவில்லை-ட்ரம்பின்-100-வரிக்கு-சீனா-பதில்</guid>
        <description><![CDATA[ சீன இறக்குமதி பொருள்களுக்கு ஏற்கெனவே30 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா. கடந்த வாரம், சீனா தனது அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்ததைச் சுட்டிக்காட்டி, நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியை விதித்திருக்கிறார். இது வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.சீன அமைச்சகத்தின் எதிர்வினை
இது குறித்து சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரின் பதில்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சீனாவின் வர்த்தக அமைச்சகம். ஆனால், அந்தப் பதிவில் செய்தித் தொடர்பாளரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.அமெரிக்கா, சீனாஅமெரிக்காவின் இந்த நடவடிக்கை அவர்களது இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது. நீண்ட காலமாக, ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்த தேசப் பாதுகாப்பு என்பதை தவறாகப் பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா மற்றும் சீனா மீது பாரபட்சமாக நடவடிக்கையை எடுத்து வருகிறது.இந்த நடவடிக்கைகள் சீனாவின் நலனைப் பாதிக்கிறது. ஒவ்வொரு முறையும் வரியைக் காட்டி பயமுறுத்தி சீனாவை அணுகுவது சரியானது அல்ல. வர்த்தகப் போர் எங்களுக்கு வேண்டாம். ஆனால், நாங்கள் அதைப் பார்த்து பயப்படவில்லை - இதுதான் வர்த்தகப் போர் குறித்த சீனாவின் நிலைப்பாடு&quot; என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.H1B visa பிரச்னை: `அமெரிக்கா போனால் போகட்டும்&#039; - இந்தியர்களை வரவேற்கும் சீனா, ஜெர்மனிMOFCOM Spokesperson’s Remarks on China’s Recent Economic and Trade Policies and MeasuresQ: On October 9, the Ministry of Commerce and the General Administration of Customs published an announcement on imposing export control measures on related rare earth items. What are…— 中华人民共和国商务部MOFCOM (@MOFCOM_China) October 12, 2025  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-31/r3brrf57/1756624936images_2.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வர்த்தகப், போர், வேண்டாம், ஆனால், நாங்கள், பயப்படவில்லை, ட்ரம்பின், 100, வரிக்கு, சீனா, பதில்</media:keywords>
    </item>
    <item>
        <title>சீனா: திருமணத்திற்கு வந்த தோழிகளை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட நபர்கள்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/சீனா-திருமணத்திற்கு-வந்த-தோழிகளை-வலுக்கட்டாயமாக-முத்தமிட்ட-நபர்கள்-வைரல்-வீடியோவின்-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/சீனா-திருமணத்திற்கு-வந்த-தோழிகளை-வலுக்கட்டாயமாக-முத்தமிட்ட-நபர்கள்-வைரல்-வீடியோவின்-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ சீனாவில் நடந்த திருமணம் ஒன்றில் மணப்பெண்ணின் தோழிகளை முன் பின் தெரியாத நபர்கள் கட்டாயப்படுத்தி முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது போன்ற கொடூர செயல்கள், திருமணக் குறும்பு என்ற பெயரில் அரங்கேற்றப்படுவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனின் நண்பர்கள் சிலர் மணப்பெண்ணின் இரண்டு தோழிகளைப் பிடித்து வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளனர்.china weddingஇந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. வைரலான வீடியோவின் படி, அந்த இரண்டு பெண்களும் மிகுந்த வேதனையுடன் காணப்பட்டுள்ளனர். இந்தச் செயலைச் செய்த மணமகனின் நண்பர்கள் அந்த மணப்பெண் தோழிகளுக்கு முன் பின் தெரியாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், சீனாவின் சில கிராமங்களில் திருமணத்தின்போது இது போன்ற ஹன் நாவோ என்ற பெயரில் கேளிக்கைகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் சில சீன கிராமப்புறப் பகுதிகளில் பிரபலமான &quot;ஹுன் நாவோ&quot; என்ற திருமண குறும்பு, பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் செயலுக்கு இணையவாசிகள் மத்தியில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.3000 ஆண்டுகள் வழக்கம்; இறந்தவர்களை திருமணம் செய்து கொள்ளும் சீன மக்கள்- இதன் பின்னணி என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-10/dqxwho1e/hero-imag-2025-10-10T114015.542.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சீனா:, திருமணத்திற்கு, வந்த, தோழிகளை, வலுக்கட்டாயமாக, முத்தமிட்ட, நபர்கள், வைரல், வீடியோவின், பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>உலக நாடுகளுக்கு சீனா வைத்த செக்; 100% வரியை உயர்த்திய ட்ரம்ப் &amp; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/உலக-நாடுகளுக்கு-சீனா-வைத்த-செக்-100-வரியை-உயர்த்திய-ட்ரம்ப்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/உலக-நாடுகளுக்கு-சீனா-வைத்த-செக்-100-வரியை-உயர்த்திய-ட்ரம்ப்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை, அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தது. சீனாவும் அமெரிக்கா மீது 110 சதவிகித வரை வரி விதித்தது. அதன் பின், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்த வரிகள் நிறுத்திவைக்கப்பட்டன. தற்போது அமெரிக்கா சீனா மீது 30 சதவிகித வரியை விதித்துள்ளது. Donald trump - டொனால்ட் ட்ரம்ப்சீனா செக்
இந்த நிலையில், கடந்த வாரம், சீனா தனது அரிய கனிம வளங்களின் ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அவை வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளது. இது இந்தியா, அமெரிக்கா உள்பட பல உலக நாடுகளைப் பாதிக்கும். பெரும்பாலான உலக நாடுகளுக்கு சீனா தான் அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அதற்கு சீனா கட்டுப்பாடுகளை விதிக்கும் போது, உலக நாடுகளில் உற்பத்திகள் பாதிக்கும். ஏற்கெனவே ட்ரம்ப் வரியால் பாதித்துள்ள உலக நாடுகளுக்கு இது கூடுதல் நெருக்கடியைத் தரும்.ட்ரம்ப் உத்தரவு இதனையடுத்து தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனா மீது கூடுதல் 100 சதவிகித வரியை விதித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், &#039;சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உலக நாடுகளை மிகவும் பாதிக்கும்&#039; என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூடுதல் வரி வரும் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். இதனால், நவம்பர் 1-ம் தேதி முதல், சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் 130 சதவிகிதம் வரி விதிக்கப்படும். இதற்கு சீனா என்ன எதிர்வினையாற்றும் என்று நினைக்கிறீர்கள் மக்களே?Nobel Prize: ``அதிபர் ட்ரம்ப் தகுதியானவர்&quot; - வைரலாகும் நெதன்யாகு பகிர்ந்த AI படம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-20/959spw4p/Trump-Xi-Jinping.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>உலக, நாடுகளுக்கு, சீனா, வைத்த, செக், 100, வரியை, உயர்த்திய, ட்ரம்ப், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>Gaza: ஹமாஸ் &amp; இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? &amp;  ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?</title>
        <link>https://dailytopnewz24.com/gaza-ஹமாஸ்-இஸ்ரேல்-போர்-இதுவரை-நடந்தது-என்ன-ட்ரம்ப்பின்-அமைதி-திட்டம்-கைகொடுக்குமா</link>
        <guid>https://dailytopnewz24.com/gaza-ஹமாஸ்-இஸ்ரேல்-போர்-இதுவரை-நடந்தது-என்ன-ட்ரம்ப்பின்-அமைதி-திட்டம்-கைகொடுக்குமா</guid>
        <description><![CDATA[ பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் காசா நகரம் முழுவதும் கட்டுமானங்கள் தரைமட்டமாகியிருக்கின்றன. நீர், உணவு ஆதாரங்களை இஸ்ரேல் கட்டுப்படுத்தியிருப்பதால் கடும் பஞ்சம் நிலவுகிறது. போரில் இதுவரையில் 67,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிவாரண உதவிகளைப் பெற அமெரிக்க-இஸ்ரேலிய அமைப்புகளிடம் கையேந்திய தந்தையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் வீரர்களின் தோட்டாக்களுக்கும், அதிநவீன - பல கோடிகள் மதிப்புள்ள போர்விமானங்கள் வீசிய குண்டுகளுக்கும், பீரங்கி குண்டுகளுக்கும், ஆளில்லாத ட்ரோன்களின் தோட்டாக்களுக்கும், ஏவுகணைகளுக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர் பறிபோயிருக்கிறது.காசாசுமார் 20,000 குழந்தைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொல்லப்பட்டுள்ளனர். நாற்பதாயிரத்துக்கும் மேலான குழந்தைகள் ஊனமாக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டிலிருந்து காசா மக்களுக்கு அளிக்கப்படும் அடிப்படை மனிதாபிமான உதவிகளைக் கூட இஸ்ரேல் மறுத்து வருகிறது. உணவும், தண்ணீருமில்லாமல் எத்தனையோ குழந்தைகள் தினம் தினம் இறந்துகொண்டிருக்கின்றனர். இந்த பூமியில் மனித இனத்தின் அதி அவலமான வாழ்க்கை இதே நொடியில் காசாவில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன, இதனைக் களைய எடுக்கப்படும் முயற்சிகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் - காசா - அடிப்படைப் பிரச்னை என்ன?இன்று இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் இருக்கும் பகுதி யூதர்கள்-இஸ்லாமியர்கள்-கிறிஸ்தவர்களின் புனித இடமாக இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்தபோது, ஹிட்லரின் யூத இன அழிப்புக்குப் பிறகு, உலக நாடுகளில் பெரும்பாலானவை யூதர்களுக்கு என ஒரு நாடு இருக்க வேண்டும் என முடிவு செய்தன.1948ம் ஆண்டு பிரிட்டனுடன் பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் ஐ.நா சபையும் இணைந்து பாலஸ்தீனத்திலிருந்து நிலப்பரப்பைப் பிரித்து இஸ்ரேலை உருவாக்கின. எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான், சவுதி அரேபியா ஆகிய அரபு நாடுகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன. இதனால் அரபு - இஸ்ரேல் போர் நடைபெற்றது. அரபு நாடுகளிடையே ஒற்றுமை இல்லாததாலும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவினாலும் இஸ்ரேல் இந்தப் போரை வென்றது. பாலஸ்தீனம் - இஸ்ரேல்அப்போது முதல் இஸ்ரேலின் அண்டை நாடுகளான லெபனான், சிரியா, ஜோர்டான், மற்றும் பாலஸ்தீனப் பிரதேசங்களின் (மேற்கு கரை, காசா) நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நாடுகளுடன் இஸ்ரேல் தொடர்ச்சியாகப் போரில் ஈடுபட்டுவந்தது.பாலஸ்தீனம் சுதந்திர அரசாக 138 ஐ.நா. உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டாலும், இஸ்ரேல், அமெரிக்கா, மற்றும் சில மேற்கத்திய நாடுகள் இதை அங்கீகரிக்கவில்லை. இது எல்லை பிரச்னையையும், தலைநகர் (கிழக்கு ஜெருசலேம்) தொடர்பான தகராறுகளால் மோதலையும் ஏற்படுத்திவருகிறது.பாலஸ்தீன அங்கீகாரமும் ஹமாஸும்1987ம் ஆண்டு உருவான ஹமாஸ் அமைப்பு, 1980களில் நடந்த பாலஸ்தீன எழுச்சிக்குப் பிறகு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது. இஸ்ரேலை ஹமாஸ் அதிகாரப்பூர்வ நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. பாலஸ்தீனத்தின் மற்றொரு அரசியல் இயக்கமான பத்தா (Fatah) மதச்சார்பற்ற, தேசியவாத அமைப்பாகும். இஸ்ரேலுடன் இருநாட்டுத் தீர்வு என்ற உடன்பாட்டை எட்ட முயற்சிக்கிறது. 2006ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பத்தா - ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் விளைவாக காசாவை முழுமையாக ஹமாஸ் கைப்பற்றியது. ஹமாஸ்  படையினர் மேற்குகரைப் பகுதியை பத்தா நிர்வகிக்கிறது. அதில் 60% பகுதிகள் முழுமையாக இஸ்ரேலின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளன. நிர்வாகத்திலும் இஸ்ரேலின் தலையீடு உள்ளது. எல்லைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தும் இஸ்ரேல் கண்காணிப்பில் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகளும் இஸ்ரேலைக் கடந்தே வருகின்றன. பாலஸ்தீன போலீஸுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் அனுமதி இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி இல்லை. மேற்குகரைக்குள் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் ராணுவம் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடலாம். ஆக, மேற்குகரை என்பது முழுமையாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொம்மை பாலஸ்தீன அரசு. இஸ்ரேலை ஹமாஸ் முழுமையாக எதிர்ப்பதுடன் பாலஸ்தீனத்துக்குள் இஸ்ரேலின் தலையீட்டைச் சிறிதும் விரும்பவில்லை. காசா பகுதி மேற்குகரையில் இருந்து துண்டிக்கப்பட்டு, இஸ்ரேலின் முற்றுகையில் இருப்பதால் 2007ம் ஆண்டு முதல் மக்கள் கிட்டத்தட்ட சிறையில் வாழ்வதுபோன்ற சூழல் ஏற்பட்டது. மின்சாரம், தண்ணீர், மருந்து, உணவு ஆகியவற்றை இஸ்ரேல் கட்டுப்படுத்தி காசாவில் நிர்வாகத்தைச் சீர்குலைத்தது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக ஹமாஸ் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. 2020ம் ஆண்டு Abraham Accords உடன்படிக்கைக்குப் பிறகு யு.ஏ.இ, பஹ்ரைன், மொராக்கோ, சூடான் உள்ளிட்ட சில அரேபிய நாடுகளுடன் ஹமாஸ் உறவை மேம்படுத்தியது. சிரியா, லெபனான், ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் இஸ்ரேலைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.ஹமாஸ் - இஸ்ரேல் போர்தீவிர வலதுசாரியான நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் மேற்குகரையில் யூத குடியேற்றங்களைப் பெருக்கியது இஸ்ரேல். மேற்குகரையில் பாலஸ்தீன அரசை மேலும் பலவீனமாக்கியது. இந்தச் சூழலில் அக்டோபர் 7, 2023ல் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை நடத்தியது. மிகப் பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குள் சென்ற ஹமாஸ் வீரர்கள் நூற்றுக்கணக்கானோரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வந்தனர். இந்தத் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முழுமையான போரை அறிவித்தார். அதுவே காசாவில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. ஹமாஸை முழுமையாக அ ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-07/mt21khbg/Palestein-Flag" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gaza:, ஹமாஸ், இஸ்ரேல், போர், இதுவரை, நடந்தது, என்ன, ட்ரம்ப்பின், அமைதி, திட்டம், கைகொடுக்குமா</media:keywords>
    </item>
    <item>
        <title>ட்ரம்பிற்கு &amp;apos;நோ&amp;apos; நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் &amp; கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்?</title>
        <link>https://dailytopnewz24.com/ட்ரம்பிற்கு-நோ-நோபல்-பரிசு-அளவிட-முடியாத-ஆசை-கனவு-புலம்பல்-கேட்டும்-கிடைக்காமல்-போனது-ஏன்</link>
        <guid>https://dailytopnewz24.com/ட்ரம்பிற்கு-நோ-நோபல்-பரிசு-அளவிட-முடியாத-ஆசை-கனவு-புலம்பல்-கேட்டும்-கிடைக்காமல்-போனது-ஏன்</guid>
        <description><![CDATA[ &#039;எனக்கில்ல... எனக்கில்ல...&#039; - இது திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் பிரபல வசனம். இது தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தான் சரியாக பொருந்தும். கிட்டத்தட்ட 9 மாதங்களாக, ஆசை ஆசையாய் அவர் எதிர்பார்த்துகொண்டிருந்த நோபல் அமைதி பரிசு அவரது கைகளுக்கு வந்து &#039;இந்த ஆண்டு&#039; சேரவில்லை. முதன்முதலாக...
ட்ரம்ப் தனது நோபல் பரிசு ஆசையை முதன்முதலாக வெளிப்படுத்தியது கடந்த பிப்ரவரி மாதத்தில். கடந்த பிப்ரவரி மாதம், வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் ட்ரம்பை சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. அப்போது தான் முதன்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், &#039;நான் நோபல் அமைதி பரிசுக்கு தகுதியானவன். ஆனால், எனக்கு தரமாட்டார்கள்&#039; என்ற பேச்சை எடுத்தார். அதன் பின், நோபல் பரிசு ஆசையை 15-க்கும் மேற்பட்ட இடங்களில், நேரங்களில், பற்பல டோன்களில் மாற்றி மாற்றி சொல்லிவிட்டார் ட்ரம்ப். ட்ரம்ப் | நோபல் பரிசுNobel Prize: விதிகள் மீறப்படுமா? ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுமா?அசிம் முனீருக்கு கிடைத்த விருந்து
கடந்த மே மாதம், இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, அமெரிக்கா சென்றிருந்தார் பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீர். அசிம் முனீரின் அந்தப் பயணம் ஆரம்பத்தில் அமெரிக்க அதிகாரிகள் உடனானதாக தான் இருந்தது. ஆனால், அப்போது ஒரு நிகழ்வில், &#039;இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தியதற்காக ட்ரம்பிற்கு நோபல் பரிசு தர வேண்டும்&#039; என்று அசிம் முனீர் பேசினார். உடனே, ட்ரம்ப் அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்து அனுப்பினார். பின்னர், செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ட்ரம்பை நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைத்தார். பரிசு கொடுத்த நெதன்யாகு
கடந்த ஜூலை மாதம், அமெரிக்கா சென்றிருந்தார் நெதன்யாகு. அப்போது நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைத்த நகலை ட்ரம்பிற்கு பரிசாக வழங்கினார் நெதன்யாகு. கடந்த ஜூலை மாதம், கம்போடியா - தாய்லாந்து இடையே போர் நடந்தது. அதை முடிவுக்கு கொண்டு வந்ததில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பங்கு மிக முக்கியமானது. இதனையடுத்து, கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரைகள் அனைத்துமே ட்ரம்பிற்கு அதிக சந்தோஷத்தை தந்தத்துடன், நோபல் பரிசு ஆசையை மேலும் தூண்டியது.ட்ரம்ப் - நெதன்யாகு``6 மாத ஆட்சியில் 5 போர்களை நிறுத்தினார்; நோபல் பரிசு கொடுக்கணும்&#039;&#039; - ட்ரம்ப் செயலாளர் சொல்வதென்ன?மிகவும் எதிர்பார்த்த பரிந்துரை... 
ஆனால், ட்ரம்ப் மிகவும் எதிர்பார்த்த ஒரு பரிந்துரை மட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. அது தான் இந்திய பிரதமர் மோடியின் பரிந்துரை. கடந்த மே மாதம் நடந்த இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை &#039;நான் தான்&#039; முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று தொடர்ந்து ஜெபித்து வருகிறார் ட்ரம்ப். ஆனால், அதை இன்று வரை... இந்த நொடி வரை இந்தியாவும், இந்திய பிரதமர் மோடியும் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், நோபல் பரிசுக்கும் ட்ரம்பை பரிந்துரைக்கவில்லை மோடி. காரணம், மோடி ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தால், ட்ரம்ப் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தியதுபோல ஆகிவிடும். இதனால், இதை முற்றிலும் தவிர்த்துவிட்டார் மோடி. &#039;நண்பன்... நண்பன்...&#039; என்று தான் பறைசாற்றி வந்த ஒருவர், தன்னை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கவில்லை என்பது ட்ரம்பிற்கு சற்று அதிருப்தி. தேர்வு குழுவின் விமர்சனம்
நோபல் பரிசு பெறுபவர்களை ஐந்து பேர் கொண்டு குழு தேர்ந்தெடுக்கும். ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ், அஸ்லே டோஜே, அன்னே எங்கர், கிறிஸ்டின் கிளெமெட், கிரை லார்சன் ஆகியோர் தான் இந்த ஆண்டின் ஐந்து பேர் கொண்டு குழு. நோபல் கமிட்டியின் தலைவரான ஃப்ரைட்னஸ், இந்தக் குழு எந்த அழுத்தத்திற்கு அடிப்பணியாது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுவிட்டார். அவர் மறைமுகமாக சாடியது ட்ரம்பை தான் என்பது அனைவருக்குமே தெரியும். லார்சன் ட்ரம்ப் மேற்கொண்ட சில நிதி ரத்துகளை விமர்சித்திருந்தார். கிளெமெட் ட்ரம்பை கடுமையாக சாடியிருந்தார். எங்கர் ட்ரம்ப் குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவித்ததில்லை. டோஜே சற்று ட்ரம்பிற்கு ஆதாரவாகத் தான் பேசிவந்தார். ஆக, ஐந்தில் ஒருவரே ட்ரம்பிற்கு ஓரளவு ஆதாரவானவர் என்று எடுத்துகொள்ளலாம். ட்ரம்ப்&#039;எத்தனை செய்துள்ளேன்; இருந்தும்..!&#039; - நோபல் பரிசுக்காக புலம்பி தீர்க்கும் ட்ரம்ப்டோன் டவுன் செய்த ட்ரம்ப்
ஏனோ என்னவோ தெரியவில்லை. ட்ரம்ப் சமீபமாக தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்பதை டோன் டவுன் செய்து, &#039;எனக்கு நோபல் பரிசு தரமாட்டார்கள்&#039;, &#039;எனக்கு தருவார்களா என்பது தெரியவில்லை&#039;, &#039;எப்படி இருந்தாலும் எனக்கு தரமாட்டார்கள்&#039;, &#039;எனக்கு நோபல் பரிசு தரக்கூடாது என்பதற்கான காரணத்தைத் தேடுவார்கள்&#039; என்று கூறுவதை தொடங்கிவிட்டார். இருந்தாலும், அந்த ஆசையை மட்டும் இன்னமும் விடவில்லை ட்ரம்ப்.அதற்கான அடையாளம் தான் நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்ட &#039;The Peace President&#039; என்கிற பதிவு.சமீபத்தில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது இஸ்ரேல்-காசா போர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை, இந்தப் போர் நிறுத்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் வெற்றிகரமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பு கையெழுத்திட்டுருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் ட்ரம்பின் முயற்சிகளே.அதனால், இதற்கு அழுத்தம் கொடுத்தே வெள்ளை மாளிகை அந்தப் பதிவைப் போட்டுள்ளது.இன்னொரு பக்கம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ட்ரம்ப் நோபல் பரிசு பெறுவதைப்போல சித்தரிப்பு படத்தை தனது பிரதமர் அலுவல் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.ஆனால், இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் கடந்த திங்கட்கிழமையே முடிவு செய்யப்பட்டுவிட்டது.THE PEACE PRESIDENT. pic.twitter.com/bq3nMvuiSd— The White House (@WhiteHouse) October 9, 2025 ``6 மாத ஆட்சியில் 5 போர்களை நிறுத்தினார்; நோபல் பரிசு கொடுக்கணும்&#039;&#039; - ட்ரம்ப் செயலாளர் சொல்வதென்ன?அடிப்படை பிரச்னை
நோபல் பரிசுக்கான பரிந்துரையை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31-ம் தேதிக்குள் செய்திருக்க வேண்டும ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-10/08ahifsv/ChatGPT-Image-Oct-10-2025-012539-PM.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ட்ரம்பிற்கு, நோ, நோபல், பரிசு, அளவிட, முடியாத, ஆசை, கனவு, புலம்பல், கேட்டும், கிடைக்காமல், போனது, ஏன்</media:keywords>
    </item>
    <item>
        <title>Nobel: ட்ரம்பிற்கு இல்லை; வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு; யார் இவர்?</title>
        <link>https://dailytopnewz24.com/nobel-ட்ரம்பிற்கு-இல்லை-வெனிசுலாவைச்-சேர்ந்த-மரியா-கொரினாவுக்கு-அமைதிக்கான-நோபல்-பரிசு-யார்-இவர்</link>
        <guid>https://dailytopnewz24.com/nobel-ட்ரம்பிற்கு-இல்லை-வெனிசுலாவைச்-சேர்ந்த-மரியா-கொரினாவுக்கு-அமைதிக்கான-நோபல்-பரிசு-யார்-இவர்</guid>
        <description><![CDATA[ இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர்கள். 94 பேர் நிறுவனங்கள். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machad). இவர் வெனிசுலா அரசியல்வாதி ஆவார்.அமைதிக்கான நோபல் பரிசு1967-ம் ஆண்டு பிறந்த இவர், வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வந்துள்ளார். அந்த நாட்டில் சர்வாதிகாரம் மாறி ஜனநாயகம் மலர இவர் முக்கிய காரணம். ஜனநாயகப் போராட்டங்களின் போது, இவர் பல நாள்கள் மறைந்து வாழ்வதாக இருந்தது. இவரது உயிருக்கு மிகுந்த ஆபத்து இருந்தாலும், அவர் தொடர்ந்து வெனிசுலாவிலேயே இருந்து, ஜனநாயகத்திற்காகப் போராடி வந்தார். இவர் அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து, போராட்டத்தை அமைதி முறையில் நடத்தி வெற்றியும் கண்டுள்ளார். மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado)மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado)மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado)மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado)மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado)மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado)இவருக்கு இந்தப் பரிசு வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும். ட்ரம்பிற்கு ஏன் நோபல் அமைதி பரிசு கிடைக்கவில்லை?இந்தப் பரிசுக்கான பரிந்துரைகள் ஜனவரி 31-ம் தேதிக்குள் சென்றிருக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் எந்தெந்தப் போரை நிறுத்தியதாகக் கூறுகிறாரோ, அவைப் பெரும்பாலும் நடந்தது ஜனவரிக்குப் பிறகே.  Nobel Prize: ``அதிபர் ட்ரம்ப் தகுதியானவர்&quot; - வைரலாகும் நெதன்யாகு பகிர்ந்த AI படம்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-10/bocad697/WhatsApp-Image-2025-10-10-at-2.33.05-PM.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Nobel:, ட்ரம்பிற்கு, இல்லை, வெனிசுலாவைச், சேர்ந்த, மரியா, கொரினாவுக்கு, அமைதிக்கான, நோபல், பரிசு, யார், இவர்</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்தியா மீதான 50% வரியால் அமெரிக்காவிற்கு என்னென்ன பாதிப்புகள்? &amp; ட்ரம்பிற்கு எதிர்க்கட்சி கடிதம்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-மீதான-50-வரியால்-அமெரிக்காவிற்கு-என்னென்ன-பாதிப்புகள்-ட்ரம்பிற்கு-எதிர்க்கட்சி-கடிதம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-மீதான-50-வரியால்-அமெரிக்காவிற்கு-என்னென்ன-பாதிப்புகள்-ட்ரம்பிற்கு-எதிர்க்கட்சி-கடிதம்</guid>
        <description><![CDATA[ கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கினாலும் இன்னமும் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒரு நல்ல முடிவை எட்டவில்லை. தற்போது இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரி அமலில் உள்ளது. இதனால், இந்தியா - அமெரிக்கா உறவில் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 21 அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் (Lawmakers) கடிதம் எழுதியுள்ளனர். இந்த 21 பேரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.ட்ரம்ப் - பரஸ்பர வரிஅதில் குறிப்பிட்டுள்ளதாவது: &quot;அமெரிக்க அதிபர் ட்ரம்பின் செயலால் அமெரிக்காவின் விரோத நாடுகளான சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இந்தியா தனது பொருளாதார மற்றும் ராஜாங்க உறவை அதிகப்படுத்தி உள்ளது. இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவிகித வரி இந்திய உற்பத்தியாளர்களைக் கடுமையாக பாதித்துள்ளது. இது இன்னொரு பக்கம், அமெரிக்கா வாடிக்கையாளர்களுக்கு விலையை உயர்த்துகிறது. மேலும், அமெரிக்க சந்தைக்குள் பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அமெரிக்க நிறுவனங்களின் விநியோக சங்கிலியையும் பாதிக்கிறது. இந்திய உறவு மிக முக்கியமானது
இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவு என்பது மிக மிக முக்கியமானது. இரு நாடுகளிலுமே இதை நம்பி ஆயிரக்கணக்கானோரின் வேலை இருக்கிறது. செமிகண்டக்டர், மருத்துவம், எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவின் மிக முக்கியமான மூலப்பொருள்களை நம்பி அமெரிக்க உற்பத்தியாளர்கள் இருக்கின்றனர். இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் உலகிலேயே மிக வேகமாக வளரும் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இருக்கின்றன.அமெரிக்காபாதிக்கும் அமெரிக்க குடும்பங்கள்
அமெரிக்காவில் பில்லியன் டாலர்கள் கணக்கில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்திருப்பதன் மூலம் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இப்போது விதிக்கப்பட்டிருக்கும் வரிகள் இந்த உறவைப் பாதிக்கின்றன. விலைவாசி உயர்வு மூலம் பல அமெரிக்க குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், உலக அளவில் அமெரிக்க நிறுவனங்கள் போட்டியிடுவதையும் பாதிக்கிறது. இதனால், இந்தப் பிரச்னையை விரைவில் சரிசெய்ய வேண்டும்&quot; என்று கடிதத்தில் எழுதியுள்ளனர்.US Tariff: ``இந்தியா மீது ட்ரம்ப் 50% வரி விதிக்க உண்மையான காரணம் இதுதான்&#039;&#039; - ஜெஃப்ரிஸ் அறிக்கை ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-08-12/i9z3n1yy/040.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, மீதான, 50, வரியால், அமெரிக்காவிற்கு, என்னென்ன, பாதிப்புகள், ட்ரம்பிற்கு, எதிர்க்கட்சி, கடிதம்</media:keywords>
    </item>
    <item>
        <title>`முதுகுவலியை குணப்படுத்த&amp;apos; &amp; 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி; அடுத்து நடந்தது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/முதுகுவலியை-குணப்படுத்த-8-தவளைகளை-உயிருடன்-விழுங்கிய-மூதாட்டி-அடுத்து-நடந்தது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/முதுகுவலியை-குணப்படுத்த-8-தவளைகளை-உயிருடன்-விழுங்கிய-மூதாட்டி-அடுத்து-நடந்தது-என்ன</guid>
        <description><![CDATA[ சீனாவில், 82 வயதான மூதாட்டி ஒருவர், தனது நாள்பட்ட முதுகுவலியை குணப்படுத்த, நாட்டு வைத்தியம் என்ற பெயரில் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்சோவைச் சேர்ந்த 82 வயதான ஜாங் என்பவர், பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு நவீன மருத்துவ சிகிச்சைகளை முயற்சி செய்தும், அவருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நாட்டு வைத்திய முறை குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அதன்படி உயிருடன் தவளைகளை விழுங்கினால், முதுகுவலி உடனடியாக குணமாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த வினோதமான வைத்தியத்தை முழுமையாக நம்பிய ஜாங், அருகிலிருந்த நீர்நிலையில் எட்டு சிறிய தவளைகளைப் பிடித்து, அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக உயிருடன் விழுங்கியுள்ளார்.தவளைகளை விழுங்கியபின் மூதாட்டி ஜாங்கிற்கு எதிர்பாராத விதமாக கடுமையான வயிற்று வலியும், குமட்டலும், உடல் சோர்வும் ஏற்பட்டதாக சவுத் மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரின் குடும்பதார்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்கேன் மற்றும் பிற பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரது வயிற்றில் இருந்த தவளைகளின் எச்சங்களால் ஏற்பட்ட கடுமையான தொற்று மற்றும் செரிமானக் கோளாறுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தனர்.மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலனாக, மூதாட்டி ஜாங்கின் உடல்நிலை படிப்படியாக தேறி தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-08/9fqzopll/36dff52e-03db-4784-a2f3-d436993d9580-1.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முதுகுவலியை, குணப்படுத்த, தவளைகளை, உயிருடன், விழுங்கிய, மூதாட்டி, அடுத்து, நடந்தது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;quot;இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவி விலக வேண்டுமா?&amp;quot; &amp; இஸ்ரேலியர்களின் மனநிலை குறித்த ஆய்வு சொல்வது என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/இஸ்ரேல்-பிரதமர்-நெதன்யாகு-பதவி-விலக-வேண்டுமா-இஸ்ரேலியர்களின்-மனநிலை-குறித்த-ஆய்வு-சொல்வது-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/இஸ்ரேல்-பிரதமர்-நெதன்யாகு-பதவி-விலக-வேண்டுமா-இஸ்ரேலியர்களின்-மனநிலை-குறித்த-ஆய்வு-சொல்வது-என்ன</guid>
        <description><![CDATA[ இதே நாள் 2023 அன்று இஸ்ரேல் - காஸா போர் தொடங்கியது. இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. சர்வதேச விதி மீறலில் தொடங்கி, ஐ.நா சபையை அவமானப்படுத்தியது, சர்வதேச நீதிமன்றத்தைப் புறக்கணித்தது, சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தைத் துச்சமென நடத்தியது என இஸ்ரேல் நடந்துகொண்ட விதங்கள் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டன. ஆனாலும், கடந்த ஆறு மாதங்களாகத்தான் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனங்கள் வலுப்பெறத் தொடங்கியுள்ளன.காசாகாசாவில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள், செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சம், கல்விக்கூடங்களும், மருத்துவமனைகளும் குறிவைத்து தகர்க்கப்பட்டது, அகதிகள் முகாம் மீது தாக்குதல், சர்வதேச உதவிகளை காசாவுக்குள் அனுமதிக்காமல் தடுத்தது, 66,000-க்கும் மேற்பட்டவர்களைக் கொலை செய்தது உள்ளிட்ட பல காரணங்கள் இஸ்ரேல் மீது கண்டனம் வலுப்பெறுவதற்கு அடித்தளமிட்டன. இந்த நிலையில், இஸ்ரேலியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என ஆய்வு செய்திருக்கிறது இஸ்ரேல் ஜனநாயக நிறுவனம்.இது தொடர்பாக அந்த நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில், ``காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டதாகப் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். பணயக்கைதிகள் ஆபத்தில் இருப்பதுதான் இந்தப் போர் முடிவடைய வேண்டும் என்பதற்கான முக்கிய காரணமாகக் கருதுகின்றனர். 66 சதவிகித இஸ்ரேலியர்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலைச் சுற்றியுள்ள தோல்விகளுக்குப் பொறுப்பேற்று உடனடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என 45 சதவிகிதப் பேரும், போர் நிறுத்தத்துக்குப் பிறகு பதவி விலக வேண்டும் என 19 சதவிகிதப் பேரும் தெரிவித்திருக்கின்றனர்.ட்ரம்ப் - நெதன்யாகு18 சதவிகிதம் பேர் இந்தப் போருக்கு நெதன்யாகுதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் ராஜினாமா செய்ய தேவையில்லை எனவும் கருதுகின்றனர். வெறும் 13 சதவிகிதம் பேர் மட்டுமே நெதன்யாகுவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கின்றனர். பெரும்பான்மையான மையவாதிகள் 63 சதவிகித பேரும், இடதுசாரி யூதர்கள் 88 சதவிகித பேரும் நெதன்யாகு இப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறது.எஸ்-400 ரஷ்ய ஏவுகணையை வாங்கும் இந்தியா; மீண்டும் அமெரிக்காவை பகைக்கிறதா? ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-07/wk2a2jb3/G2p3SmEW0AA2Bqs.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இஸ்ரேல், பிரதமர், நெதன்யாகு, பதவி, விலக, வேண்டுமா, இஸ்ரேலியர்களின், மனநிலை, குறித்த, ஆய்வு, சொல்வது, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>டெஸ்லாவை விஞ்சும் BYD கார்கள்; அமெரிக்காவை வீழ்த்திய சீனா; பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/டெஸ்லாவை-விஞ்சும்-byd-கார்கள்-அமெரிக்காவை-வீழ்த்திய-சீனா-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/டெஸ்லாவை-விஞ்சும்-byd-கார்கள்-அமெரிக்காவை-வீழ்த்திய-சீனா-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதில் குறிப்பிடத்தக்கது வரி. இறக்குமதி பொருள்களுக்கு அவர் விதித்த வரிகளால் பொருளாதார சிக்கல்களை அமெரிக்கா சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவின் மாபெரும் சந்தையாக இங்கிலாந்து (UK) உருவாகியிருக்கிறது. இது தொடர்பாக சீனாவின் மாபெரும் கார் தயாரிப்பு நிறுவனமான BYD வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``UK-வில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையை ஒப்பிடுகையில் 880% விற்பனை அதிகரித்திருக்கிறது.BYD கார்சீனாவை விட UK இப்போது பெரும் சந்தையாக மாறியிருக்கிறது. கடந்த மாதம் இங்கிலாந்தில் மட்டும் 11,271 கார்கள் விற்கப்பட்டிருக்கின்றன. இதில், Seal U ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டியின் SUV பிளாக் மாடல் பெருமளவில் விற்பனையாகியிருக்கிறது&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறது.வாகனத் துறையின் அமைப்பான SMMT வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, `கடந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகள் சீனாவின் இவி வாகனங்களுக்கு 45 சதவிகிதம் வரை கூடுதல் வரி விதித்தது. அதே போல அமெரிக்கா போன்ற நாடுகளும் வரிவிதிப்பை அதிகப்படுத்தியது. ஆனால் இங்கிலாந்து மின்சார வாகனத்துக்கு எந்த வித சுங்க வரியையும் விதிக்கவில்லை.அதனால் சீனாவின் BYD போன்ற நிறுவனங்களுக்கு இங்கிலாந்து சிறந்த சந்தையாக இருக்கிறது. கடந்த மாதம் இவி வாகன விற்பனை 73,000 என அதிகரித்திருக்கிறது. பிளாக் இன் ஹைபிரிட் கார்களின் விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது.உலகளவில் அமெரிக்காவின் டெஸ்லாவை விட சீனாவின் BYD முன்னிலையில் உள்ளது. ஜகுவார் போன்ற ஐரோப்பிய ஒன்றிய கார்களைவிட BYD முன்பதிவும் அதிகரித்திருக்கிறது. அதே நேரம் இங்கிலாந்து அரசு இவி பயன்பாட்டை அதிகரிப்பவர்களுக்கு 875 டாலர் தள்ளுபடியையும் அதிகரித்திருக்கிறது. இதனால் கார் உற்பத்தியையும், விற்பனையையும் BYD அதிகரித்திருக்கிறது.கியா ஸ்போர்டேஜ் (Kia Sportage), ஃபோர்டு பூமா (Ford Puma) மற்றும் நிசான் காஷ்காய் (Nissan Qashqai), சீன மாடல்களான ஜேகோ 7 (Jaecoo 7) மற்றும் BYD சீல் யு ஆகியவை இங்கிலாந்து விற்பனையில் முதல் 10 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.``நான் நலமாக இருக்கின்றேன், யாரும் பதற்றப்பட வேண்டாம்&#039;&#039; - கார் விபத்து குறித்து விஜய் தேவரகொண்டா ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-07/blse4x53/G2RpcrAXIAAyuJR.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>டெஸ்லாவை, விஞ்சும், BYD, கார்கள், அமெரிக்காவை, வீழ்த்திய, சீனா, பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>தொடர்ந்து உயரும் வெள்ளியை வாங்கிக் குவிக்கும் ரஷ்யா; இது அமெரிக்காவிற்கு எதிரான ரஷ்யாவின் உத்தியா?</title>
        <link>https://dailytopnewz24.com/தொடர்ந்து-உயரும்-வெள்ளியை-வாங்கிக்-குவிக்கும்-ரஷ்யா-இது-அமெரிக்காவிற்கு-எதிரான-ரஷ்யாவின்-உத்தியா</link>
        <guid>https://dailytopnewz24.com/தொடர்ந்து-உயரும்-வெள்ளியை-வாங்கிக்-குவிக்கும்-ரஷ்யா-இது-அமெரிக்காவிற்கு-எதிரான-ரஷ்யாவின்-உத்தியா</guid>
        <description><![CDATA[ தினம் தினம் தங்கம் விலை அதிகரித்து வருவதுபோல, வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இந்த வெள்ளி விலை உயர்விற்கு, தங்கம் விலை உயர்வும், வெள்ளியின் தேவையும் தான் காரணம். இந்த நிலையில், &#039;ரஷ்யா தொடர்ந்து வெள்ளியை வாங்கி குவித்து வருகிறது&#039; என்கிற புதிய தகவலை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்&quot;தற்போது ரஷ்யாவின் மத்திய வங்கி வெள்ளியை வாங்கி குவித்து வருகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை உலக நாடுகளின் வங்கி, வெள்ளியை வாங்கிக் குவித்ததைப் பெரிதாகக் கேள்விப்பட்டதில்லை. தங்கத்தைத் தான் அதன் மதிப்பு கருதி உலக வங்கிகள் வாங்கும். வெள்ளி பெரும்பாலும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக தான் பயன்படுத்தப்படும். அப்படியிருக்கையில், ரஷ்யா வெள்ளியை வாங்கிக் குவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது.வெள்ளை மாளிகையும், வெள்ளியும்கடந்த மாதம், வெள்ளை மாளிகை அரிய கனிமங்களின் பட்டியலில் வெள்ளியைச் சேர்த்தது. இது வெள்ளியின் விலையை உயர்த்தலாம் என்று அப்போது கணிக்கப்பட்டது. அநேகமாக, அப்போதிருந்துதான் ரஷ்யா வெள்ளியை வாங்கத் தொடங்கியிருக்கும். ரஷ்யா - உக்ரைன் போரை முன்னிட்டு, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குபவர்கள் மீது வரி விதிக்கப்படுகிறது. ஆனால், வெள்ளி தங்கள் வசம் இருந்தால், இந்த விஷயத்தில் தங்கள் மீது வரி விதிக்க முடியாது என்று ரஷ்யா கருதலாம். காரணம், தொழிற்சாலைகளில் மில்லியன் கணக்கில் வெள்ளியின் பயன்பாடு இருக்கிறது. அதனால், இது ரஷ்யாவின் புதிய உத்தியாக இருக்கலாம்&quot;.பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள &#039;Vikatan Play&#039;-ல் &#039;Opening Bell Show&#039; தினமும் காலை கேளுங்கள்.இந்தப் பாட்காஸ்ட்டை முழுவதும் கேட்க இங்கே கிளிக் செய்யவும். Vikatan Play-ல் Opening Bell Show ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-07-03/984k285c/How-to-invest-in-silver.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>தொடர்ந்து, உயரும், வெள்ளியை, வாங்கிக், குவிக்கும், ரஷ்யா, இது, அமெரிக்காவிற்கு, எதிரான, ரஷ்யாவின், உத்தியா</media:keywords>
    </item>
    <item>
        <title>காந்தாரா: &amp;quot;படம் பார்த்த அமெரிக்கர்கள், &amp;apos;இது எங்க கதை&amp;apos; என்று சொன்னார்கள்&amp;quot; &amp; இயக்குநர் ரிஷப் ஷெட்டி</title>
        <link>https://dailytopnewz24.com/காந்தாரா-படம்-பார்த்த-அமெரிக்கர்கள்-இது-எங்க-கதை-என்று-சொன்னார்கள்-இயக்குநர்-ரிஷப்-ஷெட்டி</link>
        <guid>https://dailytopnewz24.com/காந்தாரா-படம்-பார்த்த-அமெரிக்கர்கள்-இது-எங்க-கதை-என்று-சொன்னார்கள்-இயக்குநர்-ரிஷப்-ஷெட்டி</guid>
        <description><![CDATA[ 2022-ம் ஆண்டு &#039;காந்தாரா&#039; படத்திற்குக் கிடைத்த நாடு தழுவிய வரவேற்பை அடுத்து, இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஈஸ்வர பூந்தோட்டமான காந்தாரா வனத்தையும், தனது மக்களையும் காக்க  அரச வம்சத்தினரை எதிர்த்தும், அரக்க சக்தியை எதிர்த்தும் நாயகன் போராடுவதும், குலங்களுக்கும் அரசுக்குமான போரும், அவர்களின் தெய்வ வழிபாடும்தான் இதன் கதைக்களம். Kantara Chapter 1 Kantara: Chapter 1 Review: அசரடிக்கும் மேக்கிங் - `காந்தாரா - 2&#039; தனித்து நிற்பது எங்கே?இப்படத்தைப் பலரும் பாராட்டி வரும் நிலையில் இயக்குநர் ரிஷப் ஷெட்டி, அமெரிக்காவிலிருந்து வந்த பாராட்டுதான் தனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதாக NDTVக்கு வழங்கிய நேர்காணலில் பேசியிருக்கிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் ரிஷப் ஷெட்டி, &quot;நம் நாட்டு கலாசாரத்தையும், இங்கு நடந்த பழங்கால கதை, தெய்வ வழிபாடு, அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடந்த ஒடுக்குமுறைகள், அதற்கெதிரான கிளர்ச்சிகள் ஆகியவற்றை காந்தாரா படத்தில் எடுத்திருந்தோம். ஆனால் அமெரிக்காவில் இப்படத்தைப் பார்த்துவிட்டு, இது எங்கள் கதை என்று என்னிடம் கூறியினார்கள். எனக்கும் ஒன்றுமே புரியவில்லை. பூர்வகுடி அமெரிக்கர்களுக்கும், அப்போது இருந்து அமெரிக்க அரசுக்குமிடையே நடந்த ஒடுக்குமுறைகளை காந்தாரா படத்தின் கதையின் சாராம்சத்தில் உணர்ந்ததாக அமெரிக்காவில் பலர் என்னிடம் எடுத்துச் சொல்லிப் பாராட்டினார்கள். இதுவரை எனக்குக் கிடைத்தப் பாராட்டில் இது ரொம்பவும் புதுசாக இருந்தது. காந்தாரா இயக்குநர் ரிஷப் ஷெட்டிஇங்கு இருக்கும் பிற மாநிலத்தவர்கள் இந்தக் கதையைப் புரிந்துகொள்வார்களா என்று சந்தேகப்பட்டிருக்கிறேன். ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்கள்கூட இதைத் தங்கள் கதை என்று புரிந்துகொள்ளும்போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்துச்சு. எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டு இது&quot; என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.Kantara: `நான் நடிச்சிருக்கேன்னு நிறைய பேருக்கு தெரியாது&#039; - `காந்தாரா&#039; அனுபவம் பகிரும் சம்பத் ராம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-07/0gz6zp1u/G2RZtScWoAA9Y4j.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:44 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காந்தாரா:, படம், பார்த்த, அமெரிக்கர்கள், இது, எங்க, கதை, என்று, சொன்னார்கள், இயக்குநர், ரிஷப், ஷெட்டி</media:keywords>
    </item>
    <item>
        <title>இந்திய சிறுவனுக்கு ரூ.24,000&amp;க்கு சைக்கிள் பரிசளித்த அமெரிக்க யூடியூபர் &amp; நெகிழ்ச்சியான சம்பவம்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்திய-சிறுவனுக்கு-ரூ24000-க்கு-சைக்கிள்-பரிசளித்த-அமெரிக்க-யூடியூபர்-நெகிழ்ச்சியான-சம்பவம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்திய-சிறுவனுக்கு-ரூ24000-க்கு-சைக்கிள்-பரிசளித்த-அமெரிக்க-யூடியூபர்-நெகிழ்ச்சியான-சம்பவம்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியும் யூடியூபருமான ஜெ என்பவர் , இந்திய சிறுவன் ஒருவனுக்கு புதிய சைக்கிளைப் பரிசளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது நேரலை வீடியோவின்போது சந்தித்த சிறுவனின் உடைந்த சைக்கிளைப் பார்த்து, இந்த உதவியைச் செய்துள்ளார்.American YouTuber gifts Indian boy a bicycle ஜெ (@jaystreazy) என்ற அந்த யூடியூபர், சமர்த் என்ற சிறுவனை ஒரு கடைக்கு அழைத்துச் சென்று, அவனுக்குப் பிடித்தமான ரூ.24,000 மதிப்புள்ள சைக்கிளை வாங்கிக் கொடுத்துள்ளார்.இந்த பரிசை வாங்குவதற்கு முன்பு, சிறுவனின் பெற்றோரிடம் முறையாக அனுமதி பெற்று அவர்களின் சம்மதத்துடன் இதனைச் செய்துள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த யூடியூபர் ஜெ, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தனது பயண அனுபவங்களை வீடியோவாகப் பதிவு செய்து வருகிறார். அப்படி ஒரு நாள் அவர் நேரலை வீடியோவில் இருந்தபோது, சமர்த் என்ற சிறுவன் அவரிடம் வந்து இயல்பாகப் பேசத் தொடங்கியுள்ளான். அப்போது, அந்த சிறுவனின் சைக்கிள் பாதி உடைந்த நிலையில் இருப்பதை ஜெ கவனித்துள்ளார். American YouTuber gifts Indian boy a bicycle நேரலையில் இருந்த பார்வையாளர்கள் பலரும் அந்த சிறுவனுக்குப் புதிய சைக்கிள் வாங்கிக் கொடுக்குமாறு ஜெ-யிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, ஜெ அந்த சிறுவனிடம், &quot;உனக்குப் புதிய சைக்கிள் வேண்டுமா? வா, நாம் போய் வாங்கலாம்&quot; என்று கூறி கடைக்கு அழைத்துச் சென்று, அவனுக்குப் பிடித்தமான ரூ.24,000 மதிப்புள்ள சைக்கிளை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.        View this post on Instagram            A post shared by Jay  IRL India (@jaystreazy)
 ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-13/d3y0mn5i/American-YouTuber-gifts-Indian-boy-a-bicycle" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 13 Oct 2025 17:18:43 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்திய, சிறுவனுக்கு, ரூ.24, 000-க்கு, சைக்கிள், பரிசளித்த, அமெரிக்க, யூடியூபர், நெகிழ்ச்சியான, சம்பவம்</media:keywords>
    </item>
    <item>
        <title>பிரேசில் அதிபருக்கு போன் செய்த ட்ரம்ப்; `எங்கள் மீதான வரியை குறையுங்கள்&amp;apos; கேட்ட லூலா &amp; அடுத்து என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/பிரேசில்-அதிபருக்கு-போன்-செய்த-ட்ரம்ப்-எங்கள்-மீதான-வரியை-குறையுங்கள்-கேட்ட-லூலா-அடுத்து-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/பிரேசில்-அதிபருக்கு-போன்-செய்த-ட்ரம்ப்-எங்கள்-மீதான-வரியை-குறையுங்கள்-கேட்ட-லூலா-அடுத்து-என்ன</guid>
        <description><![CDATA[ ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது மட்டுமல்ல, பிரேசில் மீதும் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறது அமெரிக்கா. இந்த வரி விதிப்பிற்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார் பிரேசில் அதிபர் லூலா. சமீபத்தில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களை ஒன்றுசேர்த்து ஆன்லைன் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார் லூலா. அதில், &#039;வரி பிளாக்மெயில் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது&#039; என்று கடுமையாக வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று லூலாவிற்கு போன் செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.ட்ரம்ப்அதுகுறித்து லூலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,&quot;இன்று காலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இருந்து போன்கால் வந்தது. நாங்கள் 30 நிமிடம் உரையாடினோம். மேலும், ஐ.நா பொதுச்சபையின் போது நியூயார்க்கில் இருவரும் பகிர்ந்துகொண்ட நல்ல தருணங்கள் குறித்து பேசினோம். இந்த நேரடி உரையாடல் என்பது மேற்கில் உள்ள இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் 201 ஆண்டுகால நட்பை வலுவாக்குவதற்கான வாய்ப்பாக நான் பார்க்கிறேன். வரிகளை நீக்க சொல்லி
இந்தப் போன்காலின்போது, ஜி-20 நாடுகளில் அமெரிக்கா வர்த்தக உபரி வைத்திருக்கும் மூன்று நாடுகளில் பிரேசிலும் ஒன்று என்று கூறினேன். மேலும், பிரேசில் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 40 சதவிகித கூடுதல் வரியையும், பிரேசில் அதிகாரிகள் மீது விதித்துள்ள தடைகளையும் நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதிபர் ட்ரம்ப் பிரேசில் துணை ஜனாதிபதி ஜெரால்டோ அல்க்மின், வெளியுறவு அமைச்சர் மௌரோ வியேரா மற்றும் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் உடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வெளியுறவுத் துறை செயலர் மார்க் ரூபியோவை நியமித்துள்ளார். லூலாஅமெரிக்கா செல்லவும்
நாங்கள் இருவரும் விரைவில் சந்தித்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம். மலேசியாவில் நடக்கும் ஆசியான் கூட்டத்தில் சந்தித்துக்கொள்ளலாம் என்று நான் பரிந்துரைத்தேன். பெலெமில் நடைபெறும் COP30-ல் பங்கேற்க ட்ரம்பை வலியுறுத்தினேன். நான் அமெரிக்கா செல்லவும் சம்மதித்துள்ளேன்&quot; என்று குறிப்பிட்டுள்ளார்.US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என்ன பேசினார்கள்?Recebi, nesta manhã (6/10), telefonema do presidente Trump. Conversamos por 30 minutos e relembramos a boa química que tivemos no encontro em Nova York por ocasião da Assembleia Geral da ONU. Considero nosso contato direto como uma oportunidade para a restauração das relações…— Lula (@LulaOficial) October 6, 2025  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-07/mz9c9l77/Brazil-Lula.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 07 Oct 2025 13:08:02 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பிரேசில், அதிபருக்கு, போன், செய்த, ட்ரம்ப், எங்கள், மீதான, வரியை, குறையுங்கள், கேட்ட, லூலா, அடுத்து, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;ஹெச்&amp;1பி விசா அதிக கட்டணம் விரைவில் ரத்தா?&amp;apos; &amp; அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர் சொல்லும் காரணம்</title>
        <link>https://dailytopnewz24.com/ஹெச்-1பி-விசா-அதிக-கட்டணம்-விரைவில்-ரத்தா-அமெரிக்க-குடிவரவு-வழக்கறிஞர்-சொல்லும்-காரணம்</link>
        <guid>https://dailytopnewz24.com/ஹெச்-1பி-விசா-அதிக-கட்டணம்-விரைவில்-ரத்தா-அமெரிக்க-குடிவரவு-வழக்கறிஞர்-சொல்லும்-காரணம்</guid>
        <description><![CDATA[ இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹெச்-1பி விசா குறித்து அதிரடி அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளார். அதன் படி, கடந்த 22-ம் தேதி முதல், இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 1 லட்சம் டாலர்களைக் கட்டணமாக செலுத்த வேண்டும். இது இந்தியாவில் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. காரணம், இந்த விசாவை விண்ணப்பிக்கும் 67 சதவிகிதத்தினர் இந்தியர்களே. சார்லஸ் கக்ஏன் செல்லாது?
இந்த நிலையில், &#039;இந்த அறிவிப்பு செல்லாது&#039; என்று அமெரிக்காவின் குடிவரவு வழக்கறிஞர் சார்லஸ் கக், &quot;புதிய வரிகளை உருவாக்குவதற்கான அதிகாரம் எந்த அதிபருக்கும் இல்லை. அதனால், ஹெச் 1பி விசாவிற்கான 1 லட்ச டாலர்கள் கட்டணம் ரத்து செய்யப்படும்&quot; என்று பதிவிட்டுள்ளார். இந்த விசா கட்டணத்திற்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை என்ன கூறுகிறது?
இந்தக் கட்டண உயர்வு சட்ட ரீதியானது தான் என்று வெள்ளை மாளிகை தரப்பு கூறுகிறது. மேலும், அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புகளை தட்டி பறிக்காமல் இருக்கவும், அவர்களின் சம்பளத்தைக் குறைக்காமல் இருப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறது. ஆனால், இதை அமெரிக்காவின் சட்ட நிபுணர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். No President has the authority to create new taxes. The $100,000 H-1B tax will be struck down. https://t.co/2pp8FMwHzJ— Charles Kuck (@ckuck) October 5, 2025  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-21/qmyfofzr/Gemini_Generated_Image_ju1rh5ju1rh5ju1r.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>ஹெச்-1பி, விசா, அதிக, கட்டணம், விரைவில், ரத்தா, அமெரிக்க, குடிவரவு, வழக்கறிஞர், சொல்லும், காரணம்</media:keywords>
    </item>
    <item>
        <title>எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்: 1,000 பேர் சிக்கித்தவிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்</title>
        <link>https://dailytopnewz24.com/எவரெஸ்ட்-சிகரத்தில்-கடும்-பனிப்புயல்-1000-பேர்-சிக்கித்தவிப்பு-மீட்புப்-பணிகள்-தீவிரம்</link>
        <guid>https://dailytopnewz24.com/எவரெஸ்ட்-சிகரத்தில்-கடும்-பனிப்புயல்-1000-பேர்-சிக்கித்தவிப்பு-மீட்புப்-பணிகள்-தீவிரம்</guid>
        <description><![CDATA[ எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இது சீனாவைச் சேர்ந்த பிராந்தியம் ஆகும். இங்கே கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் பனிப்புயல் தொடங்கியுள்ளது. அது சனிக்கிழமை முழுவதுமே தொடர்ந்துள்ளது. இதனால், சாலைகள் அடைபட்டு, ஏற்கெனவே மலையில் இருந்த டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.எவரெஸ்ட் சிகரம் | பனிப்புயல்தற்போது சிகரத்தில் சிக்கி உள்ள வீரர்களின் எண்ணிக்கை 1,000-க்கும் மேலே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தப் பிராந்தியம் கடல் மட்டத்தில் இருந்து 4,900 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் கிராமவாசிகளும், சீன மீட்புப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் ஏற்கெனவே மீட்கப்பட்டுவிட்டனர் என்று சீனாவில் இருந்து வெளியாகும் அறிக்கைகள் கூறுகின்றன.`எவரெஸ்ட் பனி மலையில் பிடிபட்ட ராஜநாகங்கள்&#039; - எச்சரிக்கும் காலநிலை; சூழல் விஞ்ஞானிகள் அஞ்சுவது ஏன்? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-06/ls30m74a/Mount-Everest.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>எவரெஸ்ட், சிகரத்தில், கடும், பனிப்புயல்:, 1, 000, பேர், சிக்கித்தவிப்பு, மீட்புப், பணிகள், தீவிரம்</media:keywords>
    </item>
    <item>
        <title>குகேஷுக்கு அமெரிக்க வீரர் செய்தது சரியா? வைரல் வீடியோவின் பின்னணி</title>
        <link>https://dailytopnewz24.com/குகேஷுக்கு-அமெரிக்க-வீரர்-செய்தது-சரியா-வைரல்-வீடியோவின்-பின்னணி</link>
        <guid>https://dailytopnewz24.com/குகேஷுக்கு-அமெரிக்க-வீரர்-செய்தது-சரியா-வைரல்-வீடியோவின்-பின்னணி</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவின் டெக்சாஸில் High-Voltage Chess Spectacle எனும் பிரமாண்ட செஸ் போட்டி நடைபெற்றது. பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், இந்தியா - அமெரிக்கா நாடுகள் மோதிக்கொண்டன. இதில் இந்தியா சார்பில் இளம் செஸ் சாம்பியன் குகேஷும் அமெரிக்கா தரப்பில் ஹிகாரு நகாமுராவும் கலந்துகொண்டனர். 10 நிமிட மற்றும் 5 நிமிட ரேபிட் பிரிவுகளில் குகேஷ் நகாமுராவை டிராவில் நிறுத்த முடிந்தது. That moment when @GMHikaru Nakamura turned around a lost position and checkmated World Champion Gukesh - picking up and throwing Gukesh&#039;s king to the crowd, celebrating the 5-0 win of Team USA over Team India!Video: @adityasurroy21 pic.twitter.com/GuIlkm0GIe— ChessBase India (@ChessbaseIndia) October 5, 2025


இறுதி ஒரு நிமிட புல்லட் சுற்றில் 5-0 என்ற அளவில் இந்திய வீரர் குகேஷை ஹிகாரு நகாமுரா வீழ்த்தினார். ஒவ்வொரு போட்டி முடிந்ததும், வென்றவர் தோற்றவரிடம் கை குலுக்குவதோ, அல்லது தலையசைத்து விடைபெறுவது என்ற வழக்கம் இருக்கிறது. ஆனால், ஹிகாரு நகாமுரா வெற்றிப் பெற்றதும் குகேஷின் கிங் காயினைத் தூக்கி பார்வையாளர்களிடம் வீசினார். அவரின் இந்த செயல் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. பலரும் இது குகேஷுக்கு நடந்த அவமரியாதை என்றும், சிலர் செஸ் போட்டிக்கே நடந்த மரியாதைக் குறைவு என்றும் விமர்சித்தனர்.இது தொடர்பாக விளக்கமளித்த ஹிகாரு நகாமுரா,``போட்டி தொடங்கும்போதே நான் வென்றால் ராஜாவை தூக்கி வீசவேண்டும் என நினைத்திருந்தேன். மேலும், இது ஒரு வியத்தகு புல்லட் விளையாட்டு என்பதால் நான் வீசியது பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.Gukesh: குரோஷியா செஸ் தொடரில் சாம்பியன் வென்றார் குகேஷ்; மூன்றாம் இடம் பிடித்த கார்ல்சன்! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-06/xygfxjsa/New-Project-93.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>குகேஷுக்கு, அமெரிக்க, வீரர், செய்தது, சரியா, வைரல், வீடியோவின், பின்னணி</media:keywords>
    </item>
    <item>
        <title>`அமெரிக்காவுடன் ஏன் இன்னும் வர்த்தக ஒப்பந்தம் முடிவாகவில்லை?&amp;apos; &amp; ஜெய்சங்கர் விளக்கம்</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்காவுடன்-ஏன்-இன்னும்-வர்த்தக-ஒப்பந்தம்-முடிவாகவில்லை-ஜெய்சங்கர்-விளக்கம்</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்காவுடன்-ஏன்-இன்னும்-வர்த்தக-ஒப்பந்தம்-முடிவாகவில்லை-ஜெய்சங்கர்-விளக்கம்</guid>
        <description><![CDATA[ இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை நன்றாக நடந்து வருகிறது என்று இரு தரப்புகளிலிருந்தும் சிக்னல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.ஜெய்சங்கர் பேச்சு
இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடலின் போது பேசிய அவர், &quot;நமக்கு அமெரிக்காவுடன் இப்போது பிரச்னை உள்ளது. இதற்கான முக்கிய காரணம் இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்பதுதான். இந்தத் தாமதம்தான் இந்தியா மீது வரி விதிக்க காரணமாக அமைந்தது.கச்சா எண்ணெய்கூடுதலாக, ரஷ்யாவிடம் இருந்து எரிசக்தி வாங்குவதால் இந்தியா மீது இன்னொரு வரியும் விதிக்கப்பட்டுள்ளது. அதை நாம் &#039;நியாயமற்றது&#039; என்ற பொதுவெளியிலேயே கூறி வருகிறோம். ரஷ்யாவுடன் விரோதமாக இருக்கும் நாடுகள் உள்பட பல நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகின்றன. இருந்தும், இந்தியா மீது இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.`வர்த்தகம் இந்தியாவின் முடிவு&#039; - ஜெய்சங்கர் மாஸ் பேச்சு; `இதுதான் சுயமரியாதை&#039; - மெச்சும் ரஷ்யா!வர்த்தகம் ஏற்பட்டுவிடும் தான்
என்ன தான் நடந்தாலும், கடைசியில், அமெரிக்காவுடன் இந்தியாவிற்கு வர்த்தகப் புரிந்துணர்வு ஏற்படத் தான் போகிறது. ஏனெனில் அது உலக அளவில் மிகப்பெரிய சந்தை மற்றும் பிற நாடுகளுமே அமெரிக்காவுடன் இந்தப் புரிந்துணர்விற்கு வந்துவிட்டன. ஆனால், வர்த்தக விஷயத்தில் சில அடிப்படைகள் மற்றும் சிவப்பு கோடுகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும். எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், அதில் சில விஷயங்கள் பேச்சுவார்த்தை நடத்தக்கூடியதாக இருக்கும். சில பேச்சுவார்த்தை நடக்க முடியாததாக இருக்கும். அது மதிக்கப்பட வேண்டும். இந்தியா அதில் மிகத் தெளிவாக இருக்கிறது.மோடி, ட்ரம்ப்சில பிரச்னைகள்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தை விரைவில் ஒப்பந்தத்தை அடைவதற்கான வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தையில் சில பிரச்னைகள் இருக்கின்றன. அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அந்தப் பிரச்னைகள் ஆலோசித்து தீர்க்கப்பட வேண்டும். அதை செய்யத்தான் நாம் முயன்று கொண்டிருக்கிறோம். இந்தப் பிரச்னைக்குள் இன்னும் பெரிதாகப் போக விரும்பவில்லை. காரணம், சில துறைகளில் இரு நாடுகளின் உறவுகள் எப்போதும்போல தொடர்ந்து வருகின்றன. சில துறைகளில் இன்னும் வலுவாக வளர்ந்து வருகின்றன&quot; என்று பேசியுள்ளார்.ஜெய்சங்கர்-மார்கோ ரூபியோ சந்திப்பு: `இந்தியாவின் அதிக எரிசக்தி தேவை புரிகிறது!&#039; - ரூபியோ கருத்து ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-06/xnpjv91g/Jaishankar.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்காவுடன், ஏன், இன்னும், வர்த்தக, ஒப்பந்தம், முடிவாகவில்லை, ஜெய்சங்கர், விளக்கம்</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா: ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கி பருகும் பாடி பில்டர்கள் &amp; என்ன காரணம் தெரியுமா?</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-ஆன்லைனில்-தாய்ப்பாலை-வாங்கி-பருகும்-பாடி-பில்டர்கள்-என்ன-காரணம்-தெரியுமா</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-ஆன்லைனில்-தாய்ப்பாலை-வாங்கி-பருகும்-பாடி-பில்டர்கள்-என்ன-காரணம்-தெரியுமா</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவைச் சேர்ந்த சில தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் போக மீதி இருக்கும் பாலை ஆன்லைனில் தளங்களில் விற்று டாலர்களில் சம்பாதித்து வருகின்றனர். தாய்ப்பால் விற்பனை செய்து ஒரே நாளில் 800 டாலர் வரை சம்பாதிப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சமூக வலைத்தளங்களில் கூறியிருக்கிறார். மீதம் இருக்கும் தாய்ப்பாலை ஒரு லாபகரமான தொழிலாக மாற்றும் முயற்சி அமெரிக்காவில் நடந்து வருவதற்கு மத்தியில் இந்த வினோத வியாபாரத்தில் குழந்தைகளுக்காக வாங்கும் பெற்றோர்களை விட பாடி பில்டர்கள் இந்த தாய்ப்பாலை வாங்கும் ட்ரெண்ட் உருவாகி வருகிறது. பேஸ்புக் போன்ற ஆன்லைனில் கிடைக்கும் தாய்ப்பாலை பல டாலர்கள் கொடுத்து பாடி பில்டர்கள் வாங்கி பருகுகின்றனர்.  Breast milk representative imageபாடி பில்டர்கள் ஏன் தாய்ப்பால் வாங்குகின்றனர்?தாய்ப்பாலில் அதிக கலோரிகள், ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆண்டிபயாட்டிக் இருப்பதால் பாடி பில்டர்கள் இதனை ஒரு சூப்பர் ஃபுட் என்று கருதி இதனை வாங்குகின்றனர். ஆனால் பெரியவர்கள் தாய்ப்பால் குடிப்பதால் உடல் நலத்திற்கு எந்த விதமான நிரூபிக்கப்பட்ட பலன்களும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.அதுமட்டுமன்றி இவ்வாறு ஆன்லைனில் விற்கப்படும் தாய்ப்பாலை பருகுவதால், பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏதேனும் நோய் இருந்தால் கூட அது பரவுவதற்கு வாய்ப்பு இருக்கும் என்ற எச்சரிக்கின்றனர். ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-05/pu9boxt1/Breast-milk-representative-images" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா:, ஆன்லைனில், தாய்ப்பாலை, வாங்கி, பருகும், பாடி, பில்டர்கள், என்ன, காரணம், தெரியுமா</media:keywords>
    </item>
    <item>
        <title>``இந்தியா எண்ணெய் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் சிக்கல்தான்&amp;apos;&amp;apos; &amp; ரஷ்ய அதிபர் புதின்</title>
        <link>https://dailytopnewz24.com/இந்தியா-எண்ணெய்-வாங்கினாலும்-வாங்காவிட்டாலும்-சிக்கல்தான்-ரஷ்ய-அதிபர்-புதின்</link>
        <guid>https://dailytopnewz24.com/இந்தியா-எண்ணெய்-வாங்கினாலும்-வாங்காவிட்டாலும்-சிக்கல்தான்-ரஷ்ய-அதிபர்-புதின்</guid>
        <description><![CDATA[ ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியா மீது தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெருக்கடிகளை ஏற்படுத்திவருகிறார். இதற்கு எதிராக ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார். ரஷ்யாவின் சோச்சியில் உள்ள வால்டாய் கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர், ``இந்தியா யாருடைய முன்னிலையிலும் தன்னை அவமானப்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியா நமது எரிசக்தி வளங்களை விட்டுக்கொடுக்குமா? அப்படியானால், அது சில இழப்புகளைச் சந்திக்கும் என மதிப்பிடப்படுகிறது. சிலர் சுமார் 9 -10 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.மோடி - புதின்அதே நேரம் இந்தியா அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்கவில்லை என்றால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். ஆனாலும் இந்தியா ஏன் அமெரிக்காவின் நிபந்தனையை மறுக்க வேண்டும்? ஏனென்றால் இந்திய மக்கள் யாராலும் அவமானப்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். பிரதமர் மோடியை நான் அறிவேன், அவர் அத்தகைய முடிவுகளை எடுக்க மாட்டார். அதே நேரம் அமெரிக்காவின் தண்டனை வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியால் சமப்படுத்தப்படும். மேலும் அது ஒரு இறையாண்மை கொண்ட நாடாக கௌரவத்தைப் பெறும்.&quot; என்றார்.RSS 100 கொண்டாட்டம்: அமெரிக்காவின் 50% வரி, நேபாள வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் - மோகன் பகவத் கருத்து ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-03/ksvmun2a/புதின்-மோடி-.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இந்தியா, எண்ணெய், வாங்கினாலும், வாங்காவிட்டாலும், சிக்கல்தான், ரஷ்ய, அதிபர், புதின்</media:keywords>
    </item>
    <item>
        <title>முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: &amp;apos;கூல்&amp;apos; மோடில் ட்ரம்ப்; இந்தியாவிற்கு ஒரு பாசிட்டிவ் சிக்னல்&amp; முழு அலசல்</title>
        <link>https://dailytopnewz24.com/முடங்கிய-அமெரிக்க-அரசாங்கம்-கூல்-மோடில்-ட்ரம்ப்-இந்தியாவிற்கு-ஒரு-பாசிட்டிவ்-சிக்னல்-முழு-அலசல்</link>
        <guid>https://dailytopnewz24.com/முடங்கிய-அமெரிக்க-அரசாங்கம்-கூல்-மோடில்-ட்ரம்ப்-இந்தியாவிற்கு-ஒரு-பாசிட்டிவ்-சிக்னல்-முழு-அலசல்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் வேலையிழப்புகள், பல்வேறு அரசு நிர்வாகங்கள் முடக்கம், சம்பளம் எதுவும் இல்லை என்பது போன்ற பல பிரச்னைகளை அமெரிக்கா சந்திக்க உள்ளது. இந்த அரசு முடக்கம் குறித்து நமக்கு விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.&quot;அமெரிக்க ஃபெடரல் அரசு முடக்கம் என்பது புதிதல்ல. நேற்று முன்தினம் நடந்த முடக்கத்துடன், இதுவரை அமெரிக்காவில் 21 முறை ஃபெடரல் அரசு முடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம்அமெரிக்க அரசு முடக்கம் எதனால் ஏற்படுகிறது? 
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள், அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். நம்மூரில் &#039;பட்ஜெட்&#039; என்று கூறப்படுவது தான், அங்கே நிதி ஒதுக்கீடு மசோதா என்ற கூறப்படுகிறது. இந்த மசோதாவிற்கு அமெரிக்க சென்ட்டில் ஒப்புதல் கிடைத்தால் தான், அக்டோபர் 1-ம் தேதி முதல், அரசு நிர்வாகங்களுக்கு நிதி கிடைக்க தொடங்கும். அவர்களது சட்டப்படி, இப்போது இந்த மசோதா தோல்வியுற்றுள்ளது. இதனால், அரசு நிர்வாகம் நடப்பதற்கான பட்ஜெட் அவர்களிடம் இருக்காது. அதனால், அரசாங்கம் முடங்கிவிட்டது. ஏன் இது பிரச்னை?
அமெரிக்க அரசு நிதி ஒதுக்கீடு சட்டத்தின் படி, இந்த மசோதாவிற்கு அமெரிக்க அதிபரின் ஒப்புதல் மட்டுமின்றி, செனட் மற்றும் காங்கிரஸ் ஒப்புதலும் தேவை. அமெரிக்காவில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்று இரு கட்சிகள் தான் உள்ளன.இப்போது இருக்கும் செனட்டில் 53 குடியரசு கட்சியினரும், 45 ஜனநாயக கட்சியினரும், 2 சுயேச்சை கட்சியினரும் இடம்பெற்றிருக்கிறார்கள். செனட்டில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் தான், அந்த மசோதா தோல்வியுற்று அரசு முடக்கம் ஏற்பட்டுள்ளது. மசோதா தோல்வியுற்ற நிலையில், &#039;தொடர் தீர்மானம்&#039; (Continuing Resolution) நிறைவேற்றப்பட்டிருக்கலாம். அதாவது, புதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல், கடந்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடே இந்த ஆண்டும் தொடர்வது ஆகும். ஆனால், இதுவும் இந்தச் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தான், ஃபெடரல் அரசாங்கம் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலர்கள்என்ன நடக்கும்? 
ஃபெடரல் அரசாங்கம் முடக்கம் என்றால் அரசிற்கு கீழ் செயல்படும் நிர்வாகங்கள் முடங்கி உள்ளன என்று பொருள். அவை எதுவும் செயல்படாது. போலீஸ், விமான நிலையம், அமெரிக்க போஸ்டல் சர்வீஸ் போன்ற அத்தியாவசிய நிர்வாகங்கள் மட்டும் இந்த முடக்கத்திற்கு விதிவிலக்கு. இதுவரை அரசு தொழிற்சாலைகளுக்கும், மாணவர்களின் படிப்பிற்கும் வழங்கப்பட்டு வந்த நிதி ஆகியவை நிறுத்தப்படும். இந்த முடக்கம் எப்போது முடியும்?
அதற்கான கால அளவுகள் எதுவும் இல்லை. ஒருவேளை, தொடர் தீர்மானம் கூட நிறைவேற்றப்படலாம். ஆனால், எதுவாக இருந்தாலும், செனட்டின் ஒப்புதல் வேண்டும். இப்போது ஏன் இந்த முடக்கம்? 
வெளிநாடுகளுக்கு வழங்க கூடிய நிதி, அமெரிக்காவின் அமைதிப்படைக்கான நிதி என பல மிகப்பெரிய துறைகளுக்கான நிதியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறைத்துள்ளார். மருத்துவத் துறையில் எப்போதும் ஜனநாயக கட்சி தனி கவனம் செலுத்தும். இது அவர்களுடைய மிகப்பெரிய ப்ளஸ். ஆனால், குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப் இதற்கான நிதியை தற்போது குறைத்துள்ளார். இதெல்லாம் ஜனநாயக கட்சியின் அதிருப்திகள்.ட்ரம்ப்என்ன ஆகும்? 
இந்த முடக்கத்தினால் பல அரசு பணியாளர்கள் வேலையில் இருந்து அனுப்பப்படுவர். பலருக்கு பகுதி நேர பணி வழங்கப்படும். பணியில் இருப்பவர்களுக்கு சம்பளமும் கிடைக்காது. 2018-ம் ஆண்டு, ட்ரம்ப் முதல்முறை அதிபராக பொறுப்பேற்ற போதும் இந்த முடக்கம் ஏற்பட்டது. அது 35 நாள்களுக்கு நீண்டது. இதனால், அப்போது 11 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. இது அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி திறனுக்கு மிகப்பெரிய அடி. இது ஒரு எடுத்துகாட்டு. மீண்டும் அரசு நிர்வாகம் செயல்பட தொடங்கும்போது, இப்போது பணியில் இருக்கும் சிலருக்கு சம்பளம் கிடைக்கலாம்... கிடைக்காமலும் போகலாம். அது சட்டத்திற்கு உட்பட்டது தான். மேலும், பலருக்கு வேலைகள் போகும். இதை ட்ரம்ப் நல்லது என்றே கருதுகிறார். இதனால், பலரை வேலையில் இருந்து தூக்கலாம் என்று கூறுகிறார். அவர் இதை பாசிட்டிவாகவே பார்க்கிறார். இந்தியாவை எப்படி பாதிக்கும்? 
நேற்று இந்தியாவின் பங்குச்சந்தை பாசிட்டிவாகவே இருந்தது. அங்கு முடங்கியதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவிற்கு திருப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-02/ppx9oc8v/Your-paragraph-text.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>முடங்கிய, அமெரிக்க, அரசாங்கம்:, கூல், மோடில், ட்ரம்ப், இந்தியாவிற்கு, ஒரு, பாசிட்டிவ், சிக்னல்-, முழு, அலசல்</media:keywords>
    </item>
    <item>
        <title>RSS 100 கொண்டாட்டம்: அமெரிக்காவின் 50% வரி, நேபாள வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் &amp; மோகன் பகவத் கருத்து</title>
        <link>https://dailytopnewz24.com/rss-100-கொண்டாட்டம்-அமெரிக்காவின்-50-வரி-நேபாள-வன்முறை-ஆபரேஷன்-சிந்தூர்-மோகன்-பகவத்-கருத்து</link>
        <guid>https://dailytopnewz24.com/rss-100-கொண்டாட்டம்-அமெரிக்காவின்-50-வரி-நேபாள-வன்முறை-ஆபரேஷன்-சிந்தூர்-மோகன்-பகவத்-கருத்து</guid>
        <description><![CDATA[ மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது.அமெரிக்காவின் 50 சதவிகித வரி
அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 25 சதவிகித வரி பிளஸ் 25 சதவிகித கூடுதல் வரி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ட்ரம்ப் - பரஸ்பர வரி&quot;அமெரிக்காவின் புதிய வரிகள் அவர்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது மற்ற அனைவரையும் பாதித்துள்ளது.ஒருவர் மற்றொருவரை சார்ந்தே இந்த உலகம் இயங்கி வருகிறது. எந்த நாடும் தனியாக இயங்க முடியாது. ஆனால், இந்தச் சார்பு கட்டாயமாக்கப்படக் கூடாது. நாம் சுதேசியை சார்ந்து, நமது தற்சார்பில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், நட்பு நாடுகளிடம் நல்ல உறவைப் பேண வேண்டும். ஆனால், அது கட்டாயமாக இல்லாமல், நமது விருப்பத்துடனானதாக இருக்க வேண்டும்&quot; என்று பேசியுள்ளார்.நேபாள போராட்டம்
சமீபத்தில் நேபாளத்தில் நடந்த போராட்டம் குறித்து, &#039;ஒரு பக்கத்து நாடு நிலையற்றத் தன்மையோடு இருப்பது நல்லதல்ல. இலங்கை, வங்கதேசம் மற்றும் சமீபத்தில் நேபாளம் என பக்கத்து நாடுகளில் மக்களின் கோபத்தால் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை நாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.இந்த மாதிரியான பிரச்னையை பாரதத்தில் கிளப்ப நினைக்கும் படைகள் இங்கே நாட்டிற்குள்ளும், நாட்டிற்கு வெளியேயும் உள்ளன. வன்முறை எதையும் கொண்டு வராது. அது அராஜகத்திற்கே வழிவகுக்கும். நாட்டில் உள்ள அமைதியின்மை வெளிநாட்டு சக்திகளுக்கு உள்நாட்டிற்கு தலையிடுவதற்கான வாய்ப்புகளைக் கொடுக்கும்&quot; என்று பேசியுள்ளார். நேபாளம் வன்முறைஆபரேஷன் சிந்தூர்
கடந்த மே மாதம் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து, &quot;இந்திய அரசு திட்டமிட்டு, மே மாதம் வலுவான பதிலடியை தந்துள்ளது. நம் நாட்டின் வலுவான தலைமை, வீரமான படைகளைத் தாண்டி, அந்த நேரத்தில், சமூதாயத்தின் பலத்தையும், ஒற்றுமையையும் பார்த்தது&quot; என்று கருத்து தெரிவித்துள்ளார். RSS: ``சுதந்திரப் போராட்டத்துக்காக சிறைச் சென்றிருக்கிறார்கள்&quot; - நெகிழ்ந்து பேசிய பிரதமர் மோடி! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-02/7ns92anr/Mohan-Bhagwat.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>RSS, 100, கொண்டாட்டம்:, அமெரிக்காவின், 50, வரி, நேபாள, வன்முறை, ஆபரேஷன், சிந்தூர், மோகன், பகவத், கருத்து</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;சோம்பேறி ஜோ பைடனால் தான் சீனா &amp;apos;இப்படி&amp;apos; செய்கிறது!&amp;apos; &amp; சீனா மீது கோபத்தில் ட்ரம்ப்; என்ன ஆனது?</title>
        <link>https://dailytopnewz24.com/சோம்பேறி-ஜோ-பைடனால்-தான்-சீனா-இப்படி-செய்கிறது-சீனா-மீது-கோபத்தில்-ட்ரம்ப்-என்ன-ஆனது</link>
        <guid>https://dailytopnewz24.com/சோம்பேறி-ஜோ-பைடனால்-தான்-சீனா-இப்படி-செய்கிறது-சீனா-மீது-கோபத்தில்-ட்ரம்ப்-என்ன-ஆனது</guid>
        <description><![CDATA[ அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது வரும் நவம்பர் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்ட வரி
இந்தப் பேச்சுவார்த்தையால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்கா சீனா மீது கொஞ்சம் கொஞ்சமாக விதித்து வந்த 135 சதவிகிதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சீன பொருள்களுக்கு அமெரிக்கா 30 சதவிகித வரியைத் தான் வசூலித்து வருகிறது. அமெரிக்கா - சீனா மேலும், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதாக இந்தியா, பிரேசில் மீது அமெரிக்க அரசு 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்துள்ளது.ஆனால், ரஷ்யாவின் டாப் இறக்குமதியாளரான சீனா மீது இந்த வரி விதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்கா - சீனா இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை தான். போன்கால்
கடந்த 19-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசினார். இந்தப் போன்காலில் டிக்டாக் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. சீன அதிபர் ஜியை சந்திக்கிறார் ட்ரம்ப்
இந்த நிலையில், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், &quot;பேச்சுவார்த்தையில் பலனடைய சீனா அமெரிக்காவில் இருந்து சோயா பீன்ஸ் வாங்குவதை நிறுத்திவிட்டது. இது அமெரிக்க நாட்டின் சோயா பீன்ஸ் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது. வரி விதிப்பின் மூலம் நாம் ஏகப்பட்ட பணம் பெற்றுள்ளோம். அதில் சிறு பங்கில் இந்த விவசாயிகளுக்கு உதவப்போகிறோம். நான் நம்முடைய விவசாயிகளைக் கைவிட மாட்டேன். ஜோ பைடன்சீனா பில்லியன் டாலர் கணக்கில் நம்மிடமிருந்து விவசாய பொருள்கள், முக்கியமாக சோயா பீன்ஸ் வாங்க இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை சரியாக சோம்பேறி ஜோ பைடன் நடைமுறைப்படுத்தவில்லை. ஆனால், இனி அது நல்லபடியாக நடைமுறைப்படுத்தப்படும். நாம் நமது தேச பக்தர்களை எப்படி நேசிக்கிறேனோ, அதே அளவில் விவசாயிகளையும் நேசிக்கிறேன். அடுத்த நான்கு வாரங்களில், நான் சீன அதிபர் ஜியை சந்திக்க உள்ளேன். அந்தக் கலந்துரையடலில் சோயா பீன்ஸ் குறித்து தான் முக்கியமாக பேசப்படும்&quot; என்று குறிப்பிட்டுள்ளார்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2019-06/994fc9a4-2bcf-49c2-b2e4-20db42542e80/AP19180115603224.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>சோம்பேறி, ஜோ, பைடனால், தான், சீனா, இப்படி, செய்கிறது, சீனா, மீது, கோபத்தில், ட்ரம்ப், என்ன, ஆனது</media:keywords>
    </item>
    <item>
        <title>&amp;apos;இனி கத்தார் நாட்டை தாக்கினால் அது எங்களைத் தாக்கியதுபோல&amp;apos; &amp; அமெரிக்கா திட்டவட்டம்</title>
        <link>https://dailytopnewz24.com/இனி-கத்தார்-நாட்டை-தாக்கினால்-அது-எங்களைத்-தாக்கியதுபோல-அமெரிக்கா-திட்டவட்டம்</link>
        <guid>https://dailytopnewz24.com/இனி-கத்தார்-நாட்டை-தாக்கினால்-அது-எங்களைத்-தாக்கியதுபோல-அமெரிக்கா-திட்டவட்டம்</guid>
        <description><![CDATA[ கடந்த செப்டம்பர் 9-ம் தேதி, &#039;ஹமாஸ் தலைமையைத் தாக்குகிறேன்&#039; என்று கத்தாரில் வான்வழித் தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். இது உலகம் முழுவதும் மிகப்பெரிய கண்டனத்தை எழுப்பியது. இதற்காக வெள்ளை மாளிகையில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னிலையில்,  கத்தார் பிரதமர் அல் தானியிடம் மன்னிப்பு கேட்டார். கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல்இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் வெளியிட்டுள்ள ஆணை ஒன்றில்...&quot;கத்தார் பிராந்தியங்கள், இறையாண்மை, முக்கிய கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும், அமெரிக்காவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதும்&quot; என்று கூறப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு நடுவே நடக்கும் பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்வதில் கத்தார் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால், அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பெரும் பிரச்னையாக உலக நாடுகள் அனைத்தும் கருதியது. இது ட்ரம்பிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் தான், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் நெதன்யாகு - கத்தார் பிரதமர் போன்காலுக்கு ஏற்பாடு செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-02/dnismkiq/P20250925JB-0603.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>இனி, கத்தார், நாட்டை, தாக்கினால், அது, எங்களைத், தாக்கியதுபோல, அமெரிக்கா, திட்டவட்டம்</media:keywords>
    </item>
    <item>
        <title>காசா தாக்குதல் எதிரொலி: டச்சு கப்பலுக்கு தீ வைத்த ஹவுதி குழு; பரபரக்கும் உலக நாடுகள்; என்ன நடந்தது?</title>
        <link>https://dailytopnewz24.com/காசா-தாக்குதல்-எதிரொலி-டச்சு-கப்பலுக்கு-தீ-வைத்த-ஹவுதி-குழு-பரபரக்கும்-உலக-நாடுகள்-என்ன-நடந்தது</link>
        <guid>https://dailytopnewz24.com/காசா-தாக்குதல்-எதிரொலி-டச்சு-கப்பலுக்கு-தீ-வைத்த-ஹவுதி-குழு-பரபரக்கும்-உலக-நாடுகள்-என்ன-நடந்தது</guid>
        <description><![CDATA[ ஏடன் வளைகுடாவில் டச்சுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதிகள் குழு பொறுப்பேற்றிருக்கிறது.இஸ்ரேல் - காசாவுக்கு இடையே போர் நிகழ்ந்துவரும் நிலையில், இருதரப்பும் சமாதானத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.இதற்காக முதற்கட்டமாக 20 நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறது. அதே நேரம், காசா மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.சரக்கு கப்பல்இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ஏமனின் ஹவுத்திகள் குழு டச்சு வணிகக் கப்பலுக்குத் தீ வைத்திருக்கிறது. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைக்கக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும், கருவிகளையும் பயன்படுத்துவோம் என எச்சரித்திருக்கிறது.இது ஏடன் வளைகுடாவில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுத்திகள் நடத்திய மிகக் கடுமையான தாக்குதலாகும். 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் - காசா இடையே போர் தொடங்கியது.அதற்கு அடுத்த மாதம் அதாவது நவம்பர் 2023 முதல் ஹவுத்திகள் இஸ்ரேல், அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்து வருகின்றனர். 2023 முதல் இப்போது வரை நான்கு கப்பல்களை மூழ்கடித்துள்ளனர்.இந்தத் தாக்குதல் குறித்து ஹவுத்தி ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி, ``மினர்வாக்ராட்டைக் குறிவைத்துத் தாக்கும் ஒரு கப்பல் ஏவுகணையை ஹவுத்திகள் ஏவினர்.இந்தத் தாக்குதலில் மினர்வாகிராட் கப்பலிலிருந்த 19 பேரில் 2 கடற்படையினர் காயமடைந்தனர்&quot; எனக் குறிப்பிட்டிருக்கிறார்.சரக்கு கப்பல்காசாவில் நடந்த போருக்குப் பதிலளிக்கும் விதமாக ஹவுத்திகள் 100க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீதும் இஸ்ரேல் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.செங்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ஹவுத்திகள் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதை மீறிச் செயல்படுவதாகக் குறிப்பிடும் ஹவுத்திகள் தாக்குதலில் எட்டு கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.இந்தியாவுக்கு வந்த சரக்குக் கப்பலைக் கடத்திய ஹவுதி குழு: `இது பயங்கரவாதம்&#039; -  இஸ்ரேல் கண்டனம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-01/j5fsp3qb/Yemens-Houthi-rebel.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காசா, தாக்குதல், எதிரொலி:, டச்சு, கப்பலுக்கு, தீ, வைத்த, ஹவுதி, குழு, பரபரக்கும், உலக, நாடுகள், என்ன, நடந்தது</media:keywords>
    </item>
    <item>
        <title>அமெரிக்கா: குழந்தைகளுக்குப் பெயர் வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்; பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/அமெரிக்கா-குழந்தைகளுக்குப்-பெயர்-வைத்து-லட்சக்கணக்கில்-சம்பாதிக்கும்-பெண்-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/அமெரிக்கா-குழந்தைகளுக்குப்-பெயர்-வைத்து-லட்சக்கணக்கில்-சம்பாதிக்கும்-பெண்-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதையே ஒரு தொழிலாக மாற்றி, அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் டெய்லர் ஏ. ஹம்ப்ரி. இவர் தன்னை ஒரு &#039;குழந்தைகளுக்கான பெயர் ஆலோசகர்&#039; (Baby Name Consultant) என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்.குழந்தைகளுக்குப் பொருத்தமான மற்றும் தனித்துவமான பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதே இவரது தொழிலாக உள்ளது. இதற்காக இவர் 30,000 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கிறார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம் ஆகும்.Baby (Representational Image)ஆர்வத்தில் தொடங்கிய தொழில்சிறு வயதிலிருந்தே பெயர்கள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறும் ஹம்ப்ரி, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் இது குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.ஒருமுறை, மருத்துவமனையிலிருந்து ஒரு தாய் அவரைத் தொடர்புகொண்டு, &#039;குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் கையெழுத்திட்டால்தான் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியும், உடனடியாக ஒரு பெயர் வேண்டும்&#039; என்று கேட்டுள்ளார்.இந்தச் சம்பவமே, தனது ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்றும் எண்ணத்தை ஹம்ப்ரிக்கு ஏற்படுத்தியிருக்கிறது.இதுவரை 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இவர் பெயர் சூட்டியுள்ளார். இவரது சேவைகள் 200 டாலர்களில் (சுமார் ரூ.16,000) இருந்து தொடங்குகின்றன.இந்தத் தொகையில், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப சில பெயர்ப் பட்டியல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார். பிரத்யேக விஐபி பேக்கேஜ்களுக்குக் கட்டணம் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரை செல்கிறது.பெற்றோரின் விருப்பங்கள் மற்றும் குடும்பப் பின்னணியை அறிந்துகொள்ள ஆன்லைன் மூலம் ஒரு கேள்வித்தாள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் பெயர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.பெயர்ப் பட்டியல்கள் வழங்குவதோடு, பெயர் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தம்பதியினருக்குள் ஏற்படும் பெயர் குறித்த கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்வது போன்ற சேவைகளையும் இவர் வழங்குகிறார்.அமெரிக்காவில் இந்தத் தொழில் தற்போது பிரபலமடைந்து வருவதாகவும், ஹம்ப்ரியைப் போலவே பலரும் குழந்தை பெயர் ஆலோசகர்களாகப் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.பாகிஸ்தானில் பிறந்து, சீனாவில் ஸ்டாரான பெண் - ஓர் அடடே ஸ்டோரி! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-30/s7483tiy/hero-imag-2025-09-30T120228.803.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அமெரிக்கா:, குழந்தைகளுக்குப், பெயர், வைத்து, லட்சக்கணக்கில், சம்பாதிக்கும், பெண், பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>H1&amp;B விசா கட்டுப்பாடுகள்: &amp;quot;அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தியாவுக்கு மாற்றலாம்&amp;quot; &amp; நிபுணர்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/h1-b-விசா-கட்டுப்பாடுகள்-அமெரிக்க-நிறுவனங்கள்-தங்களது-பணிகளை-இந்தியாவுக்கு-மாற்றலாம்-நிபுணர்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/h1-b-விசா-கட்டுப்பாடுகள்-அமெரிக்க-நிறுவனங்கள்-தங்களது-பணிகளை-இந்தியாவுக்கு-மாற்றலாம்-நிபுணர்கள்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் H1-B விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தியிருப்பதனால் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் நிதி மேலாண்மை முதல் ஆராய்ச்சி மேம்பாடு வரை கையாளும் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) இந்தியாவிலேயே அமைக்கலாம் எனப் பொருளாதார வல்லுநர்களும் தொழில்துறையினரும் கணிக்கின்றனர்.இந்தியாவில் இதுபோன்ற 1,700 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. உலகில் உள்ள 3,200 GCC-க்களில் இது பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. H-1B விசா - ட்ரம்ப்வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்பு மற்றும் விசா கெடுபிடிகள் நிறுவனங்களைத் தங்களது பணியாளர்களை பணிக்குச் சேர்க்கும் யுத்திகளை மாற்றியமைக்கத் தூண்டியிருக்கிறது.டெலாய்ட் இந்தியாவின் பார்ட்னரும் GCC தொழில்துறைத் தலைவருமான ரோஹன் லோபோ, பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பணியாளர் தேவைகளை மறு மதிப்பீடு செய்வதாகக் கூறியிருக்கிறார்.2000 முதல் 5000 டாலராக இருந்த H1-B விசா கட்டணத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 1 லட்சம் டாலராக மாற்றினார். இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய்.கூகுள் அத்துடன் அமெரிக்க செனட்டர்கள் H-1B மற்றும் L-1 தொழிலாளர் விசா திட்டங்களில் விதிகளைக் கடுமையாக்கும் மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தினர். இந்த மசோதா முதலாளிகள் வெளிநாட்டினரை அழைப்பதற்குப் பயன்படுத்தும் ஓட்டைகளை அடைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.ட்ரம்பின் விசா கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்தால், செயற்கை நுண்ணறிவு (AI), தயாரிப்பு மேம்பாடு, சைபர் பாதுகாப்பு, அனலிடிக்ஸ் போன்ற துறைகளுடன் தொடர்புடைய உயர் நிலைப் பணிகளை அமெரிக்க நிறுவனங்கள் இந்திய GCC-களுக்கு மாற்றக்கூடும் எனத் தொழில்துறை நிபுணர்கள் கணிக்கின்றனர்.ஹெச்1-பி விசா ஸ்பான்சர்களில் அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் கூகிள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், வால் ஸ்ட்ரீட் வங்கியான ஜேபி மோர்கன் சேஸ் மற்றும் சில்லறை விற்பனையாளர் வால்மார்ட் ஆகிய நிறுவனங்களும் பிரதானமாக உள்ளதாக அமெரிக்க அரசின் தரவு காட்டுகிறது.இந்த நிறுவனங்கள் முக்கிய பணிகளை இந்தியாவில் மேற்கொள்ளலாம் அல்லது கொலம்பியா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட அண்டை நாடுகளையும் நாடலாம் எனத் தெரிவிக்கின்றன.Bengaluru: 10 லட்சம் ஐடி ஊழியர்கள்; உலகின் முக்கிய தொழில்நுட்ப நகரங்களில் இடம் பெற்ற பெங்களூரு! ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-30/or3e3zxy/Donald.jpeg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>H1-B, விசா, கட்டுப்பாடுகள்:, அமெரிக்க, நிறுவனங்கள், தங்களது, பணிகளை, இந்தியாவுக்கு, மாற்றலாம், நிபுணர்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>US: செனட்டில் நிறைவேற்றப்படாத மசோதா; முடங்கிய அமெரிக்கா&amp; பாதிப்புக்குள்ளானமக்கள்</title>
        <link>https://dailytopnewz24.com/us-செனட்டில்-நிறைவேற்றப்படாத-மசோதா-முடங்கிய-அமெரிக்கா-பாதிப்புக்குள்ளானமக்கள்</link>
        <guid>https://dailytopnewz24.com/us-செனட்டில்-நிறைவேற்றப்படாத-மசோதா-முடங்கிய-அமெரிக்கா-பாதிப்புக்குள்ளானமக்கள்</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் செலவினங்கள் குறித்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அடுத்த நிதியாண்டிற்கான அமெரிக்க அரசின் செலவினங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த மசோதா ஒவ்வொரு ஆண்டும்  நிறைவேற்றப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அமெரிக்க அரசால் செலவினங்களைத் தொடர்ந்து செய்ய முடியும். டிரம்ப்அமெரிக்காவின் மேல்சபையான செனட் செலவினங்கள் தொடர்பான இந்த இடைக்கால நிதி மசோதாவுக்கு  இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. செனட்டில் சமீபத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இடைக்கால மசோதாவுக்கு ஆதரவாக 55 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் பதிவாகின.அமெரிக்க செனட்டில் மொத்தம் 100 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 எம்பிக்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 45 எம்பிக்களும் உள்ளனர். இது போக சுயேச்சை எம்பிக்கள் இருவர் உள்ளனர். நிதி மசோதாவை நிறைவேற்ற அதற்குக் குறைந்தபட்சம் 60 வாக்குகள் தேவை. சுயேச்சை எம்பிக்கள் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் நிதி மசோதாவுக்கான ஆதரவு 55ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், ஜனநாயகக் கட்சியினர் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் தேவையான 60 எம்பிக்கள் ஆதரவு கிடைக்காததால் நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதனால் அமெரிக்கா முடங்கி இருக்கிறது. US Governmentஅமெரிக்காவில் சரியாக நள்ளிரவு 12:01 மணிக்கு (புதன்கிழமை), அரசு முடங்கியிருக்கிறது. விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும்.பொருளாதார அறிக்கைகள் வெளியிடுவது தாமதமாகும். மேலும் ஆராய்ச்சி மையங்கள் முதல் சிறு வணிகக் கடன் அலுவலகங்கள் வரை அனைத்தும் மூடப்படும். இதனால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. `ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு&#039; - டிரம்ப் பேச்சு; நெதன்யாகு புகழாரம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-10-01/qiyc8rwx/85936316007-20250902-vpc-congress-is-back-as-government-shutdown-looms-thumb-00-00-00-22-still-004.webp" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>US:, செனட்டில், நிறைவேற்றப்படாத, மசோதா, முடங்கிய, அமெரிக்கா-, பாதிப்புக்குள்ளானமக்கள்</media:keywords>
    </item>
    <item>
        <title>அதானியின் Clean Chit முதல் நீட்டிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் வரை; செப்டம்பர் ரீவைண்ட்!</title>
        <link>https://dailytopnewz24.com/அதானியின்-clean-chit-முதல்-நீட்டிக்கப்பட்ட-வருமான-வரிக்-கணக்கு-தாக்கல்-வரை-செப்டம்பர்-ரீவைண்ட்</link>
        <guid>https://dailytopnewz24.com/அதானியின்-clean-chit-முதல்-நீட்டிக்கப்பட்ட-வருமான-வரிக்-கணக்கு-தாக்கல்-வரை-செப்டம்பர்-ரீவைண்ட்</guid>
        <description><![CDATA[ இந்த செப்டம்பர் மாதம் நிதி மற்றும் பொருளாதாரம் சம்பந்தமாக இந்தியா மற்றும் உலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்ப்போம். செப்டம்பர் 3 - ஜி.எஸ்.டி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, இதுவரை இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% என்று நான்கு வரி வகைகள் இருந்தன. தற்போது இது 5 சதவிதம், 18 சதவிகிதம் என இரண்டு வரி வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது அமலானது செப்டம்பர் 22-ம் தேதி ஆகும்.செப்டம்பர் 5 - கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், இந்தியாவைத் தொடர்ந்து விமர்சித்த வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், &#039;பிரதமர் மோடியை நண்பர்&#039; என்று குறிப்பிட்டிருந்தார். இதை பிரதமர் மோடியும் வழிமொழித்திருந்தார்.GST 2.0செப்டம்பர் 15 - வழக்கமாக, ஜூலை 31-ம் தேதியே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதியாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வருமான வரித் தாக்கல் வலைத்தளத்தில் மேற்கொண்ட சில அப்டேட்டுகளால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் கடைசித் தேதி செப்டம்பர் 15-ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 15-ம் தேதி, வருமான வரிக் கணக்குத் தாக்கல் வலைத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், கடைசித் தேதி ஒரே ஒரு நாளுக்கு அதாவது செப்டம்பர் 16 வரை நீட்டிக்கப்பட்டது. Trump Tariffs: &quot;இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி&quot; - ட்ரம்ப் உத்தரவும், இந்தியா மீதான பாதிப்பும்!செப்டம்பர் 17 - அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்தது. செப்டம்பர் 18 - அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அறிக்கை கூறியது போல, அதானி குழுமத்தின் மீது எந்த தவறும் கிடையாது என்று செபி அறிக்கை வெளியிட்டிருந்தது. செப்டம்பர் 19 - ட்ரம்ப் &#039;கோல்டு கார்டு&#039; அறிமுகம் செய்தார். இந்தக் கார்டிற்குத் தனிநபருக்கு 1 மில்லியன் டாலர் என விலை நிர்ணயிக்கப்பட்டது. H-1B விசா - ட்ரம்ப்அதே நாளில், ஹெச் 1-பி விசா விலையை 1 லட்சம் டாலராக (ரூ.88 லட்சம்) ட்ரம்ப் அரசு அதிகரித்தது. இது புதிதாக இந்த விசாவை விண்ணப்பிப்பவர்களுக்கு விதிக்கப்படும் என்று கூறப்பட்டது.இந்த விசாவை இதுவரை 66 சதவிகித இந்தியர்கள்தான் பெற்று வந்ததால், இது இந்தியாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியது.செப்டம்பர் 22 - ஜி.எஸ்.டி 2.0 அமலுக்கு வந்தது. குறைக்கப்பட்ட விவரங்கள் இதோ.செப்டம்பர் 22 - அமெரிக்காவில் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோ சந்தித்தார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இருவரும் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட இருதரப்பு உறவின் முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடி இருக்கின்றனர்.இந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரை, &#039;இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடரும். இந்தியாவிற்கு இந்தியத் தேசம் மற்றும் மக்களின் நலன்தான் முக்கியம். இதில் பிற நாட்டின் தலையீட்டை இந்தியா அனுமதிக்காது&#039; என்பதை அமெரிக்காவிற்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் பதில் கொடுத்தனர்.அமெரிக்கா - இந்தியா இடையே நடக்கும் வர்த்தக பேச்சுவார்த்தை பாசிட்டிவாக உள்ளது. வரும் நவம்பர் மாதம் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தகவல். இந்த மாதம் இந்தப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவிலிருந்தும் அதிகாரிகள் இந்தியா வந்திருந்தனர். பியூஷ் கோயல் தலைமையில் அதிகாரிகள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்றிருந்தனர்.ட்ரம்ப் பரிந்துரைகள்: `ஓகே&#039; சொன்ன நெதன்யாகு; ஹமாஸ் பதில்? அந்த 20 பரிந்துரைகள் என்ன? | முழு விவரம் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-30/969cp0uu/செப்டம்பர்-2025.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அதானியின், Clean, Chit, முதல், நீட்டிக்கப்பட்ட, வருமான, வரிக், கணக்கு, தாக்கல், வரை, செப்டம்பர், ரீவைண்ட்</media:keywords>
    </item>
    <item>
        <title>காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்: சிறுவனுக்கு சிறிய கதவு வழியாக உணவு &amp; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?</title>
        <link>https://dailytopnewz24.com/காலாவதியான-தடுப்பூசி-பாஸ்போர்ட்-சிறுவனுக்கு-சிறிய-கதவு-வழியாக-உணவு-வைரல்-வீடியோவின்-பின்னணி-என்ன</link>
        <guid>https://dailytopnewz24.com/காலாவதியான-தடுப்பூசி-பாஸ்போர்ட்-சிறுவனுக்கு-சிறிய-கதவு-வழியாக-உணவு-வைரல்-வீடியோவின்-பின்னணி-என்ன</guid>
        <description><![CDATA[ சீனாவில், தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் டிஜிட்டல் சுகாதார ஐடிகள் தொடர்பான கடுமையான விதிகள் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. காலாவதியான தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளுடன் பிடிபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பப்படுவதாகவும், அங்கு அவர்கள் கடுமையான நிலைமைகளின் கீழ் தனிமைப்படுத்தப்படுவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தநிலையில் சீனாவில் &#039;தடுப்பூசி பாஸ்போர்ட்&#039; காலாவதியானதால், ஒரு சிறுவன் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அடைக்கப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.வைரலாகும் வீடியோவில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் உள்ள அந்தச் சிறுவனுக்கு, சுகாதாரப் பணியாளர் ஒருவர் சீல் வைக்கப்பட்ட ஒரு சிறிய கதவு வழியாக உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. vaccine passport        View this post on Instagram            A post shared by WorldInLast24Hrs (@worldinlast24hrs)
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சீனாவில் &#039;டிஜிட்டல் ஹெல்த் ஐடி&#039; எனப்படும் தடுப்பூசி பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது மக்களின் நடமாட்டத்தையும், தடுப்பூசி நிலையையும் கண்காணிக்கப் பயன்படுத்தப்பட்டது.தடுப்பூசி சான்றிதழ்கள் காலாவதியானவர்கள் இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களுக்கு அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர்கள் கடுமையான சூழ்நிலைகளில் தங்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வீடியோ வெளியானதையடுத்து, சமூக வலைதளங்களில் பயனர்கள் எதிர்மறை கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.சீனாவின் தடுப்பூசி பாஸ்போர்ட் என்றால் என்ன?சீனாவின் தடுப்பூசி பாஸ்போர்ட் என்பது அந்நாட்டு குடிமக்களின் தடுப்பூசி நிலை மற்றும் கொரோனா பரிசோதனை முடிவுகளைக் காட்டும் ஒரு டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை ஆகும். இது &#039;விசாட்&#039; (WeChat) என்ற சமூக ஊடக தளம் மூலம் கிடைக்கிறது. காகித வடிவிலும் இந்த சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம். இது சீன குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-30/pwkifoaa/hero-imag-2025-09-30T125847.523.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 06 Oct 2025 16:16:35 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காலாவதியான, தடுப்பூசி, பாஸ்போர்ட்:, சிறுவனுக்கு, சிறிய, கதவு, வழியாக, உணவு, வைரல், வீடியோவின், பின்னணி, என்ன</media:keywords>
    </item>
    <item>
        <title>54 மணிநேரம் உயிர் போராட்டம்; கிணற்றில் தவறுதலாக விழுந்த பெண் பிழைத்தது எப்படி?</title>
        <link>https://dailytopnewz24.com/54-மணிநேரம்-உயிர்-போராட்டம்-கிணற்றில்-தவறுதலாக-விழுந்த-பெண்-பிழைத்தது-எப்படி</link>
        <guid>https://dailytopnewz24.com/54-மணிநேரம்-உயிர்-போராட்டம்-கிணற்றில்-தவறுதலாக-விழுந்த-பெண்-பிழைத்தது-எப்படி</guid>
        <description><![CDATA[ சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஒரு பழைய கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் தவறுகளாக 48 வயதான பெண் ஒருவர் விழுந்திருக்கிறார். கிட்டத்தட்ட 54 மணி நேரத்திற்குப் பின் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.சவுத் சைனா மார்னிங் போஸ்ட்படி, செப்டம்பர் 13ஆம் தேதி காட்டுப்பகுதிக்கு நடந்து சென்றிருக்கும்போது ஆழமான கிணற்றில் ஜின் என்பவர் தவறுதலாக விழுந்திருக்கிறார். மறுநாள் அவர் காணாமல் போனதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து மீட்புக் குழுவினர் அவரை தேடும் முயற்சியை செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கினர்.Woman fell into wellட்ரோன் உதவியுடன் அவரைத் தேடி வந்தனர். இதற்கிடையில் ஜின் அந்த கிணற்றின் சுவரைப் பிடித்து ஒட்டிக்கொண்டு இருக்கிறார். சுவரைப் பிடித்துக் கொண்டு கால்களில் நீச்சல் அடித்துக்கொண்டு, அவர் அந்த 54 மணி நேரத்தையும் கடந்திருக்கிறார்.மீட்பு குழுவினர்கள் அவரை செப்டம்பர் 15 அன்று பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில் &quot;நான் விரக்தியடைந்து முற்றிலும் உடைந்து போன தருணங்கள் இருந்தன. கிணற்றின் சுவரை விட்டுவிடலாம் என்று பலமுறை நினைத்தேன், ஆனால் பின்னர் என் அம்மா, அப்பா, கல்லூரியில் சேரத் தொடங்கிய என் மகள் ஆகியோரை யோசித்து விடாமல் அந்த சுவரைப் பற்றிக் கொண்டு இருந்தேன்.கிணற்றின் அடிப்பகுதி மிகவும் இருட்டாக இருந்தது. கொசுக்கள் நிறைந்திருந்தன. அருகிலேயே சில நீர் பாம்புகள் நீந்திக் கொண்டிருந்தன. ஒரு முறை நீர் பாம்பு என் கையில் கடித்தது. ஆனால் அது விஷம் அல்ல. எந்த தீங்கும் ஏற்படாமல் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளேன்&quot; என்று கூறியிருக்கிறார். அவர் கைகளில் ஏற்பட்ட காயங்களுக்கு மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்திருக்கின்றனர்.திருமணத்தை மீறிய உறவு: ரூ.2.1 கோடியை கொடுத்துவிட்டு திரும்பக் கேட்ட பெண் - நீதிமன்றம் சொன்னதென்ன? ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/8giu2s29/hero-imag-2025-09-29T102929.190.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Tue, 30 Sep 2025 10:59:33 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>மணிநேரம், உயிர், போராட்டம், கிணற்றில், தவறுதலாக, விழுந்த, பெண், பிழைத்தது, எப்படி</media:keywords>
    </item>
    <item>
        <title>`வர்த்தகம் இந்தியாவின் முடிவு&amp;apos; &amp; ஜெய்சங்கர் மாஸ் பேச்சு; `இதுதான் சுயமரியாதை&amp;apos; &amp; மெச்சும் ரஷ்யா!</title>
        <link>https://dailytopnewz24.com/வர்த்தகம்-இந்தியாவின்-முடிவு-ஜெய்சங்கர்-மாஸ்-பேச்சு-இதுதான்-சுயமரியாதை-மெச்சும்-ரஷ்யா</link>
        <guid>https://dailytopnewz24.com/வர்த்தகம்-இந்தியாவின்-முடிவு-ஜெய்சங்கர்-மாஸ்-பேச்சு-இதுதான்-சுயமரியாதை-மெச்சும்-ரஷ்யா</guid>
        <description><![CDATA[ ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியா மீது 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திவிடும் என்று கணக்கு போட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.இந்தியாவின் நிலைப்பாடு
ஆனால், அது நடக்கவில்லை. இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதன் அளவுதான் குறைந்துள்ளது. &#039;இந்திய தேசத்திற்கும், இந்திய மக்களின் நலனுக்கும் எது நல்லதோ, அதைத்தான் இந்தியா தொடர்ந்து செய்யும்&#039; என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்ஜெய்சங்கர் பேச்சு
சமீபத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், &quot;அமெரிக்கா தங்களது எண்ணெயை இந்தியாவிடம் விற்க நினைக்கிறது. இது குறித்து ஆலோசிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ரஷ்யா மற்றும் பிற நாடுகளில் இருந்து என்ன வாங்குகிறோம் என்பது இந்தியாவின் முடிவு. அதற்கும் இந்தியா - அமெரிக்க உறவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை&quot; என்று குறிப்பிட்டிருந்தார். ரஷ்யாவின் பாராட்டு
ஜெய்சங்கரின் இந்தப் பேச்சை ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஐ.நா சபையில் பாராட்டியிருக்கிறார். அவர் பேசியதாவது...&quot;ஜெய்சங்கரின் இந்தப் பேச்சு தக்க பதிலடி. இது துருக்கியைப் போல, இந்தியாவிற்கு சுய மரியாதை இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்திய - ரஷ்ய உறவிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த உறவிற்கு ஏதாவது பிரச்னையை ஏற்படுத்த பிறர் முயன்றால், &#039;இந்தியா தனது கூட்டாளியைத் தானே தேர்ந்தெடுக்கும்&#039; என்பதை இந்திய பிரதமரும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் தெளிவுப்படுத்திவிட்டனர். செர்ஜி லாவ்ரோவ்அமெரிக்கா இந்தியா - அமெரிக்க உறவை வலுப்படுத்த விரும்பினால், அமெரிக்கா முன்னிறுத்தும் விதிமுறைகளை இந்தியா ஆலோசிக்க தயாராக இருக்கிறது. ஆனால், வர்த்தகம், முதலீடு, பொருளாதாரம், ராணுவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவிற்கும், பிற நாடுகளுக்கும் ஒப்பந்தம் உண்டானால், இந்தியா அந்தந்த நாடுகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபடும்&quot; என்று கூறியிருக்கிறார். ஜெய்சங்கர்-மார்கோ ரூபியோ சந்திப்பு: `இந்தியாவின் அதிக எரிசக்தி தேவை புரிகிறது!&#039; - ரூபியோ கருத்து ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-29/nkl2pf2c/AP19247394140376.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:22:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>வர்த்தகம், இந்தியாவின், முடிவு, ஜெய்சங்கர், மாஸ், பேச்சு, இதுதான், சுயமரியாதை, மெச்சும், ரஷ்யா</media:keywords>
    </item>
    <item>
        <title>அட்டைப்படம்</title>
        <link>https://dailytopnewz24.com/அட்டைப்படம்</link>
        <guid>https://dailytopnewz24.com/அட்டைப்படம்</guid>
        <description><![CDATA[  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-28/ixal2idg/001.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:22:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>அட்டைப்படம்</media:keywords>
    </item>
    <item>
        <title>USA: 30 ஆண்டுகள் வசித்த 73 வயது மூதாட்டியை கைவிலங்கு; இந்தியாவுக்கு நாடு கடத்திய ட்ரம்ப் அரசு</title>
        <link>https://dailytopnewz24.com/usa-30-ஆண்டுகள்-வசித்த-73-வயது-மூதாட்டியை-கைவிலங்கு-இந்தியாவுக்கு-நாடு-கடத்திய-ட்ரம்ப்-அரசு</link>
        <guid>https://dailytopnewz24.com/usa-30-ஆண்டுகள்-வசித்த-73-வயது-மூதாட்டியை-கைவிலங்கு-இந்தியாவுக்கு-நாடு-கடத்திய-ட்ரம்ப்-அரசு</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை கைது செய்து அவர்களின் சொந்த நாட்டிற்கு நாடு கடத்துவது அதிகரித்து இருக்கிறது. அவர்களை மிகவும் கொடூரமான முறையில் கை, காலில் விலங்கிட்டு நாடு கடத்தப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. புதிதாக இந்தியாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவரை ட்ரம்ப் அரசு இந்தியாவிற்கு நாடு கடத்தி இருக்கிறது. டொனால்டு ட்ரம்ப்பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்ஜித் (73) என்ற பெண் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் தனது மகனுடன் வசித்து வருகிறார். அவர் போதிய ஆவணங்கள் இல்லாமல் வசித்து வருகிறார் என்பது அமெரிக்க அரசுக்கும் தெரியும். 1992ஆம் ஆண்டு கவுர் தனது இரண்டு மகன்களுடன் அமெரிக்காவிற்குச் சென்றார். அவர் வடக்கு கலிபோர்னியாவில் வசித்து வந்தார்.கவுர் தனக்கு அகதி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து 6 மாதத்திற்கு ஒரு முறை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள இமிகிரேசன் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்திற்கு சென்று அறிக்கை கொடுத்து வந்தார். இது குறித்து கவுர் மருமகள் மஜ்சி கவுர் கூறுகையில்,&#039;&#039;கடந்த 13 வருடங்களாக 6 மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்க இமிகிரேசன் அலுவலகத்திற்கு சென்று ஆஜராகி வந்தார். அவர் தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்கள்.ஆனால் இப்போது திடீரென ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி வரவழைத்து கைது செய்திருக்கிறார்கள்&#039;&#039;என்றார்.கவுரிடம் கூடுதலாக ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி அமெரிக்க இமிகிரேசன் அதிகாரிகள் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டனர்.ஹர்ஜித் கவுர்கவுர் அங்கு சென்றபோது அவரைப் பிடித்து முகாமில் அடைத்தனர். அங்கிருந்து எந்த விளக்கமும் கொடுக்காமல் ஜார்ஜியாவில் உள்ள முகாமிற்குக் கொண்டு சென்றனர். அங்கு தனி அறையில் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்திவிட்டனர்.US: ``கைகளில் விலங்கு; தண்ணீர், கழிவறைக்கு தடை&quot; -கதறிய மக்கள்; டிரம்ப் செயலால் கொதிக்கும் பிரேசில்இது குறித்து கவுர் வழக்கறிஞர் அலுவாலியா கூறுகையில், &quot;கவுர் தனது உடமைகளை எடுத்துக்கொள்ளவோ அல்லது அவர் உறவினர்களிடம் சென்று வருகிறேன் என்று சொல்லி விடைபெறவோ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கவுரைக் கையில் விலங்கிட்டு அழைத்துச்சென்றனர்.ட்ரம்ப்முதலில் பேகர்ஸ்பீல்டு அலுவலகத்திற்குச் சென்ற கவுரை விலங்கிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து சிறப்பு விமானத்தில் ஜார்ஜியா முகாமிற்குக் கொண்டு சென்றனர்.கவுர் குடும்பத்தினர் அவரை இந்தியாவிற்கு அனுப்பத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டிருந்தனர். அதோடு வழக்கமான பயணிகள் விமானத்தில் அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். மேலும் கவுர் குடும்பத்தினருடன் சில மணி நேரம் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை.70 மணி நேரம் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் அடைத்து வைத்திருந்துவிட்டு நாடு கடத்தி இருக்கின்றனர். அவர் பல முறை அகதி அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்தார். கடைசியாக 2012ஆம் ஆண்டு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது&quot; என்று தெரிவித்தார்.கைவிலங்கிட்டு நாடு கடத்தும் USA73 வயதாகும் மூதாட்டியை கைவிலங்கிட்டு நாடு கடத்தி இருப்பது அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கவுர் கைது செய்யப்பட்டவுடன் கவுர் குடும்பத்தினர் அங்குள்ள இந்தியர்களுடன் சேர்ந்து கலிபோர்னியாவில் போராட்டம் நடத்தினர்.இது குறித்து இமிகிரேசன் அதிகாரிகள் கூறுகையில், &quot;ஹர்ஜித் கவுர் மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை சென்று பல முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார், ஒவ்வொரு முறையும் தோற்றார். இப்போது அவர் அனைத்து சட்டப் போராட்டத்திலும் தோற்றுவிட்டார். எனவே நாங்கள் அமெரிக்க சட்டத்தையும் நீதிபதியின் உத்தரவுகளையும் செயல்படுத்துகிறோம்&quot; என்று தெரிவித்தார்.US: கை, கால்களில் விலங்கிடும் அமெரிக்கா - வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ; மஸ்க் ரியாக்‌ஷன் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-26/z0b0jqz8/73-year-old-sikh-woman-harjit-kaur-deported-255523386-16x90.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Mon, 29 Sep 2025 13:22:32 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>USA:, ஆண்டுகள், வசித்த, வயது, மூதாட்டியை, கைவிலங்கு, இந்தியாவுக்கு, நாடு, கடத்திய, ட்ரம்ப், அரசு</media:keywords>
    </item>
    <item>
        <title>Gold Rate: இப்போது தங்கம் விலை பவுனுக்கு ரூ.85,120; புதிய உச்சம்! இன்னும் உயருமா? வாங்கலாமா? | FAQ</title>
        <link>https://dailytopnewz24.com/gold-rate-இப்போது-தங்கம்-விலை-பவுனுக்கு-ரூ85120-புதிய-உச்சம்-இன்னும்-உயருமா-வாங்கலாமா-faq</link>
        <guid>https://dailytopnewz24.com/gold-rate-இப்போது-தங்கம்-விலை-பவுனுக்கு-ரூ85120-புதிய-உச்சம்-இன்னும்-உயருமா-வாங்கலாமா-faq</guid>
        <description><![CDATA[ தங்கம் விலை தற்போது (இன்று மதியம் 3 மணி நிலவரப்படி) அதிரடியாக கிராமுக்கு ரூ.10,640 ஆகவும், பவுனுக்கு ரூ.85,120 ஆகவும் உயர்ந்துள்ளது.தற்போது தங்கம் வாங்கலாமா... இப்படியே சென்றால் என்ன செய்வது என்ற ஏகப்பட்ட கேள்விகள் உங்களிடம் எழுந்திருக்கும். அதற்கான பதில் இதோ...இன்றைய தங்கம் விலை என்ன?இன்று காலை முதல் மதியம் 3 மணி வரை, தங்கம் கிராமுக்கு ரூ.10,500 ஆகவும், பவுனுக்கு ரூ.84,000 ஆகவும் விற்பனையாகி வந்தது. தற்போது, கிராமுக்கு ரூ.10,640 ஆகவும், பவுனுக்கு ரூ.85,120 ஆகவும் உயர்ந்துள்ளது.தங்கம்Gold: இன்று 2வது முறையாகப் புதிய உச்சம்!ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,120 உயர்வு; இப்ப தங்கம் விலை என்ன?இன்று மட்டும் எத்தனை ரூபாய் உயர்வு? இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.210-உம், பவுனுக்கு ரூ.1,680-உம் உயர்ந்துள்ளது. இரண்டு நாள்களில் தங்கம் எவ்வளவு ரூபாய்க்கு உயர்ந்துள்ளது?நேற்று காலை முதல் தற்போது வரை தங்கம் விலையில் நான்கு முறை மாற்றம் நடந்துள்ளது. நேற்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.10,360-க்கும், பவுனுக்கு ரூ.82,880-க்கும் விற்பனை ஆனது. பின்னர், மதியம் 3 மணிக்கு மேல், கிராமுக்கு ரூ.10,430-க்கும், பவுனுக்கு ரூ.83,440-க்கும் விற்பனை ஆனது. ஆக, நேற்று முதல் இப்போது வரை தங்கம் கிராமுக்கு ரூ.280-உம், பவுனுக்கு ரூ.2,240-உம் உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஏன் இப்படி உயர்ந்து வருகிறது? அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இருந்து தொடர்ந்து வரும் அதிரடி அறிவிப்புகளும், அதிரடி நடவடிக்கைகளும் இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். அடுத்ததாக, பொதுவாக, அமெரிக்க டாலரின் மதிப்பு இறங்குமுகத்தில் செல்லும்போது, தங்கம் விலை அதிகரிக்கும். இதுதான் இப்போதும் நடந்து வருகிறது. அமெரிக்க கருவூலப் பத்திரங்களை விற்று தற்போது உலக நாடுகள் தங்கங்களை வாங்கி குவித்து வருகிறது. இதற்கு உலக நாடுகளுக்கு அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போனதே முக்கிய காரணம். அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. மேலும் நான்கு முறை வட்டி குறைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இதனால், முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளைத் தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர்.ட்ரம்ப்H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு?உலக அளவில் பல நாடுகள் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றன.தற்போது உலக நாடுகளுக்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இதுவும் மிக முக்கிய காரணம்.தங்கத்தின் தேவை அதிகரித்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், உலகில் இருக்கும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தங்கம் தோண்டியெடுக்கப்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது. அதனால், தேவைக்கு ஏற்ப, தங்கத்தின் சப்ளை இனி இருக்காது.இந்தியாவைப் பொறுத்தவரை, அடுத்தடுத்து பண்டிகைகள், முகூர்த்தங்கள் வர உள்ளன. அதனால், தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வத்தைக் காட்டுவார்கள். இதுவும் தங்கத்தின் விலையை அதிகரிக்கும்.ஜி.எஸ்.டி 2.0-ஆல் தங்கம் விலை குறையுமா?2017-ம் ஆண்டு இந்தியாவில் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது தங்கம் மீது 3 சதவிகித வரியும், செய்கூலி மீது 5 சதவிகித வரியும் விதிக்கப்பட்டது.தற்போது மாறியுள்ள ஜி.எஸ்.டி 2.0-ல், தங்கத்தைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. இப்போது தங்கம் வாங்கலாமா... வேண்டாமா?பண்டிகை, முகூர்த்தம், பயன்பாடு... என அதுவும் அவசியமாக இருந்தால் மட்டும் ஆபரணத் தங்கமாக வாங்குங்கள். இல்லையென்றால், கோல்டு இ.டி.எஃப், பங்குச்சந்தை எனத் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதில் செய்கூலி, சேதாரமாக இருக்காது. ஆக, பிற்காலத்தில் இந்த முதலீடுகளில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப கூடுமே தவிர... குறையாது. தங்கம் Trump Gold Card பெற தனிநபருக்கு 1 மில்லியன், பணியாளருக்கு 2 மில்லியன் டாலர்கள்! - ட்ரம்ப் அறிவிப்பு தங்கத்தில் முதலீடு செய்ய தெரியாதா?தங்கத்தில் முதலீடு செய்ய தெரியாது என்றால் கவலை வேண்டாம். நிதி ஆலோசர், மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர், பங்குச்சந்தை நிபுணர் ஆகியோரின் உதவியை நாடலாம். ஆனால், அவர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ளுங்கள். தங்கம் விலை இன்னும் உயருமா? தற்போது இருக்கும் சர்வதேச சூழல்கள் தங்கம் விலை உயர்விற்குச் சாதகமாக உள்ளது. அதனால், தங்கத்தின் விலை உயர்வதற்கான வாய்ப்புகளே அதிகம். வெள்ளி விலை என்ன? தற்போது வெள்ளி கிராமுக்கு ரூ.150-க்கு விற்பனை ஆகி வருகிறது. silver | வெள்ளிவெள்ளியில் முதலீடு செய்யலாமா? இப்போது இருக்கும் நிலவரப்படி, குறைந்தபட்சம் இந்த ஆண்டு இறுதிவரை வெள்ளி விலை உயர்வு இருக்கலாம். அதனால், அதில் முதலீடு செய்வதும் நல்லது தான்.  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-05-20/hm9syeg6/Whatsdigitalgold0483c264b6.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 17:55:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Gold, Rate:, இப்போது, தங்கம், விலை, பவுனுக்கு, ரூ.85, 120, புதிய, உச்சம், இன்னும், உயருமா, வாங்கலாமா, FAQ</media:keywords>
    </item>
    <item>
        <title>காசா :  உலக நாடுகளின் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான குரல் &amp; உண்மையான அக்கறையா?</title>
        <link>https://dailytopnewz24.com/காசா-உலக-நாடுகளின்-பாலஸ்தீனத்துக்கு-ஆதரவான-குரல்-உண்மையான-அக்கறையா</link>
        <guid>https://dailytopnewz24.com/காசா-உலக-நாடுகளின்-பாலஸ்தீனத்துக்கு-ஆதரவான-குரல்-உண்மையான-அக்கறையா</guid>
        <description><![CDATA[ &#039;காசா&#039;  இப்போது சர்வதேச அளவில் உச்சரிக்கப்படும் சொல். அக்டோபர் 7, 2023 அன்று தொடங்கிய போர் ஏறத்தாழ மூன்றாண்டை நெருங்கிவிட்டது. இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 65,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காசா நகரம் ஏறத்தாழ முற்றும் முழுவதுமாக அழிந்துவிட்டது. செயற்கைப் பஞ்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது. Save The Children அமைப்பின் தகவலின்படி 20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர்.காசா அவலம்ஆயிரக்கணக்கான மக்கள் குண்டு சத்தங்களுக்கு மத்தியில், உதவிக்கான வாகனங்கள் வரும் திசையைப் பார்த்து காத்திருக்கிறார்கள். போதுமான உணவும், மருத்துவமுமின்றி ஆயிரக்கணக்கானவர்கள் சொட்டும் ரத்தத்துடன், காயத்தின் மீதான ஈக்களை விரட்டிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் தஞ்சமடைந்திருக்கும் பகுதியைக் குறிவைத்து குண்டுகள் வந்து விழுகிறது. ஐ.நா அறிக்கையின்படியே, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்றில்லாமல் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டது.கதறும் குழந்தைகள், நோபல் கேட்கும் ட்ரம்ப்இத்தனைக் கொடுமைகளையும் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் இஸ்ரேல், கடந்த 11-ம் தேதியிலிருந்து தரைவழித் தாக்குதலையும் தொடங்கியிருக்கிறது.இஸ்ரேலுக்கு துணைபோகும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், &#039;எனக்கு நோபல் பரிசு கொடுத்தாக வேண்டும்&#039; என அடம்பிடிக்கிறார்.நல்லவேலை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கும் நோபல் பரிசு வேண்டும் என கேட்காமல் விட்டாரே?நெதன்யாகு - ட்ரம்ப்போர் ஏன் முடியவில்லை:இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், &#039;ஹமாஸை ஒழிக்காமல் விடமாட்டோம்&#039; என உறுதியாக இருக்கிறது இஸ்ரேல். அதனால், ஐ.நா-வின் தீர்மானத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.அமெரிக்காவின் ஆதரவுடன் தொடர்ந்து தாக்குதலையும் நடத்திவருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே  மத்தியஸ்தம் செய்ய முயன்ற கத்தார் மீதும், இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருக்கிறது.இதன் காரணமாக மத்தியஸ்த வாய்ப்பும் தவிடுபொடியாக்கப்பட்டிருக்கிறது.இரு நாட்டிலும் அரசியல் ஆதாயத்துக்காக போரை ஆதரிக்கும் குழுக்கள் செயல்படுகின்றன. அதன் தாக்கத்திலிருந்து அரசியல் கட்சிகளால் பின்வாங்க முடியவில்லை.இன்னொருபக்கம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது இருக்கும் ஊழல் வழக்குகள் ஒவ்வொன்றாக விசாரணைக்கு வந்துகொண்டிருக்கிறது.அதிலிருந்தும் தப்பிக்க நெதன்யாகுவுக்கு கிடைத்திருக்கும் ஒரே துருப்புச் சீட்டு இந்த கண்மூடித்தனமான தாக்குதல் மட்டுமே.எனவே, இந்தப் போரை ஆதரிக்காத உலக நாடுகள் மீது வன்மத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறார். இனப்படுகொலை : வரலாற்றில் வெறும் எண்கள் ஆகிப் போனவர்களா ரூவாண்டா முதல் காசா வரையிலான மக்கள் உலக நாடுகள் என்ன சொல்கின்றன?G20 உறுப்பு நாடுகளில் பதின்மூன்று நாடுகள், BRICS+ நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் (EU), OIC (இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு), ஆப்பிரிக்க ஒன்றியம் (African Union), அணிசேராத இயக்கம் (Non-Aligned Movement - NAM), ஐ.நா-வின் 193 நாடுகளில் 151 நாடுகள் (78%+) என பாலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகள் இவ்வளவு இருந்தும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.இஸ்ரேலின் நடவடிக்கை &#039;இனப் படுகொலை&#039; எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, ஐநா-வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், எதையும் இறுதிக்கட்டத்துக்கு நகர்த்த முடியாமல் அமெரிக்காவின் வீட்டோ பவர் தடுக்கிறது.இந்த நிலையில்தான் செப்டம்பர் 15 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் நடந்த ஒரு நிகழ்வில், &quot;பாலஸ்தீன நாடு இருக்காது&quot; என நெதன்யாகு தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளித்திருக்கிறார்.இதன் பொருள் மிகவும் ஆழமானது என்பதை காசா மீது தொடரும் தாக்குதல் நமக்கு உணர்த்துகின்றன.இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகள்:காசா மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலால் காட்டமான பல்வேறு உலக நாடுகள், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது.குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளான பொலிவியா, கொலம்பியா ஆகியவை இஸ்ரேலுடனான தங்கள் தூதரக உறவுகளை முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டன.துருக்கி, ஜோர்டான், சிலி, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலிலிருந்து தங்கள் தூதர்களைத் திரும்ப அழைத்துள்ளன.ஸ்பெயின், கொலம்பியா, இத்தாலி, பெல்ஜியம் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்திவைத்துள்ளன.ஸ்பெயின் பிரதமர், இஸ்ரேலுடனான ராக்கெட் லாஞ்சர் 700 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்திருக்கிறார். கொலம்பியா இஸ்ரேலுக்கு நிலக்கரி ஏற்றுமதியை நிறுத்திவைத்துள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலிய குடியேற்றப் பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குத் தடை விதிப்பது அல்லது கூடுதல் வரி விதிப்பது குறித்து விவாதித்து வருகிறது.தென் ஆப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) இஸ்ரேலுக்கு எதிராக &quot;இனப்படுகொலை&quot; குற்றச்சாட்டு வழக்குத் தொடுத்துள்ளது.இந்த வழக்கில் பிரேசில், ஸ்பெயின், அயர்லாந்து, மெக்சிகோ, மற்றும் துருக்கி போன்ற நாடுகள் தென் ஆப்பிரிக்காவிற்கு ஆதரவாக இணைந்துள்ளன.இந்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் ஐநா சபை கூட்டத்தில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் ஆதரவு அளிக்கும் என வெளிப்படையாகவே தெரிகிறது.ஐநா சபைஇஸ்ரேல் – பாலஸ்தீன நாடுகளின் 100 ஆண்டுச் சிக்கல்.. விதை போட்ட `பால்ஃபர் தீர்மானம்&#039;!இந்த நிலையில்தான் முக்கிய நகர்வாக கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்திருக்கிறது.அமெரிக்காவைத் தவிர, ஐ.நா-வில் வீட்டோ பவர் இருக்கும் ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளும் காஸா போர் நிறுத்தத்துக்கு ஆதரவாகவே உள்ளன.ஏன் இந்த நாடுகளின் ஆதரவு முக்கியம்?பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் என்ற நாடு பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதிலிருந்து, இருநாடுகளின் எல்லை விவகாரம் தொடர்ந்து சிக்கலைச் சந்தித்தது.அதனால், அமெரிக்கா பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமல் இருக்கிறது. அமெரிக்காவின் உற்ற நட்பு நாடுகளான கனடா, இங்கிலாந் ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-22/crftj31s/காஸா-அவலம்" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 17:55:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>காசா, உலக, நாடுகளின், பாலஸ்தீனத்துக்கு, ஆதரவான, குரல், உண்மையான, அக்கறையா</media:keywords>
    </item>
    <item>
        <title>பற்றி எரியும் H&amp;1B விசா விவகாரம்: அமெரிக்க வெளியுறவு செயலரைச் சந்தித்த ஜெய்சங்கர்; என்ன பேசினர்?</title>
        <link>https://dailytopnewz24.com/பற்றி-எரியும்-h-1b-விசா-விவகாரம்-அமெரிக்க-வெளியுறவு-செயலரைச்-சந்தித்த-ஜெய்சங்கர்-என்ன-பேசினர்</link>
        <guid>https://dailytopnewz24.com/பற்றி-எரியும்-h-1b-விசா-விவகாரம்-அமெரிக்க-வெளியுறவு-செயலரைச்-சந்தித்த-ஜெய்சங்கர்-என்ன-பேசினர்</guid>
        <description><![CDATA[ நேற்று அமெரிக்கா நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார்.இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்த பிறகு, இதுவே இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளும் முதல்முறை ஆகும்.ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோஇந்தச் சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...&#039;நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.எங்களது உரையாடல் இருதரப்பு மற்றும் தற்போதைய சர்வதேச விவகாரங்கள் குறித்து இருந்தது.முக்கியமான விஷயங்களில் முன்னேற்றம் காணத் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான அவசியம் குறித்து ஒப்புக்கொண்டோம்.நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்&quot; என்று குறிப்பிட்டுள்ளார்.H-1B: &quot;ஏற்கனவே விசா வைத்திருப்பவர்கள் ஒரு லட்சம் டாலர் செலுத்த வேண்டாம்&quot; - அமெரிக்கா விளக்கம்மார்கோ ரூபியோ பதிவிட்டிருப்பதாவது...&quot;இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் சந்தித்தேன்.நாங்கள் வர்த்தகம், எரிசக்தி, மருத்துவம், முக்கியமான கனிமங்கள் உள்ளிட்ட இருதரப்பு உறவின் முக்கியமான விஷயங்களைப் பற்றிக் கலந்துரையாடினோம்.மேலும், இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இன்னும் அதிகமான வளங்களைப் பெருக்குவது குறித்தும் பேசினோம்&quot; என்று குறிப்பிட்டுள்ளார்.Good to meet @SecRubio this morning in New York. Our conversation covered a range of bilateral and international issues of current concern. Agreed on the importance of sustained engagement to progress on priority areas. We will remain in touch.   pic.twitter.com/q31vCxaWel— Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 22, 2025 Met with Indian External Affairs Minister @DrSJaishankar at UNGA. We discussed key areas of our bilateral relationship, including trade, energy, pharmaceuticals, and critical minerals and more to generate prosperity for India and the United States. pic.twitter.com/5dZJAd85Za— Secretary Marco Rubio (@SecRubio) September 22, 2025  ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-23/jofmgnc7/Jaishankar-Marco-Rubio.jpg" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 17:55:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>பற்றி, எரியும், H-1B, விசா, விவகாரம்:, அமெரிக்க, வெளியுறவு, செயலரைச், சந்தித்த, ஜெய்சங்கர், என்ன, பேசினர்</media:keywords>
    </item>
    <item>
        <title>50% வரி, Chabahar, H&amp;1B விசா; வரிசைக்கட்டி உள்ள பிரச்னைகள்... அமெரிக்கா செல்லும் பியூஷ், ஜெய்சங்கர்!</title>
        <link>https://dailytopnewz24.com/50-வரி-chabahar-h-1b-விசா-வரிசைக்கட்டி-உள்ள-பிரச்னைகள்-அமெரிக்கா-செல்லும்-பியூஷ்-ஜெய்சங்கர்</link>
        <guid>https://dailytopnewz24.com/50-வரி-chabahar-h-1b-விசா-வரிசைக்கட்டி-உள்ள-பிரச்னைகள்-அமெரிக்கா-செல்லும்-பியூஷ்-ஜெய்சங்கர்</guid>
        <description><![CDATA[ இன்று அமெரிக்காவில் ஆறாவது கட்ட இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நடக்க உள்ளன. (இந்திய நேரப்படி இன்று இரவு)இந்தப் பேச்சுவார்த்தைக்காக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்கிறார். இன்னொரு பக்கம், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்க் ரூபியோவை அமெரிக்காவில் சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். ஆக, இன்று ஒரு மிக முக்கியமான நாள் என்றே கருதலாம். ஜெய்சங்கர்இந்தியா, அமெரிக்கா உறவில் விரிசல்
கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில், இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்தது. இதில் 25 சதவிகித வரி இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் விதிக்கப்பட்ட கூடுதல் வரி ஆகும். அப்போதிருந்தே இந்தியா, அமெரிக்கா உறவில் உண்டான விரிசல் பெரிதாக தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா இடையே பெரிய வர்த்தக இடைவெளி உள்ளது... அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் டாப் நாடுகளில் ஒன்று இந்தியா... ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அந்தப் பணத்தை ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துகிறது... என்று ஏகப்பட்ட காரணத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுக்குகிறார். மூன்று மறைமுக கோபங்கள்
இதையும் தாண்டி, அவருக்கு இந்தியா மீது மூன்று முக்கிய கோபங்கள் உண்டு. கடந்த மே மாதம், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த மோதலை நிறுத்தத்திற்கு கொண்டு வந்தது &#039;நான் தான்&#039; என்று ட்ரம்ப் பலமுறை பறைசாற்றி வருகிறார். இதை இந்திய பிரதமர் மோடி மறுத்து வருகிறார். கடந்த ஜூன் மாதம், ட்ரம்ப் உடனான தொலைபேசி அழைப்பின் போது, இது குறித்து மிக தெளிவாக அவரிடமே மறுத்திருக்கிறார் மோடி. ட்ரம்ப்அடுத்ததாக, கடந்த ஜூலை மாதம், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரேசில் சென்றிருந்தார் மோடி. அப்போது அமெரிக்காவிற்கு வந்துவிட்டு செல்லுமாறு மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார் ட்ரம்ப். ஆனால், அப்போது மோடி வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்லவில்லை. மூன்றாவதாக, மோடியும், ட்ரம்பும் நல்ல நண்பர்கள். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் நோபல் பரிசுக்கு ட்ரம்பைப் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், மோடி மட்டும் இன்னும் ட்ரம்பை பரிந்துரை செய்யவில்லை. இந்த மூன்று வருத்தங்கள், கோபங்களும் இந்தியா மீதான வரிக்கு மறைமுக காரணங்கள் என அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.மோடியின் சீன விசிட் 
செப்டம்பர் மாதம் வரை, இந்தியாவைச் சாடி வந்த ட்ரம்பிடம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சற்று மாற்றத்தைக் காணமுடிந்தது. இதற்கு முக்கிய காரணம், பிரதமர் மோடியின் சீனா விசிட். இந்தியா - சீனா எல்லைப் பிரச்னைகளுக்கு பிறகு... 7 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் சீனா சென்றிருந்தார் மோடி. அங்கே நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகிய மூவரின் நட்பும் மிகவும் இணக்கமாக இருந்தது. மோடி - புதின் - ஜின்பிங்மூன்று நாடுகள்
இந்த மூன்று நாடுகளையும் சற்று தள்ளி நின்று பார்த்தால், இந்த மூன்று நாடுகளுமே அமெரிக்காவிற்கு எதிராக தற்போதைக்கு ஒவ்வொரு விதமாக உள்ளது. இந்தியா - ட்ரம்ப் எதிர்பார்ப்பதை இந்தியா செய்யவில்லை. வரி விதித்து பயமுறுத்தியும், இன்னும் இந்தியா வழிக்கு வரவில்லை. சீனா - அமெரிக்கா, சீனா இடையே தற்போது பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனாலும், சீனா தனிநடை போட்டு வருகிறது. அதிக வரி விதிக்கப்பட்ட இந்தியா, பிரேசிலுக்காக குரல் கொடுத்து வருகிறது. ரஷ்யா - புதின் நல்ல நண்பர் என்பதால், தான் பதவிக்கு வந்ததும் எளிதாக ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று ட்ரம்ப் நினைத்திருந்தார். ஆனால், இன்று வரை அது கனவாக மட்டுமே தொடர்கிறது. இந்த மூன்று நாடுகளும் சீனாவில் ஒன்றுகூடி கைக்குலுக்கியது ட்ரம்பிற்கு நிச்சயம் ஜெர்க்கை உண்டாக்கியிருக்கும். மீண்டும் &#039;நண்பேன்டா&#039;
இந்தியா, சீனா நட்பு அமெரிக்காவிற்கு அவ்வளவு நல்லதல்ல. காரணம், அமெரிக்காவிற்கு போட்டி நாடாக சீனா வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஆசியாவில் அமெரிக்காவிற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை இந்தியா. பல ஆண்டுகளாக, அமெரிக்கா இந்தியா உடன் பார்த்து பார்த்து வளர்த்து வந்த உறவைத் தான் சீட்டுக்கட்டைப் போல சரித்துவிட்டார் ட்ரம்ப். அதை சரிசெய்யவும், சீனா உடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறைக்கவும், மீண்டும் ட்ரம்ப் நட்பு அஸ்திரத்தை இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டார். &quot;நான் எப்போதும் பிரதமர் மோடி உடன் நட்பாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். நான் எப்போதுமே அவருக்கு நண்பர்தான். ஆனால், இப்போது என்ன நடக்கிறதோ, அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.மோடி - ட்ரம்ப்எப்போதுமே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிகச் சிறப்பான உறவு இருக்கும். அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அவ்வப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும். அவ்வளவு தான்&quot; என்று செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் மோடி மீதும், இந்தியா மீதும் பாச மழை பொழிந்திருந்தார். இங்கிலாந்து பயணத்தின் போதும், ட்ரம்ப், பிரதமர் மோடி என்னுடைய நண்பர் என்று பேசியிருந்தார். பின், மோடியின் பிறந்த நாள் அன்றும், போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். இப்படி தனது ரூட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வரும் ட்ரம்ப், இந்தியா, அமெரிக்கா வர்த்தகம் குறித்தும் பாசிட்டிவாகத் தான் பேசி வருகிறார். முன்னேற்றம் காணும் பேச்சுவார்த்தைகள்
கடந்த வாரம், வர்த்தக பேச்சுவார்த்தைக்காக இந்தியா வந்த அமெரிக்க அதிகாரி குழுக்களும் பேச்சுவார்த்தை முன்னேற்றத்துடனே அமெரிக்கா திரும்பி சென்றுள்ளனர். முன்னர், பியூஷ் கோயல், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் வரும் நவம்பர் இறுதி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆக, இன்று பியூஷ் கோயல், ஜெய்சங்கர் அமெரிக்க பயணம் இருக்கப்போகிறது. பியூஷ் க ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-22/zlq8spi9/Untitled-design-4.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 17:55:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>50, வரி, Chabahar, H-1B, விசா, வரிசைக்கட்டி, உள்ள, பிரச்னைகள்..., அமெரிக்கா, செல்லும், பியூஷ், ஜெய்சங்கர்</media:keywords>
    </item>
    <item>
        <title>H&amp;1B Visa: &amp;quot;இந்தியர்களுக்குப் பெரும் சவால் காத்திருக்கிறதா?&amp;quot; &amp; பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேட்டி</title>
        <link>https://dailytopnewz24.com/h-1b-visa-இந்தியர்களுக்குப்-பெரும்-சவால்-காத்திருக்கிறதா-பேராசிரியர்-கிளாட்சன்-சேவியர்-பேட்டி</link>
        <guid>https://dailytopnewz24.com/h-1b-visa-இந்தியர்களுக்குப்-பெரும்-சவால்-காத்திருக்கிறதா-பேராசிரியர்-கிளாட்சன்-சேவியர்-பேட்டி</guid>
        <description><![CDATA[ அமெரிக்காவைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அதிபர் ட்ரம்ப். அவருடைய அறிவிப்புகள் வரக்கூடிய நாட்களில் பெரும் பிரச்னையாக மாறும் குறிப்பாக இந்தியர்களுக்குப் பெரும் சிக்கல்களும் சவால்களும் காத்திருக்கின்றன என எச்சரிக்கை விடுக்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியர் கிளாட்சன் சேவியர்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பொருளாதாரம் தொடர்பாக அடுத்தடுத்து வெளியிடும் அறிவிப்புகள் உலகம் முழுவதுமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்காகப் பெறக்கூடிய &#039;h1 b1&#039; விசாவைப் பெறுவதற்குக் கட்டணத்தைப் பல மடங்கு அவர் உயர்த்தி இருக்கிறார். அதன்படி இந்த விசாவைப் பெறுவதற்கு வெறும் 4 லட்ச ரூபாய் வரை மட்டுமே செலுத்தி வந்த நிலையில் இனி இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாயைச் செலுத்த வேண்டி இருக்கிறது.இது இந்தியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் விகடன் சார்பாக சர்வதேச அரசியலையும் பொருளாதாரத்தையும் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வரும் லயோலா கல்லூரியின் மூத்த பேராசிரியர் டாக்டர் கிளாட்சன் சேவியரிடம் பேசினோம். அவரிடம் கேட்ட சில முக்கியமான கேள்விகளும், அதன் சொன்ன பதில்களும் இங்கே!அதிபர் ட்ரம்ப்இந்தியர்களின் அமெரிக்கக் கனவுக்கு வேட்டு வைத்த ட்ரம்ப் - யாருக்குப் பாதிப்பு? இனி என்னவாகும்?அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?பதில்: நீண்டகால பிரச்னைகள், உடனடி பிரச்னைகள் என இரண்டும் இதில் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது என்பதுதான் கவலைக்குரிய விஷயம் . வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காகத்தான் இந்த விசா கொடுக்கப்படுகிறது . ஆண்டிற்கு 50000 விசாக்கள் வரை இப்படிக் கொடுக்கப்படும் . அது ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும் இதில் 60 சதவீதத்திற்கும் அதிகமான விசாக்கள் இந்தியர்கள் தான் பெறுகிறார்கள். பெரிய நிறுவனங்கள் மட்டும்தான் இப்படி வெளிநாட்டினவரைப் பணியாற்ற வைக்க வேண்டும் என்பதில்லை.அமெரிக்காவில் இயங்கக்கூடிய ஒரு நபர் நிறுவனங்கள் கூட வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அரசிடம் இருந்து இப்படி h1 b1 விசாக்களைப் பெற்றுத்தர முடியும். மூன்று ஆண்டுகளுக்கு மட்டும்தான் இந்த விசா ஒருவருக்குச் செல்லுபடி ஆகும் .அதற்குப் பிறகு தொடர்ந்து அவர் வேலை செய்ய வேண்டும் என்றால் விசாவைப் புதுப்பிக்க வேண்டும். அப்படி புதுப்பிப்பதற்கு மற்றும் புதிய விசாக்களைப் பெறுவதற்கு வெறும் 5000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அந்தக் கட்டணத்தை ஒரு லட்சம் அமெரிக்க டாலராக ட்ரம்ப் உயர்த்தி இருக்கிறார் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் இதற்காக ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டி இருக்கும்.H-1B Visa,  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்அமெரிக்காவில் வேலை செய்யும் பெரும்பாலான இந்தியர்களுக்கு ஆண்டு சம்பளம் என்பது 80 லட்ச ரூபாய் கூட இருக்காது. அதனால் நிச்சயமாகப் பெரும்பாலானவர்களால் இந்தக் கட்டணத்தைச் செலுத்த முடியாது .இவர்களைப் பணியமத்தியுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தி ஒரு ஊழியரைப் பணியில் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழலாம்.அதனால் அமெரிக்காவில் இருக்கக்கூடிய பெரும்பான்மை இந்தியர்கள் இந்தியா திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது உடனடியாக இல்லை என்றாலும் அடுத்தடுத்த மாதங்களில் பிரச்னை பெரிதாக வெடிக்கும் .இந்த விசாவைப் பெற்றுக் கொண்டு அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பெரும்பாலும் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டுதான் செல்வார்கள். அப்படி என்றால் பிரச்னை இன்னும் பெரிதாகும் தானே ?நிச்சயமாக ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டினரது மனைவிகளும் அமெரிக்காவில் படிப்பதற்கும் வேலைகளில் ஈடுபடுவதற்கும் வசதியாக b4 என்ற விசா வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அமெரிக்காவைப் பொறுத்தவரை வேலை செய்வதற்கான விசா என்றால் அது h1 b1 விசா தான். அது கிடைப்பதிலேயே தற்போது பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்றால் அது மற்ற விசா முறைகளிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். b4 வகை விசாக்களைப் பெற்றிருப்பவர்களும் வேலைகளை இழப்பார்கள்.H-1B Visa,  அமெரிக்க அதிபர் ட்ரம்ப்Modi: பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் காணொளி மூலம் உரையாடுகிறார்; பின்னணி என்ன?1990களில் அமெரிக்காவில் தொழில்நுட்ப புரட்சி மிக வேகமாக நடந்த போது அவர்களுக்குத் திறமை வாய்ந்த வேலை ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதனால்தான் இந்த h1b1 முறையைக் கொண்டு வந்திருந்தார்கள். இப்பொழுது டிரம்ப் அரசாங்கம் இதில் இவ்வளவு கட்டுப்பாடுகளைச் செய்தால் அமெரிக்காவில் வேலை பார்க்கும் பல நாடுகளின் நிபுணர்களும் தொழில் நுட்ப வல்லுநர்களும் வெளியேறுவார்கள். அது அமெரிக்காவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் தானே ?ட்ரம்ப் அரசாங்கத்தைப் பொருத்தவரை அமெரிக்காவைப் பிற்போக்குத்தனமான கொள்கைகளுடன் கையாண்டு வருகிறார்கள். குறிப்பாக ட்ரம்புடைய அத்தனை கொள்கைகளும் அமெரிக்காவைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றன. விசா நடைமுறையில் இவ்வளவு அதிக கட்டணம் மற்றும் இவ்வளவு கடுமையான விதிமுறைகள் இருந்தால் இந்தியர்கள் உள்ளிட்ட பலரும் நிச்சயம் வெளியேறுவார்கள் அப்படி வெளியேறினால் அமெரிக்காவில் இந்த வேலைகளைப் பார்ப்பதற்கான போதுமான ஆட்கள் இருக்க மாட்டார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை உயர்கல்வி படிப்பது என்பது பணம் அதிகம் செலவாகக் கூடிய ஒன்று. இந்தியாவைப் போன்று இலவச கல்வியோ அல்லது அரசே மானியம் கொடுத்து படிக்க வைப்பது போன்றவைக் கிடையாது. அமெரிக்காவில் இருக்கக்கூடிய பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் தட்டுப்பாடு என்பது இருக்கின்றது. அந்நாட்டின் கல்வி முறை பொருளாதார ரீதியில் பெரிதும் நம்பி இருப்பது வெளிநாட்டினரை தான். அவர்களை வராதீர்கள் என ட்ரம்ப் சொல்வதன் மூலமாகப் பெரும் வருமான இழப்பு அமெரிக்காவுக்கு ஏற்பட ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-21/qmyfofzr/Gemini_Generated_Image_ju1rh5ju1rh5ju1r.png" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 17:55:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>H-1B, Visa:, இந்தியர்களுக்குப், பெரும், சவால், காத்திருக்கிறதா, பேராசிரியர், கிளாட்சன், சேவியர், பேட்டி</media:keywords>
    </item>
    <item>
        <title>Trump: &amp;quot;7 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்&amp;quot; &amp; அடம்பிடிக்கும் டொனால்டு ட்ரம்ப்</title>
        <link>https://dailytopnewz24.com/trump-7-போர்களை-நிறுத்திய-எனக்கு-நோபல்-பரிசு-கொடுக்க-வேண்டும்-அடம்பிடிக்கும்-டொனால்டு-ட்ரம்ப்</link>
        <guid>https://dailytopnewz24.com/trump-7-போர்களை-நிறுத்திய-எனக்கு-நோபல்-பரிசு-கொடுக்க-வேண்டும்-அடம்பிடிக்கும்-டொனால்டு-ட்ரம்ப்</guid>
        <description><![CDATA[ அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நீண்ட நாட்களாக தனக்கு நோபல் கொடுக்கவேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.அதுவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டபோது அதனைத் தான் தடுத்து நிறுத்தினேன் என்று ட்ரம்ப் கூறிக்கொண்டிருக்கிறார்.இரு நாடுகளிடையேயான போரைத் தான் தடுத்து நிறுத்தியதாக டொனால்டு ட்ரம்ப் கூறுகிறார். ஆனால் இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை என்று இந்தியா கூறிக்கொண்டிருக்கிறது.தற்போது மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், &quot;உலக அரங்கில், இதற்கு முன்பு நாம் ஒருபோதும் மதிக்கப்படாத அளவுக்கு நாம் மதிக்கப்படும் விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.புடின் - ட்ரம்ப்நாம் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறோம், போர்களை நிறுத்துகிறோம். எனவே இந்தியா-பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கும் இடையிலான போர்களை நாங்கள் நிறுத்தினோம். இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பற்றி யோசித்துப் பாருங்கள். வர்த்தகத்தைப் பயன்படுத்தி நான் அதை எப்படி நிறுத்தினேன் என்பது உங்களுக்குத் தெரியும். அவர்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறார்கள். மேலும் இரு தலைவர்களிடமும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நாங்கள் நிறுத்திய இந்தப் போர்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்கும்போது அது உங்களுக்குத் தெரியும். இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், கொசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் காங்கோ போர் என அனைத்தையும் நிறுத்தினோம். அவற்றில் 60 சதவீதம் வர்த்தகம் காரணமாக நிறுத்தப்பட்டன. H-1B Visa: 1 லட்சம் டாலராக விசா விலையை உயர்த்திய ட்ரம்ப்; இந்தியா, சீனாவிற்கு என்ன பாதிப்பு?இந்தியாவை எடுத்துக்கொண்டால் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அவர்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டேன் என்று சொன்னேன். உடனே அவர்கள் போரை நிறுத்திவிட்டார்கள். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை நிறுத்தினால் எனக்கு நோபல் பரிசு கொடுப்பதாகச் சொன்னார்கள்.உடனே 7 போர்களை நிறுத்தி இருப்பதாகச் சொன்னேன். அதோடு ஒவ்வொரு போரை நிறுத்தியதற்கும் நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்தினால்தான் நோபல் பரிசு என்றார்கள். நான் 7 போரை நிறுத்தி இருப்பதாகச் சொன்னதற்கு அது சாதாரண போர் என்றும், இது மிகப்பெரிய போர் என்றும் சொன்னார்கள்.டொனால்டு ட்ரம்ப்ரஷ்ய அதிபர் புடினுடன் எனக்கு நல்ல உறவு இருந்ததால் ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தீர்ப்பது எளிதாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவரால் ஏமாற்றமடைந்தேன். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எளிதானதாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் நாம் அதை எப்படியாவது செய்து முடிப்போம்&quot; என்றும் அவர் கூறினார்.  ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாட்டுத் தலைவர்களையும் அழைத்து டொனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.  Trump Gold Card பெற தனிநபருக்கு 1 மில்லியன், பணியாளருக்கு 2 மில்லியன் டாலர்கள்! - ட்ரம்ப் அறிவிப்பு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk ]]></description>
        <enclosure url="http://gumlet.vikatan.com/vikatan/2025-09-21/c6yigj9b/donald-trump-gettyimages-687193180.avif" length="49398" type="image/jpeg"/>
        <pubDate>Thu, 25 Sep 2025 17:55:52 +0530</pubDate>
        <dc:creator>admin</dc:creator>
        <media:keywords>Trump:, போர்களை, நிறுத்திய, எனக்கு, நோபல், பரிசு, கொடுக்க, வேண்டும், அடம்பிடிக்கும், டொனால்டு, ட்ரம்ப்</media:keywords>
    </item>
    </channel>
</rss>